<?xml version="1.0" encoding="UTF-8"?>
<?xml-stylesheet type="text/xsl" media="screen" href="/~d/styles/rss2full.xsl"?><?xml-stylesheet type="text/css" media="screen" href="http://feeds.feedburner.com/~d/styles/itemcontent.css"?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:creativeCommons="http://backend.userland.com/creativeCommonsRssModule" xmlns:feedburner="http://rssnamespace.org/feedburner/ext/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-32560262</atom:id><lastBuildDate>Sun, 18 Oct 2009 02:53:53 +0000</lastBuildDate><title>பெரியார்</title><description>ஒரு சமூகப் போராளியின் வாழ்வும், பணியும்!</description><link>http://periyaarr.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (திரு/thiru)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>42</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><creativeCommons:license>http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/</creativeCommons:license><image><link>http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/</link><url>http://creativecommons.org/images/public/somerights20.gif</url><title>Some Rights Reserved</title></image><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="self" href="http://feeds.feedburner.com/periyar" type="application/rss+xml" /><atom10:link xmlns:atom10="http://www.w3.org/2005/Atom" rel="hub" href="http://pubsubhubbub.appspot.com" /><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-1204821340650223079</guid><pubDate>Sun, 11 Oct 2009 19:37:00 +0000</pubDate><atom:updated>2009-10-12T00:07:19.654+02:00</atom:updated><title>கல்வியென்பது வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரமல்ல - ஆசிரியர் மாநாட்டில் பெரியார் உரை</title><description>&lt;div style="text-align: justify;"&gt;சகோதரர்களே! சகோதரர்களே!!&lt;br /&gt;&lt;br /&gt;இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம், வரவேற்புப் பத்திரம் முதலியவைகளைக் கண்டு எனது மனம் மிகவும் வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்தவிதத்தில் தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர் என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மாநாட்டுக்கு, அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியுடையவனாவேன்? உங்களின் அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய ¨தைரியமில்லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை ஏற்கவேண்டியவனாக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருடகாலந் தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருடமாகிய எனது 8 வயதுக்கு மேற்பட்டு 11 வயதுக்குட்பட்ட காலத்தில் நான் படித்த காலத்தைவிட உபாத்தியாயாரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமாயிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள், இவன் படிப்புக்கு இலாயக்கில்லை என்பதாகக் கருதி நாங்கள் செய்து வந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11 ஆவது வயதிலேயே ஈடுபடுத்தி விட்டார்கள். இந்த 2 வருடக் கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத் தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே கல்விமுறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் நான் உங்களுக்கு எந்த விடயத்தையும் சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கால ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியத் தொழிலை ஒரு புனிதமான கடமை என்பதாகக் கருதிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சாரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மாநாடுகள் கூட்டிப் பேசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகாரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்ததற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்திளை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.&lt;br /&gt;முதலாவது நீங்கள் படித்த கல்வியும், நீங்கள் கற்றுக் கொடுக்கப் போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்துக்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயம் தான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத்தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாகத் தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்க ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். மேல்நாட்டுப் பழக்கங்களிலும் இவைதான் காணப்படுகின்றன. எனவே, இரண்டாவதாகத் தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்களிருவரும் எப்படிப் பிள்ளைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்திற்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்திற்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டியிருக்கிறது. ஆனால், அப்பேர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளைப் பெறும் இயந்திரங்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்? ஆகவே அந்த முதலாவது ஆசிரியர்களின் யோக்கிதை இப்படியாய் விட்டது. அடுத்தாற் போலுள்ள இரண்டாவது ஆரம்ப ஆசிரியர்களாகிய உங்கள் யோக்கிதையோ உங்கள் வயிற்றுப்பாட்டுக்கு கான்பரன்ஸ் கட்டவேண்டியதாகப் போய்விட்டது. உங்கள் இருவர்களாலும் கற்பிக்கப்படப் போகிற பிள்ளைகள், எப்படித் தக்க யோக்கிதையை அடைய முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;கல்வியென்பது வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரமல்ல, அது அறிவுக்காகவும் ஏற்பட்டது என்பதாக நாம் எடுத்துக் கொண்டால் மக்கள் சுயமாரியாதையோடும், சுதந்திரத்தோடும், மற்ற மக்களுக்கு இன்னல் விளைவிக்காமலும் அன்பு, பரோபகாரம் முதலியவைகளோடும் கண்ணியமாய் உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த ஞானமும் உண்டாக்கத் தக்கதாக இருக்கவேண்டும். இவைகளை அறிந்தே வள்ளுவரும் –உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் - என்றும் - தாம் இன்புறுவது உலகின்புறக் கண்டு காமுறுவர் கற்றிந்தார், என்றும் – ஒத்தறிவான் உயிர்வாழ்வான் மற்றயான் செத்தாருள் வைக்கப்படும், என்றும் சொல்லி இருக்கின்றார். இதற்கேற்ற கல்விக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நாய்க்கு நாலுகால், பூனைக்கு வாலுண்டு, கண்ணில்லாதவன் குருடன், திருடாதே, அடிக்காதே - என்று சொல்லிக் கொடுப்பதனால் என்ன பலன் ஏற்பட்டு விடக்கூடும்? இவைகள் எல்லாம் குழந்தைகள் தாமாகவே படித்துக் கொள்ளும். ஒருவனை அடித்தால் அவன் திருப்பி வைதுவிடுவான். திருடினால் பிடித்து நன்றாக உதைத்து விடுவார்கள் என்பதும், நாயும் பூனையும் கண்ணில் பார்க்கும் போதே கால் எத்தனை என்பதும், வாலுண்டு என்பதும் தெரிந்து கொள்வார்கள். இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டமும், பணச்செலவும், மெனக்கேடும் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்கவேண்டும். மானம், ஆண்மை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். தேசாபிமானத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களை விடப் பெரிய சகலகலா வல்லுநர்களிடத்தில் படித்து எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், ஒரு காப்பிக் கடைக்குப் போனால் தனது சுயமரியாதையற்று அங்கு எச்சில் கிண்ணம் தூக்குபவனைக் கண்டு - சாமி ஒரு கப் காப்பி கொண்டுவா - என்று கூப்பிடுகிறான். தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான். தன் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டி போடுகிறான். இந்தப் பட்டமெல்லாம் கல்வியாகுமா? இதைப் பெற்றவர்களெல்லாம் படித்தவர்களாவார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி, முதலியோர் எப்படித் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி,ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படிச் சரித்திரப் பாடம் தெரியாதோ, அப்படியே பி,ஏ., படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படி பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ., படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது. ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களை விட பி.ஏ., எம்.ஏ., வித்வான்., சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர். அறிவாளிகளுமல்லர். உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில் தானே தவிர. அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படியாதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதை உள்ளவர்களாகவும் இருக்கலாம். எனவே, இவைகளல்ல கல்வியென்பது நமக்கு விளங்கவில்லையா? நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம் தற்காலத்தில் கல்விமுறை என்பதே எனது அபிப்பிராயம். முற்காலக் கல்விமுறை என்றே எழுதித் திண்னைப் பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து படித்த படிப்பை விடத் தற்காலப் படிப்பு மக்களுக்கு என்ன நன்மை செய்துவிட்டது? ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் ஆற்றுமணலும் போய், காகிதக் குப்பைகளுக்கும், பெரும் பெரும் புத்தகங்களும், இங்கி, பெட்டி, பேனா, பென்சில்களுக்குமாக நமது பணங்கள் சீமைக்குப் போக ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறு பலனுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பில்லாத என்கிற முற்காலத்து மக்களைவிட, படிப்புள்ள என்கிற தற்காலத்து மக்கள் ஒழுக்கத்தில் எவ்விதம் உயர்ந்திருக்கிறார்கள்? படிப்பில்லாத காலத்தைவிட அன்பில், அன்னியோன்யத்தில், நம்பிக்கையில் படிப்புள்ள மக்கள் என்ன ஒத்திருக்கிறார்கள்? முன்காலத்தில் ஒருவன் வாங்கின கடனைக் கொடுக்காவிட்டால் அவன் வீட்டு வாயிலில் ஒரு பசுவையும் அதன் கன்றையும் தீனி போடாமல் கட்டி விடுவது வழக்கம். இந்தப் பட்டினியின் பாவத்திற்கு அஞ்சி பெண்சாதியின் தாலியை விற்றாவது, கடனைக் கொடுத்து விட்டுத்தான் வீதிப்புறம் நடப்பான் என்று எனது தகப்பனார் சொல்லி இருக்கிறார். கல்வி ஏற்பட்ட காலமாகிய இப்பொழுது அம்மாதிரிச் செய்தால் படித்தவர்கள் என்கிற வக்கீல்கள் - பாலைக் கறந்து வந்து நமக்குக் கொடுத்துவிடு பாவம் வந்து நம்மை என்ன செய்துவிடும் பார்க்கலாம் – என்று ¨தைரியம் சொல்லி ஏமாற்றி வழிகாட்டி வருவார்கள். இதனாலேயே தற்காலம் எத்தனை மாஜிஸ்திரேட் கச்சேரி, எத்தனை முன்சீப் கோர்ட்டு, எத்தனை செசன்ஸ், அய்கோர்ட், எத்தனை போலீஸ் கச்சேரி ஏற்பட்டிருக்கிறது. பாருங்கள். இவைகளெல்லாம் படிப்பில்லாத என்கிற முற்காலத்தில் இருந்தனவா. படிப்பு என்னும் தற்காலக் கல்வி முறையல்லவா மக்களை இவ்வளவு ஒழுக்கயீனமாக நடக்கத் தூண்டி, அல்லல்படுத்தி, நாட்டையும் சமூகத்தையும் பாழ்படுத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுக் கல்வியின் யோக்கிதை இப்படியானால் தொழில்கல்வியின் யோக்கிதை இதைவிட மோசமாக இருக்கிறது. தொழில்கல்வி என்னும் பெயரால் தற்காலம் நமது பணமும், நேரமும் மக்களின் அறிவும் வீணாவதல்லாமல் வேறென்ன பலனைக் கண்டோம்? தற்காலப் பள்ளிக்கூடங்களில் தொழில்கல்வி என்ற பெயருடன் கற்றுக் கொடுக்கும் தொழிற்கல்வி முறையும் கொஞ்சமும் சரியானதல்ல. கொஞ்ச காலமாகத் தேசியக் கிளர்ச்சி ஏற்பட்டதின் பலனாய் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் தொழிற்கல்வி என்பதாகச் சொல்லி, தச்சு வேலையும், விவசாயமும், இராட்டினம் சுற்றுதலும், நெசவு நெய்தலும் முதலிய வேலைகளுக்கென்று அனாவசியமாய்ப் பணத்தையும், நேரத்தையும் பாழ்படுத்துகின்றனர். வக்கீல் மகனுக்கும், ஜட்சு மகனுக்கும், மிட்டாதார் மகனுக்கும், வியாபாரி மகனுக்கும், பெரிய நிலச்சுவான்தார்கள் மகன்களுக்கும் ஒருங்கே உட்கார வைத்துச் சில மணிநேரம் தச்சு வேலை கற்றுக் கொடுப்பதாலும், இராட்டினத்தைச் சுற்றச் சொல்வதாலும் என்ன பயன் விளையக் கூடும்? எல்லாத் தொழிலும் கற்றிருக்கட்டும் என்பதற்காகவே சொல்வோமானால், இந்த இரண்டு மூன்று தொழிலாலேயே உலகத் தொழில் எல்லாம் தெரிந்துவிடுமா ? ஜீவனோபாயத்திற்காக என்று சொல்வோமானால் மேற்கண்ட பிள்ளைகளெல்லாம் இந்தத் தொழிலை ஜீவனோபாயத்திற்காக ஏற்று ஜீவிக்க முடியுமா? ஆகவே, அறிவுக்காவது,ஜீவனத்திற்காவது இந்தத் தொழில்கள் இப்பிள்ளைகளுக்கு உபயோகப்படுகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;உயர்தரப்பாடசாலை என்பவைகளில் - சயின்ஸ் என்றும் சரித்திரம் என்றும் எதை எதையோ பணத்தையும் காலத்தையும் செலவழிக்கச் சொல்லிக் கொடுத்து உருப்போடச் செய்து, கற்றுத் தேர்ந்த பிறகு 30 ரூபாய்க்கு ஏவின வேலை செய்து, படிப்பினுடைய சக்தியையும் அறிவையும் கொண்டல்லாமல் மேல் எஜமானுக்கு மானத்தையும், மனசாட்சியையும் விற்று நல்ல பிள்ளையாவதன் மூலம் சம்பளத்தை உயர்த்தி, வாங்கிய சம்பளத்தில் வாழ்ந்து, தன் காரியத்தை பார்த்துக் கொண்டதோடு சாவதல்லாமல், வேறு ஏதாவது பல்குத்துகிற துரும்புக்காவது உதவப்படுகிறதா? அல்லது அந்தத் தொழிலுக்காவது இந்தப் படிப்புகள் உபயோகப்படுகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே இக்கைத்தொழில்களும் வாழ்வுக்கோ, பிழைப்புக்கோ உபயோகப்படாமல் போகிறது. கைத்தொழில் கற்றுக் கொடுப்பதனால் கூடுமான வரையில் பிள்ளைகளின் இயற்கை அறிவிற்கும், வாழ்விற்கும் வாழ்க்கைக்கும் தக்கபடி தரந்தரமாகப் பிரித்து அதுகளுக்குத் தகுந்த தொழில்களைச் சொல்லிக் கொடுத்து அதை அவர்களுக்கு உபயோகப்படும்படி செய்யவேண்டும். பெண்களுக்கு இராட்டினம் சுற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆண் பிள்ளைகளுக்குக் கதரைக் கட்டச் செய்வதும், கதரை ஆதரிக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லிக் கொடுப்பதும் இராட்டினத்தை விட முக்கியமானதாகும். அதை விட்டுவிட்டு, உபாத்தியாயரும் கதர் கட்டாமல் பிள்ளைகளையும் கதர் கட்டச் செய்யாமல், இவர்களின் எஜமானர்களாகிய தாலுக்கா போர்டு, ஜில்லாபோர்டு முதலிய தலைவர்களும் அங்கத்தினர்களும் கதரைக் கட்டாமல் பொதுமக்களின் வரிப்பணத்தை அள்ளி வெறும் இராட்டினத்தை வாங்கி பிள்ளைகளின் நேரத்தையும் பஞ்சையும் வீணாக்கி நூலைக் குப்பையில் போடுவதில் இலாபமென்ன? கதர் கட்டுவதன் அவசியத்தை அறியாத ஒரு பையன் இராட்டினம் சுற்றுவதில் பிரயோஜனமென்ன? கதரைக் கட்டாத உபாத்தியாயர்கள் கதரைக் கட்டும்படி உபதேசம் செய்வதில் பிரயோஜனமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அறிவும் தொழிலும் இப்படியானால் உபாத்தியாயர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கிற பொறுப்பும், பற்றுதலும், பக்தியும் இதை விட மோசமானதென்றே சொல்லவேண்டும். சாதாரணமாய் ஒரு உபாத்தியாயருக்கும் ஒரு மாணாக்கனுக்கும் உள்ள பற்றுதலையும் பக்தியையும் விட, ஒரு தாசிக்கும் அவளுடைய அன்றன்றைய நாயகனுக்கும் உள்ள பக்தியும், பற்றுதலும் மேலானதென்றே சொல்லலாம். எப்படியெனில், ஒரு தாசிக்கு ஓர் இரவு முழுவதுமாக ஒரு நாயகன் இருக்கக் கூடும். நமது மாணவர்களுக்கோ மணிக்கு இரண்டு உபாத்தியாயர்கள் வருகிறார்கள். ஒரு நிலையான உபாத்தியாயரிடமிருந்து ஒரு பொறுப்பான விஷயங்களை உணரக்கூடிய சந்தர்ப்பங்களே கிடையாது. உபாத்தியாயர்களும் சம்பளம் உயர்ந்த பள்ளிக்கூடங்களுக்குப் போவதும், மாணாக்கர்களும் அவர்களுக்குச் சவுகரியப்பட்ட பள்ளிக் கூடத்திற்குப் போவதும், சுயேச்சையாகிவிட்டது. பிள்ளை படிக்க வேண்டியதும், உபாத்தியாயர் அவனைத் தேறச் செய்ய வேண்டியதும், அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்ததாகவே போய்விட்டதேயல்லாமல், பொறுப்பும் கவலையும் ஒருவருக்குக் கட்டுப்பட்டதல்லாததாகவே இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி, அறிவு, தொழில்முறை, குருபக்தி ஆகியவற்றின் யோக்கிதை இப்படி என்றால் உபாத்தியாயர்களின் காலட்சேபமோ நினைப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. முன்காலத்தில் உபாத்தியாயர்களுக்கு காலட்சேபத்தைப் பற்றிய கவலையே இருந்ததில்லை. உபாத்தியாயர்களுக்கு ஒரு சிறு குடிசை இருந்தால் போதும். பிள்ளைகளுக்கு அக்குடிசைக்கு முன்னால் ஒரு பந்தலோ, கொட்டகையோ இருந்தால் போதும். பிள்ளை படிப்பதற்கு அய்ந்தாறு மட்டை பனை ஓலையும், அரை வண்டி மணலும், இருந்தால் போதும். எழுதுகோலாக ஒரு கூர்மையான ஆணி இருந்தால் போதும். மற்றபடி உபாத்தியாயர்களுக்குக் கவலையே கிடையாது. வெள்ளாமைக் காலத்தில் பையன்களிடம் சொல்லிவிட்டால் கூடை கூடையாகத் தானியங்கள் வந்து குவிந்துவிடும். உபாத்தியாயரே போட்டு வைக்க இடம் இல்லாததால் போதும் என்று சொல்லிவிடுவார். எண்ணெய், விறகு முதலியவைகள் மாதத்திற்கு ஒரு தடவையும், காய்கறி பதார்த்தங்கள் தினமும் தானாகவே பிள்ளைகள் மூலம் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். பண்டிகைகளுக்கு வேஷ்டித் துணிகளும், மேற்செலவுக்கு இனாம் பணங்களும் தானாகவே வந்து சேர்ந்துவிடும். உபாத்தயாயர் வீட்டில் நடக்கும் கல்யாணம், கார்த்திகை, நன்மை, தீமை முதலிய சடங்குகளுக்கு அவ்வப்போது பெற்றோர்களும், பையன்களுடைய சுற்றத்தார்களும் தாராளமாகக் கொடுத்து நடத்திவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பையனுடைய படிப்புக்கு வகுப்பு உபாத்தியாயர் வாப்தாரியாகவும், உபாத்தியாயர்களுடைய காலட்சேபத்திற்குப் பிள்ளைகளின் பெற்றோர்கள் வாப்தாரிகளாகவும் பரஸ்பரம் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுவார்கள், ஒரு பையன் வீட்டில் ஏதாவது குற்றஞ் செய்து விட்டாலும், அவன் படித்ததாகச் சொல்லும் பாடங்களில் கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லாவிட்டாலும் உபாத்தியாயருக்குக் கொடுப்பதில் குறைத்துவிடுவார்கள். உபாத்தியாயர்கள் பெயரைச் சொன்னால் பையன்கள் நடுங்குவார்கள். சாப்பாட்டுக் கவலையென்பதே உபாத்தியாயர்களுக்குத் தெரியவே தெரியாது. உபாத்தியாயர் வீட்டுப் பெண்களோடு குடும்பக் கவலை நின்றுவிடும். எவ்விதத்திலும் அவைகள் உபாத்தியாயர் காதுக்கு எட்டவே எட்டாது. அக்காலத்திய படிப்புச் செலவு இப்போதைய செலவுகளில் பதினாறில் ஒரு பங்குகூட இருக்காது. இப்பொழுதோ பிள்ளைகளுக்கு கொடுக்கிற பணம் கணக்கு வழக்கில்லை. புத்தகம், காகிதம்., பேனா, பென்சில், சித்திர சாமான்கள், விளையாட்டுக் கருவி, இரசாயன சாமான், பெஞ்சு, நாற்காலி, மேசை, கட்டடங்கள் இவைகளுக்காகும் செலவுகளோ மக்கள் தாங்க முடியாததாகப் போய்விடுகிறது. இதன்மேல் உபாத்தியாயர்களுக்குக் கொடுப்பதும் தாங்க முடியாததாகவே ஏற்பட்டு விடுகிறது.&lt;br /&gt;சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்போருக்குக் கொடுக்கப்படும் சம்பளம் சில ஆபீஸ்களில் பியூன்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் கொடுக்கப்படுவதை விடக் குறைவாகத் தான் இருக்கிறது. குழந்தை குட்டிகளோடு வாழ்கிற ஒரு குடும்பத்திற்கு 30 ரூபாயாவது இருந்தால் தான் கவலையில்லாமல் தன் காரியத்தைக் கவனிக்க முடியும். அதுகூட இல்லாமல் கஸ்டப்படுகிறதைப் பார்க்கும் பொழுது நமக்கு மிகவும் பரிதாபகரமாகத் தானிருக்கிறது. பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்வது போல், நமது அரசாங்கத்தார்கள், சாராயத்தை விற்று அதில் வரும் இலாபத்தை எடுத்துக் கல்விக்காகச் செலவு செய்கிறார்கள். ஆகவே, இன்னும் கொஞ்சம் கல்வி சவுகரியமும், சம்பளச் சவுகரியமும் வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் அதிகமாகக் கள், சாராயம், குடித்து, அதனால் அதிக வரும்படியை உண்டாக்கும் பொறுப்பை நம் தலையில் வைத்திருக்கிறார்கள். இம்மாதிரிக் குடியில் வரும் இலாபத்தினால் தான் படிப்புக்குச் செலவு செய்ய வேண்டும் என்று ஏற்படுமானால், நம் மக்கள் படிக்காமல் தற்குறியாக இருந்தாவது, உபாத்தியாயர்களெல்லாம் தெருவில் கல்லுடைத்து ஜீவனம் செய்து கொண்டாவது, கள் குடியை நிறுத்துவதே மேலானதென்பது என் அபிப்பிராயம். இம்மாதிரிப் படிப்பு வலுத்ததின் பலனாய் படிப்பின் அவசியமில்லாமல் வேறு வழியில் வாழக்கூடிய பெருத்த குடும்பங்களெல்லாம் பாழாகிப் போய்கொண்டே வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவுக் கெவ்வளவு உயர்தரப் பள்ளிக் கூடங்களென்பது அதிகமாகிக் கொண்டு வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதில் படித்த பெரும்பான்மைப் பிள்ளைகளின் குடும்பங்கள் கெட்டுக் கொண்டே வருகின்றன. உதாரணமாக, பூமிகளின் சொந்தக்காரர்களின் பெயர்களைக் காட்டும் செட்டில்மெண்ட் ரிஜிஸ்டர் என்னும் பதிவுப் புத்தகத்தை வாங்கிப் படித்தீர்களானால், அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். 40, 50 வருங்களுக்கு முந்திய செட்டில்மெண்ட் ரிஜிஸ்டரிலுள்ள பூமிக்குச் சொந்தக்காரர்களின் பெயர்களை 10 வருஷத்துக்கு முன்னுள்ள புத்தகத்தைப் பார்ப்பீர்களானால் 100 க்கு 75 பாகம் மாறிப்போய்த் தானிருக்கும். அக்காலத்தில் கவுண்டர், நாய்க்கர், பிள்ளை, படையாச்சி, ரெட்டி, நாயுடு என்றிருப்பது போய் இப்பொழுது அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், செட்டியார், முதலிய உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள், வியாபாரிகள் ஆகியவர்கள் பெயருக்கே மாறியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காரணமென்னவென்றால், உயர்தரப் பள்ளிக்கூடம் வந்தவுடனே எல்லாப் பிள்ளைகளும் அதில் படிக்கச் சேர்த்து விடுகிறார்கள். குடியானவர்களும் தங்கள் பிள்ளைகளை அதிலேயே சேர்த்து விடுகிறார்கள். அந்தப் பிள்ளைகளுக்குப் படித்துத்தான் ஜீவனம் செய்ய வேண்டுமென்கிற அவசியமில்லாததாலும், இந்தக் கூட்டங்களும் படித்துவிட்டால், உத்தியோகங் கொண்டே வாழ வேண்டியவர்களாகிய நம்ம கூட்டத்தார் வாயில் மண் விழுந்துவிடுமே என்கிற பயங்கொண்ட உபாத்தியாயர்களாலும், இப்பிள்ளைகள் சரியாகப் படிக்க முடியாமல் 5, 6 வரும் பெஞ்சுக்கு வாடகை கொடுத்ததோடு தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டும், சிகரெட், பீடி பிடித்துக் கொண்டும், வேடிக்கை உடைகள் தரித்துக் கொண்டும், பொறுப்பும் ஒழுக்கமுமற்ற சம்பாஷணைகள் பழகிக் கொண்டும், உல்லாசமாய்த் திரிந்து 2, 3 தடவை பரிட்சையில் தோல்வியுற்று கடைசியாய், ‘இனி படிப்பு வராது’ என்கிற முடிவுடன் வீடுபோய்ச் சேருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பட்டணவாசப் பள்ளிப் பழக்கமானது பட்டிக்காட்டு வாசத்துக்குச் சவுகரியமில்லாமல் வீடு, வாசல்களும், விவசாயப் பண்ணைகளும் தங்களுக்குப் பிடித்தமில்லாததாகி, நோக்கமெல்லாம் பட்டிணங்களிலேயே கொண்டு போய் விடுகிறது. அல்லது, சிலருக்குப் பட்டிக்காட்டிலேயே பட்டணங்கள் போல் வீடுவாசல் கட்டி சுகமனுபவிக்க ஆசை ஏற்பட்டுவிடுகிறது. இதன் மூலம், தங்கள் விவசாயம் கெடுவதோடும் தங்களுக்குச் கிரமமாய் வரும் பொருள் வருவாயும் கெடுவதோடு அதிகச் செலவும் ஏற்பட்டு அதன் மூலம் கடன்காரன்களாகி வீண் விவகாரங்களில் ஈடுபட்டுக் கடைசியாய் இக்குடும்பச் சொத்தானது விவகாரத்தில் அதிகாரிகளுக்கு இலஞ்சத்தின் மூலமாகவும், வக்கில்களுக்குப் பீசின் மூலமாகவும் லேவாதேவிக்காரர்களுக்கு வட்டியின் மூலமாகவும் போய்ச் சேர்ந்து விடுகிறது. இந்தக் காரணங்களால் இவர்கள் பூமிகள் அவர்கள் பேருக்குப் பட்டாமாறுவதும் அல்லது அவர்கள் விலைக்கு வாங்குவதுமாய் முடிந்துவிடுகிறது. இனியும் ஒரு 50 வருஷத்திற்கு இக்கல்விமுறை இப்படியே இருக்குமானால் நமது பூமிகளெல்லாம் உத்தியோக வக்கீல் கூட்டத்தாருக்கும், லேவாதேவிக் கூட்டத்தாருக்குமே போய்ச் சேர்ந்துவிடும். இப்பொழுதுள்ள மிராசுதாரர்களின் பிள்ளைகளெல்லாம் அந்தக் கூட்டத்தாரிடம் பண்ணையாட்களாகவும், குடிவாரக்காரர்களாகவும் போய்ச் சேர வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தாரும் கல்விக்காகக் கோடிக்கணக்கான ரூபாய்ச் செலவு பண்ணுகிறார்கள். அவ்வளவும் உபாத்தியாயர்களுக்கும் போவதாயிருந்தால் உபாத்தியாயர்களுக்குக் கஷ்டமே இருக்காது. பணத்தையெல்லாம் கல்வியின் பெயரால் மேற்சென்னபடி சமான்களுக்கும், கட்டடங்களுக்கும், மற்றும் பாதிரிமார்களுக்கும், உயர்ந்த சம்பளம் பெறும் உபாத்தியாயர்களுக்கும் இவற்றை மேற்பார்வை பார்ப்பது என்பதாகப் பல பெரிய பெரிய சம்பளமும் உத்தியோகஸ்தர்களுக்குமே போய்விடுகிறது. இவ்வளவு செலவுகளையும் அனாவசியமாகச் செய்துவிட்டு, ஆரம்ப ஆசிரியர்களையும் பட்டினி போட்டுவிட்டு இந்த ஆசிரியர்களை ஆடு மாடுகளைவிடக் கேவலமாகவும் மதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனப்பிரதிநிதிகள் என்கிற சட்டசபை அங்கத்தினர்கள் முதலிய அரசியல் வாழ்வுக்காரர்களோ உங்களிடம் வரும்போது உங்களிடத்தில் ரொம்பவும் அனுதாபம் உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டு, உங்களுக்குச் சம்பளம் 40 ரூபாய் வேண்டும். 50 ரூபாய் வேண்டும் என்ற ஆசை வார்த்தை சொல்லி உங்களைத் திருப்தி செய்து, உங்களால் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஓட்டுகளைப் பெற்றுக்கொண்டு போய்விடுகிறார்கள். பொதுஜனங்களிடம் போகும்போது அவர்களைப் பார்த்து, சர்க்கார் அதிக வரிவசூல் பண்ணுகிறது. அனாவசியமாய் அதிகமான ஆள் அம்புகள் வைத்து அரசாங்கச் செலவைப் பெருக்கிவிட்டது. நாங்கள் போய்ச் சம்பளத்தையும் செலவையும் குறைத்து உங்களுக்கு வரியைக் குறைக்கிறோம் என்று மேடைகளில் நின்று பேசிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களிருவரையும் ஏமாற்றி, சட்டசபையில் போய் உட்கார்ந்துகொண்டு, உங்களுக்கும் அவர்களுக்கும் திருப்தி ஏற்படும்படியாக ஏதோ, இரண்டு கேள்வி கேட்டதாகப் பாவனை காட்டிவிட்டு, உங்களையும், பொதுஜனங்களையும் வஞ்சிக்கிற காரியங்களுக்காகச் சர்க்காருக்கு உள்உளவாய் இருந்து தங்களுக்குப் பெருமையும், உத்தியோகங்களும், பதவியும் கிடைப்பதற்கும் தங்கள் சொந்தக் காரியங்கள் ஏதாவது சாதித்துக் கொள்வதற்கும் ஆளாகிவிடுகிறார்கள். வரி குறைப்பதும், சம்பளம் கூட்டுவதும் ஒன்றுக்கொன்று பொருந்தாத விஷயம். வரியையும் குறைத்து, உங்கள் சம்பளத்தையும் உயர்த்த வேண்டுமானால் பெரிய உத்தியோகஸ்தர்களுடைய சம்பளத்தையும், நான் மேலே சொன்ன வீண்செலவுகளையும், குறைக்கும் படி சொல்வதற்கு இவர்களுக்குத் ¨தைரியம் வேண்டும். இவர்களே மாதம் 2000, 3000, 4000, 5000 சம்பளம் வாங்கிக் கொண்டு மந்திரி, தலைவர் முதலிய பதவிகளுக்கு ஆசைப்பட்டுக் கொண்டு, இவர்களே இப்பேர்ப்பட்ட பதவிகளை மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களை ஆதரித்தும், அதன் மூலம் தாங்கள் பிழைக்கப் பிராயத்தனப்பட்டுக் கொண்டும், இவர்களுடைய செலவுக்கே தினம் 10, 15, 40, 50 வேண்டுமென்று சர்க்காரை கேட்டுக் கொண்டு, இவர்கள் போக்குவரத்துக்கே முதலாவது, இரண்டாவது வகுப்பு, இரட்டைப் படிகள் வாங்கிக் கொண்டும், இவர்கள் நடவடிக்கை நடத்தும் கூட்டங்களுக்கே 2 இலட்சம், 3 இலட்சம், 2 கோடி, 4 கோடி அனுபவித்துக் கொண்டு, இராஜபோகமனுபவிப்பவர்கள், வேறு யாருடைய எந்தச் செலவைக் குறைத்து வரி உயர்த்தாமல், உங்களுக்குச் சம்பளத்தை அதிகப்படுத்தக்கூடும். என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே இவ்வித அரசியல் புரட்டுகள் நமது நாட்டிலுள்ள வரையிலும், உங்களைப் போன்றவர்கள் இவர்களை ஆதரித்து இப்புரட்டர்களை மரியாதை செய்கிற வரையிலும் உங்களுக்கு மாத்திரமல்ல, இந்த நாட்டுக்கே விமோசனம் இல்லையென்பது தான் என் அபிப்பிராயம். இனியாவது இந்த அரசியல் புரட்டர்களின் சூழ்ச்சிகளிலிருந்து தப்புவீர்களென்று எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளறக் கிளற மிகவும் மோசமாகவே தான் வந்து கொண்டிருக்கும். இம்மாநாட்டைப் பொறுத்தவரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்தவரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும் குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப்படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்துகொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும், கிளர்ச்சிகளையும் உங்கள் சுயநன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். கல்வி விஷயத்தில் நமது நாட்டுக்கு ஏற்பட வேண்டிய திருத்தத்தில் உங்களுடைய உதவியும், தாலுக்கா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, முதலியவற்றின் உதவியும் ரொம்பவும் வேண்டியிருக்கிறது. உண்மையான தேசாபிமானக் கண்ணோடு பார்ப்பீர்களானால், உங்களுக்கு இவைகளெல்லாம் விளங்காமற்போகாது. இங்கு விஷயம் செய்திருக்கும் தாலுக்கா, ஜில்லாபோர்டு அங்கத்தினர்களையும், தலைவர்களையும் இவ்விஷயங்களிலெல்லாம் கவனித்து உங்களுக்கு அனுகூலமாய் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னை நீங்கள் ஒரு பொருட்டாய் மதித்துத் தலைவனாகத் தேர்ந்தெடுத்ததற்கு என் மனதில் சரியென்று பட்டதை, உங்கள் முன் கொஞ்சமும் ஒளிக்காமல் பேசியிருக்கிறேன். இவற்றுள் கொள்ளத்தக்கதும், தள்ளத்தக்கதும் இருக்கலாமென்றே நினைக்கிறேன். ஆதலால் உங்களுடைய அறிவையும், ஆற்றலையும் இவைகளுள் செலுத்தி, தள்ளத்தக்கதைத் தள்ளி, கொள்ளத்தக்கதைக் கொண்டு, அமுலில் கொண்டு வரவேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;போளூரில் 24-4-1927 இல் நடந்த ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-1204821340650223079?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/uZK7ysX0bw8" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/uZK7ysX0bw8/blog-post.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2009/10/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-194289328178383570</guid><pubDate>Tue, 28 Oct 2008 14:53:00 +0000</pubDate><atom:updated>2008-10-28T16:01:01.575+01:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பார்ப்பனீயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><title>ஆதிக்கத்திற்கு கேடு ஏற்படுவதால் வெள்ளையனை எதிர்க்கிறார்கள்!</title><description>&lt;div style="text-align: justify;"&gt;இந்நாட்டில் இன்று எங்கே பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றி பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகவும் தைரியமாகவும் கிளர்ச்சி செய்ய சந்தர்ப்பமும் சவுகரியமும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் அரசர்கள், மூவேந்தர்கள் முதலியவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிகக் கேவலமாகவே உயிர் வாழ்ந்ததாகத்தான் காணக்கிடக்கிறது. இந்து அரசர்கள் அல்லாத முகமதியர் அரசர்கள், கிறிஸ்துவர் அரசர்கள் ஆகியவர்கள் ஆட்சிக்காலமே - உங்களை ஓரளவுக்காவது மனிதர்களாக நடத்தப்பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனுபவமும் காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்தமட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக்கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன். இன்று தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்து சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர்களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ஆனால், ராமராஜ்யத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோகூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொறுத்தவரை, எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும்படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கி இருக்கிறது. நான் ஏதோ ராஜவிஸ்வாச உபன்னியாசம் செய்வதாய் ‘தேசாபிமான வீரர்'களுக்குத் தோன்றலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்துபோக வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவன் நான். ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும், பொதுஜனங்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும் சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும் கொடுமையும் சேர்ந்து, இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன், உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியான தங்களுடைய சூத்திரப்பட்டம், இந்த ராமராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும் - எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்றுள்ள உங்கள் குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத்தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத்தான் நம்ப வேண்டுமென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த்தி செய்து கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதோ, அரசாங்கத்தோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்ளுகின்ற கட்சியிலோ, கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சொல்லுவதற்காகவே இவற்றைச் சொல்லுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எல்லோரும் அப்படிச் செய்யவில்லையா என்றும் மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோதமாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள். அவர்கள் நிலை வேறு; உங்கள் நிலை வேறு; அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும் பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப்படுகிறார்கள். கல்வியில் சிறிது முன்னணிக்கு வந்து விட்டார்கள். பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை. பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதையை அவர்கள் அடைந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது மாத்திரமல்லாமல், அவர்கள் மதத்துக்கும் பழக்க வழக்கத்துக்கும் விரோதமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச்சீர்திருத்தங்களைச் செய்யவொட்டாமலும், செய்துவிட்டால் - அது அமலில் நடத்தப்படாமலும் இருப்பதற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழிமறிப்பதற்காக - அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆதலால், அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em style="color: rgb(0, 0, 153); font-weight: bold;"&gt;((29.9.1935 அன்று ராசிபுரம் தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் பெரியார் ஆற்றிய உரை))&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-194289328178383570?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/r7x5uRxhhjY" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/r7x5uRxhhjY/blog-post.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/10/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-3402589783154643614</guid><pubDate>Fri, 29 Feb 2008 23:59:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.586+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்துமதம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">குடியரசு</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பார்ப்பனீயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்து</category><title>இந்து மகாசபையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்-பெரியார்</title><description>இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இது பிராமண ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும் பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும், இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கிலொரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் மகமதிய சகோதரர்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் இடமளிக்கக்கூடியதாகும் என்றும் இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, மகமதிய சகோதரர்களின் நடவடிக்கையைத்தான், முக்கியக் காரணமாகச் சொல்லி வருவதால் வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து - முஸ்ஸீம் ஒற்றுமை அடியோடு மறைந்து போகுமென்றும், நமது குடி அரசின் பத்திராதிபர் பல தடவைகளிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில், இந்து மகாசபைக்கு கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம் வருணாசிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் அக்கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும் நியமுகம் பெற்றிருக்கின்றார்களென்பதும், அநுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையில் இருக்கும்போது, தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள் மறுபடியும் வருணாசிரம சபையென்று ஒன்றுகூட்டி, அதிலும் உட்கார்ந்து கொண்டு தீண்டாமை வேத சம்மதம் என்றும், மநுதர்மவிதியென்றும், வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றவேண்டும் என்றும் இதற்கு விரோதமாய் இருக்கும் மகாத்மா காந்தியை ஒழிக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்வதை நாம் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாகாணத்தின் இந்து மகாசபையின் கிளைத்தலைவர் சிறீமான் டி. ஆர். ராமச்சந்திர ஐயர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். அவர் வருணாசிரம தர்மத்தினுடையவும், பிறவியில் தான் உயர்ந்த பிராமண ஜாதியாமென்பதினுடையவும், தீண்டாதான் என்பவன் தெருவில் நடக்கக்கூடாது, கண்ணில் படக்கூடாது என்பதினுடையவும் அவதாரம். அதே மாதிரி கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டணம், கோயமுத்தூர் முதலிய இடங்களிலுள்ள இந்து மகாசபைத் தலைவர்களும், சென்னைத் தலைவருக்கு இளைத்தவர்களல்ல. கும்பகோணம் இந்து மகாசபையிலேயே தீண்டாமை சாஸ்திர சம்மதமானதென்றும், அதை ஒழிக்கக்கூடாதென்றும் ஓர் தீர்மானம் செய்திருப்பதாக நமக்கு ஞாபகமிருக்கிறது. இப்படியிருக்க இந்து மகாசபை நாட்டில் பரப்புவது எப்படி இந்துமதத்திற்கு நன்மை பயப்பதாகும்? ஓர் கொள்கைக்காக ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டால் அந்தக் கொள்கைப்படி நடப்பவர் கிடைக்காவிட்டாலும், அந்தக் கொள்கையை நம்புகிறவர்களாவது, அந்த ஸ்தாபனத்தை நடத்துகிறவர்களாயிருக்க வேண்டாமா ? சிறீமான் டி.ஆர். இராமச்சந்திர ஐயர் தீண்டாமையை ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு சபைக்கு அக்கிராசனம் வகிப்பதானது, வாஸ்தவத்திலேயே அச்சபையின் யோக்கியதையைக் காட்டுவதாகுமா? அல்லது அச்சபையின் புரட்டுகளை காட்டுவதாகுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;நமது நாட்டிலுள்ள சில வைதீகர்கள் எப்படி பாமர மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறலாம் என்கிற கொள்கைக்கு ஸ்தாபனங் கண்டுபிடிக்க கருத்தாய் இருக்கின்றார்களேயல்லாமல் உண்மையாக ஓர் காரியத்தைச் செய்வதற்கு ஒருவருமில்லை. இந்து மகாசபையின் ஸ்தாபகர் சிறீமான் மாளவியா அவர்களே, தீண்டாதவரைப் பற்றி பேசும்போது, கண்களில் ஜலம் விடுகின்றாரேயல்லாமல், பிறவியில் தனக்கும், தீண்டாதாருக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுவதே இல்லை. தன்னை பெரிய வருணாச்சிரமத் தர்மியாகத்தான் ஒப்புக்கொள்ளுகிறார். முஸ்ஸீம்களின் உபத்திரவங் காரணமாக இந்து மகாசபையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று என்று சொன்ன காரணத்தால், பஞ்சாபில் முஸ்ஸீம்கள் நடத்தையால் அதிருப்தி கொண்ட லாலா லஜபதிராய் அவர்களும் இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மகாசபைக்கு உழைக்க முன் வரவேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில், இந்துக்களல்லாத வர்களைத் தாழ்மையாகக் கருதுவதும், இந்துக்களில் பிராமணர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் பிராமணரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும், மகமதியர் அதிகமாயிருக்கிற பாகங்களில் மகமதிய ரல்லாதவரைத் தாழ்மையாகக் கருதுவதும், கிறிஸ்தவர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் கிறிஸ்தவரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும் பெரும்பாலும் உலக சுபாவமாகவே கருதுகிறோம். அத்தோடு, கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர்களும் செல்வாக்கில்லாத வர்களைத் தாழ்மையாகவே கருதுவதும் சுபாவமாகத்தானிருக்கிறது. உதாரணமாக, இந்துக்கள் மகமதியர்களையும், கிறிஸ்தவர்களையும் மிலேச்சர்களென்று சொல்லுவதையும், மகமதியனைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டியெறிய வேண்டுமெனச் சொல்லி வந்ததையும், இந்துக்களுக்குள் பிராமணனை, பிராமணரல்லாதார் மிலேச்சர்களென்று அகராதியில் எழுதியிருப்பதையும், பிராமணர் பிராமணரல்லாதாரை விபசாரி மகன், வேசிமகன், சூத்திரன் என்று எழுதிவைத்துக் கொண்டிருப்பதையும் மகமதியர் இந்துக்களை "காபர்" அதாவது நாஸ்திகர் என்று சொல்லுவதையும், கிறிஸ்தவர்கள் இந்துக்களை அஞ்ஞானிகள் என்று சொல்லுவதையும், தினமும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இத்தத்துவத்தினாலேதான், இன்றைய தினம் நாம் நமது ராஜ்யத்தை இந்திய அரசாங்கமாகச் செய்து கொள்ளாமல், பிரிட்டிஷ் அரசாங்கமாகச் செய்து வைத்துக்கொண்டிருக்கிறோம். நமது பொய்க்கிளர்ச்சிகளின் பலனாக ஒருசமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் தொலைந்தாலும், ஜெர்மனி அரசாங்கமோ, ஜப்பான் அரசாங்கமோ அல்லது வேறு எந்த வெளிநாட்டு அரசாங்கமோ ஏற்படுமேயல்லாமல் ஒருக்காலும் இந்திய அரசாங்கம் ஏற்படுமென்று கருதுவதற்கே வகையில்லாமல் இருக்கிறது. லாலா லஜபதிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில், " முஸ்லீம்கள், முஸ்லீம் ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டுமென்று ஏதோ ஓர் பத்திரிகை எழுதுவதாகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாகவும், ஆதலால் இடங்கொடுக்கக் கூடாதென்றும் " வெகு எளிதில் சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசாங்கத்தில் இந்திய ஜனசங்கையில், நாலிலொரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய மகமதிய சகோதரர்களுக்கு பங்கு உண்டா ? இல்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் ஏழரைக் கோடிப்பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப் போய்விட முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால், ராஜீய விஷயத்திலும், மதவிஷயத்திலும் நமக்கு சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடுமா ? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மகமதியர்களுக்கு ஏற்படாததற்கு முன் மகமதியர் கொஞ்சமாயுள்ள எந்தப் பிரதேசத் திலாவது, தேர்தல்களில் ஒழுங்கான பிரதிநிதித்துவம் பெற்றிருக் கிறார்களா? அல்லது எந்த கிறிஸ்தவர்களாவது அப்படிப் பெற்றிருக் கிறார்களா ? உதாரணமாய், நம் நாட்டிலுள்ள தீண்டாதாரென்று சொல்லப்படுவோரை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு இன்றைக்கு 200 வருஷங்களாகியும், ஒரு தீண்டாதானாவது தேர்தல்களில் நின்று இந்தியனுடன் போட்டி போட்டு ஜெயம் பெற சக்தியுண்டாக்கியிருக்கிறானா? எந்த ஒரு தீண்டாதானல்லாத இந்தியனாவது, தீண்டாதவனும் நமது சமூகத்தில் மூன்றிலொருபங்கு எண்ணிக்கை உள்ளவர் தானே, அவனை நிறுத்தி அவனுக்கு நம்முடைய ஓட்டைக் கொடுத்து, நமது அரசியல், சமூகவியல் இவைகளில் அவனுக்குள்ள பங்கைக் கொடுக்க வேண்டுமென்று சிறீமான்கள் மாளவியா, லஜபதிராய் போன்ற யாராவது அநுபவத்தில் காட்டியிருக்கிறார்களா? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சமசுதந்திரம் அடைவதோடல்லாமல், உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும். அப்படியிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப் படமாட்டேன், நீ பிரயத்தனப்பட்டால் அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்வது சமத்துவ மனித தர்மமாகுமா? இந்தியாவில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், மகமதியர்களும், இந்துக்களில் தீண்டாதவர்களும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையும் சம உரிமையும் பெற்றாலல்லாது, இந்தியா விடுதலையடையுமென்று நினைப்பது பைத்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம். சம உரிமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மனம் ஒப்பிக் கொடுப்பதுதான் ஏற்ற மருந்தாகும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உணர்ச்சியை அடக்கி மழுப்பி விடலாமென்று நினைப்பது, சரீரத்தில் ஏற்பட்ட ஒரு புண்ணை மருந்துபோடாமல் மூடிவைத்து விடுவதினால் அது ஆறிப்போகுமென்று நினைப்பதுபோல்தான் முடியும். இந்து மகாசபைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் விரோதமென்று சொல்வதனால் அவ்விந்து மகாசபையை, நமது தேசத்தின் ஒற்றுமைக் குறைவுக்கும், துவேஷத்திற்கும் ஏற்பட்ட மற்றொரு சாதனமென்றுதான் சொல்ல வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி "இந்து"ப் பத்திரிகையென்னும் பிராமணப் பத்திரிகை எழுதியிருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். அதாவது :-&lt;br /&gt;&lt;br /&gt;" வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், ஜனங்களிடை சுயமதிப்பை உண்டுபண்ணியிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்திற்கு காரணமாயிருக்கிறதென்பதையும், அது ஏற்படுவதற்கு முன் ராஜீய வாழ்வில் அலட்சியமாயிருந்த வகுப்பினர்க்கு ராஜீய அறிவு புகட்டுவதற்கான வசதிகளை அது உண்டு பண்ணியிருக்கிறதென்பதையும் மறுக்க முடியாது" என்று எழுதியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குணங்களை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உண்டாக்கி யிருக்குமேயானால், இந்தியாவிலுள்ள மற்ற எல்லா ஸ்தாபனங் களையும்விட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிகபலன் அளித்திருக்கிறது என்பதில் சந்தேகம் உண்டா ? ஆதலால் இந்து மகா சமூகமானது, ஒரு கூட்டத்தாரின், ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு அநுகூலமானதேயல்லாமல், தேச பொதுநன்மைக்கும், சமூக ஒற்றுமைக்கும் உற்றதல்லவென்பதையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான், தேச ஒற்றுமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும்,பரஸ்பர நம்பிக்கைக்கும், சஞ்சீவி என்பதையும் நாம் உறுதியாகச் சொல்லுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குடி அரசு - தலையங்கம் 13 . 12 . 1925 &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-3402589783154643614?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/JW-SyAqU_zk" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/JW-SyAqU_zk/blog-post.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/03/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-3404915541047593562</guid><pubDate>Fri, 29 Feb 2008 07:32:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.588+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பொதுவுடமை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><title>தர்மம் செய்வது அக்கிரமம்</title><description>தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.&lt;br /&gt;ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;21.4.1945 அன்று ‘குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய தலையங்கம்&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-3404915541047593562?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/spc5T0hu6Ag" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/spc5T0hu6Ag/blog-post_29.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_29.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-6020977385726756546</guid><pubDate>Fri, 22 Feb 2008 07:33:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.589+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பெண்ணுரிமை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மூடநம்பிக்கை</category><title>ஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்-பெரியார்</title><description>‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;‘குடி அரசு' இதழில் பெரியார்.ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய தலையங்கம்&lt;/span&gt; 29.5.1932 &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-6020977385726756546?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/eyY1tOVelGw" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/eyY1tOVelGw/blog-post_22.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_22.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-2772118027821692456</guid><pubDate>Mon, 18 Feb 2008 09:28:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.592+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சாதி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்துமதம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பார்ப்பனீயம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திராவிடம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்து</category><title>கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே பெரியார் உரையாடல்</title><description>&lt;strong&gt;சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :&lt;br /&gt;&lt;br /&gt;1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது&lt;br /&gt;2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது&lt;br /&gt;3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது&lt;br /&gt;4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது 5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது&lt;br /&gt;6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது&lt;br /&gt;7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது&lt;br /&gt;8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது&lt;br /&gt;9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே பெரியார் 9.2.1959 அன்று நிகழ்த்திய உரையாடல். )&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-2772118027821692456?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/vlRkgzTf1KI" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/vlRkgzTf1KI/blog-post_18.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_18.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-1379263141308143384</guid><pubDate>Wed, 13 Feb 2008 07:20:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.594+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சாதி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்துமதம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திராவிடம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தீண்டாமை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இந்து</category><title>ஜாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளுக்கு-பெரியார்</title><description>சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்' என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி' என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்' என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் "பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்' என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப்படிக் கூறப்படும் "பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்' என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதே பதினெண் மக்களை "அபிதானகாசம்' என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றது என்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர, சாதிக்கும் சாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும் உரிமைகளையும் பார்ப்போமானால், கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒரு காலமும் தங்கள் சாதிப்பேரைச் சொல்லிக் கொள்ள முடியாதபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை கடைப்பிடித்துத் தீர வேண்டியதல்லாத ஓர் ஆட்சி, இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால், இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது சாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால், பின்னால் நமது நிலை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு தாழ்வு போகாது என்பது கண்டிப்பாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் இந்துக்களில் 1000க்கு 999 பேருக்குக் குறையாமல் சாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல்சாதி ஆகவேண்டுமென்று ஆசைப்படுபவராகவும் தனக்குக் கீழ் பல சாதிகள் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி உள்ளவர்களாகவுமே இருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த நிலையில் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்களான மக்களிடம் ஆட்சி வந்துவிட்டால், பிறகு எவ்விதத்திலும் சாதிக் கொடுமைகள் ஒழியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(30.11.1930 அன்று பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய‘குடி அரசு' தலையங்கம்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-1379263141308143384?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/r6wRReKOKfM" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/r6wRReKOKfM/blog-post_13.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_13.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-5629287952147018579</guid><pubDate>Tue, 12 Feb 2008 06:52:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.595+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பொதுவுடமை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">மூடநம்பிக்கை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தீண்டாமை</category><title>இந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்-பெரியார்</title><description>‏இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் குறைந்தது அல்ல. இந்தியாவில் ராஜாக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களுக்குக் குறையாமல் உள்ளார்கள். விவசாயத் துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமாக நீர் வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதார்கள் 1000 ஏக்கர், பதினாயிரம் ஏக்கர், சிலர் லட்சம் ஏக்கர் நிலங்களை உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது? முதலாவது, மேற்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத்தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியவையாகவும் அனுபவிக்கத் தக்கவையாகவுமான சமூக அமைப்பு முக்கிய காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, வருணாசிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில், இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே, நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது முதல் காரணம். வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும், வருணமுறை தவறிப் பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களாகவும் ஆனாலும்கூட, அந்தப் பணமானது மநுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அதாவது, ‘சூத்திரன் செல்வத்தைப் பிராமணன் எந்தவிதத்திலானாலும் கொள்ளை அடிக்கலாம்' என்கின்ற தர்மப்படி, சூத்திரன் செல்வத்தைக் கொள்ளை கொள்ளவே ஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காரணத்தாலேயே சூத்திரர்களில் 100க்கு 75 பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது. மேலும், நமது மக்களின் மதத் தத்துவமே இவ்வுலக வாழ்க்கை "பொய்' என்பதும் "மாயை' என்பதும்; செல்வத்தை மோட்சத்தில் இடம்பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்துகொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதுமான எண்ணங்கள், செல்வங்களைப் பாழாக்கி விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றியும், பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்மக் கர்மத்தின் பயன் என்றும் எண்ணும் எண்ணங்களே புகுத்தப்பட்டு, தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடைய முடியாமல் செய்து விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக, சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு இருக்குமோ, அதில் 4இல் 1 பங்குக்குக் குறையாமல் இம்மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துகள் கொண்ட தர்ம ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவுகளுக்கென்று நமது மக்களால் செய்யப்படும் செலவுகளின் மொத்தம், நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குறையாதென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடு வீண் செலவினமாகவே ஏற்பட்டுவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றியும் தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துகள் தங்கம், வெள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துகள் யாதொரு பிரயோசனம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவும் தவிர, இந்திய மக்களின் வருமானம் என்பதே அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதைக் குறைவும், உற்பத்திக் குறைவும் இதனால் வரும்படி குறைந்ததுமாக இருப்பதுடன், மனிதனுடைய தேவைக்கும், போக போக்கியங்களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை, வெளிநாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி, அதன் மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால், ஒருவித நஷ்டத்தையும் அடைய வேண்டியதாக ஏற்பட்டு விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு முதலாவது, வருணாசிரம முறை ஒழிய வேண்டும்; இரண்டாவது, மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்; இன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான் ‘சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(‘குடி அரசு' இதழில் 13.9.1931 அன்று பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் எழுதிய தலையங்கம்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-5629287952147018579?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/PhzSlmn4sJo" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/PhzSlmn4sJo/blog-post_12.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_12.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-6277657918793458735</guid><pubDate>Mon, 11 Feb 2008 08:36:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.597+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தீண்டாமை</category><title>சாதி அமைப்புமுறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது-பெரியார்</title><description>ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே! பொருளாதாரப் புரட்சிக்கு சர்க்காரை (ஆட்சியை) ஒழித்தாக வேண்டும்; மாற்றியமைத்தாக வேண்டும். ஆனால், சமூதாயப் புரட்சியை சர்க்காரை ஒழிக்காமலேயே உண்டாக்க முடியும். மக்கள் உள்ளத்திலே, இன்றைய சமூதாய சம்பந்தமாக உள்ள உணர்ச்சியையும், பயத்தையும் போக்கி, பிரத்தியட்ச (உண்மை) நிலையை மக்களுக்கு உணர்த்தினால் போதும். நிலைமை தானாகவே மாறும். இந்தச் சமூதாய அமைப்பை, இன்றைய சர்க்கார் அமைப்பு இருக்கும் போதே மாற்றிவிட முடியும் மக்கள் பகுத்தறிவு பெறும்படிச் செய்வதன் மூலமாக. 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஜாதி ஆணவம், திமிர் எவ்வளவு இருந்தது! இன்று எங்கே போயிற்று அந்த ஜாதி ஆணவம் திமிரும்?&lt;br /&gt;&lt;br /&gt;30 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் திராவிடப் பெருங்குடி மக்கள் எவ்வவு காட்டுமிராண்டித்தனமாக, கேவலமாக நடத்தப்பட்டார்கள்? அந்த நிலைமை இன்று எவ்வளவோ தூரத்துக்கு மாற்றமடைந்து விட்டதே! எப்படி முடிந்தது இவ்வளவும்? சர்க்காரைக் கவிழ்க்கும் முயற்சி செய்ததாலா? அல்லது அண்டர் கிரவுண்ட் (தலைமறைவு) வேலையாலா? இல்லையே! மக்கள் உள்ளத்திலே பகுத்தறிவு உணர்ச்சி ஏற்படும்படியாகச் செய்ததன் காரணமாக, நிலைமையில் வெகுவாக மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்தக் காரியத்தைச் செய்வோம். பிறகு தானாகவே பொருளாதார உரிமையை ஏற்படுத்திவிட முடியும். பணக்காரத் தன்மைக்கும் அஸ்திவாரமாய், ஆதாரமாய் பேதத்தை ஒழிப்போமானால், தானாகவே பொருளாதார உரிமை வந்துவிடும். ஆகவே, இந்தத் துறையில் பாடுபட முன் வாருங்கள் என்று அன்போடு, வணக்கத்தோடு அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லுகிறேன். இந்த ஜில்லாவையே எடுத்துக் கொள்ளுங்களேன்: யார் இந்த ஜில்லாவில் பணக்காரர்கள்? முதலாவது பணக்காரன் கோயில் சாமிகள்; அதற்கடுத்த பணக்காரன் நிலமுடையோன் பார்ப்பான்; அதற்கடுத்தபடியாக பணக்காரன், நிலமுடையோன் சைவர்கள் என்ற சூத்திர ஜாதியிலே சற்று உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். அதற்கடுத்தபடி, தூக்கியவன் தர்பார் என்பது போல இருக்கிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால், சூத்திரனிலே தாழ்த்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்குக் கொஞ்சம் சொத்து. கடைசியிலே யாருக்கு ஒன்றும் இல்லையென்றால் சூத்திரனிலே தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிறவனுக்கும், பஞ்சமனுக்குந்தான் ஒன்றுமே இல்லை. இப்போது சொல்லுங்கள்: பணக்காரன் ஏழை என்கிற பாகுபாடு, உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற அமைப்போடு ஒட்டிக் கொண்டு, சார்ந்து கொண்டு இருக்கிறதா, இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். யாரும் எடுத்துச் சொல்லுவதில்லை. காரணம், இந்த நாட்டின் எல்லாத் துறையும் மேல் ஜாதிக்காரர்கள் என்கிற பார்ப்பனர்களிடத்திலும் பணக்காரர்களிடத்திலும் சிக்கிக் கொண்டதால், அவர்கள் இந்த அமைப்பு இருக்கிறவரையில் லாபம் என்று கருதி, இந்த அமைப்பின் நிலத்தில் கையே வைப்பதில்லை. மக்களை வேறு பக்கம் திருப்பிவிட்டு விடுகிறார்கள். அதனால்தான் 2000 வருடங்களாக இப்படியே இருக்கிறோம். இன்னம் சொல்லுகிறேன், இந்தத் தொழிலாளி ஜாதி, முதலாளி ஜாதி அமைப்பு முறை அதாவது பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிறவரையில், இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(27.4.1953 அன்று, மன்னார் குடி வல்லூரில் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் ஆற்றிய உரை. "விடுதலை' 5.5.1953)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-6277657918793458735?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/ioqkNNHQQcQ" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/ioqkNNHQQcQ/blog-post_11.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">8</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_11.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-6431228560754172841</guid><pubDate>Sat, 09 Feb 2008 10:53:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.599+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பொதுவுடமை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கிராமம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><title>கிராமச் சீர்திருத்தம்-பெரியார் உரை</title><description>"தலைவர் அவர்களே! தோழர்களே! இந்தக் கூட்டம் கிராமாதிகாரி ஆவதற்குப் பயிற்சி பெறும் மாணவர்கள் கூட்டமானாலும், இதற்குத் தலைமை வகிப்பவர் ஒரு கல்வி அதிகாரி ஆவார்; இங்கு அருகில் வீற்றிருப்பவர் கிராமாதி காரிகட்கு அதிகாரியாக இருக்கும் "டெப்டி கலெக்டர்" ஆவார்; இருவர்களும் தக்க அதிகாரமும், பொறுப்பும் பெற்ற அதிகாரிகள். அரசியல்வாதியும், பொதுமக்களின் வெறுப்பைப் பெற்ற சமுதாயப் "புரட்சிக்காரனும்" சகல துறையிலும் இந் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்கும் மேல் சாதிக்காரர்களால் தங்கள் சமுதாயத்திற்கே எதிரி என்று எண்ணும்படியான விரோதியுமாவேன் நான். இந்த லட்சணத்தில் நான் பழமை வழமை, பெரியோர் கருத்து, சாஸ்திரம், ஆதாரம் என்பவைகளைக் கண்மூடிப் பின்பற்றாத ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படுபவன். நானும் என்னைப் பொதுவாக ஒரு சீர்த்திருத்த உணர்ச்சியுள்ளவன் என்று உரிமை பாராட்டிக் கொண்டாலும், என்னுடைய சீர்திருத்தம் என்பதானது பழைய அமைப்பு - மத - அடிப்படை என்பவைகளைக் கூட லட்சியம் செய்யாமல் அநேக காரியங்களை அடியோடு அழித்து நிர்மாணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவன், இதனால் என்னை நாசவேலைக்காரன் என்று பலர் சொல்லும்படியானவனுமாவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இப்படிப்பட்டவர்கள் முன்னிலையில் "கிராமச் சீர்த்திருத்தம், கிராமத்தின் எதிர்காலத்திட்டம்" என்பதைப் பற்றிப் பேசுவதென்றால், அது இச்சபைக்கு அவ்வளவு திருப்தியாயும், பொருத்தமாகவும் இருக்குமா என்பது கவலைப்படத்தக்கதாக இருக்கிறது. இருந்தாலும் நாடகத்தில் நகைச்சுவை என்பதன் மூலம் எப்படித் தலை கீழான - வெறுப்பான - பல மாறான கருத்துகளைக் கண்டு உடல் துடிக்காமல் அவைகளைச் சகித்துக்கொண்டு அனுபவிக்க றோமோ அதுபோல், நான் சொல்வதைச் சற்று கவனமாய்க் கேட்டு நகைச்சுவையாய் அனுபவித்து வீட்டுக்குச் சென்று நடுநிலையில் இருந்து ஆலோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன். ஆத்திரப்படாமல் ஆலோசனையில் இறங்கினால்தான் நல்ல முடிவு கிடைக்கும். எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதை தமிழ் நாடு பூராவும் பகுதி செய்கிறது. என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும் திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்து பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலைசிறந்த கட்டுப் பாடான நாணயமான எந்தவிதமான சுயநலமில்லாத வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்தவித தியாகத்திற்கும் முன்வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரை புகழை தஞ்சை வாங்கிக் கொடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது தனிச் சிறப்புக் கொண்ட மாநாடு&lt;/strong&gt;&lt;br /&gt;உள்ளபடியே சொல்லுகிறேன் பகுதி மக்கள் வெளியில் இருக்கிறார்கள் உள்ளே இடமில்லாததால் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தியிருப்பார்கள் நானும் அப்படித் தான் சொல்லிவிட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது 40 ஆண்டு பொதுவாழ்க்கையில் எந்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன் சுயமரியாதை இயக்க காலமுதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு மாநாடு ஜமீன்தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள் எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள் நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் 1/2 பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும் அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்ததில்லை இன்று திராவிடர் கழக தனிமாநாடு என்பதாக கூட்டியுள்ளோம் என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு ஆதரவான மாநாடு எல்லாவற்றையும்விட சிறப்பு! கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அந்தந்த நகரங்கள் கிராமங்களிலிருந்தெல்லாம் என்னை தங்கள் குடும்பத்தில் சேர்ந்த ஒருவனாகவே கருதி உணர்ச்சியுள்ள மக்கள் கூடியுள்ள மாநாடு தனிமாநாடு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு எடைக்கு எடை வெள்ளி அளிக்கும் விழா பகுதிக்குமேல் காரணம், மதிப்புள்ள தங்கள் தலைவனுக்கு வழிகாட்டிக்கு இதுவரை நடந்திராத மரியாதை நடக்கிற போது அதை நாம் காண வேண்டாமா? நம் பங்கும் இருக்கவேண்டாமா என்று இவ்வளவு அதிகமான மக்கள் கூடியிருக்கிறார்கள். நான் பெருமைக்காகச் சொல்ல வில்லை எங்கும் கூட்டம் குறைவாக இருந்தால் "கூட்டம் இல்லை" என்று சொல்லுவதுதான் எனது வழக்கம் நானும் நண்பர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். கொள்ளலாம்; முதல் வருணத்தார்தான் படிக்கலாம், 4,5ஆவது வருணத்தார் படிக்கக்கூடாது; படித்தால் உலகம் நடைபெறாது" என்பது போன்ற மனுதர்ம முறைப்படிதானே அனுபவத்தில் கிராமத்திற்கும், நகரத்திற்கும், வருணமுறை ஊர்த் தர்மம் இருந்து வருகிறது. இது உண்மையா இல்லையா? என்று யோசித்துப்பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிராமம் என்றால் என்ன?&lt;br /&gt;&lt;/strong&gt;கிராமம் என்றால் என்ன? அதில் பள்ளிக்கூடமில்லை, ஆஸ்பத்திரி இல்லை, டிராமா இல்லை, பார்க் இல்லை, நீதி ஸ்தல மில்லை, போலீஸ் காவல் இல்லை, நல்ல ரோட்டு வசதியில்லை, விளக்கு இல்லை, நல்ல தண்ணீர் இல்லை, உயர்ந்த நாகரிகம் என்பது இல்லை, பெரும்பாலும் வயிற்றுக்கு ஆகாரம் சம்பாதிப்பதைவிட, வாழ்வு ஆசைக்குப் பணம் சம்பாதிக்கும் வசதி இல்லை, புத்தியைச் செலவழித்து முற்போக்கடைய வழியில்லை - இப்படி இன்னும் பல வசதிகள் (நகரத்தானுக்கு இருப்பவைகள்) கிராமத்தானுக்கு இல்லையென்பதல்லாமல் கிராமம் என்றால் வேறு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், "நகரங்களுக்கு ஆதாரம் கிராமங்கள் தான்" என்று சொல்லப்படுகிறது. சொல்லுவது மாத்திரமல்லாமல் கிராமத்தாரின் உழைப்பில் ஏற்பட்ட விளைபொருள்களும், உற்பத்திப் பொருள்களுமே நகரத்தார் அனுபவிக்கவும், நகரத்தார் செல்வவான்களாக ஆகவும், அரசாங்கம் நடக்க வரி கொடுக்கவும், அரசாங்கம் - நகர மக்கள் ஆகியவர்கள் மாத்திரமல்லாமல் கடவுள்கள், கோவில்கள்கூட அங்கிருப்பவர்களும் சேர்ந்து தேவஸ்தான சட்டபடி ஒழுங்காக சகல இன்பங்களும் அனுபவிக்கவும் வசதிகள் இருந்துவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதாரணமாக&lt;br /&gt;&lt;/strong&gt;லேவாதேவிக்கு வட்டி கொடுத்துவந்த கிராமங்களான நஞ்சை புஞ்சை நில வசதிகளுள்ள நீர்ப்பாசனமும், பருவம் தவறாமல் மழை பெய்யும் கொழுத்த நீர் வசதியும் உள்ள நிலப்பரப்புக்கு மத்தியில் உள்ள கிராமங்களின் நிலைகள் எப்படி இருக்கிறது? அவர்களின் வீடு வாசல் மக்கள் நிலை எப்படியிருக்கிறது? அவர்களின் வீடு வாசல்- மக்கள் நிலை எப்படியிருக்கிறது? என்பதையும், பொட்டல் காடு, கானல் காடு, பாலைவனங்கள் ஆகியவைகளில் குடியிருக்கும் லேவாதேவித் தொழில்காரர்களான நாட்டுக் கோட்டையார், மார்வாடிகள் ஆகியவர்கள் வீடுகள் எப்படி இருக்கிறது? அவர்கள் வாழ்க்கை நிலைகள் எப்படி இருக்கிறது? என்பதையும் பாருங்கள். இதற்குக் காரணம் என்ன? இது வருணாசிரம முறையா அல்லவா? யோசித்துப் பாருங்கள், மற்றும் பாடுபட்டும் மிராசுதாரர், குடியானவன் ஆகியவர்கள் வீடு எப்படி இருக்கிறது? அவர்களிடம் சரக்கு வாங்கி விற்ற நகர வியாபாரிகள் வீடு, அவர்களது வாழ்வு எப்படியிருக்கிறது பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தானுக்குக் கல்வி இல்லாமல் இருந்தால்தானே பயிரிட்டு உழைத்து உழைத்து, அறுத்துமூட்டையாக்கித் தைத்து வண்டியில் போட்டு நகரத்துக்கு அனுப்பிவிட்டு சாவியாய்ப்போன தானியத்தை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுப் போய் கஞ்சியாகக் காய்ச்சிக் கலயத்தில் ஊற்றி, பிள்ளை குட்டிகளைச் சுற்றி வைத்துக்கொண்டு "இன்று கடவுள் நமக்கு இவ்வளவு கொடுத்தார்" என்று வாழ்த்துப்பாடி, எருமைமாடு தவிட்டுத் தண்ணீர் குடிப்பதுப் போல் வயிறு முட்டக் குடிக்கமுடியும்; அதோடு அவன் திருப்தி அடையவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இல்லாமல் கிராமத்தானுக்கு கல்வி கொடுத்துவிட்டால் "நாம் உழைக்கிறோம்; நாம் விளைவித்தோம்; நாம் உருப்படி பண்ணினோம். அப்படி இருக்க நாம் கஞ்சி குடிப்பதும், உழைக்காதவன் தரித்துப் புடைத்து ஆக்கிப் படைத்துக் கொண்டு இப்படி தொப்பை வெடிக்க அமுக்குவதா?" என்கின்ற எண்ணம் ஏற்பட்டுவிடாதா? அதனால் தான் கிராமம் ஒரு பஞ்சமனுடைய நிலையில் வைக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையை நிலைக்க வைக்க "கிராமச் சீர்திருத்தம்" என்கின்ற பித்தலாட்டப் பெயரை வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் அதுவும் வருணாசிரம தர்மத்தின் மேல்படியில் இருப்பவர்கள் சீர்திருத்தக்காரர்களைப் பார்த்து பிகிராமத்துக்குச் செல்லுங்கள் பீ (கீச் ஞ்ச் ஞ்குக் ஞீகூஙீஙீஹகீக்சூ) என்று வாயில் கத்திக் கொண்டு ஞாயிற்றுக் கிழமை அன்றைக்கு வியாபாரத்துக்கும்,வக்கீல் வேலைக்கும் (கட்சிக்காரர்களைச் சேர்க்கும் நோக்கத்தோடு) கிராமங்களுக்குச் சென்று விளக்குமாற்றால் (துடைப்பத்தால்) ஒரு வீதியைக் கூட்டிவிட்டு அதற்கொரு பஜனைப் பாட்டைப்பாடி ஒரு கூடையில் அக்குப்பையை வாரித் தூக்கிக் கொண்டு போய் பக்கத்தில் ஒரு சிறு பிரசங்கம்-இராமாயணத்தில் இராவணக் கொடுமையும், அனுமான் பெருமையும், பற்றிப் பேசிவிட்டு வந்துவிட்டால் கிராமம் சீர்ப்பட்டு விடுமா என்று யோசித்துப் பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிராமம் எதற்கு ?&lt;br /&gt;&lt;/strong&gt;கிராமம் என்று ஒரு குப்பைக்காடு எதற்காக இருக்க வேண்டும்? ஆடு, மாடு, எருமை மேய்ப்பதும், அவைகளைக் காப்பாற்றிப் பால், தயிர், நெய், மோர் உற்பத்தி செய்வதும் கிராமத்தான்; அவ்வளவையும் அனுபவித்து வருவது நகரத்தான். இதற்கு என்ன ஆதாரம்? கிராமவாசி கிராமத்தில் இரவு 3மணிக்கு எழுந்து மாட்டுக்குத் தண்ணீர் வைத்து, கொட்டத்தைக் கூட்டி சுத்தம் செய்துவிட்டு 4 மணிக்குப் பால் கறந்துவிட்டு கஞ்சிகாய்ச்சிக் குடித்துவிட்டு 5 மணிக்குப் புறப்பட்டு 3,4,5, மைல் நடந்து 6 மணிக்கு நகரத்துக்கு வந்து நகரத்து மக்களை பிஅய்யா பாலுபீ, பிஅம்மா பாலுக்காரி நான்பீ என்று சொல்லிக் கதவைத் தட்டி எழுப்பி பால் ஊற்றிவிட்டுப் போகிறார்கள். தங்கள் பிள்ளை குட்டிகளுக்குப் பால், நெய் ருசியே தெரியாமல் செய்துவிடுகிறார்கள். இதற்கு பிநகரத்தார் பணம் கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான்பீ. கிராமத்தான் கையில் கிடைத்த இந்தப் பணம்தான் என்ன ஆகிறது. போலீசுக்கு ஒரு பங்கு, முனிசிபல் சிப்பந்திகளுக்கு ஒரு பங்கு போனது போக கனமாக ஏதாவது மீதியிருந்தால் அது வக்கீலுக்கும் அதிகாரிகளுக்கும் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தானியம் விற்பது&lt;/strong&gt;&lt;br /&gt;நல்ல பெரிய விவசாயி என்பவனும் கிராமத்தில் இருந்தால் இதுபோல் தான். கிராமத்தான் பாடுபட்டுப் பயிராக்கித் தானியமாக்கி நகரத்துக்குக் கொண்டுவந்தால் நகர வியாபாரி கிராமத்தானின் பயிர்ச்செலவு - முட்டுவளிக்குக்கூட பத்தும் பத்தாமல் கணக்குப் போட்டு விலைபேசி ஒன்றுக்கு ஒன்றேகாலாக ஏமாற்றி அளந்து வாங்கிக் கொண்டு மொத்தக் கிரையத்தைத் பிதரகு, மகிமை, சாமிக்காசு, நோட்டு வட்டம், வாசக்காரிக்கு, கலாஸ்காரனுக்கு, வெத்திலை பாக்குச் செலவுபீ என்றெல்லாம் பல செலவுக்கணக்குப் போட்டுப் பிடித்துக்கொண்டு மீதி ஏதோ கொஞ்சம் கொடுக்கிறான். பணத்தை மொத்தமாகக் கண்டறியாத கிராம விவசாயி தன் மீது கருணைவைத்து, கடவுள் இவ்வளவு ரூபாயை கைநிறையக் கொடுத்தார் என்று கருதிக்கொண்டு காப்பி சாப்பிட்டு சினிமாப் பார்த்து விட்டு ஊருக்குப் போகிறான். வியாபாரியோ இந்தச் சரக்கை வாங்கி, இருப்பு வைத்து அதிக விலை வரும்போது விற்று லாபமடைந்த லட்சாதிபதியாகி மாடமாளிகை கட்டிக்கொண்டு கிராமவாசியை வண்டி ஓட்டவும், மாடு மேய்க்கவும், வீட்டு வேலை செய்யவும், உடம்பு பிடிக்கவும் வேலைக்கமர்த்திக் கொள்ளுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்காருக்கும் கிராமவாசி என்றால், கசாப்புக் கடைக்குப் போகும் ஆடுகள் போலக் காணப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, கிராமம் என்பது தீண்டப்படாத மக்கள் நிலையில்தான் இருந்துவருகிறது. கிராமத்தார் அல்லாத மற்றவர்களுக்கு உழைப்பதற்கு ஆகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அடிப்படையை அப்படியே வைத்துக் கொண்டு கிராமத்தை எவ்வளவு சீர்திருத்தினாலும் கிராமம் பிசூத்திரன் - தீண்டாத ஜாதியானபீ நிலையில்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே சமுதாயத்தில் மக்கள் மனிதத்தன்மை பெற வேண்டுமானால் பிராமணன் என்ற ஒரு ஜாதியும் பறையன் என்கின்ற ஜாதிதான் இருக்கவேண்டும் என்று எப்படிக் கருதுகிறோமோ அதுபோல் ஊர்களிலும், பட்டணம், நகரம் என்று சில ஊர்களும், கிராமம், குப்பைக்காடு என்றும் இல்லாமல் பொதுவாக ஊர்கள் தான் இருக்கவேண்டும் என்று ஆக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வருணவிகிதமே&lt;/strong&gt;&lt;br /&gt;வருணாச்சிரம தர்மத்தைப்போல் தான் கிராமங்களும் என்பதற்கு மற்றொரு உதாரணம் பாருங்கள்; ஜனத்தொகைப்படி 100க்கு 90பேர்கள் 4ஆவது, 5ஆவது வருணத்தார்கள்; 10 பேர்கள்தான் மேல் வருணத்தார்களாக (முதல் மூன்று வருணத்தார்களாக) இருப்பார்கள். அதுபோலத்தான் மொத்த ஊர்களில் 100க்கு 90க்கு மேற்பட்ட ஊர்கள் கிராமங்களாக இருக்கின்றன. அதாவது இந்தியா பூராவும் 7லட்சம் கிராமங்கள் என்று தலைவர் சொன்னார். ஆனால் பட்டணங்கள் நகரங்கள் 7500கூட (100க்கு 10 கூட)இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படிப்பு&lt;br /&gt;&lt;/strong&gt;மற்றும் பார்க்கப்போனால் பட்டணத்தில் உள்ள ஒரு கைவண்டி இழுப்பவன், ஒரு கோர்ட்டுப் பிžன், ஒரு பிச்சையெடுக்கும் புரோகிதன், மணியாட்டும் அர்ச்சகன் ஆகிய இவர்கள் பிள்ளைகள் ந.ந.க.இ. ஆ.அ இஞ்சினீயர், டாக்டர் ஐ.இ.ந.கூடப் படிக்க முடிகின்றது. ஆனால், கிராமத்தில் 100ஏக்ரா, 200ஏக்ரா உள்ள குடியானவன் மகன்கூட எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமானால் வரும்படியில் பகுதி செலவாகிறது. ஏழைக் குடியானவன் மகனுக்கு நடக்கத் தெரிந்ததும் மாடுமேய்க்க வேண்டியதாகத்தான் முடிகிறது. பட்டணங்களில் இருப்பதில் ஒரு கக்கூசு எடுப்பவர், வீதி கூட்டுபவர் குழந்தையும் கட்டாயமாகப் படித்து ஆகவேண்டும் என்று சர்க்கார் உத்திரவுபோடும். இலவசப் பள்ளியும் வைக்கும். ஆனால்; கிராமத்தான் தன் மகனைப் படிப்பிக்க நகரத்துக்கு அனுப்பவேண்டும்; அங்கு மேல்பார்வை இல்லாமல் சிகரெட்டு, பீடி, காடி(கள்) பிராந்தி குடித்து நாசமாக வேண்டும். இதற்கு அருத்தம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரேஷன்&lt;br /&gt;&lt;/strong&gt;இவ்வளவு சங்கதி ஏன்? ரேஷனை எடுத்துக் கொள்ளுங்கள். பட்டணத்திலே இருப்பவர்கள் கடவுள்களுக்கு நாட்டுக்கோட்டையார் படி அளப்பதுபோல், ஆளுக்கு இவ்வளவு என்று சர்க்காரால் அளவு அளிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தான்களுக்கு அதுவும் தானியங்களை உற்பத்தி செய்யும் கிராமத்தான்களுக்கு ரேஷன் கடவுளிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. பிகடவுள் தான்பீ அவர்களுக்குப் படி அளக்க வேண்டும். அதாவது ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி நகரத்தானிடம் திருட்டுத் தனமாய் வாங்கிக்கொண்டு போகிறார்கள். பாடுபட்டு விளைவித்ததைக் கொண்டு வந்து வியாபாரியிடம் கொடுத்துவிட்டு அதுவும் திருட்டுத்தனமாக வாங்கிக்கொண்டு போக வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உழைப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;மேலும் நகர வாழ்க்கை, நகரத்தில் இருந்தால் 100க்கு 90க்கு மேற்பட்ட மக்களுக்கு உடலுழைப்பு இல்லாத சுகவாழ்வு வாழ முடிகிறது. கிராம வாழ்வு, கிராமத்தில் இருந்தால் 100க்கு 90பேர் உடலுழைப்பு வேலையேசெய்தாக வேண்டும். அவர்களுக்குள் ஒரு சிறு தகராறு, சண்டை, விவகாரம் ஏற்பட்டாலும் விவகாரப் பெறுமானத்தைவிட அதிகமான செலவு செய்து நகரத்துக்குப் பல தடவை நடந்து நீதி பெற வேண்டும். இதன் பயனாய் போக்கிரிகளுக்கும், செல்வவான்களுக்கும் அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிராமாதிகாரி (கிராம அதிகாரி)&lt;br /&gt;&lt;/strong&gt;இந்த லட்சணத்தில் கிராமாதிகாரிக்குச் சம்பளம் மாதம் 15 ரூபாய். அவர்களுக்கு சப்ளை, தங்கள் நிலைமையை அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள செலவு, குடும்பச் செலவு, நகர அதிகாரிகளுக்குக் கப்பம் ஆகியவைகளுக்கு மாதம் குறைந்தது 100 ரூபாயாவது வேண்டியதாகிவிடுகிறது. இப்படி தேவையாயிருக்கிற அதிகாரிகளிடமிருந்து எப்படி நீதி எதிர்பார்க்க முடியும்? அந்தக் கிராம அதிகாரியும், கிராமத்தானுக்கு அதிகாரி; ஆனால் நகரத்தானுக்குச் சிப்பந்தி.. ஒரு தாலுக்கா சேவகன் கிராமாதிகாரியை பிஏ சேடூர்பீ பிஏ அணை நாவிதன் பாளையம்பீ என்று கூப்பிடுவான்! கிராமத்தானுக்கு தொழிலோ நம் விவசாயமும் கால்நடை மேய்ப்புமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விவசாயத்தின் தன்மை&lt;/strong&gt;&lt;br /&gt;விவசாயம் 200 வருடத்திற்கு முன் இருந்த மாதிரி தான் இன்றும் இருக்கிறது. அதில் நீர்ப்பாய்ச்சல் வசதி, நீர் நிலை தேக்கம், ஆகியவை ஏற்பட்டு சில நிலங்களுக்குப் புதியதாய் நீர்பாசன வசதி ஏற்பட்டது. என்பதல்லாமல் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க மாறுதல் ஒன்றும் ஏற்படவில்லை. சர்க்காரின் விவசாய இலாகாவானது சிலபேருக்கு உத்தியோகத்தைத்தான் கொடுத்தது. அதுவும் விவசாயத்தைத் தொழிலாகக் கொள்ளாத பரம்பரைக்கே பெரிதும் உத்தியோகமாய் முடிந்தது என்பதல்லாமல் மற்றபடி விளைபொருளில் மாறுதல் இல்லை; விளைவு அளவில் கூடுதல் இல்லை; விவசாய முறையில் மாற்றம் இல்லை. விவசாயிகள் விளைபொருளின் சரியான விலையை அனுபவிக்க வழியில்லை. விவசாயி விவசாய ஞானம்பெற வழியில்லை. விவசாயிகள் விஷயத்தில் சர்க்கார் எடுத்துக் கொண்ட மற்ற முயற்சி என்ன என்று பார்ப்போமானால் மேல்நாட்டாரைப்போல் இந் நாட்டு விவசாயிகள் எல்லோரும் படித்த மக்கள் என்று கருதிக்கொண்டு அவர்களுக்கு அறிவுறுத்தத் துண்டுப்பிரசுரம் மூலம் சில முறையைக் கையாண்டார்கள் என்பதைத் தவிர அவர்கள் பெரும்பாலோர் படிப்பும் நாகரிகமும் இல்லாதவர்களாக பட்டணங்களுக்கு வெகு தூரத்தில் இருக்கிறார்கள்; நாகரிகமும் பகுத்தறிவும் அற்ற மக்கள் என்கிற எண்ணமே இல்லாமல் அவர்களுக்கு நலஞ் செய்யும் வழிகளைக் கையாண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திட்டம்&lt;br /&gt;&lt;/strong&gt;உண்மையில் கிராமங்களை சீர்த்திருத்தவேண்டுமானால் நான் சொல்லப்போகும் முக்கியமான காரியங்களைச் செய்ய வேண்டும். விவசாயம் உடலுழைப்பில் நடைபெறுவதை மாற்றி அதை ஒரு தொழில்முறையாக, அதுவும் இயந்திரத் தொழில் முறையாக (இன்டஸ்ட்ரியல் ஆக) ஆக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உழுவதும், விதைப்பதும், அறுப்பதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும். கிணறு வெட்டுவதும், தண்ணீர் இறைப்பதும்-பாய்ச்சுவதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுக்குப் பூமிகளைத் திருத்தி இணைக்க வேண்டும். அதற்குப் பயன்படாத பூமிகளைத் தனிப்படுத்தி அடிக்கடி பாடுபட வேண்டிய அவசியம் இல்லாத பயிர் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைபொருளால் ஆக்கப்படும் பண்டங்கள் ஆங்காங்கே விவசாயிகள் கூட்டுறவு முறையில் ஆக்கப்பட்டு அந்தப் பயன் விவசாயி களுக்கே கிடைக்க வேண்டும். பல கிராமங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பார்க்கு, சினிமா, டிராமா, தமாஷ் அறை, வாசகசாலை, புத்தகசாலை, ரேடியோ நிலையம், நல்லரோடு, கால அளவுப்படி போக்குவரத்துள்ள ஒரு பஸ் ஸ்டாண்டு, போலீஸ் ஸ்டேஷன், நன்றாய் படித்த ஒரு நீதிபதி, சகலசாமான்களும் கிடைக்கத்தக்க கடைகள் ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இயங்கும் படியான சுற்றுப்பயணக் கண்காட்சி சாலைகள் அடிக்கடி பற்பல விதத்தில் அமைத்து ஊர்கள் தோறும் சுற்றிச்சுற்றி வரும்படியாகவும் ஆன காரியங்கள் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கு அப்பீல் கோர்ட்டுகள், குறைதெரியும் அதிகாரிகள் சுற்றுப்பிராயாணம் செய்து ஆங்காங்கு வாரா வாரம் காம்ப் போடவும் ஆன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சென்னை 10 லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். கோவை ஒரு லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். இதுபோலவே இப்போது கிராமமாகப் பாவிக்கப்படும் ஈரோட்டிற்குப் பக்கத்தில் உள்ளது கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சூரம்பட்டி மேட்டுவலசு என்கின்றவை போன்ற பக்கப் பக்க கிராமங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு ஏதோ ஒரு பெயர் கொண்ட பிசர்க்கிள்பீ ஆக்கி 2500 அல்லது 5000 ஜனத்தொகை கொண்ட நகரமாக ஆக்கிவிட்டு அதை நகரத்தார்கள்; தரகர்கள் சுரண்ட முடியாமல் செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நகரத்தார்களுக்குக்காகத்தான் அவர்கள் வாழ்கிறார்கள் வாழவேண்டும்" என்று சொல்லப்படுவதை அடியோடு மாற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு கூடவே, அந்த இடங்களில் அவற்றிற்குத் தக்கப்படி இயந்திரத்தால் செய்யப்படும் சிறுசிறு தொழிற் சாலைகளை நிறுவி அவர்கள் வேறு ஊருக்குப் பிழைப்புக்கு போகாதபடி பிழைப்பு ஏற்படுத்த வேண்டும். கிராமத்தான், பட்டிக்காட்டான், குப்பைக்காட்டான் என்கின்ற பெயர்கள் ஒரு மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்? அதுவும் பாடுபட்டு உழைக்கும் மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் அப்பெயர்கள் இல்லாமல் செய்யப்பட்டு விடவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேல் நாடுகளில்&lt;/strong&gt;&lt;br /&gt;மேல்நாடுகளில் பெரும்பான்மையான கிராமங்கள் நான் விரும்புகிறபடி தான் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, தார்ரோடு, குழாய், தண்ணீர், எலக்டிரிக்பவர், பஸ் சர்வீஸ், பள்ளிக்கூடம், விளையாட்டு மண்டபம், சமநீதி, தொழிற்சாலை ஆகியவை இல்லாத இடங்கள் (கிராமங்கள்) மேல்நாடுகளில் காண்பது மிகமிக அதிசயமாகும; ரஷ்யாவில் மாத்திரம் சில இடங்கள் கிராமங்கள் போல் காணப்படுகின்றன அதுவும் இதற்குள் நகரமாகி இருக்கும். மற்றபடி அய்ரோப்பாவில் கிராமங்கள் என்ற நிலை இல்லவே இல்லை. இருந்தபோதிலும், அது அந்த இடத்திற்கு ஏற்ற வாழ்வாய் இருக்கலாமே தவிர "பிராமணனுக்குத் தொண்டு செய்வதற்கே கடவுள் சூத்திரர்களை - பஞ்சமர்களை படைத்தார்" என்பது போல் "நகரத்தார் நல்வாழ்வு வாழ்வதற்கே கிராமங்கள் ஏற்பட்டன" என்கின்ற முறையில் கிராமங்கள் அங்கு இல்லை. அங்கு ஏதாவது ஒன்றிரண்டு இருந்தபோதிலும் இங்கு இருக்கக் கூடாது என்று சொல்லுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால், விவசாயம் யார் செய்வது? யார் பூமியை பயிர் செய்வது என்று கேட்கப்படலாம். இது, கக்கூசு எடுக்கும் சக்கிலி, பறையர், ஒட்டர் என்பவர்களுக்கு படிப்புக் கொடுத்து மேன்மக்களாக ஆக்கிவிட்டால் கக்கூசு எடுப்பவர்கள் யார் என்று கேட்பது போல் கேட்கப்படுவதாகும். அதற்கு என் பதில் "அந்தத் தொழில்களை நாம் எல்லோரும் (எல்லா இடத்தில் உள்ளவர்களும்) விகிதாச்சாரம் பங்குப்போட்டுக் கொள்ள வேண்டும்" என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கீழான தொழில்&lt;/strong&gt;&lt;br /&gt;கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன்மிக்க அற்பமாகவும்-குறையாகவும்- வாழ்வில் இழிவாகவும் இருக்கும் படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டு முன்னேற்றமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பல் கட்டி எவனோ ஒருவன் கோட்டிஸ்வரனாவது முன்னேற்றமாகாது. எங்கேயோ ஒரு இரும்புத் தொழிற் சாலை வைத்து யாரோ கோட்டீஸ்வரன் ஆனால் நாட்டுக்கு முன்னேற்றமாகிவிடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கூறுகிற முன்னேற்றம் செய்யமுடியவில்லையானால், அதற்கு அதாவது அப்படிப்பட்ட இழிவான கீழான, பிரயாசையான வேலை செய்பவர்களுக்கு அதிக லாபமும், சலுகையும் மேன்மையும் இருக்கும்படியான பிரதிபலன் அடையச் செய்யவேண்டும். இரசாயன முறை, விஞ்ஞான முறை, யந்திர முறை, முதலியவைகளைக் கையாண்டு அவைகளை கிராமங்கள் என்பவைகளில் இருந்து தொடங்குவோமானால் இந்தப் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்ந்துவிடும். கிராமம் என்கின்ற பெயரும் இழிநிலையும் தானாக மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பொதுவுடமை என்றோ சமதர்மம் என்றோ முட்டாள்தனமாய் கருதாமல் முற்போக்கு என்ற முறையில் சிந்தித்தால்தான் இதில் உள்ள நியாயமும் உண்மையும் விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளிகளும், கிராமவாசிகளும் முன்னைவிட இப்போது சிறிது பணம் அதிகம் சம்பாதிப்பதைக் கொண்டு திருப்தி அடையக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலாளிகளுக்கும்-முதலாளிகளுக்கும் முன் இருந்த வித்தியாசமும், கிராமத்தானுக்கும்-பட்டணத்தானுக்கும் முன் இருந்த வித்தியாசமும் பணப்பெருக்கினால் முன்னை விட அதிகமாகி விட்டதே தவிர குறையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வித்தியாசமானது முன்னைவிட அதிகமான பேதத்தையும், இழிவையும் மனக்குறையையும் உண்டாக்கி மிக்க கீழ்மகனாக ஆக்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(31-10-44ல் ஈரோட்டில் தோழர் ப.சண்முகவேலாயுதம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம அதிகாரிகள் பயிற்சிப்பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட கல்வி அதிகாரி திரு.வி.கே. ராமன்மேனன், எம்.ஏ.,(பாரிஸ்டர்) அவர்கள் தலைமையில், "கிராமச் சீர்த்திருத்தமும் அவற்றின் எதிர்காலத் திட்டமும்" என்ற தலைப்பில் பெரியார்.ஈ.வெ.ரா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-6431228560754172841?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/a6D3sB9-0Gg" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/a6D3sB9-0Gg/blog-post_09.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_09.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-7722450690490776019</guid><pubDate>Fri, 08 Feb 2008 13:40:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.601+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">பெண்ணுரிமை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><title>திருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும்-பெரியார்</title><description>மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'விடுதலை' நாளேட்டில் 28.6.1973 அன்று எழுதிய கட்டுரை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-7722450690490776019?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/QPFkdGlHTT8" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/QPFkdGlHTT8/blog-post_08.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_08.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-1619460422426526478</guid><pubDate>Thu, 07 Feb 2008 12:00:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.603+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திராவிடம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தீண்டாமை</category><title>சூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா?-பெரியார்</title><description>நாங்கள் இவ்விதக் காரியத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் முதலாவதாக, எங்களுக்குள்ள இழிநிலையும் சூத்திர, பஞ்சமன் என்ற இழிவுப் பட்டம் நீங்க வேண்டும் என்பதற்கேயாகும். ஆனால், இவ்வித இழிவையும் கீழ்சாதிப் பட்டத்தையும் எண்ணி இதை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் நாங்கள்தான். வேறு யாரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், இவ்வித இழி நிலைமை நீங்க வேண்டுமென்பது, தனிப்பட்ட என்னுடைய சுயநலத்திற்கு மட்டுமல்ல; இதனால் எனக்கு மட்டும் இழிவு கிடையாது. சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுகிற திராவிட மக்கள் அத்தனை பேருக்கும் உள்ள இழிவைப் போக்கவேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மந்திரியாக இருக்கும் சூத்திரன், மந்திரி என்பதால் சூத்திரன் என்ற இழிநிலை போகாது. இன்று மந்திரியாக இருக்கிற பறையர், மந்திரியாக இருப்பதால் அவருடைய பறையர் என்ற பட்டம் போகாது. வேலை முடிந்ததும் ஊருக்குப் போகிற அவர்கள், தங்கள் தங்கள் பறைச்சேரிக்குத்தான் போவார்கள். இன்று சூத்திரர்களும், பஞ்சமர்களும், மந்திரியாகவும், சட்டசபை மெம்பராகவும் (உறுப்பினராகவும்) வந்தார்கள் என்றால், நாங்கள் கூப்பாடு போட்டதால்தான் முடிந்தது. இன்றைக்குப் பறையரும், பள்ளரும் ஓரளவு கல்வி கற்க போதிய வசதியும் சலுகையும் அளிக்கப்பட்டு, அதனால் படிக்கவும் முடிந்தது என்றால், அதுவும் எங்களது முயற்சியினால்தான். எனவே, இவர்கள் யாரைக் கொண்டு முன்னுக்கு வர முடிந்ததோ, அவர்களையே எதிரிகளாக நினைக்கின்றனர். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், எங்களை வகுப்புவாதி என்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே “நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே “பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து “ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்'' என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை. தனக்குத் தெரியுமானாலும், அக்கட்சியின் தலைவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், அதுபற்றிக் கூறுவதே கிடையாது. ஏதாவது உதாரணம் சொல்ல லெனின் சொல்லவில்லையே, மார்க்ஸ் சொல்லவில்லையே? என்றால், லெனின் இருந்த நாட்டில் பார்ப்பான் பறையன் இருந்தானா? இவர்கள் இருக்கவுமில்லை; அதைப்பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், இங்கு நேரிலேயே பார்க்கிறோமே பார்ப்பானையும் பறையனையும்! அதுமட்டுமா? சாஸ்திரத்தில் பார்க்கிறோம், சட்டத்தில் பார்க்கிறோம். ஆகவேதான் இங்கு இவைகளை ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான், நாங்கள் கோருவது எல்லாம் மக்களுக்குச் சோற்றுக்கும், உத்தியோகத்திற்கும் மாத்திரமின்றி, பரம்பரை இழிவு நீங்க வேண்டும் என்பதேதான். அந்நியன் இந்நாட்டைச் சுரண்டாது, வேறு இங்குள்ள எவராவது ஆட்சி செய்தாலும் போதும். பார்ப்பனர்களின் அட்டூழியம், ஜாதி முறையும் ஒழிந்து, ராமாயணத்தில் ஒரு ஜதை செருப்பு ஆண்டதாகக் கூறப்படுகிறதைப் போல் எங்களை ஒரு ஜதை செருப்பு ஆட்சிபுரிந்தாலும் சரியே. மக்கள் சுயமரியாதை கொண்டவர்களாக, மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும். மனித ஜாதி என்ற ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெரியார் ஈ.வெ.ரா 13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. "விடுதலை' 20.4.1955&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-1619460422426526478?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/6Wf9xB2gL7g" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/6Wf9xB2gL7g/blog-post_07.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">3</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_07.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-921898133338274834</guid><pubDate>Wed, 06 Feb 2008 07:45:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.605+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மொழி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திராவிடம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்</category><title>தமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும் - பெரியார்</title><description>&lt;div align="left"&gt;எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி ‘தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் எ‎ன்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள் கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடையே புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.&lt;br /&gt;தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. ‏இந்நிலைக்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ், சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாக தமிழ் நாட்டில் புகத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது. வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;'மொழி - எழுத்து' நூலிலிருந்து&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-921898133338274834?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/SPn1l04iJHY" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/SPn1l04iJHY/blog-post_06.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">7</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_06.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-7034894741406813354</guid><pubDate>Tue, 05 Feb 2008 07:25:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.608+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மொழி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">கலை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">இலக்கியம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சுயமரியாதை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திராவிடம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்</category><title>கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக? - பெரியார்</title><description>சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் சொல்லுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக மனிதனும் மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா, உண்மைத் தோற்றமா என்று மருளும்படியாகவும், அவைகளுடைய சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும், புதுமைகளையும் விட்டு விட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமுமான, மிருகப் பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, "ஓவியக் கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் செய்கின்றோம்' என்றால், இது பகுத்தறிவும் யோக்கியக் குணமும் அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் நாம் முக்கியமாய்க் குறிப்பிடுவது என்னவென்றால், நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புத்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும் ஓவியங்களுமல்லாமல் வேறுவகை ஒன்றில்லாமல் போனதால், அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும் வஞ்சகத்தையும் சொல்லிக் கொண்டு, இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இம்மாதிரி பாசமும் அநாகரிகமுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்பட வேண்டுமானால், முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை நலத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டியது, பகுத்தறிவையும் நாகரிகத்தையும் விரும்பும் பொதுமக்கள் கடமையேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'குடி அரசு' இதழில் பெரியார் ஈ.வெ.ரா 26.4.1931ல் எழுதிய கட்டுரை &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-7034894741406813354?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/TUNvYL7LffY" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/TUNvYL7LffY/blog-post_05.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">4</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_05.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-2849803909453721092</guid><pubDate>Mon, 04 Feb 2008 08:33:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.609+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மொழி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழிசை</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திராவிடம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><title>பஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்? - பெரியார்</title><description>தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்' என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்' என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ' என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்' என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையன்' என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை, இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனதில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனதிற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலையில்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட, நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது, அறிவுடைய மக்களின் தலையாயப் பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாததாலேயே நம் நலத்துக்கு மாறான சேதிகளும், உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டு விட்டதுடன், அவைகளையே பொருள் கொடுத்தும், காலத்தையும் ஊக்கத்தையும் செலவழித்தும் நுகர்ந்து, அறிவும் மானமும் கெட்டு, முற்போக்கும் தடையுற்றுக் கீழ் நிலைக்கு வர வேண்டியவர்களானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற மாதம் சென்னையில் நடந்த தமிழ் இசை மாநாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 10 நாட்கள் ஒரு பெரிய திருநாள்போல் நடந்தது; பல பதினாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் 4, 5 மணி நேரம் செலவழித்து வந்து அமர்ந்து இருந்துவிட்டுப் போனார்கள். வள்ளல் அண்ணாமலையார் உணர்ச்சியும் ஊக்கமும் ஆழ்ந்த சிந்தனையும், அவர்களது பந்துமித்திரக் குழாங்களும், அறிஞர் சண்முகம் அவர்களது அறிவுரைகளும் ஆற்றல்களும் எல்லையின்றிப் பயன்படுத்தப்பட்டன. எதிரிகளுக்கு ஆணித்தரமான விடை அளித்து அவர்களது வாய்க்கு ஆவிகூட வெளிப்படமுடியாதவாறு ஆப்புகள் சம்மட்டியால் அறையப்பட்டன. வெற்றிக் கொடி ஆகாயத்தை அளாவிப் பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், விளைந்த பயன் என்ன? ஏற்பட்ட படிப்பினை என்ன? இம்மாநாடு, பண்டிதர்களைத் தமிழில் பஜனைப் பாட்டுகளைத் தொடுக்க வைத்தது; இசைவாணர்களை (பாட்டுத் தொழில்காரர்களை) வீட்டில் தனிமையில் உட்கார்ந்து பாட்டுகளைப் பாடிப்பாடிப் பழக்கம் செய்து கொள்ளச் செய்தது; இந்தப்படியான தமிழ் பஜனைப் பாட்டுப் பாடத் தெரிந்தவனையே இசை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சியை நமது செல்வவான்கள் பலருக்கு ஊட்டியது; இசை நுகரச் செல்லும் மக்கள் பலருக்கும் (இந்த இசைவாணர்) தமிழில் இசை இசைக்கிறாரா அல்லது வேறு மொழியில் இசைக்கிறாரா - வேறு மொழியில் இசைத்தால் கலவரம் செய்யலாமா என்கின்ற சிந்தனையைச் சிலருக்கு ஊட்டிற்று என்பனவாகிய இவை ஏற்பட்டன என்றே வைத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றால் சகல உயர்வும், தகுதியும் இருந்து ஒரு சிறு கீழ் மக்கள் குழுவால் இழி மக்களாய்க் கருதப்பட்டு, சுரண்டப்பட்டு, மானமற்று நடைப்பிணங்களாய்க் கிடக்கும் தமிழ் மக்களுக்கு, இந்த நிலை மாற, ஏதாவது ஒரு ஊசி முனை அளவு பயன் ஏற்பட்டதா என்று வணக்கத்தோடு கேட்கிறேன். நலம் பெறுவதற்கு வழி சிறிதும் இல்லாவிட்டாலும், கேட்டிற்காவது சரிவு வழி ஏற்படாமல் போயிற்றா என்று கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பொருளும், ஆற்றலும், மதியும், மற்றதும் செலவழித்ததற்கு நாம் கண்ட பயன் என்ன? நாட்டில் உள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒரு காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீப தூப நைவேத்தியத்துடன் உட்கார வைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்துப் பஜனைப் பாட்டுகள் பாடச் செய்வதும், அதன் மூலம் மக்களுக்குப் பக்தி புகட்டுவதுந்தானா? இது யார் செய்யவேண்டிய காரியம்? எதற்கு ஆகச் செய்ய வேண்டிய காரியம்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7.2.1944 அன்று ஆற்றிய சொற்பொழிவு.)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-2849803909453721092?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/cl1-nn1RnOs" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/cl1-nn1RnOs/blog-post_04.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_04.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-1398652492765967039</guid><pubDate>Sun, 03 Feb 2008 08:34:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.611+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மொழி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திராவிடம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">வடமொழி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சமஸ்கிருதம்</category><title>சமஸ்கிருதம் தேவையா? - பெரியார்</title><description>இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் - நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன ‘மேலோர்’ மொழியாக - சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு (புரோஃபசருக்கு) 75 ரூபாய்தான் சம்பளம். சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர் ‘புரோஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்ஸி காலேஜில் புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு.குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கின சம்பளம் சுமார் ரூ. 300க்கு மேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு.பனகல் இராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, ‘நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்’ என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்றபோதிலும் கூட அந்தமாதிரி அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1937-ல் இந்தியைக் கொண்டு வந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப்படையாகவே பல கூட்டங்களில் பல சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக்கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டு கடின காவல் தண்டனை பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, ஒற்றுமை - பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் - தமிழர்கள் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கும் இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா? மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது உச்சரிப்பதனால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம்; ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய ‘இலக்கிய காவியங்களையும்’, ‘தெய்வீகத் தன்மையும்’ தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதனாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது ‘புராதன மொழி’ என்பதோ அல்லது ‘தெய்வாம்சம் உள்ள மொழி’ என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.&lt;br /&gt;2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.&lt;br /&gt;3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குரிய யோக்கியதாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக - ‘தேவ பாஷை’யான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல - பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘இல்லை’ என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, ‘பேச்சு வழக்கு இல்லாத’ ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம், ‘தாய்பாஷை’? எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-1398652492765967039?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/_U7WheR9tBI" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/_U7WheR9tBI/blog-post_03.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post_03.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-4622877521232044379</guid><pubDate>Sat, 02 Feb 2008 15:20:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.613+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மொழி</category><category domain="http://www.blogger.com/atom/ns#">திராவிடம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தமிழ்</category><title>இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா? - பெரியார்</title><description>இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில் தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவது தான் இந்தியின் தத்துவம். எனவே தான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு பேர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. ‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;(பெரியார் ஈ.வே.ரா அவர்கள் சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-4622877521232044379?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/i6h5xoMlo3g" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/i6h5xoMlo3g/blog-post.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">10</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2008/02/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-5712949545541915959</guid><pubDate>Mon, 17 Sep 2007 19:14:00 +0000</pubDate><atom:updated>2007-11-06T13:31:16.635+01:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">வைக்கம்</category><title>வைக்கம் வீரரா பெரியார்?</title><description>தந்தை பெரியாரின் நீண்ட நெடிய சமூகநீதி போராட்ட வாழ்க்கையில் வைக்கம் போராட்டம் (அ) வைக்கம் சத்யாகிரகம் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியமைக்காக வைக்கம் வீரர் என்று குறிப்பிடப்பட்டவர் பெரியார். ''வைக்கம் வீரராக'' பெரியாரை ஏற்க ஒருசிலருக்கு மட்டும் முடியாது இருக்கிறது. அவர்கள் யாரென்பதும் அவர்களின் பின்புலம் என்னவென்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_bPuRR82xi90/Ru4lMyR7nrI/AAAAAAAAAHM/Qhu21UH0Fcc/s1600-h/vaikom-temple.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5111063528697732786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_bPuRR82xi90/Ru4lMyR7nrI/AAAAAAAAAHM/Qhu21UH0Fcc/s400/vaikom-temple.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_bPuRR82xi90/Ru4l-SR7nsI/AAAAAAAAAHU/cvPF1KZE3vs/s1600-h/vaikom-temple-periyaar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5111064379101257410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_bPuRR82xi90/Ru4l-SR7nsI/AAAAAAAAAHU/cvPF1KZE3vs/s400/vaikom-temple-periyaar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வைக்கம் போராட்டத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்த போரில் பங்காற்றியவர்கள் மிக அதிகமானோர். அவர்களில் முக்கியமானவர்கள் டி.கே.மாதவன். கே.பி.கேசவ மேனன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், தந்தை பெரியார், ஸ்ரீ நாரயண குரு, குரூர் நீலகண்டன் நம்பூதரி, மகாத்மா காந்தி. வைக்கம் போராட்டம் பலர் பங்கேற்று ஓராண்டுக்கு மேல் நீடித்து, பலநிலைகளை கடந்தே அதன் வெற்றியை அடைந்திருக்கிறது. இப்போராட்டத்தின் வெற்றி எந்த ஒரு தனிமனிதனுக்காக கிடைத்த வெற்றி இல்லை. பலருக்கும் பங்கிருக்கிறது. இந்த வெற்றி பெரியார் ஒருவரது தனிப்பட்ட வெற்றி என்று பெரியாரைப் பின்பற்றும் எவரும் சொல்லமாட்டார்கள். அதே சமயம் பெரியாரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதையும், அவரின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதையும் அனுமதிக்கவும் மாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;1924ஆம் ஆண்டு மார்ச் 30 தேதி துவங்கிய இந்த போராட்டம் 1925நவம்பரில் முடிவு பெற்றது. எதற்காக இந்த போராட்டம். கோவில் நுழைவு போராட்டமா? இல்லை. கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே நுழைய உரிமை மறுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களெனவும், நெருங்கக்கூடாதவர்களென்று சமூதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த ஈழவர், புலையர் மக்களுக்காக சாலைகளை பயன்படுத்த உரிமை வேண்டும் என்று நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம். இந்த புரிதல் மிக அவசியமானது. ஏனென்றால் கோவில் நுழைவிற்கும், சாலை நுழைவிற்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. கோவில் நுழைவு என்பதில் மதம் சம்பந்தப்பட்டிருக்கிறது. சாலை நுழைவில் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டையும் ஒன்றோடொன்று குழப்பிக்கொள்வது போராட்டத்தின் நியாயங்களை புரிந்து கொள்ள மறுப்பதாகும். இந்த இடத்தில் ஒரு சிறு தகவல்: தமிழகத்தின் முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவரும் தந்தை பெரியாரே.&lt;br /&gt;&lt;br /&gt;வைக்கம் சத்யாகிரகம் 30.3.1924 ஆம் அன்று தொடங்கியது. போரட்டத்தின் பகுதியாக கே.பி.கேசவமேனன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப் என ஒவ்வொரு முக்கிய பிரமுகர்களும் தொடர்ச்சியாக கைதாக பெரியார் வைக்கம் போராட்டத்தில் இணைந்து கொள்கிறார். சிறையிலிருந்த ஜார்ஜ் ஜோசப் அவர்களின் வேண்டுகோளை அடுத்து பண்ணைபுரத்திலிருந்த பெரியார் உடனடியாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தான் திரும்பி வரும் வரை காங்கிரசு தலைவர் பொறுப்பை ராஜாஜி அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கடிதம் எழுதிவிட்டு ஈரோடு திரும்பி, நாகம்மை அம்மையாரிடம் சென்னை செல்வதாக கூறிவிட்டு வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். வைக்கம் சென்ற அவரை திருவிதாங்கூர் அரசாங்கத்தின் சார்பாக தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்கிறார்கள். வேண்டிய சவுகர்யங்களை செய்து தரும்படி அரசர் பணித்திருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.( திருவிதாங்கூர் அரசர் டில்லி செல்லும் பொழுது ஈரோட்டிலுள்ள பெரியாருக்கு சொந்தமான சத்திரத்தில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வழக்கம்).&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் வந்து சேர்ந்தவுடன் தொய்வு நிலையிலிருந்த போராட்டத்திற்கு புத்துயிர் கிடைக்கிறது. பல்வேறு இடங்களுக்கு சென்று தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொள்கிறார் பெரியார். பெரியாரின் பேச்சிற்கு பெரும் வரவேற்பும் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆதரவும் கிடைத்தது. பெரியாரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்டு அருவிக்குத்தி என்னும் இடத்தில் ஒரு மாதம் சிறை வைக்கப்பட்டார். இந்த சமயத்தில் நாகம்மையாரும், இன்னும் சில தோழர்களும் வைக்கம் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். நாகம்மை அவர்கள் பல இடங்களில் பிரச்சாரம் செய்து போராட்டத்திற்கு ஆதரவும் நிதியும் திரட்டினர். போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களின் மனைவியர்களுடன் இணைந்து சத்யாகிரகத்தை தொடர்ந்தனர்.19.5.1924 ஆண்டு அவர்கள் பங்கு பெற்ற போராட்டம் நடைபெற்றது. அப்போதிருந்த இந்திய சமூக மனோபாவத்தை கருத்தில் கொள்ளும் போது இவர்களின் போராட்டத்தின் முக்கியதுவம் விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின் பெரியார் மீண்டும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கிராமம் கிராமாக சென்று போராட்டத்திற்கு ஆதரவும் நிதியையும் திரட்டினார். இடையே ராஜாஜி மற்றும் சீனிவாச அய்யாங்கார் சென்னை திரும்ப அழைத்த போதும் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சமயத்தில் திடீரென்று திருவிதாங்கூர் மகாராஜா மரணம் அடைந்து விட மகாராணியார் அரசு பொறுப்பை ஏற்கிறார். சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் விடுவிக்கப்படுகிறார்கள். கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டத்தகாத மக்களை அனுமதிக்கும் மனநிலைக்கு ராணியார் வந்துவிடுகிறார். ஆனால் சனாதானிகள் அதை கடுமையாக எதிர்க்கின்றனர். அதன் பிறகு பல்வேறு தடைகளை கடந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் மக்கள் நுழையும் உரிமை பெற்றனர். அதிலும் ஒரு தெருவில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் வைக்கம் போராட்டமும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட ஒரு வரலாறு. வைக்கம் வீரர் என்று அவரது சீடர்களால் உயர்த்தி சொல்லப்பட்டார் என்பது அதில் முக்கியமான குற்றச்சாட்டு. சோ.ராமசாமியின் துக்ளக் தொடங்கி ம.வெங்கடேசனின் ''ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்'' வரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவை உண்மையான விமர்சனமாக இருந்தால் வரவேற்கலாம். அவை வெறும் காழ்ப்புணர்வு பிரச்சாரங்களாகவே இருப்பதினால் அவை எதிர்க்கப்படுகின்றது, நிராகரிக்கப்படுகின்றது. பெரியாரின் பேச்சினை அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைத்து மேற்கோள் காட்டி, இதுதான் உங்கள் பெரியாரின் யோக்கியதை என்று காட்ட முற்படும் அவரது அறியாமையை எண்ணி வருத்தப்படவே வேண்டி இருக்கிறது. தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறும் அவரின் இந்த விமர்சன புத்தகம் பாரதிய பார்வர்ட் பிளாக் (முருகன் ஜி :-)) சார்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் பின்னணி என்னவென்பதும், எதற்காக ம.வெங்கடேசன் இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து விவாதிக்கும் முன் பல முக்கியமான செய்திகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வைக்கம் போராட்டத்தின் தொடக்கம், அதில் பங்கு பெற்றவர்களின் பங்கு குறிப்பாக அவர்கள் போராட்டத்தின் எந்த காலப்பகுதியில் பங்கேற்கிறார்கள் என்பதும், அவர்களின் சிந்தனை போக்கு என்னவென்பதையும் தீவிரமான வாசிப்புக்கும் ஆய்வுக்கும் உட்படுத்துதல் மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் காந்தியடிகளை மையமாக வைத்து ஏராளமான சர்ச்சைகள் இந்த போரட்டத்தை தொடர்புபடுத்தி இருக்கிறது. சிலரால் மகாத்மாவின் நிலைப்பாடு மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்டிருக்கிறது. சிலரால் பாராட்டவும் பட்டிருக்கிறது. ம.வெங்கடேசன் அவர்களின் விமர்சனமும் மகாத்மாவின் பங்கையும், காங்கிரசின் பங்கையும் மையமாக வைத்து எழுப்பப் பட்டிருக்கிறது. அவரைப் பொறுத்த வரையில் வைக்கம் போராட்டம் என்பது காங்கசின் போராட்டம், போராட்டத்தின் வெற்றி மகாத்மாவினுடையது, பெரியார் அப்போராட்டத்தில் பங்கு பெற்றவரில் ஒருவர் என்ற அளவுதான். இதே விமர்சனத்தைதான் இலக்கியவாதி ஜெயமோகனும் ''நாராயணகுரு'' என்னும் புத்தகத்தில் நாரயணகுருவை பற்றி அறிமுகம் செய்யும் பகுதியிலும் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைக்கம் போராட்டத்தில் மிகத் தீவிரமாக செயலாற்றியவர்களுள் முக்கியமானவர் திரு.டி.கே.மாதவன் அவர்கள். இவர் ஸ்ரீ நாரயணகுருவின் மிக நெருக்கமான சீடராவார். எஸ்.என்.டி.பி. யோகம் என்னும் மையத்தின் செயலாளராக பணியாற்றியவர். ஈழவ மக்களின் ஆன்மீகத்தலைவராக விளங்கியவர் திரு.நாரயணகுரு. அவர் வெறும் ஆன்மீகத்தலைவர் மட்டும் அல்ல. சமுதாயத் தலைவரும் ஆவார். ஈழவ மக்கள் சமூக அளவில் வளர்ச்சி பெற கல்வியும், பொருளாதார வளர்ச்சியும் மிக முக்கியமான தேவைகள் என்று வலியுறுத்தி வந்ததோடு மட்டுமல்லாமல் அதை செயலிலும் காட்டிய முக்கியமான ஒரு தலைவர். இன்றைய கேரளாவில் ஈழவ மக்களை தவிர்க்க முடியாத, சமூக அரசியல், பொருளாதார சக்தியாக உருமாற அடித்தளமிட்டவர் ஆவார். வைக்கம் போராட்டத்திற்கான இவரது ஆதரவு அப்போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர போராட்ட காலத்தில் மக்களின் நலன்களுக்காக போராடுபவர்கள் ஏதாவது ஒருவகையில் காங்கிரசோடு தொடர்பு கொள்ளும் ஒரு சூழல் நிலவி வந்தது என்பது வரலாறு. காந்தியின் வருகைக்கு பிறகு இது தவிர்க்க முடியாது என்கிற அளவில் இருந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.வெங்கடேசன் போன்றோர் முன்வைக்கும் வாதங்களான காந்திக்கும், காங்கிரசிற்கும் வைக்கம் போராட்டத்தில் பங்கு உண்டு என்பதை முற்றிலும் நிராகரிக்க முடியாது. நிராகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. காங்கிரசுக்கும் வைக்கம் போராட்டத்தில் பங்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;1921ல் திருநெல்வேலியில் காந்தியடிகளை சந்தித்த டி.கே.மாதவன் வைக்கம் போராட்டத்தின் அவசியம் குறித்தும், தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பேசினார். காந்தியடிகளும் தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்தார். 1923ல் காகிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வைக்கம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரள பிரதேச காங்கிரஸ் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது. கேரள பிரதேச காங்கிரஸின் தலைவராக இருந்த திரு.கே.பி. கேசவமேனன் தலைமையில் இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இதற்காக வைக்கத்தில் சத்யாகிரக ஆசிரமும் ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தந்தார் என்பது ம.வெங்கடேசனின் வாதம். இதற்கு ஆதரமாக 19.3.1924 காந்தி அவர்கள் கேசவ மேனனுக்கு எழுதிய கடிதத்தை ஆதராமாக காட்டுகிறார்.(ம.வெங்கடேசனின் புத்தகம் பக்கம்162-163). ஆனால் 6.4.1924 ஆண்டு காந்திக்கு கேசவமேனன் ஒரு தந்தி ஒன்றை அனுப்புகிறார். அதன் காரணம் முக்கியமானது. காந்தியடிகள் சத்யாகிரகத்தை நிறுத்த முயற்சி மேற்கொள்கிறார் என்பதை அறிந்து அதை விளக்குவதற்காக அனுப்பப்பட்ட தந்தி. அந்த தந்தி வைக்கம் போராட்ட வரலாறு என்னும் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதன் பிரதியை கீழே தந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேசவமேனனின் தந்தி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_bPuRR82xi90/Ru4TtyR7nqI/AAAAAAAAAHE/m7FKiXOGuvw/s1600-h/Kesavamenon.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5111044304424115874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_bPuRR82xi90/Ru4TtyR7nqI/AAAAAAAAAHE/m7FKiXOGuvw/s400/Kesavamenon.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ம.வெங்கடேசன், போராட்டத்திற்கான காந்தியின் ஆதரவை நிரூபிப்பதற்காக 19.3.1924தேதியிட்ட கடிதத்தை ஆதரமாக காட்டுகிறார். ஆனால் போராட்டத்தை நிறுத்த கோரும் காந்தியின் மனமாற்றத்தை (அ) தடுமாற்றத்தை 6.4.1924 தேதியிட்ட கேசவமேனனின் தந்தி தெரியப்படுத்துகிறது. காந்தி இந்த தந்திக்கு பதிலளித்தாதாக எந்த தகவலும் இல்லை. திட்டமிட்டபடி போராட்டம் தொடர்கிறது. கேசவமேனன் கைதாகிறார். அவரைத் தொடர்ந்து ஜார்ஜ் ஜோசப் அவர்களும் கைதாகிறார். இதன் பிறகே பெரியார் போராட்டத்தில் பங்கேற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம் தீவிரமாக நடைபெற்று சமயத்தில் காந்தி வைக்கத்திற்கு வரவில்லை. ஆனால் நாரயண குரு செப்டெம்பர் 27, 1924 அன்று போராட்ட இடத்திற்கு வந்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைக்கம் போராட்டத்தில் நாரயணகுரு அவர்களின் ஈடுபாட்டை ''நாரயண குரு" கே.சீனிவாசன் அவர்களின் நூல் மூலம் அறியலாம். நாரயண குருவிற்கும் அவரது சீடர்களில் ஒருவரான கேசவன் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் மூலம் இதை அறியலாம். ( நாரயணகுரு - பக்கம் 166-167)&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;br /&gt;''&lt;br /&gt;குரு: சத்யாகிரகம் எப்படி நடக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;கேசவன்:வேகமெடுத்து வருகிறது. அனேகமாக கொட்டும் மழையில் அவர்கள் இப்போது&lt;br /&gt;நனைந்து விட்டிருக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;குரு: ஏன் அவர்களிடம் குடை இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;கேசவன்: காந்திஜி மறுதரப்பினரின் அரசாங்கத்தின்-ஆதரவையும் பரிவையும் பெற வேண்டும் என ஆசைப்படுகிறார். சத்யாகிரகிகளின் தியாகத்தால் அவர்களை நெகிழச்செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். உடலை வருத்தி வரும் தியாகத்தின் மூலம் இறுதி வெற்றி வேண்டும் என்பது அவர் விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு: உடல் துயரினைத் தாங்கும் சக்தியும், அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவமும் வேண்டியதுதான். அதற்காக மழையில் நனைந்து பட்டினி கிடக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஓரிடத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தால், வரும் விளைவுகளை கண்டு அஞ்சாமால் தடையை மீற வேண்டும். அடித்தால் பட்டுக்கொள்ள வேண்டும்.. பதில் தாக்குதல் நடத்த கூடாது. போகும் பாதியில் வேலியிருந்தால் திரும்பி விடக்கூடாது. தாண்டிப்போக வேண்டும். சாலையில் நடந்து செல்வதோடு நின்றுவிடாமல் கோவிலுக்குள்ளும் நுழைய வேண்டும். எல்லோரும் எந்நாளும் அனைத்துக் கோவில்களுக்கும் போய்வரவேண்டும். பிரசாதம் வழங்கப்படுமானால் எடுத்துகொள்ள வேண்டும். கோவிலில் அன்னதானம் வழங்கப்படுமானால் அன்னதானம் சமமாக பிறருடன் உட்கார்ந்து உணவருந்துங்கள். அரசாங்கத்திற்கு உங்கள் செய்கையின் நோக்கம் தெரியட்டும். இதற்காக உயிரை விடவும் தயங்கக்கூடாது. ஒருவன் தீண்டுவதானால் இன்னொருத்தன் பரிசுத்தம் கெடுமானால் அந்த பரிசுத்தம் அழியட்டும். இது என் செய்தி. இதை பத்திரிக்கை செய்தியாக்கி அனைவரிடம் இச்செய்தி சேரும்படி செய்யுங்கள். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்பது மக்களுக்கு தெரியட்டும். ஆனால் வன்முறையும், அடிதடியும் ஒருபோதும் இருக்ககூடாது. வன்முறை அடக்குமுறை ஏவிவிடுதல் கண்டு மனம் தளர வேண்டாம்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;கேசவன்: சத்யாகிரகத்தின் இறுதி இலக்கு ஆலயபிரவேசமாகும். அதனை அடுத்த ஆண்டில் அடையவேண்டும் என்று வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு: ஏன் இன்னும் ஒருவருடம்? இப்போதே காலம் கடந்துவிடவில்லையா?''&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாரயணகுருவின் இந்த உரையாடலை இங்கே குறிப்பிட்டதற்கு முக்கிய காரணம் உண்டு. ஈழவமக்களின் ஆன்மீகத்தலைவரான நாரயணகுருவின் இந்த பேச்சு வன்முறையை தூண்டுவதாக இருக்கிறது என்றும் சத்யாகிரக விதிகளுக்கு மாறானதாக இருக்கிறது என்றும் காந்தியடிகள் கருதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்த போராட்டத்தில் மாற்று மதத்தினரும், மாற்று மாநிலத்தவரும் கலந்து கொள்வதற்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் காந்தியடிகளின் அறிவிப்பிற்கு பிறகு விலகி கொண்டனர். ஜார்ஜ் ஜோசப்பும் தன் கட்டளைப்படி விலகிக்கொண்டார் என்று 1932ல் த யங் இந்தியா இதழில் குறிப்பிட்டார். இதை ஜார்ஜ் ஜோசப் கல்கத்தாவிலிருந்து வந்த Indian Social Reformer'' என்னும் இதழின் வாயிலாக அதை மறுத்தார். சாலை நுழைவு என்பது மதம் சம்பந்த பிரச்சனையில்லை, மனிதனின் உரிமை சம்பந்தமானது என்னும் நிலைப்பாடு கொண்டிருந்தார் ஜார்ஜ் ஜோசப்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தின் இறுதி கட்டத்திலே, அரசாங்கம் அனுமதி கொடுக்க முன்வந்த போதுதான், மார்ச் 1925ம் ஆண்டு காந்தியடிகள் வைக்கத்திற்கு வருகை தந்தார். கேரளத்திற்கு வந்த போது நாரயணகுருவை அவர் ஆசிரமத்தில் சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த மாமரத்தின் இலைகளைச் சுட்டிகாட்டி ஒவ்வொரு இலைகளுக்கும் வேறுபாடுகள் இருக்கிறது தானே என்று சொல்ல அதற்கு குரு அதன் சுவை ஒன்றுதானே என்று சொல்லியிருக்கிறார். இலையாக குறிப்பிடப்பட்டது மனிதனை தான் என்பதை அனைவரும் அறிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டத்தின் இறுதி தருணத்தில் நம்பூதிரிகளிடம் பேசவும், அவர்களிடம் மனமாற்றம் ஏற்படுத்தவும் காந்தி முயற்சித்தார். அங்கு அவருக்கு கிடைத்த அனுபவம் முக்கியமானது. காந்தியை நேரில் சந்திக்க நம்பூதிரிகள் மறுத்துவிட்டனர். காந்தியை தங்கள் இடத்திற்கு வரச்சொல்லிவிட்டார்கள். இந்த உரையாடல் வைக்கம் போராட்டம் பற்றிய ஆய்வு நூலை எழுதிய டாக்டர் ரவிந்தரனின் நூலின் 166ம் பக்கத்தில் இருக்கிறது. அதன் பிரதியை இங்கு இணைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காந்தி-இந்தன்துரித்தியல் நம்பூதரி இடையேயான உரையாடல்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_bPuRR82xi90/Ru4S9yR7npI/AAAAAAAAAG8/Ln-0Sgj5tPc/s1600-h/namboothari-gandhi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5111043479790395026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_bPuRR82xi90/Ru4S9yR7npI/AAAAAAAAAG8/Ln-0Sgj5tPc/s400/namboothari-gandhi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;போராட்டத்தில் பெரியார் மற்ற அனைவரையும் போல கலந்து கொண்டார் என்று கூறுபவர்களுக்கு பதிலாக சென்னை அரசின் தலைமை செயலருக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதத்திலேயே விளக்கமாக குறிப்பிடபட்டிருக்கிறது.இதுவும் ஆய்வாளர் ரவிந்தரனின் புத்தகத்திலே இடம் பெறிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் பெரியார் போராட்டத்தில் கலந்து கொண்டதின் தாக்கம் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் சில:&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;''From&lt;br /&gt;C.W.CCotton Esq. C.T.E., I.C.S.&lt;br /&gt;Agent to the Governer General&lt;br /&gt;Madras State&lt;br /&gt;&lt;br /&gt;To Chief Secratery to the Government of Madras&lt;br /&gt;&lt;br /&gt;------&lt;br /&gt;6. Of the nine leaders who are in the central jail Trivandrum where they are treated with great consideration, five only Trivangoreans. Infact the movement would have collapsed long ago but the support it has received from outside-Travancore though the question of opening this road is purely domestic problem&lt;br /&gt;&lt;br /&gt;........&lt;br /&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;But the support the Vaikom sathyagrahis received from Madras, both in money and leadership was very great and impressive. E.V.Ramasamy Naicker's lead gave a new life to the movement. His strong appeal on the eve of his journey to kerala had made deep impression on the mind of tamilnadu.&lt;/p&gt;&lt;p&gt;...."&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சி தான் போராட்டம் நடத்தியது என்று சொல்லும் ம.வெங்கடேசன் அவரின் அளவுகோலின்படியே காங்கிரஸ்காரரான பெரியார் தீவிரமாக உழைத்ததை ஏற்க மறுக்கிறார். காந்தியின் ஆலோசனையின் படியே போராட்ட குழுவில் இணைக்கப்பட்டார் என்று மங்கள முருகேசன் புத்தகத்தை கொண்டு வாதிடும் ம.வெங்கடேசன் பெரியார் போராட்டத்திற்கு வந்த விதத்தை கேலி செய்கிறார். போராட்டத்தில் தீவிரமாக பங்காற்றிய பெரியாரின் உழைப்பு பற்றி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் களத்திற்கு வந்த காந்தியை வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு சொந்தக்காரராக்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது விமர்சனத்தை சாமி.சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் என்னும் நூலினை மேற்கோள் காட்டி இவ்வாறு வெளிப்படுத்துகிறார். (பக்கம் 159)&lt;br /&gt;&lt;br /&gt;'' வைக்கம் போராட்டத்திலே 19பேர் திருவிதாங்கூர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுவிட்ட பிறகு சிறையிலிருந்தபடியே யோசித்து தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் ஈ.வே.ராவுக்கு உடனே வரவும் என்று ஒரு கடிதம் எழுதினார்கள்''(தமிழர் தலைவர் பக்கம் 70 - அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் தரும் தகவல்)&lt;br /&gt;&lt;br /&gt;''ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?&lt;br /&gt;எனக்கு பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் சேர்ந்து கையெழுத்துப்போட்டு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்கள்'' என்று வைக்கத்தில் தீண்டாமையை ஒழித்த தந்தை பெரியார் என்ற தன் புத்தகத்திலே கூறுகிறார் ( வைக்கம் போராட்ட வரலாறு - பக்கம் 15). யார் அழைத்தார்கள் என்பதிலே முரண் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரை இப்போராட்டத்திற்கு அழைத்ததிலே முக்கிய பங்காற்றியவர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள். பெரியாருக்கு கடிதம் எழுதிய அந்த நேரம் போரட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரும் சிறையிலே இருந்தனர். ஜார்ஜ்ஜோசப், கேசவமேனன், குரூர் நீலகண்டன் நம்பூதரி, டி.கே மாதவன் ஆகிய அனைவரும் சிறையிலே இருந்தனர். ( சிறை என்பது ஒரு பெரிய மாளிகையில் வீட்டுக்காவல் வைத்தது போன்றது. குற்றவாளிகளை அடைக்கும் சிறைக்கொட்டாரத்தில் அல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் 1973ல் நடந்த வானொலி பேட்டியிலே இது பற்றி தெரிவித்து இருக்கிறார். ஜார்ஜ் ஜோசப் அவர்கள் பெயரை இதிலே குறிப்பிட்டு இருக்கிறார். பெரியாரின் வானொலி பேச்சை வைத்து ம.வெங்கடேசன் இன்னும் ஒரு திரிப்பைச் செய்து இருக்கிறார். மொத்த பேட்டியிலிருந்து தனக்கு தேவையான வாக்கியத்தை மட்டும் எடுத்து கொண்டு வாதம் புரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;''காந்திதான் இதைச் செய்ய வேண்டாம் என்று சொன்னவர். அவருக்கு இதில் சம்பந்தமே இல்லை''( ம.வெங்கடேசனின் நூல் - பக்கம் 159).&lt;br /&gt;&lt;br /&gt;ம.வெங்கடேசன் மறைத்த அடுத்த சிலவரிகள் இதோ!&lt;br /&gt;''காந்திதான் இதைச் செய்ய வேண்டாம் என்று சொன்னவர். அவருக்கு இதில் சம்பந்தமே இல்லை''அரசாங்கம்தான் இதை முடிவு செய்தது. ராஜாஜி காந்திக்கு கடிதம் எழுதினார். காந்தி உடனே புறப்பட்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் வானொலி பேட்டியின் மொத்தமும் கீழே இணைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் வானொலி உரை:&lt;br /&gt;1&lt;br /&gt;&lt;/p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz3GCR7njI/AAAAAAAAAGM/tBF9Sam-GsQ/s1600-h/Periayar+Radio+Speach.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5110731360222027314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz3GCR7njI/AAAAAAAAAGM/tBF9Sam-GsQ/s400/Periayar+Radio+Speach.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz3pyR7nkI/AAAAAAAAAGU/rLOweqDv8xc/s1600-h/Periayar+Radio+Speach+(1).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5110731974402350658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz3pyR7nkI/AAAAAAAAAGU/rLOweqDv8xc/s400/Periayar+Radio+Speach+(1).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz42iR7nmI/AAAAAAAAAGk/TO97xVa0wdw/s1600-h/Periayar+Radio+Speach+(2).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5110733292957310562" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz42iR7nmI/AAAAAAAAAGk/TO97xVa0wdw/s400/Periayar+Radio+Speach+(2).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz5qiR7nnI/AAAAAAAAAGs/iQiUYE93B-M/s1600-h/Periayar+Radio+Speach+(3).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5110734186310508146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz5qiR7nnI/AAAAAAAAAGs/iQiUYE93B-M/s400/Periayar+Radio+Speach+(3).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட வானொலி பேட்டியிலேயே பெரியாரின் பெருந்தன்மை தெரியவரும். இப்போராட்ட வெற்றியில் தன்னை முதன்மைப்படுத்திகொள்ளாது சத்யாக்கிரகத்தையே முன்னிலைப்படுத்தியவர் அவர். காந்தியின் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பெரியார் அவருக்கு பெருமதிப்பு கொடுத்து வந்தார். தனது குடியரசு இதழ்களில் மகாத்மா காந்தி வாழ்க என்று அச்சிட்டவர் பெரியார். .&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் பேச்சு இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;வைக்கம் வெற்றிக் கொண்டாட்டத்தில் பெரியாரின் உரை.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz89iR7noI/AAAAAAAAAG0/Ua3rbLGktZc/s1600-h/vaikkam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5110737811262905986" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_bPuRR82xi90/Ruz89iR7noI/AAAAAAAAAG0/Ua3rbLGktZc/s400/vaikkam.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் வந்து முட்டுக்கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலையிலும் இல்லை எம் தாடிக்கிழவன். வாசித்த தோழர்களே! பெரியார் வைக்கம் வீரரா என்று உங்கள் சிந்தனை கொண்டும், பகுத்தறிவு கொண்டும் முடிவு செய்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரையை பெரியாரின் பிறந்த தினத்தில் பதிவிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெரியார் வலைதளத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு தந்த தோழர்.திரு அவர்களுக்கு என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதவிய நூல்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;தமிழர் தலைவர் - சாமி சிதம்பரனார்&lt;br /&gt;வைக்கம் போராட்ட வரலாறு -திராவிடர் கழக வெளியீடு&lt;br /&gt;ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் - ம.வெங்கடேசன்&lt;br /&gt;நாரயண குரு - கே.சீனிவாசன் தமிழினி பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய சில சுட்டிகள்:&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Vaikom_Satyagraha"&gt;வைக்கம் - விக்கிபீடியா &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19990331/iex31073.html"&gt;A.J.பிலிப் - இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.webpage.com/hindu/daily/990405/05/05052524.htm"&gt;நாரயண குரு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sivagiri.org/"&gt;நாரயண குரு - சிவகிரி ஆசிரமம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-5712949545541915959?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/eLU3B6pdMcA" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/eLU3B6pdMcA/blog-post_17.html</link><author>noreply@blogger.com (முத்துகுமரன்)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://3.bp.blogspot.com/_bPuRR82xi90/Ru4lMyR7nrI/AAAAAAAAAHM/Qhu21UH0Fcc/s72-c/vaikom-temple.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">9</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2007/09/blog-post_17.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-2391288463576530604</guid><pubDate>Tue, 11 Sep 2007 15:34:00 +0000</pubDate><atom:updated>2007-09-12T20:58:28.468+02:00</atom:updated><title>வாருங்கள்! தந்தை பெரியார் கூகிள் குழுமத்தில்!!</title><description>தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த, சுயமரியாதை கருத்துகளை பரப்புவதற்கும், உரையாடவும் விரும்பும் தோழர்களுக்கான இணையக் கூடலுக்காக "தந்தை பெரியார்" கூகிள் குழுமம் துவங்கியுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"தந்தை பெரியார்" குழுமத்தின் இணைப்பு சுட்டி இங்கே &lt;a href="http://groups.google.com/group/egroupperiyar/"&gt;http://groups.google.com/group/egroupperiyar/&lt;/a&gt; பெரியார்/பெரியாரியம் பற்றி அறியவும், பகரவும், உரையாடவும் ஆர்வமுள்ள அனைவரும் இணையலாம். தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விவாதங்களையும், கருத்துக்களையும், மாற்றுக்கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்,&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகுமரன், திரு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-2391288463576530604?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/nyqCKwtGjzQ" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/nyqCKwtGjzQ/blog-post.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2007/09/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-4515962729057821943</guid><pubDate>Fri, 31 Aug 2007 08:24:00 +0000</pubDate><atom:updated>2007-08-31T10:25:38.214+02:00</atom:updated><title>அடிமைத்தனத்தை உருவாக்கும் கல்வி முறை - பெரியார்</title><description>தற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது? &lt;br /&gt;&lt;br /&gt;நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-4515962729057821943?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/LA_3m45gh_M" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/LA_3m45gh_M/blog-post_31.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2007/08/blog-post_31.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-4866969023751569387</guid><pubDate>Thu, 30 Aug 2007 14:15:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.615+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><title>பெரியாரின் பேச்சு - ஒலிவடிவில்</title><description>தமிழ் மண்ணின் வீதிகளில் மேடையமைத்து சாதாரண மக்களுக்கு பகுத்தறிவு கருத்துக்களை பரப்பிய தந்தைப் பெரியாரின் குரலை கேட்கும் ஆர்வத்தில் தேடியபோது கிடைத்தது ஒரு ஒலித்துண்டு. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் மீட்க மேடைகள் தோறும் பார்ப்பனீயவாதிகளின் புரட்டுக்களை, கட்டுக்கதைகளை, சுயமரியாதைக்கு எதிரான கொடுமைகளை தனக்கே உரிய கேலியும், கிண்டலும், கோபமும் பொங்க மக்களிடம் விளக்கிய பெரியாரின் குரல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://res0.esnips.com/escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=yes&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/9de65f55-c68e-4ab0-bafe-57a5769bc365&amp;amp;theName=Periyar Speech&amp;amp;thePlayerURL=http://res0.esnips.com/escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;objectid=9de65f55-c68e-4ab0-bafe-57a5769bc365"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color:#FFFFFF; text-decoration:none" href="http://www.esnips.com//selectedfile/emaildoc/9de65f55-c68e-4ab0-bafe-57a5769bc365"&gt;     Share &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/9de65f55-c68e-4ab0-bafe-57a5769bc365/Periyar-Speech/?widget=flash_player_esnips_blue"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த சொத்துக்களை சுயமரியாதை பகுத்தறிவு பிரச்சாரத்திற்காக செலவிட்ட பெரியார் பொதுவாழ்க்கையில் ஒரு உதாரணம். தமிழகத்தின் ஆளுமைமிக்க தலைவர் பெரியார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-4866969023751569387?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/NUW8hcK5sOY" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/NUW8hcK5sOY/blog-post.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">2</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2007/08/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-3419760450184976157</guid><pubDate>Wed, 01 Aug 2007 16:35:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.616+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><title>பெரியார் ஏன் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்?</title><description>1925 நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு தலைவராக தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் இருந்தார்கள். அந்த மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை பெரியார் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது. அப்போது தான் 'காங்கிரசால் பார்பனரல்லாதார் நன்மை பெறமுடியாது; காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை' என்று மாநாட்டிலேயே எழுந்து கூறிவிட்டு வெளியேறினார். உடனே அவருடன் ஒரு பெருங்கூட்டம் மாநாட்டை விட்டு வெளியேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சி மாநாட்டின் போது, அங்கேயே பெரியாரின் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அந்த மாநாட்டின் தலைவராக கோவை திரு. T.A.இராமலிங்க செட்டியாரை அழைத்து பேசிய பெரியார் "தேசத்தில் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற தனிப்பட்ட கட்சிகள் தோன்றி பிணக்குறுவது அனைவரும் அறிந்த ஒரு விஷயமேயாகும், இவ்வாறு பிரிவினையில்லையென்று எவ்வளவுதான் மூடிவைத்த போதிலும் காங்கிரசிலுங்கூட இத்தகைய பேதம் உண்டென்பதை யாரும் மறுக்கமுடியாது. பிராமணர், பிராமணரல்லாதார் பிரிவினையில்லையென்பது உடலிலுள்ள புண்ணை மூடிவைத்து அழுகவிடுவதற்கு ஒப்பானதாகும். அதற்கேற்ற பரிகாரம் செய்து, உடலநலத்தை கெடுக்கும் புண்ணை ஆற்ற முயல்வதே பொதுநோக்குடைய அறிஞர் கடமையாகும்" என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறியதும், அதற்கான காரணமாக அமைந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானமும் குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்ததல்ல. சிலர் பரப்பும் பொய்யுரை போல தனிப்பட்ட சிலரால் பாதிக்கப்பட்டு வெளியேறிய சாதாரண நிகழ்வுமல்ல. பிராமணர் அல்லாதவர்களின் வகுப்புரிமைக்கும், சமூக உரிமைக்கும் காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயே போராடியவர் தான் பெரியார். இதை அறிய பெரியார் வெளியேறியதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சமூகத்திலும், காங்கிரஸ் இயக்கத்திலும் இருந்து வந்த பார்ப்பனீய ஆதிக்க செயல்களை தெரிந்துகொள்வோம்.&lt;br /&gt;&lt;ul&gt;&lt;li&gt;சர்.சி.பி. தியாகராயர், டாக்டர் நாயர், சி.நடேச முதலியார், பனகல் அரசர் ஆகியோர் இணைந்து "திராவிடர் சங்கம்" ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் இரண்டு நூல்களை "திராவிடரின் தகுதிகள்", "பார்ப்பனரல்லாதார் கடிதங்கள்" என்ற பெயரில் 1915ல் வெளியிட்டனர். அவர்கள் இணைந்து "தென்னிந்திய மக்கள் உரிமசங்கம்" என்ற பெயரில் அமைப்பு ஒன்றை 1916ல் உருவாக்கினர். காலப்போக்கில் அந்த அமைப்பின் பத்திரிக்கையான 'ஜஸ்டிஸ்' என்ற பெயரில் 'ஜஸ்டிஸ் கட்சி/நீதிக்கட்சி' என அழைக்கப்பட்டது. 1917ல் பிராமணரல்லாதார் மாநாடு சர்.சி.பி. தியாகராயர் தலைமையில் நடந்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அரசாங்கத்திலும், சட்டசமையிலும் நிறைவேற்ற இம்மாநாடு கோரியது. இந்த மாநாட்டு தீர்மானங்கள் சாதி ஆதிக்கத்தை எதிர்த்த முற்போக்கானவை என கருதப்படுகிறது. நீதிக்கட்சி தோன்றிய காலத்தில் பெரியார் போன்றவர்கள் நீதிக்கட்சியில் சேராமல் தடுக்க "சென்னை மாகாண சங்கம்", "தேசீய சங்கம்" என இரண்டு அமைப்புகளை பார்ப்பனீயவாதிகள் உருவாக்கினர். இச்சங்கம் பிராமணரல்லாதவர்கள் பெயரால் நடத்தப்பட்டாலும் இச்சங்கங்கள் பார்ப்பனீயவாதிகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்கியது. வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை இந்த இரு சங்கங்களிலும் பெரியார் நிறைவேற்றியதும் இரு சங்கங்களும் கொல்லப்பட்டன. &lt;/li&gt;&lt;br /&gt;&lt;li&gt;1920ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் கிராமப்புறங்களில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் நிறுவப்பட்டன. ஆதிதிராவிட குழந்தைகளை அனுமதிக்காத அரசு உதவி பெற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை. ஆதிதிராவிடர் முதல் பிராமணர்கள் வரையில் அனைவருக்கும் வகுப்புவாரி உரிமை அடிப்படையில் அரசு பள்ளிகளில் இடம் பங்கிடப்பட்டது. இந்து அறநிலைய பாதுகாப்புச்சட்டம் இயற்றப்பட்டு இந்து கோவில்களின் நிலம், உடமைகள் என அனைத்தும் கண்காணிக்கப்பட்டது. இன இழிவை அகற்றும் விதமாக தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டங்கள் அனைத்தும் பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியும், மானமும் பெற்றுத்தர துவங்கியது மட்டுமல்ல கோவில் சொத்துக்கள் சிலரால் மட்டும் களவாடப்படுவதையும் தடுத்து பொதுவானதாக மாற்ற முனைந்தது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;சென்னை மாகாண ஆட்சி பிராமணர் அல்லாதவர்களிடம் இருந்ததால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் பார்ப்பனீயவாதிகளின் ஆதிக்கத்தை தகர்த்துவிடும் என்பதால் பார்ப்பனீயவாதிகள் எதிர்க்க துவங்கினார்கள். 'இந்துமதத்தில் சர்க்கார் தலையிடுகிறது' என கோவில் தர்மகர்த்தாக்களும், மடாதிபதிகளும், எதிர்த்தனர். திரு. S.சீனிவாசய்யங்கார், விஜயராகவாச்சாரியார் போன்ற வழக்கறிஞர்கள் 'மதத்திற்கு ஆபத்து', 'இந்த சட்டம் இயற்ற சென்னை சட்டச்சபைக்கு அதிககரமில்லை' என கூச்சலிட்டனர். காங்கிரஸில் இருந்த பார்ப்பனீயவாதிகளும் இந்த செயல்களை ஆதரித்தனர். இந்த நேரத்தில் பெரியார் வெளியிட்ட அறிக்கையில் "கட்சி வேற்றுமை பாராட்டாமல் அறநிலைய பாதுகாப்புச்சட்டத்தை ஆதரிக்க வேண்டும். இதனால் அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை. அவைகளின் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்க வேண்டும். மதத்தின் பெயரால் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான் இதனால் ஆபத்து." என்றார்.&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;திருநெல்வேலி, சேரன்மாதேவியில் 'குருகுலம்' என்ற பெயரில் வ.வெ.சுப்பிரமணிய அய்யர் பொதுமக்களிடமிருந்தும், காங்கிரஸிலிருந்தும் பணம் பெற்று நடத்திய பள்ளியில் பிராமணர்களுக்கு தனி உணவு, பிரார்த்தனை வேறு இடம் பிராமணர் அல்லாதவர்களுக்கு வேறு இடம், உணவு, பிரார்த்தனை என நடத்தினார், இதை எதிர்த்தார் பெரியார். திரு.வி.க, டாக்டர்.வரதராஜலு நாயுடு போன்றவர்களும் இணைந்து குருகுலத்தை எதிர்த்தனர். நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. காந்தியார் தலையிட்ட பிறகும் வ.வெ.சு அய்யர் உடன்படவில்லை. பெரியார், திரு.வி.க, டாக்டர் போன்றவர்களது பிரச்சாரத்தால் குருகுலத்திற்கு கொடுக்கப்பட்டுவந்த நன்கொடைகள் நின்றன. வர்ணாஸ்ரம குருகுலம் ஒளிந்தது.&lt;/li&gt;&lt;li&gt;இந்த காலத்தில் திருச்சியில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் 'பார்ப்பனர்களுக்கு எதிராக பேசிவருகிறார்' என டாக்டர்.நாயுடு மீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பெரியார் அதை எதிர்த்து பேசி தோற்கடித்தார். அந்த கூட்டத்திலேயா சி.இராஜகோபாலாச்சாரியார், டி.எஸ்.எஸ்.ராஜன், என்.எஸ்.வரதாச்சாரியார், கே.சந்தானம், டாக்டர்.சாமிநாத சாஸ்திரி ஆகியவர்கள் ராஜினாமா செய்து வெளியேறினார்கள்.&lt;/li&gt;&lt;li&gt;1920ல் திருநெல்வேலியில்ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை தீர்மானத்தை விஷயாலோசனை கமிட்டியில் 6 வாக்குகள் அதிகம் பெற்று நிறைவேற்றினார் பெரியார். மாநாட்டின் தலைவராக இருந்த எஸ்.சீனிவாசய்யங்கார் 'இது பொதுநலாத்திற்கு கேடு' என அனுமதி மறுத்தார். 1921ல் தஞ்சாவூரில் நடந்த மாகாண காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தார் பெரியார். அதற்கு 'சீமான்' இராசகோபாலாச்சாரியார் 'கொள்கையாக வைத்துக்கொள்வோம்; தீர்மான ரூபமாக வேண்டாம்' என எதிர்த்தார். திருப்பூரில் நடந்த மாகாண மாநாட்டில் மீண்டும் அதே தீர்மானத்தை கொண்டுவந்தார். மீண்டும் பார்ப்பனவாதிகள் எதிர்க்கவே 'இராமாயணத்தையும், மகாபாரத்தையும் நெருப்பில் கொளுத்தவேண்டும்' என்றார் பெரியார். கலவரம் ஏற்படவே திரு. விஜயராகவாச்சாரியார் அடங்கினார். 1923ல் சேலம் மாகாண மாநாட்டில் மீண்டும் தீர்மானத்தை கொண்டுவந்தார். கலகம் ஏற்படும் சூழ்நிலை வரவே டாக்டர்.வரதராஜலு நாயுடுவும், ஜார்ஜ் ஜோசப்பும் நிறுத்தினார்கள். 1924ல் பெரியார் தலைமையில் திருவண்ணாமலையில் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானத்தை கொண்டுவந்தார். வகுப்புவாரி தீர்மானத்தை தோற்கடிக்க சென்னையிலிருந்து அதிகமான ஆட்களை எஸ்.சீனிவாசய்யங்கார் கூட்டி வந்து தீர்மானத்தை தடுத்தார். தீர்மானம் நின்றுபோனது. 1925ல் காஞ்சி மாநாட்டில் தீர்மானம் தலைவரால் அனுமதிக்கப்படவில்லை. அப்போது தான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறினார். &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;தொடர்ந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தான் பெற்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முரண்பாடு கொண்ட அமைப்பை விட்டு, ஆதிக்கவாதிகளால் நிறைந்த காங்கிரஸ் இயக்கத்தை விட்டு ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் உரிமைக்காகவும் வெளியேறினார். அவர் தான் பெரியார்!&lt;/p&gt;&lt;p align="center"&gt;*******&lt;/p&gt;&lt;p align="center"&gt;இப்பதிவை எழுத உதவிய நூல்கள்:&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;தமிழர் தலைவர், சாமிசிதம்பரனார்.&lt;/li&gt;&lt;li&gt;மனிதம் - பெரியார் பற்றிய டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரை.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-3419760450184976157?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/Yu5IDYTvDd0" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/Yu5IDYTvDd0/blog-post.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">11</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2007/01/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-5469324418362107421</guid><pubDate>Sun, 27 May 2007 12:14:00 +0000</pubDate><atom:updated>2008-04-01T22:19:59.617+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">பெரியார்</category><title>பெரியார்!</title><description>&lt;a href="http://1.bp.blogspot.com/_ThOZXEHBIVI/Rll0VX_IhFI/AAAAAAAAAKw/w1dNPaBnaBk/s1600-h/periyar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5069210766147093586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_ThOZXEHBIVI/Rll0VX_IhFI/AAAAAAAAAKw/w1dNPaBnaBk/s400/periyar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ThOZXEHBIVI/RllyzH_IhEI/AAAAAAAAAKo/ntYr04vH6-c/s1600-h/periyar.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-5469324418362107421?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/e-6niDqPDLQ" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/e-6niDqPDLQ/blog-post_27.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="http://1.bp.blogspot.com/_ThOZXEHBIVI/Rll0VX_IhFI/AAAAAAAAAKw/w1dNPaBnaBk/s72-c/periyar.jpg" height="72" width="72" /><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">0</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2007/05/blog-post_27.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-1580798359339322430</guid><pubDate>Fri, 25 May 2007 10:49:00 +0000</pubDate><atom:updated>2007-05-25T12:52:18.436+02:00</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">மதமாற்றம்</category><category domain="http://www.blogger.com/atom/ns#">தீண்டாமை</category><title>ஆதி திராவிடர்கள் மதம் மாறுதல்-பெரியார்</title><description>&lt;strong&gt;ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்! - &lt;span style="color:#990000;"&gt;(பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-1580798359339322430?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/w175N-Foi0Y" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/w175N-Foi0Y/blog-post.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">1</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2007/05/blog-post.html</feedburner:origLink></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-32560262.post-7075230118326474872</guid><pubDate>Mon, 05 Mar 2007 13:57:00 +0000</pubDate><atom:updated>2007-03-06T16:41:53.047+01:00</atom:updated><title>கற்பக்கிரகத்தில் தலித் - (குறுங்கதை)</title><description>&lt;div align="left"&gt;"பெருமாளே..." வலியில் கதறுகிறார் அர்ச்சகர் நாராயணன்.&lt;br /&gt;&lt;br /&gt;"செத்த நாழி பொறுத்துக்கோங்கோ. புரோக்கரையும், வக்கீலையும், கிட்னி தாறவாளையும் கூட்டிண்டு கையெழுத்து வாங்க டாக்டர் ரூமுக்கு ரகு போயிட்டான். செத்த நாழியில ஆப்பரேசன் பண்ணிடுறதா சொல்லிட்டா. எல்லாம் செரியாகிடும் பெருமாள் காப்பாத்துவார்" ஆறுதல் சொல்லுகிறார் அர்ச்சகரின் ஆத்துக்காரி சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகருக்கு ஆறுதல் சொன்னாலும் மனசு முழுசும் 'ஸ்ரீராம ஜெயம்' சொல்லிக்கொண்டே ஓரக்கண்ணில் வழியும் கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைக்கிறாள் சுஜாதா அம்மாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணை மூடி தன் புருசன் பூஜை செய்யும் பெருமாள் சந்நிதியை மனதில் நினைத்து மாங்கல்யத்தை கெட்டியாக பிடித்தபடி, "பகவானே ஆத்துக்காரரை காப்பாத்து! பகவான் புண்ணியத்துல எல்லாம் நல்லா முடிஞ்சா பெருமாள் சந்நிதிக்கு அழைச்சிண்டு வறேன்" திருப்பதி வெங்கடாசலபதியை நினைத்து உருக்கமாக வேண்டுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் கோயில்ல பெருமாளுக்கு பூஜை செய்ற அர்ச்சகரை முதலில் சந்தித்த கணங்களை சுஜாதா நினைத்தபடியே பெருமாளை வேண்டிக்கொள்கின்றார். &lt;/div&gt;&lt;div align="center"&gt;-000- &lt;/div&gt;&lt;div align="left"&gt;"நான் படுற வேதனை எம் புள்ளைக்கு வரக்கூடாது. வீசுற நாத்தத்தையும் பொறுத்து சாக்கடையில் மூழ்கி அடைப்பெடுக்கும் இந்த முனிசிபாலிட்டி வேலைய பாக்குறதே எம்புள்ள படிச்சு முன்னேறணும்னு தான். அவளுக்கு படிக்க பீஸ் கட்ட கந்து வட்டி கடன் வாங்கினதுல குவிஞ்சு கிடக்கிற கடனை அடைக்க இத விட்டா வேற என்ன வழி? கிட்னிய வித்தாவது மானத்தை காப்பத்தணுமே!" நீட்டிய பத்திரங்களில் கையெழுத்து போடும் முனியன் மனதிற்குள் வேதனையை கொட்டுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தடபுடலாக ஆப்பரேசன் நடக்கிறது. இரண்டு தினங்கள் கழித்து முனியனின் கையில் மாத்திரைகளும், 40,000 ரூபாயும் திணிக்கப்படுகிறது. பேசியபடி 5 லட்சம் ரூபாயும், மாதம் தோறும் 2000 ரூபாயும் வருமென நினைத்த முனியனுக்கு முதல் அதிர்ச்சி! &lt;/div&gt;&lt;div align="center"&gt;-0000- &lt;/div&gt;&lt;div align="left"&gt;முனியனின் கிட்னியால் குணமடைந்த அர்ச்சகர் கோயிலில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். பழையபடி வேலைக்கு போகமுடியாத முனியன் பேசிய தொகையை வசூலிக்க அர்ச்சகரை தேடி கோயிலில் காத்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;'போ வெளியே! இங்கேயெல்லாம் வரப்படாது. சாமிக்கு தீட்டு! அபச்சாரம்' என்கிறார் அர்ச்சகர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'என்ன சாமி எங்கிட்ட வாங்கின கிட்னிக்கு காசு கேக்க தானே வந்தேன். இதில எங்கே தீட்டு? நான் வந்தா அபச்சாரம் ஆனா, என் கிட்னிய ஒங்க ஒடம்புல பொருத்துனா மட்டும் அபச்சாரமில்லையா?' &lt;/strong&gt;என்றான் முனியன்.&lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சகரின் முகத்தில் ஆயிரம் கைகள் ஓங்கி அறைவது போல உணர்கிறார். தாழ்த்தப்பட்டவன் நுழைய அனுமதிக்காத வர்ணாஸ்ரம கற்பக்கிரகத்தில் தாழ்த்தப்பட்டவனது கிட்னி நுழைவதை அர்ச்சகராலும் தடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;உயிர்பயத்தின் முன்னர் பெருமாளாவது, தீட்டாவது! வர்ணாஸ்ரமம் தலைகுனியத்தான் வேண்டும்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32560262-7075230118326474872?l=periyaarr.blogspot.com'/&gt;&lt;/div&gt;&lt;img src="http://feeds.feedburner.com/~r/periyar/~4/iAzMOu3tntk" height="1" width="1"/&gt;</description><link>http://feedproxy.google.com/~r/periyar/~3/iAzMOu3tntk/blog-post.html</link><author>noreply@blogger.com (திரு/thiru)</author><thr:total xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0">11</thr:total><feedburner:origLink>http://periyaarr.blogspot.com/2007/03/blog-post.html</feedburner:origLink></item></channel></rss>
