tag:blogger.com,1999:blog-348965202024-03-07T12:47:18.617+05:30கபீரின் கனிமொழிகள்"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ"கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger139110tag:blogger.com,1999:blog-34896520.post-84120391189884863912023-12-30T09:02:00.003+05:302023-12-30T09:02:58.629+05:30நாகமொன்றை மண்ணால் செய்தே ...<p>இயற்கையில் நமக்கு புரியாத புதிர்கள் ஏராளம். அவற்றிற்கெல்லாம் விடைகாண இயலாது. ஆனால் மனிதர்களின் செயல்களுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறொன்றுமில்லையே. அவைகளும் பல சமயங்களில் அர்த்தமின்றி செய்யப்படும் போது- குறிப்பாக சமய வழக்கங்களில் - மூட நம்பிக்கையாகிறது. </p><p>நாக பஞ்சமியன்று பாம்புப் புற்றினுக்கு பால் ஊற்றுவது நம் நாடெங்கும் பரவலாகக் காணப்படுவது. பால் குடிக்காத பாம்பிற்கு எதற்குப் பால்? பல வருடங்களாக என்னைக் குடைந்து கொண்டிருந்த இந்த கேள்விக்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் ஒன்று கறையான் புற்றுகளை பற்றி எழுதும் போது எனக்கு தோன்றியது. அதை கட்டுரையின் கடைசியில் காண்போம். </p><p>இந்த நம்பிக்கை உள்ளவர்களின் நடத்தை அவர்களின் நிஜ வாழ்க்கைக்கு முரணாகப் போகும் போது சான்றோர்களின் நகைப்பிற்கு ஆளாகிறார்கள்.</p><p>கபீர்தாஸ் இதை இப்படி கேலி செய்கிறார்'</p><p><span style="color: #990000;">माटी का एक नाग बनाके, पूजे लोग लुगाया ।</span></p><p><span style="color: #990000;">जिन्दा नाग जब घर में निकले, ले लाठी धमकाया ।।</span></p><p><span style="color: #2b00fe;">நாகமொன்றை மண்ணால் செய்தே உலகோர் செய்வார் பூசை |</span></p><p><span style="color: #2b00fe;">நாகமோ உயிருடன் அகம் புகுந்தால் தடியால் விழுமே பூசை ||</span></p><div class="gmail_default" style="background-color: white; font-family: "trebuchet ms", sans-serif; font-size: small;">( <i>அகம் = இல்லம் ; பூசை என்பதற்கு பலத்த அடி என்ற பொருளும் உண்டு</i>) </div><div class="gmail_default" style="background-color: white; font-family: "trebuchet ms", sans-serif; font-size: small;"><span style="background-color: transparent;"><br /></span></div><div class="gmail_default" style="background-color: white; font-family: "trebuchet ms", sans-serif;">இங்கே நம்பிக்கை வேறு நடப்பு வேறு என்பது வெளிப்படை. இந்த இடைவெளி பெரிதாகும் போது நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை ஆகிறது.</div><div class="gmail_default" style="background-color: white; font-family: "trebuchet ms", sans-serif; font-size: small;"><span style="background-color: transparent;"><br /></span></div><div class="gmail_default" style="background-color: white; font-family: "trebuchet ms", sans-serif;"><span style="background-color: transparent;">இதே கருத்தை கர்நாடகத்தில் பக்தி புரட்சி செய்த பஸவேசுவரர் "கல்ல நாகர கண்டரே" என்னும் பாடலில் சொல்லியிருக்கிறார். இவர் 400 வருடங்கள் கபீர்தாஸருக்கும் முந்தயவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (1134- 1196 )</span></div><div class="gmail_default" style="background-color: white; font-family: "trebuchet ms", sans-serif;"><span style="background-color: transparent;"><br /></span></div><div class="gmail_default" style="background-color: white; font-family: "trebuchet ms", sans-serif;"><span style="background-color: transparent;"><div class="gmail_default">ಕಲ್ಲ ನಾಗರ ಕಂಡರೆ ಹಾಲನೆರೆಯೆಂಬರು,</div><div class="gmail_default">ದಿಟದ ನಾಗರ ಕಂಡರೆ ಕೊಲ್ಲೆಂಬರಯ್ಯಾ </div><div class="gmail_default">ಉಂಬ ಜಂಗಮ ಬಂದಡೆ ನಡೆಯೆಂಬರು </div><div class="gmail_default">ಉಣ್ಣದ ಲಿಂಗಕ್ಕೆ ಬೋನವ ಹಿಡಿಯೆoಬರಯ್ಯಾ</div><div class="gmail_default">ನಮ್ಮ ಕೂಡಲಸಂಗನ ಶರಣರ ಕಂಡು </div><div class="gmail_default"> ಉದಾಸೀನವ ಮಾಡಿದಡೆ </div><div class="gmail_default">ಕಲ್ಲ ತಾಗಿದ ಮಿಟ್ಟಿಯಂತಪ್ಪರಯ್ಯಾ ।।</div></span></div><p> <span style="color: #2b00fe;">நாகம் கல்லானால் பாலை அதன் மேல் சொரிவார் </span></p><p><span style="color: #2b00fe;">நாகம் உயிர்த்து வந்தால் உடனே அதைக் கொல்வார் </span></p><p><span style="color: #2b00fe;">உன்னத அடியார்களிடம் பாராமுகம் கொள்வார்</span></p><p><span style="color: #2b00fe;">உண்ணாத லிங்கத்திற்கு நிவேதனம் படைப்பார்.</span></p><p><span style="color: #2b00fe;">கூடல சங்கம தேவா </span></p><p><span style="color: #2b00fe;">உன் பக்தரை உதாசீனம் செய்வோரெல்லாம் </span></p><p><span style="color: #2b00fe;">மண்கட்டி பாறையில் மோதியது போலாவார் </span></p><p>இந்த பாடல் சிவனடியார்களின் பெருமையை எடுத்துக் கூறுகிறது. </p><p>அவர்கள்,மன உறுதியில், பாறையைப் போன்றவர்கள். வெளியுலக ஏற்றத் தாழ்வுகள் அவர்களை பாதிப்பதில்லை. அவர்களின் பெருமை அறியாதவர்கள் மண்கட்டி போன்றவர்கள். அந்த சிறுமதியாளர்கள் தாம் செய்யும் உதாஸீனத்தால் பாதிப்பு தங்களுக்கே என்பதை அறியாதவர்கள். எப்படி மணற்கட்டியை பாறை மேல் வீசினால் தூள்தூளாகிப் போகுமோ அது போன்றே அஞ்ஞானிகள் சான்றோர்களுக்கு செய்யும் அவமதிப்பால் தமக்குத் தாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்கின்றனர் என்பதே இதன் மையக்கருத்து.</p><p> ஆன்மீகத்தின் முதற்தேவை மன அடக்கம் அடுத்த கட்டம் சாது சத்சங்கம். தற்பெருமையால் மன அடக்கம் குன்றும் போது தவறுகள் பெரிதாகும் வாய்ப்பு அதிகம். அப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு நகரவே முடியாது. இதனால் நஷ்டம் நமக்கே ஒழிய சாதுக்களுக்கு ஒன்றுமில்லை. அதைத்தான் மண் உருண்டை உதாரணத்தின் மூலம் மிகவும் நாசூக்காக பஸவேசுவரர் சொல்லியிருக்கிறார்.</p><p>------------------------------------------------------------------------------</p><p><i><span style="font-size: x-small;">என் சிற்றறிவுக்கு எட்டியபடி :</span></i></p><p><span style="color: #990000;">பாம்பின் (கறையான்) புற்றிற்கு பாலூற்றுவது ஏன்?</span> </p><p>மக்குத்திம்மன் பதிவு ஒன்றில் <a href="http://nirmal-kabir.blogspot.com/2010/07/blog-post.html" target="_blank">'கறையான் புற்றில் பாம்பு' </a>பற்றி டிவிஜி யின் பாடலை (#371) மொழி பெயர்த்திருந்தேன். அப்போது அந்த புற்றுகளை அவைகள் எப்படி அமைக்கின்றன என்பதைப் பற்றி பல கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. முக்கியமாக மண்துகளை பிணைக்கும் அவற்றின் உமிழ்நீர் ஒரு சிறப்பான ரசாயனத்தன்மை கொண்டது. எப்படி சிலந்தியின் வலை அதன் உமிழ்நீரால் பின்னப்படுகிறதோ அதேபோல் கறையான் எறும்புகள் தம்முடைய உமிழ்நீரால் கூட்டை கட்டுகின்றன. அந்த ரசாயனத்தின் தன்மை என்னவெனில் மழைக் காற்று இவற்றை தாக்கு பிடிக்கும் அளவு உறுதியானது மட்டுமின்றி அந்த கூட்டைச் சுற்றி பிற வகை தாவிரங்கள் பெரிய அளவில் எதுவும் தலையெடுக்காமல் தடுக்கும். ஏனெனில் அவற்றின் வேர் கூட்டை அடைந்தால் அவைகளின் பாடு பெரும்பாடு ஆகிவிடும். அதனால் புற்றுகள் மிகுந்த பகுதி வறண்டு கள்ளிச் செடிகளும் முட்புதர்களுமாக காணப்படுகின்றன. நாளடைவில் இப்புற்றுகளில் அடியில் உள்ள குளிர்ச்சி காரணமாக பாம்புகள் குடி புகுகின்றன. அதனால் அவை பாம்பு புற்று ஆகிவிடுகின்றன.</p><p>இயற்கை விவசாயத்தை பரிந்துரைப்போரின் முக்கிய கவனமெல்லாம் மண்ணை வளப்படுத்தும் பாக்டீரியாக்களை மண்ணில் அதிகப்படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு பசுந்தாள் உரம் அதிகம் மண்ணில் சேர்த்து யூரியா போன்ற ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ரசாயன உரங்கள் நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கு விஷம் போன்றவை.</p><p>இப்போது வீட்டுத் தோட்டத்திலோ விவசாய நிலத்திலோ ஒரு கறையான் புற்று காணப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவைகளின் பெருக்கத்தை தடைசெய்ய அல்லது நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரிக்க பால் தயிர் போன்ற புரதம் கூடிய திரவங்களை மண்ணில் சேர்த்தால் அவைகள் விரைவாக செயல்பட்டு நுண்ணுயிர்களின் செயல்பாட்டை துரிதப்படுத்தும். இதனால் தாவரங்களுக்கு வேண்டிய ஊட்டச் சத்து கிடைக்க வழி பிறக்கும். புற்றுக்கு பால் ஊற்றுவதன் காரணம் இதுவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. </p><p>இதை ஒருவகை <span style="font-size: medium;">soil reclamation </span>என்று கூட சொல்லலாமோ !</p><p>இது என்னுடைய மேலோட்டமான புரிதல். இதில் எவ்விதமான ஆன்மீக உள்ளுணர்வும் கிடையாது. </p><p>ஆனால் <a href="https://isha.sadhguru.org/ta/wisdom/article/naga-panchami-in-tamil#point3" target="_blank">சர்ப்ப வழிபாட்டில் கண்டிப்பாக ஆழமான பொருள்</a> இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதோ சத்குருவின் வார்த்தைகளில் கேளுங்கள்.</p>
<iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/W2I9_tVKYa4?si=Skpw5_Ay1_j9-32k&start=406" title="YouTube video player" width="560"></iframe><div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-34896520.post-1862709742115348172023-12-27T23:42:00.000+05:302023-12-27T23:42:39.934+05:30நாமம் தோய்ந்த மூச்சு<p> இன்று திருவாதிரை( 27-12-2023)</p><p>விறகு வெட்டியான சேந்தனாரின் பக்திப் பெருமையை தில்லை பெருமான் உலகறியச் செய்த நாள். அவருடைய எளிய வீட்டிற்கே சிவனடியாராகச் சென்று அவர் படைத்த களியை விரும்பி ஏற்று களிக்கு திருவாதிரைக் களி என்று ஏற்றம் கொடுத்த நாள். களிநடனம் புரிபவன் களியில் களி கண்டான்.</p><p>பின்னர் அவரை பல்லாண்டு பாடும்படி பணித்து அதன் பின் தேரோட்டம் தடையின்றி சென்றதாக அவருடைய வரலாறு சொல்கிறது.</p><p>அப்போது அவர் பாடிய "மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள்" என்று தொடங்கி " பல்லாண்டு கூறுதுமே" என்று முடியும் பதிமூன்று பாடல்களும் ஒன்பதாம் திருமுறையாக சைவத் திருமுறை பகுப்பில் போற்றப் படுகிறது.</p><p>என்னிடத்தில் இருக்கும் தமிழ் வேதத் திரட்டிலிருந்து ஒருமுறை அதைப் படித்து விட்டு என்னுடைய திருவாதிரை வழிபாட்டை நிறைவு செய்த திருப்தியில் வேறு சில பக்கங்களைப் புரட்டினேன். </p><p>அப்போது மணிவாசகப் பெருமானின் "யாத்திரைப் பத்து" கவனத்தைக் கவர்ந்தது. அதில் நான்காவது பாடலில் '<span style="color: #2b00fe;">அடியார் ஆனீர் எல்லீரும் அகலவிடுமின் விளையாட்டை....</span>' என்ற வரிகள் ஏனோ என்னை தடுத்து நிறுத்தியது.</p><p>இப்போது நான் செய்து கொண்டிருக்கும் தோத்திரம் எல்லாமே வெறும் விளையாட்டு தானோ? எனக்கு சேந்தனாரைப்போலவும் பிற அடியார்களைப் போலவும் பக்தி எப்போது வரும்? </p><p><span style="color: #2b00fe;">'செடிசேர் உடலைச் செலநீக்கிச் சிவலோகத்தே நமை வைப்பான் பொடி சேர் மேனி புயங்கன் தன் பூவார் கழற்கே'</span> என்று அவர் நமக்கு உறுதி மொழி அளித்தாலும் நமக்கு அதற்கான தகுதி வேண்டாமோ! </p><p>அத்தகுதியை அடைந்த மாணிக்கவாசகர் அத்தகைய பக்தர்களின் நிலையை வருணிப்பதை பார்ப்போம். </p><span style="color: #2b00fe;"><span style="background-color: white; border: 0px; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;">நல்காது ஒழியான் நமக்கு என்று உன்</span><br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; text-align: center;" /><span style="background-color: white; border: 0px; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;">நாமம் பிதற்றி நயன நீர்</span><br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; text-align: center;" /><span style="background-color: white; border: 0px; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;">மல்கா வாழ்த்தா வாய் குழறா</span><br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; text-align: center;" /><span style="background-color: white; border: 0px; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;">வணங்கா மனத்தால் நினைந்து உருகிப்</span><br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; text-align: center;" /><span style="background-color: white; border: 0px; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;">பல்கால் உன்னைப் பாவித்துப்</span><br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; text-align: center;" /><span style="background-color: white; border: 0px; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;">பரவிப் பொன்னம்பலம் என்றே</span><br style="background-color: white; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; text-align: center;" /><span style="background-color: white; border: 0px; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;">ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி</span></span><div><span style="background-color: white; border: 0px; font-family: "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; vertical-align: baseline;"><span style="color: #2b00fe;">அருளாய் என்னை உடையானே.</span></span> <i><span style="font-size: x-small;">( கோயில் மூத்தத் திருப்பதிகம் )</span></i><p><i><span style="font-size: x-small;">( மல்கா என்பதை மல்கி என்றும் வாழ்த்தா என்பதை வாழ்த்தி என்றும் குழறா என்பதை குழறி என்றும் வணங்கா என்பதை வணங்கி என்றும் பொருள் கொள்ள வேண்டும் )</span></i></p><p>இறைவனிடம் ' உன் நாமம் பிதற்றி' என்று சொல்லும் போது அடியார்கள் அதைத் தவிர வேறொன்றையும் நினைக்கவோ பேசவோ மாட்டார்கள் என்பது புரிகிறது. அடுத்து வரும் வரிகள் அத்தகைய பக்தர்களின் உடல் மற்றும் மனநிலையை விவரிக்கின்றன.</p><p>அவர் சொல்லும் எந்தத் தகுதியும் என்னிடம் இல்லை என்பதை உணரும் போது ஏனிந்த நிலைமை என்று ஆராயத் தோன்றுகிறது. "அகலவிடுமின் விளையாட்டை" என்று அவர் போதிப்பதை கடைபிடிக்காததால் வரும் விளவுதான் என்கிற காரணமும் புரிகிறது.</p><p>கபீர்தாஸரின் ஈரடி ஒன்று இதை உரைகல் போல மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.</p><p><span style="color: #990000;">सांस सुफल सो जानिये ,जो सुमिरन में जाय | </span></p><p><span style="color: #990000;">और सांस यौं ही गये , करि करि बहुत उपाय || </span></p><p><i>இதன் பொருள் "நீ விடுகின்ற மூச்சு பயனுள்ளதாயிற்று இறைநாமத்துடன் கூடிவந்தால். இல்லாவிடில் ஏதேதோ வெளிவிவகாரங்களினால் வீணாய் போய்விட்டது. "</i></p><p><span style="color: #2b00fe;">யத் யத் கர்ம கரோமி தத் தத் அகிலம் சம்போ தவ ஆராதனம்</span> என்று சிவ மானஸ ஸ்துதியில் சொல்வது போல் அவனுடைய நினைவாகவே என் கடமைகளை செய்கின்றேனா என்றால் இல்லையென்பதே உண்மை.</p><p>ஒருநாளைக்கு மனிதர்களின் சுவாசம் 21000 முறை நடைபெறுகிறதாம். கபீர் சொல்வது போல் 21000 முறையும் கடவுள் சிந்தனையோடிருந்தால் கண்டிப்பாக சேந்தனாரைப் போலவோ மாணிக்கவாசகர் போலவோ அந்த உயர் நிலையை அடையலாம். ஆனால் உலக நடப்பில் மனம் உழன்று அது சாத்தியமின்றி நம்மை அலைகழிக்கிறது</p><p>தமிழில் மொழி பெயர்ப்பு</p><p><span style="color: #2b00fe;">நாமம் தோய்ந்த மூச்சோ ? நாளெல்லாம் நல்லதாச்சு |</span></p><p><span style="color: #2b00fe;">நாமம் சேராத மூச்சோ ? பொழுதெல்லாம் வீணாய் போச்சு ||</span></p><p>2023 ஆம் ஆண்டு நிறைவடைந்து கொண்டிருக்கிறது.</p><p>புதிய வருடத்திலாவது சற்று முன்னேறுவதற்கான சத்சங்கங்களைத் தேடிப் பிடிப்போம்.</p><p>அனைவருக்கும் குரு அருளும் இறையருளும் பெருகட்டும்.</p></div><div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-34896520.post-77996302933842269092022-12-23T16:09:00.000+05:302022-12-23T16:09:20.117+05:30குருவைத் தேடி.....<p>குருவின்றி ஞானம் இல்லை என்பது ஆன்மீகத்தின் அரிச்சுவடி பாடங்களில் ஒன்று. கபீர் தாஸ் அவர்களின் ஒரு ஈரடி இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.</p><p><span style="background-color: white; font-family: Georgia, "Times New Roman", Times, serif; font-size: 18px; text-align: -webkit-center;">कबीरा ते नर अन्ध है, गुरु को कहते और ।</span><br style="background-color: white; box-sizing: inherit; font-family: Georgia, "Times New Roman", Times, serif; font-size: 18px; text-align: -webkit-center;" /><span style="background-color: white; font-family: Georgia, "Times New Roman", Times, serif; font-size: 18px; text-align: -webkit-center;">हरि रूठे गुरु ठौर है, गुरु रुठै नहीं ठौर ॥</span></p><p><span style="color: #cc0000;">மனிதரில் அவனே குருடன், கபீரா, குருவை அறியாதவன் | </span></p><p><span style="color: #cc0000;">அரி முனிந்தால் குருவுண்டு, குரு முனிந்தால் யாருண்டு ||</span></p><p>( அரி = ஹரி ; முனி = கோபம், வெறுப்பு)</p><p>கடவுளே நமது கர்மங்களினால் நம்மீது வெறுப்படைந்திருந்தாலும் குருவானவர் நமக்கு அடைக்கலம் தந்து அவற்றின் கடுமையை தணிக்கச் செய்ய வல்லவர். ஆனால் அத்தகைய குருவிற்கே நம்மீது கோபம் ஏற்பட்டுவிட்டால் அப்போது அந்த கடவுள் கூட துணை வரமாட்டான். அப்படிப்பட்ட குருவை புரிந்து கொள்ள முடியாத மனிதரெல்லாம் குருடருக்கு ஒப்பானவர் என்பதே இதன் பொருள். (ஹிந்தியில் <span style="background-color: white; font-family: Georgia, "Times New Roman", Times, serif; font-size: 18px; text-align: -webkit-center;">ठौर (</span>டௌர்) என்றால் அடைக்கலம். )</p><p>நானும் சில வருடங்களாக எனக்கேற்ற குருவை எப்படிக் கண்டறிவது என்ற சிந்தனையிலேயே காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தேன். சுவாமி ஓம்காரானந்தாவை சென்று சந்திக்க ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அவர் திடீரென்று கோவிட் தொற்றில் சமாதி அடைந்து விட்டார். என் தேடல் தொடர்கிறது.</p><p>சில மாதங்களுக்கு முன்பு ஒரு யூட்யூப் காணொளியில் ஸ்ரீ வி. வி. பிரம்மம் என்பவரை பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.</p><p>ஆந்திராவில் தாடிபத்ரி யில் அவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். சிறு வயதிலிருந்து பஞ்சாட்சிர செபம் செய்து திருவண்ணாமலை ரமணருடைய சமாதி முன் ஆத்ம சாட்சாத்காரம் பெற்றவர். இது நடந்தது அவருடைய இருபத்தியெட்டாம் வயதில். தற்போது 79 வயதாகியுள்ள ஸ்ரீ பிரம்மம் ஒரு விருத்தாஸ்ரமும் அனாதைகளுக்கான இல்லத்தையும் ஸ்ரீ ரமணரின் பெயரில் தன் ஓய்வூதியத்தை மட்டும் நம்பி நடத்தி வருகிறார். யாரிடமும் நிதி கேட்டு செல்வதில்லை. அவருடைய பிள்ளைகளும் மருமகனும் இவைகளை கவனித்துக் கொள்வதில்அவருக்கு பேருதவியாக இருக்கின்றனர்.</p><p><span style="color: #2b00fe;">" அவருடைய சொற்பொழிவை கேட்க அறையில் நுழைந்த உடனே என்னை ஒரு பேரமைதி கவ்விக் கொண்டது. அப்போது இன்னமும் அவர் அறைக்குள் வந்திருக்கவில்லை. சொற்பொழிவிற்குப் பின் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இருந்தது. பலரும் பற்பல கேள்விகளுடன் வந்திருந்தனர். ஆனால் அவர் பேசி முடித்ததும் எல்லோருடைய சந்தேகங்களும் மறைந்து போயின. கேள்விகள் இல்லாமலே அவரவர்களுக்கு தேவையான பதில் கிடைத்திருந்தது. எந்த அமைதியை வாழ்நாளெல்லாம் நான் தேடினேனோ, குருஜியின் சந்திப்பிற்குப் பின் அதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து அனுபவித்தேன்"</span> </p><p>மேற்கண்ட அனுபவத்தை சொல்லியிருப்பவர் "யங்கா" என்னும் செக்கோஸ்லோவேகிய அன்பர். அந்த காணொளியை பதிவின் கடைசியில் காண்போம்.</p><p>இப்படி பலவாறாக தூண்டப்பெற்று அப்பெருமானை சந்தித்து ஆசிகள் பெற்று வரவேண்டும் என்ற நோக்கத்தோடு சென்ற மாதம் 23 ஆம் தேதி புட்டபர்த்தியிலிருந்து கிளம்பி, என் மனைவி மகனுடன், அவருடைய இல்லத்தை சென்றடைந்தோம். அவரை நமஸ்கரித்த பின் அவருடைய முதல் கேள்வி ( எல்லாம் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்)</p><p>" எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்" ? </p><p>" தங்களுடைய ஆசிகளை பெற்றுச் செல்லலாம் என்று....."</p><p>" எங்கிருந்து வருகிறீர்கள் ?"</p><p>"புட்டபர்த்தி "</p><p>"சத்யஸாயியே ஒரு அவதாரம். அவர் சொன்னதை கடைபிடித்தால் போதும். அதைவிட்டு ஏனிப்பிடி சுற்றுகிறீர்கள்? "</p><p> ( அமைதி)</p><p> "ஆசி வேண்டுமென்றால் அதற்கு தகுதி வேண்டுமல்லவா?"</p><p>(பொட்டென்று முகத்தில் யாரோ அறைந்தது போலிருந்தது. )</p><p>" சரி, தியானம் செய்வது உண்டா?"</p><p>"குருஜி, காலை மாலை காயத்ரி செபம் செய்வேன், அடிக்கடி நாமசங்கீர்த்தனம், குருவார பூஜை என்று வீட்டில் ஏதாவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்...."</p><p>"அவைகளெல்லாம் வெறும் மனதை சுத்தப்படுத்துவதற்கே அல்லாமல் அவற்றால் சாட்சாத்காரம் கிடைக்காது. It is all play of the mind . The ego will not go. தியானம் செய்யுங்கள். தினமும் விடாது செய்யுங்கள்" என்று அறிவுறுத்தினார். </p><p>'<i>நமது இயற்கை குணமே ஆனந்தம், ஒரு குழந்தைக்கு உள்ளது போல. யாவும் மனதின் சலனம். அதில் அமைதியை தேடுவதும் அடங்கும்'. </i></p><p><i>காயத்ரி செபம் செய்யும் போது அதன் மூலத்தில் எழும் சப்தத்தை கவனி. </i></p><p><i><span style="color: #38761d; font-size: x-small;">( இதைத்தான் மாணிக்கவாசகர் " ...உய்ய என் உள்ளத்து ஓங்காரமாய் நின்ற மெய்யா " என்று சிவ புராணத்தில் கூறுகிறாரோ !)</span></i></p><p> என்று பலவாறான விளக்கங்களை தந்து நாற்பது நிமிடங்களை எங்களுக்காக ஒதுக்கினார். நேரம் மதியம் 2:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. </p><p>விடைபெறும் முன் என் மனைவிக்கு மட்டும் சுமார் பத்து நிமிடங்கள் தலை மீது கையிட்டு தியானத்தின் அமைதியை உணர்த்தினார்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWQx-a4bFRd7eiX9ArUjxa7gdSpQcQVMPlKeu86NRDH1FnwW966QUcyDQk9ht0dBUoyINxvs6ifIfLe1ik2DZG9ZC3hEErGtpvOK6agBpDu0u3t4-y2dkYYQVe2UX226nF6iCbaH80xpcwbv7Oi20o5g-Xe3bxw0NtHxK3UAdCYDKIigztiA/s1152/IMG-20221223-WA0044.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="532" data-original-width="1152" height="148" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWQx-a4bFRd7eiX9ArUjxa7gdSpQcQVMPlKeu86NRDH1FnwW966QUcyDQk9ht0dBUoyINxvs6ifIfLe1ik2DZG9ZC3hEErGtpvOK6agBpDu0u3t4-y2dkYYQVe2UX226nF6iCbaH80xpcwbv7Oi20o5g-Xe3bxw0NtHxK3UAdCYDKIigztiA/s320/IMG-20221223-WA0044.jpg" width="320" /></a></div><p> அது அவர் விடாது செய்து வரும் குருவார குரு பூஜையின் பலன் என்று நான் நினைத்துக் கொண்டேன். ( எனக்குத்தான் தகுதி இல்லையென்பதை ஆரம்பித்திலேயே உணர்த்தி விட்டாரே) .</p><p>அவரை நமஸ்கரித்து விடைபெற்ற பின் அவருடைய இல்லத்திலிருந்து நான்கைந்து கி மீ தூரத்திலிருந்த ஆஸ்ரமத்திற்கு ஒரு உதவியாளர் அழைத்துச் சென்று எங்களுக்கு மதிய உணவு அளித்தார். பெண்ணாற்றங்கரையில் அமைந்த அந்த ஆசிரமத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர். நூறு சிறுவர் சிறுமியரை தினமும் பாலித்தல் வேண்டும் என்றால் இறைவனுடைய சங்கல்பம் இல்லாமல் முடியாது. </p><p><span style="color: #990000;">மனதை ஒதுக்கி இதயத்தால் (அன்பினால்) மட்டுமே சாட்சாத்காரம் கிட்டும் என்பதை காணொளி நேர்காணலிலும் அவர் வலியுறுத்துவதைக் காணலாம்.</span></p><p>இந்த நிலையை அடைவதற்குத்தான் ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற பக்தியும் சரணாகதியும் தேவைப்படுகிறது. <span style="color: #990000;"> </span></p><p>முழுவதுமாக பாருங்கள் </p>
<iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/69ksmfPZyME" title="YouTube video player" width="560"></iframe>
<div><br /></div><div><span style="color: #2b00fe;">எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் </span></div><div><span style="color: #2b00fe;"> தம்முயிர் போலெண்ணி உள்ளே</span></div><div><span style="color: #2b00fe;">ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார், </span></div><div><span style="color: #2b00fe;"> யாவர் அவர் உளம் தான்</span></div><div><span style="color: #2b00fe;">சித்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்</span></div><div><span style="color: #2b00fe;"> இடமென நான் தெரிந்து கொண்டேன்</span></div><div><span style="color: #2b00fe;">அவ்வித்தகர் தம் அடிக்கு ஏவல் புரிந்திட </span></div><div><span style="color: #2b00fe;"> என் சிந்தை மிக விழைந்ததாலோ</span>- அருட் பிரகாச வள்ளலார்.</div><div><br /></div><div>Those who are interested can also see more videos at his <a href="https://www.youtube.com/@vvramanamahesh/featured" target="_blank">Youtube Channel </a></div><div><br /></div><div>அனைவருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்த்துகள்</div><div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-34896520.post-43537042864565785982022-08-06T11:09:00.000+05:302022-08-06T11:09:42.454+05:30 காக்கையில் காண்பார் அப்பனை<p style="text-align: justify;"> உலக வாழ்க்கையில் பெரும்பாலும் நமது பேச்சும் நடத்தையும் முரண்படும் போது நகைப்பிற்கு இடம் கொடுக்கிறோம். அனைத்து கேலி சித்திரங்களும் -அரசியலாகட்டும், சமூக நடப்புகளாகட்டும்- இந்த முரண்பாட்டை சுற்றியே எழுகின்றன. குழந்தைகள் எதிர்பாராதபோது உண்மைகளை போட்டுடைக்கும் போது எழும் தர்மசங்கடங்களும் சிரிப்பை வரவழைப்பனவே.</p><p style="text-align: justify;">வழிவழியாக வரும் நம்பிக்கைகளை அதன் தாத்பரியம் அறியாத மக்கள் கடைபிடிக்கும் போது அறியாத சிறு குழந்தைகள் போல் ஆகி விடுகின்றனர். ஒரு நிலையில் அவர்களின் செய்கை மூட நம்பிக்கை என்ற நிலைக்கு ஆளாகிறது. </p><p style="text-align: justify;">உதாரணத்திற்கு கபீர் ஒரு பாடலில் சொல்வார் <span style="color: #cc0000;">"கங்கையில் மூழ்குவது மோட்சம் என்றால் காசியின் எல்லா காகங்களுக்கும் மோட்சம் சுலபமே"</span> என்று கேலி செய்வார். </p><p style="text-align: justify;"> இங்கே அவர் கங்கையின் புனிதத்தைப் பற்றி கேலி செய்வதாகக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர் ஒரு ஞானி. அவர் கண்டிப்பாக ரிஷி முனிகளின் வாக்கில் தவறு இருப்பதாக சொல்ல மாட்டார். அப்படியானால் அவர் சொல்ல வருவது என்ன?</p><p style="text-align: justify;"> <span style="color: #2b00fe;">இதை விளக்க ஒரு கதை உண்டு. </span></p><p style="text-align: justify;"><span style="color: #2b00fe;">பார்வதி தேவிக்கும் இதே சந்தேகம் வந்தது. "கங்கையில் நீராடுபவர்கள் எல்லோருக்கும் பாவங்கள் கரைந்து விடுமா?" என்று கேட்கிறாள். " சரி வா ! அதையும் பரீட்சை செய்யலாம் " என்று சொல்லி இருவரும் காசியை அடைந்தனர்.</span></p><p style="text-align: justify;"><span style="color: #2b00fe;"> சிவன் கங்கை கரையில் ஒரு குஷ்ட ரோகியாய் வேஷம் எடுத்து படுத்திருக்க பார்வதி அவன் மனைவியாய் நாடகம் ஆடினர். கங்கைக்கு வருவோர் போவோரையெல்லாம் தன் கணவருக்கு 'பாவங்களை கழுவும்; ;கங்கையில் நீராட உதவ வேண்டுமாறு வேண்டிக் கொண்டாள். நூற்றுக்கணக்கான பேர் அவர்களை பொருட்டாகவே கருதவில்லை. ஒரு சிலர் கேலி செய்து கொண்டே சென்றனர். இன்னும் பலர் உதட்டளவில் அனுதாபம் காட்டினர். ஆனால் யாரும் அவரை நதி வரையில் தூக்கிச் செல்லவோ நீராட்டவோ முன் வரவில்லை. எங்கோ சென்று கொண்டிருந்த ஒரு கீழ் நிலை மனிதன் அவர்கள் மேல் அனுதாபம் கொண்டு அந்தரோகியின் கங்கையில் நீராடும் விருப்பத்தை நிறைவேற்றி அவர்களை வணங்கிச் சென்றான்.</span></p><p style="text-align: justify;"><span style="color: #2b00fe;">அப்போது சிவபெருமான் தேவியிடம் கூறினார் "இவ்வளவு ஜனங்களில் மோட்சத்தை பெறப் போவது இவன் மட்டுமே. ஜீவகாருண்யம் இரக்கம் போன்ற பண்புகளுடன் விருப்பு வெறுப்பற்றவன், மேன்மேலும் பாவ செயல்களை செய்யாதவன் இவர்களுக்கு மட்டுமே மோட்சம் சித்திக்கும். அநேகம் பேர் இதை ஒரு குருட்டு போக்கில் சித்த சுத்தியின்றி செய்வதால் அவர்களுக்கு எவ்வித பயனும் இருப்பதில்ல. மேலும் சிலர் வெளி பகட்டாகக் காட்டிக் கொள்கின்றனர் " என்று துவங்கி உண்மையான பக்தனுக்கு தேவையான குணங்களைப் பற்றி மிகவும் விஸ்தாரமாக விளக்கியதாக கதை செல்கிறது.</span></p><p style="text-align: justify;">இந்த அடிப்படைத் தகுதியை மக்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கபீர்தாஸ் போன்ற ஞானிகள் இடித்துரைக்கின்றனர்.</p><p style="text-align: justify;">அது போன்றே இன்னொரு இடித்துரை கபீர் சொல்வதும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.</p><p>जिंदा बाप कोई न पुजे, मरे बाद पुजवाया | </p><p><span face="Helvetica, Arial, sans-serif" style="background-color: white; color: #1d2129;">मुठ्ठी</span> भर चावल लेके, कौवे का बाप बनाया || </p><p><br /></p><div class="separator" style="clear: both; text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg31b69leNes-lpnXfu7kPOWYiTUNxi-uJ9bOVi9O-OnxyPxQr7vgOuLjfSTZSIdas16qo2Su1wJgrU0cjX75hqjUe1fSSDpn327EGWaUNqHlKV9HiNefIflasMYwdGZm_AWJ6vp5qjv6Kc9C6C6z9O9rmvK0CkGtkLgAz2O-wZh7qz8d6J5g/s259/pitru_paksh-2.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="194" data-original-width="259" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg31b69leNes-lpnXfu7kPOWYiTUNxi-uJ9bOVi9O-OnxyPxQr7vgOuLjfSTZSIdas16qo2Su1wJgrU0cjX75hqjUe1fSSDpn327EGWaUNqHlKV9HiNefIflasMYwdGZm_AWJ6vp5qjv6Kc9C6C6z9O9rmvK0CkGtkLgAz2O-wZh7qz8d6J5g/w320-h240/pitru_paksh-2.jpeg" width="320" /></a></div><br /><p></p><p><span style="color: #cc0000;">அப்பனை வாழ்க்கையில் மதியார், </span><span style="color: #cc0000;">அவர் மரித்த பின்வழி படுவரே |</span></p><p><span style="color: #cc0000;">அங்கை நிறைய சோறெடுத்து </span><span style="color: #cc0000;">காக்கையில் அப்பனைக் காண்பரே ||</span></p><p><span style="color: red;"><b>மாற்று </b></span>:</p><p><span style="color: #cc0000;">அப்பன் வாழும் போது மதியார், </span><span style="color: #cc0000;">அவர்மரித்த பின்வழி படுவரே |</span></p><p><span style="color: #cc0000;"> அப்பனை காக்கை யாக்கி, </span><span style="color: #cc0000;">கைநிறைய அமலை படைப்பரே ||</span> </p><p><span style="font-size: x-small;">{அமலை : வெண்சோறு, சோற்றுத் திரள் )</span></p><p>நம்முடைய முன்னோர்களுக்கு ஈமக்கடன் ( சிராத்தம்) செய்வது என்பது காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. சங்க இலக்கியங்கங்களிலும் காலமான முன்னோர்களை 'தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை தலையானது. </p><p>திருவள்ளுவரும் </p><p><span style="color: blue; font-family: verdana, sans-serif;">தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு</span><br style="-webkit-tap-highlight-color: transparent; color: blue; font-family: verdana, sans-serif;" /><span style="color: blue; font-family: verdana, sans-serif;">ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)</span></p><p><span style="font-family: verdana, sans-serif;">என்று அன்றாடக் கடமைகளில் முதலிடம் முன்னோர்களுக்குத் தருகிறார்.</span></p><p><span style="font-family: verdana, sans-serif;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: verdana, sans-serif;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhopZ86G_2v0Upr_5cVfPkQsQ-uW3o0yHJvhQd019DecaV7uoizLer2I0CDEiB4XKRuL-egr9ZzWMTtF1QgbHSpglSxqV3JPwNCiSJ1EQ4E7eBwNfb0QUhPpcsTi8MEeHi_EvMUynFBceNF8hGkzLFoxSmioizI_j1Gtux7Uhnv9SvsSX05zQ/s915/IMG-20220805-WA0028.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="915" data-original-width="684" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhopZ86G_2v0Upr_5cVfPkQsQ-uW3o0yHJvhQd019DecaV7uoizLer2I0CDEiB4XKRuL-egr9ZzWMTtF1QgbHSpglSxqV3JPwNCiSJ1EQ4E7eBwNfb0QUhPpcsTi8MEeHi_EvMUynFBceNF8hGkzLFoxSmioizI_j1Gtux7Uhnv9SvsSX05zQ/s320/IMG-20220805-WA0028.jpg" width="239" /></a></span></div><span style="font-family: verdana, sans-serif;">படைத்தல் அல்லது நிவேதனம் என்பது நமக்குள்ளே ஒரு பொறுப்புணர்ச்சியை தூண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சடங்கு என்பதை புரிந்து கொண்டால் அதன் முக்கியத்துவம் புரியும். நன்றி உணர்ச்சி பெருகும் இடத்தில் மட்டுமே சண்டை சச்சரவுகள் இன்றி அமைதி இருக்கும். ஒரு சிறு குடும்பமோ, நாம் சார்ந்த சமூகமோ ,வசிக்கும் நாடோ எதுவானாலும் நம்முடைய மகிழ்ச்சிக்கும் வளமைக்கும் இந்த நன்றி உணர்ச்சியே அடிப்படையாகிறது. அது மனதில் குடிகொள்ளும்போது சுயநலம் மறைகிறது, விட்டுக் கொடுக்கும் பண்பு வளர்கிறது.</span><p></p><p><span style="font-family: verdana, sans-serif;">சூரியனுக்கு நன்றி சொல்ல பொங்கல் படைக்கிறோம். சூரியன் வந்து சாப்பிடுகிறானா என்ன என்று கேள்வி கேட்பவர்களுக்கு பரமாச்சாரியர் சொல்கின்ற அழகான பதிலை பாருங்கள்.<br /></span></p><p><span style="font-family: verdana, sans-serif;">பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுப்புள்ள குடிமக்களாக வளர்ப்பது சமூகத்திற்கு ஆற்றும் கடன். அதற்காக அவர்கள் மேற்கொண்ட கஷ்ட நஷ்டங்களை எண்ணிப்பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்வதற்கான சடங்கே சிரார்த்தம். ஆனால் அவர்களின் முதிய காலத்தில் கவனிக்காமல் புறக்கணித்து முதியோர் இல்லங்களில் தனிமையில் கழிக்கவிட்டு அவர்களின் மரணத்திற்குப் பின் செய்யப்படும் ஈமக் கடனை நன்றி சொல்வதாக பொருள் கொள்ள முடியுமா என்ன? </span></p><p><span style="font-family: verdana, sans-serif;">இந்த பிரச்சனை இன்று நேற்றல்ல கபீர்தாஸரின் காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பது அவருடைய மேற்கண்ட ஈரடியில் விளங்குகிறது.</span></p><p><span style="font-family: verdana, sans-serif;">கபீர், தயானந்தர், விவேகானந்தர், நாராயண குரு என்று எவ்வளவு சமூக சீர்திருத்தவாதிகள் வந்த போதிலும் மனிதர்கள் போக்கில் பெரிதாக மாற்றம் தெரிவதில்லை. ஒருவேளை அவர்கள் இல்லாமல் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகப் போயிருக்குமோ என்னமோ !! </span></p><p><span style="font-family: verdana, sans-serif;"><br /></span></p><div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-34896520.post-68956334856118113232021-12-25T18:25:00.001+05:302021-12-25T18:29:27.044+05:30அவ்வியம் பேசி அறங்கெடுதல்<p> இன்று கிருஸ்மஸ் தினம். 2021 ஆம் ஆண்டும் நிறைவு பெறப் போகிறது. இரண்டு வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக தளர்ந்து போன உலக மக்கள் சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.</p><p> ஓரளவுக்கு இந்த வைரஸ், மனிதருக்கு அவர்களுடைய ஆற்றல்களின் எல்லையை சுட்டிக் காட்டியுள்ளது. இயற்கையை வெல்ல வேண்டும் என்னும் போதெல்லாம் அவர்களுடைய தலையில் ஒரு குட்டு வைக்கப்படுகிறது.</p><p>மனிதனுக்கு வேண்டியது பணிவு, நன்றியுணர்ச்சி.</p><p>இதை அவன் மறக்கும் போது அவன் அழிவை நோக்கிப் பயணக்கிறான் என்றே பொருள் கொள்ள வேண்டும். எப்போது தன்னம்பிக்கை அதிகமாகி ஆணவம் தலையெடுக்குமோ அப்போது இந்த நோய் ஆரம்பிக்கிறது.</p><p>இதன் முதல் அறிகுறி பிறரிடம் குறை அல்லது குற்றம் காண்பது. </p><p>"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" ஔவையாரின் முது மொழி. </p><p>விவிலியத்தில் இதைப் பற்றிய மிக முக்கியமான எச்சரிக்கை அடிக்கடி மேற்கோள் காட்டப் பெறுகிறது.</p><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEieSnJlLpcuJGuaYKQPS9j0dqyfmNU61zzdk7-IAYfyBJnC2PywOawSJpzZHbbwsA7vNl1KzSQXu7zCywi8qOCePLzePX3CBJZ6-cH67oAv_exHMbIwz8ezQE_rdi1pxoJKUVrmmXD2bGv2w99yNqBASDN7hnrPRRtLq9cfG4PXtHW64otSSA=s454" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="454" data-original-width="317" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEieSnJlLpcuJGuaYKQPS9j0dqyfmNU61zzdk7-IAYfyBJnC2PywOawSJpzZHbbwsA7vNl1KzSQXu7zCywi8qOCePLzePX3CBJZ6-cH67oAv_exHMbIwz8ezQE_rdi1pxoJKUVrmmXD2bGv2w99yNqBASDN7hnrPRRtLq9cfG4PXtHW64otSSA=s320" width="223" /></a></div><br /> <b><span style="color: #2b00fe;">"பிறரை ஒரு விரலால் சுட்டும் பொழுது மூன்று விரல்கள் உன்னை சுட்டுகின்றன என்பதை நினை"</span></b><p></p><p>குற்றம் குறைகள் இல்லாதவர் எவரும் இருக்க முடியாது; தன்னைத் திருத்திக் கொள்ள முயல்பவனுக்கு பிறர் குற்றங்கள் பெரிதாகத் தெரியாது என்பதே இதன் மூலம் சொல்லப்படுகிறது.</p><p>மேலும் ஜீஸஸ் சொல்லுவார்.</p><p><span style="color: #2b00fe;">" ஒருவரை ஒருவர் எடை போட்டு குற்றங் காணாதீர். கடவுளின் ஆணைகளை பின்பற்றுவோர் எவரும் பிறர் குறைகளை பேசுவதில்லை. அது அந்தக் கடவுளின் ஆணையையே, கடவுளையே, குற்றம் சொல்வதாகும். எப்போது குற்றங்களை பேசுகிறீர்களோ அப்போதே அவன் ஆணையை மீறினவர்கள் ஆவீர்கள். கடவுள் ஒருவரே சட்டம் இயற்ற வல்லவர் தீர்ப்பும் சொல்லக் கூடியவ்ர். இதில் நீங்கள் யார் உடனிருப்பவர்களை குறை சொல்ல? " (மத்தேயு 7:1)</span></p><p><span style="color: #2b00fe;">" .......நீ பிறரை குற்றம் பார்க்காவிட்டால் கடவுளும் உன் குற்றங்களை பொருட்படுத்தமாட்டார். பிறரை மன்னித்து விடு. கடவுளும் உன்னை மன்னிப்பார். பிறருக்கு தானம் செய். உன்னுடைய அளவையிலேயே பலமடங்கை திருப்பி அவர் அளிப்பார் " ( ல்யூக் 7-37-38)</span></p><p> இதே கருத்தை கபீரும் தம்முடைய ஈரடி ஒன்றில் உரைக்கிறார்.</p><p><span style="font-size: medium;"><span face="Arial, Helvetica, sans-serif" style="background-color: white; color: #010101;">दोस पराए देखि करि, चला हसन्त हसन्त |</span><br style="background-color: white; color: #010101; font-family: Arial, Helvetica, sans-serif;" /><span face="Arial, Helvetica, sans-serif" style="background-color: white; color: #010101;">अपने याद न आवई, जिनका आदि न अंत ||</span></span></p><p><span style="color: #cc0000;">பிறன்தன் குறைகள் பேசி எள்ளி எள்ளி நகைப்பரே | </span></p><p><span style="color: #cc0000;">மறந்தும் தம் குறை நினையார், அதற்கு ஆதி யந்த மிலையே ||</span></p><p>இந்த உண்மையை உணர்ந்த ஆன்மீக அருளார்கள் தம்மை எப்போதும் உயர்த்தி கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் இறைவனை முழுதும் நம்பி இருப்பவர்கள். அவனுடைய படைப்பில் குற்றம் குறைகள் இருப்பதாக அவர்கள் நம்புவதில்லை. ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு தான் அந்த கடவுளின் நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்னும் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். </p><p><span style="color: #2b00fe;">நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்</span></p><p><span style="color: #2b00fe;">ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி ( 308)</span> </p><p>என்று அருட்பிரகாச வள்ளலார் தம் தகுதி இன்மையை அருட்பெருஞ்சோதி அகவலில் பாடுகிறார்.</p><p>அப்படி இருந்தும் அவன் ஆட்கொள்ளத் தயாராக இருக்கிறானே என்பதையும் நினைந்து போற்றுகிறார்.</p><p><span style="color: #2b00fe;">கூற்று உதைத்து என்பால் குற்றமும் குணம் கொண்டு </span></p><p><span style="color: #2b00fe;">ஆற்றன் மிக்கு அளித்து அருட்பெருஞ்சோதி </span></p><p>என்று இறைவனின் பெருங்கருணையை போற்றுகிறார்.</p><p>பணிவுடையவனையே இறைவன் எப்போதும் இறைவன் விரும்புகிறான். அதனால் தான் மாணிக்கவாசகருக்கும் தானே ஒரு வேதியர் வடிவில் வந்து அவருக்காக திருவாசகத்தை எழுதி அருளினார். சுமார் முப்பது பாடல்களில் தன்னை நாயினும் கடையனாக பாவித்து தனக்கு அருள் செய்த சிவன் பெருமையை பாடுகிறார்.</p><p><span style="color: #2b00fe;">நாயிற் கடைபட்ட நம்மையும் ஒரு பொருட்படுத்து</span></p><p><span style="color: #2b00fe;">தாயிற் பெரிதும் தயாவுடைய தம்பெருமான் </span></p><p><span style="color: #2b00fe;">மாயப்பிறப்பு அறுத்தாண்டான் என் வல்வினையின்</span></p><p><span style="color: #2b00fe;">வாயிற் பொடி அட்டி பூவல்லிக் கொய்யாமோ - </span>( திருப்பூவல்லி )</p><p>ஒருவன் தன்னுடைய நிறைகுறைகளை ஆராயத் தலைப்பட்டால் , கபீர் சொல்வது போல் முடிவில்லா குறைகளே அதிகம் காணப்படும். விளைநிலத்தில் தோன்றும் களைகள் போன்றவை அவை. அதற்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.</p><p> வினைப்புலமாகிய இப்பிறவியில், களைகளை களையக் களைய மீண்டும் மீண்டும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கும், இந்த களையும் முயற்சியில் பணிவு உள்ளம் கொண்டவன் மட்டுமே ஈடுபட்டிருப்பான். அவனுக்கு பிறரது குறைகளை பேச நேரம் ஏது?</p><p>அம்முயற்சியின் பயனாக அவன் மீது எல்லையில்லாக் கருணை கொண்டு -வள்ளல் பெருமான் சொல்வது போல் - அவனுடைய குற்றங்களையும் குணமாகவே கொண்டு இந்த மாயப் பிறப்பை அறுத்து அவனை ஆட்கொள்ள முன் வருகிறான் இறைவன்.</p><p>செய்யக்கூடாதவற்றை பட்டியலிடும் போது திருமூலர் சொல்வது அவ்வியம் பேசாதீர் என்பதே. அவ்வியம் என்றால் பிறரது குற்றங் குறைகளை அலசுவது. அதனால் செய்கின்ற அறங்கள் போய் பாவம் வரும் என்கிறார்.</p><p><span style="color: #2b00fe;">அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்</span></p><p><span style="color: #2b00fe;">வெவ்வியனாகி பிறர்பொருள் வவ்வன்மின்</span></p><p><span style="color: #2b00fe;">செவ்வியனாகிச் சிறந்துண்ணும் போது ஒரு</span></p><p><span style="color: #2b00fe;">தவ்விக் கொடுண்மின் தலைபட்ட போதே</span> - திருமந்திரம் </p><p><span style="color: red;">பிறரைப் பற்றி புறங்கூறி பாவத்தை தேடிக் கொள்ளாதீர்கள்.</span></p><p>தீய குணம் கொண்டு பிறர் பொருளுக்கு ஆசைப் படாதீர்கள்</p><p>உண்ணும் போது மற்றவர்கட்கு கொடுத்து உண்ணும் நல்ல பண்பை பேணுங்கள்</p><p>இவற்றை செய்தால் நீங்கள் நலமாக வாழ்வீர்கள். பிறருக்கு நன்மை செய்தால் இறைவன் நமக்கு நன்மை செய்கிறார்- இதுவே உலக நியதி.</p><p><span style="color: #2b00fe;">அனைவருக்கும் கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.</span></p><p><br /></p><p> </p><p><br /></p><p><br /></p><p><br /></p><p><br /></p><div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-34896520.post-53469068104045623272021-07-24T16:49:00.007+05:302021-07-25T07:09:30.393+05:30சத்குருவிடம் சரணாகதி <p> இன்று குரு பூர்ணிமை. (24 ஜூலை 2021)</p><p>குருவின் பெருமைகளை போற்றாத ஞானிகளே இருக்க முடியாது. கபீரின் குருபக்தியையையும் நாம் பல கட்டுரைகளில் கண்டிருக்கிறோம். </p><p>இன்றைக்கும் ஒரு ஈரடியில் அவர் கூறுவதைப் பார்ப்போம்.</p><p><span style="color: #cc0000; font-size: medium;"><span face="-apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif" style="background-color: white;">यह तन विष की बेलरी</span> , <span face="-apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif" style="background-color: white;">गुरु अमृत की खान |</span></span></p><p><span style="font-size: medium;"><span face="-apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif" style="background-color: white;"><span style="color: #cc0000;">सीस दिये जो गुर मिलै, </span></span><span face="-apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif" style="background-color: white;"><span style="color: #cc0000;">तो भी सस्ता जान </span> ||</span></span></p><p><span face="-apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif" style="background-color: white;"><i>இந்த உடல் ஒரு விஷப்பை. இதனுள் மதம், மாச்சரியம், காமம், லோபம் போன்ற நச்சுப் பொருட்கள் நிரம்பி உள்ளன. ஆனால் ஞானியோ ஒரு அமிர்த சுரங்கம். அவர் அந்த விஷங்களையெல்லாம் எல்லாம் நீக்கக் கூடிய மருந்து வைத்திருக்கிறார். </i></span><i style="font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif;">அவர் மட்டும் அருள் செய்வாரானால் உன்னுடைய உயிரையும் (தலையையும்) அவரிடம் ஒப்படைத்து விடு. </i><i style="font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif;">அப்படி ஒரு குரு கிடைப்பதற்கு நீ கொடுக்கும் அந்த விலை கூட மிக மிக மலிவே என்பதை உணர்ந்து கொள் என்கிறார், கபீர்தாஸ். </i></p><p><span face="-apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif">கபீர்தாசரைப் போலவே நாமசெபத்தின் பெருமையை மகாராஷ்ட்ராவில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகவும் எடுத்துச் சொல்லி மக்களை நல்வழி படுத்திய பிரசித்தமான ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ ஸ்ரீ பிரம்ம சைதன்யர். அவர் கோண்டாவாலே என்ற ஊரை சேர்ந்தவராதலால் </span><i style="font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif;">கோண்டாவாலேகர் என்றும் அறியப்படுகிறார். </i></p><p><i style="font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif;">அவரைப்பற்றி மேலும் அறிய இணைய தளத்தின் <a href="https://shrigondavalekarmaharaj.org/maharaj/home.html" target="_blank">இணைப்பில் காணலாம் </a></i></p><p><i style="font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif;"><span style="color: #cc0000;"><b>சுவாமி பிரம்ம சைதன்ய மஹராஜ் -கோண்டாவாலேகர் </b></span> (19-02-1845 ; 23-12-1913) அவருடைய சொற்பொழிவு ள் அடங்கிய புத்தகத்திலிருந்து இன்றைய தேதியில் தரப்பட்டிருக்கும் </i><i style="font-family: -apple-system, BlinkMacSystemFont, "Segoe UI", Roboto, Oxygen-Sans, Ubuntu, Cantarell, "Helvetica Neue", sans-serif;">கட்டுரையின் தமிழாக்கம் . இதை இந்த வருடத்து குரு வாணியாகக் கொள்வோம்.</i></p><span style="color: #2b00fe;"><b><u>நிபந்தனையற்ற சரணாகதி</u></b></span><div><span style="color: #2b00fe;"><br /></span></div><div><span style="color: #2b00fe;"> வாழ்க்கை நடத்துவதற்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் யாராவது தனக்கு திருப்தி அளிக்கும் வகையில் வருமானம் உள்ளது என்று சொன்னது உண்டா ? உண்மையில் கிடையாது. நான் கேட்பதெல்லாம் முடியாத இலட்சியத்திற்காக கஷ்டப்படுபவர்கள், கடவுளுக்காக -ஆனந்த வாரியாக திகழ்பவரை - அடைய ஏன் கஷ்டப்படக்கூடாது?</span></div><div><span style="color: #2b00fe;"><br /></span><div><div class="separator" style="clear: both; font-size: small; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfJBujfwTBQDKLfZ648SyY0K56dwpCJPZuBmEkaDPJYr_sxUY3ZaAyvlnqxKilJkJ0pvJJcyTSEokyKPpCn15mx4ijHV72_ydFssSDQKwSvzMttdLsZ50U1IRLOkOwyQDY1lvp/s352/images+%25281%2529.jpeg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="352" data-original-width="259" height="334" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfJBujfwTBQDKLfZ648SyY0K56dwpCJPZuBmEkaDPJYr_sxUY3ZaAyvlnqxKilJkJ0pvJJcyTSEokyKPpCn15mx4ijHV72_ydFssSDQKwSvzMttdLsZ50U1IRLOkOwyQDY1lvp/w246-h334/images+%25281%2529.jpeg" width="246" /></a></div><span style="color: #2b00fe; font-size: x-small;"> </span><span style="color: #2b00fe; font-size: small;">தபஸ்விகள் சொன்ன மார்க்கத்தில் ஒரு சரியான முயற்சி செய்து பார். ஒரு சத்குருவை கண்டு திடமான நம்பிக்கையுடன் அவர் சொல்லும் சாதனையை செய். சத்குருவை ஸ்தூல வடிவில் சந்திக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. குருவும் கடவுளும் வேறல்ல. அவர் சொல்லி வைத்திருக்கும் சாதனை பயிற்சிகளை நம்பிக்கையுடன் செய்து வர வேண்டும். அது கண்டிப்பாக கடவுளிடம் இட்டுச் செல்லும். எந்த சத்குருவும் சொல்லும் ஒரே பயிற்சி நாமஸ்மரணை ஆகும். அதை முழு மனத்துடன் விடாது பழக வேண்டும். எவர் உண்மையாக முயற்சிக்கிறாரோ அவருக்கு முன்னேற படிகள் தாமாக கைகூடும். உண்மையான சாதகன் கர்த்தா பாவனை இல்லாமல் சத்குருவிடம் முழு சரணாகதி அடைந்து சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பான்.</span></div><div><span style="color: #2b00fe;"><br />இறைவனுக்காக தணியாத ஆர்வம் இருப்பது மிகப் பெரிய கொடுப்பினை. அப்பேர்ப்பட்ட உண்மையான சாதகனை காணும் சத்குரு பெரு மகிழ்ச்சி அடைவார். ஸ்ரீராமச்சந்திரர் வசிஷ்டரை அணுகியபோது அத்தகைய மகிழ்ச்சி வசிஷ்டருக்கு ஏற்பட்டது.<br /><br />எல்லா தபஸ்விகளும் தத்தம் குரு சொன்ன வழியை கடைபிடித்து தமது இஷ்ட தேவதா வடிவங்களில் சாட்சாத்காரம் அடைந்தவர்களே. அதனால் நாமும் நாமஸ்மரணையில் ஆழ்ந்து விட வேண்டும். தன் குழந்தை சிரித்துக் கொண்டே இருக்கும்போது விளையாடி மகிழும் தந்தை அது அழ ஆரம்பிக்கும் போது அதன் தாயிடம் ஒப்படைக்கிறான். அவளும் பல விதமாக அதை சமாதானப்படுத்தி அதன் மனக்குறையை போக்குகிறார். தபஸ்விகள் தாயைப் போலே. கடவுளும் தந்தையைப் போல் நடந்து கொள்கிறார்.<br /><br />பனிக்கட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து விடு பின் எஞ்சுவது எதுவுமில்லை. தபஸ்விகள் அன்பே வடிவானவர்கள். கடவுளின் பிரேமை வடிவே அவர்கள். அவர்களுடன் சத்சங்கம் கொள்வதே முக்திக்கான ராஜபாட்டை. அவர்கள் சொற்படி நடப்பதே சத்சங்கம் என்பதின் முழு பொருளாகும். அதன் பயன் என்னவென்றால் பக்தனின் மனது பரிசுத்தம் ஆகிவிடும். </span></div><div><span style="color: #2b00fe; font-size: x-small;"><br /></span></div><div><span style="color: #2b00fe; font-size: x-small;">--------------------------------------------------------------------------------------</span><span style="font-size: x-small;">-</span></div><div><span style="font-size: x-small;"> </span><span>இப்போது கபீரின் ஈரடியை தமிழில் காண்போம் </span></div><div><span><br /></span></div><div><span style="color: #990000;"><b>நச்சுப் பையாம் இத்தேகம் , வற்றா அமிழ்தமே குருகாண் |</b></span></div><div><span style="color: #990000;"><b>சிரம் தருவதால் குரு கிட்டின் , அவ்விலையும் மலிவே காண் ||</b></span></div><div><span style="color: #990000;"><b><br /></b></span></div><div><span>கபீர், குருவின் ஞான இருப்பை ஒரு சுரங்கத்திற்கு உவமையாக்கியிருக்கிறார் . தமிழாக்கத்தில் அதை வற்றாத ஊற்றுக்கு ஒப்பிட்டிருக்கிறேன். </span></div><div><span><br /></span></div><div><span>சத்சங்கத்தை ஒரு சாயி பஜனுடன் நிறைவு செய்வோம் . வாசகர்கள் அனைவருக்கும் குரு அருள் பெருகட்டும் என்று பிரார்த்திக்கிறேன்</span><span style="font-size: x-small;">. </span></div><div><span style="font-size: x-small;"><br /></span></div><div><span style="font-size: x-small;"> </span></div><div><span style="color: #2b00fe; font-size: x-small;"><br /></span></div>
<iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/uAbX3XllP3Q" title="YouTube video player" width="560"></iframe></div><div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-34896520.post-58430896653853425892020-07-16T15:21:00.004+05:302020-07-17T20:28:05.163+05:30மனம் வெளுக்க வழியுண்டு <span style="mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span><div> எல்லோரையும் எல்லாக் காலத்தும் திருப்தி செய்ய இயலாது. அது வீடாகட்டும் வியாபாரமாகட்டும் அல்லது முக்கிய பொறுப்புள்ள அதிகாரம் ஆகட்டும் நம்மைச் சுற்றி அதிருப்தியாளர்கள் இருக்கவே செய்கின்றனர். அப்போது பலரிடமும் ஏச்சுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதை எதிர் கொள்வது எப்படி.? </div><div>வீட்டளவில் குடும்பத்தலைவன் கண்டிப்புக் காட்டி பிறர் வாயை அடக்கி விடலாம். அவனே அலுவலகத்தில் தன்னுடன் பணி செய்பவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு எதிர்பார்ப்பைவிட குறையும் போது நிர்வாகத்தை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது அவர் விளக்கப் பேச்சைக் கேட்பவரும் உண்டு ஏற்காமல் ஏசுபவரும் உண்டு. வாங்கிய பொருளில் குற்றம் காணும் போது தயாரித்த கொழிலகம் எங்கோ இருக்க வேறொரு மூலையில் சர்வீஸ் அதிகாரி நுகர்வோரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பார். இது யாவருக்கும் உள்ள அன்றாடப் பிரச்சனை.</div><div> </div><div>சென்ற வருடம் மாணவர்களுடனான கலந்துரையாடலில் நமது பிரதமரிடம் கடினமாக உழைக்கும் அவர் புத்துணர்ச்சியோடு காணப்படுவதின் ரகசியம் என்ன என்ற கேள்வியை ஒரு மாணவன் எழுப்பினான். ‘நான் தினமும் மருந்து சாப்பிடுவதில்லை நிறைய வசவுகளை சாப்பிடுகிறேன் ( “கோலி நஹி, பஹுத் காலி காத்தா ஹூ” ; கோலி என்றால் மாத்திரை காலி என்றால் வசவு ) என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே வேடிக்கையாக பதில் சொன்னார். </div><div><br /></div><div>இந்த எதிர்ப்புகள் தான் ஒருவரின் சுய சோதனைக்கு வாய்ப்பாகும்.</div><div><br /></div><div>.நிர்வாக மேலாண்மைப் பற்றி பேசும் போது திரு நாராயணமூர்த்தி, ஒரு தலைவர் எப்படி தம்மை மேன்மை படுத்திக் கொள்ளமுடியும் என்றால் அவர் தன் எதிர் தரப்பு வாதங்களை கவனிக்க வேண்டும் என்கிறார்.</div><div>இந்த சுய சோதனைக்காவே கபீரும் எதிராளிக்கிடையே உன் கூடாரத்தை அமைத்துக் கொள் என பரிந்துரைக்கிறார்.</div><div><br /></div><div>निंदक नियरे राखिये, आँगन कुटी छवाय |</div><div>बिन पानी बिन साबुन, निर्मल करे सुभाव ||</div><div><br /></div><div><font color="#990000">நிந்தனை செய்வார் தம்மை அண்டை வீடாய் கொள்வீர் </font></div><div><font color="#990000">நீரில்லை சவுக்கா ரமில்லை உம்மனம் வெளுக்கக் காணீர்</font></div><div><br /></div><div> தேச நிர்வாகம் தொழில் நிர்வாகம் மட்டுமல்லாது ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அது மிக மிக அவசியமானது. ஆனால் முதற்படியாக அதை செவிமடுத்துக் கேட்க வேண்டும். சொல்லப்படும் குற்றங்களில் உள்ள நிறைகுறைகளை ஆராய வேண்டும். சொல்பவரின் தரம் மேலும் உள்நோக்கம் போன்றவற்றை கவனித்து தத்தமது பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். </div><div><br /></div><div>பொறாமையாலும் சுயநலத்தாலும் எழும் எதிர்ப்புக்களை பொதுநலம் கருதி விலக்கிவிட்டு காரியமே கண்ணாக வேண்டும். சொல்வது எளிது செய்வது சுலபமல்ல என்று தோன்றலாம். அதற்கு மனோபலம் வேண்டும். </div><div><br /></div><div>இந்த மனோபலத்தை இறைவனைப் பிடித்துக் கொண்டால் பெறலாம் என்பதை பல அடியவர் வாழ்க்கையில் இந்த தேசம் கண்டிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் மகாராஷ்ட்ராவின் சக்குபாய். அவள் கதையையும் பார்ப்போம்.</div><div> </div><div>சக்குபாயின் ஊருக்கு பண்டரிபுரத்திற்கு செல்லும் யாத்திரிகர்கள் வந்து இருக்கிறார்கள். ஊரே திரண்டு அவர்களின் தேவையை கவனித்துக் கொள்கிறது. அந்த சேவையில் சக்குபாய்க்கும் சிறிது பங்கு கிடைத்தது. சிறுவயது முதலே விட்டலினடத்து ஈர்ப்பு இருந்ததால் அவளுக்கும் அவர்களோடு சேர்ந்து பண்டரிபுர தரிசனம் செய்ய மிக்க ஆசை.ஆனால் வீட்டின் நிலைமை அதற்கு இடம் கொடுக்காது எனத் தெரியும். கணவன் அனுமதித்தாலும் மாமியார் அனுமதிக்க மாட்டாள். </div><div><br /></div><div>அவள் மாமியாரை ஊரே ராட்சசி என்றது. சற்றும் ஈவு இரக்கமற்றவள். வாயில் வரக் கூடாத வார்த்தைகள் சரளமாக மழைப் போல் பொழியும். வாயுடன் கைகளும் இணைந்து வேலை செய்யும். </div><div><br /></div><div>அவளுடைய கணவனே அவள் முன்பு பெட்டிப் பாம்பு. மகனோ தாய் சொல்லை தட்டாதபிள்ளை. போறாத குறைக்கு இருவரும் கஞ்ச மகா பிரபுக்கள். </div><div>மொத்தத்தில் சக்குபாய் அந்த வீட்டில் எந்த சுதந்திரமும் இல்லாத ஒரு அடிமை. மாமியாரின் பல கொடுமைகளுக்கும் இடையே அவளைத் தாங்கி நின்றதே அவள் செய்து வந்த விட்டலுனுடைய செபம் தான். </div><div><br /></div><div>சிறுமியாக தோழிகளுடன் தெருவில் மணல் வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு ‘விட்டல பக்தர்’ அதைத் தெரியாதவர் போல் மிதித்து இடித்து விட்டார். அவளுடைய துக்கத்தையும் கோபத்தையும் போக்க அவளுக்கு பாண்டுரங்கனின் சிறு விக்கிரகம் கொடுத்து அவன் நாமாவை விடாமல் செபித்தால் அவனையே பிடித்து விடலாம் என்று சமாதானப்படுத்தி சென்றார். (சிலர் தம்பூரா என்று சொல்கின்றனர்)</div><div><br /></div><div>வளமான மண், பக்தி விதையை விட்டலன் ஊன்றிவிட்டான். சக்குபாயின் உயிர் தெய்வமானான் பாண்டுரங்கன். பன்னிரண்டு வயதில் மணமாகி புக்கத்திற்கு வந்த போதும் அவள் பாண்டுரங்கனை விடவில்லை. அதுவே பல சமயங்களில் அவளை குற்றம் சொல்வதற்கும் கோபித்துக் கொள்ளவும் காரணமாயிற்று.</div><div><br /></div><div>அந்த யாத்திரிகர் குழுவில் கபீரும் நாமதேவரும் இருந்ததாகக் கேள்வி. எப்படியாயினும் அடியார்கள் கூட்டத்தில் இணைவதே இன்பம் தானே. சக்குபாய்க்கு வீட்டிற்கு செல்ல மனமே இல்லை.
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuCNWgXtsb2F7VFSy8whRfYvKgomVQyrku9k2JvE-fb_E724oWDT9wOizTdF2N8en6gCkykYhm6-qsfHR6zSz8Qx6dq466ayKBLxZHKPmHjsWz-6C1Bv6HvWiUrC2l5dswqa7h/s619/sakkubai.jpg" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="619" data-original-width="377" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuCNWgXtsb2F7VFSy8whRfYvKgomVQyrku9k2JvE-fb_E724oWDT9wOizTdF2N8en6gCkykYhm6-qsfHR6zSz8Qx6dq466ayKBLxZHKPmHjsWz-6C1Bv6HvWiUrC2l5dswqa7h/w244-h400/sakkubai.jpg" width="244" /></a></div>
நாம சங்கீர்த்தனத்தில் தன்னை மறந்தாள். பண்டரிபுரத்திற்கான யாத்திரை விவரங்களை விசாரித்தாள். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் வீடு அல்லோலகல்லமாகியது. கணவன் அவளை வந்து இழுத்துச் சென்றான். இவள் எங்கே அவர்களுடன் சென்று விடுவாளோ என்ற பயத்தில் மாமியாரும் கணவனும் அவளை ஒரு தூணில் கட்டிப்போட்டு படுக்கச் சென்றனர். </div><div> </div><div>உடலும் மனமும் துவண்டு போயிருந்த சக்குபாய் முன் கண்ணன் தோன்றினான். அவளைத் தேற்றி “கவலைப்படாமல் நீ போய் யாத்திரை முடித்துக் கொண்டுவா. உன்னிடத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அபயம் அளித்தான். அடுத்த வினாடி கட்டப்பட்டக் கயிறுள் கண்ணனும் வெளியே சக்குபாயுமென்று இடம் மாறினர். </div><div><br /></div><div>பண்டரிபுரத்தில் பக்தியில் சக்குபாய் தன்னை மறந்திருந்த நேரத்தில் தன் பக்தைக்காக அவள் மாமியாரிடம் வசவுகளை வாங்கிக் கொண்டு அவள் வடிவில் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தான் விட்டலன். இறைவன் இருக்கும் இடத்தில் வெறுப்பு வளருமோ? சிறிது சிறிதாக வீட்டாரின் போக்கில் மாற்றம் காணத் துவங்கியது. காரணம் அறியாமல் அவளை நேசிக்கத் தொடங்கினர். </div><div><br /></div><div>அவ்வேளையில் யாத்திரைக்கு சென்றிருந்த அவ்வூர்காரர்கள் பாம்பு கடித்து சக்குபாய் பண்டரிபுரத்தில் உயிர் இழந்தாள் என்று துக்கமான செய்தியை கொண்டு வந்தபோது “இதென்ன அவள் எங்கே பண்டரிபுரம் போனாள் ?” என்ற வியப்போடு அவளைத் தேடினால் அதுவரை அவள் வடிவில் செயலாற்றிக் கொண்டிருந்த விட்டலன் மாயமாகிவிட்டான்.</div><div><br /></div><div>ருக்மிணி தேவியின் அருளால் சக்குப்பாய் உயிர் பெற்று திரும்பி வந்ததும் வீட்டார் மனம் திருந்தியதும் மீதம் உள்ள கதை. [விருப்பமுள்ளவர்கள் காணொளியில் காணலாம். ]</div>
<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="315" src="https://www.youtube.com/embed/fY_BBffU-sM?start=7590" width="560"></iframe>
<div><br /></div><div>சக்குபாய் கதை அக்காலத்தில் மிகப்பிரபலமான நாடகக் கதையாகத் திகழ்ந்தது. பொறுமையும் பக்தியும் ஒருவரை எப்படி உயர்த்தும் என்பதை அவள் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம். </div><div><br /></div><div>அவள் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்ட போதும் தனக்கு கேடு செய்பவர்க்கும் அவள் நல்லதையே வேண்டினாள். அதற்கான மனோபலம் அவள் பற்றியிருந்த நாமஸ்மரணையால் கிடைத்தது. அதன் மூலம் அவளுடைய மனம் மிகவும் பரிசுத்தமாய் இருந்தது. அப்படிப்பட்ட தூய உள்ளத்தை கடவுள் தன் இல்லமாக குடி கொள்வதை யாவருக்கும் அறிவிக்கவே அவன் இவ்வகை பக்தர்களைக் கொண்டு நாடகம் ஆடுகிறான். </div><div><br /></div><div>இராமலிங்க வள்ளலார் இந்த நிலைமையை இறைவனுடனான நட்பு என்னவகை மாற்றங்களை விளைவித்தது என்பதை அருட்பெருஞ்சோதி அகவலில் எழுதுகிறார்.</div><div><br /></div><div><font color="#2b00fe">உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்து கொண்டு </font></div><div><font color="#2b00fe">எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே</font></div><div><font color="#2b00fe"><br /></font></div><div><font color="#2b00fe">செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த </font></div><div><font color="#2b00fe">குற்றமும் குணமாகக் கொண்ட என நட்பே</font></div><div><font color="#2b00fe"> </font></div><div><font color="#2b00fe">பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல்</font></div><div><font color="#2b00fe">கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நன் நட்பே</font> (1180)</div><div><br /></div><div><font size="2"><i>(செற்றம்=பகைமை ;எள்ளுறு நெய் = எள்ளில் உள்ள எண்ணெய்; பேய் உலகோர் =மனம் பக்குவப்படாத உலகத்தவர்)</i></font></div><div><font size="2"><i><br /></i></font></div><div>இதையே வேறொரு கண்ணோட்டத்தில் சொல்வதானால் மிகக் கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் அந்த சூழ்நிலையில் நம்மை இறைவன் வைத்திருப்பதே நம் அந்தரங்க சுத்திக்கென்று கொள்வதானால் அதை ஆன்மீக சாதனையின் ஒரு அங்கமாகக் கருதலாம். அப்படி ஒரு சாதனைக்காகவே கபீர், எதிர்பாளரைக் கண்டு விலகாது அவர்கள் நடுவே வசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்கிறார்.</div><div><br /></div><div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-34896520.post-19722727821401833902020-05-27T22:38:00.001+05:302020-06-20T22:16:09.415+05:30வரும் ஒன்று போமொன்று- எதுவும் நிலையன்று<br>
இம்முறை ஒரு மாறுதலுக்காக ஒரு சிறு கதை. திரு புதுமைப்பித்தனின் சொற்சித்திரம். அதன் பின்னர் இதையொட்டி கபீர் வழியில் நம் எண்ணவோட்டம்.<br>
<br>
<div class="MsoNormal">
<b><span style="color: #cc0000;">தெரு விளக்கு </span></b><br>
<br>
<span style="color: blue;">தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு. </span><br>
<span style="color: blue;"><br></span>
<span style="color: blue;">தனிமையாக ஏகாங்கியாக தனது மங்கிய வெளிச்சத்தை பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது. </span><br>
<br>
<span style="color: blue;">இளமை மூப்பு சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே தெரு விளக்கிற்கும் இப்போது மூப்புப் பருவம். </span><br>
<span style="color: blue;">நிற்கும் கல்-உடம்பு சிறிது சாய்ந்து விட்டது. </span><br>
<br>
</div><a href="https://kabeeran.blogspot.com/2020/05/blog-post_27.html#more">Read more »</a><div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-34896520.post-90375452879975762732020-05-04T08:23:00.001+05:302020-05-04T10:12:12.671+05:30உன் சூதே இது அருணாசல !<br />
தறிகெட்டு தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்த உலகத்திற்கு ஒரு வேகத்தடை போட்டுள்ளது கொரானோ. விமானங்கள் இல்லை, புகைவண்டிகள் இல்லை பேருந்துகள் இல்லை. எல்லா நாடுகளிலும் ஊரடங்கு என்ற பெயரில் உலகமே முடங்கிக் கிடக்கிறது.<br />
<br />
அனைவரும் எப்படி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பது என்று வல்லுனர்கள் தொலைகாட்சியிலும் சமூக வலைத்தளங்களிலும் விவரிக்கிறார்கள். ஒவ்வொருவரும் தத்தம் தனித் திறமை வளர்த்துக் கொள்ள அற்புதமான வாய்ப்பு என்கின்றனர். நேரமில்லை என்று ஓடியவர்களை யோகாவும் தியானமும் செய்யுங்கள் என்று பிரதமர் முதல் தொலைக்காட்சி நெறியாளர் வரை யாவரும் நினைவு படுத்துகின்றனர்.<br />
<br />
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?<br />
<br />
அப்பாடா ! இனி அங்கே இங்கே என்று யாரும் கூப்பிட மாட்டார்கள்.கலியாணம் கோவில் என்றெல்லாம் சுற்ற வேண்டியதில்லை. சாலை நெரிசலில் சிக்கி விழி பிதுங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம், எதையாவது உருப்படியாக செய்வோம் என்று நானும் திட்டம் தீட்டினேன். மீண்டும் கபீர் எழுத வேண்டும், புது புது யுக்திகளை படம் வரைவதில் கையாண்டு பார்க்க வேண்டும். இரமணரின் உபதேச சாரம் மனப்பாடம் செய்ய வேண்டும், குறைந்தது ஒரு அத்தியாயமாவது பகவத்கீதை படிக்க வேண்டும், தரவிறக்கம் செய்து படிக்காமல் இருக்கும் திருவாசகத்தை படிக்கத் தொடங்க வேண்டும் இத்யாதி<br />
<br />
மூன்று வாரங்களுக்கு பின் ஏதாவது முன்னேற்றம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்வேன். திட்டத்தில் பத்து சதவீதம் கூட வெற்றியில்லை. ஏதேதோ காரணங்கள். ஆனால் பெரிய காரணம் நான் வைத்திருக்கும் கைப்பேசி மூலம் நம் மனதிற்குள் புகுந்துள்ள வைரஸ் களான வாட்ஸ் ஆப், முகநூல் ட்விட்டர் போன்ற மென்பொருட்களின் மயக்கமே.<br />
<br />
<b>நேரத்தைக் கொல்லும் மானிடக் கொல்லிகள்</b>.<br />
<br />
அவைகள் நேரத்தைக் கொல்ல (Time pass, killing time)) உதவுகின்றன என ஒப்புக் கொண்டால் கண்டிப்பாக நம் ஆயுளையும் சேர்த்தே கொல்லுகின்றன என்பதை மறுக்க முடியாது. இதை சொல்வது திருவள்ளுவர்.<br />
<br />
<span style="color: blue;">நாளது ஒன்று போல் காட்டி உயி(ர்) ஈரும் </span><br />
<span style="color: blue;">வாளது உணர்வார் பெறின்.</span><br />
<br />
<span style="font-size: x-small;"><span style="color: #38761d; font-size: xx-small;">கால அளவாக காட்டப்படும் ஒவ்வொரு நாளும் உயிரை அறுக்கும் வாள் என்று கூர்ந்து அறியும் சான்றோர் உணர்வர்</span>.</span><br />
<br />
இந்த உண்மையும் வாட்ஸ்-ஆப்பில் வந்த ஒரு பகிர்வைப் பார்த்ததும் தான் உறைக்கிறது<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgibuitE8MQRALGnUAtMWOt8jYOIHx3NMMeHdqb9Qat06pzegvowOxMKQeaDepHMzwb1R7retGeZcYCKsQxdFqxpJ-g9bUGfON4qM3b-uHcfcPeAIRa5ikRUsKX9qNS1jL76T89/s1600/periyava.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgibuitE8MQRALGnUAtMWOt8jYOIHx3NMMeHdqb9Qat06pzegvowOxMKQeaDepHMzwb1R7retGeZcYCKsQxdFqxpJ-g9bUGfON4qM3b-uHcfcPeAIRa5ikRUsKX9qNS1jL76T89/s320/periyava.jpeg" width="320" /></a></div>
<br />
மக்கள் செய்யும் காலவிரயம் என்பது ஒரு மாயையின் விளையாட்டு என்பதை அக்ஷர மணிமாலையில் இரமணர் "இறைவனின் சூது" என்று வருணிக்கிறார்.<br />
<br />
<span style="color: blue;">"ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீயிலையோ அருணாசல </span><br />
<span style="color: blue;"> ஒருவனாம் உன்னை ஒளித்தெவர் வருவார்? உன் சூதேயிது அருணாசல"</span><br />
<br />
உன்னை ஏமாற்றி கள்வர்கள் உள்ளே எப்படி உள்ளே வரமுடியும்? ஆகையால் நீ வேண்டுமென்றே இந்த ஐம்புலன்களை தந்து என்னை திசை திருப்புகிறாய்" என்று உரிமையுடன் இறைவனை சாடுகிறார். அவர் முழித்துக் கொண்டு கள்வர்களை விரட்டி அடிக்க வல்லவரானார். ஆனால் நாமோ இன்னமும் ஏமாந்து அமர்ந்திருக்கிறோம்.<br />
<br />
கபீரும்இந்த ஏமாறுதலை பயிரைக் காக்காத விவசாயிக்கு ஒப்பிடுகிறார்.<br />
<br />
बिन रखवारे बाहिरा, चिड़ियों खाया खेत |<br />
अरधा परधा ऊबरे, चेति सके तो चेत ||<br />
<br />
<span style="color: #cc0000;">விரட்டு வாரில்லா வயலிலே பறவைகள் தின்றன தினைதனை</span><br />
<span style="color: #cc0000;"> திரட்ட முடிந்தால் திரட்டிடு அரைகுறை யாயினும் விளைச்சலை</span><br />
<br />
கள்வர்கள் என்று ரமணர் சொன்னதைத்தான் பறவைகள் என்று கபீர் சொல்கிறார்.<br />
<br />
நமக்கு தேவையான ஒன்றை இன்னொருவன் எடுத்து சென்றால் அதற்கு நம் கவனக் குறைவே காரணம்.<br />
<br />
இங்கே நாம் இழப்பது நேரத்தை ; இறை சிந்தனையோடு கூடிய தர்ம காரியங்கள் செய்யாமல் கழிக்கும் நாட்களை. அதற்குக் காரணம் புலன் கவர்ச்சிகளால் நம் கவனம் தவறுவதே ஆகும்.<br />
<br />
இந்த இயலாமை அப்பர் பெருமானையும் திருமங்கை ஆழ்வாரையும் கூட வாட்டுகிறது.<br />
<br />
சக்கரத்து அண்ணலை வேண்டிக்கொள்ளும் ஆழ்வார் பாடல் :<br />
<span style="color: blue;">இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லக்கில்லேன்</span><br />
<span style="color: blue;">கடவனாகி காலந்தோறும் பூப்பறித் தேத்த கில்லேன்</span><br />
<span style="color: blue;">மடம் வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்</span><br />
<span style="color: blue;">தடவு கின்றேன் எங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே? (3305 )</span><br />
<br />
<span style="color: #38761d; font-size: x-small;">[இடகிலேன் : இரப்பவர்க்கு எதையும் ஈவதறியேன்</span><br />
<span style="color: #38761d; font-size: x-small;"> ஒன்று அட்டகில்லேன் : தாகமுற்றவர்க்கு நீர் தந்திலேன்</span><br />
<span style="color: #38761d; font-size: x-small;"> கடவனாகி : நியதியுடையவனாகி ; காலம் தோறும் உரிய காலங்களில்</span><br />
<span style="color: #38761d; font-size: x-small;"> அயர்ப்பு ஆய்: அவ்விவேகி ஆகி ; தடவுகின்றேன் : தேடுகின்றேன் ]</span><br />
<br />
கோவலூரில் குடியிருக்கும் இறைவனை இறைஞ்சி அப்பர் பாடியது :<br />
<span style="color: blue;">தடுத்திலேன் ஐவர் தம்மைத் தத்துவத்து உயர்வு நீர்மைப்</span><br />
<span style="color: blue;">படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற</span><br />
<span style="color: blue;">அடுத்திலேன் சிந்தை யார வார்வலித் தன்பு திண்ணம்</span><br />
<span style="color: blue;">கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.</span><br />
<br />
<span style="color: #38761d; font-size: x-small;">கோவலூர்ப் பெருமானே ! ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருளின் உண்மைத் தன்மையில் ஆன்மா ஈடுபடும்படி செய்யேனாய் , எம் பெருமான் எங்கும் பரவியவனாய் இருப்பதனை மனங்கொண்டு , அவன் திருவடிகளில் சேர்ப்பிக்கப் பல மலர்களையும் பறித்துக் தொகுக்காதேனாய் , மனம் நிறைய அன்புகொண்டு அவ் வன்பை எம்பெருமான் பால் செலுத்தேனாய் அடியேன் கொடியேனாகக் காலம் கழித்துவிட்டேனே ! ( நன்றி ; Thevaram.org)</span><br />
<br />
இப்படி ஐம்பொறிகளை கட்டுப்படுத்தாமல் எந்தவித ஆன்மீக முன்னேற்றமும் இருக்கமுடியாது என்பதை சான்றோர்கள் யாவரும் சொல்லியிருக்கிறார்கள். உலக விஷயங்களிலே பற்று உண்டாவதற்கு காரணமே இவைதான்.<br />
<br />
<span style="color: #cc0000;">அது இன்றைய வாட்ஸ்-ஆப் வரைக்கும் வந்து விட்டது. மகிழ்ச்சியை பகிர்கிறோம் என்ற பெயரில் இது வணிகத்தைப் பெருக்கி மனங்களை சுருக்கி காலத்தைக் கொன்று மனிதத்துவத்தையும் அழித்துக் கொண்டு வருகின்றது என்றால் மிகையில்லை. </span><br />
<br />
பற்றற்றான் பற்றை பற்ற பற்று விட வேண்டும் என்பதை முதல் அத்தியாயத்திலேயே சொல்லிவிட்டார் வள்ளுவர்.<br />
<br />
மீண்டும் கபீருக்கு வருவோம்.' திரட்ட முடிந்தால் திரட்டு' என்று ஒரு சந்தேகத்தை ஏன் எழுப்புகிறார்? அவருக்கு நன்கு தெரியும் மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.<br />
<br />
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது . இன்னும் எவ்வளவு நாட்கள் மீதி உள்ளனவோ தெரியாது. அதற்குள்ளாகவாவது மருட்சியை விட்டு பெரியவர்கள் சென்ற பாதையில் சென்று பார் என்று உபதேசிக்கிறார்.<br />
<br />
அதையே வள்ளல் பெருமானார் வார்த்தைகளில் பார்த்தால்<br />
<span style="color: blue;">"அருள் அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் </span><br />
<span style="color: blue;"> மருள் அறிவு என்றே வகுத்த மெய் சிவமே </span><br />
<span style="color: blue;"> அருட் பேறதுவே அரும் பெறற் பேறு</span><br />
<span style="color: blue;"> இருட் பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே</span> <span style="font-size: x-small;"> (990 அருட்பெருஞ்சோதி அகவல்)</span><br />
<br />
கடவுளை சிந்தித்து இருந்தால் மருள் நீங்கி விடும்.<br />
<br />
இந்த உண்மைகளை சற்றாவது நினைத்துப் பார்க்க கொரானாவை அனுப்பிய -யாவற்றையும் கடந்து நிற்கும்- அந்த கடவுளுக்கு நன்றி.<div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-34896520.post-61089477571742459922019-11-15T23:34:00.000+05:302019-11-16T06:34:12.809+05:30பரோபகாரம் பரமன் வடிவம்<br>
<br>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "vijaya" , serif;"> ’</span><span style="font-family: "latha" , sans-serif; font-size: 8.0pt; line-height: 115%;">தொண்டர்தம்
பெருமை சொல்லவும் பெரிதே’ என்று தமிழ் மூதாட்டி உலகில் எல்லாவற்றைக் காட்டிலும் <span style="mso-spacerun: yes;"> </span>மிகப் பெரியது தொண்டர்களின் பெருமை என்று பாடி வைத்தார்.<span style="mso-spacerun: yes;"> </span>இறைவன் தன்னை இகழ்ந்தாலும் பொறுத்துக் கொள்வான்
ஆனால் தம் தொண்டரை இகழவோ துன்புறுத்தவோ செய்தால் பொறுக்கமாட்டான் என்று அம்பரீசன் பிரகலாதன்
போன்றவர்கள் கதைகள் சொல்லி புரிய வைக்கின்றனர் பௌராணிகர்கள்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif; font-size: 8.0pt; line-height: 115%;"><br></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "latha" , sans-serif; font-size: 8.0pt; line-height: 115%;">தொண்டு நெறி என்பது இறைவனை அடைய ஒரு சுலபமான பாதையாக ஞானிகள் அமைத்து வைத்திருக்கிறார்கள்.
அனைத்திலும் இலங்குபவன் இறைவன். ஆகையால் ஜீவகாருண்யமும் தந்நலமற்ற சேவையும் கடவுளுக்கு
செய்யப்படும் ஆராதனையாகவே கருதப்படுகிறது. </span><span lang="TA" style="font-family: "latha" , sans-serif; font-size: 8.0pt; line-height: 115%;">தொண்டு
நெறி</span><span style="font-family: "latha" , sans-serif; font-size: 8.0pt; line-height: 115%;">யில்
நின்று அடியார்களுக்கு சேவை செய்தவர்கள் ஏராளம். அடியார்களுக்கு இலவச திருவோடு வழங்கிய
திருநீலகண்டர், யார் எதைக் கேட்பினும் இல்லையென்னாத இயற்பகை நாயனார், சிவனடியார்களின்
ஆடைகளை சலவைசெய்து கொடுப்பதையே சேவையாக செய்த திருக்குறிப்புத் தொண்டரடிகள், பார்வையற்றவராக
இருந்தும் திருக்குளத்தை சீரமைத்த தண்டியடிகள், கோயிலில் திருவிளக்கு ஏற்றுவதையே தொண்டாக
செய்த நமிநந்தியடிகள் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span style="font-family: "latha" , sans-serif; font-size: 8.0pt; line-height: 115%;"></span></div>
<a href="https://kabeeran.blogspot.com/2019/11/blog-post.html#more">Read more »</a><div class="blogger-post-footer">---- என்றும் அன்புடன் கபீரன்பன்</div>கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.com7