<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0">

<channel>
	<title>sairams</title>
	
	<link>http://sairams.com</link>
	<description>இருத்தலின் தாங்கவியலாத எளிமை</description>
	<lastBuildDate>Tue, 24 Jan 2012 19:47:24 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" type="application/rss+xml" href="http://feeds.feedburner.com/poetrytuesday" /><feedburner:info uri="poetrytuesday" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com/" /><feedburner:emailServiceId>poetrytuesday</feedburner:emailServiceId><feedburner:feedburnerHostname>http://feedburner.google.com</feedburner:feedburnerHostname><item>
		<title>பிற: சல்மான் ருஷ்டியும் சாத்தான்களும்</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/RKHt0UePR3Q/</link>
		<comments>http://sairams.com/2012/01/%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 19:28:32 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[உதிரி]]></category>
		<category><![CDATA[அதிகாரம்]]></category>
		<category><![CDATA[சட்டம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[மனித உரிமை மீறல்]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3455</guid>
		<description><![CDATA[இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் &#8216;சாத்தானின் செய்யுள்கள்&#8217; புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் &#8230; <a href="http://sairams.com/2012/01/%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">இந்தியாவில் ஒரு புத்தகத்தை தடை செய்வதற்கு நிறைய சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். ஒரு மாநில அரசாங்கம் தான் அத்தகைய செயலில் ஈடுபட முடியும். அதற்கு அந்த அரசு, நீதிமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்தி தனது நடவடிக்கைக்கு சட்ட ஒப்புதல் பெற வேண்டும். சல்மான் ருஷ்டியின் &#8216;சாத்தானின் செய்யுள்கள்&#8217; புத்தகம் அத்தகைய முழுமையான சட்ட வழிமுறைகளால் தடை செய்யபட்டது அல்ல. 1988-ம் ஆண்டு &#8216;சாத்தானின் செய்யுள்கள்&#8217; வெளியான போது உலகம் முழுக்க பல இடங்களில் முஸ்லீம்கள் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தியாவில் அப்போது இருந்த ராஜீவ் காந்தி அரசு இந்த புத்தகத்தை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கு தடை விதித்தது. வெறும் customs act-இல் தடை செய்யபட்டது மட்டுமே இந்த புத்தகம். இப்போது சல்மான் ருஷ்டி ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு வருவது யாருக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை, வழக்கமாய் அவர் இந்தியாவிற்கு வரும் போதெல்லாம் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை காட்டியே இந்த முறை அவரை வரவிடாமல் செய்து விட்டார்கள். இதில் தீவிரவாதிகளின் பெயரில் பொய் வதந்தி வேறு. இறுதியாக அவர் வெப் கேம் மூலம் விழாவில் பேச அனுமதி கொடுத்து பிறகு கடைசியில் வயரை அறுத்து விட்டு என்று காவல்துறையினரும், மாநில அரசாங்கமும் ஜோக்கர்களாயின. &#8216;சாத்தானின் செய்யுள்கள்&#8217; புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை மேடையில் படித்து காட்டியவர்களும் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள். முஸ்லீம்கள் ருஷ்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்கள் உரிமை. அது போல சல்மான் ருஷ்டிக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டியது அரசின் கடமை. ஜனநாயக நாட்டின் அரசாங்கம் அப்படி தான் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பிரச்சனைகள் எதுவுமே நிகழ்ந்து விடக்கூடாது என்கிற பதட்டத்தில் சட்டத்தை தாண்டி அரசு செயலாற்றி இருக்கிறது. தங்களுக்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக சட்டங்களை புறந்தள்ளி அல்லது சட்டத்தை தவறாக காட்டுகிற அதிகாரத்தின் இரண்டாம் நிலையினரின் சதி இது. மற்றொரு பக்கம் தாங்கள் பாலுக்கும் காவலன், பூனைக்கும் தோழன் என்று டாப் லெவல் அதிகாரம் வேடம் போடுகிறது. வெளிபடையாக அவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பேச மாட்டார்கள். அதே சமயம் திரைமறைவில் இது போன்ற காரியத்தில் ஈடுபடுவார்கள். ஓவியர் எம்.எப்.உசேன், தஸ்லீமா நஸிரீன் என இந்த கபட நாடகத்திற்கு பலியானவர்கள் ஏராளம்.</p>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/hM0JLVAf7fLJvX3nNhM1Obbi36o/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/hM0JLVAf7fLJvX3nNhM1Obbi36o/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/hM0JLVAf7fLJvX3nNhM1Obbi36o/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/hM0JLVAf7fLJvX3nNhM1Obbi36o/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/RKHt0UePR3Q" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2012/01/%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2012/01/%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/</feedburner:origLink></item>
		<item>
		<title>யாருக்கும் யார் முகமும் நினைவில் இல்லை</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/r_ncAxeobqQ/</link>
		<comments>http://sairams.com/2012/01/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/#comments</comments>
		<pubDate>Tue, 24 Jan 2012 11:10:43 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[tamil poem]]></category>
		<category><![CDATA[tamil poetry]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3441</guid>
		<description><![CDATA[முதல் முத்தத்தின் இனிமை.
முதல் புணர்வின் சுவை.
மறக்கவியலாத துரோகம்.
இருளில் செய்த குற்றம்.  <a href="http://sairams.com/2012/01/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #ff0000;">முதல் முத்தத்தின் இனிமை. </span><br />
<span style="color: #ff0000;">முதல் புணர்வின் சுவை. </span><br />
<span style="color: #ff0000;">மறக்கவியலாத துரோகம். </span><br />
<span style="color: #ff0000;">இருளில் செய்த குற்றம். </span></p>
<p><span style="color: #ff0000;">நினைக்கும் போதெல்லாம் </span><br />
<span style="color: #ff0000;">உடலினுள் பரவுகின்றன </span><br />
<span style="color: #ff0000;">உணர்வலைகள். </span><br />
<span style="color: #ff0000;">முகங்கள் </span><br />
<span style="color: #ff0000;">ஏனோ நினைவில் இல்லை. </span><br />
<span style="color: #ff0000;">வலை வீசி தேடினால் </span><br />
<span style="color: #ff0000;">சிக்குவது </span><br />
<span style="color: #ff0000;">உருக்குலைந்து போன ஓவியங்களே. </span></p>
<p><span style="color: #ff0000;">என் முகமும் </span><br />
<span style="color: #ff0000;">மறந்து போயிருக்குமென நினைக்கையில் </span><br />
<span style="color: #ff0000;">துளிர்க்கிறது </span><br />
<span style="color: #ff0000;">பெருமூச்சோடு </span><br />
<span style="color: #ff0000;">சிலசமயம் மகிழ்ச்சி.</span></p>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/h2rMMDosEAs8TpMTLVC_ihcDheE/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/h2rMMDosEAs8TpMTLVC_ihcDheE/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/h2rMMDosEAs8TpMTLVC_ihcDheE/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/h2rMMDosEAs8TpMTLVC_ihcDheE/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/r_ncAxeobqQ" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2012/01/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2012/01/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/</feedburner:origLink></item>
		<item>
		<title>கண்ணீரில் மிதந்து செல்லும் ரயில்</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/cse5NKS6C18/</link>
		<comments>http://sairams.com/2012/01/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 17 Jan 2012 13:13:42 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[tamil poem]]></category>
		<category><![CDATA[tamil poetry]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3437</guid>
		<description><![CDATA[கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.
சோகம் ததும்ப
அது நகருகையில்
வானத்தில் இருந்து
மேகங்களாய் கீழ் இறங்குகின்றன
கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும். <a href="http://sairams.com/2012/01/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #ff0000;">கண்ணீரில் மிதந்து செல்கிறது ரயில்.</span><br />
<span style="color: #ff0000;"> சோகம் ததும்ப</span><br />
<span style="color: #ff0000;"> அது நகருகையில்</span><br />
<span style="color: #ff0000;"> வானத்தில் இருந்து</span><br />
<span style="color: #ff0000;"> மேகங்களாய் கீழ் இறங்குகின்றன</span><br />
<span style="color: #ff0000;"> கனவுகளும், ஆசைகளும், நிராசைகளும்.</span></p>
<p><span style="color: #ff0000;">நிகழ் காலத்தில் ரயில்.</span><br />
<span style="color: #ff0000;"> கடந்த காலத்திற்கு அவற்றை இழுத்து செல்ல</span><br />
<span style="color: #ff0000;"> வலுவற்ற கரங்களால் பிரயத்தனபடுகின்றன மேகங்கள்.</span></p>
<p><span style="color: #ff0000;">உருவாகிறது</span><br />
<span style="color: #ff0000;"> சோகத்தின் பெருமழை.</span></p>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/8debYfiLiyhprvsLMVkzinMkTtk/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/8debYfiLiyhprvsLMVkzinMkTtk/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/8debYfiLiyhprvsLMVkzinMkTtk/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/8debYfiLiyhprvsLMVkzinMkTtk/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/cse5NKS6C18" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2012/01/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2012/01/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</feedburner:origLink></item>
		<item>
		<title>உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/NB83JSsmgnQ/</link>
		<comments>http://sairams.com/2012/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 02 Jan 2012 04:13:00 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[காட்சியியல்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[புகைப்படங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3419</guid>
		<description><![CDATA[கடலின் பச்சை நிற கண்கள்; அழகும் குரோதமும் நிறைந்த முகம், கிழிசல்களோடு துப்பட்டா முகத்தை மேலோட்டமாக போர்த்திய நிலையில் கேமராவை நேருக்கு நேராய் பார்த்து நின்ற அந்த சிறுமியின் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைப்பதாய் இருந்தது. உலகம் முழுவதும் புகைப்படம் பிரபலமாக தொடங்கியது. வல்லரசுகளாலும் உள்நாடு அரசியல்வாதிகளாலும் வன்முறையும் போரும் நிறைந்த ஆப்கன் நாட்டை விட்டு ஓடி வரும் அகதிகளின் நிலையை பிரதிபலிப்பதாய் இருந்தது அந்தப் புகைப்படம். இன்னும் சொல்லபோனால் உலகத்தின் அத்தனை அகதிகளின் அவலத்தை உணர்த்தும் படமாக அது மாறிப்போனது. நீங்கள் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தால் அது எத்தனையோ விஷயங்களை உணர்த்துவதாய் இருந்தது.  <a href="http://sairams.com/2012/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><strong><span style="text-decoration: underline;"><a href="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்.jpg"><img class="aligncenter size-full wp-image-3420" title="புகைப்படம்" src="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்.jpg" alt="" width="325" height="512" /></a>அகதிகள் முகாம்</span></strong><br />
அது 1984-ம் வருடம். அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டிவ் மெக்கரி பாகிஸ்தானில் உள்ள அந்த அகதிகள் முகாமிற்குள் நுழைந்தார். பார்வை நீளும் இடம் வரைக்கும் அங்கே தற்காலிக டெண்ட்கள் நூற்றுக்கணக்கில் அகதிகளுக்காக உருவாக்கபட்டிருந்தன. வாழ வழியில்லாமல் ஒடும் மக்களுக்கான இடம் இப்படி தானிருக்கும். இதை விட வசதியான ஓர் இடத்தை அவர்கள் எதிர்பார்த்து விட முடியாது. தன்னுடைய புகைப்பட கருவிகளுடன் ஸ்டீவ் எதை எவற்றை யாரை புகைப்படம் எடுக்கலாம் என அங்கு நடந்து கொண்டு இருந்தார்.</p>
<p style="text-align: justify;">அது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து கொண்டிருந்த காலம். ஆப்கானிஸ்தான் மக்கள் போரில் இருந்தும் வறுமையில் இருந்தும் தங்களை காப்பாற்றி கொள்ள ஓடிக் கொண்டு இருந்தார்கள். அப்படி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தவர்களுக்கான அகதிகள் முகாம் இது. நசீர் பாக் முகாம் என்று அந்த இடத்திற்கு பெயர். நேஷனல் ஜியோகிராபிக் இதழுக்காக ஸ்டீவ் அங்கு வந்திருக்கிறார்.</p>
<p style="text-align: justify;">அகதிகள் முகாமில் ஒரு டெண்டிற்குள் ஒரு தற்காலிக வகுப்பறையை உருவாக்கி இருந்தார்கள். ஸ்டிவ் அங்கு நுழைந்த போது, ஒரு பெண் மங்கலான ஒரு கறுப்பு போர்டினை கொண்டு குழந்தைகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். ஸ்டிவ்வினுள் புகைப்பட கலைஞர்களுக்கே உரிய ஆர்வம் துளிர்த்தது. குழந்தைகளை படமெடுக்க அனுமதி கேட்டார். இது போல எவ்வளவோ புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். போர் மனிதனை எப்படியெல்லாம் சிதைத்து இருக்கிறது என்பது தான் அவரது பயணமாக இருந்தது. உலகம் முழுக்க பல இடங்களுக்கு சுற்றி இருக்கிறார். இந்தியாவில் இருந்த போது அவர் ஒரு முக்கியமான உண்மையைக் கற்று கொண்டார். அது வாழ்க்கையை கவனித்திரு, காத்திரு என்பது.</p>
<p style="text-align: justify;">&#8220;நீங்கள் காத்து இருந்தால், மனிதர்கள் உங்கள் கேமராவை மறந்து விடுவார்கள். அவர்களுடைய ஆத்மாவை அப்போது பார்க்கலாம்,&#8221; என்பார் ஸ்டீவ்.</p>
<p style="text-align: justify;">அந்த வகுப்பறையில் உள்ள குழந்தைகளில் ஒரு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கதக்க ஒரு சிறுமி இருந்தாள். பச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார்.</p>
<p style="text-align: justify;">நேஷனல் ஜியோகிராப்பிக் இதழின் அட்டையில் அந்த புகைப்படம் விரைவில் பிரசுரிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் எல்லையில் நிகழும் போர் பற்றி எழுதபட்ட கட்டுரைக்காக அந்த புகைப்படம் பயன்படுத்தபட்டது.</p>
<p style="text-align: justify;"><a href="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்02.jpg"><img class="aligncenter size-full wp-image-3421" title="புகைப்படம்02" src="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்02.jpg" alt="" width="570" height="827" /></a><strong><span style="text-decoration: underline;">அந்த சிறுமியின் பெயர் என்ன?</span></strong><br />
கடலின் பச்சை நிற கண்கள்; அழகும் குரோதமும் நிறைந்த முகம், கிழிசல்களோடு துப்பட்டா முகத்தை மேலோட்டமாக போர்த்திய நிலையில் கேமராவை நேருக்கு நேராய் பார்த்து நின்ற அந்த சிறுமியின் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைப்பதாய் இருந்தது. உலகம் முழுவதும் புகைப்படம் பிரபலமாக தொடங்கியது. வல்லரசுகளாலும் உள்நாடு அரசியல்வாதிகளாலும் வன்முறையும் போரும் நிறைந்த ஆப்கன் நாட்டை விட்டு ஓடி வரும் அகதிகளின் நிலையை பிரதிபலிப்பதாய் இருந்தது அந்தப் புகைப்படம். இன்னும் சொல்லபோனால் உலகத்தின் அத்தனை அகதிகளின் அவலத்தை உணர்த்தும் படமாக அது மாறிப்போனது. நீங்கள் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தால் அது எத்தனையோ விஷயங்களை உணர்த்துவதாய் இருந்தது.</p>
<p style="text-align: justify;"><a href="http://sairams.com/wp-content/uploads/2012/01/ஸ்டீவ்.jpg"><img class=" wp-image-3422 alignright" title="ஸ்டீவ்" src="http://sairams.com/wp-content/uploads/2012/01/ஸ்டீவ்.jpg" alt="" width="278" height="270" /></a>&#8216;வெளிவந்த புகைப்படங்களிலே அதிக மக்கள் இன்னும் நினைவு வைத்திருக்கும் புகைப்படம் இது தான்,&#8217; என நேஷனல் ஜியோகிராபிக் இதழ் அறிவித்தது. டாவின்ஸியின் மோனாலிசா ஓவியத்தோடு இதை ஒப்பிடுபவர்களும் உண்டு. பொதுவாக உலகம் முழுக்க &#8216;ஆப்கன் சிறுமி&#8217; என்கிற பெயரில் இந்த புகைப்படம் இன்றும் பிரபலமாக இருக்கிறது. ஆமனஸ்டி போன்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த புகைப்படத்தை தங்களுடைய பல பிரச்சார போஸ்டர்களில் பயன்படுத்தின. பல வீட்டு சுவர்களை, அலுவலக சுவர்களை இந்த புகைப்படம் அலங்கரிக்கிறது.</p>
<p style="text-align: justify;">உலகப் புகழ் பெற்ற புகைப்படமாய் &#8216;ஆப்கன் சிறுமி&#8217; மாறி கொண்டிருந்த போது, புகைப்பட கலைஞர் ஸ்டீவ் அந்த சிறுமியை மீண்டும் சந்திக்க பல பிரயத்தனங்கள் எடுத்தார். அந்த சிறுமி தன் குடும்பத்தாருடன் அகதிகள் முகாமை விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு போய் விட்டார் என்கிற செய்தி தான் கிடைத்தது. விரைவில் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி ஏற்பட்டது. வெளிநாட்டினர் முக்கியமாக செய்தியாளர்கள் ஆப்கானிஸ்தானிற்குள் போவது என்பது முடியாத காரியமாகி போனது.</p>
<p style="text-align: justify;">உலகப் புகழ் பெற்ற புகைப்படத்தில் இருந்த சிறுமியின் பெயர் கூட யாருக்கும் தெரியாது. பதினேழு வருடங்கள் உருண்டோடின. புகைப்படத்தின் புகழ் அதிகரித்து கொண்டு தான் இருந்தது. 2001-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் தாலிபன் ஆட்சி முடிவிற்கு வந்தது. 2002-ம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் இதழ் இந்த சிறுமியை தேடுவதற்காக ஒரு டாக்குமெண்டரி குழுவை உருவாக்கியது. அந்த குழுவில் புகைப்பட கலைஞர் ஸ்டீவ்வும் இருந்தார். பாகிஸ்தானில் இருந்த நசிர் பாக் அகதிகள் முகாம் விரைவில் மூடப்பட போகிறது என்கிற செய்தி அறிந்து ஸ்டீவ் தனது தேடலை முதலில் அங்கு இன்னும் இருந்த அகதிகளிடமிருந்து தொடங்கினார். ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியர் இந்த சிறுமியை தனக்கு தெரியும் என்றார். அருகாமை கிராமம் ஒன்றில் இருந்த அந்த சிறுமி (பதினெழு வருடங்கள் கழித்து அவள் பெண்ணாகி விட்டாள்) ஆலம் பீபி கண்டறியப்பட்டார். ஆனால் ஸ்டீவ் அந்த பெண் தனது புகைப்படத்தில் உள்ள சிறுமியல்ல என்று மறுத்து விட்டார். அகதிகள் முகாம், மற்ற இடங்கள் எங்கும் இந்தப் புகைப்படத்தினை அங்கிருப்பவர்களிடம் காட்டி அலைந்து திரிந்தும் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. புகைப்படம் எடுக்கபட்டு ஏறத்தாழ பதினேழு வருடங்கள் ஆகி விட்ட நிலையில், அகதிகள் முகாமிலிருந்து பெரும்பாலனோர் தாயகம் திரும்பிய சூழலில் அவரது தேடல் முதலில் எந்த உருப்படியான தகவலையும் கண்டறியவில்லை. நிறைய பெண்கள் இந்த படத்தில் இருப்பது தாங்கள் தான் என பொய்யாக முன்வந்தனர். ஒரு சில ஆண்கள் இந்த படத்தில் இருப்பது தன்னுடைய மனைவி எனவும் பொய் தகவல் சொன்னார்கள்.</p>
<p style="text-align: justify;">அந்த சிறுமியை இனி கண்டுபிடிக்க முடியாது என்கிற மனநிலைக்கு ஸ்டீவ் தள்ளப்பட்ட போது, முகாமில் இருந்த ஒருவர் இந்த சிறுமியின் சகோதரனை தனக்கு தெரியும் என்று சொன்னார். ஆப்கானிஸ்தானில் உள்ள தோரோ போரோ என்கிற மலைப்பகுதியில் அவர்கள் குடியிருப்பதாக அந்த மனிதர் சொன்னார். ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து ஆறு மணி நேர கார் பயணம், பிறகு மூன்று மணி நேர நடைப்பயணம் என வெளியுலகோடு தொடர்பு அதிகம் இல்லாத மலைபகுதியில் அந்த மனிதர் சொன்ன பெண் வசித்து வந்தாள். குழுவினரின் பல முயற்சிகளுக்கு பிறகு அந்த பெண்ணை அவளது குடும்பத்தாருடன் வேறொரு இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பெண்ணை முதலில் சந்தித்தவுடனே ஸ்டீவ்வின் முகம் மலர்ந்தது.</p>
<p style="text-align: justify;">&#8220;நான் புகைப்படமெடுத்த சிறுமி இவர் தான்,&#8221; என்றார். இதை மேலும் உறுதி செய்வதற்கு அந்தக் குழு அந்த பெண்ணின் கண்களை பயோமெட்ரிக் ஆராய்ச்சி செய்து புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தான் இந்த பெண் என உறுதி செய்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">அந்த புகைப்படத்தில் இருந்த சிறுமியின் பெயர் ஃபர்பத் குலா. 17 வருடங்களுக்கு பிறகு உலகம் இந்த பெயரை அறிந்து கொண்டது.</p>
<p style="text-align: justify;"><a href="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்03.jpg"><img class="aligncenter size-full wp-image-3423" title="புகைப்படம்03" src="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்03.jpg" alt="" width="347" height="500" /></a><span style="text-decoration: underline;"><strong>ஃபர்பத் குலா</strong></span></p>
<p style="text-align: justify;">குழுவினர் அவளை சந்திப்பதற்கு முன்பு வரை தனது புகைப்படம் உலகப் புகழ் பெற்ற புகைப்படமாக மாறியிருக்கும் செய்தி குலாவிற்கு தெரியவே தெரியாது. அந்த புகைப்படம் தான் அவள் முதன்முதலாக புகைப்படம் எடுக்கபட்ட நிகழ்வு. அதன்பிறகு மீண்டும் ஸ்டீவ் வரும்வரை அவளை வேறு யாரும் புகைப்படம் எடுத்திருக்கவே இல்லை.</p>
<p style="text-align: justify;">ஆப்கானிஸ்தானில் உள்ள பாஸ்துன் என்கிற பழங்குடியினத்தை சேர்ந்தவர் குலா. இங்கு முஸ்லீம் பெண்களுக்கு கடுமையான விதிமுறைகள் உண்டு. அவள் சிறுமியாக இருந்த போது ரஷ்ய விமானங்களின் தாக்குதலில் இருந்து தப்பி அவளது குடும்பம் பாகிஸ்தான் எல்லையை கடந்து நசீர் பாக் அகதிகள் முகாமிற்கு வந்தது. பாஸ்துன் பழங்குடியின பெண்கள் எப்போதும் பர்தா அணிந்திருக்க வேண்டும். தனது கணவனை தவிர வேறு ஓர் ஆணை பார்த்து சிரிக்க கூடாது. புகைப்படத்தில் உள்ள சிறுமியின் முகத்தில் உள்ள இறுக்கத்திற்கான காரணம் இதுவாக கூட இருக்கலாம். புகைப்படம் எடுக்கபட்ட நிகழ்வை குலா இன்னும் நினைவில் வைத்து இருக்கிறார். வாழ்க்கையில் முதன்முதலாக புகைப்படம் எடுக்கபட்ட நிகழ்வல்லவா?</p>
<p style="text-align: justify;"><strong><span style="text-decoration: underline;"><a href="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்04.jpg"><img class=" wp-image-3424 alignleft" title="புகைப்படம்04" src="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்04.jpg" alt="" width="228" height="340" /></a></span></strong>குலா சிறுமியாய் இருந்த போது, புகைப்படம் எடுக்கப்பட்ட சில காலத்திற்கு பிறகு குலாவின் குடும்பம் பாகிஸ்தான் அகதிகள் முகாமிலிருந்து தாயகம் திரும்பிய<strong></strong>து. முகாமில் உள்ள இருக்கடியான வாழ்க்கை, மலையிலும் காட்டிலும் வாழ்ந்த குலாவின் குடும்பத்திற்<strong></strong>கு பொருந்தாத ஒன்று. தங்களுடைய சொந்த இடத்திற்கு திரும்பிய சில வருடங்களில் குலாவிற்கு திருமணம் நடந்தது. அருகில் உள்ள நகரத்தில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து கொண்டிருந்தார் அவருடைய கணவர். கடினமான வேலை தான். பேக்கரி அடுப்பில் அடிக்கடி விரல்களை தீய்த்து கொள்ள வேண்டியது வரும். அவர்களுக்கு மூன்று பெண்கள் பிறந்தனர். மூன்றாவது பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து போயிற்று.</p>
<p style="text-align: justify;">ஸ்டீவ் மீண்டும் ஆப்கன் சிறுமியைச் ச<strong></strong>ந்தித்த போது குலாவிற்கு முப்பது வயதாகி இருக்கலாம். குலாவிற்கே தன்னுடைய வயது சரியாக தெ<strong></strong>ரியவில்லை. மற்ற ஆண்களின் பார்வைக்கு உட்படாமல் பர்தாவில் வாழ்ந்து கொண்டிருந்தார் குலா. சிறிது நேர பேச்சுக்கு பிறகு அவர் மீண்டும் தன்னை புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்தார். இந்த முறை புகைப்படம் எடுக்கும் போதும் அவருடைய பார்வையின் தீவிரம் அப்படியே இருந்தது.</p>
<p style="text-align: justify;">&#8220;அந்தக் கண்களின் சக்தி இன்னு<strong></strong>ம் குறையவில்லை,&#8221; என்றார் ஸ்டீவ்.</p>
<p style="text-align: justify;"><strong><span style="text-decoration: underline;">ஆப்கன் சிறுமி</span></strong></p>
<p style="text-align: justify;"><a href="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்05.jpg"><img class="alignright size-medium wp-image-3425" title="புகைப்படம்05" src="http://sairams.com/wp-content/uploads/2012/01/புகைப்படம்05-226x300.jpg" alt="" width="226" height="300" /></a>இது வேறொரு சிறுமியின் கதை. ஆப்கானிஸ்தான் உள்நாட்டு சண்டையாலும் அந்நிய நாட்டு தலையீடுகளாலும் பல காலமாய் சிதைந்து போய் விட்டது. எனினும் மீண்டும் மீண்டும் அங்கு வாழ்க்கை துளிர்த்தபடி தான் இருக்கிறது. பெண்களின் நிலையோ மிகவும் அவலத்திற்கு உரியது. 2009-ம் ஆண்டு ஆயிஷா என்கிற பெண் தன் கணவன் தன்னை மிருகத்தனமாய் அடிப்பதை சகித்து கொள்ள முடியாமல் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தஞ்சமடைந்தார். தாலிபன் படையில் முன்பு வீரனாக இருந்த அவளது கணவன், தன் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய மனைவிக்கு தண்டனை கொடுக்க மலைப்பகுதியில் உள்ள ஓரிடத்திற்கு அவளை அழைத்து சென்றான். அங்கு மற்ற ஆண்கள் அவளைப் பிடித்து கொள்ள, அவளது கணவன் அவளுடைய தலைமுடியை, காதுகளை, மூக்கினை கத்தியால் வெட்டி எடுத்தான்.</p>
<p style="text-align: justify;">ஆப்கானிஸ்தானில் ஒரு புகைப்படத்தால் பிரபலமான பெண் என்கிற பெயரோடு வாழ்வது ஆபத்தான விஷயம். &#8216;ஆப்கன் சிறுமி&#8217;-யான குலா தற்போது வேறொரு தொலைதூர கிராமத்திற்கு மாறி விட்டார். அவருடைய தேவைகளுக்கு நாங்கள் வழிவகை செய்து இருக்கிறோம். ஆனால் குலா தன் சொந்த நலன் கருதி இனி வெளியுலகிற்கு மீடியா மூலம் வெளி வர மாட்டார் என நேஷனல் ஜியோகிராபிக் இதழ் அறிவித்து இருக்கிறது. நேஷனல் ஜியோகிராபி சொசைட்டி, ஆப்கான் சிறுமி என்கிற பெயரில் அந்நாட்டில் உள்ள இளம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு தன்னார்வ கொடை திரட்டு உருவாக்கி இருக்கிறது. உலகம் முழுக்க வரும் நன்கொடைகள் இங்கு சிறுமிகளுக்கான நலத்திட்டங்களுக்காக உள்நாட்டில் உள்ள சில நிறுவனங்கள் மூலம் செலவழிக்கபடுகிறது.</p>
<p style="text-align: justify;">எத்தனையோ பேருக்கு தன் புகைப்படம் மூலம் தாக்கமேற்படுத்திய ஆப்கன் சிறுமி இன்று ஒரு மலைப்பகுதியில் மிக சராசரி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.</p>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/p3eWT-TxyJEj8KiOZ8-ZAxfwa_I/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/p3eWT-TxyJEj8KiOZ8-ZAxfwa_I/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/p3eWT-TxyJEj8KiOZ8-ZAxfwa_I/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/p3eWT-TxyJEj8KiOZ8-ZAxfwa_I/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/NB83JSsmgnQ" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2012/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2012/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/</feedburner:origLink></item>
		<item>
		<title>மனிதர்கள் – முசுடு கிழவி</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/lHe_yh-eFFA/</link>
		<comments>http://sairams.com/2011/12/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Fri, 30 Dec 2011 15:07:09 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[கதைகள்]]></category>
		<category><![CDATA[மனிதர்கள்]]></category>
		<category><![CDATA[முதுமை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3414</guid>
		<description><![CDATA[பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான். <a href="http://sairams.com/2011/12/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%bf/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><img src="http://sairams.com/wp-content/uploads/2011/12/முசுடு-கிழவி.jpg" alt="" title="முசுடு-கிழவி" width="432" height="547" class="aligncenter size-full wp-image-3415" /></p>
<p>ராஜேஷ்வரியம்மாளை யாரோ கொன்றுவிட்டார்கள். இரவு நேரம் ஆளில்லாத சமயம் அவரைக் கழுத்து நெரித்துக் கொன்று, வீட்டிலிருந்து நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றிருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. குடித்தனங்கள் இருக்கிற வீட்டில் புதிதாய் ஓர் ஆள் உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இது யாரோ தெரிந்தவர்கள் செய்த வேலை என்கிற ஒரு கோணத்திலும் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. </p>
<p>ராஜேஷ்வரியம்மாளுக்கு அறுபத்தி ஐந்து வயதிற்கு மேலிருக்கும். எப்போதும் டல்லான ஒற்றை கலர் பழைய சேலை தான் அணிந்திருப்பார். நெற்றியில் பட்டையாய் விபூதி இருக்கும். கணவர் இறந்ததில் இருந்து குங்குமம் கிடையாது. பல்செட் அணிந்திருப்பதால் வயது பெரிதாய் தெரியாது. தெருவில் அவரை எல்லாரும் முசுடு கிழவி என்று தான் அழைப்பார்கள். ஆனால் அதை அவருக்கு முன்னால் அந்த பேரைச் சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது. எல்லாரிடமும் வள் வள் என விழுவது தான் அவரது ஸ்டைல். </p>
<p>சென்னையின் ஒரு பிரதான இடத்தில் நெருக்கடியான கட்டிடங்கள் மிகுந்த ஒரு வீதியில் அவருக்கு சொந்தமான ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு பெரிய வீட்டில் ராஜேஷ்வரியம்மாள் குடியிருந்தார். முதல் தளத்திலும் கீழேயும் அதே கட்டிடத்தை சின்ன சின்ன வீடுகளாய் பிரித்து பதினொரு வீடுகளை வாடகைக்கு விட்டு இருந்தார். பதினொரு வீடுகளுக்கும் இவர் தான் ராணி. சர்வதிகாரி என்று கூட சொல்லலாம். இரவு எத்தனை மணிக்கு விளக்கு அணைக்கபட வேண்டும் என்பதில் தொடங்கி டீவி ஆடியோ அளவு எது வரை அனுமதி என்பது வரை, விருந்தினர்கள் வந்தால் எத்தனை மணிக்கு கிளம்பி விட வேண்டும் என்று எக்கசக்க விதிமுறைகள் உண்டு. </p>
<p>ராஜேஷ்வரியம்மாள் குடியிருப்பிற்கு புதிதாய் குடி வருபவர்கள் ஆறு மாதங்கள் கூட தாங்குவது கஷ்டம் தான். ஒன்று அவர்களாகவே முசுடு கிழவியின் தொல்லை தாங்காமல் வேறு வீடு பார்த்து போய் விடுவார்கள். அல்லது முசுடு கிழவியே ஒரு நாள் நேராய், &#8220;யப்பா உங்க கூட என்னால தினமும் அல்லாடிட்டு இருக்க முடியாது. அடுத்த மாசத்துக்குள்ள வேற வீடு பார்த்துட்டு போயிடுங்க,&#8221; என்று முகத்தில் அறைந்தாற் போல சொல்லி விடுவார். அரிதாக ஒரு சில குடும்பங்கள் இந்த தொல்லையைத் தாங்கி கொண்டு வருடக்கணக்கில் அங்கேயே குடியிருப்பதும் உண்டு. அப்படி குடியிருப்பவர்களுக்கு இந்த விதிமுறைகள் எல்லாம் மனப்பாடம் செய்தாற் போல் தெரியும். இவற்றோடே வாழ பழகி விட்டவர்கள் அவர்கள்.</p>
<p>தெருவில் இருப்பவர்கள் எல்லாருக்கும் ராஜேஷ்வரியம்மாளை நன்றாக தெரியும். அவரைப் பற்றிய பேச்சு தான் அடிக்கடி ஓடிக் கொண்டு இருக்கும். சர்வதிகாரியாய் ஆட்சி செய்யும் ராஜேஷ்வரியம்மாள் ஒரு தனிக் கட்டை. </p>
<p>&#8216;சொந்தங்களை எல்லாம் துரத்தி விட்டுட்டுச்சு,&#8217; என்று இந்த தெருவிலே பல ஆண்டுகளாய் குடியிருப்பவர்கள் சொல்வார்கள். பல வருடங்களுக்கு முன்பே அவரது கணவர் இறந்து போய் விட்டார். குழந்தைகள் கிடையாது. கணவரின் தம்பிகள் இவரை ஏமாற்றி கட்டிடத்தை எழுதி வாங்க நினைத்ததினால் ஒருநாள் ருத்ர தாண்டவமாடி எல்லாரையும் துரத்தி விட்டாராம். பல வருடங்களுக்கு முன்னால் தூரத்து சொந்தக்காரர் பையன் ஒருவனை தத்து எடுத்து வளர்த்து வந்தார். அவனோ பனிரெண்டு வயதிலே எல்லா கெட்ட பழக்கங்களும் கற்று கொண்டு ரௌடி பசங்களோடு சுற்றி கொண்டு இருந்தான். ஒரு நாள் காணாமல் போனான். அவனாக ஓடி போனானா அல்லது கிழவி துரத்தி அனுப்பி விட்டாரா என்பது யாருக்கும் தெரியாது. கணவர்வழி சொந்தக்காரர்கள் யாராவது எப்போதாவது வருவார்கள். எல்லாரையும் கதவிற்கு வெளியிலே நிற்க வைத்து பேசி அனுப்புவார். ஒரு வேலைக்கார அம்மா மற்றும் ஓர் அட்டோ டிரைவருக்கும் மட்டும் தான் வீட்டிற்குள் அனுமதி. ராஜேஷ்வரியம்மாளுக்கு சொந்தமாக ஓர் ஆட்டோ உண்டு. அது பெரும்பாலான சமயம் எங்கும் ஓடாமல் வீட்டு காம்பவுண்டிற்குள்ளே தான் முடங்கி கிடக்கும். ஆட்டோ டிரைவரையும் ராஜேஷ்வரியம்மாளை சேர்த்து வைத்து கிண்டலடிப்பதும் டீக்கடைக்களில் சில சமயம் நடக்கும்.</p>
<p>வீட்டில் குடியிருக்கும் யாராவது ஒருவருக்கு அல்லது தெருவில் இருப்பவர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் கஷ்டக் காலத்தில் தானாகவே அஜராகி, &#8220;உன் புருஷன்கிட்ட சொல்லாத,&#8221; என்று பணத்தை கொடுப்பதும் உண்டு. யாராவது அவரிடம் கடன் கேட்டு போனால், அரை மணி நேரத்திற்கு மேலாக அர்ச்சனையும் அறிவுரையும் பிறகு வட்டியுடன் கடன் என்கிற நிர்பந்தத்துடன் உதவியும் கிடைக்கும். குடிப் பழக்கம் இருக்கிறவர்களுக்கு கடன் கிடையாது. அதோடு முக்கியமாக வாடகைக்கு வீடு கிடைக்காது. வாடகைக்கு குடியிருக்கும் பெண்கள், தங்கள் வீட்டில் கணவர் இல்லாத சமயங்களில் வேறு ஆண்களை உள்ளே அனுமதிக்க கூடாது. அது அப்பாவோ சகோதரனாகவோ இருந்தாலும் அதை முன்னரே ராஜேஷ்வரியிடம் சொல்லி விட வேண்டும். இருக்கும் விதிமுறைகளிலே இந்த &#8216;வேற்று ஆண்கள்&#8217; விதிமுறை தான் மிகவும் முக்கியமானது. யாராவது ஒரு பெண் இதை கடைபிடிக்க தவறினாலும் அந்த குடும்பம் ஒரு மாதத்தில் காலி செய்து போக வேண்டியது தான். அப்பீலே கிடையாது.</p>
<p>ஞாயிற்று கிழமைகளில் ராஜேஷ்வரியம்மாள் தனியாகவோ அல்லது ஆட்டோ டிரைவருடன் தன் ஆட்டோவிலோ வெளியில் போவார். எங்கே போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆட்டோ டிரைவரும் சரி, அவரது வீட்டிற்கு வந்து போகும் வேலைக்கார அம்மாளும் சரி அந்த ஏரியாவை சேர்ந்தவர்கள் கிடையாது. அது போல அவர்கள் அவசியமில்லாமல் அந்த தெருவாசிகளிடம் ஒரு வார்த்தை அதிகம் பேசி பார்த்து இருக்க முடியாது.</p>
<p>போஸ்ட்மார்ட்டம் முடிந்து ஒரு வெள்ளைத்துணியால் சுற்றபட்டு ராஜேஷ்வரியம்மாளின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது கணவரின் தம்பிமார்கள் குடும்பங்களுடன் வந்திருந்தார்கள். தெருவாசிகள் சிலர் அழுதார்கள். சொந்தக்காரர்கள் இந்த வீட்டை எப்படி பாகம் பிரிப்பது என தங்களுக்குள்ளாக சண்டையை தொடங்கி விட்டார்கள். ரெண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஓர் ஓரமாய் அமர்ந்து வருகிறவர்கள் யார், ராஜேஷ்வரியம்மாளுக்கு இவர் என்ன வகையில் சொந்தம் என்று குறிப்பு எழுதி கொண்டு இருந்தார்கள்.</p>
<p>யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டோ டிரைவர் ஒரு வக்கீலை அங்கு கூட்டி கொண்டு வந்தார்.</p>
<p>&#8220;அந்தம்மா எல்லாத்தையும் தெளிவா உயில் எழுதி வைச்சுட்டு போயிருக்கு. உங்க பேரைச் சொல்லுங்க, உங்களுக்கு எதாவது எழுதி வைச்சிருக்கான்னு நான் சொல்றேன்,&#8221; என்று சொந்தக்காரர்களிடம் சொன்னார் அந்த வக்கீல். அங்கு கூடியிருந்த உறவுகள் அத்தனை முகத்திலும் அப்போது தான் சோகத்தினை பார்க்க முடிந்தது.</p>
<p>&#8220;எங்க அண்ணன் பேருல இந்த சொத்து இருக்கு. இந்தம்மா இருக்கிற வரைக்கும் இத அனுபவிச்சுட்டு போகட்டும்னு விட்டுட்டு இருந்தோம். இப்ப இது நியாயபடி எங்களுக்கு சொந்தம். உயிலாவது மயிராவது,&#8221; என்று சத்தமாய் பேசினார் ஒரு கிழவர். ஆனால் அவருடைய அண்ணன் உயிருடன் இருந்த போதே சொத்து ராஜேஷ்வரி பெயரில் தான் இருந்தது என்பது அவருக்கு தெரியும். இருந்தும் சும்மா கத்தி பார்த்தார். பிறகு வேட்டியை சரியாக கட்டி கொண்டு விடுவிடுவென அங்கிருந்து கிளம்பி விட்டார்.</p>
<p>&#8220;மோசமான கிழவி தான். போகற காலத்துலேயும் யாருக்கும் உருப்படியா ஒத்தாசை செய்ய தோணாம போயிருக்கு பாரு.&#8221; உறவு பல மாதிரி திட்டி தீர்த்தது.</p>
<p>அடுத்து உயிலின் விவரம் இன்னும் சுவாரஸ்யமானது. எல்லாரும் ஆசைப்பட்ட அவரது வீட்டை அவரது சாதி சங்கத்திற்கு எழுதி வைத்திருந்தார் ராஜேஷ்வரியம்மாள். யாரும் எதிர்பாராத அளவு மிகப் பெரிய பணம் அவரது வங்கி கணக்கில் இருந்தது. தன்னுடைய வங்கி கணக்கில் இருக்கிற பணத்தை கிட்டத்தட்ட 78 பேருக்கு பிரித்து உயில் எழுதியிருக்கிறார். சிலர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அங்கு குடியிருந்தவர்கள். பெரும்பாலானோர் எதோ ஒரு காலக்கட்டத்தில் கிழவியிடம் நல்ல பேர் வாங்கியவர்கள்.</p>
<p>&#8220;இவங்க எல்லாம் எங்க இருப்பாங்கன்னு இப்ப யாருக்குமே தெரியாது,&#8221; என்று ஒரு சொந்தக்காரர் ஆச்சரியப்பட்டார். ஆனால் வக்கீலிடம் தொடர்ந்து இவர்களது முகவரியை அப்டேட் செய்து தான் இருந்திருக்கிறார் ராஜேஷ்வரியம்மாள். இரண்டாயிரத்தில் தொடங்கி அதிகப்பட்சமாக இரண்டு லட்சம் வரை நபர்களுக்கு வங்கி கணக்கில் இருந்த பணம் சரியாக பிரித்து கொடுக்கபட்டு இருந்தது. உறவுக்காரர்கள் பெயர் ஒன்று கூட கிடையாது. பெரும்பாலானோர் வாடகைக்கு குடி இருந்தவர்கள். இரண்டு லட்சம் கொடுக்கபட வேண்டிய லட்சுமி என்கிற பெண், பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு பதினைந்து வயது சிறுமியாக இருந்த போது இரண்டு ஆண்டுகள் இங்கு தனது தாய் தந்தையுடன் குடி இருந்தவர். வக்கீல் தரப்பில் இருந்து அவருக்கு போன் செய்த போது அவருக்கு ராஜேஷ்வரியம்மாள் யார் என்கிற நினைவு வருவதற்கே சில நிமிடங்கள் ஆனது.</p>
<blockquote><p><a href="http://sairams.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"><strong>மனிதர்கள் தொடர்</strong>: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.</a></p></blockquote>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/PQkCdJY5M1sDAkEr-v7vwRzlKBs/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/PQkCdJY5M1sDAkEr-v7vwRzlKBs/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/PQkCdJY5M1sDAkEr-v7vwRzlKBs/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/PQkCdJY5M1sDAkEr-v7vwRzlKBs/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/lHe_yh-eFFA" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2011/12/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2011/12/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%bf/</feedburner:origLink></item>
		<item>
		<title>சுட்டி: சுப்ரமணிய சுவாமியை புரிந்து கொள்வது எப்படி?</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/BqX5GAo0Vv0/</link>
		<comments>http://sairams.com/2011/12/%e0%ae%a4%e0%af%86%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/#comments</comments>
		<pubDate>Tue, 27 Dec 2011 14:43:28 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[சுட்டி]]></category>
		<category><![CDATA[links]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3409</guid>
		<description><![CDATA[பரிந்துரை: சிலருக்கு ஜோக்கர், பலருக்கு புரியாத புதிர், யாரும் அவரை எளிதில் புறந்தள்ளி விட முடியாது. சுப்ரமணிய சாமியை புரிந்து கொள்வது எப்படி? தெகல்கா இதழில் அவரைப் பற்றி ஓர் அலசல். &#160; &#160;]]></description>
			<content:encoded><![CDATA[<p>பரிந்துரை: <a href="http://www.tehelka.com/story_main51.asp?filename=Ne311211Coverstory.asp" target="_blank">சிலருக்கு ஜோக்கர், பலருக்கு புரியாத புதிர், யாரும் அவரை எளிதில் புறந்தள்ளி விட முடியாது. சுப்ரமணிய சாமியை புரிந்து கொள்வது எப்படி? தெகல்கா இதழில் அவரைப் பற்றி ஓர் அலசல்.</a></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/t0mRaqtgazwOBwK-57a0qUHQj0g/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/t0mRaqtgazwOBwK-57a0qUHQj0g/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/t0mRaqtgazwOBwK-57a0qUHQj0g/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/t0mRaqtgazwOBwK-57a0qUHQj0g/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/BqX5GAo0Vv0" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2011/12/%e0%ae%a4%e0%af%86%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2011/12/%e0%ae%a4%e0%af%86%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/</feedburner:origLink></item>
		<item>
		<title>என்னுள் எங்கோ</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/B9hp66Yx88A/</link>
		<comments>http://sairams.com/2011/12/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 20 Dec 2011 09:50:44 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[tamil poem]]></category>
		<category><![CDATA[tamil poetry]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3373</guid>
		<description><![CDATA[ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர்
உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு
சமீபத்தில் தான் தோன்றியது. <a href="http://sairams.com/2011/12/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #ff0000;">அவ்வபோது பார்க்கும் காட்சி தான்.</span><br />
<span style="color: #ff0000;"> ஆனால் இன்று</span><br />
<span style="color: #ff0000;"> வேகமாய் நகரும் மேகங்களை பார்க்கும் போது</span><br />
<span style="color: #ff0000;"> வானமே இடிந்து கீழே விழுவது போல</span><br />
<span style="color: #ff0000;"> பிம்பம் உருவாகிறது.</span></p>
<p><span style="color: #ff0000;">என் சிறு வயதில்</span><span style="color: #ff0000;"> பார்த்த</span><br />
<span style="color: #ff0000;"> ரயில் நிலையத்தருகே கூடி</span><br />
<span style="color: #ff0000;"> சிறிது நேரம் அரட்டையடித்து திரும்பும்</span><br />
<span style="color: #ff0000;"> முதியவர் கூட்டம் பற்றி அவ்வபோது நினைப்பதுண்டு.</span><br />
<span style="color: #ff0000;"> சில சமயம் அதை மேற்கோளாக காட்டி எல்லாம் பேசியதுண்டு.</span><br />
<span style="color: #ff0000;"> ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர்</span><br />
<span style="color: #ff0000;"> உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு</span><br />
<span style="color: #ff0000;"> சமீபத்தில் தான் தோன்றியது.</span></p>
<p><span style="color: #ff0000;">தினமும் போகும் பாதை தான்.</span><br />
<span style="color: #ff0000;"> ஒரு நாள் வேறு திசையில் இருந்து வரும்போது</span><br />
<span style="color: #ff0000;"> அது முற்றிலும் அன்னியமானதொரு சாலையாக மாறுகிறது.</span></p>
<p><span style="color: #ff0000;">தினசரி புழங்கும் இடங்களில் கூட</span><br />
<span style="color: #ff0000;"> திடீரென ஒரு நாள் முளைக்கின்றன</span><br />
<span style="color: #ff0000;"> பெரிய கட்டிடங்கள்.</span></p>
<p><span style="color: #ff0000;">என்னுள் எங்கோ</span><br />
<span style="color: #ff0000;"> திடீர் விழிப்பு</span><br />
<span style="color: #ff0000;"> திடீரென நிகழ்ந்து</span><br />
<span style="color: #ff0000;"> பிறகு கரைந்து போய் விடுகிறது.</span></p>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/3itDmgCCdQki_HssJ0edtjEgbkk/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/3itDmgCCdQki_HssJ0edtjEgbkk/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/3itDmgCCdQki_HssJ0edtjEgbkk/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/3itDmgCCdQki_HssJ0edtjEgbkk/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/B9hp66Yx88A" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2011/12/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2011/12/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/</feedburner:origLink></item>
		<item>
		<title>இருத்தல்</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/SwsvymQglSk/</link>
		<comments>http://sairams.com/2011/11/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 29 Nov 2011 05:15:33 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[tamil poem]]></category>
		<category><![CDATA[tamil poetry]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3222</guid>
		<description><![CDATA[&#8220;நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.&#8221; &#8220;கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.&#8221; &#8220;எழுதிக் கொண்டு இருக்கிறேன்.&#8221; &#8220;இருக்கிறேன்.&#8221; &#160;]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #ff0000;">&#8220;நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.&#8221;</span></p>
<p><span style="color: #ff0000;">&#8220;கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.&#8221;</span></p>
<p><span style="color: #ff0000;">&#8220;எழுதிக் கொண்டு இருக்கிறேன்.&#8221;</span></p>
<p><span style="color: #ff0000;">&#8220;இருக்கிறேன்.&#8221;</span></p>
<p>&nbsp;</p>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/PI2_vqu6irl3T9BeZGdvD2fupCY/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/PI2_vqu6irl3T9BeZGdvD2fupCY/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/PI2_vqu6irl3T9BeZGdvD2fupCY/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/PI2_vqu6irl3T9BeZGdvD2fupCY/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/SwsvymQglSk" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2011/11/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2011/11/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/</feedburner:origLink></item>
		<item>
		<title>வேட்டையாடு விளையாடு</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/NFXA_1jU5Rc/</link>
		<comments>http://sairams.com/2011/11/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/#comments</comments>
		<pubDate>Tue, 08 Nov 2011 06:14:52 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[tamil poem]]></category>
		<category><![CDATA[tamil poetry]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3214</guid>
		<description><![CDATA[அது ஒரு விளையாட்டு. 
ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி. 
எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது. <a href="http://sairams.com/2011/11/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #ff0000;">அது ஒரு விளையாட்டு.</span><br />
<span style="color: #ff0000;"> ஆதிகாலத்து அரூப வேட்டையின் அரைகுறை நீட்சி.</span><br />
<span style="color: #ff0000;"> எங்கு எப்போது தொடங்கும் முடியும் என தெரியாது.</span></p>
<p><span style="color: #ff0000;">கண்களோடு கண்கள் கோர்க்கப்படும் போது</span><br />
<span style="color: #ff0000;"> அங்கு கவிழ்கிறது ஒரு பேரமைதி.</span><br />
<span style="color: #ff0000;"> ஒரு கணம் தான் எனினும்</span><br />
<span style="color: #ff0000;"> அது ஒரு சலனமற்ற அகண்ட நீர்ப்பரப்பு.</span><br />
<span style="color: #ff0000;"> முதல் கல் விழுவதற்கு முன் வென்றாக வேண்டும்.</span></p>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/8soSd_7c0_aSK1F2qXT9o33DlQU/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/8soSd_7c0_aSK1F2qXT9o33DlQU/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/8soSd_7c0_aSK1F2qXT9o33DlQU/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/8soSd_7c0_aSK1F2qXT9o33DlQU/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/NFXA_1jU5Rc" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2011/11/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2011/11/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/</feedburner:origLink></item>
		<item>
		<title>பயம்</title>
		<link>http://feedproxy.google.com/~r/poetrytuesday/~3/qTuqyEfEX7Y/</link>
		<comments>http://sairams.com/2011/11/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/#comments</comments>
		<pubDate>Tue, 01 Nov 2011 03:15:33 +0000</pubDate>
		<dc:creator>Sai Ram</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[tamil poem]]></category>
		<category><![CDATA[tamil poetry]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>

		<guid isPermaLink="false">http://sairams.com/?p=3193</guid>
		<description><![CDATA[இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்!
நடுவில் நெருப்பு வளர்த்து
பெருகுது சத்தம்!
யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள்
தீக்குண்டத்தில்! <a href="http://sairams.com/2011/11/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/">Continue reading <span class="meta-nav">&#8594;</span></a>]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #ff0000;">இருளில் ஆயிரக்கணக்கானோர் கூட்டம்!</span><br />
<span style="color: #ff0000;"> நடுவில் நெருப்பு வளர்த்து</span><br />
<span style="color: #ff0000;"> பெருகுது சத்தம்!</span><br />
<span style="color: #ff0000;"> யார் யாரோ யாரை யாரையோ எறிகிறார்கள்</span><br />
<span style="color: #ff0000;"> தீக்குண்டத்தில்!</span><br />
<span style="color: #ff0000;"> நடுங்கி நிற்கிறேன் நான்</span><br />
<span style="color: #ff0000;"> கூட்டதிற்கு வெளியே!</span></p>

<p><a href="http://feedads.g.doubleclick.net/~a/irzsYKmttFYXgSXFHwHpQ0yeeg4/0/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/irzsYKmttFYXgSXFHwHpQ0yeeg4/0/di" border="0" ismap="true"></img></a><br/>
<a href="http://feedads.g.doubleclick.net/~a/irzsYKmttFYXgSXFHwHpQ0yeeg4/1/da"><img src="http://feedads.g.doubleclick.net/~a/irzsYKmttFYXgSXFHwHpQ0yeeg4/1/di" border="0" ismap="true"></img></a></p><img src="http://feeds.feedburner.com/~r/poetrytuesday/~4/qTuqyEfEX7Y" height="1" width="1"/>]]></content:encoded>
			<wfw:commentRss>http://sairams.com/2011/11/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		<feedburner:origLink>http://sairams.com/2011/11/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/</feedburner:origLink></item>
	</channel>
</rss>

