tag:blogger.com,1999:blog-52697353847388426202024-03-05T09:47:43.477+05:30குழந்தை ஓவியம்ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comBlogger228125tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-10688769891723921172015-11-27T11:12:00.000+05:302015-11-27T11:13:10.462+05:30வட இந்தியா - 1<p>மணி மாலை ஆறு நாற்பது. சிம்லா மால் ரோட்டிலுள்ள அறையிலிருந்து வெளியேறி நடந்தேன். நன்கு இருட்டிவிட்ட காட்டுக்குள் ஊர் இருப்பது போல தெருவெங்கும் இருள் அடர்ந்து கிடந்தது அந்நேரத்திலேயே. குளிர் பத்து டிகிரிக்கும் குறைவாக இருக்கலாம். என்னைப் போன்ற வெப்பமண்டலக் காடுகளிலிருந்து வரும் வெயில்காரர்களுக்கு மிகவும் நடுக்கம் நிறைந்ததாக இருக்கிறது. உடலெங்கும் குளிர் ஊடுறுவி உறுப்புகளை நடனமாடவைக்கிறது. மலைமுழுக்க குளிர் மூடி நெருப்பின் கதகதப்பைத் தேடவைக்கிறது. சிம்லா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கேள்விக்கும் அனுபவத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. மிக உயர்ந்த மலைநகரம்.. மலையெங்கும் கிராமங்கள். இரவுகளில் மலைகள் முழுக்க ஒளிர்கிறது. மலைகளின் மகாராணி சிம்லா என்றால் ஏனைய கிராமங்கள் அதன் உற்ற தோழிகள். எங்கு நின்றாலும் சிம்லா நமக்கு ஒரு காட்சிமுனை தந்துவிடுகிறது. ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் காட்சிமுனைகளுக்காக இடம் ஒதுக்கி இருப்பார்கள். இங்கு அந்த தேவையில்லை. சிம்லாவில் பார்த்த ஒவ்வொரு முகமும் வட இந்திய முகங்கள். சில திபத்திய முகங்கள். மிக அன்புடன் பழகும் மக்கள். விலை அதிகமாக வைத்து சுற்றுலாப் பயணிகளிடம் பணம் கறக்கும் வியாபாரிகள், ஓட்டல் நிர்வாகிகளிடம் கமிஷன் பேசிக்கொள்ளும் ஆட்டோ காரர்கள்., என சுற்றுலாத் தளத்திற்கே உரிய மக்கள் நிறைந்த ஊர். மலைப்பகுதி என்பதால் குறுகலான பாதைகள், சிராய்வு நிறைந்த ஊர்திகள், புழுதி படர்ந்த சாலைகள், பரபரப்பாக இயங்கும் பலதரப்பட்ட மக்கள்... சிம்லா மற்றுமொரு மலைச் சுற்றுலாத் தளம்.</p> <p>குஃப்ரி.</p> <p>காலையில் குஃப்ரி கிளம்பினேன். ஒன்பது மணிக்குத் தயாராகி, ஏற்கனவே பதிவு செய்ந்திருந்த ஒரு டாக்ஸியை வரச் சொன்னேன்.  மால்ரோட்டில் வண்டிகள் ஏதும் வரமுடியாது என்பதால் மால்ரோட்டிலிருந்து கீழறங்கி மெயின்ரோட்டுக்கு வந்தேன். டாக்ஸி ட்ரைவர் மது எங்களை குஃப்ரிக்கு அழைத்துச் சென்றார். சுமார் பதினான்கு கி.மீ தூரம் கொண்ட அந்த பாதை மலைகளின் விளிம்பிலிருந்து மலைக்கு நடுவே செல்கிறது. மிகக் குறுகலான சுத்தமில்லாத பாதை. சிம்லாவில் வண்டி ஓட்டுவது பாத அளவுள்ள மதில் மேல் நடந்து செல்வதைப் போன்றது. கொஞ்சம் இடறினாலும் அடுத்த வண்டியில் உராய்ந்துவிடும்.  குஃப்ரி சிம்லாவைத் தாண்டி இருக்கும் மிக உயர்ந்த இடம். குஃப்ரியிலிருந்து மேலும் கொஞ்சம் உயரம் வரை செல்ல வேண்டுமென்றால் குதிரையில்தான் செல்ல வேண்டியிருக்கும். சுமார் ஒன்றரை அல்லது இரண்டு கி.மீ பயணம். ஆனால் நம்மை ஏழு கிலோமீட்டர் அழைத்துச் செல்வதாகச் சொல்வார்கள். டாக்ஸி ட்ரைவர் காண்பிப்பதாகச் சொன்ன இடங்களுக்குச் செல்ல மேலும் அதிகம் செலவு செய்யவேண்டியிருந்தது.  குதிரையில் ஏறி பயணம் செய்ததே கிடையாது. முதல் முறையாக ஏறி அமர்ந்த பொழுது ஒரு இராஜ உணர்வு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் குதிரைகள் மட்டுமே செல்லும் மலைப்பாதை என்பதால் பள்ளத்தில் கால்வைத்து தவறி விழுந்தேன். பின் இரண்டாம் முறை கொஞ்சம் பழகிக் கொண்டேன். குதிரை தனக்கு மிகவும் தெரிந்த வழியில் செல்வது போல தானாகவே சென்றது. பள்ளத்தில் தள்ளிவிடுமோ என்ற பயத்தில் அழைத்துச் சென்ற சிறுவனிடம் அடிக்கடி குதிரையை தள்ளி அழைத்துப் போகுமாறு சொல்லிக் கொண்டேன். ஆனால் அந்த சிறுவன், இந்தமாதிரி நிறைய கேட்டிருப்பான். எந்த பிரச்சனயுமில்லை (குச் நயி ஹோகா) என்று தைரியத்தோடு அழைத்துப் போனான். மூன்று கி.மீட்டர் என்றதும் குதிரையில் செல்வதை ஒத்துக் கொண்டேன். இல்லையென்றால் அது நடந்தே செல்லவேண்டிய தூரம் தான். தவிர குதிரைகள் நிறைய வருவதும் போவதுமாக இருப்பதால் முட்டிக் கொண்டே செல்லவேண்டியிருந்தது. கால்கள் எல்லாம் அடிவாங்கின. பள்ளத்தின் விளிம்பில் கட்டியெழுப்பப் பட்டிருந்த சுவர்களில் கால்கள் உராய்ந்து கொண்டே சென்றன. ஒரு நல்ல ஷூ இருந்தால் நம் கால்கள் தப்பிக்கலாம். எப்படியோ குஃப்ரியின் உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டேன். குதிரைக்காரன் ஒரு எண்ணைக் கொடுத்து, சுற்றிப் பார்த்துவிட்டு அந்த எண்ணுக்கு அழைக்குமாறு சொல்லிவிட்டு குதிரையை மீண்டும் தொடங்கிய இடத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டான். அவனுக்குக் கொடுத்த அல்லது குதிரை சவாரிக்குக் கொடுத்த பணம் அதிகம் என்று தோணிக்கொண்டே இருந்தது.  இமயமலையைப் பார்ப்பதற்கான ஆவலோடுதான் அங்கே ஓடிச் சென்றேன். ஆனால் எனக்கு அந்த பேராசையைத் தவிர மற்ற அனைத்தும் கிடைத்தது. மேலும் மேலும் மலை மடிப்புகள் ஒன்றோடொன்று தொட்டுக் கொண்டே சென்றதேயொழிய பனி பூசிய இமயமலைகளைப் பார்க்க முடியவில்லை. டெலஸ்கோப் வழியாகப் பார்க்க முடியும் என்று சொன்னதால் நம்பி அங்கேயும் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.  இமயமலைகள் மேகத்தோடு மூடி இருப்பதால் இப்போது பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டனர். டெலஸ்கோப் வழியாக நான்கைந்து கோவில்களை மட்டுமே பார்க்க முடிந்தது. இந்தியாவின் எல்லை என்று ஒரு இடத்தைக் காண்பித்தனர். இவையெல்லாவற்றையும் விட அடுக்கடுக்கான மலைகளை ரசிப்பது மிக சுவாரசியம். மலையடுக்குகள் முடிவில்லாமல் சென்று கொண்டேயிருக்கின்றன. அதில் ஏதாவது ஒரு மலையைக் காண்பித்து அதுதான் இமயமலை என்று சொல்லியிருந்தாலும் நம்பியிருப்பேன். அடுத்த முறை குஃப்ரிக்குச் செல்வதாக இருந்தால் அது டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தான் செல்லவேண்டும். பனி பொழிவைக் கண்டிருக்க முடியும். அதேபோல குஃப்ரியிலிருந்து உயர்ந்த இடத்திற்கு நடந்தே செல்லலாம் குதிரைகளை நீங்கள் சகித்துக்கொண்டால்.. மேலும் அங்கே ஹிமாலயன் வ்யூ என்று சொல்லி கொண்டு வரும் எவரையும் நம்பி பணத்தைத் தந்து ஏமாறக் கூடாது. அவர்களிடமிருக்கும் டெலஸ்கோப்புகளும் உயர்ந்த தரமானதில்லை, ஒரு 300mm லென்ஸில் தெரியக்கூடியதை டெலஸ்கோப்பில் வைத்துக் காண்பிப்பார்கள்.. ஆகவே  சிம்லாவில் அதைக் காண்பிக்கிறேன், இதைக் காண்பிக்கிறேன் என்று பலரும் சொல்வார்கள், அவை அனைத்தும் உண்மை இல்லை...</p> <p>குஃப்ரியிலிருந்து மால்ரோட்டுக்கு அருகே டாக்ஸியில் வந்து விட்டேன். மாலை நான்கு மணி ஆகிவிட்டதால் வேறெங்கும் செல்லமுடியாது என்று ட்ரைவர் சொன்னார். ஆகவே வரும் வழியிலேயே மதிய உணவாக இரண்டு ஆம்லேட் (நான்கு முட்டைகள்) சாப்பிட்டுவிட்டேன்.  ஷிம்லாவில் நான் தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள எந்த உணவகத்திலும் உணவின் விலை குறைவாக இல்லை. மூன்று நட்சத்திர ஓட்டல்களின் விலைகளிலேயே உண்ணவேண்டியிருந்தது. ஒரு இரவுக்கு குறைந்தது 750 ரூபாய் செலவாகிறது. ஆகவே ஆம்லெட்டுகளோடு இன்றைய உணவை முடித்துக் கொள்வதாக முடிவெடுத்துக் கொண்டேன். நான்கு ஆம்லெட் 150 ரூபாய்.. போலவே எந்த உணவகத்தின் உணவும் ருசியற்று இருக்கிறது. இதை சண்டிகரிலேயே உணர்ந்துவிட்டோம். ருசியான உணவகங்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில்தான் என்பது என் கருத்து. அக்கருத்து இன்னும் வலிமையானதாக உணருகிறேன். இன்னும் சிம்லாவின் சுற்றுலா இடங்கள் பாக்கி இருந்தன.. ஆகவே அப்படித் தெரியலாம். சிம்லா பொது நகரத்தில் ஒருவேளை என் கருத்துக்கு மாறுபாடு வரலாம். </p> <p>அன்றைய இரவு குளிர் சுமார் ஐந்து டிகிரி இருக்கலாம். அந்த அறையே ஒரு குளிர்பதனப் பெட்டிபோல இருந்தது. ஊட்டியில்தான் அதிக பட்ச குளிரை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஊட்டியைக் காட்டிலும் மிக அதிக பட்ச குளிர், தெர்மல் பனியன் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால் கடைசி நேர பயண அவசரத்தில் மறந்துவிட்டேன். இந்த குளிரைத் தாங்க முடியாமல் எனக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. கோவையிலிருந்து விமானத்தில் தான் கிளம்பினேன். இரண்டு ஸ்டாப் விமான பயணம். மும்பையில் இறங்கி அங்கிருந்து டெல்லிக்கு இரவிற்குள் சென்றுவிட்டேன். மறுநாள் டெல்லியிலிருந்து சண்டிகருக்கு விமானப் பயணம். ஒரு அவசரத்தில் பயணத்தை முடிவு செய்ததால் இரண்டு ஸ்டாப் விமானத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இனி ஒரு போதும் அப்ப்படிச் செய்யவே கூடாது.  கொஞ்சம் விலை அதிகமென்றாலும் ஒன்ஸ்டாப் விமானத்தைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஏனெனில் டெல்லியில் ஒரு இரவை வீணாகக் கழிக்க வேண்டியிருந்தது. அடுத்தநாள் டெல்லியிலிருந்து சண்டிகர். சண்டிகர் இந்தியாவின் க்ரீன் சிட்டி என்று சொன்னார்கள். காட்டுக்குள்ளே நேர்த்தியான நகரம் ஒன்றை நுழைத்தது போல இருந்தது. நகரம் முழுக்க செக்டார்களாகப் பிரித்திருந்தார்கள். ஷிம்லா செல்லும் பேருந்துகள் எங்கே நிற்கும் என்று அறிந்து கொண்டு அங்கே சென்றேன். நகருக்குப் பொருத்தமில்லாத அந்த பேருந்து நிலையத்திலிருந்து ஷிம்லாவுக்கு கல்கா வழியாக பேருந்தில் சுமார் நான்கு மணிநேரப் பயணம். கல்காவிலிருந்தே மலைப்பாதைகள் தொடங்கிவிடுகின்றன. வலது புறம் முழுக்க மலைகளும் பள்ளத்தாக்குகளுமாக என்னோடே பயணித்தது. பொதுவாகப் பேருந்துப் பயணமென்றாலே தூங்கிவிடுவேன். ஆனால் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகள் தூக்கத்தைத் தடுக்கின்றன. ஷிம்லா பேருந்து நிலையம் வந்தடைந்தபொழுது மணி ஆறு.</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-43523551122988079572015-06-27T12:10:00.001+05:302015-06-27T12:10:39.139+05:30இன்று நேற்று நாளை Sci-Fi Comedy<p><a href="http://lh3.googleusercontent.com/-slbe5SHJ1ss/VY5FYb0jsAI/AAAAAAAAByU/PdYoV8bPPA0/s1600-h/indru-netru-naali%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="indru-netru-naali" border="0" alt="indru-netru-naali" src="http://lh3.googleusercontent.com/-HW6EgwaTFzs/VY5FZNTi5QI/AAAAAAAAByc/mZkTCv8k0k4/indru-netru-naali_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="254" height="356" /></a></p> <p> </p> <table border="0" cellspacing="0" cellpadding="2" width="400"><tbody> <tr> <td valign="top" width="200">Direction</td> <td valign="top" width="200">R.Ravikumar</td> </tr> <tr> <td valign="top" width="200">Starring</td> <td valign="top" width="200">Vishnu Vishal, Mia George, Karunakaran, Jayaprakash</td> </tr> <tr> <td valign="top" width="200">Year</td> <td valign="top" width="200">2015</td> </tr> <tr> <td valign="top" width="200">Language</td> <td valign="top" width="200">Tamil</td> </tr> <tr> <td valign="top" width="200">Genre</td> <td valign="top" width="200">Science Fiction, Comedy, Thriller</td> </tr> <tr> <td valign="top" width="200"> </td> <td valign="top" width="200"> </td> </tr> </tbody></table> <p>இன்னும் யாராலும் கணக்கிட முடியாதது “காலம்”. குறிப்பாக, காலத்தின் பிறப்பு. மற்றும் வெளி (Space) இது இரண்டுக்கும் மிக நெருங்கின தொடர்பு உண்டு. கிட்டத்தட்ட கணவன் மனைவி போல. இவை இரண்டையும் இணைக்கும் கருவிதான் Time Machine. இதற்கான சாத்தியம் இல்லை (அல்லது இப்போதைக்கு இல்லை) என்றாலும் திரைப்படங்களிலோ, புத்தகங்களிலோ பேசப்பட்டே வருகிறது. டைம் மிஷின் ஏன் சாத்தியமில்லை என்றால், நம்மிடம் ஒளியை மிஞ்சும் வேகத்தில் எந்த கருவியுமில்லை என்பதுதான். நாம் பார்க்கும் நட்சத்திரங்கள், பிரபஞ்சங்கள் எல்லாமே அது கடந்த காலத்தில் உமிழ்ந்த ஒளியைத்தானே பார்க்கிறோம். ஆக நாம் வெளியெடும் ஒளியிலிருந்து மிகத் தொலைவிலிருந்து நமது கடந்த காலத்தைப் பார்க்கலாம் என்கிறது அறிவியல். இது பற்றி நிறைய பேசுவதற்கு இருக்கிறது. </p> <p>ஒருவேளை அப்படியொரு டைம் மிஷின் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அது நிகழ்காலத்தில் ஒருவரிடம் சிக்கினால் எப்படியிருக்கும்? அதுதான் “இன்று நேற்று நாளை”</p> <p>சொந்த தொழில்தான் செய்யவேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்கும் விஷ்ணு, அவருடைய நண்பர் போலி ஜோதிடர் கருணா இருவரும் எதிர்பாராத நேரத்தில் கால இயந்திரத்தைக் காண்கிறார்கள். அதைப் பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லாமல் அதனை இயக்குகிறார்கள். ஓரளவு புரிதல் கிடைத்ததும் அதைவைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கிறார்கள். கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வின் ஒரு சிறு கண்ணி விலகி, அது நிகழ்காலத்தில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று புரிந்து கொள்கிறார்கள். இறுதியில் எப்படி பாதிப்பிலிருந்து வெளியேறுகிறார்கள் என்பதே கதை (புரிகிறதா?) </p> <p>காலத்தைக் கடக்கும்பொழுது ஏற்படும் சிறு மாற்றங்களை மிக சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்  இயக்குனர் ரவிக்குமார். படம் முழுக்க ஜாலி மூடில் செல்வதால் டைம் மிஷின், ஸ்பேஸ், ட்ராவல் என்று ஒரே சைன்ஸ் வார்த்தைகளால் நிரப்பி குழப்பாமல் தெளிவாக இருக்கிறது திரைக்கதை. பெரிய லாஜிக் மீறல்கள் இல்லாதிருப்பது திரைக்கதையை எவ்வளவு தூரம் ஆழமாக செதுக்கியிருக்கிறார்கள் என்பது புரிகிறது. அதற்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ திரைக்கதை டிஸ்கஷன் குழுவினருக்கு.</p> <p>விஷ்ணுவின் சமீப இரண்டு திரைப்படங்கள் ஃப்ரெஷாக இருந்தன. இன்று நேற்று நாளை, அவருக்கு பேசப்படும் திரைப்படம். நன்கு நடிக்கவும் செய்கிறார். மியாவுக்கு கண்கள் பெரிது. கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறார். கருணாகரன் படத்தின் டெம்போவை ஏற்றுவதில் பெரிய பங்கு வகிக்கிறார். அவர் வருகிற எல்லா காட்சிகளுமே அட்டகாசம்.. வசனம் படத்திற்கு பெரிய பலம். எடிட்டிங் செம க்ரிஸ்பாக இருந்தது. டெக்னிக்கலாக எல்லாமே அபாரம். சிஜி தேவையான அளவுக்கு இருந்தது. துருத்தவில்லை. பாடல்களுக்கு நடனம் அமைக்காமல் மாண்டேஜில் சென்றது திருப்தியைத் தந்தது</p> <p>நிறைய தருணங்கள் சிலிர்ப்பானவை… எதுவும் சொல்லக் கூடாது என்றாலும் ஒன்றே ஒன்று… மியா ஜார்ஜ் குழந்தையை வாங்கி முத்தமிடும் தருணம் அபாரம்.. மைல்ட் ட்விஸ்ட் இருப்பதால் திரில்லிங்காக செல்கிறது திரைப்படம். எந்தவொரு இடத்திலும் போரடிக்கவில்லை என்பதைவிட எந்தவொரு இடத்திலும் திரில்லிங் குறையவில்லை, குறிப்பாக இரண்டாவது பாதி செம ஸ்பீடு…</p> <p>படத்தின் இசையைப் பற்றி பேசமுடியவில்லை, நான் சென்ற அரங்கில் ஸ்பீக்கரே இல்லை. இனியொருமுறை பார்க்கவேண்டும். </p> <p>குறைகள் ?</p> <p>பெரிதாக ஏதுமில்லை என்றாலும் சண்டைக்காட்சிகள் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கவேண்டும். சில காட்சிகளில் நடிகர்கள் சுமாராகவே செயல்பட்டிருந்தார்கள். மக்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காகவே இயக்குனர் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. </p> <p>டைம் மிஷின் படங்கள் எல்லாமே ஒரேவகையான டெம்ளேட்டைக் கொண்டவை. நிகழ்காலத்திலிருந்து கடந்த/எதிர் காலத்திற்குச் செல்லலாம். ஃபிஸிக்கலாக செல்வதால் அங்கே நிகழும் நிகழ்விலிருந்து எதையும் மாற்றாமல் திரும்பவேண்டும் என்பது பொதுவான விதி. இதில் மாற்றம் ஏற்பட்டால் பின்னால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும். இது butterfly effect, chaos theory என்று பொதுவாக பல பெயர்களில் சொல்வார்கள். ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுத்திவிட்டு பின் அதை சரிசெய்வது என்பதாகத்தான் எல்லா திரைப்படங்களும் இருக்கும்.  இந்த படமும் அதில் விதிவிலக்கல்ல.. டைம் மற்றும் ஸ்பேஸ் இரண்டையும் வைத்து நிறைய திரைப்படங்கள் குறிப்பாக ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. Back to the Future, X-Men, Time Machine, Butterfly Effect, Source code போன்ற படங்கள் காலத்தைக் கடப்பதைப் பற்றின திரைப்படங்கள். சில படங்களில் இந்த உத்தியை ஊறுகாய் போல தொட்டுக்கொள்வதும் உண்டு. டெர்மினேட்டர் ஒரு நல்ல உதாரணம். தமிழில் இதற்கு முன்பு தாசாவதாரத்தில் கேயாஸ் தியரியைப் பற்றி கமல் சொல்லுவார், 12பி கூட ஐந்து நிமிட காலப்பயணம் பேரல்லலாக பயணிக்கும், ஆனால் முழுநீள டைம் ட்ராவல் படம் தமிழில் இதுவே முதல்!</p> <p>வித்தியாசமாக படம் பார்க்கவேண்டும், வழக்கமான மசாலாத்தனம் இல்லாத தமிழ்படம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு விருந்து!!</p> <p>சிறப்பான இடத்தை ரிசர்வ் செய்திருக்கும் ரவிக்குமாருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-64208620795856366922014-07-08T11:38:00.000+05:302014-07-08T11:43:58.744+05:30இரத்த அழுத்தம்!1996 ஆம் ஆண்டு காலம் மாறிப் போச்சு என்ற சினிமா வந்தது, பாண்டியராஜன், வடிவேலு, சங்கீதா, சரளா போன்றவர்கள் நடித்த திரைப்படம். அதில் சங்கீதாவின் அம்மாவான வடிவுக்கரசிக்கு ஒரு வாக்குவாதத்தில் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். ஒரு பெட்டில் படுத்திருக்கும் அவரை, டாக்டர் பரிசோதித்தபிறகு வந்து சொல்வார் “ உங்கம்மாவுக்கு ஏற்கனவே இரத்தக்கொதிப்பு இருந்திருக்கு, பத்தாததக்கு அவங்க மனசைப் பாதிக்கிறமாதிரி ஏதோ ஒண்ணு நடந்திருக்கு, இதெல்லாம் ஒண்ணா சேந்ததனால மூளையில இருக்கிற இரத்தக்குழாய் வெடிச்சிருச்சு, என்னால முடிஞ்சவரைக்கும் எல்லா ட்ரீட்மெண்டும் கொடுத்திருக்கேன்” என்பார். இந்த வரிகள் ஒரு மறக்கமுடியாத சம்பவத்தை ஞாபகப்படுத்தியது. மூளையில் உள்ள இரத்தக் குழாய் வெடித்திருந்தால் முதலில் அதுதான் பிரச்சனையா என்று ஸ்கேன் எடுக்காமல் சொல்லமாட்டார்கள். இரத்த அழுத்தம் Systolic, Diastolic என இரண்டு வகையில் குறிப்பிடுவார்கள், ... இதயம் சுருங்கும்பொழுது ஏற்படும் அழுத்தம் சிஸ்டலிக், இதயம் விரிவடையும் பொழுது ஏற்படுவது டயஸ்டலிக், சுருக்கமாகச் சொன்னால், லப் என்றால் Systolic, டப் என்றால் Diastolic. இவையும் சர்க்கரை அளவைப் போலவே 120-80 என்ற கணக்கில் இருக்கவேண்டும், மேலதிக தகவல்களுக்கு கூகிளில் தேடலாம். (நான் மருத்துவரல்ல) இவை எப்பொழுது 200ஐத் தாண்டுகிறதோ, அப்பொழுது நீங்கள் பவுல்ட் ஆகப்போகிறீர்கள் என்று அர்த்தம்.
மாமாவுக்கு இந்த பிரச்சனை திருப்பதி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கும்பொழுது ஏற்பட்டது. எங்களில் யாரும் உயர் இரத்த அழுத்தம் பற்றி சினிமாவில் கேட்டதோடு சரி, அதன் விளைவுகளைப் பார்த்தவர் கிடையாது. மாமாவுக்கு இடதுபுறம் மட்டும் செயலிழந்து வாய் கோணியது, கைகள் மரத்துவிட்டிருந்தது. அதுதான் முதல் அறிகுறி. ஸ்ட்ரோக் (அதற்கு முன்னரேயே தலைவலிக்க ஆரம்பிக்கும்) . மூளையில் இரத்தம் அப்போதுதான் வெடித்திருக்கும். சத்தமில்லாத வெடிகுண்டு. பிறகு செல்போன் பேட்டரி லெவல் குறைவது போல, மூளை கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை இழக்கத் தயாராக இருக்கும் நொடி அது. மூளை முதலில் கட்டவிழ்த்துவிடுவது, சிறுநீரையும் மலத்தையும் தான். சிறிதுநேரத்திலேயே வெளியேறிவிடும், அவர் அறியாமலயே.. அப்போதுவரைக்கும் தனக்கு இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது.. மாமா அப்படித்தான் இருந்தார். பின்னர் சாப்பிட்ட உணவும் வாந்தியாகிவிடும். அதுதான் மூளை செய்த கடைசி வேலை என்பது எங்களுக்கும் தெரியாது. திருமலையிலேயே மருத்துவர்களுக்கு இதுதான் விஷயம் என்பது தெரிந்துவிட்டது. கீழ் திருப்பதிக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ள சொன்னார்கள், மூளை எதையெதையோ ஞாபகப்படுத்தும், உளறினார். திருப்பதி அரசு மருத்துவமனையில்தான் விஷயம் தெரியவர ஆரம்பித்தது, மருத்துவர்கள் எந்தவித தயக்கமுமில்லாமல் பக்கவாதம் வந்துவிட்டது என்றார்கள், எனக்கு என் மனதில் பக்கவாதம் ஆகிவிட்டது போல இருந்தது. எனக்கு சட்டென நிலைமை புரிந்துவிட்டது, சரி, இனி என்ன செய்யலாம், இவர் எப்போது வீட்டுக்குப் போகமுடியும் என்றேன். கோமாவில் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டுதான் கேட்டேன்.. தலைக்கு ஒரு எம்.ஆர்.ஐ எடுக்கச் சொன்னார்கள். பிறகுதான் முழுவிபரமும் தெரிந்தது. அந்த மருத்துவருக்கு முன்பே தெரிந்திருக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை. என்னிடம் சொல்லும்போது என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை, ஏனெனில் நான் ஒருவன் மட்டுமே அங்கே ஆங்கிலம் புரிந்து கொண்டவனாக இருந்தேன். இதை தங்கையிடம் சொல்லவேண்டும்..
ஹைபர்டென்ஷன் என்று சொல்லப்படுகிற இந்த தீவிரவாதியின் வன்முறைக்கான காரணம் என்னவென்று எங்களால் சொல்லமுடியவில்லை, ஒவ்வொருவரும் தனக்குத் தகுந்த காரணத்தை வடிவமைத்துக் கொண்டார்கள். எல்லாரையும் பார்ப்பதற்கு வெறுப்பாக இருந்தது. வேலூர் சிஎம்சிக்குச் சென்றும் பயனில்லை, மூளையில் விபத்து ஏற்பட்டால் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பதையும் சினிமாதான் எனக்கு போதித்திருந்தது. பெரும் செலவு செய்தால் ஒரு சதவிகிதம் காப்பாற்ற முடியும். ஆனால் ஆயுளுக்கும் பக்கவாதம் தான். அல்லது கோமாவிலேயே இருக்கவேண்டியதுதான். ஒருவாரத்தில் இறந்துவிட்டார். ஒருசமயத்தில் நாங்கள் அவர் இறப்பதே பரவாயில்லை என்றுகூட யோசித்தோம், ஏனெனில் அவரை அந்த நிலையில் தினமும் பார்க்கவே முடியவேயில்லை, முடிவோ மிக நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. அவர் இறக்கும் வரையிலும் மூன்னூறை விட்டு இரத்த அழுத்தம் இறங்கவேயில்லை... ஆகவே எந்தவொரு தானமும் செய்ய முடியாது என்றுவிட்டார்கள். இறந்து போன என் மாமாவுக்கு மூன்று வயதில் குழந்தை இருந்தது.
இப்ப்போது நான் மீண்டும் “காலம் மாறிப் போச்சு”க்கே வருகிறேன். வடிவுக்கரசி கண்விழித்து சங்கீதாவைப் பார்ப்பார். எல்லாரையும் ஒருமுறை பார்ப்பார், பிறகு இறந்துவிடுவார். இரத்த அழுத்தம் அதிகமாகி மூளைவெடிப்பு ஏற்பட்ட ஒருவர், முழித்து கண்ணீர் மழ்க பார்த்து வசனம் பேசி இறப்பதெல்லாம் சினிமாவில்தான். நிஜத்திலும் அப்படி இருந்திருக்கலாமோ என்று தோணவைக்கும் காட்சிதான் அது. திரைப்படத்தில் சொல்வது போல ஏதோ ஒரு சம்பவத்தின் அழுத்தம் மட்டுமே காரணமல்ல, எந்தவொரு சம்பவ அழுத்தமுமில்லாமல் இரத்த அழுத்தம் வரலாம்...
ஃபேஸ்புக் நிலைத்தகவலுக்காக எழுத ஆரம்பித்து இறுதியில் கொஞ்சம் பெரிதாக வலைப்பதிவில் பதிவிடும்படி ஆகிவிட்டது, ஃப்லோ கொஞ்சம் மாறி மாறி இருக்கலாம். தகவல் தேவையானது.
அன்புடன்
ஆதவா.
ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com0Tiruppur, Tamil Nadu, India11.1085242 77.34106559999997910.9838747 77.179704099999981 11.2331737 77.502427099999977tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-51824410925147839442012-10-20T20:35:00.002+05:302012-10-20T20:35:48.904+05:30உண்மையான கிறுக்கல்.<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdsNww5p-Q-DjsAv-UJ-YPPRqofOmP76CIwvtJZ3P-g1kKmRkzjfjqHhnNK5apsLFJyDqFwil4bDSeZ45anL7LLiqs7yWVIGcM9ZaPhzjQ_q3UyrQximZRd2JrONjbpIzXWDy4iQSdLZk/s1600/pene.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdsNww5p-Q-DjsAv-UJ-YPPRqofOmP76CIwvtJZ3P-g1kKmRkzjfjqHhnNK5apsLFJyDqFwil4bDSeZ45anL7LLiqs7yWVIGcM9ZaPhzjQ_q3UyrQximZRd2JrONjbpIzXWDy4iQSdLZk/s320/pene.jpg" width="229" /></a></div>
<br />
இதுதான் உண்மையான கிறுக்கல்.<br /><br />பெனுலுபி க்ரூஸ்...<br />on progress......ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-12142086191318961842012-10-19T15:45:00.001+05:302012-10-19T15:45:07.419+05:30கரிக்கோல் ஓவியங்கள்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0zwc0zJ3wGa0nVqW9gA4ePA9uOu4wLINCSd4duGL8hnJQLjupKoWFJ-EnR46E8j-2i7Ld0NybXDf2bSFTN9GwIeF3IGritCZdDDPzVxfq_QUd1dKLHHbdIuL6w1M2T9Y9I48ToFBJ3GQ/s1600/456347_4766452124952_678519628_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0zwc0zJ3wGa0nVqW9gA4ePA9uOu4wLINCSd4duGL8hnJQLjupKoWFJ-EnR46E8j-2i7Ld0NybXDf2bSFTN9GwIeF3IGritCZdDDPzVxfq_QUd1dKLHHbdIuL6w1M2T9Y9I48ToFBJ3GQ/s320/456347_4766452124952_678519628_o.jpg" width="289" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKvFs739Bc7CT5rBcaU7oG_F-sx-M-MXyOnI_2j1a9bMyneXOM-5nsA1KakI0g2EGF9GX1wtJBlnyMhT-Omgi-DjujuoizZvPXxoeQTru4hy9slpyX7rwfijdjtAskuvoY64c0kTOZO6U/s1600/322520_4690294101049_1558591929_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKvFs739Bc7CT5rBcaU7oG_F-sx-M-MXyOnI_2j1a9bMyneXOM-5nsA1KakI0g2EGF9GX1wtJBlnyMhT-Omgi-DjujuoizZvPXxoeQTru4hy9slpyX7rwfijdjtAskuvoY64c0kTOZO6U/s320/322520_4690294101049_1558591929_o.jpg" width="262" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZrC4irfWXCFSpH9LisaHivlTLK38y_aVrCqp3qUe_GTmc7s0aT-jqYZDtR-mvy6DLf9Zmo5tLvo6lsP2kjHezaRsKx2arz_k9ifuc-SWcxipAIKS6cINWNQrNnp5r8uMoMT7zlyOBlEo/s1600/398286_4803524251732_1459446515_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZrC4irfWXCFSpH9LisaHivlTLK38y_aVrCqp3qUe_GTmc7s0aT-jqYZDtR-mvy6DLf9Zmo5tLvo6lsP2kjHezaRsKx2arz_k9ifuc-SWcxipAIKS6cINWNQrNnp5r8uMoMT7zlyOBlEo/s320/398286_4803524251732_1459446515_n.jpg" width="238" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
பென்சில்ல வரைஞ்சது.</div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-29789409914776123292012-09-01T12:54:00.000+05:302012-09-01T13:09:30.845+05:30முகமூடி.... கழற்றி எறியப்பட்ட முகம்<table border="0" cellspacing="0" cellpadding="2" width="466"><tbody> <tr> <td valign="top" width="231"> <p>Directed & Written</p> </td> <td valign="top" width="233">Mysskin</td> </tr> <tr> <td valign="top" width="231">Starring</td> <td valign="top" width="233"> <p>Jiiva, Narain, Pooja Hegde, Nasser</p> </td> </tr> <tr> <td valign="top" width="231">Music</td> <td valign="top" width="233">K</td> </tr> <tr> <td valign="top" width="231">Cinematography  </td> <td valign="top" width="233">Sathya</td> </tr> <tr> <td valign="top" width="231">Year</td> <td valign="top" width="233">2012</td> </tr> <tr> <td valign="top" width="231">Language   </td> <td valign="top" width="233">Tamil</td> </tr> <tr> <td valign="top" width="231">Genre</td> <td valign="top" width="233">Super Hero</td> </tr> </tbody></table> <p><a href="http://lh3.ggpht.com/-DELoR6F8gCU/UEG4Tp8vg_I/AAAAAAAABlY/-Rqwn5wWpLM/s1600-h/Mugamoodi-poster%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="Mugamoodi-poster" border="0" alt="Mugamoodi-poster" src="http://lh5.ggpht.com/-mYgy5wzq8bc/UEG4XvldWdI/AAAAAAAABlg/x-5OCqzIYxc/Mugamoodi-poster_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="212" height="330" /></a></p> <p>ஒரு சூப்பர் ஹீரோவுக்கு எப்பொழுதும் தருக்க ரீதியிலான காரணங்கள் உண்டு. அவன் ஏன் தேவைப்படுகிறான் என்பதன் மீதான மிக அழுத்தமான அல்லது மித அழுத்தமான ஒரு காட்சி நிச்சயம் இருக்கும். தங்களைக் காக்க ஒருவன் கடவுளென வரமாட்டானா எனும் பார்வையாளின் அசாத்திய கனவுகளின் வெளிப்பாடுதான் அசாதாரண மனிதன் எனும் கதைகள் தோன்றுவதற்கான காரணம். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சூப்பர் ஹீரோ என்பவன் இன்று நேற்று முளைத்தவனல்லன், ஸ்டான்லீ, பாப் கேன் போன்ற மிகச்சிறந்த கற்பனாவாத சித்திர எழுத்தாளர்களின் வழியாக மெல்ல மெல்ல உருப்பெற்று இன்று வளர்ந்து நிற்கிறது. மேலும் அதன் மீதான மீள்பார்வையும் அவ்வப்போது வைக்கப்படுகிறது., அமெரிக்கர்களின் பொருளாதார சூழ்நிலைக்கொப்ப அத்திரைப்படங்களும் பிரம்மாண்டமாகவே வடிவமைக்கப்பட்டு வருகின்றன. </p> <p>நமது தமிழ் சினிமாவிலும் சூப்பர் ஹீரோக்கள் உண்டு. மக்களை காப்பதுதான் ஒரு சூப்பர் ஹீரோவின் வேலை என்றால் நமது முதல் சூப்பர் ஹீரோ எம்.ஜி.ஆர் தான். ஒரே குத்தில் ஒன்பதடி தூரம் பறந்துவிழுமளவு திறமைமிக்க பாத்திரங்கள் வடிக்கப்பட்டு வெளிவரும் எல்லா படங்களுமே சூப்பர் ஹீரோ படங்கள்தான்.. நமது திரைப்படங்கள் நமது பார்வையைக் குலைத்து புரிதலை மாற்றியமைத்து வைத்திருப்பதுதான் ஆகப்பெரிய சாதனை என்று கருதுவேன்.</p> <p>ஆனால் அமெரிக்க சூப்பர் ஹீரோ எப்படி மாறுபடுகிறான்? </p> <p>அமெரிக்க படங்களில் வரும் சூ.ஹீரோ அசாத்திய சக்தியினை அடக்கிய ஒரு சாதாரண மனிதனாக இருக்க முயலுவான், அல்லது தனக்கேயுரிய கண்டுபிடிப்புகள் மூலமாக ஒரு சூப்பர் ஹீரோவாக முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெறுவான், (பெரும்பாலும் ம்யூட்டண்டுகளைத்தான் இந்தியர்கள் ரசிக்கிறார்கள்) ஒரு கொலை, தன்னை உணரல், பழிவாங்கல், இறுதியில் மக்கள் நாயகனாக இருத்தல்.... இவையனைத்தும் ஒரு சூ.ஹீ படங்களில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்..</p> <p>சரி.. ஓவராக பேசாமல் விசயத்திற்கு வருகிறேன். </p> <p>அமெரிக்க படங்களோடு எப்பொழுதும் நமது படங்களை ஒப்பிடவே மாட்டேன்... மிஸ்கினின் முகமூடி ஒரு சூ.ஹீ படம் என்பதால் ஒரு சூ.ஹி படத்திற்குண்டான அம்சங்களை சரிபார்த்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. காமிக்ஸ் படிக்கும் பழக்கமில்லாத (புத்தகம் அறவே படிக்கும் பழக்கமில்லாத) நம்மிடையே ஒரு புதிய சூப்பர் ஹீரோ உருவாவதற்கான சாத்தியங்களை நாம் எப்பொழுதும் கொடுத்ததேயில்லை. புத்தகங்களிலிருந்து சினிமா செல்வதற்கான வழியையும் நாம் கடைபிடிப்பதில்லை என்பதற்கான சாட்சியாக “முகமூடி” முகம் முழுக்க பேண்டேஜுகளைப் போட்டு கிடக்கும் நோயாளியைப் போல வந்திருக்கிறது. இது மிஸ்கினிடமிருந்து வந்திருப்பதுதான் ஆகப்பெரிய வியப்பு.</p> <p>இரண்டு கதைகள் பேரலல்லாக நகர்கின்றன. ஒன்று, ஜீவா எனும் குங்ஃபூ மாணவன் காதலியைக் கவிழ்க்க முகமூடியணிந்து இரவில் திரிகிறான். இரண்டாவது ஒரு முகமூடி கும்பல் நகைகளை மட்டுமே கொள்ளையடிக்கிறார்கள். அவர்களை பிடிக்க முடியாமல் திணறும் போலிஸ்.. இவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியிலிருந்து கதை துவங்குகிறது... அதற்குள் இடைவேளை வேறு.. யாருமில்லாத இடத்தில் முகமூடி அணிந்துகொண்டும், யாராவது பார்க்கும்பொழுது முகமூடி கழற்றும் கொடூரமான வில்லன் நரேன் தான் இதற்கு முக்கிய காரணம் என்றறிந்த பிறகு தான் தப்பிக்க பள்ளி வாகனத்தைக் கடத்தி டிமாண்ட் செய்கிறான். கூடவே காதலியையும்.. காதலிக்கு ஒரு ட்விஸ்டெல்லாம் இருக்கிறது. அந்த கண்றாவியைப் பற்றி எழுத விரும்பவில்லை இவர்களை எப்படி மீட்கிறான் என்பது மீதிக் கதை</p> <p><em>ஒரு சூ.ஹீ படத்தினை இயக்கப்போவதாக அறிவித்து விட்டோம்... முதலில் என்ன செய்யலாம்... நமது பட்ஜெட்டுக்கு நம் ஹீரோவை ஸ்பைடமேனாகவோ சூப்பர்மேனாகவோ மாற்றமுடியாது.. மிகப்பிரச்சித்தமான பேட்மேன் தான் சரியான தேர்வு. ஏற்கனவே நிறைய சூ.ஹீ படங்கள் வெளிவந்துவிட்டமையால் நகலெடுக்கக்கூடாது.. அல்லது நகலெடுத்தது தெரியக்கூடாது.. டார்க் நைட் தான் என்று முடிவாகிவிட்ட பிறகு படத்தில் ஒரு கொள்ளை இருக்கவேண்டும், ஹீரோ ப்ரூஸ் வேய்ன் மாதிரி பணக்காரனாக இருந்தால் அது காப்பி, ஏழையாக்கிவிடலாம். ஆனால் அவரது தாத்தா லூஸியஸ் ஃபாக்ஸாக இருக்கலாம். பெரிதாக தெரியாது. மேக்கப் கூட பாதி பேட்மேன், முகத்தில் ஐஸ் வைட் ஷட்டில் படத்தில் வரும் முகமூடி.. வில்லன் க்ரூப்புகளுக்கு  மோர்டல் காம்பாக் ஸ்கார்பியன் மாதிரி முகமூடி!!  வில்லன் ஒரு ஜோக்கர்... ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒன்பதுமாதம் தங்குபவன் ஒரு குங்ஃபூ பள்ளியைக் கட்டி சம்பாதிக்கிறான்... டார்க்நைட் ஜோக்கர் எப்படி காரணமில்லாமல் பேட்மேனை எதிர்கிறானோ அதைப்போல நரேன் காரணமில்லாமல் கொள்ளை அடிக்கலாம்.. அதுசரி கொள்ளையடிக்க ஏது காரணம்? ஜோக்கர்தான் நரேன் என்று முடிவாகிவிட்ட பிறகு ஜோக்கரின் சில குணாதிசயங்களைப் பொருத்திவிடலாம். மனதினை குழப்பிவிட்டு வெறியேற்றி அடிப்பது ஜோக்கரின் வேலை என்றால் நாமும் அதையே செய்வோம். யாராவது ஒருவரின் இறப்பில்தான் சூ.ஹீ தோன்றுவார்.. அதை அப்படியே காப்பியடிக்கக் கூடாது, இறப்பது போல காட்டிவிட்டு உயிர்த்தெழ செய்திடவேண்டும்.  கப்பல் நிறைய பயணிகளைக் கடத்தினால் நம் பட்ஜெட்டுக்கு ஆகாது. தவிர டார்க் நைட்டையே காப்பியடித்தல் கூடாது. சட்டென ஸ்பைடர்மேனுக்குத் தாவுவோம். ஒரு வேனைக் கடத்துவோம். முகமூடியின் காதலியையும் கடத்துவோம்..  ஆங்... ஓவர் காப்பி உடம்புக்கு நல்லதல்ல... ஜோக்கர் எப்பொழுதும் பேட்மேனோடு சண்டையிடமாட்டார். நாம் சண்டையிட வைப்போம். ஹீரோவைவிட வில்லன் சக்தி மிகுந்தவனாக்கிவிடுவோம்.. பிறகு எப்படி வெல்வது?? கராத்தே கிட்டிலிருந்து கொஞ்சம் கடன் வாங்குவோம். வித்தியாசமான ஏணி ஃபைட், வில்லனுக்குத் தெரியாது ஆனால் ஹீரோவுக்குத்தான் தெரியும்.. கண்ணை மூடிக்கொண்டு அடிப்போம். எல்லா சூப்பர்ஹீரோ படங்களிலும் வில்லன்கள் எப்படி செத்தொழிந்தார்கள்?? தற்கொலைதான்... அந்த ஃபார்முலாவை நாமும் கடைபிடிப்போம்...</em></p> <p>- மிஸ்கினின் பேட்டி ஒரு கண்ணாடிக்கு முன்...</p> <p>ஒளிப்பதிவு ஒன்றுதான் படத்தில் சொல்லத்தகுந்த திரையம்சமாக இருக்கிறது. மிஸ்கினின் மெளன இசை காட்சிகள் இதில் இல்லை... படம் நெடுக வாசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். எப்போதுதான் நிறுத்துவார்கள் என்றிருந்தது. சண்டை காட்சிகள் சட்டென முடிந்துவிடுகிறது. சாதா காட்சிகள் நீளுகின்றன. லோ ஆங்கில், வைட் ஆங்கில், லாங் ஷாட் (ரொம்ப லாங் இல்லாததால் தப்பித்தோம்) போன்ற மிஸ்கின் கிளிஷேக்கள் இருந்தாலும் வழக்கமான மிக அழுத்தமான மிஸ்கின் திரைக்கதை இதில் சுத்தமாக இல்லை.. ஆஃப் கோர்ஸ் அசுத்தமாகவும் இல்லை! </p> <p>ஜீவாவை வீணடித்துவிட்டார், கதாநாயகி பூஜாவுக்கு அடுத்த பட வாய்ப்புகளே வராது. நரேனும் ரொம்ப பாவம்...</p> <p>ஒன்றரை மணிநேரத்தில் மிகச்சிறப்பான திரைக்கதையமைத்து தந்துகொண்டிருக்கும் அமெரிக்கர்களின் படங்களை காப்பி செய்வதைக் காட்டிலும் அவர்கள் எப்படி எடுக்கிறார்கள் எனும் யுக்தியை காப்பியடிப்பதில் தவறில்லை.. திரைக்கதை என்ற ஒரு வஸ்துவை திரைமுழுக்கத் தேடவேண்டியிருக்கிறது. டார்க்நைட் போல நோலனே எடுக்க முடியாது என்பதுபோல வித்தியாசமான இயக்குனர் என்று பெயரெடுத்த மிஸ்கின் கமர்ஷியல் படங்களை எடுக்க முடியாது போலும். இப்படம் ஒரு கலைப்படத்தையும் கமர்ஷியலையும் கத்தரித்து தைத்ததுபோல இருக்கிறது. கலைப்படம் என்றதும் ஓவராக எடுத்துக் கொள்ளவேண்டாம்..இந்த படத்தில் முகமூடி என்ற பாத்திரமே தேவையில்லை. ஒரு சாதாரண மனிதனாகவே இருந்திருக்கலாமே? ஒரு விஜய், அஜித் கம்ர்ஷியல் படங்களில் முகமூடி அணிந்து நடித்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது. ஒரு சூ.ஹீ படம் மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கவேண்டும்.. அதன் அம்சம் ஒன்றுகூட இங்கே இல்லை! . Kick Ass எனும் லோ பட்ஜெட் படம் ஒன்று வந்தது.. ஒருமுறை பாருங்கள் மிஸ்கின். முகமூடி 2 எடுக்கலாம்.</p> <p> எப்போது படம் முடியும் என்று நோகவைத்த இப்படம் தோல்வியுற என் ஆழ்ந்த அனுதாபங்கள்!</p> <p> <br />இறுதியாக...</p> <p>தயவு செய்து தியேட்டருக்குப் போய் பார்க்காதீர்கள்.. திருட்டு விசிடியில் கூட பார்க்கத் தகுதியற்ற திரைப்படம் இது.! <br />எனக்கு கந்தசாமியைப் பார்க்க ஆவலாக இருக்கிறது!!</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-24981164707293141682012-04-02T10:18:00.000+05:302012-04-02T10:19:16.592+05:30பிரைவேட் வசீலி கோஸ்லோவ்<p>பிரைவேட் வசீலி கோஸ்லோவ்.. நீண்டநாட்களாக என்னைத் துரத்தி வரும் பெயர் இது. எங்கே எப்படி உருவானது என்பது எனக்குத் தெரியும் என்றாலும் எத்தனையோ நண்பர்கள் எத்தனையோ பெயர்கள்.... இருப்பினும் ”வசீலி” மட்டும் என்னை ஏன் துரத்தி வருகிறது? பிரைவேட் ஜோ மார்ட்டின் தான் என்னை முதன் முதலில் அவனை அறிமுகம் செய்து வைத்தான். (அவனைப் பற்றி சொல்ல எனக்கு எந்த நினைவுமில்லை, அவன் பெயர் மார்ட்டின் என்பது மட்டும்தான் என் நினைவில் இருக்கிறது. சிலசமயம் ஜோவாக நானும் மாறிப் போயிருப்பதை அறிந்து கொண்டிருக்கிறேன்.) வசீலி ஒரு திடகாத்திரமான, துல்லியமான இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட வீரன். ரஷ்யர்களுக்கேயுரிய நளினமான முகமும், சற்றே ஒடுங்கிய மூக்குமாக, (அம்மா பெயர் அகாசுகி ) எப்பொழுதும் மனைவி டொமினிகா போட்டோவை பாக்கெட்டில் வைத்திருப்பான். அவ்வப்போது டொமினிகாவை முத்தமிட்டு “இந்நேரம் அவளது கன்னத்தில் எச்சில் படர்ந்திருக்கும்” என்பான். ஜார்ஜியாவில் 13வது ரைஃபில் டிவிசனில் நானும் அவனும் ஒன்றாகத்தான் பணி புரிந்தோம். பங்கர்களில், வெடிமருந்து பதுக்கின இடங்களில், தாழ்வாரமான இடங்களில், மோர்டர் இயக்குமிடங்களில், பீரங்கிகளில் இன்னும் பல இடங்களில் நெடுநேரம் ஒன்றாகப் பொழுதைப் போக்கியிருகிறோம். கடைசியாக அவனைப் பற்றி கேள்விப்பட்டது வோல்கா ஆற்றங்கரையில் இரத்தத்தின் கைகளில் தவழ்ந்து கிடந்திருந்தான்.. </p> <p>மாலதி, மேஜை மேலே கையை ஊனியவாறு என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள். சுமாரான நிறத்திற்கும் சற்று மேலானவள், நன்கு புடைத்த மூக்கு, குண்டு கண்கள். நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டியிருக்கிறதா இல்லையா என்பதை அருகில் சென்றுதான் பார்க்கவேண்டும். அன்று ஆரஞ்சு வர்ணத்தில் புடவையும் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். உள்ளாடையின் கோடு தோளிலிருந்து இறங்கியிருந்தது. நின்றபடி குனிந்து கொண்டிருந்ததால் மேஜையின் விளிம்பில் அவளது மார்பு முட்டிக் கொண்டிருந்தது. சில்வியாவை மட்டும்தான் இப்படி பார்த்ததுண்டு. அவள் ஒரு அதிசயம் என்றே சொல்லவேண்டும், வானொலி அலைவரிசையைத் தேடிக் கொண்டிருப்பாள். குத்தவைத்து அமர்ந்து தொடைகளில் அவளது மார்பு படர்ந்து திமிர, மொட்டையடிக்கப்பட்ட அவளது தலை பார்ப்பதற்கு வசீகரமாகவே இருந்தது. எங்கள் டிவிசனில் அவள் மட்டுமே ஒரு பெண் என்பது பேரதிசயமானது! யாரும் அவளை எதுவும் செய்யவில்லை என்பது இன்னும் அதிசயம்தான். மாலதியை அல்லது அதனைப் பார்த்துவிட்டு திரும்புகையில் பின்புறம் புடைத்திருந்த அவளது புட்டத்தில் ஒரு கை வைக்கவேண்டும் என்று தோணியது. </p> <p>சே! என்ன நினைப்பு இது? திடீரென எப்படித் தோன்றியது? நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாதே? நான் பெண்சுகத்திற்கு அலைகிறேனா? அவர்களின் தேகங்களின் இடுக்குகளில் என் கண்களை ஒப்புகொடுக்கின்றேனா? ஆணின் கண்கள் வேட்டை மிருகங்களின் கண்களைப் போன்றது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கண்கள் ஏதாவது ஒன்றை வேட்டையாடி களைத்துப் போக விரும்புகின்றனவா? நிறையதடவை மாலதியை இப்படி பார்த்து பின் அது தவறு என்று எனக்குநானே சொல்லியிருக்கிறேன். எனது பார்வையின் கூர்மை அவளது அங்கங்களைத் துளையிட்டுச் செல்வதை அவள் அறிவாளா?</p> <p>போரின் போது யாராவது பெண்கள் துணைக்கு இருந்திருக்கலாம். இரவுகளில் நானும் ஜான் டேவிஸும் பெண்களைப் பற்றி பேசுவோம். அது பெரும்பாலும் அவர்களைக் கொச்சைப்படுத்துவதாகத்தான் இருக்கும். சதா ஆண்களையும் அவர்கள் தூக்கிச் செல்லும் துப்பாக்கிகளையும் பார்த்தே பழகிவிட்ட எமக்கு சில்வியா தவிர (அவளும் ஸ்டாலின்கிராடில் கொல்லப்பட்டுவிட்டாள்) வேறு பெண்களே நினைவில் இல்லாமல் போய்விட்டது. உலகில் பெண்களையே பார்க்க முடியாத ஒருவனுக்குத்தான் அது எவ்வளவு பெரிய தண்டனை என்பது தெரியும். டேவிஸ் தனது சிறுவயது இச்சைகளைப் பற்றி பேசுவான். அவர்களது பக்கத்துவீட்டு ஆண்ட்டி ஜோன்ஸைப் பற்றி பேசாத இரவே கிடையாது. இவை தவிர பெண் நினைவுகளின் பசுமையான காட்டுப்பரப்பு என்னை வியாபித்ததில்லை. ஆனால் அவர்கள் காட்டும் அங்கங்கள் என்னை ஒவ்வொருமுறையும் உறுத்திக் கொண்டுதான் இருந்தது. ஒருவேளை யுத்தங்களில் செத்து வீழும் பெண்களும் அவர்களின் அழுகுரலும் என்னை முற்றிலும் மாற்றியமைத்திருந்திருக்கலாம். எந்த நேரமும் குண்டுகளின் ஓசையில் பெண்களை நின்று கவனிக்க முடியாத சூழ்நிலையும், எதிரிகள் எனும் பார்வையில் பெண்களின் கவர்ச்சி மிகுந்த உடல்களும் எனக்குத் தெரியவேயில்லை. </p> <p>என்றாலும் ஒருநாள் சற்றே திரும்பியது பார்வை... அதை பிறகு சொல்கிறேன்.</p> <p>அப்பாவுக்கு நான் சிக்கிரம் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை. ஒவ்வொருமுறையும் பெண்பார்க்க வீட்டுக்குச் செல்வோம். பெண்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் அப்பாவின் நண்பர் ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்றோம். அவரது பெண் காயத்ரியை முன்பே தெரியும் என்றாலும் அவ்வளவாகப் பார்த்து பேசியதெல்லாம் கிடையாது. பெண்பார்க்கும் படலமாக அல்லாமல் சும்மா ஒரு விசிட் எனும் ரீதியில்தான் சென்றோம். அப்பாவும் ராமச்சந்திரன் அங்கிலும் பேசிக் கொண்டிருக்க, காயத்ரி ஆரஞ்சு வர்ண லோ டாப், லெக்கின்ஸ் அணிந்து தனது தொடையை வசீகரமாகக் காட்டியபடி வந்து நின்றாள். எனது கண்கள் முதலில் அவளது கண்களையும் பிறகு சற்றே பார்த்தும் பாராமலுமாக அவளது மார்பையுமே பார்த்தது. எனது ஆசைக்கும் அடங்காமைக்கும் நிறைவில்லாத வகையைச் சார்ந்த மார்பைக் கொண்டிருந்தாள். நெற்றியில் சின்ன பொட்டு இருந்தது. எனது கற்பனையில் அது பெரிதாக நீண்டு குண்டு துளைத்த பொட்டைப் போல இருந்தது. நான் எழுந்து வெளியே செல்லவேண்டுமென முற்பட்டேன். அப்பாவே கிளம்பிவிடலாம் என எழுந்தார். </p> <p>ஒருமுறை ஆஸ்திரியாவின் பவரியன் ஆல்ப்ஸில் பனி சொட்டச் சொட்ட நனைந்து சிதிலமடைந்திருந்த ஒரு மரவீட்டினுள் ஜெர்மனின் 18வது காப்பு ரைஃபில் டிவிசன் வீரர்கள் சிலர் இருந்தார்கள் எனத் தகவல் வந்தது. என்னோடு ஜான் டேவிஸும், ஜோனதன் ஸ்டீலும், மெக்காலேயும் இருந்தனர். என்னிடம் kar98k இரக ஜெர்மன் ரைஃபில் இருந்தது. அது எப்படி என் கைக்கு வந்தது என்பது ஞாபகமில்லை எங்கும் பனி பொழுந்து கொண்டிருப்பதால் கால்கள் புதைந்து புதைந்து நடப்பதற்கு இயலாத சூழ்நிலையில் அந்த மரவீட்டினுள் என்னால் சீக்கிரம் நுழைய இயலவில்லை. . பொதக் பொதக் என்று எட்டு வைத்து விட்டருகே சென்றோம். கேப்டன் பிரின்ஸ் கண்களை நோக்கி இரண்டு விரல்களால் சுட்டி யாராவது உள்ளே இருகிறார்களா என்று பார்க்கச் சொன்னார். பிரைவேட் மெல்வினும், பிரைவேட் அலெக்ஸும் உள்ளே நுழைந்து யாருமில்லை என கை காண்பித்தார்கள். நாங்கள் அனைவரும் உள்ளே நடுங்கிக்கொண்டே சென்றோம். ”ஆல் கிலியர் ஸார்” என்றோம். மேல் மாடியில் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க நானும் ஸ்டீலும் நுழைந்தோம். மெல்ல கதவைத் திருப்பியதில் அலறல் சப்தம்! அலறியது ஒரு பெண். அப்பொழுது அவள் எனக்குப் பெண்ணாகத் தெரியவில்லை. ஸ்டீல் அவளை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறே சென்றான். அவளது சட்டையைக் கிழித்து வாயினையும் கையையும் கட்டி நடுவீட்டில் மண்டியிட வைத்தோம். “ஆல் கிலியர் சார்” என்றோம். கேப்டன் பிரின்ஸ் தனது துப்பாக்கியால் அவளது முகத்தை மறைத்திருக்கும் முடிகளைக் களைத்தார். மிக அழகான ஜெர்மன் முகம். கன்னத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாக புள்ளிகள், கண்கள் முழுக்க அழுதோய்ந்த வலி. யுத்தமக்களில் முதல் முறையாக பெண்ணை பெண்ணாக கவனித்தேன். இது ஒரு நல்ல வாய்ப்பு, அவளை அனுபவிக்க... துடிக்கத் துடிக்க அந்த எதிரியை காமத்தின் விசம் தோய்ந்த பற்களால் கடித்துக் குமுறவேண்டும்.. ஜான் டேவிஸை கவனித்தேன். அவனுக்கு இதில் எந்தவொரு விருப்பமுமற்று ஜன்னல் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். பிரின்ஸ் அவளிடம் ஜெர்மனில் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். அவளை அப்படியே விடமுடியாது எனும் நிலை. பனியின் புகை மண்டிய வாயினால் “டாப்” என்று சொல்லிவிட்டு பிரின்ஸ் நகர்ந்தார். அவர் என்னிடம்தான் அதைச் சொன்னார். கம்பீரமாக, வசீலியின் டொக்ரெவ் பிஸ்டலில் நெற்றியில் ஒரு பொட்! கீழே விழும் பொழுது அதிர்ந்த மார்பு என்னில் ஆண்மையைத் தூண்டியது. </p> <p>சில சமயம் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறேன். பெண்களின் வாசத்தை இன்னும் நுகராமல் இருப்பது என் தவறுதான். அதுதான் என்னை இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறதோ என்னவோ. டேவிஸ் என்னிடம் பழகும் பொழுதெல்லாம் பெண்களை அபரிமிதமான மிதப்பில் வர்ணிப்பான். எச்சில் ஊறி மனதெங்கும் பெண்களின் அங்கங்கள் தனித்தனியே துண்டாகிக் கிடக்கும் காட்சி ஓடும். போரில் ஏன் பெண்களை கற்பழிக்கிறார்கள் என்று கூறீனான். காமம் என்பது எந்த பெட்டிக்குள்ளும் அடங்காமல் திமிறக்கூடியது. அது ஒரு பாம்பைப் போல வெளியேறி பெண்களைக் கொத்திவிடுகிறது என்றான். அப்போதெல்லாம் என்னோடு வசீலி இல்லை. அவன் இம்மாதிரியெல்லாம் பேசக்கூடியவனல்ல. வாழ்க்கையை சுகமாக வாழ்வது பற்றியும், போருக்குப் பின்னைய வாழ்க்கையின் எதிர்பார்ப்பைப் பற்றியுமே பேசிக் கொண்டிருப்பான்.</p> <p>இரண்டாவதாக மாரப்பனின் பெண்ணை ஒரு மைதானத்தில் சந்தித்தோம். வெள்ளை வர்ண சட்டையும் பேண்டுமாக ஜாக்கிங் வந்திருந்தாள். ”அங்கில்” என்று கூப்பிட்டதும் நானும் அப்பாவும் திரும்பிப் பார்த்தோம். ஜாக்கிங் செய்தபடியே எங்களோடு வந்தாள். “என்ன அங்கில் இந்த பக்கம்” என்று ஆங்கிலத்தில் கேட்டாள். “ஜாக்கிங் எப்பவுமே வருவேனே, நீ இங்கதான் எப்பவும் வருவியா” என்றார் அப்பா. ஆமாம் என்றது அந்த வெள்ளைச் சட்டையும் பேண்டும்... ஜாக்கிங்கில் அதிர்ந்த அவளது மார்பு எனது காலைநேரத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது. நான் முன்னே செல்லவுமில்லை, பின்னே தாழவுமில்லை, மிதமாக அவளையும் அதனையும் கவனிப்பதை அறிந்து கொண்டாள். பின், இடுப்பில் கையை ஊனியவாறு நின்றுகொண்டு பேசினாள். அவளது கண்களின் வழியே வெளியேறிய கோபம் என் ஆண்மையைப் பொடிப்பொடியாக்கியது. </p> <p>( எப்பொழுதும் பெண்களை ஆண்கள் இப்படி ஏதாவது ஒரு நோக்கில்தான் பார்ப்பார்களோ? டேவிஸ் இதை மறுப்பான். அதை அவர்கள் விரும்புகிறார்கள். விரும்பாதது போல நடித்து விரும்பும் ஆண்களைக் கவர்கிறார்கள் என்றான். அது ஒருவேளை சரிதானோ என்று தோணும். ஸ்கூட்டரில் செல்லும் பெண்களின் பக்கவாட்டுத்தோற்றம், துணிக்கடையில் ஜீன்ஸ் எடுக்கவரும் பெண்களின் பின்புறம், பேருந்தில் கம்பியைப் பிடித்து தொங்கிக் கொண்டு வியர்வை காட்டும் அக்குள், மங்கை நைட்டி அணிந்தவாறு வாசலில் அமர்ந்திருக்கும் பெண்கள்-அவர்களின் மார்புகளில் புதைந்து கிடக்கும் குழந்தைகள், கீழே நின்று மேல் நிற்பவனுக்கு மார்பின் துளி காட்டும் அஜாக்கிரதை இன்னும் இன்னும் இன்னும்.. பெண்கள் அபாயகரமான வளைவுகளைக் கொண்டவர்கள்! )</p> <p>நிறைய பெண்களை நிராகரித்தேன். மாரப்ப கவண்டன் மகள் பார்வதி, எனக்குப் பொருத்தமானவள். வனப்பாக இருக்கிறாள். கற்பனைக்கு எட்டாதவாறு இருந்தாலும் போதுமென்றே நினைத்தேன். எனக்கு வசீலியின் மனைவி ஞாபகம் வந்தது. வசீலியைப் போலவே, ஏறக்குறைய ஒரேமாதிரி முகம். ஒரு ஸ்வெட்டரை கழுத்து வரைக்கும் இறுக்கி அணிந்திருந்தாள். பின்புறம் ஒரு சர்ச் இருந்தது. பெரும்பாலும் சிதிலமடைந்தே வைத்திருந்த போட்டோ என்பதால் என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை. ஸ்டாலின்கிராடில் செத்துப் போன சில்வியாவும் ஞாபகத்திற்கு வந்தாள். நான் நினைத்துப் பார்க்கவெண்டுமென்றால் இவர்கள் இருவரையும் மேற்கொண்டு மாலதியை மற்றும் அந்த ஜெர்மன் பெண்.. அப்பாவிடம் சொல்லி பார்வதையைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். காரணம் அவள் ஏராளமான மார்பை சுமந்து கொண்டிருக்கிறாள்.</p> <p>வசீலி என்னோடு இருந்தபொழுது ஒருமுறை டொமினிகாவும் அவனும் சந்தித்துக் கொண்டதைப் பற்றி பேசியிருக்கிறான், ’ஒரு மெல்லிய வர்ணத்தில் உடையணிந்திருந்தாள், ஏதோவொரு பூவின் வாசனை அவள் மீது எப்பொழுதும் இருக்கும், நல்ல உயரமாகவும், உயரத்திற்குத் தகுந்த உடலும் கொண்டிருப்பாள். முதன்முதல் பார்வையில் சிரித்துக் கொண்டோம். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்லுவதற்கு முன்னர் அவள் சத்தியம் வாங்கிக் கொண்டாள். எக்காரணத்திலும் என்னைக் கைவிடாதீர்கள் என்பதுதான் அது. கழுத்தில் தொங்கும் சிலுவையைத் தொட்டு வணங்கி சத்தியம் செய்து கொண்டேன். இருவரும் கலந்து கொண்டோம். நான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு டொமினிகாவின் கழுத்தில் தொங்கும் சிலுவை காரணமாக இருக்கும்’ கோர்வையாக இல்லாமல் தனித்தனியாகச் சொன்னான். டொமினிகாவின் மார்பை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை, அது வசீலியின் நெருக்கத்தினால் இருக்கலாம். அவ்வாறு கற்பனித்துத் தோற்கும் பொழுது நொந்து போவதை உணரமுடிகிறது.</p> <p>நான் ஏன் சில்வியாவையோ மாலதியையோ ”வைத்துக்” கொள்ளவேண்டும் என்று தோணவில்லை? </p> <p>கார்பொரல் பில் எப்பொழுதும் கூறுவார். பெண்களை அணுகுவது என்பது துப்பாக்கியின் குண்டுகளைப் போல... விசை அழுத்தாதவரைக்கும் வினை ஏதுமில்லை” எனக்கு இருக்கும் பிரச்சனை பெண்களின் மார்புகள். அவைகளை வெட்டி எறிந்துவிட்டால் பிரச்சனை ஏதுமில்லை என்று தோணுகிறது. முகம் முழுக்க நட்பையோ, காதலையோ பூசிக் கிடக்கும் பெண்களைக் காணமுடிவதில்லை, இது ஒருவகை வலி எனலாம். டாக்டரிடம் சென்றேன். திருமணத்தை மருந்தாக எழுதிக் கொடுத்தார். எனக்கு பார்வதி அல்லது மாலதி கூட போதும்தான். இறுதியாக காயத்ரி.. “உனக்கு பெண்ணா கிடைக்காது” என்றார்கள் உடனிருந்த நண்பர்கள். கிடைக்கலாம். ஆனால் பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் தரும் வலி, அல்லது கோபம், அல்லது... என்ன வார்த்தை என்று தெரியவில்லை, அது எனக்கு காயத்தை ஏற்படுத்துகிறது.</p> <p>கார்பொரல் இவனோவிச்சுடன் வசீலி வோல்கா ஆறைக் கடந்து கொண்டிருந்தான். ஜெர்மனின் லூட்வாஃப் விமானங்கள் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தன. இவர்களது பிரிவில் விமானங்களைத் தாக்கும் ஃப்லாக்பேன்ஸர்கள் போல ஏதுமில்லை. அல்லது அப்படியிருந்திருந்தாலும் பயன்படவில்லை. வசீலி, போட்டோவைக் கையில் வைத்துக் கொண்டே சென்றிருக்கிறான். வோல்கா ஆற்றைச் சுற்றியுள்ள காடுகளில் ஒளிந்திருந்து சென்றாலும் எவ்வளவு தூரம்தான் தப்பிச் செல்ல முடியும்? முழுக்க சிதைந்து இறந்துகிடந்தவர்களை எண்ணும் பொழுது கையில் புகைப்படத்துடன் இறந்தவனது பெயர் பிரைவேட் வசீலீ கோஸ்லோவ் என்றார்கள். அது எனக்குத் தெரியவர வெகுநாட்கள் ஆனது. அவனது அழகான மனைவி டொமினிகா இனி எனக்குத்தான். ரஷ்யாவில் எங்கோ ஒருமூலையில் கணவன் திரும்புவான் எனக் காத்திருக்கும் அந்த பெண், சார்ஜெண்ட் மூடியாகவோ, பிரைவேட் எல்விஸ் வைட்டாகவோ அல்லது வசீலி கோஸ்லோவ் மாதிரியோ என்னை நினைத்துக் கொள்ளட்டும். அவளது மார்பின் சூட்டை ஒருமுறையேனும் உணரவேண்டும். </p> <p>எனக்கு காயத்ரிதான் அமைந்தாள். நான் எந்த எதிர்ப்பும், கோபமும், காதலும் அவள்மீதும், திருமணம் செய்து வைத்தவர்கள் மீதும் கொள்ளவில்லை. டொமினிகா அல்லாத ஒரு பெண் (ஜோன்ஸ் மாதிரி இருப்பாளோ) அமைந்ததில் சற்றே வருத்தம்தான். இன்றுவரையிலும் வசீலியும் டொமினிகாவும் என்னை ஆக்கிரமிப்பதை அதன் காரணத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை, காயத்ரியிடம் கூட. நான் எதிர்பார்த்த பெண் தானில்லை எனும் வருத்தம் அவளுக்கு எழாதவாறு நடந்து கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தேன். அவளோடு முயங்கும் ஒவ்வொரு நாளும் அவளது உடலை அழித்து டொமினிகாவையோ அல்லது பெயரறியா ஜெர்மன் பெண்ணையோ பொருத்திக் கொண்டேன். என்னமாதிரியான குற்றம் அது. ஆனால் எனக்கு மட்டுமே தெரிந்த குற்றம். காலையில் அவள் என் அப்பாவிடம் “ப்ரைவேட் வசீலி” பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எப்படியோ நான் உளறியிருக்கிறேன். இருப்பினும் எனது இரகசியம் என்னோடே இருக்கட்டும். அவள் மெல்ல மெல்ல டொமினிகாவாக மாறிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கழுத்து வரையிலுமான வெள்ளை ஸ்வெட்டர் வாங்கிக் கொடுத்தேன். சர்ச்சுக்குப் பின்னே போட்டோ எடுத்துக் கொண்டேன். ஒருநாள் அவளது நெற்றிப் பொட்டில் சுட்டு “இறந்து போ ஜெர்மன் பெண்ணே” என்றேன். என்னிடம் வசீலியின் டொக்ரெவ் பிஸ்டல் இப்பொழுது பெரட்டா 92s பிஸ்டலாக இருந்தது.</p> <p><font color="#cccccc">பிகு: <br />சிறுகதைக்கு உதவிய சில கணிணி விளையாட்டுகள், காமிக்ஸ், இணையம், விக்கிபீடியா போன்றவற்றிற்கு நன்றி!</font></p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-10807783233781628352012-03-17T15:38:00.000+05:302012-03-17T15:40:44.914+05:30சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா?<p> </p> <p><a href="http://lh3.ggpht.com/-hEFL3VGic8w/T2Ri5W6tjzI/AAAAAAAABV8/8B1zCLn_ttY/s1600-h/143579%25255B6%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="143579" border="0" alt="143579" src="http://lh3.ggpht.com/-YSHPAeVQvgA/T2RjDbIxQWI/AAAAAAAABWE/mkD1oVe4i8Y/143579_thumb%25255B4%25255D.jpg?imgmax=800" width="268" height="379" /></a></p> <p>கிட்டத்தட்ட பழமொழியாகவே ஆகிவிட்ட இந்த சொற்றொடர் மீண்டும் மீண்டும் இந்தியா தோற்பதால் உருவாகிவருகிறது. இந்திய அணி அப்படியொன்றும் அசாதாரண அணி அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும், சச்சின் ட்ராவிட் கங்குலி போன்ற ஜாம்பவன்களால் அது கபில்தேவ் காலத்திய அணியிலிருந்து உருமாறி இன்றைய அதிரடி நிலைக்கு வந்து நிற்கிறது. இந்திய அணியின் மாபெரும் உருவாக்கத்தில் சச்சினது பங்கு நிச்சயம் பெருமளவில் இருப்பதை மறுப்பதற்கில்லை, யாராலும் எட்டமுடியாத சாதனை எனும் அளவுக்கு படைக்காவிட்டாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதன்முதலான சாதனைகள் பெரும்பாலானவைகளை இவர் செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் சாதனைகள் பெரும்பாலும் தனிநபர் சாதனைகளாக அமைந்துவிடுகிறது. ஒரு தனிநபர் சாதனை புரிய ஏராளமான இடங்களை கிரிக்கெட் விட்டுத்தருகிறது. மொத்த அணிக்கான சாதனை என்று பார்க்கும்பொழுது தனிநபர் சாதனைகளே அதிகம் கிடைக்கிறது. இதில் சச்சின் மட்டும் ஒரு சாதனை வீரனாக, சுயநலத்தின் பால் பார்க்க்கப்படுவது பார்வையின் பட்டும்படாத மேலோட்டத்தையே காண்பிக்கிறது.</p> <p> ஒரு இளம் வீரனாகக் களமிறங்கி வக்கார் யூனிஸிடம் அடிவாங்கி, இரத்தம் சொட்டச் சொட்ட அணிக்காக ஆடியவர் சச்சின் என்பதை நம்மில் பலர் மறந்தே விடுகிறார்கள். ஒரு அணிக்கான அர்பணிப்பு உள்ளவனாக இருப்பவனை நாம் வீரன் என்கிறோம். சச்சினிடம் மட்டுமல்ல, எல்லா வீரர்களிடமும் அதையே நாம் எதிர்பார்க்கிறோம். சொந்த சாதனைக்காக அணியை கைவிட்டவன் எனும் பெயர் சச்சினுக்கு எப்படி ஏற்பட்டது என்பதே தெரியவில்லை. ஒரு அணியின் வெற்றியும் தோல்வியும் எல்லா வீரர்களையே சார்ந்திருக்க, ஒருவரை மட்டும் குறைசொல்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாமனைவருமே புரிந்து கொள்ளவேண்டும். சச்சின் ரன்னே அடிக்காத ஒரு இன்னிங்க்ஸில் அல்லது முக்கியமான போட்டிகளின் போது அடிக்காமல் போனால் “சச்சினால்தான் இந்தியா தோற்றது” எனும் வாதத்தை ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்ளமுடியும், ஏனெனில் சச்சின் மீதான எதிர்பார்ப்பு அத்தகையது. ஆனால் நூறு ரன்கள் அடித்தால் இந்தியா தோற்றுவிடும் எனும் மூடநம்பிக்கையை இந்தியர்களிடம் மட்டும்தான் காணமுடியும். தோற்ற போட்டிகளில் சச்சினது பங்களிப்பு என்பதைவிட மற்ற 10 பேரது பங்களிப்பு எப்படிப்பட்டது என்று ஆராயாமல் விடுவது தவறானதாகத் தெரியவில்லை இல்லையா? உதாரணத்திற்கு நேற்றைய பங்களாதேசுக்கு எதிரான போட்டியை எடுத்துக் கொண்டால், என்னிடம் சச்சின் குறித்த மூன்று சந்தேக/சர்ச்சைகள் எழுப்பப்பட்டன,</p> <p> 1. சதத்திற்காக ஆடியதால் ஸ்கோரிங் ரேட் குறைந்து போய்விட்டது, அதனால் இந்தியா அதிகம் ஸ்கோர் செய்ய இயலவில்லை <br /> 2. பங்களாதேஷ் எல்லாம் ஒரு அணியே அல்ல, அதற்கு எதிராக ஒரு சாதனை சதம் அடித்தது நன்றாக இல்லை, <br /> 3. வழக்கம் போல சச்சின் சதமடித்து இந்தியா தோற்றுவிட்டது!</p> <p> ஒரு மேலோட்டமான பார்வையில் இவை உண்மையாகவே தெரிகிறது. ஆனால் இது “நிஜமாகவே” (!) உண்மைகளா?</p> <p> 1. நேற்றைய போட்டியில் இறுதி நேர அழுத்தத்தின் காரணமாக ரைனா, தோனி தவிர வேறு யாரும் அடித்து ஆடவில்லை, குறிப்பாக கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 80.48, குறைந்த ரன்களே அடித்திருந்தாலும் காம்பிரும் பாலைத் தின்றிருந்தார். இந்த சூழ்நிலையில் சச்சினின் ஸ்டாண்டிங்கில் பந்துகள் வீணாகப்போவது “சுயநலம்” காரணமல்ல, தவிர பந்து மெதுவாக வந்ததை சச்சின் குறிப்பிடுகிறார். அடுத்த இன்னிங்க்ஸ் ஆடிய பங்களாதேஷின் தமிம் இக்பால், ஜஹருல் இஸ்லாம் ஆகியோரும் மெல்லவே ஆடினார்கள், </p> <p> 2. பங்களாதேஷ் எனும் சிறூ அணிக்கெதிராக அடிக்கும் முதல் ஒருநாள் சதம் அது என்பதை அறியாமல் பேசுவது வீண். தவிர பங்களாதேஷ் ஒரு நல்ல எழுச்சி நிலை கண்டுள்ளது. அவர்களது அணியின் சகிப் அல் ஹசன், மொர்டாசா, தமிம் போன்ற தரம் வாய்ந்த வீரர்கள் வந்துவிட்டார்கள், ஒருகாலத்தில் இலங்கையும், அதற்கு முன்பு இந்தியாவுமே ஒரு “சப்ப” அணி தான் என்பதை மறந்துவிடக்கூடாது. தவிர டெண்டுல்கர் சுமாரான அணியிடம் அதிக ரன் அடித்தவர் கிடையாது, அவரது சதங்களும் ரன்களூம் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரானது என்பதை மறந்துவிடவேண்டாம். என்னதான் பங்களாதேஷ் வலிமை குன்றிய அணி என்றாலும் அவர்களும் வலிமை வாய்ந்த அணியினரை தோற்கடித்துள்ளனர் என்பதை மறக்கவேண்டாம். 2007 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் என்ன செய்தது என்பது ஞாபகம் இருக்கிறதா இல்லையா?</p> <p> 3. ஒரு அணியின் தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணமாக ஆகமாட்டார். இதை ஏன் இந்த கோணத்தில் பார்க்கக் கூடாது... இந்தியாவின் ஸ்கோரில் சச்சின் பங்களிப்பை எடுத்துவிட்ட்டிருந்தால் வெறும் 175 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கும், அதுவும் வலிமை குன்றிய ஒரு அணிக்கு எதிராக... ஒரு கெளரவமான ஸ்கோரில்தானே தோற்றிருக்கிறோம்.. தவிர இன்னொன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா எப்பொழுதுமே வலிமை வாய்ந்த அணீ அல்ல. வலிமை வாய்ந்த வீரர்கள் இருப்பினும் அது ஒரு சுமாருக்கும் மேலான அணிதான்!</p> <p> சச்சினது காலம் ஒருநாள் போட்டிகள் துவங்கி எழுச்சி பெற்ற காலம், அவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவே அவரது முதல் ஐந்து வருடங்கள் கழிந்தன. இன்றும் அவரை ஒரு நல்ல டெஸ்ட் வீரராகப் பார்க்க முடிகிறது. சமகாலத்தில் காலிஸும் சச்சினும் டெஸ்டை அடுத்த கட்ட அல்லது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சென்றார்கள். (ட்ராவிட்டும் தான்...) காலத்திற்கு ஏற்ப சச்சின் ஒருநாள் வீரராகவும், ட்வெண்டி 20 வீரராகவும் கூட தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் கூட அதிக ரன்களைக் குவித்திருக்கிறார். இல்லையா?</p> <p> நேற்றைய பேட்டியின் போது தான் எந்தவித மனநெருக்கடிக்கு உள்ளானேன் என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஒரு வீரருக்கு மனநெருக்கடி என்பது சகஜமானதுதான். முதன்முறையாக ஒரு விருது விழாவில் உங்களுக்காக வழங்கப்படும் விருதிற்கு நீங்கள் மனநெருக்கடிக்கு உள்ளாவீர்களா மாட்டீர்களா என்பதை உங்களிடமே கேட்டறிந்து கொள்ளலாமே? சரி, நாட்டுக்காக ஆடுபவனுக்கு அணியின் நலந்தான் முக்கியம், சாதனையை மையப்படுத்திய மன அழுத்தம் கூடாது என்று அறிவுருத்துவதாக இருந்தால் ’நாட்டுக்காக’, ’அணிக்காக,’ என்று பாராமல் கோடிகள் புழங்கும் வியாபார ஆட்டமான ஐபிஎல்லை நாம் பார்க்கவே கூடாது... கிரிக்கெட் இன்று வியாபாரம் ஆகி பணம் கொழிக்கும் விருட்சமாக மாறிவிட்டது. இதில் நாட்டுணர்வு என்பது எங்கோ ஓரிரு இடங்களில் மிச்சமிருக்கும் வீரர்களிடம் இருப்பதையும் நாம் கொச்சைப் படுத்தி வருகிறோம்.</p> <p> 99 சதங்களைப் பேசாதவர்கள், நூறாவது சதம் குறித்து பேச அருகதையற்றவர்களாகிறோம். அதனைத்தான் சச்சின் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்... விஜய் மல்லய்யாவின் வியாபார விளம்பரங்களில் நடிக்க மறுத்தவரான சச்சின் விளையாட்டுத் துறையில் மிகப்பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்திருந்தாலும் அவர் அடிப்படையில் ஒரு வீரர்.. நாட்டுக்காக ஆடும் இன்றைய ஒரே வீரர்!!</p> <p> வாழ்த்துக்கள் சச்சின்!</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-59735168168578927712012-03-04T16:25:00.000+05:302012-03-04T16:37:23.408+05:30இன்னுமொரு ஞாயிறு 04-03-2012<p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTWB-wmLVwBgdSrsoZtYb0H5pQ0mxkSr8yzZ_rVbKbn5ali6Wc7dXqelKaiEFthUh45ICOTLzFrquS1M3rwFORsLXLI6RONjlXxo5tAlTpYFqsH-R0ExNJYfA8lLzaJBzuS0VBfPNOUp0/s1600-h/aravaan-pictures-080%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="aravaan-pictures-080" border="0" alt="aravaan-pictures-080" src="http://lh4.ggpht.com/-VTn8dQteVsc/T1NKYJxIWaI/AAAAAAAABVY/n_029e_vpZQ/aravaan-pictures-080_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="414" height="273" /></a></p> <p> </p> <p><strong><font size="4">முக்கால் கிணறு</font></strong></p> <p>மதுரை களம், இருநூறு ஆண்டுகால இடைவெளி, பேச்சு, உடை. வழக்கு, அரசியல், வன்முறை என நமது மறந்து போன சொந்த வரலாறைப் பார்த்தது மாதிரி இருந்தது அரவான். நிறைய நுணுக்கமான காட்சிகள், ஜஸ்ட் லைக்தட் மாதிரி வந்து போகிற யதார்த்தம், உண்டியலின் வாயிலிருந்து வெளியே செல்லும் கோணம், கொலையின் பார்வைகோணம், கண்களாலேயே பெருமிதம் காட்டும் நடிகன், காட்சியிலிருந்து வெளியே துப்பிவிடமாட்டாத நிலங்கள், “பாலை” நில குறியீடுகள் என பார்த்து பார்த்து உழைத்திருக்கிறார்கள்... ஒரு புதுமையான “களத்தைச்” சொன்ன விதத்தில் வசந்தபாலனுக்கும் சரி, தமிழ் சினிமாவுக்கும் சரி, அரவான் ஒரு முக்கியமான படம் தான்... </p> <p>ஆனால்....</p> <p>திரைக்கதைதான் ஒரு சினிமாவைத் தீர்மானிக்கும் சக்தி. அரவானில் கிணற்றைத் தாண்ட முடியாமல் உள்ளே விழும் பசுபதியைப் போல முக்கால் கிணற்றைத் தாண்டி உள்ளே விழுகிறது திரைக்கதை. ”எப்படி” மற்றும் “எதற்கு” போன்ற கேள்விகள் படத்தில் சில இடங்களில் அதுவும் முக்கியமான இடங்களில் துருத்திக் கொண்டு நிற்கிறது. சுவாரசியமாகச் செல்லவேண்டிய திரைக்கதை அசுவாரசியத்திற்குத் தள்ளப்படுகிறது... ஆதி, நிலவைத் தள்ளுவது போல. :) (வரலாற்று) புலனாய்வு திரைப்படத்திற்குத் தேவையானது ”ஆதிமுடிச்சு”! படத்தில் அப்படி எங்கும் முடிச்சு போட்டு அவிழ்த்ததாகத் தெரியவில்லை, கொலைகாரனைக் கண்டுபிடிக்க புதுக்கதையை உருவாக்க வேண்டியிருக்கிறது, இன்னார்தான் கொலைகாரன் என்பதை ஒரு முடிச்சு மூலமாக முதலிலேயே சொல்லிவிடும் யுக்தி பின் அதனை நோக்கிப் பயணப்படும் ஆதியின் வேட்டை என திரைக்கதையை அப்படியே மாத்தியமைத்திருக்கலாம்.. பசுபதியை முக்கியப்படுத்தாமல் ஆதியின் கோணத்திலேயே கதை செலுத்தியிருக்கலாம்...மேலும் காளைகள் வரும் சிஜி காட்சிகள் தேவையற்றது!  இப்படி நிறைய யோசனைகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.</p> <p>இந்த கதை தோற்றால் அடுத்து பீரியட் படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். தமிழில் சொல்லப்படாத களங்கள் ஏகப்பட்டது உண்டு. அதில் ஒன்றிரண்டேனும் சிறப்பாக அமையும் வாய்ப்பும் இருக்கிறது. அதற்காகவேனும் அரவான் ஜெயிக்கணும்!!</p> <p><font size="4">ஒவ்வாத நாவல்</font></p> <p>யுவன் சந்திரசேகரின் பயணக்கதை நாவல் படித்து முடித்தேன். வித்தியாசமான கதைப்போக்கில் நாவல் அமைத்திருக்கிறார். இவரது எழுத்துக்களில் உச்சபட்ச வாசிப்பு சுகத்தைத் தருவதாக சொல்லப்படும் பின்னட்டை உரை பார்த்து வாங்கினதுதான். மூன்று நண்பர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் போது அவர்களால் எழுத அல்லது சொல்லப்படும் கதைகள்தான் நாவல்… ஒரு நாவல் என்றூ சொல்வதை விட குட்டிக் குட்டி கதைகள் அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பு எனலாம். ஆரம்பத்திலிருந்து ஏகப்பட்ட பாத்திரங்கள், ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள முயன்று தோற்றுவிட்டேன். மூன்றூ நண்பர்களின் கதைகளும் வேறுவேறானவை, தவிர ஒருசில மட்டுமே ஒன்றோடொன்று தொடர்புக்குள்ளாக இருக்கிறது. எனது வாசிப்பு அனுபவத்திற்கு இது ஆகாத நாவல் என்றாலும் இவரது எழுத்துக்கள் மிக அற்புதமாக இருந்ததை மறக்கமுடியாது.</p> <p>நாவலின் பெயர் : பயணக்கதை <br />ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்  <br />பதிப்பகம் : காலச்சுவடு <br />பக்கங்கள் : 388 <br />விலை : 290.00</p> <p><font size="4">பெண்ணுள்</font></p> <p>தமிழ்மகனின் ஆண்பால் – பெண்பால் உளவியல் சார்ந்த ஒரு அற்புதமான நாவல். குழப்பம் நிறைந்த பெண் பாத்திரம், தான் ஏன் இவ்வாறு இருந்தோம் என தர்க்கரீதியிலான தனது நியாயங்களை எடுத்துச் சொல்லும் பெண்பால். அதே கதையை அதே இடத்தை தனது கோணத்தின் மூலம் நியாயப்படுத்தும் ஆண்பால்.. இடையிடையே எம்.ஜி.ஆர். </p> <p>பெண்பால் பகுதி படித்து முடித்த பிறகு இவர் தமிழ்மகனா அல்லது தமிழ்மகளா என்று சந்தேகித்து பின்னட்டையைப் பார்த்தால் படிய வாரப்பட்ட முடியுடன் கண்ணாடி, மீசை, வாட்ச் சகிதம் உட்கார்ந்து கொண்டு போஸ்கொடுத்திருக்கிறார்… ஆணேதான்.. பெண்பால் பகுதி படிக்கப்படிக்க பெண்மை எனும் பெருந்தீவினுள் நம்மை நுழையவிடுகிறார். சில இடங்களில் நாவலை சந்தேகிக்கும்பொழுது அந்த சந்தேகத்தை அப்போதே தீர்த்தும் விடுகிறார். ஆண்பால் பகுதியைவிடவும் பெண்பால் பகுதி பிரமாதமானது… படித்தால் ஒருவேளை நீங்கள் உங்கள் மனைவியைப் பற்றி பெரிதும் யோசிக்கத்தோணும்!!! ஆண்பாலில் ஓரிரு இடங்களில் சலிப்பு வருவதைத் தவிர்க முடியவில்லை,</p> <p>நாவலின் பெயர் : ஆண்பால்-பெண்பால் <br />ஆசிரியர் : தமிழ்மகன் <br />பதிப்பகம் : உயிர்மை <br />பக்கங்கள் : 256 <br />விலை : 200.00</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-45580935079205454092012-02-24T13:58:00.000+05:302012-02-24T14:41:40.417+05:30என் பெயர் சிவப்பு - விமர்சனம்<p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMM-ZOd4GWsXwFV3MLC9IiP45z7Q0b1qb38x2pJulFuy370r30TvwySqA-0zJnNa5IYhbmHU5V557KjLCweK1dWGoe5pV9f7035-4fLK7R2CV-MFiQ9ofVvpLV-sQLwN1zsz6OEn7hqcA/s1600-h/yan%252520payer%252520sivapu-800x1200%25255B7%25255D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="yan payer sivapu-800x1200" border="0" alt="yan payer sivapu-800x1200" src="http://lh4.ggpht.com/-LGAYKnH97pg/T0dKY9UN3iI/AAAAAAAABUI/ycdLrlrLyg4/yan%252520payer%252520sivapu-800x1200_thumb%25255B3%25255D.jpg?imgmax=800" width="283" height="424" /></a></p> <p><font color="#008000">நீங்கள் ஒரு மனிதரைக் கொன்ற(தாக வாதித்து) <br />பின்னர் அது குறித்து கருத்து வேறுபாடு <br />கொண்ட நேரத்தை எண்ணிப் பாருங்கள் <br />ஆனால் அல்லாஹூவோ நீங்கள் மறைத்து <br />வைத்ததை வெளிப்படுத்தக் கூடியவனாவான்</font>       </p> <blockquote> <p>-  அதிகாரம் 2 அல்பக்கரா 72</p> </blockquote> <p><font color="#008000">குருடரும் பார்வையுடையவரும் சமமானவரல்ல</font></p> <blockquote> <p>- அதிகாரம் 35 அல்ஃபாதிர் 19</p> </blockquote> <p><font color="#008000">கிழக்கும் மேற்கும் அல்லாஹூவே உரியன</font></p> <blockquote> <p>- அதிகாரம் 2 அல்பக்கரா 115</p> </blockquote> <p>குர் ஆனின் இந்த மூன்று வாசகங்களோடு ஓரான் பாமுக்கின் இந்நாவல் ஆரம்பிக்கிறது. நுண்ணோவியங்களின் வீழ்ச்சியைப் பற்றிய நாவல் என்றாலும் இந்த மூன்று வாசகங்களின் மேலேதான் நாவல் பயணிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் கிழக்கில் ஏற்படும் மேற்கத்திய ஆதிக்கத்தை, தமது பண்டைய மதகூறுகளடங்கிய ஓவியபாணியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் ஓவியர்களைப் பற்றியும், இஸ்லாமிய மதத்தின் ஓவிய கட்டுப்பாடுகள், ஒட்டாமன் கலாச்சாரம், அரசு, குற்றம் மற்றும் காதலும் காமமும் குறித்த விசாலமான பார்வையும் நாவலின் கொடிநரம்புகளென பிரித்தெடுக்கவியலாதபடி பரவிக்கிடக்கிறது.</p> <p>ஓவியங்கள் வெறும் ஓவியங்களாக மட்டும் இருப்பதில்லை, அது தான் சார்ந்த மொழியையோ இனத்தையோ அதன் பின் மறைந்திருக்கும் சங்கேத பரிவர்த்தனைகளையோ குறிப்பிடாமல் இருப்பதில்லை, (எனக்கு டாவின்ஸி சட்டென நினைவுக்கு வருவார். கூடவே ஆதி சடங்குகள் அறியப்பட்ட சாவெட் மற்றும் லாஸ்காக்ஸ்). அவரவருக்கென ஒரு பாணி (style) இருக்கிறது. உதாரணத்திற்கு தஞ்சாவூர் ஓவியம் என்பது ஒரு பாணி, பாரசீக நுண்ணோவிய பாணியிலிருந்து வந்திருந்தாலும் மொகலாயர் ஓவியம் இன்னொரு பாணி, இருப்பினும் பெரிதும் நாம் விரும்புவது மேற்கத்திய தத்ரூப பாணிகளையே. இதன் ஆக்கிரமிப்பில் வீழும் ஒட்டாமன் பாணி ஓவியங்களைப் பற்றி மிக நுணுக்கமாகப் பேசுகிறது நாவல். நாவலின் ஒவ்வொரு எழுத்துக்களும் நுண்ணியதாக ஓவியத்துவமாகவே இருக்கிறது. ஓவியங்களின் விவரணைகள் நம்முன் காட்சிபடுத்துவது அந்நூற்றாண்டைய புராண கதைகளையும், அரச நம்பிக்கைகளையும் கலாச்சார விழுமியங்களையுமே...  இதன் கதை சொல்லப்பட்ட விதமும் வித்தியாசமாக இருக்கிறது. சுமார் பன்னிரெண்டு பாத்திரங்களின் கதை சொல்லலோடு பயணிப்பதாக அறிந்தாலும் நாவலின் கதை சொல்லிகள் வெறும் மாந்தர்கள் மட்டுமல்ல; கொலைசெய்யப்பட்ட பிரேதம், மதகட்டுப்பாட்டு காவலர்களை எதிர்க்கும் நாய், ஒரு செல்லா காசு, மரம், மரணம், சாத்தான் என அத்தனை பாத்திரங்களும் தங்கள் மீதான தர்க்கரீதியிலான நியாயங்களைப் பற்றி பேசுகின்றன. பின்னவீனத்துவ பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் பாத்திரப்பிணைப்பு முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் பிறகு சவுகரியமாகவும் பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.</p> <p>என்னைப் பொறுத்தவரையிலும் நாவல் சற்றே பெரியதாக இருப்பதால் கதை என்று நானறிந்தவற்றைப் பகிர்கிறேன்.</p> <p>ஒரு சடலத்தின் பார்வையிலிருந்து நாவல் துவங்குகிறது. தான் எதற்காகவோ கொல்லப்பட்டிருக்கிறோம் எனும் விவாதத்தில் தன்னை அது அடையாளப்படுத்துகிறது. ”வசீகரன் எஃபெண்டி” என்றழைக்கப்பட்ட அந்த சடலம் அதற்கு முன்பாக நுண்ணோவியத்தின் பக்க ஓரங்களில் மெருகு தீட்டும் மெருகோவியனாக ஒட்டாமன் நுண்ணோவிய கலைக்கூடத்தில் இருந்தது. கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் கிடக்கும் இந்த சடலத்தை மையப்படுத்தியே கதை வெகு சுவாரசியமாக நகர்கிறது.</p> <p>பதினாறாம் நூற்றாண்டு இஸ்தான்புல்லைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்தை சுல்தான் மூன்றாவது மூரத்  (1574- 1595) ஆண்டு வருகிறார். சுல்தானின் ஆணைப்படி ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு விழாவிற்கான திருவிழா மலர்களை இஸ்தான்புல் ஓவியக்கூட தலைமை ஓவியரான குருநாதர் ஒஸ்மான் தலைமையில் நுண்ணோவியர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள், அதுமட்டுமல்ல, சுல்தான், வெனீசிய மன்னருக்கு இரகசியமாக தனது பெருமைகளையும் கீர்த்திகளையும் மற்றும் தனது உருவப்படமும் அடங்கிய ஓவியச்சுவடி ஒன்றைத் தயாரித்து பரிசளித்து நட்பு கொண்டாட விருப்பம் கொள்ள நினைக்கிறார். அது வெனீசிய பாணியிலான ஓவியங்களடங்கிய சுவடியாகவும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவும் தயாரிக்க வேண்டுமென நுண்ணோவியர் எனிஷ்டே எஃபெண்டியிடம் கட்டளையிட்டிருக்கிறார். எனிஷ்டேவும் தனக்குக் கீழ் “நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ், மற்றும் வசீகரன்” எனும் புனைப்பெயர்களைக் கொண்ட நுண்ணோவியர்களை தத்தமது வீட்டிலேயிருந்தே பணிபுரிய வைக்கிறார். இதில் “வசீகரன்” என்பவன் தான் அடையாளம் தெரியாத ஒரு கொலைகாரனால் கொல்லப்பட்டிருக்கிறான். ஒட்டாமன் நுண்ணோவியங்கள் ஒரு ஆல்பம் போல தயாரிக்கப்படுகின்றன. அவை ஒருவரால் மட்டும் வரையப்படுவது கிடையாது. குழுக்களாக இணைந்தே வரையப்படும், புத்தக ஓரங்களில் மெருகு தீட்டுவது மெருகோவியனின் வேலை, வசீகரனுக்கு ஓவியம் தீட்டுவதை விடவும் மெருகு தீட்டுவதே பெரும்பாலான வேலை. </p> <p>1591 ஆம் வருடம் கருப்பு எஃபெண்டி எனும் எழுத்தோவியன் தனது அம்மா வழி மாமாவான எனிஷ்டேவின் கடிதம் கண்டு பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு இஸ்தான்புல் திரும்புகிறான். கருப்பின் மாமா எனிஷ்டே எஃபெண்டியின் மகளான ஷெகூரேவை ஒருதலையாகக் காதலித்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்தான்புல்லை விட்டுச் சென்றவன் வசீகரன் எஃபெண்டி கொலை செய்யப்பட்ட (அல்லது மற்றவர்கள் பார்வையில் காணாமல் போய்விட்ட) பிறகு மூன்று நாட்கள்  கழித்து அப்பொழுதுதான் திரும்பி வருகிறான். எனிஷ்டே தமக்கு உதவியாக கருப்பை நியமிக்கிறார், மட்டுமல்ல ஒருவேளை சுவடி தயாரிப்பதற்குள் தாம் இறந்துவிட்டால் அதனை முடிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்</p> <p>இச்சமயத்தில் நுஸ்ரத் எனும் ஹோஜாக்கள் இஸ்லாமிய மதகட்டுப்பாடுகளையும், குரான் நம்பிக்கைகளையும் போதித்து, அதற்கெதிராக வேலை செய்யும் நுண்ணோவியர்கள், காபி இல்லத்தினர்கள் ஆகியோரை எதிர்க்கிறார்கள். காபி அருந்துவது தமது கோட்பாடுகளுக்கு எதிரானது எனவும், அது உள்ளிறங்கி தூங்கிக் கிடக்கும் பிசாசை முழிக்க வைக்கிறதாகவும் நினைக்கிறார்கள். இஸ்தான்புல் நகரத்தில் இருக்கும் ஒரு காபி இல்லத்தில் நுஸ்ரத்திற்கு எதிரான பிரச்சாரம் துவங்குகிறது. கதைசொல்லி எனும் திருநங்கை நாளுக்கொரு ஓவியத்தை மாட்டி அதன் வழியே நுஸ்ரத்தை கிண்டலும் கேலியுமாகப் பேசுகிறாள். நாவலில் இந்த கதைசொல்லி வரும் அத்தியாயங்களும் அது சொல்லும் கதைகளும் அபாரமானவை.</p> <p>எனிஷ்டேவின் மகள் ஷெகூரே ஒரு அழகான பெண். ஒரு ஸ்பாஹி குதிரை வீரனைத் திருமணம் செய்து “ஓரான்” “ஷெவ்கெத்” எனும் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த குழப்பம் மிகுந்த தாய். நான்கு வருடங்களுக்கு முன்பு போருக்குச் சென்ற அவனது கணவன் வீடு திரும்பாததால் தனது மாமனார் வீட்டிலிருந்த மைத்துனன் ஹஸனின் அடாவடி தாளாமல் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டவள். கருப்புக்கும் அவளுக்குமிடையேயிருந்த காதல் யூதப்பெண்மணியான “எஸ்தர்” மூலமாகத் மீண்டும் துளிர் விட ஆரம்பிக்கிறது. ஷெகூரே மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி விடுகிறான் கருப்பு.. (எனிஷ்டே வீட்டில் ஹாரியே எனும் அடிமைப்பெண் உண்டு. அவளுக்கும் எனிஷ்டேவுக்கும் ஒரு கனெக்ஷன் ஓடிக்கொண்டிருப்பதை ஷெகூரே அறிந்து கொள்கிறாள்)</p> <p>இதனிடையே எனிஷ்டே வீட்டில் யாருமில்லாத பொழுது கொலைகாரன் நுழைந்துவிடுகிறான். அவனுக்கும் எனிஷ்டேவுக்குமான விவாதத்தின் முடிவில் கருப்பு பரிசளித்த ஒரு மங்கோலிய மசிக்குடுவையால் எனிஷ்டேவின் தலையில் அடித்தே கொல்கிறான் கொலைகாரன். கொலைகாரன் எனிஷ்டேவைக் கொல்லும் போது இரகசியச்சுவடியின் இறுதி ஓவியத்தை தனது பாவத்தின் வடிகாலாகக் கருதுகிறான், அதனை எடுத்தும் சென்றுவிடுகிறான். ஷெகூரேவும் ஹாரியேவும் திரும்பி வந்து நடந்ததை உணர்ந்து எனிஷ்டே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டால் தனது மைத்துனன் ஹஸன் தன்னை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு இழுத்துச் சென்றுவிடுவான் என்றறிந்து உடனடியாக அவசராவசரமாக கருப்பைத் திருமணம் செய்துகொள்கிறாள். இரண்டு நாட்கள் கழித்து எனிஷ்டே இறந்ததை அறிவித்ததோடு நில்லாமல் சுல்தானுக்கு மிக வேண்டியவர் என்பதால் அரண்மனையிலும் போய்ச் சொல்லுகிறான் கருப்பு. சுல்தான் கோபமுற்று கொலைகாரன் யார் என்பதை மூன்று நாட்களுக்குள் கண்டறிய கருப்பை உத்தரவிடுகிறார். இச்சூழ்நிலையில் வசீகரனைக் கொன்ற கொலைகாரன் தான் எனிஷ்டேவையும் கொலை செய்திருக்கக் கூடும் ; அது தமக்குள் பணிபுரியும் நுண்ணோவியர்களுள் ஒருவராகத்தான் இருக்கும் என்று சந்தேகப்படுகிறான் கருப்பு. அதற்கேற்ப ஒரு “க்ளூ” கிடைக்கிறது. சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இரகசியச் சுவடியின் கடைசி ஓவியம் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதிகாரணமாக இருக்கிறது. . முடிவில் நுண்ணோவியர்களான “நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ்” ஆகியோரா அல்லது நுஸ்ரத் ஹோஜா குழுவைச் சார்ந்தவர்களா அல்லது குருநாதர் ஒஸ்மானா யார் அந்த கொலையாளி என்று தெரிந்துவிடுகிறது.</p> <p>நாவலின் பாதை பத்து விரல்களின் விரி கோணங்களாக நீண்டு ஒரு சேர ஓரிடத்தில் குவிகிறது. நுண்ணோவியம் என்ற பெயருக்கேற்ப நுண்ணெழுத்துக்களால் நிரம்பப்பட்ட இந்நாவல் ஒட்டாமன் பாணி ஓவியங்களை வெகு விபரமாக, நுணுக்கமாக, ஆராய்கிறது. “நான் மரமாக இருக்க விரும்பவில்லை, அதன் பொருளாக இருக்க விரும்புகிறேன்” எனும் மரம் கதை சொல்லலில் ஒட்டாமன் ஓவியங்கள் தத்ரூபங்களை விரும்புவதில்லை, அது தனக்கான பொருளை மட்டுமே உணர்த்துவதாக இருக்கிறது. வெனீசிய ஓவியர்களைப் போல யாருடைய பார்வையிலிருந்தும் உதாரணத்திற்கு ஒரு நாவிதனோ, பண்டம் விற்பவனோ, ஒரு நாயின் பார்வையிலிருந்தோ வரையப்படுவதில்லை, அது அல்லாஹூ அவர்களின் பார்வையிலிருந்து வரையப்படுகிறது. இதற்கு நாரை சொல்லும் “ஆலிஃப்” குட்டிக்கதையான ஓவியர் இபின் ஷகிர் கதை அல்லாஹூவின் பார்வை என்பது என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது. நாவலினூடாக எழும் ஓவியங்கள் குறித்த கேள்விகள் குறிப்பாக குருநாதர் ஒஸ்மான் எழுப்பும் ”பாணி”, ”காலம்”, “குருட்டுமை” போன்ற கேள்விகள் நுண்ணோவியர்களின் ”ஆலிஃப்”, “பே”, “ஜிம்” எனும் மூன்று குட்டிக்கதைகளின் மூலம் நுண்ணோவியங்கள் குறித்த விசாலமான பார்வையை அறிய முடிகிறது. இந்த குட்டிக்கதைகள் ஓவியத்தையும், காதலையும் இணைக்கிறது. இருபெரும் முனைகள் இணைவதால் ஏற்படும் கலக்கம், பாணி, காலம், மற்றூம் குருட்டுமை போன்றவற்றின் வடுக்களாக ஓவியங்கள் மாறிவிடுவதை உணரமுடிகிறது. ஓவியம் என்பது வெறும் வண்ணங்களின் கலவையல்ல, அது வாழ்வின் தாழ்வாரங்களில் ஏற்படுத்தும் பிரமிப்பு, பயம், மனக்கிளர்ச்சி, பிசாசின் தூண்டலில் அழுகிப் போகும் வக்கிரம் நிறைந்த மனம், மற்றும் இவற்றின் ஒரு தொகுப்பு எனலாம்.  ஒட்டாமன் ஓவியர்கள் தமக்கென்று எந்தவொரு பாணியையும் உருவாக்குவதில்லை, பாரசீக பாணியிலான இவற்றை பெரும்பாலும் பண்டைய ஓவியங்களிலிருந்தே நகலெடுக்கிறார்கள். ஓவியர் எவரும் தமது கையொப்பமும் இடுவதில்லை, அது தனிப்பட்ட முறையில் தமக்கென ஒரு பாணியை உருவாக்கும் என்றே கருதுகிறார்கள். அதனாலேயே மேற்கத்திய ஓவியங்களை வெறுக்கிறார்கள். மிக தத்ரூபமாக வரையப்பட்ட அவை அல்லாஹூவின் படைப்பை தானே செய்தவனாக ஆகிவிடுவதாகக் கருதுகிறார்கள். இஸ்லாமிய மதப்படி உருவசித்திரங்கள் மதத்திற்கு எதிரானவை என்பதால் தத்ரூபமான உருவச்சித்திரங்களை எதிர்க்கத் தொடங்குகிறார்கள்.</p> <p>நுண்ணோவியங்களின் வீழ்ச்சிக்கான அறிகுறிகளே நாவலின் மையத்தில் சலனமின்றி ஓடும் நதியைப் போல ஓடிக் கொண்டிருப்பதால் ஓவியம், இஸ்லாமியம் ஆகியவற்றின் வழியே கலைஞர்களின் இருப்பு குறித்த தகவல்களை நிறைய பெறமுடிகிறது. ஹெராத்தின் பண்டைய ஓவிய மேதைகளால் ஆரம்பிக்கப்பட்டு நிலையாக நிறுவப்பட்டிருந்த இஸ்லாமிய நுண்ணோவியக் கலை மேற்கத்திய தத்ரூபமான உருவச்சித்திரங்களின் கவர்ச்சியில் முடிவுக்கு வந்துவிடும் என எனிஷ்டே அஞ்சுவதற்கும் காரணங்கள் உள்ளன. வெனீசிய பயணத்திற்குப் பின்னர் ஸெபாஸ்டினோ எனும் ஓவியன் மூலமாக வரையப்பட்ட சுல்தான் மூரத்தின் ஓவியமே எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. (பின்னர் இது குருநாதரால் நகலெடுக்கப்பட்டு குருநாதருக்கும் எனிஷ்டேவுக்குமுண்டான உறவில் விரிசல் ஏற்படுகிறது) ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டுவிழாவிற்குப் பிறகு மேற்கத்திய பாணியிலான ஓவியங்களே இனி வரையப்படும் என சுல்தான் எண்ணுவதை நுண்ணோவியர்கள் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் எனிஷ்டே தயாரிக்கும் இரகசியச் சுவடி பாரசீக மற்றும் வெனீசிய கலவையாக இருக்கிறது. எனிஷ்டேவுக்கோ அல்லது மற்ற ஓவியர்களுக்கோ தத்ரூபமாக வரையத்தெரியாது என்பதைவிட அம்மாதிரியான ஓவியங்களைப் பார்த்தது கூட கிடையாது.</p> <p>எனிஷ்டேவுக்கும் கொலைகாரனுக்கும் நடக்கும் விவாதங்கள், மூன்று நுண்ணோவியர்களின் குட்டிக்கதைகள் (நாவல் முழுக்க நிறைய குட்டிக்கதைகளும், ஓவியக்கதைகளும் நிரம்பிக்கிடக்கின்றன), குருநாதர் ஒஸ்மான் நுண்ணோவியர்களையும் ஓவியங்களையும் விளக்கும் இடங்கள், போன்றவை மிக முக்கியமானவை. வெனீசிய ஓவியம் குறித்து ஓரிடத்தில் சொல்லப்படுவது இங்கே குறிப்பிட்டால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.</p> <p><em>”வெனீசிய கலைஞர்களின் உருவரை ஓவியங்களைப் பார்த்தபிறகு நமக்கு புரியத்தொடங்கும் விஷயங்கள் பயங்கரமானவை, உதாரணத்திற்கு ஓவியங்களில் கண்கள் என்பவை இனிமேலும் வெறுமனே முகத்தில் இருக்கும் ஓட்டைகளாக இருக்கப்போவதில்லை, பதிலாக நமது கண்களைப் போலவே ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல உறிஞ்சுக்கொள்ளும் கிணற்றைப் போல இருக்கவேண்டும். உதடுகள் என்பவை முகத்தின் மத்தியிலிருக்கும் ஒரு கீறலைப் போல காகிதத்தைப் போல தட்டையாக இனிமேலும் வரையப்படப்போவதில்லை, பதிலாக உணர்ச்சிகளின் மையப்புள்ளிகளாக - ஒவ்வொன்றும் சிவப்பின் ஒவ்வொரு சாயலில் - நமது சந்தோஷங்களையும் துயரங்களையும் மிக இலேசான சுருக்கத்திலும் விரிதலிலும் பாவங்களை வேறுபடுத்திக் காட்டக்கூடியதாக இருக்கவேண்டும். நமது நாசிகள் இனிமேலும் முகத்தை நடுவிலே பிரிக்கின்ற ஒருவகை சுவர்களாக இருக்காமல் உயிர்ப்போடு ஒவ்வொருவருக்கும் தனித்துவ வடிவங்களில் அமைந்த அங்கங்களாக இருக்கவேண்டும்”</em></p> <p>நாவலில் ஏராளமான கதை நிகழ்கால நூல்களின் மேற்கோள்கள் இருக்கின்றன. தவிர நாவலாசிரியர் ஒரு ஓவியத்தை வர்ணிக்கும் விதத்தைப் பார்க்கும் பொழுது அவரும் ஒரு ஓவியராக இருக்கக் கூடும் எனும் சந்தேகம் வலுக்கிறது. ஒரு பொருளை வரைவது என்பது மேம்போக்கான பார்வையில் அல்லாமல் ஆழ உணர்ந்து வரைபொருளின் அம்சங்கள், தரம், வர்ணம் ஆகியவற்றின் வழியே அது வலியுறுத்துவதைத் தெளிவாகக் காட்டவேண்டும். ஒரு குதிரை பற்றிய வர்ணிப்பில்,</p> <p><em>”ஒரு நல்ல குதிரைக்கு கவர்ச்சியான முகமும் கஸல்மானின் விழிகளும் இருக்கவேண்டும். அதன் செவிகள் கோரைப் புல்லைப்போல் நேராக, நல்ல இடைவெளி விட்டு இருக்கவேண்டும்; ஒரு நல்ல குதிரைக்கு சிறிய பற்களும், வட்டமான நுதலும், மெல்லிய புருவங்களும் வேண்டும்; அது உயரமானதாக, நீண்ட பிடரியுடையதாக மெலிந்த இடை, சிறிய நாசி, சிறிய தோள்கள், அகன்ற தட்டையான முதுகு கொண்டதாக இருக்கவேண்டும்; அதன் தொடைகள் முழுமையானதாக, நீண்ட கழுத்துடையதாக, அகன்ற மார்புடையதாக, விளங்கவேண்டும், சாவதானமாக நிதான நடையிட்டுச் செல்லும்போது அது இரு புறங்களிலும் நின்றிருப்பவர்களை வணங்கியபடி செல்வதைப் போல தோற்றமளிக்கும்படி பெருமிதமும் கம்பீரப்பொலிவும் கொண்டதாக இருக்கவேண்டும்.”</em></p> <p>காதல் குற்றம் ஆகிய இரட்டை நுழைவாயிலின் ஒரு கதவு ஓவியமும் மறுகதவு மதமுமாக இருக்கிறது. கருப்பு - ஷெகூரே திருமண நிகழ்வுகள் நாவலின் போக்கின்படி கொஞ்சம் அவசரமான திருமணம் எனினும் எழுத்துக்கள் அவசரமாகவே பயணிக்கின்றன. அதேபோல குருநாதர் ஒஸ்மான், அரண்மனை கருவூலத்தில் ஓவியங்களைப் பார்வையிடும் அத்தியாங்கள் லேசாக சலிப்பூட்டுகின்றன. அவை புறவெளிப்பாடாக ஓவியத்தை நிலைநிறுத்த முயன்றாலும் அந்நிய தோற்றத்தால் நிலையிழந்து என்னால் காட்சிபடுத்த முடியாமல் போய்விடுகிறது. குருநாதர், மாபெரும் ஓவியர் பிஸ்ஹாத்தின் ஊசியால் கண்களைக் குருடாக்கிக் கொள்ளும் போதோ அல்லது கொலைகாரனை மற்றவர்கள் குருடாக்கும் பொழுதோ அந்த ஊசியின் முனை நம் கண்களைக் கூசுவதையும் சுல்தானின் வருகையை அவ்வளவு பெரிய விவரமாக வர்ணிக்காவிடினும் ஒரு பெருமிதத்தையோ, மரியாதையையோ உணரமுடிகிறது!!! </p> <p>மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இந்நாவலைத் திறம்பட மொழிபெயர்த்திருக்கிறார் என்று ஒற்றையாகச் சொல்லிவிட்டால் அதற்கு அர்த்தமே இல்லை. ஒரு இஸ்லாமிய நாவலான “என் பெயர் சிவப்பு”ஐ வாங்குவதற்கு எனக்கு இரண்டு தயக்கம் மிகுந்த காரணங்கள் இருந்தன.</p> <p>1. அரேபிய மற்றும் உருது வார்த்தைகள் மிகுந்த சில சிறுகதைகள் சலிப்பைத் தந்தன. அவர்களின் சடங்குகள், மதகோட்பாடுகள், கொள்கைகள், சில வழக்கமான வார்த்தைகள் யாவையும் மனதில் நிறுத்தி படிக்க என்னால் இயலாது. முற்றிலும் அந்நியமொழிச் சூழல் மிகுந்த எழுத்துக்களுக்கு ஒவ்வாதவன் நான்.</p> <p>2. மொழிபெயர்ப்பு நாவல் என்று இதுவரை எதுவும் படித்தது கிடையாது. (அன்னா கரினீனா படித்தபிறகுதான் அது டால்ஸ்டாயினுடையது என்றே தெரியும். அதெல்லாம் பழைய காலம்!!!)</p> <p>கூடுமானவரையிலும் அரேபிய/உருது அல்லது இஸ்லாமிய வார்த்தைகளைத் தவிர்த்து, சுத்தமான தமிழில் பெரும்பாலும் (அது சிலசமயம் அதீதமாகிவிட்டதோ என்றூ கூட தோணுமளவுக்கு) குறிப்பிட்டு மொழிபெயர்த்திருக்கிறார். எலகண்ட் எஃபெண்டி என்பதை வசீகரன் எஃபெண்டி என பெயரிலும் கூட மாற்றம்! பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாவல்களில் பெயர்களை மொழிபெயர்க்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். மிகச்சிறப்பாக, ஒரு அந்நிய நாவல் எனும் அடிமனதில் அடங்கிக் கிடக்கும் எண்ணத்தை மெல்ல கொன்று, நாவலின் தரத்தை மாற்றாமல் தந்திருப்பது பாராட்டுக்குரியது! ஒரு சில தவறுகள் (ஷா தாமஸ்ப், ஷா தமாஸ்ப்//) எழுத்துப்பிழைகள் இருப்பினும் பிரபஞ்சத்தூசிகளைப் போல காணாமல் போய்விடுகின்றன. </p> <p>இந்நுண்ணிய நாவல் முடித்த பிறகு பண்டைய கால கட்டத்தில் நடக்கும் வரலாற்று நாவல்களைப் படிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.The Enchantress of Florence - சல்மான் ருஷ்டி, குர்அதுல்துன் ஹைதர் எழுதிய அக்னி நதி, கிம் ஸ்டான்லி ராபின்ஸனின் The Years of Rice and Salt போன்ற சில நாவல்கள் தேடியதில் கிடைத்தது!!  (அக்னிநதி மட்டும் தமிழில் கிடைக்கிறது. ) இவற்றில் எதாவது மொழிமாற்றம் செய்திருந்தால் சொல்லவும், அல்லது இதைப்போல நாவல்களைப் பரிந்துரைக்கவும்!!</p> <p>நாவலின் பெயர் : என் பெயர் சிவப்பு (My Name is Red) <br />ஆசிரியர் : ஓரான் பாமுக் <br />மொழிபெயர்ப்பு : ஜி.குப்புசாமி <br />பதிப்பகம் : காலச்சுவடு <br />பக்கங்கள் : 664 <br />விலை : 350.00</p> <p><strong>படங்கள் :</strong> </p> <p>மாபெரும் ஓவியர் பிஸ்ஹாத்தின் இந்த ஓவியம் ஷிரின் குளித்துக் கொண்டிருப்பதையும் அவளது குதிரை ஷெப்தீஸ் தண்ணீர் குடிப்பதையும் ஹூஸ்ரேவ் எட்டிப்பார்ப்பதாக வரையப்பட்டிருக்கிறது. பாரசீக நுண்ணோவியத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று நினைக்கிறேன். இது இரண்டு பரிமாணங்களில் மட்டுமே வரையப்பட்டிருக்கிறது. மற்றும் முன்னோக்கு தோற்றம் (Perspective) இருக்காது. கிட்டத்தட்ட இதே பாணியில் மொகல் ஓவியங்களையும் காணமுடியும். ஷிரின் ஷூஸ்ரேவ் காதல் கதை நாவலில் மிக மெல்லிய இசையாக ஒரு புகை, அறையை வியாபித்திருப்பதைப் போல நுழைகிறது!</p> <p><a href="http://lh3.ggpht.com/-7OMFQgZ_WCM/T0dKjJw7OlI/AAAAAAAABUQ/a4QeXZutb4A/s1600-h/447px-Nizami_-_Khusraw_discovers_Shirin_bathing_in_a_pool%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="447px-Nizami_-_Khusraw_discovers_Shirin_bathing_in_a_pool" border="0" alt="447px-Nizami_-_Khusraw_discovers_Shirin_bathing_in_a_pool" src="http://lh5.ggpht.com/-hmh6JTGsEPo/T0dKtTyY9OI/AAAAAAAABUY/H-omXgvpefk/447px-Nizami_-_Khusraw_discovers_Shirin_bathing_in_a_pool_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="233" height="312" /></a>   </p> <p>16 ஆம் நூற்றாண்டிய வெனீசிய ஓவியம் ஒன்று. முப்பரிமாணமும் மிக்கதாக தத்ரூபமான உருவச்சித்திரம் மிகுந்த ஓவியம்…</p> <p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjv6rqRX9r39hLKd-DsD_RKsMbhWXd2m1pNH1Sq9KQsmbL0iDEAz1CRieF0vAcyALjDmAszyGIVOuppETyiq7maUPQ-pOhmdLJHQbEUHY-UtaoANHmOhrZNahq8yHc3OXA4bZvckdVeFqw/s1600-h/740px-The_Adoration_of_the_Shepherds_-_Giorgione_-_1505_NG_Wash_DC%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="740px-The_Adoration_of_the_Shepherds_-_Giorgione_-_1505_NG_Wash_DC" border="0" alt="740px-The_Adoration_of_the_Shepherds_-_Giorgione_-_1505_NG_Wash_DC" src="http://lh6.ggpht.com/-9KWle25RMPk/T0dLDW0lQNI/AAAAAAAABUo/zQ1dfTBWiiE/740px-The_Adoration_of_the_Shepherds_-_Giorgione_-_1505_NG_Wash_DC_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="337" height="272" /></a></p> <p>ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு திருவிழா மலரில் வரையப்பட்ட ஓவியங்கள் : </p> <p><a href="http://lh6.ggpht.com/-tNS0ttxjIWw/T0dNUdItJUI/AAAAAAAABUw/XqcYPVgayoo/s1600-h/fest%2525202%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="fest 2" border="0" alt="fest 2" src="http://lh4.ggpht.com/-4iziDcoAM8E/T0dNgDLwk3I/AAAAAAAABU4/LKEMuVtod3M/fest%2525202_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="378" height="318" /></a></p> <p><a href="http://lh3.ggpht.com/-o-KQ8M5_plg/T0dNvhAxIcI/AAAAAAAABVA/aAI-iZC1IjA/s1600-h/fest1%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="fest1" border="0" alt="fest1" src="http://lh5.ggpht.com/-F0kJFgNgsww/T0dN4jCjJyI/AAAAAAAABVI/I2p5-agPseQ/fest1_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="381" height="276" /></a></p> <p> </p> <p>உதவி : http://www.arts.ualberta.ca</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-81217955887555973882012-01-31T19:12:00.000+05:302012-01-31T19:13:16.222+05:30புத்தகத் திருவிழா–கற்கை நன்றே!<p><font color="#0000ff">பறந்து செல்லும் பறவையை <br />நிறுத்திக் கேட்டான் <br />பறப்பதெப்படி? <br />அமர்ந்திருக்கையில் சொல்லத் <br />தெரியாது கூடப் <br />பறந்து வா சொல்கிறேன் என்றது <br />கூடப் பறந்து கேட்டான் <br />எப்படி? <br />சிரித்து <br />உன் போலத்தான் என்றது <br />அட ஆமாம் <br />எனக் கீழே கிடந்தான் <br />பறவை <br />மேலே பறந்து சென்றது <br /></font> <br />-ஆனந்த்</p> <p align="justify"><font size="5">ப</font>றவைகள் மிக அழகானவை, தம்முடைய பாரம்பரீய மரபுகளையும், தெளிவான வாழ்க்கை முறையையும் எந்தவொரு நவீன சூழலுக்கும் நசுக்க விடாமல் காத்து வருபவை. அதன் கூர்மையும், நுணுக்கமான செயல்முறையும் மென்மையும் நம்மிடம் இருந்ததாகக் கருதுகிறேன். நமது வாழ்க்கையை நவீன பற்சக்கரங்களுக்குள் நுழைந்து விட்டபிறகு பறவைகளிடமிருந்தோ விலங்குகளிடமிருந்தோ இருந்துவந்த குணாதிசயங்களை ஒரு சாறினைப் போல வெளியேற்றிவிட்டோம்!! உண்மையில் நாம் ஒரு விலங்குநிலையிலிருந்து வெகுதூரத்திலிருக்கிறோம் என்பதை திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஏற்படுத்தப்பட்டிருந்த <font color="#0000ff">காணுயிர் புகைப்பட கண்காட்சியின்</font> மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. வெறும் புகைப்பட கண்காட்சியாக அல்லாமல் வெறும் பொதுநல நோக்கு அல்லாமல் சூழலியல் சார்ந்த அக்கறையும் சமூகத்தின் முறைகேடான வளர்ச்சியைச் சுட்டியும் ஒரு பசுமை நிறைந்த உலகம் காணும் கனவுடனும் அமைக்கப்பட்டிருப்பது மனிதர்களின் நெஞ்சில் அறையும் விஷயம். Natural History Trust எனும் அமைப்பினர் நமது ஊரில் நாம் துரத்தியடிக்கப்பட்ட, தொலைத்துவிட்ட, கொலை செய்துவிட்ட பல உயிரினங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கும்பொழுதெல்லாம், அதன் இடத்தில் வாழும் நாம் என்றென்றைக்கும் ஒரு குற்றவாளிகளே என்று நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. <strong>தன்னை ஒரு மனிதன் என நினைக்கும் ஒவ்வொருவரும் காணவேண்டிய கண்காட்சி அது!!</strong> <br /> <br />இரண்டு நாட்கள் ஊரில் இல்லாததால் முறையாக பதிவு செய்யமுடியாமைக்கு வருந்துகிறேன். எனினும் கிடைத்த நேரத்திலெல்லாம் ஊர் சுற்றும் வாலிபனைப் போல திருவிழாவில் சுற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு ஓவியத்தில் ஈடுபாடு உண்டு. அதனால் அது குறித்த சில புத்தகங்களைத் தேடிப் பார்த்தேன். பெரும்பாலும் ஆங்கிலத்தில் மிகத் தெளிவாகவே ஓவியங்கள் குறித்த புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆரம்பப் பாடம் படிக்க விரும்புபவர்கள் <font color="#0000ff">Drawing and Illustration (by Peter Gray) <font color="#333333">மற்றும்</font> Sketching Made Easy (by Helen Douglas Cooper)</font> ஆகியன கிடைக்கின்றன. இரண்டுமே முன்னூற்றைம்பதிற்கும் மேல் இருப்பதால் இப்போதைக்குத் தேவையில்லை என்று நகர்ந்து தமிழில் ஏதாவது கிடைக்குமா எனத் தேடிப் பார்த்ததில் “<font color="#0000ff">மனித உருவங்களை வரைவது எப்படி</font>?” எனும் புத்தகம் (Prodigy வெளியீடு விலை ரூ.40)  எளிய முறையில் சின்னச் சின்ன பாடங்களுடன் துவங்குகிறது. அதைப் போன்றே பறவைகள், விலங்குகள் போன்றவற்றையும் வரைவதைத் தனித்தனி புத்தகங்கள் விளக்குகின்றன.</p> <p align="justify">தியோடர் பாஸ்கரனின் <font color="#0000ff">சித்திரம் பேசுதடி</font> (காலச்சுவடு – ரூ.175/-) தமிழ் சினிமாக்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. பழமையான சினிமாக்கள் குறித்து இலக்கியவாதிகள் என்ன பார்வை கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றிய முழுமையான விமர்சன தொகுப்பைக் காணமுடிகிறது. சினிமா மீதும் அதன் வரலாறு மீதும் ஆர்வமுடையவர்கள், தங்களது ஆதர்ச எழுத்தாளர்களின் பார்வையில் எதிர்வினைகளையும், விமர்சனங்களையும் படிக்கலாம். தஸ்தாவெஸ்கியின் நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப் படுகின்றன. நாவல் பரிட்சயம் உடையவர்கள் தஸ்தாவெஸ்கியைப் படிக்கவேண்டும் என்று பலராலும் சொல்லாமல் சொல்லப்படுவதைக் கேட்கமுடிகிறது.  ரா.கிருஷ்ணய்யா மொழிபெயர்த்துள்ள <font color="#0000ff">சூதாடி</font> (நியூ சென்சுரி புக் ஹவுஸ், ரூ.110) சிறிய நாவலே.. இன்னும் சில மொழிபெயர்ப்புகளையும் நண்பர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஜி.குப்புசாமி மொழிபெயர்த்த ஓரான் பாமுக்கின் <font color="#0000ff">என் பெயர் சிவப்பு</font> (காலச்சுவடு, ரூ.350/-) விறுவிறுப்பான நாவல். ரா.கி ரங்கராஜன் மொழிபெயர்த்திருக்கும் ஹென்றி ஷாரியரின் <font color="#0000ff">பட்டாம்பூச்சி</font> (நர்மதா ரூ.250/-) உண்மைக் கதையை மையப்படுத்தியிருக்கும் விறுவிறுப்பான நாவல். நிறைய நாவல்களின் முன்னுரையை வாசிக்கும்பொழுது “தமிழில் இதுவரை எழுதப்படாத களம்” என்ற அடைமொழியோடுதான் வாசிக்கிறேன்… ஒவ்வொரு நாவலுக்கும் இப்படி எழுதப்படாத களம் இருந்தால் எனில் இதுவரை தமிழில் உருப்படியாக எதுவும் எழுதவில்லையோ என்று சந்தேகிக்கும்படி செய்துவிடுகிறார்கள்!!!</p> <p align="justify">இன்னும் நிறைய புத்தக அங்காடிகளில் ஏறி இறங்கினேன். சாகித்ய அகாடமியில் நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. காவல்கோட்டம் தீர்ந்துவிட்ட சூழலில் அந்த அங்காடியே பிரசவம் முடிந்த பெண்ணைப் போல காட்சியளித்தது. <font color="#0000ff">தமிழ்ச் செல்வனின் சிறுகதைகள்</font> (பாரதி புத்தகாலயம், ரூ.140/-) <font color="#0000ff">ஜெயமோகன் குறுநாவல்கள்</font> (கிழக்கு, ரூ.200) யுவனின் <font color="#0000ff">பகடையாட்டம்</font> (கிழக்கு, ரூ.175/-) போன்றவை கவர்ந்தன. சென்ற புத்தகத் திருவிழாவின் போதே வாங்கவேண்டும் என்று நினைத்திருந்த நாஞ்சில் நாடனின் <font color="#0000ff">சூடிய பூ சூடற்க</font> (தமிழினி, ரூ.100/-) மற்றும் <font color="#0000ff">ஏழாம் உலகம்</font> (கிழக்கு, ரூ.150/-) போன்றவை மீண்டும் கண்களின் முன் நிழலாடியது… அந்த இடத்தில் ஒரு ஏக்கப்பெருமூச்சு அலைந்து கொண்டிருக்கும்.</p> <p align="justify">கிழக்கில் விசாரித்ததில் சாருவின் <font color="#0000ff">எக்ஸைலை</font> (ரூ. 250/-) நிறையபேர் வாங்கிச் செல்கிறார்கள், 300 புத்தகம் ஆர்டர் கொடுத்து அதில் 200 மட்டுமே வந்திருக்கிறது. இப்போது எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள் என்றார்கள், ஆறு மட்டுமே இருந்தது. இது மூன்றாம் நாள் கணக்கு.. இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன…. எனக்குத் தெரிந்து திருவிழாவில் காவல்கோட்டத்திற்கு அடுத்து சாருவின் எக்ஸைல்தான் அதிகம் ஓட்டம் பிடித்திருக்கிறது. சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்ததில் சாருவின் அதே வசீகர எழுத்து, </p> <p align="justify">கொற்கை எனும் ஒரு நாவல் கிலோ கணக்கில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த புத்தகத்தைத் தூக்கி படிப்பதற்காகவே நாள்தோறும் உடற்பயிற்சி செய்யவேண்டும், ஜோ.டி.குரூஸ் எழுதிய <font color="#0000ff">கொற்கை</font> காலச்சுவடு வெளியீடு (விலை ரூ.800/-) காவல் கோட்டத்தையே மிஞ்சிவிட்டது என்றால் பாருங்களேன்… </p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-38910647226426983622012-01-28T18:12:00.001+05:302012-01-28T18:12:16.602+05:30திருப்பூர் புத்தகத் திருவிழா–நாள் 3<blockquote></blockquote> <p><font color="#0000ff">அள்ளி <br />கைப்பள்ளத்தில் தேக்கிய நீர் <br />நதிக்கு அந்நியமாச்சு <br />இது நிச்சலனம் <br />ஆகாயம் அலைபுரளும் அதில் <br />கை நீரைக் கவிழ்த்தேன் <br />போகும் நதியில் எது என் நீர்? <br /></font> <br />- சுகுமாரன். <br /> <br />அலுவலக வேலைப் பளு காரணமாக வெகு தாமதமாகத்தான் விழாவினுள் நுழைந்தேன். எறும்பு மொய்க்காத பண்டம் போல பல இடங்களில் கூட்டமேயில்லை, ஒருவேளை நான் தாமதமாக வந்ததன் காரணமாகக் கூட இருக்கலாம். சேர்தளம் நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடியவாறே இருந்தவர்களை ஊடுறுவிச் சென்று கொண்டிருக்க, சிவக்குமார் அண்ணனும் திருநாவுக்கரசும் எதிர்பட்டார்கள். இம்முறை சில புத்தக அகங்களில் நுழைந்து பார்க்க அவகாசம் கிடைத்தது!</p> <p>நகரத் திருவிழாவில் தாவணி அணிந்த பெண்களைத் தேடுவதைப் போன்றதுதான் நல்ல புத்தகங்களைத் தேடுவதும். ஒரு புத்தகம் நல்லதா, அல்லது நமக்குத் தேவையில்லாததா என்று கணிப்பதென்பது ”கடவுள் இருக்கிறாரா இல்லையா” சர்ச்சையைப் போன்றது. பார்த்தவுடனேயும் ஒரு புத்தகத்தை வாங்கிவிட முடியுமா என்ன? ஒரு வாசகர் எப்படி புத்தகத்தைத் தேர்வு செய்கிறார்? <br /> <br />என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு புத்தகத்தின் ஈர்ப்பு அதன் அட்டைப்பட வடிவமைப்பிலும் புத்தகத் தலைப்பிலுமே இருக்கிறது. சிலசமயம் இது வெறூம் விளம்பரமென பட்டாலும் தலைப்பின் வசீகரம் அப்புத்தகத்திற்கான தர நிர்ணயக் குறியீடாக இருக்கும் என்பது எனது பொதுவான அனுமானம். இருப்பினும் வசீகர தலைப்புள்ளவைகள் அனைத்தும் நன்றாக இருக்கும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. நான் தேட விரும்பியது ஒரு கவிதை புத்தகமாக இருந்தால் அதிலிருந்து இரண்டு கவிதைகள் ஒழுங்கற்ற வரிசையில் (Random Order) படித்துப் பார்த்துவிடுவேன். அவையிரண்டும் பிடித்திருந்தாலொழிய அப்புத்தகத்தை வாங்க மாட்டேன். இதுவே கட்டுரையாக இருந்தால் ஒரு பக்கம், சிறுகதைத் தொகுப்பாக இருந்தால் ஒரு கதை. ஆனால் நாவலைத் தேர்ந்தெடுப்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. ஏதாவது ஒரு பக்கத்தைப் படித்துவிட்டு நமக்கு ஏற்றது என தேர்ந்தெடுத்துவிட முடியாது. அது பெரிய ஆலமரத்தின் விழுதைப் பற்றிவிட்டு ஆலமரத்தைச் சுற்றிவந்ததாக ஆகிவிடும். சிலசமயம் நமக்கு பரிட்சமயானவர்களுடைய முன்னுரை, பதிப்பகம், அல்லது பரிந்துரையின் காரணமாக கண்ணை மூடிக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம். <br /> <br />முதலில் கண்ணில் பட்ட ஒரு புத்தகம் <font color="#0000ff">ஜென் வழி</font> (வி.பத்மா - மதி நிலையம் – ரூ.150) ஜென் தத்துவங்களை விளக்கிச் சொல்லமுடியாது என்பார்கள், ஜென்னைப் பற்றித் தெரிந்து கொள்ள நாமும் ஜென் துறவியாக மாறவேண்டும். ஜென் துறவி என்றால் லெளகீக இன்பங்களைத் துறந்துவிட்டு காட்டுக்குச் செல்லுவதல்ல, நமது வாழ்க்கையில் மூடிக் கிடக்கும் வாழ்க்கை மீதான அர்த்தங்களை, உணர்வுகளை திறப்பதே ஜென்னின் வேலை. இப்படிச் சொல்லுவது கூட தவறாக இருக்கலாம். புத்தகத்தில் வாசித்த ஒரு கதை.</p> <p>வாழ்க்கை சலித்துவிட்டது என்கிறார் நண்பர். ஒரேமாதிரியான வாழ்க்கை, வீடு, அலுவலகம், திரும்பவும் வீடு என அசுவாரசியமாக இருக்கிறது என்கிறார். அதற்கு ஜென் தத்துவம் அறிந்த நண்பர் “ வாழ்க்கை எப்பொழுதும் ஒரே மாதிரியாகச் செல்லுவதில்லை என்கிறது ஜென், ஒரு ஆற்றில் குளித்து முடிந்த பிறகு மறுநாள் அதே ஆற்றில் ”நேற்று குளித்த ஆறு” என்று சொல்லிவிட முடியாது, ஏனெனில் நேற்று பாய்ந்த நீர் இன்று திரும்பவும் கிடைக்காது, இன்றூ வேறொரு புதிய நீரைத்தான் ஆறு நமக்கு வழங்கும்… வாழ்க்கையும் அது போலத்தான் என்கிறார். </p> <p>குறுங்கதைகளாக இருந்தாலும் ஓரளவு ஜென் தத்துவங்கள் மீதான ஐயத்தைப் போக்குமென்று நினைக்கிறேன். இதைப் போலவே  <font color="#0000ff">ஜென் தத்துவக் கதைகள்</font> (குருஜி வாசுதேவ் – சிக்ஸ்த் சென்ஸ் - 130), சூஃபி கதைகள், கன்ஃபூசியஸ் கதைகளும் கிடைக்கின்றன. என்னைக் கேட்டால் சிறுவர்கள் அவசியம் படிக்கவேண்டிய கதைகள் இவை. அன்றாட வாழ்க்கையிலிருந்தே உருவாக்கப்பட்டிருப்பதால் வெகு எளிமையாக இருப்பதை உணர முடிகிறது.</p> <p>காலச்சுவடு தனியாக புத்தக அகத்தினை அமைக்கவில்லை என்றாலும் சில புத்தகங்கள் கிடைக்கின்றன. அதில் நண்பர் மண்குதிரையின் <font color="#0000ff">புதிய அறையின் சித்திரம்</font> (காலச்சுவடு – ரூ 75) கிடைக்கிறது. மண்குதிரையின் வலைப்பக்கத்தில் நிறைய கவிதைகள் வாசித்திருக்கிறேன். மொழியை எளிமையாகவும் அடர்த்தியாகவும் பயன்படுத்தும் இளம் கவிஞர்களில் ஒருவர். சில கவிதைகள் கதை சொல்லல் போலவும், அனுபவங்களைப் போலவும், நெறியுணர்த்துபவை போலவும் பல பரிமாணங்களில் இருப்பவை. அதேபோல கவிஞர் இசையின் <font color="#0000ff">சிவாஜி கணேசனின் முத்தங்கள்</font> (காலச்சுவடு – ரூ.70/-) சற்றே விளாசல் கவிதை தொகுப்பு. இவரது உறுமீன்களற்ற நதி ஒரு குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கவிதைத் தொகுப்பு. சிவாஜி கணேசனின் முத்தங்கள் அவரது மூன்றாவது தொகுதி என்று நினைக்கிறேன். முன்னுரையில் குறிப்பிட்டிருந்தது போல இவரது கவிதையின் கூர்மை அபாயகரமானதாகவே இருக்கிறது. </p> <p>மனம் மட்டும் உறுப்பாக இருந்திருந்தால் <br />இன்னேரம் வெட்டித் தூர <br />எறிந்திருப்பான் தலைவன் <br /> <br />எனும் வாசித்த ஒரு கவிதையின் வரிகளே மனதை என்னவோ செய்கிறது. மிகச் சாதாரண வரிகள்தான் இவை, சொல்லப்படும் விதத்தில் அதன் வீச்சு உணரமுடிகிறது.</p> <p>யுவன் சந்திரசேகரின்<font color="#0000ff"> பயணக்கதை (காலச்சுவடு – ரூ. 290/-)</font> எனும் நாவல் மூன்று நண்பர்களின் பயணத்தைப் பற்றியது, மூன்று சேருமிடத்தில் நாவல் முடிவதாக முன்னுரை இருக்கிறது. ஒருநாவலில் மூன்று கதைகள் என்பதைவிட இம்மாதிரியான வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், ஒரே சினிமாவில் இரண்டு கதைகள் (ஐந்து மொக்கை கதைகள் கூட சினிமா ”வானத்தில்” இருக்கும்) அதன் திரைக்கதைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுபவை.</p> <p>மற்றபடி உயிர்மையில் நிறைய புத்தகங்கள் “பார்த்ததில்” <br /> <br />சுப்ரபாரதி மணியனின் ”நீர்த்துளி”, (இவரது சாயத்திரையும் மிக அருமையான புத்தகம்), கால்கள் – ஆர்.அபிலாஷ், வாமுகோமுவின் எட்ரா வண்டிய, மனுஷ்யபுத்திரனின் பசித்த பொழுது (முன்னட்டை படம் சுமார்தான்) ஆண்பால் பெண்பால் (தமிழ்மகன்) மற்றும் சுஜாதா, ஜெயமோகன், எஸ்ரா, எக்ஸட்ரா….</p> <p>ஸ்டீவ் ஜாப்ஸின் சரிதம் கிட்டத்தட்ட எல்லா புத்தக அகங்களிலும் கிடைக்கிறது. சில பக்கங்களைப் புரட்டியதில் ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் ஸ்டோரி கண்ணில் படர்ந்தது, எனினும் பிக்ஸார் தாண்டி ஸ்டீவ் ஜெயித்த கதையை பிரசுரித்திருக்கிறார்கள். “பாபர் நாமா” புத்தகம் விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது (மதி நிலையம் என்று நினைக்கிறேன்) கேட்டதற்கு இன்னும் புத்தகம் வரவில்லையாம். நீயா நானா கோபிநாத்தின் “ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க” என்ற புத்தகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என சில பக்கங்களைப் புரட்டியதில் அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பயணம் பற்றியும் எழுதியிருப்பதைப் பார்த்த பொழுது, எஸ்ரா ஜெயமோகன் போன்றோர் செல்லாத பயணங்களா, சந்திக்காத மனிதர்களா, அவர்களுடையதெல்லாம் ஏன் லட்சம் பிரதிகளைத் தொடவில்லை என்று தோணிற்று!!! பிரபலமாக இருப்பதன் வரம் போலும்!!!</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-46554849009697550102012-01-27T09:27:00.000+05:302012-01-27T09:35:18.405+05:30திருப்பூர் புத்தகத் திருவிழா–நாள் 2<p align="center"><strong> <table border="1" cellspacing="0" cellpadding="2" width="608"><tbody> <tr> <td valign="top" width="606">திருப்பூர் டைமண்ட் திரையரங்கின் எதிர்புறமுள்ள கே.ஆர்.சி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 9வது திருப்பூர் புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள்</td> </tr> </tbody></table> </strong></p> <p><font color="#0000ff">நீ இருக்கும் <br />திசைக்கு முகம் காட்டி <br />உன் சதுரமான <br />எதிர்பார்ப்பின் மேல் <br />பூக்காது <br />தொட்டிப் பூ <br />பூப்பூத்தல் அது இஷ்டம் <br />போய்ப்பார்த்தல் உன் இஷ்டம் <br /></font> <br /><font color="#000000">- கல்யாண்ஜி</font></p> <font color="#000000"> <p align="justify"><font size="6">பு</font>த்தகங்கள் கனவின் புறவெளிப்பாடு. புத்தகத் திருவிழாக்கள் கனவின் சங்கமம்…. அடுத்தவர் கனவினுள் ஊடுறுவும் அனுமதியை ஒவ்வொரு புத்தகங்களும் தருகின்றன. கனவுள்ளிருந்து மீண்டு நாமும் இன்னொரு கனவைப் படைக்கவும் ஒரு வழிகாட்டியைப் போல நிற்கின்றன. நான் சந்திக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் சொல்வது “நிறைய புத்தகங்களைப் படியுங்கள்” என்பதுதான். புத்தகம் படிக்கும் படைப்பாளிகள் தங்களுக்குள்ளான மாற்றங்களை, வேறுபாடுகளை, தரத்தினை தமது படைப்பின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். புத்தகங்கள் நம்மை வெறும் கதைகளால் நிரப்புவதில்லை, அது உண்மையின் ஒரு பங்கினை லாவகமாகத் திணிக்கிறது. முடங்கிக் கிடக்கும் மனதின் ஒரு துளி நெருப்பை தூண்டி பற்ற வைக்கிறது. காலத்தின் ஒவ்வொரு துளியிலும் நம்மை இருத்தி வைக்கிறது…</p> <p align="justify"> இரண்டா<a href="http://lh3.ggpht.com/-adMmKS106rY/TyIhbcrLVEI/AAAAAAAABS8/x99vszo-qyg/s1600-h/429640_277507725649952_100001721796574_771739_2063919031_n%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 0px 6px 0px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="429640_277507725649952_100001721796574_771739_2063919031_n" border="0" alt="429640_277507725649952_100001721796574_771739_2063919031_n" align="left" src="http://lh3.ggpht.com/-F0W6q_Hwomg/TyIhvefv14I/AAAAAAAABTE/ekWxC3CvSjs/429640_277507725649952_100001721796574_771739_2063919031_n_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="290" height="193" /></a>ம் நாளான நேற்று சங்கமத்தில் கலந்து கொள்ள வந்திருந்த வாசகர்களைக் காணும் போது உண்மையான திருவிழா எப்படியிருக்கும் என்று காண்பிப்பதாக இருந்தது. குடியரசு தின விடுமுறை என்பதால் ஒவ்வொரு புத்தக அரங்கினுள்ளும் நிற்க முடியாத அளவிற்கு நெருக்கமான கூட்டம் காண முடிந்தது. புத்தகத்தின் வாசனை முகர பின்னலாடை நகரம் இந்த அளவிற்கு ஆர்வம் கொள்ளுகிறதா என்று உள்ளுக்குள் பெருமிதம். நேற்று முழுவதும் மகிழ்ச்சியின் கடல் விழாவின் இண்டு இடுக்கு முழுவதும் பரவியிருந்தது. நிறைய பெற்றோர்கள் தத்தம் மனைவி பிள்ளைகளுடன் இனிதே கலந்து கொள்வதைக் காண முடிந்தது. முதிர்வின் பெருமூச்சென இருந்த களத்தை மணத்தின் களிப்பாக மாற்றிவிட்டது நேற்று!</p> <p align="justify">சேர்தளம் சார்பில் நாங்கள் வரவேற்புக் குழு அமைத்திருந்தோம். வாசகர்களின் புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கெனவே இரவிக்குமாரும் முர<a href="http://lh5.ggpht.com/-EFaQaw8F_2s/TyIh6kBoivI/AAAAAAAABTM/5R72OIkFFfU/s1600-h/405845_277507605649964_100001721796574_771737_1573615405_n%25255B5%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 6px 20px 2px 9px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="405845_277507605649964_100001721796574_771737_1573615405_n" border="0" alt="405845_277507605649964_100001721796574_771737_1573615405_n" align="right" src="http://lh5.ggpht.com/-sxnGqqoqkZs/TyIiDPcyUEI/AAAAAAAABTU/dQS1OrP55JM/405845_277507605649964_100001721796574_771737_1573615405_n_thumb%25255B3%25255D.jpg?imgmax=800" width="334" height="223" /></a>ளிக்குமாரும் கேமராவும் கையுமாக விழாவிற்குள் நிறையபேரைச் சந்தித்தார்கள். புத்தக அகத்தின் வாயிலில் அமர்ந்திருந்தவர்களிடம் இன்றைய நாளைப் பற்றிய விசாரணைகள், வாசகர்களின் ஆர்வம், புத்தக விற்பனை குறித்தான பல கேள்விகளும் கேட்கப்பட்டன. வெளியே நாங்கள் யூடான்ஸ் நடத்தும் <a href="http://www.blog.udanz.com/2012/01/nesamudanz-cancer-awareness.html">புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிக்கான</a> விளம்பர காகிதத்தை புத்தக திருவிழா களித்துத் திரும்பும் வாசகர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தோம். மேலும் ஒரு வலைமனை திறப்பது எப்படி? தமிழில் தட்டச்சுவது எப்படி? ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது எப்படி போன்ற வகுப்புகளும் நடைபெற்றன. ஒரு வாசகர் மிகுந்த ஆர்வமாக கேட்டறிந்து கொண்டார்.</p> <p align="justify">திருவிழாவின் இன்னொரு பக்கம் திருப்பூர் தமிழ்ச்சங்கம் வழங்கும் “இலக்கிய விருதுகள்” விழா மேடையில் நடைபெற்றது. நீதியரசர் ராமசுப்பிரமணியம் உரையாற்றிக் கொண்டிருந்தார். புத்தகம் வாங்கித் திரும்பும் வாசகர்கள், ஆர்வலர்கள் பலருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல் நாளைவிடவும் இரண்டாம்நாள் விழா நேரம் அதிகம் நீட்டிக்கப்பட்டிருக்கக் கூடும். கோவில் திருவிழாக்களின் போது எப்படி நேரம் போவதே தெரியாதோ அப்படித்தான் இருந்தது எங்களுக்குமே, அப்பொழுதுதான் வந்தது போல இருந்தது, சீக்கிரமே இரவின் இருளைத் தொட்டுவிட்டதாகத் தோணிற்று. உண்மையில் இறைவன் என்றொருவன் இருப்பானேயானால் விழாக்களின் மாலையை நீட்டச் செய்யட்டும்!!</p> <p align="justify">கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரேயொரு பதிப்பகத்திற்கு மட்டுமே நுழைந்தேன். அஜயன் பாலாவின் <font color="#0000ff">மர்லன் பிராண்டோ – (ரூ. 250/-  எதிர் வெளியீடு)</font> புத்தகத்தை சற்று நேரம் புரட்டிக் கொண்டிருந்தேன். பிராண்டோவின் சுயசரிதையை மொழிபெயர்த்திருக்கிறார் அஜயன். தனது பிறப்பு முதலான வாழ்க்கை, நடிப்பு, நடித்த படங்களில் அனுபவங்களென புத்தகம் விவரிக்கிறது. தமிழ் திரையுலக நடிகர்களின் பல்வேறு சரிதைகள் எழுதப்பட்டிருந்தாலும் மர்லன் பிராண்டோ போன்ற சிறப்பான உலக நடிகர்களின் சரிதை தெரிந்து கொள்வது அவசியமாகும். பெருமாள் முருகன் எழுதிய <font color="#0000ff">கெட்ட வார்த்தை பேசுவோம் (ரூ 100/- கலப்பை வெளியீடு)</font> எனும் கட்டுரை  கவனத்திற்கு ஈர்த்தது. எந்தவொரு வார்த்தையும் கெட்டுப்போவதில்லை என்று சொல்லும் பெருமாள் முருகன் காமம் சார்ந்த பழமொழிகளையும், பாடல்களையும் அதன் புழக்கத்தையும் பற்றி பேசுகிறார். வன் சொற்கள் என அறியப்பட்டதை மென்சொற்களால் படிக்க முடியும் பொழுது நாம் உருவாக்கிய வார்த்தைகளை அதற்கான மதிப்பை நாம் எவ்வாறான நிலையில் வைத்திருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது. கெட்டவார்த்தையோ அல்லது காமமோ இன்று நேற்று புழங்குவதல்ல, ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய இரட்டைப் புலவர்கள், கம்பர் முதலான பெரும் கவிகளும் புழங்கியவை என்பதை பாடல்களுடனே விவரிக்கிறார்.</p> <p align="justify">இரண்டாம் நாளான நேற்றைய கூட்டம் இனி தொடரும் அனைத்து நாட்களிலும் இருக்கவேண்டும் என்பது புத்தகம் வாசிக்கும் ஒவ்வொருவரது ஆசையாகவும் இருக்கும்!!</p> <p align="justify">பிகு : நேற்று ”கொழந்த”யிடம்  மொத்தமே 60 சொச்சம் ஸ்டால்கள்தான் என்று சொல்லியிருந்தேன். ஆனால் எனது எண் தவறானது. நூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருந்தன. </p> <p align="justify">பிபிகு : மூன்றாவது நாளான இன்று சார்லி சாப்ளினின் “The Kid” திரைப்படம் ஒளிபரப்பப் படவிருக்கிறது!</p> <p align="justify"><a href="http://lh3.ggpht.com/-y7EPg6gNP10/TyIiJlM28jI/AAAAAAAABTc/-ouqrtC0OS0/s1600-h/425015_277507525649972_100001721796574_771736_771681323_n%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="425015_277507525649972_100001721796574_771736_771681323_n" border="0" alt="425015_277507525649972_100001721796574_771736_771681323_n" src="http://lh4.ggpht.com/-3pHjtAmxd0k/TyIiOUwcEbI/AAAAAAAABTk/l4fn_6wtRo0/425015_277507525649972_100001721796574_771736_771681323_n_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="367" height="245" /></a> <br />வலைப்பதிவு பற்றிய குறுவகுப்பு எடுக்கும் சேர்தளம் நண்பர் செல்வம்,</p> </font> <p> <br /><a href="http://lh3.ggpht.com/-Hiafoqnr_P8/TyIiZh86cRI/AAAAAAAABTs/yGwc0IkVpX4/s1600-h/399967_3104832189899_1537104825_32916689_1462036868_n%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="399967_3104832189899_1537104825_32916689_1462036868_n" border="0" alt="399967_3104832189899_1537104825_32916689_1462036868_n" src="http://lh5.ggpht.com/-H9MGYWHSCgQ/TyIidros3xI/AAAAAAAABT0/dlxRvxh5XWA/399967_3104832189899_1537104825_32916689_1462036868_n_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="364" height="243" /></a> <br /> <br />ரூபாய் 250க்கும் மேல் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு சான்றிதழ்!!</p> <p>உடனுக்குடன் திருப்பூர் புத்தகத் திருவிழா தகவல்கள் பெற</p> <p><a title="http://www.facebook.com/groups/tupbf/" href="http://www.facebook.com/groups/tupbf/">http://www.facebook.com/groups/tupbf/</a></p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-61444661144363153282012-01-26T09:33:00.001+05:302012-01-26T09:33:37.457+05:30திருப்பூர் புத்தகத் திருவிழா–நாள் 1<p align="left"><font color="#0000ff">முட்டை ஓட்டின் விரிசல் வழி <br />நீளும் <br />பிஞ்சு அலகுக்கு <br />முதல் உணவாய் கிடைக்கும் <br />ஒரு துளி ஆகாயம்</font></p> <p><font color="#000000">- யுவன்.</font></p> <p> <br />புத்தகங்கள் ரகசிய உலகை ஒவ்வொரு பக்கத்திலும் ஒளித்து வைத்திருக்கின்றன. அவற்றை முகரும் பொழுதெல்லாம் அவிழ்ந்து பரந்து விரிகிறது ஒரு புறவெளிப்பாட்டு கனவைப் போலவே. இந்த புத்தக இரகசியம் அறிந்த எவரும் வெவ்வேறு உலகினுள் பயணிக்கவே விரும்பி புத்தக அடிமைகளாகிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையிலும் நானொரு புத்தக அடிமை என்று சொல்லவே மாட்டேன். வீட்டிலே எண்ணிப் பார்த்தால் ஐம்பது புத்தகங்கள் கூட தேறாத சூழ்நிலையில் என்னைவிடவும் என் வீட்டு எலிகளே அதிகம் அந்த உலகினும் சஞ்சரித்திருக்கக் கூடும். புத்தக வாசிப்பவர்கள் தன் மேலே ஒரு உலகை எழுப்பி போர்த்திக் கொள்கிறார்கள் அதினின்று மீண்டு உலகின் மேற்கூட்டைக் கிழித்து மீண்டுமொரு உலகினுள் பொருத்திக் கொள்வது எவ்வளவு தீராத விளையாட்டு?</p> <p>எந்த புத்தகத் திருவிழாவை விடவும் இந்த முறை திருப்பூரில் நிகழும் 9 வது புத்தகத் திருவிழா, எனக்கு மிகுந்த களிப்பையும் வனப்பையும் தருவது எனக்கே சுவாரசியமான விஷயம். இரவெல்லாம் புத்தகங்கள் கனவுகளை அடுக்கிச் சென்றன. வெளிப்படுத்த முடியாத ஆசுவாசம் பனிக்காற்றைப் போல தாக்கிற்று. எல்லாம் புத்தகம் புத்தகம் புத்தகம்….. </p> <p>சென்னை புத்தகத் திருவிழா குறித்து ஒவ்வொரு நாளும் நம் வலைப்பதிவர்கள் எழுதியவற்றைப் படிக்கும் பொழுதெல்லாம் நாமும் நமது ஊரில் நிகழவிருக்கும் திருவிழாவை இம்மாதிரி ஏன் கொண்டாடாமல் இருக்கிறோம் எனும் கேள்வி எழுந்தது. ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. போர்களத்தில் நின்று கத்தியைச் சுழற்றுவதுகூட எளிதாக இருக்கலாம் ஆனால் புத்தகத் திருவிழாவைப் பற்றி நாளொன்றும் எழுதுவது கடினம் என்று இக்கட்டுரையை எழுதும் பொழுதே உணர்ந்தேன். முடியும் வரையிலும் என்னுடையை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றே இதை எழுதுகிறேன்.</p> <p>நமது சேர்தளம் நண்பர்களுடன் மாலை ஆறு மணிக்கு விழாவினுள் கூடுவதாகத் திட்டமிட்டோம். முன்னதாக ஒரு ”ரவுண்ட்” அடிப்போம் என்று புத்தக விற்பனையகங்களைப் பார்வையிட்டபடியே சென்றேன். பெரியதாகவும் அல்லாமல் சிறியதாகவும் அல்லாமல் திருப்பூருக்கு ஏற்றவாறே இருந்தது. வழக்கம்போல கூடும் பதிப்பகங்கள், தமிழ், ஆங்கில புத்தக அகங்கள், மழலையர் புத்தக மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அங்காடிகள் ஆகியவையே நிரம்பியிருந்தன. ஆச்சரியமளிக்கத்தக்கவகையில் ”காலச்சுவடு” பதிப்பகம் அங்கே காணமுடியவில்லை. எதிர்பார்த்திருந்த “காமிக்ஸ்”களும் அங்கே இல்லை. </p> <p>ஆறுமணிக்கெல்லாம் பரபரப்பாகி, திருப்பூர் மேயரும் (பாதி)மாநகரின் தலைவரும் திறப்பு விழாவிற்கு வந்திருந்தார்கள். அதற்குள் தல, முரளி, செல்வம், சிந்தன், இரவிக்குமார் மற்றும் அவர்களது நண்பர்களுடன் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். வழக்கமான ச<font face="Arial">ந்திப்பு விசாரணைகளுடன் தேநீரால் தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டு வந்திருக்கையில் சிவக்குமாரும் திருநாவுக்கரசும் வந்து சேர்ந்திருந்தார்கள். அண்ணன் சிவக்குமார் அப்பொழுதுதான் சாளுக்கிய தேசப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்று வந்த ஊர், கண்டுணர்ந்த கோவில்கள், அனுபவங்கள் ஆகியவற்றை இயல்பாக பகிர்ந்து கொண்டிருந்தார். சேர்தளம் நண்பர்கள் அனைவரும் வெளியே சின்ன இடத்தை ஆக்கிரமித்து அமர்ந்து நிறைய பேசினோம். வழக்கம்போல எழுத்துக்களில் ஆரம்பித்து எழுத்தாளர் வழி வந்து சினிமாவில் முடிந்தது. திருநாவுக்கரசும் சிவக்குமார் அண்ணனும் உள்ளே சென்று </font></p> <p><font face="Arial">முதல் நாளில் அவ்வளவாக புத்தகத் திருவிழாவில் தொலைந்து போகவில்லையெனினும் எப்போழ்தும் சென்றிராத ஆங்கிலப் புத்தகப் பெண்களைத் தழுவச் செல்லலாமே என்று ஸ்டால் எண் மூன்றில் உள்ள <font color="#0000ff">ஓம் சக்தி புத்தக நிலையத்தைப்</font> பார்வையிட்டேன். மேசை முழுவதும் குழந்தைகளுக்கான ஆங்கில புத்தகங்கள், மிக எளிதாக குழந்தைகள் புரியும்படியான, எளிமையான புத்தகங்கள், குறிப்பாக சாப்பிடுவது எப்படி? கைகழுவுவது எப்படி போன்றவற்றை படவிளக்கங்களுடன் கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை சாப்பிடவே தெரியாதவர்களுக்கான புத்தகம் போலும்! மேலும் அங்கே இளைஞர்களுக்கான புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன. நல்ல தரமான போட்டோ பேப்பரில் அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. இரண்டாம் உலக யுத்தம் குறித்த ஒரு புத்தகம் <font color="#0000ff">The Illustrated Second World War,</font> யுத்தத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்கிறது. நேரில் அமர்ந்து யுத்தத்தை “ரசிப்பதைப்” போல காணக்கிடைக்காத புகைப்படங்களுடனும் விளக்கப்படங்களுடனும் இருப்பதைக் காணும் பொழுது ஆங்கிலம் அறியாமை அறிவுக்குள் அறைந்தது! மொத்தம் நான்கு தொகுதிகள்; தொகுதியொன்றின் விலை 350 ரூபாய், கிட்டத்தட்ட 500 பக்கங்களாவது இருக்கும். கொஞ்சம் அப்படியே மேய்ந்ததில் ஆச்சரியமாக <font color="#0000ff">Van Gogh and Gauguin</font>  எனும் புகைப்பட புத்தகம் கிடைத்தது. வில்லியம் வான்கா மற்றும் அவரது தற்காலிக நண்பர் பால் காகினது ஓவியங்கள் குறித்தான பார்வைகள் ஓவியங்களுடன்… வான்காவின் முக்கிய ஓவியங்களை எடுத்து அதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பின்பக்கத்தில் விலை ரூ. 175.00 என்றிருந்ததும் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தேன், ஆனால் விற்பனையாளர் அதைத் திருத்திவிட்டு 350 என்று சொன்னதால் புத்தகம் பழைய இடத்திற்கே பரிதாபத்துடன் அமர்ந்து விட்டது! இதைப் போன்றே <font color="#0000ff">Impressionism</font> (ரூ.450) <font color="#0000ff">Claude Monet</font> (250) மற்றும் <font color="#0000ff">Mastering the art of Oils Acrylic and Gouache</font> (ரூ.450) போன்றவை அதனதன் புத்தக அளவிலும் தரத்திலும் மலிவானவையே!!  வி</font><font face="Arial">ற்பனையாளரிடம் கொஞ்சம் பேசினால் இன்னும் மலிவாகக் கிடைக்கும் என்பது என் எண்ணம். Vangogh, Impress.., Mastering the art ஆகிய மூன்று புத்தகங்களையும் 500 ரூபாய்க்கு கேட்கலாம் என்றிருக்கிறேன்! </font></p> <p><font face="Arial">இன்னும் ஒரு புத்தக அகத்தையே முடிக்காத சூழ்நிலையில் மீதமிருக்கும் நாட்களில் அறுபதிற்கும் மேற்பட்ட அகங்களை எப்படி களித்துணர்வது?</font></p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-48511808505298408232011-06-30T13:06:00.000+05:302011-06-30T13:10:43.413+05:30Transformers 3 : Dark of the Moon - விமர்சனம்<p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX4yDtaqVM4f17nycBvnAO7Q5Q1f3lkqzoIBIrD2g-W7GSq45KXLZhuwji8lQjO5KO4_92NK6ltmxNVnPi1LChyphenhyphen26kZKIpPEK-dJDeAsn4bAZXv5xoS6e7NX_Q97AQxg8driWykzS_BFQ/s1600-h/Transformers-Dark-of-The-Moon-Poster-July-2011%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="Transformers-Dark-of-The-Moon-Poster-July-2011" border="0" alt="Transformers-Dark-of-The-Moon-Poster-July-2011" src="http://lh4.ggpht.com/-fU6yo6EFO4I/TgwnyGWz3WI/AAAAAAAABQU/OIUY91sWn3U/Transformers-Dark-of-The-Moon-Poster-July-2011_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="319" height="472" /></a></p> <table border="1" cellspacing="0" cellpadding="2" width="703"><tbody> <tr> <td valign="top" width="200"> <p>Direction     <br />     </p> </td> <td valign="top" width="501"> <p>Michael Bay</p> </td> </tr> <tr> <td valign="top" width="200"> <p>Starring </p> </td> <td valign="top" width="501"> <p>Shia LaBeouf, Josh Duhamel, John Turturro, Tyrese Gibson, Rosie Huntington-Whiteley, Patrick Dempsey, Kevin Dunn, Julie White, John Malkovich, Frances McDormand <br /></p> </td> </tr> <tr> <td valign="top" width="200"> <p>Cinematography</p> </td> <td valign="top" width="501"> <p>Amir Mokri</p> </td> </tr> <tr> <td valign="top" width="200">Year</td> <td valign="top" width="501">2011</td> </tr> <tr> <td valign="top" width="200">Language</td> <td valign="top" width="501">English</td> </tr> <tr> <td valign="top" width="200">Genre</td> <td valign="top" width="501">Action, Sci-fi</td> </tr> </tbody></table> <p>சில தமிழ் படங்களைப் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளியேறும்பொழுது சிலர் “நல்லா கதை விடறானுங்க” என்று உச்சுவார்கள். அந்த படத்தில் பல ஓட்டைகளும், விபரங்களில்லாத மேலோட்டமான சங்கதிகளும் நிறையவே இருக்கும். ஆனால் அதே சமயம் அந்த சிலர் “இங்கிலிஷ் காரனுங்க எப்படி எடுக்கிறானுங்க பாருங்க… நம்மளாலெல்லாம் முடியாதுப்பா” என்று சலித்துவிடுவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் வெறும் பணம் மட்டுமே படமல்ல. கூடுமானவரையிலும் லாஜிக் ஓட்டைகள் தவிர்த்து, கொஞ்சம் விவரங்கள் சேகரித்து ஒரு புனைகதையை உண்மையாகவே நடந்தது போன்ற தோற்றத்தைத் தந்துவிடுகிறார்கள். ஆகமொத்தம் நமக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், நாம் ஏனோதானோவென கதை விடுகிறோம், அவர்கள் கொஞ்சம் நம்பும்படியாக கதை விடுகிறார்கள் அவ்வளவே.. அமெரிக்கர்கள் வாழ்வியல் நிலைநிறுத்தத்தையும், இனப்போராட்டத்தையும் மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கிறார்கள். ஹாரிபாட்டர், எக்ஸ் மென் போன்றவைகள் தமக்குள் ஏற்படும் இனத்தை நிலைநிறுத்தும் பொருட்டு கதைகள் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு இனப்போராட்டத்திற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அமெரிக்கர்கள் சம்பந்தப்படுகிறார்கள். அவர்கள் உலகையும் ஒரு இனத்தையும் காப்பாற்ற வந்தவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். </p> <p>ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் எனும் உருமாறிகள் சைபர்ட்ரான் எனும் வெளிகிரகத்தைச் சார்ந்தவர்கள். அவர்களில் டிசெப்டிகான், பிரைம் என இரண்டு இனத்தவர்கள் இருக்கிறார்கள். டிசெப்டிகானைச் சார்ந்தவர்களின் தலைவன் மெகட்ரான், பிரைம் இனத்தைச் சார்ந்தவர்களின் தலைவன் ஆப்டிமஸ் பிரைம். இவர்களுக்குள் நிகழும் போரினாலும் விளைவுகளினாலும்  பூமி சம்பந்தப்படுவதாக அல்லது பாதுகாப்பிடமாக முந்தைய படங்கள் காட்டுகின்றன. மற்ற படங்களைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். டிசெப்டிகான்கள் தங்களுக்காக ஒரு உலகை நிர்மாணித்து அதில் வாழ நினைக்கிறார்கள். ப்ரைம்களோ உயிர் வாழத் தகுதியுள்ள கிரகத்தை பாதுகாக்க அல்லது அழிக்காமலிருக்க நினைப்பவர்கள். </p> <p>1961ல் சைபர்ட்ரானில் போர் நிகழ்கிறது. விண்வெளிப்பாலம் அமைக்கும் தூண்களை ஒரு விண்வெளிக்கப்பலில் சுமந்துகொண்டு அக்கிரகத்தை விட்டு வெளியேறுகிறது செண்டினல் பிரைம் எனும் உருமாறி. ஆனால் டிசெப்டிகான்களின் குண்டுகளால் தாக்குதலுற்று சேதமடைய அந்த விண்வெளிக்கப்பல் நிலவில் வந்து விழுகிறது. நிலவின் மறுபக்கம் பூமியிலிருந்து பார்க்கமுடியாத ஒரு இருண்ட பக்கமாகவே இருந்து வருகிறது. ஏதோ ஒரு வெளிக்கிரக கப்பலொன்று நிலவில் விழுந்துவிட்டதாக உணர்ந்த அமெரிக்க விண்வெளித்துறையான நாசா அங்கே முதன்முறையாக மனிதனை அனுப்பி சோதனையிட முயலுகிறது. நிலவில் முதன்முதலாகப் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும் அந்த கப்பலை சோதனையிடுகிறார்கள். ஆனால் அளவில் மிகப்பெரியதாக இருப்பதாலும் தேவையான ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாலும் சோதனையிடாமல் வெறும் பார்வையை மட்டும் பதித்துவிட்டு திரும்பிவிடுகிறார்கள். </p> <p>இந்நிகழ்வு நிகழ்ந்து ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆப்டிமஸ் பிரைமும் அவனது கூட்டாளிகளும் ரஷ்யாவிலுள்ள செர்நோபில் எனும் அணு உலை விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சோதனையிட அழைக்கப்படுகிறார்கள். அங்கே நிலவின் மறுபக்கத்தில் விழுந்த விண்வெளிக்கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட கருவியொன்றின் மூலம் ஆற்றல் பெறப்பட்டதையும் அதனால் உலை வெடித்துப் போனதையும் தெரிந்து கொள்கிறார்கள். நிலவில் விண்வெளிக்கப்பல் விழுந்த ரகசியம் ஒருசிலருக்கு மட்டுமே தெரியும் என்பதாலும் அமெரிக்கா ரகசியத்தைக் கசியவிடாமல் வைத்திருந்ததாலும் ஆப்டிமஸ் பிரைம் அந்த விண்வெளிக்கப்பலையும் அதிலிருக்கும் தூண்களையும் ஓட்டிவந்த உருமாறி செண்டினல் பிரைமையும் மீட்க செல்கிறார்கள். செண்டினல் பிரைமுடன் ஒரு முக்கிய தூணுடன் சேர்ந்து ஐந்து தூண்களையும் எடுத்து வருகிறார்கள். நாசா ஆராய்ச்சி மையத்தில் வைத்து செண்டினல் பிரைமுக்கு உயிர் கொடுக்கிறது ஆப்டிமஸ் பிரைம்.</p> <p>வேலை தேடிக் கொண்டிருக்கும் கதாநாயகன் சாமுக்கு நிலவில் கப்பல் விழுந்த ரகசியம் தெரியவருகிறது. அதனுடன் விண்வெளிப் பாலம் அமைக்கப் போகும் தூண் பற்றியும், அதனால் மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பிரச்சனை பற்றியும் தெரிந்து கொள்கிறான். தவிர செண்டினல் பிரைம் டிசெப்டிகானின் தலைவனான மெகட்ரானின் உதவியுடன் அவர்களது கிரகமான சைபர்ட்ரானை பூமியிலேயே அமைப்பது குறித்தும் தெரியவர, இந்த விஷயத்தை நாசா ஆராய்வளர்களிடம் கூற முற்படுகையில் செண்டினலும் மெகட்ரானும் இணைந்து இல்லினாய்ஸ் நகரை அழித்து வேலி போட ஆரம்பிக்கிறார்கள். இதற்குத் துணையாக சாமின் காதலியின் முதலாளி டைலன் இருக்கிறார். ஒருகட்டத்தில் சாமின் காதலியைக் கடத்திச் செல்ல, சாம் தனது காதலியைக் காப்பாற்ற இல்லினாய்ஸ் செல்லுகிறார். இன்னொரு பக்கம் மெகட்ரான் அமெரிக்க அரசிடம் பிரைம்களான ஆட்டோபாட்களை வெளியேற்ற மிரட்டுகிறது. அதன்படி ஆட்டோபாட்கள் ஒரு ராக்கெட்டில் வைத்து அனுப்பப் படுகின்றனர். டிசெப்டிகானின் திட்டப்படி அந்த ராக்கெட் அழிக்கப்பட்டு ஆட்டோபாட்கள் அனைத்தும் ஆப்டிமஸ் பிரைம் உட்பட அழிகிறார்கள்.</p> <p>மெகட்ரானும் செண்டினல் பிரைமும் விண்வெளிப் பாலம் அமைக்க பூமியெங்கும் தூண்களை நிறுவுகிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றியானதா? ஆப்டிமஸ் பிரைம் போன்ற உருமாறிகள் இல்லாத நிலையில் சாம் எப்படி சமாளித்து தன் காதலியையும் உலகையும் காப்பாற்றப் போகிறார் என்பது மீதிக் கதை!!</p> <p>யப்பா… டைப் அடிக்கவே எனக்குக் குழப்பமாக இருக்கும் பொழுது சத்தியமாக இந்நேரம் இந்த வரிகளை நீங்கள் படிப்பீர்களா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது. முந்தைய இரண்டு படங்கள் பார்க்காதவர்கள் இப்படத்தைப் பார்க்க நேர்ந்தால் யார் வில்லன், யார் ஹீரோ என்றே தெரியாமல் ஙே என்று முழித்துக் கொண்டுதான் பார்க்கவேண்டியிருக்கும். இந்த கோஷ்டிகளுக்கு அடையாளம் தெரிய ஆட்டோபாட்கள் பல நிறங்களிலும் டிசெப்டிகான்கள் பழுப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டிருப்பதால் கொஞ்சமேனும் யாருடன் யார் சண்டையிடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. படம் முழுக்க எதாவது ஒன்று உருமாறிக் கொண்டேயிருப்பதாலும் பழகிய திரைக்கதை என்பதாலும் ஒரு சலிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு பிரம்மாண்டத்தின் ஆச்சரியம் துளியுமில்லாதது இப்படத்தில் பெரிய குறையாகக் கருதுகிறேன். தவிர ஹாலிவுட் கிளிஷேக்கலான கதாநாயகனுக்கு எந்த காயமுமில்லாமல் தப்பிப்பது, காதலியைக் காப்பாற்ற எந்த சூழ்நிலையிலும் தைரியமாக கதாநாயகன் முடிவெடுப்பது, மனித  இனத்துரோகியாக வில்லன், இறுதியில் மனித இனம் காப்பாற்றப்படுவது போன்றவைகள் இப்படத்திலும் உண்டு. இனப்போராட்டத்தை மறைமுகமாக சொல்லும் படமாக இதை சேர்க்க முடியாவிட்டாலும் மேலோட்டமாக அமெரிக்க இனம் மற்ற இனத்தைக் காட்டிலும் உயர்ந்தது போன்றோ அல்லது அதுவே ஆள்வது போன்றோதான் படம் காண்பிப்பதாகத் தெரிகிறது. </p> <p>ஆட்டோபாட்கள் காரிலிருந்து உருமாறுவதும், செர்நோபில் மற்றும் இல்லினாய்ஸ் சண்டை காட்சிகள் குறிப்பிடத்தகுந்தவை. சைபர்ட்ரான் கிரகத்தின் உட்பகுதியில் நிகழும் போரும் அதன் வடிவமைப்பும் கற்பனையின் உச்சம். பொதுவாகவே இம்மாதிரியான படங்களில் ஒளிப்பதிவும் ஒலிக்கலவையும் மிக அருமையாகவே இருக்கும். தவிர கணிணியில் வரையப்படவேண்டியவற்றை மனதில் நினைத்து ஒளிப்பதிவு செய்வது ஒரு சவாலான விஷயமும் கூட.. எனினும் படத்தின் இசை என்னை சுத்தமாகக் கவரவேயில்லை. ஒரு சராசரி இந்திய மசாலா திரைப்படத்தின் இசையை ஒத்திருந்தது. படம் முழுக்க சப்தங்கள் இரைந்து கிடப்பதால் இசைக்கான உண்மையான வேலை இல்லவே இல்லை! <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw1Mga4JDniK_5EL3EQXdel10B4Beu3d2BBYAVrpefU9AW86zm4XxARSFg-Qi2N7tKTigO1PtA06IMMYpjKyZAVLLDyKPMTcBFo8d6C9fGnEyVlKPbnbXR05W6W537EFkph7HnQdMAr7o/s1600-h/megan_fox_01%25255B12%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 3px 3px 0px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="megan_fox_01" border="0" alt="megan_fox_01" align="left" src="http://lh5.ggpht.com/-zd16mdnFwW4/TgwoGYvb2dI/AAAAAAAABQc/seFcsISORdY/megan_fox_01_thumb%25255B9%25255D.jpg?imgmax=800" width="296" height="185" /></a></p> <p>சாமின் காதலியாக முந்தைய படத்தில் வந்த மெகன் ஃபாக்ஸை நீக்கியது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. நம் ஊர் சீரியலில் இவருக்குப் பதில் இவர் வருவார் என்று காண்பிப்பது போல ஒரு ஃப்ளாஷ்பேக் வைத்து காண்பித்தது படத்துடன் ஒட்டாமலும் முந்தைய படங்களில் மெகன் கொடுத்த அழுத்தம் இதில் பதியாமலும் இவர்களிருவரின் காதல் சுத்தமாக எடுபடவேயில்லை. ஒரு மொன்னைத்தனமான காதலால் சாம் இவரைக் காப்பாற்றும் மையக் கதை தவிடுபொடியாகிவிடுகிறது. வெறும் எலக்ட்ரானிக் யுத்தங்களை ரசிப்பதற்காக வேண்டுமானால் ஓகே/// ஆனால் ஒரு அழுத்தமில்லாமல் சலிப்புத்தான் மிகுதியாகிறது. <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSo_RlQOsVZiPzm09NOL0MxgKnqq9Gkaql4iGnk7Ksp0L88QEjdh7Q23ek9ubencotun5r31cwrAcCeaijLx2oNIbeJto64VMWPVYm1tFA4s80EEHLbJLRgc81TukKR1ZQvb4ZTDClV04/s1600-h/Rosie-Huntington-Whiteley-transformer%25255B10%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 0px 9px 0px 3px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="Rosie-Huntington-Whiteley-transformer" border="0" alt="Rosie-Huntington-Whiteley-transformer" align="right" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdkYeOKgVLtuVlDtt0cTrYASxsT4-NeFa2pFwMURPHq4gvmxjFqhnsvcd_F_APmStT8ZTUUi-g7kOHb5czdNbdIENBIb2LKUuXdxmew6fL_T7HUvsPEB0ftFEN1VrX6RzSFeayeEtlt54/?imgmax=800" width="176" height="264" /></a></p> <p>சமீப காலங்களில் வரலாற்று நிகழ்வுடன் புனைகதையை இணைத்து (பொன்னியின் செல்வனைப் போல) படமெடுப்பது சகஜமாகி வருகிறது. நிலவில் அமெரிக்காவின் முதல் மனிதப் பயணமான அப்போலோ 11 ஐயும், செர்நோபில் அணு உலைக்குக் காரணம் எது என்பதையும் இணைத்து திரைக்கதை உருவாக்கியிருக்கிறார்கள். பார்ப்பவர்கள் நம்புப்படியாக அமைந்திருக்கிறது.</p> <p>ஒரு எலக்ட்ரானிக்ஸ் மனிதர்களின் இனப்போராட்டம் அது வடிவமைக்கப்பட்டிருக்கும் கிராஃபிக்ஸுக்காகவும், மற்றும் முப்பரிமாண பார்வைக்காவும் ஒருமுறை பார்க்கலாம்… </p> <p>(கார்ஸ் 2 முன்னோட்டம் திரையிடுவார்கள் என்று நினைத்து ஏமாந்தேன்… அநேகமாக அடுத்தவாரம் பார்த்துவிடுவேனென்று நினைக்கிறேன்!!)</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-88031398219348127052011-06-25T18:24:00.000+05:302011-06-25T18:25:44.817+05:30இறந்து போகாத கலைஞன் <p><a href="http://lh3.ggpht.com/-heEellZO8HQ/TgXapsXrPuI/AAAAAAAABQE/jrYLdQhYCCQ/s1600-h/4351-the-essential-michael-jackson%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="4351-the-essential-michael-jackson" border="0" alt="4351-the-essential-michael-jackson" src="http://lh6.ggpht.com/-ToQkgjZzf6o/TgXawoYmoYI/AAAAAAAABQI/XsCJKfoMzDs/4351-the-essential-michael-jackson_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="321" height="320" /></a></p> <p>இசை!! </p> <p>மடல்களின் வழியே பறைகளின் மீது மோதி உட்புகுந்து தெறித்து நரம்புகளின் நுண் துளைகளில் நிரம்பி நம்மை மறக்கச் செய்யும் வித்தையை இசையன்றி வேறெந்த கலையாலும் செய்யமுடியாது. Without music, life would be an error. என்றார் நீட்ஷே. இசைக்கு இனம், மொழி, தேசம், வயது என்று எந்த வட்டமும் கிடையாது. ஆனால் இசைக்கு பல பரிமாணங்கள் உண்டு!! அதனால் நம்மை அழவைக்கவும் முடியும், நம்மை சந்தோஷப்படுத்தவும் முடியும்... “இசை, தேவதைகள் பேசும் மொழி” என்கிறார்கள் அறிஞர்கள்!! அவர்களில் ஒருத்தி நம் காதில் தேனைப் போல பாய்கிறாள்! இன்னொருத்தி கண்களின் வழியே நீராய் வழிகிறாள்!!</p> <p>இதென்ன திடீரென்று இசையைப் பற்றி பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா? இன்று இசைச் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்ஸனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம். இசையுலகில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திச் சென்ற கடவுள் என்றே சொல்லலாம். எனக்கு மட்டுமல்ல, எல்லா ஆங்கில இசை விரும்பிகளுக்கும் இவரே நுழைவாயிலாக இருந்தார் என்றால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னர் எனக்கு மைக்கேலின் இசைத் தொகுப்பு கிடைத்தது. அதுதான் முதல் அறிமுகம் என்று சொல்லலாம் என்றாலும் மைக்கேல் ஜாக்ஸனைப் பற்றி எத்தனையாவது வயதில் அறிந்து கொண்டேன் என்பது தெரியாது. ஆங்கில இசைப்பாடல்கள் கேட்கும் வழக்கம் இல்லையென்றாலும் மைக்கேல் ஜாக்ஸன் எனும் பெயர்தான் கேட்கும்படி உந்தியது. ஆங்கில இசையை எல்லோராலும் விரும்பி அனுபவிக்க முதலில் முடியாது. அதற்குப் பழகவேண்டும். மாற்று இசை விரும்பிகள் எளிதில் நுழைந்துவிடுவார்கள் என்றாலும் சிறிதும் பழக்கமில்லாத ஒருவரும் மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் அவர் குரலில் மயங்கிப் போவது எப்படி என்று யாராலும் சொல்லிவிடமுடியாது. இத்தனைக்கும்  மைக்கேலின் பாடலைக் கேட்டறியாதவர்கள் கூட அவரது ரசிகர்களாக இருப்பதையெல்லாம் பார்த்திருக்கிறேன். அப்படியென்ன அவரது பாடல்களிலும் குரலிலும் இருந்தது?? மைக்கேலின் குரல்வளத்தை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய இசை விமர்சகன் கிடையாது. இசை விமர்சனமும் செய்தது கிடையாது. இருப்பினும் அவரது குரலில் ஒரு துள்ளல் இருக்கும். இருபாலரின் குரல் சேர்ந்த கவர்ச்சி இருக்கும். ஆனால் நம் மக்கள் மைக்கேலின் குரலைவிடவும் அவரது நடனத்தில்தான் விழுந்தார்கள் என்பதுதான் உண்மை! </p> <p>திரில்லர் வந்த சமயத்தில் அது இசைப்பிரியர்களின் தேசியகீதமாக இருந்தது. அப்பொழுதெல்லாம் நான் பிறக்கவேயில்லை (என் பெற்றோருக்கே திருமணம் நிச்சயிக்கவில்லை) எம்.டிவி வளர்ந்ததே ஜாக்ஸனின் திரில்லர் ஆல்பம் மூலம்தான் என்று சொல்வார்கள். திரில்லர் ஆல்பத்தில் அவரது மாஸ்டர் பீஸான திரில்லர் பாடலைப் பார்க்காதவர்களே இன்று இருக்கமாட்டார்கள். மிக வித்தியாசமான கதைசொல்லியாக அப்பாடல் இருக்கும். ஒரு சுருள்வடிவ வட்டத்தில் (ஸ்பைரல்) திரைக்கதை சுற்றிக் கொண்டிருக்கும். மைக்கேலும் அவரது காதலியும் ஒரு திரையரங்கில் சினிமா பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த சினிமாவில் காதலனாக மைக்கேல் ஜாக்ஸன் வருவார். இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் ஒரு இரவில் முழுநிலவின் ஒளியில் திடீரென நரிபோல மாறிவிடுவார். காதலியைக் கொல்வதாக காட்சி இருக்கும். அதைக் கண்டு பயப்படும் மைக்கேலின் காதலி சினிமா அரங்கை விட்டு வெளியேறுவாள். அவளை மகிழ்விக்க ஜாக்ஸன் பாடுவார்... எனக்குப் பிடித்ததே அப்பாடலில் ஜாக்ஸன் காதலோடு பாடிவரும் இடங்கள்தான். அந்த நீக்ரோ பெண்ணிடம் காதல் நிரம்பி வழியும். ஆனால் திடீரென சுடுகாட்டிலிருந்து பிணங்கள் எழுந்து காதலியைச் சுற்றிவர, திடீரென மைக்கேலும் பேயாக மாறி ஆட்டம் போடுவார்... அச்சமயத்தில் இரண்டு நிமிடம் நடனம் தான்... அந்த இரண்டு நிமிட நடனமே மைக்கேலின் முழுத்திறமையையும் கொட்டி எடுத்ததைப் போல இருக்கும். பேய்கள் அவரோடு ஒத்துழைத்து ஆடும். பயந்து போய் காதலி அவளது வீட்டுக்குப் போனால் அங்கேயும் பேய்கள் வீட்டை இடித்துக்கொண்டு வந்து தலையில் கையை வைக்கும் பொழுது திடீரென விழித்தால் மைக்கேல் ஜாக்ஸன் எப்பொழுதும்போல நின்றுகொண்டிருப்பார்.. ”பயந்துட்டியா” என்று கேட்டுக் கொண்டே நம்மைப் பார்ப்பார்... அவரது கண்கள் பேயுருவத்திற்கு மாறும்!! </p> <p>இதில் சுருள்வட்ட திரைக்கதை என்று ஏன் சொன்னேனெனில் உண்மையில் மைக்கேல் ஜாக்ஸன் பேயாக இருக்கிறாரா அல்லது கனவா என்றே இறுதிவரைக்கும் தெரியாது. திரில்லர் பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் மயிர்கூச்செறியும். தானாகவே மனம் துள்ளிடும்... பாடல் அப்படி!!</p> <p>என்றாலும் மைக்கேலின் திரில்லரை விட எனக்கு மிகவும் பிடித்தது Earth song, சுற்றுச்சூழல் மாசுகேட்டையும், மனிதனின் வக்கிரங்கள், போர்குற்றம் போன்றவற்றையும் எதிர்த்து பாடும் பாடல்... மிக அற்புதமான பாடல் அது.. மெலடி போல ஆரம்பித்து ராக் இசைபோல ஹைபிட்சில் பாடுவார். பாடலின் ஆரம்பத்தில் வெட்டி விழும் மரங்கள், தந்தம் இழந்த யானை, போரில் மரித்த மக்கள் என உலக அரசியலின் வக்கிரங்களைக் காண்பித்துவிட்டு மெல்ல மெல்ல அதனை பழைய நிலைக்குக் கொண்டுவருவதாக முடியும்!! அப்பாடலில் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஆச்சரியம் மிகுந்திருக்கும், ஒரு காட்சியில் மரத்தின் இடையே காமராவை வைத்து ரிவர்ஸில், விழுந்த மரம் மீண்டும் இணைவதாகக் காட்டியிருப்பார்கள், அதேபோல யானையின் தந்தம் முளைத்து யானை பிழைப்பது போல.... இன்று அதெல்லாம் பெரிய விஷயமில்லை என்றாலும் பதினைந்து வருடங்களுக்கு முன்பு பெரிய விசயம்தான்!! ஒரு பாடலுக்காக அவர் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை இப்பாடலில் தெரிந்து கொள்ளலாம்!!</p> <p>ஜாக்ஸன் என்றாலே நடனம் தான்.. அதிலும் Toe top, Moon walk போன்றவை, குறிப்பாக மூன் வாக்கை ஜாக்ஸனுக்கு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும் ஜாக்ஸனின் பில்லி ஜீனில் (Billie Jean) அது மிகவும் பிரபலமானது. பில்லி ஜீன் மேடைப் பாடலாகத்தான் முதலில் பார்த்தேன்.. அப்பொழுதெல்லாம் மூன் வாக்கும் தெரியாது, சன் வாக்கும் தெரியாது, ஆனால் நடப்பதைப் போலவே பின்னே கால்களை இழுத்துச் செல்வது ஒரு பெரிய ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. குறிப்பிட்ட அக்காட்சியை மட்டும் பலமுறை ஒளிபரப்பி ரசித்தேன்.. என்னைப் போல எத்தனைபேர் ரசித்தார்களோ? </p> <p>Beat it, பாடலின் காட்சிகள் இன்னமும் மனதில் இருக்கிறது. மற்றும் The way you make me feel. தமிழ் சினிமாவில் நிறையமுறை காப்பியடித்த பாடல்!! இவரது பாடலில் வெறும் நடனம் மட்டும் இருப்பதில்லை. ஆரம்பம் முடிவு முதற்கொண்டு ஒரு மினி சினிமாவே காணலாம். Beat it இல் எதிரெதிர் கோஷ்டிகள் இருவரின் அறிமுகத்தோடு தொடங்கும் பாடல் அவர்களது சண்டை வரை நீளும், பாடல் பாடிக் கொண்டே ஒரு விடுதியிலிருந்து வரும் மைக்கேல் இருவரையும் பிரித்து சேர்த்துவைப்பார்... அதைப் போலவே The way you make me feel ஒரு பெண்ணை சமாதானப்படுத்திச் செல்லும் தெருப்பாடகன், Remember the time (எட்டி முர்ஃபியுடன்) ஒரு அருமையான மினிசினிமா... பண்டைய எகிப்திய அரசிக்கு பொழுதுபோக்கு எதுவுமில்லாததால் அரசன் பொழுதுபோக்கிகளை  (entertainer) அழைத்து வித்தை காட்டச் சொல்லுவான். ஒவ்வொருவராகக் காட்ட மைக்கேலின் வித்தையில் மயங்கும் அரசி மைக்கேலை முத்தமிட, அரசனுக்குக் கோபம் வந்து கொல்லச் சொல்லுவான். அவர்களிடமிருந்து தப்பி அரசியைக் கைப்பிடிப்பதே அப்பாடலின் கதை! பாடலின் வரிகள் அரசியை மயக்குவதாக இருக்கும் (Do you remember the time, when we fall in love...) Black or White மார்ஃபிங் என்றால் என்ன என்பவர்களுக்கு இப்பாடலைப் போட்டு காண்பிக்கலாம்.. (ரோஜாப்பாக்கு விளம்பரம் இதை வைத்தே எடுக்கப்பட்டது) </p> <p>They don't care about us பாடலை கேட்காதவர்கள் இருக்க முடியாது. ஒரு கிங் ஆஃப் பாப், மக்கள் மத்தியில் பாடினால் எப்படியிருக்கும்?? ஒரு டாகுமெண்ட்ரி + டான்ஸ் ஆல்பம் போல இருக்கும். அதில் ஜாக்ஸனின் நடனம் மட்டுமல்ல, ஜாக்ஸன் அணிந்திருக்கும் பனியன் டிசைன் முதற்கொண்டு தேடியலைந்தவன் நான். You are not alone, ஒரு சுகமான மெலடி.... தவிர இப்பாடல் ஒரு கின்னஸ் சாதனையும் கூட. பில்போர்ட் 100 கேள்விப்பட்டிருப்பீர்கள், டாப் டென் போல இசைக்கு வரிசைப்படுத்தும் நிறுவனம் அது. அதில் எந்த இடமும் பிடிக்காமல் நேரடியாக முதலிடம் பிடித்த ஒரே பாடல் இதுதான்!!! மைக்கேலும் ஒரு பெண்ணும் ஆடையின்றி வருவார்கள், எங்கள் வீட்டில் பார்க்க அனுமதிக்கப்பட்டது... அதன் இசைக்காகவே! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், தங்கை ஜேனட்டுடன் ஸ்க்ரீம்... (ஒருமாதிரி விண்வெளிக்கூடம் போன்ற செட்டிங்..) மிக அருமையான கிளப் சாங்கான Smooth Criminal, மிக அழகான மெல்லிய, வேகம் குறைந்த காட்சிகளுடனான Stranger in moscow, ஆங்... மறந்துவிட்டேன்.. Man in the mirror ஒரு குறிப்பிட்டு சொல்லவேண்டிய பாடல்!! </p> <p>ஜாக்ஸனைப் பற்றி சிலாகிப்பதென்றால் பேசிக் கொண்டேயிருக்கலாம்... இசைக்கடவுள் என்று வர்ணிப்பதில் மிகையில்லை என்றே தோணுகிறது. தமது வாழ்நாளில் வெள்ளையராக இருக்கவேண்டுமென்ற பேராசையும் ஆடம்பர செலவுகளும் அவரை மன,பொருளாதார ரீதியாக இறக்கினாலும் அவரது ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவேயில்லை என்பது ஆச்சரியம்!! இத்தனைக்கும் ஜாக்ஸனின் Dangerous க்குப் பிறகு குறிப்பிட்டு சொல்லும்படியான ஆல்பம் எதுவும் வரவில்லை, (invinsible வந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் cry என்ற பாடலை மட்டுமே கேட்டிருக்கிறேன்) பாலியல் புகார்கள், ஒருசமயம் தனது குழந்தையை ஜன்னலிலிருந்து கீழே போடுவது போல செய்தது, போதை மருந்து உபயோகித்தது போன்ற தனிமனித ஒழுக்கம் அவரிடம் குறைவாகவே இருந்தது. ஜாக்ஸன் இறந்தபிறகும் சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை...  ஜாக்ஸனைப் பற்றி அவதூறு பேசிய, பாலியல் வன்முறைக்கு ஆளானவரிடம் கேட்டபொழுது “ பணத்திற்காக ஜாக்ஸன் மீது பழியைப் போடச்சொன்னார்கள்” என்றார்... ஒரு உயர்ந்த கலைஞனை நாம் இவ்வளவுதூரம் செருப்பால் அடித்திருக்கவேண்டாம்!!</p> <p>கலைஞர்கள் இறப்பதுண்டு.. அவன் விட்டுச் சென்ற தடங்கள் என்றும் இறப்பதேயில்லை.. ஜாக்ஸன் ஒரு நூற்றாண்டுச் சின்னம் போன்றவர்.. இன்றுள்ளவர்கள் நாளை இருப்பார்களா, தெரியாது. ஆனால் என்றும் ஜாக்ஸனின் ரசிகர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் . இசை என்ற வஸ்து உலகில் நீங்கும் பொழுது ஜாக்ஸனின் பெயரை உச்சரித்துவிட்டுதான் நீங்கும்... அவரது இரண்டாம் ஆண்டு நினைவுதினமான இன்று இக்கட்டுரை எழுதுவதில் பெருமகிழ்ச்சியடைவதோடு அவரது இசையை ரசித்த நான் அவருக்குச் செலுத்தும் மரியாதையாக நினைக்கிறேன். மேலும் நினைவூட்டி எழுதத் தூண்டிய தக்ஸ் aka ரங்கராஜன் அவர்களுக்கும் என் மனமாழ்ந்த நன்றி!!</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-11115318191187430492011-06-15T11:50:00.000+05:302011-06-15T12:00:53.324+05:30ஆரண்ய காண்டம் - விமர்சனம்<p><a href="http://lh3.ggpht.com/-n3C7gOe82Ho/TfhPRWONdfI/AAAAAAAABPs/j6VDK1rZcxs/s1600-h/Aaranya-Kaandam%25255B1%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="Aaranya-Kaandam" border="0" alt="Aaranya-Kaandam" src="http://lh5.ggpht.com/-k_LYtAOJSeo/TfhPWoNSLwI/AAAAAAAABPw/Dk6e5-UOnxU/Aaranya-Kaandam_thumb.jpg?imgmax=800" width="397" height="372" /></a></p> <table border="1" cellspacing="0" cellpadding="2" width="687"><tbody> <tr> <td valign="top" width="200"> <p>Directed & Written</p> </td> <td valign="top" width="485"> <p>Thiagarajan Kumararaja</p> </td> </tr> <tr> <td valign="top" width="200"> <p>Starring </p> </td> <td valign="top" width="485"> <p>Jackie Shroff, Ravi Krishna, Sampath Raj, Yasmin Ponnappa, Somasundaram</p> </td> </tr> <tr> <td valign="top" width="200"> <p>Music</p> </td> <td valign="top" width="485"> <p>Yuvan Shankar Raja</p> </td> </tr> <tr> <td valign="top" width="200"> <p>Cinematography   </p> </td> <td valign="top" width="485"> <p>P. S. Vinod</p> </td> </tr> <tr> <td valign="top" width="200">Year</td> <td valign="top" width="485">2011</td> </tr> <tr> <td valign="top" width="200"> <p>Language    </p> </td> <td valign="top" width="485"> <p>Tamil</p> </td> </tr> <tr> <td valign="top" width="200">Genre</td> <td valign="top" width="485">Neo Noir, Crime, Drama</td> </tr> </tbody></table> <p align="center"><strong><font color="#0000ff">வன்முறை, கெட்டவார்த்தை – குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதல்ல</font></strong></p> <p>இராமாயணத்தில் வாலியையும் சுக்ரீவனையும் சண்டையிடச் சொல்லிவிட்டு மரத்திற்குப் பின் மறைந்திருந்து தாக்குவான் இராமன். இறக்கும் தருவாயில் இராமனிடம் “இது தர்மமா?” என்று கேட்கும் வாலிக்கு, “யுத்த தர்மப்படி தவறுதான், ஆனால் மனுதர்மப்படி சரியானது” என்று விளக்கம் கொடுப்பான் இராமன். எந்த சூழ்நிலையில் எது தேவையானதோ அதுதான் தர்மம்… இராமாயணத்தின் ஒரு பகுதியைத் தலைப்பாக வைத்திருக்கும் ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் கருவும் அதுவே. Reservoir Dogs போன்ற மோனோகிராம் போஸ்டரைஸ்டு போஸ்டர்கள், அதில் முகம் தெரியாத நடிகர்கள், அதிக விளம்பரங்களும் ஆர்ப்பாட்டங்களுமில்லாமல், சர்வதேச விருதைப் பெற்றுவந்த சத்தமில்லாமல் அமைதியாக படம் வெளிவந்திருக்கிறது. சர்வதேச படங்களுக்கிணையான முயற்சிகள் தமிழ்சூழலில் அவ்வப்போது இருந்து வந்தாலும் முயற்சிகளைத் தாண்டி வென்றிருக்கிறது “ஆரண்ய காண்டம்”. விக்கிபீடியாவில், தமிழில் நியோ நாய்ர் ஜெனரில் வந்திருக்கும் முதல் திரைப்படம் என்கிறார்கள். பெருமையாகவும், வெட்கமாகவும் இருக்கிறது! இதற்கு முன்னர் புதுப்பேட்டையில் நியோ நாய்ரின்  கூறுகளான, கறுப்பு நகைச்சுவையும், ஒளிகுறைந்த ஒளிப்பதிவும் யதார்த்தமான கேங்க்ஸ்டர் கதையும் இருந்தாலும் மிகைப்படுத்தப்பட்ட திரைக்கதை, பாத்திரம் காரணமாக பெரிதாக எடுபடவில்லை என்றே நினைக்கிறேன் என்றாலும் சில அறிவுஜீவிகள் City of God லிருந்து பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வைத்தாலும் புதுப்பேட்டை என்னளவில் ஒரு முக்கியமான படமும் கூட. ”ஆரண்ய காண்டம்” படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, குவாண்டின் டாரண்டினோவின் தமிழ் வெர்சன் என்று சொல்லலாம். அந்தளவுக்கு படத்தின் துல்லியம் மிகப்பிரமாதமாக இருக்கிறது. குவாண்டினின் பல்ப் ஃபிக்ஷனுக்கும் புதுப்பேட்டையின் மேம்பட்ட கேங்க்ஸ்டர் வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கலாம். பல்ப் ஃபிக்ஷன் நான் லீனியர் திரைக்கதை சார்ந்து வேறுபட்டுவிடுகிறது.  <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpCshoFjaFvihnYX_WrFoB8oerW939-TcbTxc4gbUaMGGoTmUijVkQCsdYowxIKRjuynhEXRLWEHDj8kqtCBXikRV0BN0rKEv16B5nFdGAiTR3w89HRSlI8JhddipfqcraSykZGIRk5Dk/s1600-h/Aaranya-Kaandam-Stills-014%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 16px 10px 3px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="Aaranya-Kaandam-Stills-014" border="0" alt="Aaranya-Kaandam-Stills-014" align="left" src="http://lh4.ggpht.com/-MZ9XthmXvqM/TfhQ_5F8HlI/AAAAAAAABPU/i4sGZ5_ZZMs/Aaranya-Kaandam-Stills-014_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="304" height="204" /></a></p> <p>இப்படத்திலும் நான் லீனியரின் கூறுகள் சில இடங்களில் எட்டிப்பார்த்தாலும் முழுமையாக இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், தமிழ்சினிமாவின் எண்பதாண்டுகால திரைக்கதையமைப்பின் மிக முக்கியமான லீனியர் இப்படத்திலுண்டு. கிட்டத்தட்ட வானம் படம் போன்ற ஐந்து கதைகளின் ஒருங்கிணைப்பு என்றாலும் ஒவ்வொரு கதைக்குள்ளும் உள்ள வேறுபாடு, அது முடியும் தருவாயில் ஒரு தொடர்பு என்பதாக நீளுகிறது. </p> <p> “ஒங்களால முடியலைன்னா என்னை ஏன் அடிக்கிறீங்க?” என்று தீர்ந்து போன தனது காமத்தை விமர்சிக்கும் ஒரு பெண்ணின் கோபத்தின் மூலம் வன்மத்தின் விதை விதைக்கப்படுகிறது. இளமையும் அதிகாரமும் தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் சிங்கம்பெருமாள் ”ஆடுகளம்” பேட்டைக்காரனைப் போன்ற வன்மத்தை தனது கூட்டாளியான பசுபதியின் ஒற்றைச் சொல்லிலிருந்து தொடர்கிறார். எதிர் கூட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரனுக்குச் சேரவேண்டிய கொகைன் எனும் போதை மருந்தை பசுபதி கைப்பற்ற நினைக்கிறார். இது சிங்கம்பெருமாளுக்குப் பிடிப்பதில்லை. தனது ஆட்களை வைத்தே பசுபதியைப் போட்டுத்தள்ளச் சொல்லுகிறார். இது பசுபதிக்குத் தெரிந்து தப்பிச் செல்லுகையில் சிங்கம்பெருமாளின் ஆட்கள் பசுபதியின் மனைவியைக் கடத்துகிறார்கள். இன்னொரு பக்கம் தனக்கு சேரவேண்டிய சரக்கை சிங்கம்பெருமாள் கடத்துகிறார் என்றறிந்து அவரை மிரட்ட, சம்பத்தை கோர்த்துவிடுகிறார் சிங்கம்பெருமாள். இரு கூட்டமும் துரத்த, சம்பத் செய்வதறியாமல் ஓடுகிறார். ஆனால் சரக்கு எங்கே? அது சென்னைக்குப் பிழைப்புக்கு வரும் ஒரு தந்தை காளையன் மற்றும் மகன் கொட்டுக்காபுளியிடமும் மாட்டிக் கொள்கிறது. காளையன், சிங்கம்பெருமாளிடம் மாட்டிக் கொள்கிறார். இடையிடையே சிங்கம்பெருமாளின் கூட்டத்திலிருக்கும் சப்பைக்கும் சிங்கம்பெருமாளின் கீப்பான சுப்புவுக்கும் காதல் கனிகிறது… சரக்கு வாங்க வைத்திருக்கும் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் எப்படியாவது தப்பி மும்பை செல்லப் பார்க்கிறார்கள். </p> <p>பசுபதி, இரண்டு கூட்டங்களிலிருந்தும் தப்பிக்கவேண்டும், சப்பையும் சுப்புவும் தப்பிக்கவேண்டும், காளையனை அவரது மகன் கொடுக்காபுளி கண்டுபிடிக்கவேண்டும், கஜேந்திரனுக்கு சரக்கு வந்து சேரவேண்டும்…. அடுத்தடுத்து நடக்கும் பரப்பரப்பான இறுதிக்காட்சியில் எதிர்பாராத திருப்பங்களுடன் முடிகிறது திரைப்படம். <a href="http://lh4.ggpht.com/-a-_rx3zg1Qg/TfhREl6xlvI/AAAAAAAABPY/v6D-4ZKfSsQ/s1600-h/Aaranya%252520Kaandam%252520Movie%252520New%252520Stills%252520%2525281%252529%25255B9%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="Aaranya Kaandam Movie New Stills (1)" border="0" alt="Aaranya Kaandam Movie New Stills (1)" align="right" src="http://lh3.ggpht.com/-kxw918NTbtw/TfhRIvKMJcI/AAAAAAAABPc/m8_JNJaOCa4/Aaranya%252520Kaandam%252520Movie%252520New%252520Stills%252520%2525281%252529_thumb%25255B5%25255D.jpg?imgmax=800" width="344" height="231" /></a></p> <p>இப்படியொரு படம் வந்திருப்பதை நம்பமுடியவில்லை. ஒரு நாவல் படித்ததைப் போல மிக அழகாக விவரமாக, துல்லியமாக, தேவையற்ற காட்சிகளற்று செல்கிறது. குறிப்பாக திரைக்கதை. முன்பே சொன்னது போல தமிழ்சினிமாவின் திரைக்கதையம்சங்களை அநாயசமாக உடைத்தெறிகிறது. சிங்கம்பெருமாளான ஜாக்கி ஷெராபின் அறிமுகம், அவர்களது கூட்டாளிகளின் அறிமுகம், பசுபதியான சம்பத்தின் வழியே கஜேந்திரன் மற்றும் அவனது தம்பி கஜபதியின் ஃப்ளாஷ்பேக் கதை என நாவலின் கூறுகள் நிறைய காணமுடிகிறது. சப்பையும் சுப்புவும் உடலுறவு கொள்ளப்போகும் காட்சியை அணைந்துகிடக்கும் தொலைக்காட்சியின் பிம்பம் வழியே காண்பிப்பது. சப்பையின் கேரக்டரை முதல் காட்சியிலேயே முடிவு செய்வது, பின் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபிப்பது. காளையனின் மகனைப் பற்றிய அறிமுகம் என ஒரு சுழண்டு சுழண்டு வருகிறது. படத்தின் நிறம் மஞ்சள் என்பதை போஸ்டர்களிலேயே காண்பித்துவிடுவதால் படம் முழுக்க அதனை உபயோகித்திருக்கிறார்கள். லோலைட் காட்சிகளும் மிக அழுத்தமான நேரத்தில் எழும் இசையும் குறிப்பிடத்தக்கன. இசையைப் பற்றிச் சொல்லவேண்டுமெனில் யுவனின் மாஸ்டர் பீஸ் எனலாம். தேவையான இடங்களில் அமைதியையும், கொடுத்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், சம்பத் ஜாக்கியைப் பார்த்து “டொக்கு ஆயிட்டீங்களா?” என்று கேட்குமிடத்திலிருந்து துவங்குகிறது. காட்சிக்கேற்ப இசையை மாற்றிப் போடுவதிலிருந்தே இது ஒரு மாறுபட்ட பிஜிஎம் என்பது தெரிந்துவிடுகிறது. மென்மையான காட்சிகளில் வன்மையாகவும் வன்மையான காட்சிகளில் மென்மையாகவும் இசையமைக்கிறார். உலகத்தரம் என்று சொல்ல இயலவில்லை ஆனால் மாறுபட்ட இசை என்பதை புரியவைக்கிறார். பாடல் காட்சிகளுக்கான இடமிருந்தும் பாடல்கள் வைக்கப்படவில்லை. அதேபோலத்தான், வழக்கமான தமிழ் தாதாயிச படங்களுக்குண்டான குணங்களிலிருந்து வெகுதூரம் தள்ளியிருக்கிறது. அதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும் யதார்த்ததை மனதில் கொண்டு தவிர்த்திருக்கிறார்கள்!!</p> <p>வன்மையான காட்சிகள், ராவான கெட்டவார்த்தை வசனங்கள், தத்துவார்த்தமான வார்த்தைகளை மிக அநாயசமாகச் சொல்லிச் செல்லுமிடங்கள் என படத்தின் ஒவ்வொரு பிரேமுக்குமுள்ள வசன இடங்கள் கவனிக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் எல்லா கெட்டவார்த்தைகளும் இடம்பெறுகின்றன. ஆனால் சென்னையின் பிரதான வார்த்தையான “ஓத்தா” வை ஒரு இடத்திலும் கேட்டதாகத் தெரியவில்லை. சென்னையின் வட்டார மொழி சுத்தமாக இல்லை. ஆனால் அந்த குறை அவ்வளவாகத் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ”சரக்கு வாங்கித் தந்தவன் சாமி மாதிரி”, ”நீ மட்டும் உயிரோடு இருந்தே, உன்னைக் கொன்னுடுவேன்” ”டேய் மகனே, எங்கப்பனை விட உங்கப்பன் புத்திசாலிடா” போன்ற ப்ளாக் காமெடிகள் வாழ்ந்து கெட்ட ஜமிந்தாரான காளையனின் (கூத்துப்பட்டறை சோமசுந்தரம்) போதை வார்த்தைகள், குறிப்பாக ஜாக்கியிடம் சேவல்சண்டையில் ஏளனப்படுத்துவதும், பிறகு மாட்டிக்கொண்டு நொங்கு நொங்கென நொங்கியெடுத்தபிறகு பேசும் காட்சிகள் வன்முறையையும் மீறி சிரிப்பை வரவழைக்கிறது. கொடுக்காபுளியின் பாத்திர வடிவமைப்பு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியொரு பாத்திரம் தமிழ்சினிமாவில் இதுவரை வந்ததே கிடையாது. கையாலாக அப்பனின் மேலுள்ள கோபம், அதேசமயம் அவன் மனதிலுள்ள மெல்லிய பாசம், சம்பத் ஓரிடத்தில் அவனிடம் “உங்கப்பாவைப் பிடிக்குமா?” என்று கேட்க, “அப்படியெல்லாம் இல்ல… ஆனா அவரு என் அப்பா” என்பான்.. சாதாரணமாக இருக்கும் அசாதாரண வசனம் இது. அதே சம்பத் அவனிடம் “ உங்கப்பாவை நான் காப்பாத்தறேன், என் பொண்டாட்டியையும் கடத்திட்டு போயிட்டானுங்க” என்பார்.. அதற்குப் பையன் “உன் பொண்டாட்டியவே காப்பாத்த வக்கில்ல, எங்கப்பாவை எப்படி காப்பாத்துவ?” என்பான்… கொஞ்சம் மிகைத்தன்மையோடு தெரிந்தாலும் அசலான யதார்த்தமான, பாத்திரத்திற்கேற்ப வசனமாகவே இருக்கும்.. <a href="http://lh3.ggpht.com/-4Z3wr6GNclg/TfhRML9W3SI/AAAAAAAABPg/8C7boYDrWRw/s1600-h/aranya-%252520kandam-%252520Movie-%252520Stills-009%25255B5%25255D%25255B4%25255D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; margin: 6px 9px 0px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="aranya- kandam- Movie- Stills-009[5]" border="0" alt="aranya- kandam- Movie- Stills-009[5]" align="left" src="http://lh5.ggpht.com/-56Nkz77Iok8/TfhRPGnswBI/AAAAAAAABPk/WKbmFjB6TGk/aranya-%252520kandam-%252520Movie-%252520Stills-009%25255B5%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="340" height="228" /></a></p> <p> 52 இடங்களில் சென்ஸார் கைவைத்த சுவடு தெரியாத, சில இடங்களில் நான் லீனியர்தனமான காட்சிகள் என உழைத்திருக்கிறார்கள். துரத்தத் துரத்த ஓடும் சம்பத் திடீரென பைக்கில் வருகிறார். அது எப்படி என காண்பிக்கும் காட்சி, ஜாக்கி ஷெராஃபின் கூட்டாளிகள் பேசும் “ஆண்டிகளை கரெக்ட் பண்றது எப்படி?” போன்ற இயல்பான காட்சிகள் முதலில் அழுத்தமாகத் தெரியாவிட்டாலும் அதன் கீற்று பின்வரும் காட்சிகளில் எவ்வளவு தூரம் தேவையானது என்பது தமிழ்சினிமா திரைக்கதைக்கு மிகவும் புதிதானது. சம்பத், கஜேந்திரனைப் பற்றி விவரிக்கும் பொழுது “கட்டை விரலைக் கடிச்சதெல்லாம் சும்மா” என்று கூட்டாளிகள் ஏளனமாகப் பேசுவார்கள், அதேநேரம் அந்த பெண் கட்டைவிரலற்ற தனது கைகளால் டீ கொண்டுவந்து வைக்கும் காட்சி (சட்டென அதைக் கவனிக்காமல் விட்டேன்.) மிக ஜோவியலாகப் பேசிக்கொண்டிருக்கும் கூட்டாளிகள் சட்டென கத்தியைத் தூக்குவது…. மிஸ்டர் மரியோ கேம் காட்சி,  சான்ஸே இல்லைங்க. Pulp Fiction மற்றும் No county for old men படங்களின் ஃப்ரெஷ்ஷான தமிழ் வெர்சன் (காப்பியல்ல) பார்த்தது போலவே இருந்தது.</p> <p>ஜாக்கி ஷெராஃபின் முதல் தமிழ்ப்படம் இது. இந்திக்காரரான இவருக்கு தமிழ்சூழல், அதிலும் மிகமுக்கியமான பாத்திரமான சென்னையிலுள்ள கேங்க்ஸ்டர் தலைவன் எனும் சூழல் முற்றிலும் புதிதானது. ஆனால் மனுஷன் பின்னியிருக்கிறார். ஒரு காட்சியில் நிர்வாணமாகவும்!!! ஜாக்கியின் கீப்பாக வரும் யஅஸ்மின் பொன்னப்பா வாழ்ந்திருக்கிறார். இந்த படத்திற்கு நான் செல்வதற்கு தயக்கமாக இருந்ததற்கு ஒரே ஒரு காரணம் ரவிகிருஷ்ணா தான். 7G ரெயின்போ காலனியில் அட்டென்ஷனில் நின்று கொண்டு ஒப்பிப்பாரே… ஒருமாதிரி சப்பைத்தனமாக.. ஆனால் இப்படத்தில் கையில் ஒரு வீடியோகேம் சாதனத்தைக் கொடுத்துவிட்டதாலோ என்னவோ விளையாடியிருக்கிறார். ஒரு உறுப்பிடியான கேரக்டர் செய்துவிட்டதாக இனி எண்ணிக் கொள்ளலாம். படத்திற்குப் படம் பாத்திர கனத்தை ஏற்றிக் கொண்டே போகும் சம்பத்தின் நடிப்பு பாராட்டத்தக்கது. வெகு சில இடங்களில் சிலாகிக்கவைக்கிறார். காளையன் மற்றும் கொடுக்காப்புளி கேரக்டர்கள் படம் முடிந்தபிறகும் நீண்டநேரம் கூடவே வந்துகொண்டிருந்தது. </p> <p>ஆரண்ய காண்டம் – காங்க்ரீட் காட்டில் வாழும் நாகரீக விலங்குகள் மனிதர்கள். அவர்களில் யாரும் நல்லவர்களுமில்லை, கெட்டவர்களுமில்லை, தர்மம் என்பதே தனக்குத் தேவையானதை தேவையான நேரத்தில் பெறுவதுதான். அந்த தருணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும்…..</p> <div style="padding-bottom: 0px; padding-left: 0px; width: 448px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto; padding-top: 0px" id="scid:5737277B-5D6D-4f48-ABFC-DD9C333F4C5D:15c3e4e0-cb8e-4a83-b784-ddbe30e89b3e" class="wlWriterEditableSmartContent"><div id="43cc1f70-5e53-4453-bfcf-7fe95cd1ece0" style="margin: 0px; padding: 0px; display: inline;"><div><a href="http://www.youtube.com/watch?v=qBJ_UpyQw_s" target="_new"><img src="http://lh3.ggpht.com/-irPO7Lw6HeI/TfhQR12jBRI/AAAAAAAABP0/DeFYFLd9xYM/videod19f89f50524%25255B27%25255D.jpg?imgmax=800" style="border-style: none" galleryimg="no" onload="var downlevelDiv = document.getElementById('43cc1f70-5e53-4453-bfcf-7fe95cd1ece0'); downlevelDiv.innerHTML = "<div><object width=\"448\" height=\"252\"><param name=\"movie\" value=\"http://www.youtube.com/v/qBJ_UpyQw_s?hl=en&hd=1\"><\/param><embed src=\"http://www.youtube.com/v/qBJ_UpyQw_s?hl=en&hd=1\" type=\"application/x-shockwave-flash\" width=\"448\" height=\"252\"><\/embed><\/object><\/div>";" alt=""></a></div></div></div> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-40106589390849720792011-05-09T10:56:00.000+05:302011-05-09T10:57:37.108+05:30அவள் (18+)<p><a href="http://lh5.ggpht.com/_x__vwisw_WY/Tcd7MO49B_I/AAAAAAAABOQ/sluSqc2-lQM/s1600-h/naruo%5B4%5D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="naruo" border="0" alt="naruo" src="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/Tcd7QrmNN5I/AAAAAAAABOU/dZ2wYkSlIN4/naruo_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="291" height="235" /></a></p> <p> மதுக்கோப்பையில் ஊறிக்கிடந்த <br /> அவளை என் வாயில் ஊற்றி <br /> திமிரத் திமிரப் பருகுகிறேன் <br /> அடங்காமல் அலைந்திருந்த <br /> அவளது குரூரக் காமத்தை <br /> மதுக்கோப்பைகள் தீர்த்துவிட முடியாமல் <br /> தோற்றுப் போகின்றன <br /> உள்ளே நுழைந்தவள் <br /> மனதெங்கும் முடிச்சுக்களைப் <br /> போட்டுக் கொண்டேயிருந்தாள் <br /> அதன் கிள்ளலில் <br /> சட்டென்று விறைத்தெழுந்தது காமம் <br /> கண்களின் வழியே கனன்றுகொண்டிருந்த <br /> அவளின் மூச்சுக்காற்றை <br /> பின்புறம் நெளிந்து படுத்துக் கிடந்த <br /> மனைவியினைப் புணர்வுக்கிழுத்து <br /> யோனிக்குள் நுழைத்தேன். <br /> அலறிக் கொண்டிருந்தாள் <br /> அவள்.</p> <p>நன்றி : Google Images, Uyirmmai.com </p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-65346036518292689582011-04-27T10:25:00.000+05:302011-04-27T10:27:21.855+05:30நந்தினி மாதிரி ஒரு பெண்!<p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsASjAlarJeTUV_Y-mYmcGokpifWtK0OrJIPCJZVN76zEqaPYAL0ZPSwXTOFzdnXa0xqy1JQ8GULVC9N7s9vB6TkfhGfZDnTbmw7w6Kp6MHlAE-ylmfWbjDYXjmj1zBfsqdRKnjNIyeGI/s1600-h/imb39%5B4%5D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="imb39" border="0" alt="imb39" src="http://lh5.ggpht.com/_x__vwisw_WY/TbeiJoI_Y6I/AAAAAAAABOM/K69D1JtzZgM/imb39_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="447" height="447" /></a></p> <p align="center"><em>ஓவியம் : </em><a href="http://elayarajaartgallery.com" target="_blank"><em>இளையராஜா</em></a><em>…</em> </p> <p>நேற்று குலதெய்வமான அங்காளம்மன் கோவில் கெடாவெட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். மாமாவீட்டு அழைப்பு என்பதால் கட்டாயத்தின் பேரில் கோவிலுக்குச் செல்லுவதாக இருந்தது. பொதுவாக இந்தமாதிரி கும்பல் சேருமிடத்திற்குச் செல்வது எனக்குப் பிடிக்காது. தவிர எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது சமவயதுடைய இளைஞர்கள் யாரும் இருக்கமாட்டார்கள், இருந்தாலும் என்னுடன் பேசமாட்டார்கள். நானும் தம்பியும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு யாராவது தெரிந்தவர்கள் வந்திருக்கிறார்களா என்று பார்த்தோம். கோவில் வாசலில் மாமாவும் அக்காவும் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தனர். கோவிலுள் நுழையுமுன்னர் என் மாமாவைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு மாமா பொண்ணை மட்டும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தேன். அட..... அவசரப்படாதீங்க... அந்தப் பொண்ணுக்கு வயசு ஒன்றரைதான் ஆகிறது. குழந்தையைத் தூக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தேன். என்னைமாதிரி வயதிலுள்ளவர்கள், கையில் குழந்தையுடன் இருப்பதைப் பார்த்தால் எல்லாரும், கல்யாணமாகி குழந்தை பெற்றவன் எனும் நோக்கில் பார்க்கக் கூடும். ஆனால் இதற்கெல்லாம் நான் அலட்டிக் கொள்வது கிடையாது. நீங்கள் எல்லோரும் நினைப்பீர்கள், என்னை “ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்” என்று... நிச்சயமாக இல்லை.. கோவிலுக்குள் இருக்கும் பெண் சிலைகள் முதற்கொண்டு சைட் அடிக்கும் பலே பேர்வழி நான். பக்தியை பூசிக் கொண்டு நிற்கும் ஒரே இடம் சாமி தரிசனத்தின் போது மட்டும்தான்.</p> <p>கோவிலில் நீண்ட வரிசை இருந்ததால் வரிசையில் நின்றுகொண்டு மாமா குழந்தையுடன் விளையாடிக்கொண்டே நின்றுகொண்டிருந்தேன். எனக்கு முன்னே ஒரு பெண்ணும் அவள் கையில் ஒரு குழந்தையும் இருந்தது. அந்த பெண்ணருகே தான் நின்று கொண்டிருந்தேன். மாமா குழந்தையிடம் “சூடு... சூடு...” என்று அந்த பெண்ணின் குழந்தையைப் பார்த்து விளையாடிக் கொண்டிருக்கையில் அந்த பெண் மெல்ல திரும்பினாள்...</p> <p>பொன்னியின் செல்வன் படித்திருப்பீர்கள், அதில் நந்தினியை கல்கி அவர்கள் விவரித்திருப்பாரே... வட்டவடிவிலான முகம், நல்ல பெரிய கண்கள், விழியோரம் கறுத்த மை, அளவான மூக்கு, அதில் பொட்டுவைத்தமாதிரி மூக்குத்தி, சின்னதாய் சின்ன வாய்... உங்களுக்கு எந்த பெண்ணிடமாவது பேசவேண்டும் என்றால் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு தைரியமாகப் பேசலாம். என் மாமா பையனிடம் ஏதாவது ஒரு பெண்ணைக் காட்டி ”போய் பேசுடா” என்பேன். அவனுக்கு வயது நான்கு.. (என்னைப் போட்டுக் கொடுக்கமாட்டான் என்று நினைக்கிறீர்கள்... அங்கேதான் மிஸ்டேக் செய்கிறீர்கள்) ஆனால் அவன் போய் பேசமாட்டான்... எனக்கு என்னவென்றால், அவன் போய் பேசினால் அந்த சாக்கில் பேசலாம் பாருங்கள்!! ( அவனிடம் தமன்னாவின் போட்டோவைக் காட்டி “ யாருடா இது என்று கேட்டால் “அத்த” என்பான். யாருக்கு அத்தை என்றால், ”நவி மாமாகு” என்பான்.. அப்படி பழக்கி வைத்திருக்கிறேன் ) சரி நாம் மேட்டருக்கு வருவோம். அந்த பெண்ணிடம் </p> <p>“உங்க பொண்ணா ?” என்று ஆரம்பித்தேன். </p> <p>“இல்ல இல்ல.. இது எங்க அக்கா பொண்ணு” என்று அவசராவசரமாக மறுத்தாள்.</p> <p>“மீரு மனிவாரா?” கேட்டேன் தெலுகில்....</p> <p>“ம்ம்... ” என்றாள்</p> <p>”ஏமி குலம்?”</p> <p>சொன்னாள்.. இதை எதற்காகக் கேட்கிறேன் என்றாள், எங்கள் வழக்கத்தில் ஒரு குலத்திற்கும் இன்னொரு குலத்திற்குமிடையேதான் திருமணம் நடக்கும். நாங்கள் ”மஞ்சாளூர் வார்ளு”.. நான் திருமணம் செய்து கொள்ளவேண்டுமெனில் “கதிரூர் வார்ளு” அல்லது அந்த குலத்தின் அண்ணன் தம்பிமுறை குலங்களிலிருந்துதான் திருமணம் செய்து கொள்ள முடியும். அப்படியே, அப்போஜுலு, பெத்த கொண்டோஜுலு என்று பல குலங்கள் உண்டு. ஒருமுறை என் அவ்வாவிடம் இதைப் பற்றி கேட்டபொழுது, ஆந்திராவில் ஒரு கிராமத்திற்கும் இன்னொரு கிராமத்திற்குமிடையே திருமணம் நடக்குமாம், ஒரு கிராமத்தினர் மஞ்சாளூர் வார்ளு என்றால் இன்னொரு கிராமத்தினர் கதிரூர் வார்ளாக இருப்பார்கள்... மஞ்சாளூரு வார்ளுவில் பிறந்த எல்லாரும் எனக்கு அண்ணன் தங்கச்சியாக இருப்பார்கள் அதேசமயம் கதிரூர் குலம் எனக்கு முறைப்பெண்கள்!! அந்த பெண் குலத்தின் பெயரைச் சொன்னதும் உடனே என் மாமாவுக்குப் போனடித்து எனக்கு தங்கச்சி முறையா அல்லது முறைப்பெண்ணா என்று கேட்டேன்... முறைப்பெண் தான் வரும் என்றார்.. பிறகென்ன??? அந்த பெண்ணும் வேறு தனியாக வந்திருக்கிறாள், பேச இதைவிட நல்ல வாய்ப்பு இருக்காது.</p> <p>“எந்த ஊர்ல இருந்து வந்திருக்கீங்க?”</p> <p>“திருப்பூர்தான். நீங்க”</p> <p>“நானும் திருப்பூர்தான்... ஆனா உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததேயில்ல.. கருவம்பாளையத்துக்காரங்களா?”</p> <p>“அவ்னு..”</p> <p>“பொண்ணு நல்லா துறுதுறுன்னு இருக்கா... பேர் என்னங்க?”</p> <p>உடனே அவள், குழந்தையிடம் பார்த்து, “ பேர் அடிகேரு சூடு, பேரு செப்பிடு சாமி...” என்று கட்டாயப்படுத்தினாள். சொல்லவேயில்லை, பிறகு என்னிடம் “ இப்போதான், ஒருவருஷம் தான் ஆச்சு” என்றாள். பெயர், தீபிகா.. (படுகோனே?) மெல்ல மெல்ல கூட்டம் நகர்ந்ததும் சாமி தரிசனம் முடிந்து வெளியே சென்றுவிட்டாள். நான் கொஞ்சம் பொறுத்து வெளியே சென்றேன். கோவிலை ஒருமுறை சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர்ந்து தீபிகாவை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்... எனக்கோ இவளிடம் எப்படி பேசுவது என்று யோசனை... வலிய பேசினாள் என்னை “ஜொள்ளன்” என்று நினைக்கமாட்டாளா? ஆனால் வேறு வழியுமில்லை, இன்றைக்கு விட்டால் பின்னொருநாள் கிடைக்க வாய்ப்பேயில்லை. சொல்ல மறந்துவிட்டேனே... அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. பொதுவாக கல்யாணம் ஆகியிருந்தால் தனியே கோவிலுக்குள் வரவாய்ப்பில்லை, கூடவே கணவனும் வந்திருக்கவேண்டும். அதைவிட அவளது கழுத்தில் தாலியுமில்லை. ஒரே ஒரு சின்ன கோபிச்செயின் அணிந்திருந்தாள். மீறிப்போனால் இரண்டுபவுன் வரும். எங்கள் வீட்டு புதுப்பெண்கள் ஒரு கிலோ தாலிக்கயிறு அணிந்திருப்பார்கள்.. கழுத்து முழுக்க மஞ்சக்கயிறாகத்தான் இருக்கும்.. காதுக்குக்கூட சின்னத் தோடு, அவ்வளவுதான்.. அனார்கலி சுடிதார் அணிந்திருந்தாள். கிளிப்பச்சை வர்ணம் என்று சொல்வார்களே, அந்த இளம்பச்சையில், கொஞ்சம் இறுக்கமான ஆடை, தலையைச் சீவி பின்னாமல், ஒரே ஒரு பேண்டு மட்டும் அணிந்து ஹாயாக விரித்துவிட்டிருந்தாள். அந்த பேண்டையும் எடுத்துவிட்டால் இன்னும் தேவதைமாதிரி கேசம் பரந்து இருந்திருக்கக் கூடும். கையில் கூட சின்னதாக கடிகாரமும் இன்னொரு கையில் ஒரேஒரு கண்ணாடி வளையலும் அணிந்திருந்தாள். பார்ப்பதற்கு எந்த ஆடம்பர தோற்றமுமின்றி வெகு எளிமையாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. </p> <p>சட்டென எனக்கு ஒன்று தோணவே, என்னுடன் இருக்கும் மாமாவின் குழந்தையை தீபிகாவுடன் நிற்கவைத்து போட்டோ எடுக்கும்படி கேட்டேன்.. சரியென்று சிரித்தாள்... (சத்தியமாக இந்த சிரிப்பை நான் எதிர்பார்க்கவேயில்லை) போட்டோ எடுத்து முடிந்தபிறகு என்னிடம் காட்ட, நான் எடுக்கட்டுமா என்றேன். ம்ம் என்றவளிடம் இரு குழந்தைகளும் நின்று கொண்டிருக்கும்படி ஒரு போட்டோவை எடுத்து பெரிமிதத்துடன் காண்பிக்க, “இதேமாதிரிதான் நானும் எடுத்தேன்” என்றாள்.. நம்ம போட்டோகிராபி மூலைதான் சும்மா இருக்குமா? இரு போட்டோக்களையும் பொருத்திப் பார்க்கச் சொல்லி அவளது போட்டோவில் “தலை கொஞ்சம் கிராப் ஆயிடுச்சு, குழந்தைகளைத் தவிர இன்னொருத்தரும் ப்ரேமில் வரார், தீபிகாவோட கைக் அசைஞ்சதாலே நல்லாயில்ல,” என்று குறைகளை அடுக்கினேன்.. சொல்லச் சொல்ல என் உள்மனம் ஓவரா சொல்லி சொதப்பிடாதே என்று எச்சரித்தாலும், என் அறிவு அதற்கு வழிவிடவில்லை. ஆனால் நிகழ்ந்ததோ வேறு... “என் கிட்ட டிஜிகேம் இருக்கு, அதில எடுத்திருந்தா நல்லா வந்திரும்” என்று சப்பை கட்டு கட்டினாள்... இது கேமரா மேல தப்பில்ல, எடுத்தவங்க மேலதான் தப்பு என்று சொல்லவந்தேன்... பென்ஸின் அறிவுரைப் படி பொண்ணுங்க கிட்ட குறையையும் அதிமேதாவித்தனத்தையும் காட்டவும் கூடாது, கண்டுக்கவும்கூடாது... ஆனால் அந்த சப்பகட்டுதான் பெரிய திருப்புமுனையாக இருந்தது எங்கள் நட்பில்... ஆமாங்க, என்ன டிஜிகேம் இருக்கிறது என்று வினவினேன். </p> <p>“நிகோனில் XX கேம்” அந்த XX மாடல் எண்.. மறந்துபோட்டது!</p> <p>“என்கிட்டயும் இருக்குங்க, நானும் கொண்டுவரலை, ஆனால் என்னோட கேனன், DSLR” என்று ஒரு பிட்டு போட்டேன்...</p> <p>அவளிடம் ஆர்வம் தொத்திக் கொண்டது. உண்மையில் போட்டோகிராபி பற்றிய ஆர்வம் அவளது கண்களில் மிதப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இதற்குப் பிறகு நாங்கள் பேசிய டயலாக்குகளை இங்கே இரைத்தால் கொட்டாவி விட்டு நீங்கள் கழண்டுகொள்வீர்கள் என்பதால் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். அவளுக்கு போட்டோகிராபி என்றால் இஷ்டமாம், அப்பாவிடம் ரொம்ப நாட்களாக டி.எஸ்.எல்.ஆர் கேட்டு அவர், பொண்ணுங்களுக்கு எதுக்கு அந்த விலையில கேமரா என்று சொல்லி ஒரு வேலைக்காகத டிஜிடல் கேமராவை வாங்கித் தந்தாராம். நிறைய புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பதாகச் சொன்னாள். எங்களது பேச்சு அப்படியே கேமராவின் டெக்னிகல் விஷயத்திற்குள் நுழைந்து, கோவிலில் இருந்த காட்சிகளின் வழியாக இறங்கி, போர்ட்ரைட்களுக்குப் போஸ் கொடுப்பவர்களைப் பற்றிய கிண்டல்களைக் கடந்து “கோ” வில் வந்து முடிந்தது. சத்தியமாக எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. நாங்கள் எடுத்துவந்த அவரவர் அக்கா குழந்தைகள் ஓரிடத்தில் நின்றுகொண்டு அவர்களைக் கவனிக்கமாட்டாமல் அழுது கொண்டிருந்தனர். எனக்கோ இன்னும் பேசிக்கொண்டேயிருக்கலாம் என்றுதான் தோணியது.. என்னிடம் பேச நிறைய மேட்டர்கள் இருந்தாலும் சென்னை மெரினாவில் மதிக்கு தாமரை அண்ணா கொடுத்த அட்வைஸ் ஞாபகம் வந்தது... “ பொண்ணுங்க கிட்ட பேசறப்போது, அவங்களை அதிகம் பேசவிடு”</p> <p>”எனக்கு நேரமாச்சு” என்று கோவிலை விட்டு விருந்து மண்டபத்திற்கு விரைந்தாள். இப்பொழுது அவளைப் பின் தொடர்ந்து செல்வதா, இல்லை பொறுத்துப் போவதா? பின் தொடர்ந்தால் தவறாக நினைப்பாளோ? என்மீதுள்ள ஜெண்டில்மேன் மரியாதை கெட்டுவிடுமோ என்ற சந்தேகம்... ”கோ” படத்தில் பியா சொல்வதைப் போல, ”எத்தனையோ பேர் என்னைப் பார்த்து ஜொள்ளு விடறாங்க, ஆனா அஸ்வின் (ஜீவா) மட்டும் டிஃப்ரண்ட்”... இப்போதுள்ள பெண்களெல்லாம் ஜொள்ளர்களைப் பார்க்கிறார்களா இல்லை தவிர்க்கிறார்களா?? நீயா நானாவில் கோபிநாத்தை பேசச் சொல்லவேண்டும்!</p> <p>மண்டபத்தில் நிறையபேர் இருந்ததால் அவளை என் கண்கள் தேடி சலித்தது.. குழந்தையை அக்காவிடம் கொடுத்துவிட்டு, தேடிக் கொண்டிருந்தேன். அதற்குள் பந்திக்கான அழைப்பு வந்தது. இந்தமாதிரி பந்தி விருந்து சமயங்களில் என்னுடைய சுபாவம் என்னவெனில் அருகே மிகப் பழக்கமான ஒருவரை வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவேன்.. இல்லாவிட்டால் தெரியாதவர்களோடு ஏதோ ஹோட்டலில் தனியாக அமர்ந்து சாப்பிடுவதைப் போல இருக்கும். மண்டபத்தில் எனக்குத் தெரிந்தவர்களான மாமாவும் அக்காவும் நான் கோவிலுக்குச் சென்ற நேரத்தில் சாப்பிட்டுவிட்டதால் நானும் தம்பியும் உள்ளே நுழைந்தோம். அதுவரையிலும் அவளைத் தேடிய கண்கள் பிறகு பல்பு அடித்தது... அவளும் சாப்பிட வந்தமர்ந்தாள்.. என்னிடம் சைகையிலேயே சாப்பிட்டாச்சா என்று கேட்டாள். நான் புன்னகைத்துக் கொண்டே இல்லை இனிமேதான் என்றேன். மீண்டும் சிரித்தாள்.. Sands of time ன் காலக்கத்தியொன்று என்னிடம் இருந்திருந்தால் கண்டிப்பாக 2 நிமிடங்களைப் பின்னோக்கி மீண்டும் ரசித்திருப்பேன். அவளுக்கு எதிரேயே அமரும்படியான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவள் இருந்த வரிசை முழுக்க சைவம், எனது அசைவம். விருந்துகளில் அசைவம் மிக அளவோடுதான் சாப்பிடும் பழக்கம். ஆகையால் அவள் எழும் வரை சாப்பிடப்போவதாக முடிவெடுத்து மெல்ல மெல்ல காலத்தை இழுத்துத் தின்றேன்... அவளைப் பார்ப்பது போல பார்த்து பிறகு வேறிடத்தில் கருவிழிகள் கழண்டோடியது. அவளுக்கு என் மேல் பார்வை சுத்தமாக இல்லை, அருகில் அமர்ந்து கொண்டிருந்த இன்னொரு பெண்ணிடம் பேசியபடியே சாப்பிட்டாள், ஒருவேளை அவள் என்னைப் பற்றிக்கூட பேசிக் கொண்டிருந்திருக்கலாம். இதில் என்னவொரு கொடுமை என்றால், இழுத்து இழுத்து தின்ற எனக்கே வயிறு நிரம்பிவிட்டது, அவளோ மாங்கு மாங்கென்று உண்டுகொண்டிருந்தாள், பொதுவாக பெண்கள் எப்பொழுது ஏதோ டயட்டில் இருப்பதைப் போல இத்துனூண்டு சாப்பிடுவார்கள், இவளோ அதற்கு நேர்மாறு.. இவளையெல்லாம் கட்டிக்கொண்டால் ஒருமூட்டை அரிசி அதிகமாகத்தான் வாங்கணும்போல..</p> <p>அப்பாடி!! முடித்துவிட்டாள்.. ஆனால் அதன்பிறகு எனக்கு பேச வாய்ப்பே கிடைக்கவில்லை. கும்பல் கும்பலாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்... நல்ல வாயாடியாக இருக்கவேண்டும் என்றாலும் இவளிடம் விஷயஞானம் இருக்கிறது. எந்த டாபிக் ஆரம்பித்தாலும் அதில் ஓரளவு அறிவைத் தேக்கி வைத்திருந்தாள். நாம் ஏன் நம் அம்மா அப்பாவிடம் இந்தப் பெண்ணையே கட்டிவையுங்கள் என்று சொல்லக்கூடாது?? சேசே,,, தங்கச்சி வேறு இருக்கிறாள். பின்னர் நம்மை என்ன நினைப்பார்கள்? கல்யாணத்துக்கு இப்பவே உனக்கு அவசரமா என்று கடிந்து கொள்ளமாட்டார்கள்?? ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக நினைத்துக் கொண்டேன். மண்டபத்தை விட்டு வெளியேறும்பொழுது அவளது அலைபேசி எண்ணையாவது வாங்கிக் கொள்ளவேண்டுமென்று.. போகிறபோக்கைப் பார்த்தால் முடியாது போல இருந்தது. தனியாக இருக்கும்பொழுதே கேட்டுத் தொலைத்திருக்கலாம். அவளிருந்த அந்த கும்பலில் யார் யார் அண்ணனோ, தங்கையோ, அக்காவோ, அம்மாவோ? ஏதாவது கேட்கப்போயி ஏடாகூடம் ஆகிவிட்டதென்றால், பணால் தான். </p> <p>கிட்டத்தட்ட அவள் கிளம்பும் நேரம்... என்னிடம் வந்தாள், இது எதிர்பார்க்காத நிகழ்வு!!</p> <p>“உங்க செல்போன் நம்பரைத் தரீங்களா?” என்று தைரியமாகக் கேட்டாள். இத்தனைக்கும் என்னுடன் மாமா, அக்கா, ஏன், அம்மா அப்பாகூட அமர்ந்திருந்தார்கள். எனது அலைபேசி எண்ணைத் தந்தேன்.</p> <p>“கோவில்ங்கிறதால பத்திரிக்கை கொண்டுவரலை, அடுத்தமாசம் XX தேதி எனக்கு கல்யாணம். நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்று சொல்லிவிட்டு எனது பதிலை எதிர்பார்க்காமல் வெடுக்கென திரும்பினாள்.. எப்படிச் சொல்லுவது? ஒரு சினிமாத்தனமான முடிவாகிவிட்டது. எனக்கு முகமே இல்லை. ஒருமாதிரியாக ஆகிவிட்டேன். பேசாமல் இப்பொழுதே போய் “என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?” என்று கேட்டுவிடலாமோ என்றுகூட தோணியது.. பிறகு அந்த நினைப்பிலிருந்து வெளியேறிவிட்டேன். சுமார் மூன்று மணிநேர சந்தோஷம், மிகப்பெரிய பலூனை நன்கு ஊதி ஊதி குண்டூசியால் குத்தி வெடிக்க வைத்ததைப் போல இருந்தது. என்னிடம் மாமா “யார் அந்த பொண்ணு” என்று கேட்டார்... ”தெரியலை” என்றேன். உண்மையில் எந்தவகை சொந்தம் என்று அறிந்து கொள்ளவுமில்லை... பிறகு அவரே புரிந்து கொண்டதைப் போல ”குலம் கேட்டது இந்த பொண்ணுக்காகத்தானா?” என்று கேட்டபடி சிரிக்க ஆரம்பித்தார்... சிரிக்காதீங்க மாமா என்று டென்ஷன் ஆனேன். அவரது செல்போனில் தேடிப் பிடித்து  “போனதே,,,, போனதே... என் பைங்கிளீ... வானிலே” என்ற பாடலைப் போட, கடுப்பானேன் </p> <p>“என்னங்க மாமா... சிச்சுவேஷன் சாங்கா??”... தம்பி வேற ஏற்றிவிட.... உண்மையில் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவியலாத தொண்டையடைப்பு ஏற்பட்டது.. ஏமாற்றத்தின் வலி வலியது. </p> <p>”எங்கிருந்தாலும் வாழ்க!!” </p> <p>பிகு: அந்த பெண்ணின் பெயரை நான் கேட்கவேயில்லை. என்னுடைய பெயரையும் நான் சொல்லவில்லை!!</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com37tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-4692534728021520942011-04-25T10:41:00.000+05:302011-04-25T10:43:35.537+05:30ஜெஸிகாவின் தலை<p><a href="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TbUC4OuSXmI/AAAAAAAABOA/P-iooJktm9s/s1600-h/Female%20Head%5B4%5D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="Female Head" border="0" alt="Female Head" src="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TbUC9-5HIQI/AAAAAAAABOE/a8iL9g2b6PQ/Female%20Head_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="304" height="358" /></a></p> <p>என் வீட்டு அலமாரியில் <br />ஜெஸிகாவின் தலையை எப்போதும் காணலாம் <br />இரத்தம் இறுகி, உறைந்து போய் <br />நெடியடிக்காத வண்ணம் பாதுகாத்து வருகிறேன். <br />சிலசமயம் கடவுள் பொம்மையைப் போல <br />பூஜித்தும் வருகிறேன் <br />எதற்காக என்று கேட்டு <br />நச்சரித்தாள் மனைவி <br />ஒரு சொல்லில் எந்த அர்த்தமும் சொல்லமுடிவதில்லை <br />சொல்லமுடியாத தருணங்களிலெல்லாம் <br />இவள் என்னைத் தழுவிக் கொள்கிறாள் <br />வெதுவெதுப்பான <br />ருசியற்ற முத்தங்களைத் தருகிறாள் <br />நீர்மங்களாலான உடலாக மாறி <br />எனது ரகசியங்களைத் தோண்டி <br />மெல்ல மெல்ல புசிக்கிறாள் <br />ஒரு காட்டு மானைப் போல <br />பொறுக்கமாட்டாது <br />முற்கள் தாங்கும் படுக்கையொன்றில் <br />திருகி வீசியெறிகிறேன் இவளை <br />தின்றுவிடும் தாபத்தோடு <br />தலை பொருந்தச் <br />சுழன்று விழுந்துகிடக்கிறாள் <br />ஜெஸிகா.</p> <p><em>ஓவியம் : டாவின்ஸி</em></p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-34760318177118723672011-04-18T12:43:00.000+05:302011-04-18T12:44:52.714+05:30Rio : பறக்கவியலா பறவையின் அட்வெஞ்சர்<p><a href="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TavjfzRUTII/AAAAAAAABNQ/qDHQFI6_gb0/s1600-h/70465_gal4.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="70465_gal" border="0" alt="70465_gal" src="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TavjlHX7xVI/AAAAAAAABNU/GDSbDUoBocU/70465_gal_thumb2.jpg?imgmax=800" width="272" height="403" /></a></p> <table border="1" cellspacing="0" cellpadding="2" width="677"><tbody> <tr> <td valign="top" width="199"> <p><strong>Direction</strong></p> </td> <td valign="top" width="476"> <p><strong>Carlos Saldanha</strong></p> </td> </tr> <tr> <td valign="top" width="214"> <p><strong>Starring </strong></p> </td> <td valign="top" width="476"> <p><strong>Jesse Eisenberg, Anne Hathaway, George Lopez</strong></p> </td> </tr> <tr> <td valign="top" width="216"> <p><strong>Cinematography  </strong></p> </td> <td valign="top" width="476"> <p><strong>Renato Falcão</strong></p> </td> </tr> <tr> <td valign="top" width="216"> <p><strong>Studio</strong></p> </td> <td valign="top" width="476"> <p><strong>Blue Sky Studios</strong></p> </td> </tr> <tr> <td valign="top" width="216"> <p><strong>Year </strong></p> </td> <td valign="top" width="476"> <p><strong>2011</strong></p> </td> </tr> <tr> <td valign="top" width="216"> <p><strong>Language</strong></p> </td> <td valign="top" width="476"> <p><strong>English, Portuguese</strong></p> </td> </tr> <tr> <td valign="top" width="216"> <p><strong>Genre   </strong></p> </td> <td valign="top" width="476"> <p><strong>Animation, Comedy</strong></p> </td> </tr> </tbody></table> <p>Blue Sky Studio இன் ஐஸ் ஏஜ் படங்களில் பெரும்பாலும் தேடலும், தவிப்பும், இடப்பெயர்ச்சியும் முக்கிய கதைக்காரணிகளாக இருக்கும். தேடலின் வழியே நகைச்சுவையும் பரிதவிப்பும் மிக அழகாகப் பொருத்தி திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஐஸ் ஏஜின் மூன்று திரைப்படங்களும் ஒன்றையொன்று விஞ்சியதாகவே இருக்கும். ப்ளூ எனும் ஒரு அரிதான பறவையைச் சுற்றி நிகழ்வும் வாழ்க்கையும், அன்பும் பாசமும் தேடலுமே ரியோ படத்தின் மொத்தக் கதையுமே,</p> <p align="center"><a href="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TavjqrvhEXI/AAAAAAAABNY/1d7IvKEJy4A/s1600-h/74429_gal%5B4%5D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="74429_gal" border="0" alt="74429_gal" src="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TavjvLl_AII/AAAAAAAABNc/xQVlzFiw_fU/74429_gal_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="651" height="276" /></a><strong><em>செம்மூக்குப் பறவை, ப்ளூ, மற்றும் ஜ்வெல்.</em></strong></p> <p>புக்ஸ்டோர் நடத்தும் லிண்டாவுக்கு (Linda) ப்ளூ எனும் அரிதான பறவை கிடைக்கிறது. அந்த பறவைக்கோ பறக்கத் தெரியாது. பறக்க முயற்சித்தும் பலனில்லை. இச்சூழ்நிலையில் டுலியோ (Túlio) எனும் ப்ரேசில் நாட்டு பறவைகள் ஆராய்ச்சியாளர் லிண்டாவைத் தேடி வருகிறார். ப்ளூ தான் அதன் இனத்தின் கடைசி ஆண்பறவை என்றும், அதனை தன்னுடன் இருக்கும் பெண்ணுடன் சேரவிட்டால் இனம் செழிக்கும் என்று மன்றாடுகிறார். கொஞ்சம் யோசித்து பிறகு ஒத்துக்கொண்டு லிண்டாவும் ப்ளூ பறவையும் ப்ரேசிலுக்குச் செல்லுகிறார்கள். </p> <p>டுலியோவின் ஆராய்ச்சிக் கூடத்தில் வனச்சூழ்நிலைமிக்க ஒரு அறையில் அடைபட்டு வெளியே போகத்துடிக்கும் பெண் பறவை ஜ்வெல் (Jewel) உடன் ப்ளூவுக்கு சினேகம் கிடைக்கிறது. பார்த்தவுடனேயே காதலில் மயங்கி விழும் ப்ளூவை ஜ்வெல் கண்டுகொள்ளாமல் வெளியே போகத் துடிக்கிறது. இவர்கள் இருவரையும் தனித்துவிட்டு லிண்டாவும் டுலியோவும் டின்னருக்குச் செல்கிறார்கள். இச்சமயத்தில் பறவைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலொன்று ப்ளூ மற்றும் ஜ்வெல் பறவைகளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது. இதை ப்ரேசில்நாட்டு சிறுவன் ஒருவனும்  வெண்கிழட்டுப் பறவை ஒன்றும் ஈடுபடுகிறது. கொள்ளையர் தலைவன் பல அரிதான பறவைகளைத் திருடிக் கொண்டு வந்து வெளிநாட்டுக்கு விற்பவன்!!</p> <p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1VkjIEwHPj33mLSB3_cK2bGtCMle5kRtD-tQl8MHtwRc-Y5EY5XN-SALsuW2MFT21BMgeJiPgY3fXHAMeIFgP07-U-YFw-yi1rnPwnm3oKMBZ0zGnlWAxQpBVcgjgb121clqcGcuBDDY/s1600-h/1%5B5%5D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="1" border="0" alt="1" src="http://lh6.ggpht.com/_x__vwisw_WY/Tavj5wenWNI/AAAAAAAABNk/-ejA7lAxiT8/1_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="651" height="276" /></a><strong><em>புல்டாக், மஞ்சள் குருவிக்குஞ்சு, மற்றும் செந்தலைப் பறவை</em></strong></p> <p>கொள்ளையர் கூண்டில் ஒன்றோடொன்று சங்கிலியால் கட்டப்பட்டு கிடக்கும் ப்ளூவும் ஜ்வெல்லும் அங்கிருந்து தப்பிக்க முயலுகின்றன. அவைகளை வெண்கிழட்டுப் பறவை துரத்துகிறது. முடிவில் ஒரு காட்டினுள் தஞ்சமடைய, அங்குள்ள செம்மூக்குப் பறவையை சந்திக்கின்றன. தங்களது காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அவிழ்த்துவிட உதவிசெய்யுமாறு இருபறவைகளும் கேட்கின்றன. அச் செம்மூக்குப் பறவையோ தன்னால் முடியாது என்றூம் தனது நண்பன் லூயிஸ் எனும் புல்டாகினால் முடியும் என்று அழைத்துச் செல்கிறது. ப்ளூவுக்கு பறப்பது எப்படி என்று சொல்லித் தரவும் செய்கிறது. எனினும் ப்ளூவால் பறக்க இயலுவதில்லை. </p> <p>இச்சூழ்நிலையில் வெண்கிழட்டுப் பறவை தனது கொள்ளையர் தலைவனின் உத்தரவுப்படி இரு பறவைகளையும் தேடிவருகிறது. ப்ரேசிலின் ஒரு குரங்குவகையொன்று அங்குவரும் சுற்றுலாப் பயணிகளிடம் “ஆட்டையைப்” போடுவதில் கில்லாடிகள். பறவைகளைக் கண்டுபிடிக்க அவைகளிடம் மிரட்டி பொறுப்பை ஒப்படைக்கிறது வெண்கிழட்டுப் பறவை. ஒரு பறவைகள் <br />“சம்பா” கிளப்பில் இரு பறவைகளையும் கண்டுகொண்டு அங்கே பிடிக்க வருகின்றன குரங்குப் படைகள்.. இருப்பினும் அங்கிருக்கும் பறவைகளின் உதவியுடன் தப்பிக்கின்றன ப்ளூவும் ஜ்வெல்லும். இதே நேரத்தில் லிண்டாவும் டுலியோவும் ப்ரேசிலின் ரியோ நகரம் முழுக்க போஸ்டர் ஒட்டவைத்து பறவைகளைத் தேடிவருகின்றனர். பறவைகளை முதலில் களவாடிய ப்ரேசில் சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு இருவருக்கும் உதவுகிறான்.</p> <p align="left">செம்மூக்குப் பறவையும் அதன் நண்பர்களும், ப்ளூவும், ஜ்வெல்லும், இறுதியில் ஒரு புல்டாக்கை சந்தித்து காலில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அவிழ்த்துக் கொள்கிறார்கள். ஒரு சின்ன காதல் புரிதல் சண்டையில் பிரிந்து ஜ்வெல் பறந்து செல்கிறது. (ப்ளூவால் பறக்க இயலாதே!) அச்சமயம் பார்த்து வெண்கிழட்டுப் பறவை ஜ்வெல்லை சிறைபிடிக்கிறது. இதனை அறிந்து கொண்ட ப்ளூ, ஜ்வெல்லைக் காப்பாற்ற விரைந்தோடுகிறது. ஆனால் அதுவும் மாட்டிக் கொள்கிறது. லிண்டாவும் டுலியோவும் கொள்ளையர் கூட்டத்தையும் தமது பறவைகளையும் கண்டுபிடித்துவிடுகிறார்கள், அவர்கள் சென்று பிடிப்பதற்குள் கொள்ளையர் தலைவன் விமானத்தில் ஏற்றிச் சென்றுவிடுகிறான். </p> <p>இதிலிருந்து எப்படி ஜ்வெல்லும் ப்ளூவும் தப்பிக்கிறார்கள், பறக்கவேமுடியாத ப்ளூ, எப்படி விமானத்திலிருந்து தப்பிக்கப் போகிறது? கொள்ளையர் தலைவன் என்னாகிறான் என்பது பரபரப்பான கிளைமாக்ஸில்!!</p> <p align="center"><a href="http://lh5.ggpht.com/_x__vwisw_WY/TavkAFxVDQI/AAAAAAAABNo/HQ6GxnZJwUA/s1600-h/2%5B7%5D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="2" border="0" alt="2" src="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TavkFuh9lqI/AAAAAAAABNs/Iv9pxcz_NkA/2_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="651" height="276" /></a><strong><em>வெண்கிழட்டுப் பறவையும் “திருட்டுக்”குரங்குகளின் இராஜாவும்</em></strong></p> <p>கார்டூன் படமென்றாலே இந்தியர்களுக்கு ஒருவித புரிதல் இருக்கிறது. அவைகள் குழந்தைகளுக்காக மட்டுமே படைக்கப்படுகிறது என்பதுதான். ஆனால் உண்மையில் கார்ட்டூன்கள் பின்னவீனத்துவக் கதைகளைக் கொண்ட, குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களுக்கெனவே படைக்கப்படுகின்ற அருமையான திரைப்படங்கள். எந்தவொரு படங்கள் சோடை போனாலும் அனிமேஷன் படங்கள் மட்டும் சோடைபோனதே கிடையாது. ஏனெனில் அதன் பின்னுள்ள கடுமையான உழைப்பு மற்றும் நேர்த்தி. கூடவே அதனிடையே இழைந்தோடும் பரிதவிப்பும் பாசமுமிக்க திரைக்கதை. </p> <p>ரியோ படம் முழுக்க ப்ரேசிலின் ரியோ நகர அழகையும் கார்னிவல் பிரம்மாண்டத்தையும், மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். ப்ளூ முதன் முதலாக ஜ்வெல்லைப் பார்க்கும் அந்த செயற்கை வனச்சூழ் சிறை இருவரையும் இணைக்கும் விதமாக டிஸ்கோ பாடல்கள் ஒளிரும் கண்ணாடிக் கோளம் என பறவைகளுக்கான இன்னொரு உலகை மனித கொண்டாட்ட காரணிகளோடு இணைக்கும் விதம் அனிமேஷன் படங்களுக்கேயுண்டான உத்தி. ஒன்றிரண்டு சேஸிங் காட்சிகள் பிரமாதம், குறிப்பாக ரியோவின் ஸ்லம் ஏரியாவில் லிண்டாவையும், டூலியோவையும் மோட்டார் வண்டியில் கூட்டிச் செல்லும் சிறுவனின் காட்சி மிகப்பிரமாதம், அதன்ப்பின்னர் ப்ளூவை பறக்க வைக்கும் முயற்சியும், அது தோல்வியடைந்து ப்ரேசில் கடற்கரையில் செய்யும் அமளியும் (குறிப்பாக ஒரு பெண்ணின் புட்டத்தில் பந்து விழுந்து எகிறுவதும் <img style="border-bottom-style: none; border-right-style: none; border-top-style: none; border-left-style: none" class="wlEmoticon wlEmoticon-openmouthedsmile" alt="Open-mouthed smile" src="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TavkIXVX2fI/AAAAAAAABNw/5F8u22kq_oY/wlEmoticon-openmouthedsmile2.png?imgmax=800" />) கிளைமாக்ஸ் காட்சிகளும் மிகப்பிரமாதம். இவர்களின் நண்பர்களாக வரும் செந்தலைப் பறவையும், மஞ்சள் குருவிக்குஞ்சும் திரைக்கு வெளியேயும் பறக்கின்றன. </p> <p>லிண்டாவின் பரிதவிப்பு முந்தைய படங்களைப் போல (ஐஸ் ஏஜ் ஒன்) அழுத்தமாக இல்லாவிடினும் நகைச்சுவையும் களேபரக் காட்சிகளும் அதனைக் குறைக்கச் செய்கின்றன. குரங்குகளின் சேஷ்டைகளும் அவை ஆட்டையப் போடும் விதமும் மனித திருடர்களை மிஞ்சி நிற்கின்றன. அதன் வடிவமும் முழியும் நகைச்சுவைக் கூட்டும் படைப்பு. குரங்குகளின் இராஜாவாக வரும் ஒரு குரங்கு கைகளில் தங்க ப்ரேஸ்லெட்டுகளையும் வயிற்றும் கடிகாரத்தை ஒட்டியானம் போல கட்டியிருப்பதும், பறவைகளைத் தேடுவதற்கு, மனிதர்களிடமிருந்து களவாடிய பைனாகுலர், டி.எஸ்.எல்.ஆர் கேமராவும், டச் ஸ்க்ரீன் மொபைலும் பயன்படுத்துமிடங்கள் அதீத நகைச்சுவை இழையும் காட்சிகள்!!</p> <p>என்னதான் அனிமேஷன் காட்சிகள் மிகச்சிறப்பாக இருந்தாலும் பிக்ஸாரின் தரம் எனக்குத் தெரியவில்லை. பறவைகள், ரியோ நகரக் காட்சிகள், கார்னிவல் கொண்டாட்டங்கள், பறவைகளின் இறகுகள், புல்டாக்கின் வாயில் ஒழுகும் ஜலவாய் முதற்கொண்டு சிறப்பாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஏதோவொன்று குறைகிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை.</p> <p>படம் பார்க்கும் பொழுதே நினைத்தேன் ப்ளூவுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பது ஜெஸி எய்ஸம்பர்க்காகத்தான் (Jesse Eisenberg)  இருக்குமென்று. ஏற்கனவே சோஷியல் நெட்வொர்க்கில் வார்த்தைகளை மிக்சியில் போட்டு அரைப்பது போல அந்த ஸ்பீடில் பேசினவர் இந்த படத்தில் பரவாயில்லை, கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். ஜ்வெல்லாக வருபவர் அன்னி ஹதாவே.. இவரை கொஞ்ச நாட்களாகத்தான் பார்த்துவருகிறேன். இருப்பினும் இவருக்குப் பதில் ரீஸ் விதர்ஸ்பூனைப் போட்டிருக்கலாம்…  அல்லது லிண்டாவுக்கு…</p> <p>குழந்தைகளுடன் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். 3D யில் பார்க்கமுடிந்தால் நிச்சயம் பாருங்கள்!! நகைச்சுவைக்கும் ரசிப்புத் தன்மைக்கும் நான் கியாரண்டி!! <hr /></p> <p align="center"><strong><font size="3">Trailer</font> </strong></p> <div style="padding-bottom: 0px; padding-left: 0px; width: 448px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; margin-right: auto; padding-top: 0px" id="scid:5737277B-5D6D-4f48-ABFC-DD9C333F4C5D:a4b4a335-b2a1-4786-b2a8-e8f34097d9cd" class="wlWriterEditableSmartContent"><div id="431ea1dd-bd1b-4780-b1ce-c86dafca1a11" style="margin: 0px; padding: 0px; display: inline;"><div><a href="http://www.youtube.com/watch?v=BG-fC-O_uQE" target="_new"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVsXiC_j4rgpPdJkLmuNmPCxCR4PvKpRRHPISByxZHpH89-Vr0aiI8Lpn3IzU8JzlRKPFh2991f4U3ff58tsU8tREecOFltvwc2twSoHzEM3awyYgAsJgj-wvP0h719pB8l5SIgij6xP4/?imgmax=800" style="border-style: none" galleryimg="no" onload="var downlevelDiv = document.getElementById('431ea1dd-bd1b-4780-b1ce-c86dafca1a11'); downlevelDiv.innerHTML = "<div><object width=\"448\" height=\"252\"><param name=\"movie\" value=\"http://www.youtube.com/v/BG-fC-O_uQE?hl=en&hd=1\"><\/param><embed src=\"http://www.youtube.com/v/BG-fC-O_uQE?hl=en&hd=1\" type=\"application/x-shockwave-flash\" width=\"448\" height=\"252\"><\/embed><\/object><\/div>";" alt=""></a></div></div></div> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-25533027203094178672011-04-04T11:59:00.000+05:302011-04-04T13:16:51.165+05:30சாம்பியன் இந்தியா : அழுதது 200 கோடி கண்கள்<p align="justify"><a href="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TZllXCzGH4I/AAAAAAAABMA/MxIBf6Si39U/s1600-h/131007%5B5%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 0px auto 7px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="131007" border="0" alt="131007" src="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TZllfMwCvJI/AAAAAAAABME/EQTA2lTgcxM/131007_thumb%5B3%5D.jpg?imgmax=800" width="572" height="444" /></a>இந்த வெற்றியை வார்த்தையால் சொல்லி தீர்த்துவிடமுடியுமா? பதிவுகளால் என் மனதில் தேங்கியிருக்கும் ஆக்ரோஷமான மகிழ்வை எழுதிவிடமுடியுமா?? தெரியவில்லை. இந்தியா வென்றது… 28 ஆண்டுகளுக்குப் பிறகு… நான் பிறந்தபிறகு பார்க்கும் முதல் உலகக் கோப்பை கைப்பற்றல்!!! மீண்டும் அதன் பின் தோணி!!!</p> <p align="justify">கிட்டத்தட்ட நான்கு உலகக் கோப்பைகள் பார்த்துவிட்டேன்.  (96, 99, 03, 11) ஒவ்வொரு முறையும் இந்தியாதான் ஜெயிக்கும், இந்தியாதான் ஜெயிக்கவேண்டும் என்று பிரார்த்தனையில்லாத பிரார்த்தனையை செய்து வந்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அணி திணறும் பொழுது இதயத்துடிப்பின் வேகம் அதிகரிப்பதை உணர்ந்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் நூறு கோடி இதயங்கள் அச்சமயத்தில் வேகமாகத் துடிக்கின்றன என்பதை மறுக்க இயலாது. ஆனால் முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் (2003 தவிர) இச்சமயம் அணியின் ஒட்டுமொத்த பங்களிப்பையும் சிறப்பாக கேப்டன் வியூகத்தையும் எல்லா வித ஆட்டங்களிலும் முண்ணனியில் நிற்கும் திறமையையும் பார்க்கும்பொழுது இம்முறையும் வெல்லவில்லையெனில் வேறு எம்முறைதான் வெல்வது? <a href="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TZllmfV5ymI/AAAAAAAABMI/GtMkTzEqk9U/s1600-h/131003%5B3%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 5px 10px 4px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="131003" border="0" alt="131003" align="left" src="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TZllqaF1brI/AAAAAAAABMM/R6WgX8vgFcQ/131003_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="222" height="240" /></a></p> <p align="justify">இதுவரை இப்படியொரு நீண்ட கிரிக்கெட் தொடரைப் பற்றி நான் எழுதியதேயில்லை, எழுத நினைத்ததுமில்லை. ஆனால் இம்முறை எழுதாமலிருக்க முடியவில்லை. அந்தளவு கிரிக்கெட்டை நேசிக்கிறேனோ எனும் சந்தேகம் எனக்குள்ளேயே. இம்முறை எனது தந்தை, அம்மா, சகோதரி, சகோதரன் என என் வீட்டிலுள்ள அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தொடரை முழுக்க பார்த்தோம். சச்சின், தோனி என்ற இரண்டு பெயரைத் தவிர வேறெந்த பெயரையும் தெரியாத, கிரிக்கெட்டைப் பற்றி துளியும் தெரியாத என் தாயார் கூட ஆர்வமாகப் பார்த்தது கிரிக்கெட் எவ்வளவு தூரம் ஊறிப் போய்விட்டது என்பதையே காட்டுகிறது. </p> <p align="justify">சனிக்கிழமை திருப்பூரில் பந்த் போன்றதொரு தோற்றத்தில் எல்லா கடைகளும் மூடப்பட்டு, அல்லது ஏதோவொரு சலூன்கடையில் கூட்டம் வழியப்பெற்று காணக்கிடைத்தது. எனது அலுவலகம் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து பல அலுவலகங்களும் கம்பனிகளும் கட்டாய விடுமுறை அளித்துவிட்டன. வேறெதற்காகவும் இப்படி விடுமுறை தருவார்களா என்பது சந்தேகம்தான். ஒட்டுமொத்த இந்தியாவும் கிரிக்கெட் முன்பு பிரார்த்திதபடியும் வெற்றியைக் கொண்டாடியபடியும் இருந்தது. இரவு அரைமணிநேரத்திற்கு இடைவிடாத வெடிச்சத்தமும் வாணவேடிக்கையும் நிறைந்திருந்தது. எனக்குத் தெரிந்து இப்படி மொத்த இந்தியாவும் ஒரேநேரத்தில் கோர்த்தது இச்சமயத்தில்தானிருக்கும்.. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத என் பாட்டி கூட இந்திய அணியின் வெற்றியை ரசித்ததுதான் உச்சகட்டமே!!<a href="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TZll07WiHyI/AAAAAAAABMQ/GBtiNu5IcMo/s1600-h/131026%5B4%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 3px 0px 0px 10px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="131026" border="0" alt="131026" align="right" src="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TZll6i1gG-I/AAAAAAAABMU/B7mfb7LvfFk/131026_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="308" height="250" /></a></p> <p align="justify">தோனி இறுதியாக அடித்த சிக்ஸும் அதற்கு அவர் பார்த்த பார்வையும், இத்தனைக்கும் பந்து சிக்ஸ்தான் என்பது கன்ஃபர்ம் என்றாலும் பந்து சரியாக சிக்ஸுக்கு இறங்குகிறதா என்று கவனித்து முகத்தில் சிரிப்பைக் காட்டியவிதம் இருக்கிறதே!!! நிச்சயம் இதனை வேறு எவராலும் செய்யமுடியாது. கங்குலியாக இருந்தால் அப்பொழுதே சட்டையைக் கழற்றி சுற்றியிருப்பார்!! வென்ற பிறகும் கூட தலைமை நடத்துனன் நான் தான் எனும் இறுமாப்பில் எங்கும் சுற்றவில்லை. ரஜினிகாந்த் “விடுகதையா இந்த வாழ்கை “ என்று பாடிக் கொண்டு செல்வதைப் போல அதன் பிறகு ஆளையே பார்க்க முடியவில்லை… தோனியைப் பொறுத்தவரையில் இது இன்னுமொரு வெற்றி என்பதுதான்!! மிகச் சாதாரணமாக எதையும் கையாளும் திறன்மிக்கவராகவே இருப்பதால் இவரைவிடவும் மற்றவர்கள் தலைமையில் சிறப்பார்களா,… தெரியாது!</p> <p align="justify">குழப்பமான இரண்டாம் டாஸில் இலங்கை ஜெயித்தபொழுதே வயிற்றில் இசையெழுந்தது. மும்பை பிட்சில் ஒளிவெள்ளத்தில் அதிக ரன்களை விரட்டுவது மிகவும் கடினமாயிற்றே. டாஸில் தோற்றதும் தோனி அதற்கான வேலைகளில் சரியாக இறங்கினார். ஆனால் மீண்டுமொருமுறை தவறு செய்தது ஸ்ரீசாந்தை உள்ளே இழுத்ததுதான். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மிக அழகாக ஸ்ரீசாந்த் நிரூபித்துக் கொண்டேயிருந்தார். ஒருபுறம் ரன்களே இல்லாத மெய்டன் ஓவர்கள், இன்னொருபுறம் வாரிவழங்கும் வள்ளல் ஓவர்கள் என சீராகவே சென்று கொண்டிருந்தது. ஜாஹீரின் ஆஃப் சைட் பாலில் தரங்காவின் மட்டை முத்தம் கொடுத்து சேவக்கின் கையில் தஞ்சம் புகுந்ததுதான் மிகப்பெரிய ப்ரேக்த்ரூ என்று நினைக்கிறேன். இத்தொடர் முழுக்க ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் இலங்கையின் தரங்க வும் தில்ஷானும் சிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். எதிர்பார்த்தது போல தில்ஷானும், அரைசதமடிக்க முடியாத நிலையில் சங்ககராவும் சென்றுவிட்டதால் இலங்கையின் தளர்ச்சியடைந்த மிடில் ஆர்டர் ஆட்டம் காணும் என்று நினைத்தவனுக்கு ஜெயவர்தனவின் ஆட்டம் கண்ணில் மண் விழுந்ததைப் போலிருந்தது. ஒப்புக்குச் சப்பாணிகளாக குலசேகரவும் சமரவீராவும் பெராராவும் கடைசி கட்டங்களில் லைன் அண்ட் லெந்தில் குழப்பம் செய்த ஜாஹீரின் பந்துகளையே விளாசிக் கொண்டிருந்த பொழுது ஒட்டுமொத்த இந்தியாவும் சற்றே நம்பிக்கையை இழந்திருக்கும். அதுவரை 5 ஓவருக்கு 6 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த ஜாஹீர், முப்பத்தாறாவது ஓவரிலிருந்து மீகுதி ஐந்து ஓவருக்கு 54 ரன்களை வாரி வாரி வழங்கினார்.. ஜாஹீர் அப்பொழுது பதட்டமான சூழ்நிலையில் பந்தை வீசினார் என்பது நன்கு தெரிந்தது. 274 என்பது பைனல்களைப் பொறுத்தவரையில் இமாலய ஸ்கோர்தான். ஏனெனில் 300 பந்துகளில் மொத்தம் 26 பந்துகள்தான் உங்களால் வீணாக்க முடியும். </p> <p align="justify"><a href="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TZlmBFt5X0I/AAAAAAAABMY/G748-ALAcF0/s1600-h/131043%5B4%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 0px 7px 0px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="131043" border="0" alt="131043" align="left" src="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TZlmHX44v7I/AAAAAAAABMc/wI1T-OZ9URw/131043_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="349" height="260" /></a>சற்றேறக்குறைய நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தபிறகு ஷேவாக்கின் எல்பி அவர் மீது இருக்கும் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இத்தொடர் முழுக்க ஷேவக் உறுப்படியாக ஆடவேயில்லை. ஆரம்பத்தில் அடித்த 175 ரன்களே இன்னும் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஒரு முக்கியமான போட்டியில் இப்படியா டக் அவுட் ஆவது? அதுசரி, இவர் போனாலென்ன சச்சின் தான் இருக்கிறாரே என்றால் அவரும் ஒரு அவுட்சைட் எட்ஜில் நடையைக் கட்ட, கிட்டத்தட்ட சுத்தமாக நம்பிக்கையிழந்து திரைப்படம் பார்க்கலாம் எனும் முடிவுக்கு வந்துவிட்டேன். ஆனால் சச்சினைக் குறை சொல்ல ஒருவராலும் முடியாது. இன்று கோப்பை கையில் இருக்கிறது என்றால் அதற்கு சச்சினின் 482 ரன்கள் மிக முக்கிய காரணம். அட்லீஸ்ட் இன்னுமொரு 20 ரன்களைச் சேர்த்திருந்தால் மூன்று உலகக் கோப்பையில் 500 க்கும் மேற்பட்ட ரன் எடுத்தவர், அதிக ரன் எடுத்தவர் எனும் சாதனையை எட்டியிருக்கலாம். கடந்த 2003ல் தனிமனிதனாக பைனலுக்கு அணீயைக் கொண்டு சென்றவர் என்பதை நினைவுகூறலாம். </p> <p align="justify"><a href="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TZlmQ_Fq-kI/AAAAAAAABMg/UBQDkrBzy3U/s1600-h/131016%5B4%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 0px 9px 0px 10px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="131016" border="0" alt="131016" align="right" src="http://lh5.ggpht.com/_x__vwisw_WY/TZlm0TvaxVI/AAAAAAAABMk/P46uZVJENks/131016_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="315" height="243" /></a>இருந்தாலும் சச்சின் அவுட் ஆனதும் ஒருசிலர் என்னிடம் ”அப்பாடா, நூறு அடிச்சுட்டான்னா ஜெயிக்க மாட்டோம்” என்று சொன்னது எரிச்சலைக் கிளப்பியது. சச்சின் எனும் திறமையான ஆட்டக்காரனை இவ்வளவு கேவலப்படுத்த எப்படி துணிகிறார்கள்? </p> <p align="justify">காம்பிர்+கோலியின் ஆட்டம் உண்மையிலேயே டாப் கிளாஸ் ஆட்டம். மிகச்சரியான பந்துகளைப் பொறுக்கி பவுண்டரிக்கு விரட்டியது இந்த ஜோடி, டில்ஷானின் ஃப்லையிங் கேட்ச் மூலமாக கோலி அவுட் ஆகினாலும் இந்தியா இன்னும் தோல்வி எனும் கோட்டுக்கு வந்துவிடவில்லை என்பதாகத்தான் இருந்தது. எப்பொழுதும் போல யுவி களமிறங்குவார் என எதிர்பார்த்த சூழ்நிலையில் வந்தது தோனி!! </p> <p align="justify">தொடர் முழுக்க 40 ரன்களைக் கூட எட்டாத தோனி களமிறங்கிய்தும் உண்மையில் கோபம் வரவேயில்லை. ஏனெனில் தோனி சிலசமயங்களில் பேட்டிங் வரிசை மாற்றி திட்டம் போடக்கூடிய ஆள். யுவியை அவர் பெண்டிங் வைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தவிர, இந்தியா சார்பில் இலங்கைக்கு எதிராக தோனியின் ஆட்டம் மிகச்சிறப்பானதும் கூட. கொஞ்சம் கொஞ்சமாக பழைய தோனியின் ஸ்டைலில்லாத காட்டானாட்டம் திரும்பிக் கொண்டிருந்தது. அவரது ப்ரத்யேக குவிக் ட்ரைவ்கள் ஒவ்வொன்றும் 4 ரன்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாலுக்குப் பால் இடைவெளி விடாமல் சிறப்பாக சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு உறுப்படியில்லாத பந்துக்கு கவுதம் காம்பிர் அவுட் ஆனதில் வருத்தம்தான். உலகக் கோப்பை பைனல்ஸில் இதுவரை எந்தவொரு இந்தியரும் சதமடித்ததில்லை. (மொத்தமே 3 பைனலதானே?) காம்பிர் கொஞ்சம் நிதானித்திருக்கலாம்!! அதன்பிறகு 50க்கும் குறைவான ரன்களே என்பதால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிட்டது ஒருவேளை இலங்கை டபுள் ஸ்ட்ரைக் ஏதும் செய்யாதிருந்தால்….. <br /> <br />பிறகென்ன…. தோனியின் மொரட்டுத்தனமான ஆஃப்சைட் சிக்ஸரும், இறூதியாக பந்தைத் தூக்கியடித்து முரட்டுத்தனமாக நிதானித்துப் பார்த்த வின்னபில் சிக்ஸரும் தோனியின் பெயரை மிகப்பலமாக வலுவாக்கி விட்டது.<a href="http://lh5.ggpht.com/_x__vwisw_WY/TZlnJbbCNNI/AAAAAAAABMo/bzLkBhWpHMc/s1600-h/131023%5B4%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 0px 0px 0px 11px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="131023" border="0" alt="131023" align="right" src="http://lh5.ggpht.com/_x__vwisw_WY/TZlnSTk-K7I/AAAAAAAABMs/ni-jWw9h6f4/131023_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="245" height="342" /></a></p> <p align="justify">இச்சமயத்தில் தோனியின் வியூகம் பற்றியெல்லாம் பேசமுடியவில்லை. எனெனில் பவுலிங்கில்  கடைசி கட்டங்களில் தோனியைத் தவிர மற்ற அனைவரும் பதட்டத்துடனேதான் வீசினர். ஜாஹீரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டி வந்ததே பெரிய தவறுதான். இரண்டாவது ஸ்பெல்லை கொஞ்சம் முன்னமே கொடுத்திருந்தால் நிச்சயம் விக்கெட் எடுத்திருந்திருப்பார்… அதேபோல ஸ்ரீசாந்தின் ஓவரையும் முன்பைப் போல சச்சினுக்கும் கோலிக்கும் கொடுக்கவேண்டிய நிர்பந்ததை சமாளித்தார் என்பதைத் தவிர வேறெதுவும் பேசமுடியவில்லை. </p> <p align="justify">இந்த வெற்றிக்குப் பின்னால் தோனி போன்ற வீரர்கள் தவிர இன்னுமொருவர் இருந்தார்.. அவர் கேரி கிர்ஸ்டன்.. பயிற்ச்சியாளர். இறுக்கமில்லாத, வீரர்களுடன் சகஜமாகப் பழகக்கூடிய பயிற்சியாளர் என்ற பெயரெடுத்திருந்த கிர்ஸ்டன் ஒரு மிக நல்ல டீமை ஏற்படுத்திவிட்டு மிகப்பெரிய வெற்றியைத் தந்துவிட்டு பிரிகிறார்.. கடந்த 2007 களில் பயிற்சியாளர்களுடன் தகறாரு, கேப்டனின் தலைமை சரியில்லாதது, லீக் போட்டிகளிலேயே மோசமாக வெளியேறியது என பலவகையில் பிரச்சனை வாய்ந்த அணியை தலைகீழாகத் திருப்பிப் போட்டு உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும், நம்பர் டூ ஒண்டே அணியாகவும் மாற்றி T20 மற்றும் ஒண்டே உலகச்சாம்பியனாகவும் உருவெடுக்க வைத்ததோடு மட்டுமில்லாமல், சச்சின், கோலி, காம்பிர், தோனி போன்றவர்களை மிக அழகாக ஷேப் ஆக்கினார்… வெல்டன் கேரி!! இன்னுமொரு பயிற்சியாளர் இப்படி இருப்பாரா என்பது சந்தேகம்தான்!! ரியலி வி மிஸ் யூ கேரி!!</p> <p align="justify"><a href="http://lh6.ggpht.com/_x__vwisw_WY/TZlnacFPMgI/AAAAAAAABMw/wISjZAQSacU/s1600-h/131022%5B4%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 0px 8px 0px 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="131022" border="0" alt="131022" align="left" src="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TZlneSGZLnI/AAAAAAAABM0/A-axDB928qI/131022_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="287" height="220" /></a>வெற்றி சிக்ஸர் அடித்தபிறகு இந்திய வீரர்கள் அழுததும் மகிழ்ச்சியுடன் சச்சினையும் கிரிஸ்டனையும் தூக்கிக் கொண்டு மைதானம் முழுக்க சுற்றி வந்ததையும் பார்த்தபொழுது என்னையுமறியாமல் கண்கள் கலங்கியது. தோனி ஒரு சகவீரராக அச்சமயத்தில் வந்தவர் பிறகு கேமராவின் கண்களில் சிக்காமலேயே போய்விட்டார்..</p> <p align="justify">தொடர் நாயகனான யுவியை ஆரம்பத்தில் நானும் கூட எதற்காக யுவ்ராஜை எடுத்தார்கள் என்று கேட்குமளவுக்கு மோசமான ஃபார்மில் இருந்தவர் தொடர் நாயகனாகி வாயடைத்ததும், இந்த வெற்றி சச்சினுக்கானது என்று பெரிமிதத்துடன் சொன்னதும் யுவ்ராஜை பல உயரங்களுக்கு உயர்த்திவிட்டது. இந்த வெற்றி சச்சின், கும்ப்ளே, ட்ராவிட், கங்குலி போன்ற சகவீரர்களுக்கு டெடிகேட் செய்வதாகக் கூறிய தோனியும் பலமடங்கு உயர்ந்துவிட்டார்…<a href="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TZlnlDbyWiI/AAAAAAAABM4/Z8El7TRuCPQ/s1600-h/131053%5B4%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; margin: 7px 5px 0px 15px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: right; border-top-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; padding-top: 0px" title="131053" border="0" alt="131053" align="right" src="http://lh5.ggpht.com/_x__vwisw_WY/TZlnsLJLNFI/AAAAAAAABM8/QK2g8k5OdBA/131053_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="122" height="273" /></a> வெற்றியினால் மொட்டை அடித்து காணிக்கை செலுத்தியிருக்கும் அவரது பக்தியை மெச்சாமலிருக்க முடியாது….</p> <p align="justify">இலங்கை தரப்பில் ஜெயவர்தனேயின் சதம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் வீசாததும் ஃபீல்டிங் குறைபாடுகளுமே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. மலிங்காவின் இறுதி பந்துவீச்சு முழுக்க யார்கராகவே இல்லை. டாஸ்பாலாகவே சென்றது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் நெருக்கடி கூட கொடுக்க முடியவில்லை. முரளிக்கு அட்லீஸ்ட் ஒரு விக்கெட்டாவது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான்.. கடைசி போட்டியில் சோபிக்காமலிருந்தது வருத்தத்தைத் தந்தது. முழுவதுமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முரளி இல்லாதது இலங்கை அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கக் கூடும். இந்திய அணிக்கு எப்படி சச்சினோ அதைப் போல இலங்கைக்கு முரளி என்பதை யாராலும் மறுக்கவியலாது. வெல்டன் முரளி. நீங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் மறக்கவியலாதது. சிறப்பான வீரராகவே முடிவு பெற்றீர்கள்!! ஐபிஎல் இல் சந்திப்போம்..</p> <p align="justify">ஆகமொத்ததில் இந்தியா இரண்டு பைனல்களை சந்தித்தபிறகுதான் மூன்றாவதான அசல் பைனலுக்கு வந்தது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வென்றதே இன்னும் மனதை விட்டு தீராத நிலையில் இலங்கையைத் தோற்கடித்தது பல நாட்கள் நெஞ்சில் நிற்கும்.  மீண்டுமொரு வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ….. இந்த வெற்றி இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றி!! </p> <p align="justify">தொடர்ந்து சாதியுங்கள் வீரர்களே!!</p> <p align="center"><a href="http://lh5.ggpht.com/_x__vwisw_WY/TZln01B0kEI/AAAAAAAABNA/wjiNT1inzjk/s1600-h/sachin%20cup%5B3%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="sachin cup" border="0" alt="sachin cup" src="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TZloPK9tM3I/AAAAAAAABNE/i8CwHtoQ55A/sachin%20cup_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="210" height="240" /></a> <strong><em>நீண்டநாள் கனவு நனவான சந்தோஷத்தில் சச்சின்</em></strong></p> <p><a href="http://lh6.ggpht.com/_x__vwisw_WY/TZloYpQu_kI/AAAAAAAABNI/g64rXz23KM8/s1600-h/dhoni%20cup%5B3%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="dhoni cup" border="0" alt="dhoni cup" src="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TZlocvx8i3I/AAAAAAAABNM/V1Lwp6Kq8W4/dhoni%20cup_thumb%5B1%5D.jpg?imgmax=800" width="168" height="240" /></a></p> <p align="center"><strong><em>ரியல் சாம்பியன்</em></strong></p> <p align="left"><strong><em>படங்கள் உதவி : <a href="http://espncricinfo.com">http://espncricinfo.com</a></em></strong></p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-37411209422351055182011-03-31T10:41:00.000+05:302011-03-31T13:03:01.448+05:30பாகிஸ்தானை வி(மி)ரட்டிய இந்தியா<p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju1hL3386G1WamP6cKSdF3UsMDPK-NhBkmecNY7qe6UQF2oQoCkoj1oPlUn96Cj_58vXK7TaU8udHtdtftHQKlMgZFfMv-vQ7GkZcF3jOVj_HTXD9tmwaZSWfmFaJhHegCfco-6PCNoLc/s1600-h/130802%5B4%5D.jpg"><img style="background-image: none; border-right-width: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; border-top-width: 0px; border-bottom-width: 0px; margin-left: auto; border-left-width: 0px; margin-right: auto; padding-top: 0px" title="130802" border="0" alt="130802" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSLQRJVrPvYNCMGPx_U6bi5Wu3j6zbo0Tgmt_QamqUDho5T7ITAakhiaCRgc5l9dycJ0Lbjn3GKJrY7K_g1Oc1R5dw_pYSRJtKkTs-taNQ0B_j0tbb5GuFyBmc0fd4kGPqM3cTlXq_OS0/?imgmax=800" width="236" height="380" /></a></p> <p>எந்த போட்டியானாலும் சரி, எப்படிப்பட்ட வலிமை வாய்ந்த அணியாக இருந்தாலும் சரி, இத்தனை கூட்டமோ, போட்டி அழுத்தமோ, உற்சாகமோ, ஏன் கோபமோ கூட ஏற்படாது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா போட்டியில் இவை ஒருசேரக் காணப்படுவது எழுதப்படாத விதியாக இருக்கிறது. நேற்றிரவு கோடைமாத தீபாவளி போல ஊரெங்கும் வெடிச்சத்தங்கள், கேளிக்கைகள், கூச்சல்கள்…. நாடு முழுக்க உற்சாக கொண்டாட்டங்கள், இந்தியா மேல் பெட் கட்டியவர்களின் வெறித்தனமான வெற்றிகள் என இந்திய நாட்டின் மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்பட்டுவிட்டது. விளையாட்டு எனும் உணர்வுடன் இன உணர்வையும் பகையுணர்வையும் சேர்த்தே பார்க்கப் பழகிவிட்டிருக்கிறோம். பாகிஸ்தான் எனும் நாட்டு வீரர்கள் நமது சகோதர்கள் எனும் உணர்வு யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை… பாகிஸ்தானிலும் இதே நிலைமைதான். </p> <p>தோனியின் அதிர்ஷ்டம்தான் வெற்றிக்குக் காரணம் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மை என்ன? தோனியின் மதியூகமும் வீரர்களின் ஒருங்கிணைந்த சிறப்பான ஆட்டமும்தான் காரணம்! </p> <p>சேவக் எப்பொழுதும்போல அதிரடியான துவக்கம் கொடுத்தார். கடந்த 2003 ல் சச்சினும் சேவாக்கும் மிரட்டிய ஊபர் கட்டுகள் தேஜா வூ போல திரும்ப வந்தன. சேவாக் இருந்தாலே ஸ்கோரிங் ரேட் மளமளவென எப்பொழுதும் ஏறும். அதனால்தான் நட்சத்திர வீரரான டெண்டுல்கரை விடவும் சேவக்கை அவுட் செய்ய எல்லா அணிகளும் துடிக்கின்றன. அதற்குத் தோதாக இவரும் நடையைக் கட்டுவார் என்பது வேறு விஷயம். மூன்றாவது ஓவரில் குல்லின் பாலில் நான்கு பவுண்டரிகள் அடித்த பொழுதே அப்ரிடிக்குத் தெரிந்துவிட்டது சீமிங் ஆகாது என்று. இருப்பினும் வாஹாப் நேற்று அபாரமான பவ்லிங் செய்தார். அவரது ரிவர்ஸ் ஸ்விங்கை யாராலும் தொடமுடியவில்லை என்பதுதான் ஹைலைட். சேவக் எதற்காக UDRS ஐ வீணாக்கினார்? அது ஒரு க்ளீன் அவுட். எதிரே நின்றுகொண்டிருந்த சச்சினிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். 18000 ரன்களைக் குவித்த சச்சினே ஒரு ஆட்டத்தில் கோலியிடம் கேட்டுச் செல்லும்பொழுது சேவக் கேட்பதில் என்ன தவறு இருக்கப்போகிறது? </p> <p>சச்சினின் இன்னிங்ஸ் எதிர்பார்த்தது போலில்லை. நேற்று சச்சின் ரன் எடுக்க ரொம்பவும் சிரமப்பட்டார்… இன்னும் சொல்லப் போனால் திணறினார். அப்ரிடி, வஹாப், அஜ்மல், ஹஃபீஸ் என ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி திணறடித்துக் கொண்டிருந்தார்கள்…. நேற்று ஒருவேளை சச்சின் சதமடித்திருந்தாலும் அதை நிச்சயம் நான் பெரியளவில் பாராட்டியிருக்க மாட்டேன். அதேவேளையில் பாகிஸ்தானின் பவுலிங்கைப் பாராட்டியே ஆகவேண்டும். குறிப்பாக வாஹாப்… மிகச்சிறப்பான பவுலிங்.. யுவ்ராஜைத் தூக்கிய யார்க்கர் ஒன்றே போதும்.. ஒரு லீடிங் எட்ஜில் கோலியும் சென்றுவிட தோனியின் திணறல் ஆட்டத்தைக் கண்டாலே எரிச்சலாக வந்தது. ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் அடிக்க வேண்டாம் பாஸ், குறைந்தபட்சம் “எலி”காப்டர் ஷாட்டாவது அடித்து பவுண்டரிக்கு விரட்டலாம்… இந்த லட்சணத்தில் நான் சிறப்பாகத்தான் விளையாடுகிறேன் என்று பெரிமிதம் வேறு. காம்பிர் இறங்கிக் கொண்டேயிருந்தவர் ஒரு கட்டத்தில் இறங்கியதற்கு ஃபீல் பண்ணியிருப்பார்.. </p> <p>நேற்றைய அபார ஆட்டத்தில் ஒருவருடைய பங்கு மிக முக்கியமானது. அது ரெய்னா.. இந்த இளம் வீரர் ஏழாவது இடத்திற்குத் தன்னை எடுத்தது சரிதான் என்று ”அடித்துச்” சொல்லுகிறார். </p> <p>பாகிஸ்தான் தரப்பில் வஹாப் தவிர வேறஎவரும் சிறப்பாக பந்து வீசாததும், மிக மோசமான ஃபீல்டிங்கும்தான் அவர்களது தோல்விக்கு மிக முக்கிய காரணம். சிறப்பாக ஃபீல்டிங் செய்திருந்தாலே இந்தியாவை 200 க்குள் சுருட்டியிருக்கலாம். 45 ரன் இருக்கும்பொழுது சச்சின் கொடுத்த சுலபமாக கேட்சை மிஸ் செய்ததால் அவர்களது தோல்விக்கு முதலடி அங்கேயே விழுந்திருக்கிறது. தொடர்ந்து நான்கு முறை பிழைத்துக் கொண்ட சச்சின் ஐந்தாம் முறை அப்ரிடியின் அபார கேட்சில் வெளியேறியபின்னர்தான் பாகிஸ்தான் மூச்சு விட ஆரம்பித்தது. மிக சுலபமாகத் தடுக்கவேண்டிய பந்துகளெல்லாம் பவுண்டரிகளானது. மற்றபடி பவுலிங் மற்றூம் பேட்டிங் இரண்டிலுமே பாகிஸ்தான் சரியாகத்தான் செய்தது.</p> <p>இந்தியாவின் பந்துவீச்சு குறிப்பிடத்தக்கதொன்று. மொஹாலி பிட்ச், சுழலுக்கு ஆகாது என்பதால் அஸ்வினைத் தூக்கிவிட்டு நெஹ்ராவை உள்ளிழுத்தார். இதுவொரு நல்ல உத்தி. ஆனால் இந்திய பேட்டிங்கின் போதே பிட்ச் நன்கு மாறிவிட்டது. கிட்டத்தட்ட பவுலிங்குக்கு ஏற்றதாக மாறியதால் ரிவர்ஸ் ஸ்விங்குகளையும் லெக்/ஆஃப் கட்டர்களையும் ஸ்பின்னர்களையும் தாக்குபிடிக்க முடியவில்லை. என்னதான் ஜாஹீரின் பந்தை அடித்தாலும் அவர் திறமையாக பந்துவீசியதாகவே நினைக்கிறேன். அதேசமயம் முனாபும் நெஹ்ராவும் ”கட்டர்களை” மிக மிக அருமையாக வீசினார்கள். பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் பந்தைத் தொடக்கூட முடியவில்லை. அவ்வளவு சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஸ்லோ பால்தான் அதிகமாக வீசினார்கள். பேட்ஸ்மென்களுக்கு பாலைக் காட்டி பூச்சாண்டி காண்பித்தார்கள்! தென்னாப்பிரிக்காவுக்கெதிரான பந்துவீச்சில் நெஹ்ராவைப் பழித்த எல்லாருமே இன்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு மோசமான செயல்!! </p> <p>சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன… 100 க்குள் மூன்று விக்கெட்டுகள் விழவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சரியாக அதன்படியே சென்றது. பாகிஸ்தானுக்கு அழுத்தம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. கூடவே தேவையான ரன்ரேட்டும்…. முனாப், நெஹ்ரா பந்துகளை வேறு தொட முடியவில்லை. ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்லாருமாக கலக்குகிறார்கள்…. அதைவிட ஃபீல்டிங்கும் படுபிரமாதம். ஆஸ்திரேலியாவுக்கெதிராக செய்த அபாரமான ஃபீல்டிங் இங்கேயும் தொடர்ந்தது. பவுலர்கள் 36 ஓவர் வரையிலும் உதிரிகளே கொடுக்காமலிருந்தது சிறப்பான ஆச்சரியம். உதிரிகள் கொஞ்சம் அதிகம் போயிருந்தாலும் நமக்கு சங்குதான். </p> <p>முன்பே சொன்னது போல பாகீஸ்தான் பவுலிங்கில்தான் திறமையானவர்களே தவிர, பேட்டிங்கில் அல்ல. Mediocre பேட்ஸ்மென்களாக இருந்ததாலேயே தோல்வியைத் தழுவினார்கள். அதேசமயம் மிக மட்டமான, மோசமான ஃபீல்டிங்கினால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொண்டனர். தவிர, அப்ரிடி இறங்கிய போதே பேட்டிங் பவர்பிளே எடுத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் ப்ரஷர் கொடுத்திருக்க முடியும். எப்பொழுதும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கடைசி நுனி வரை இழுக்கும்… இப்போட்டி அப்படியல்ல.  </p> <p>தோனி இத் தொடர்முழுக்க ஆடவேயில்லை. எனினும் எப்படி கொண்டாடப்படுகிறார்?? அவரது யூகம், கேப்டன்ஸி, அரவணைப்பு… தேவையான இடத்தில் பவுலிங்கை மாற்றியது, அதற்குபகாரமாக விக்கெட் விழுந்தது. எல்லாமே தோனியின் ஆட்டவியூகம்தான்!! அதனால் தப்பிக்கிறார்!! ஒருவேளை தோற்றிருந்தால் நேற்று கேப்டன் பதவியிலிருந்தே அவரைத் தூக்கவேண்டியிருக்கும்!! </p> <p>மேன் ஆஃப் த மேட்ச் வஹாபுக்குக் கொடுத்திருக்கலாம்… டீம் தோற்றுவிட்டதால் சம்பிரதாயப்படி ஜெயித்த டீமுக்கு கொடுக்கவேண்டியதாகிவிட்டது. இதற்கு முந்திய ஆட்டங்களில் சச்சின் சிறப்பாக ஆடியதற்குத் தரப்படவில்லை. இப்பொழுது தரவேண்டியதாகிவிட்டது!!! </p> <p>வெல்டன் ப்ரதர்ஸ்… இன்னும் ஒரேயொரு போட்டி…. பாகிஸ்தானைக் காட்டிலும் இலங்கையிடம் இன்னும் நன்கு உழைக்கவேண்டும்!!! </p> <p>நாளை மீண்டும் இன்னொரு வியூகத்தில் சந்திப்போம்!!</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-74745107198936901522011-03-28T10:39:00.000+05:302011-03-28T10:42:22.015+05:30இலங்கையின் மிரட்டல்: பயத்தில் இந்தியா<p><a href="http://lh6.ggpht.com/_x__vwisw_WY/TZAYd8AKFeI/AAAAAAAABLw/ZTmsw95rdLg/s1600-h/130591%5B4%5D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: block; float: none; margin-left: auto; border-top: 0px; margin-right: auto; border-right: 0px; padding-top: 0px" title="130591" border="0" alt="130591" src="http://lh3.ggpht.com/_x__vwisw_WY/TZAYqb_xgnI/AAAAAAAABL0/jxKvR9SPNIg/130591_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="453" height="308" /></a></p> <p>சனிக்கிழமை இலங்கை ஆடிய ருத்ரதாண்டவம், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு மிகப்பெரிய சவாலை எடுத்துரைப்பதாக இருந்தது. தொடரின் ஆரம்பம் முதலே ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் இலங்கை நல்ல வலுவான நிலையில் இருந்துவருகிறது. அதிலும் இங்கிலாந்துடனான காலிறுதியில் ஒரு விக்கெட் கூட போகாத நிலையைப் பார்க்கும் பொழுது, முன்பு ஒருமுறை நமது அணி நானூறைக் கடந்தும் சேஸிங்கில் இலங்கையும் நானூறைக் கடந்ததே, அதுதான் ஞாபகத்திற்கு வந்தது. தனது நிலையை இலங்கை மிக வலுவாகக் காட்டியிருக்கிறது. ஒருவகையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுத்தவும் இருக்கலாம்!!</p> <p>இங்கிலாந்தின் பலவீனம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்புவதும், வேகப்பந்து எடுபடாததும்தான். இருப்பினும் ட்ராட்டும் மோர்கனும் மிடில் ஆர்டரை நன்கு பார்த்துக் கொண்டனர். பந்துவீச்சுதான் படுமோசமாகிவிட்டது. ஒருவேளை கொலிங்வுட்டும் ஓய்வுபெற்ற ஃபிளிண்டாப்பும் இருந்திருந்தால் அட்லீஸ்ட் விக்கெட்டையாவது தூக்கியிருக்கலாம்… </p> <p>இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுக்கும் கேப்டனும் ஒரு தேவையில்லாத ஷாட்டில்  பெல்லும் சீக்கிரமே நடையைக் கட்டிவிட பொறுப்பு, ட்ராட்டுக்கும் பொபாராவுக்கும் இருந்தது. ட்ராட்டும் பொபாராவும் விட்டால் ஆளில்லை. அதனால் கொஞ்சம் ஸ்டாண்ட் செய்ய அடித்து ஆடாமல் விக்கெட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஆடினர். இருப்பினும் இலங்கையின் சுழற்பந்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. சீக்கிரமே பொபாரா கழண்டுவிட மோர்கன் நல்ல பொறுப்பான ஆட்டத்தைக் கொடுத்தார். ட்ராட்டின் பேட்டிங்கை கவனித்து வருகிறேன்... வெகு சீக்கிரமாக்வே ஆயிரத்தைநூறு ரன்கள் எடுத்த சாதனையை ஆம்லாவோடு பகிர்ந்து கொண்டுள்ளவர்.... இந்த உலகக் கோப்பையின் 6  அரைசதங்கள் (ஒரு போட்டியில் 47!!) உட்பட அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். மொத்தம் ஆடிய 7 இன்னிங்க்ஸில் 422 ரன்கள்!! மிகச்சிறப்பான ஃபார்ம்!!  நான் முன்பே சொன்னது போல, இங்கிலாந்தின் மிகப்பெரும் விக்கெட் ட்ராட். ஐரிஷ் காரரான மோர்கனும் தென்னாப்பிரிக்ககாரரான ட்ராட்டும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்ததால் இங்கிலாந்து ஓரளவு ரன்களைச் சேர்க்க முடிந்தது. 96 பாலுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து இங்கிலாந்தை வலுவாக்கியது </p> <p>மோர்கனுக்குப் பிறகு ப்ரயர் வருவார் என எதிர்பாக்கையில் வந்தது ஸ்வான்!! வந்தவுடனே ரிவர்ஸ் ஸ்வீப்பில் எல்.பி!! இவ்விடத்தில் எனக்கொரு சந்தேகம்  இங்கிலாந்து ஏன் ஸ்வானை இறக்கிவிட்டது?? மெண்டிஸின் கேரம்பாலால் ப்ரயார் போய்ச்சேராமல் இருக்கவா?? முக்கி முக்கி 229 ரன்களை மட்டுமே ஆங்கிலேயர்களால் எடுக்க முடிந்தது. ஏனெனி;ல் அவ்வளவு வலுவான நெருக்கமான பந்துவீச்சு இலங்கையிடம் இருந்தது.</p> <p>இந்த ஸ்கோர் இலங்கைக்கு சவாலானதல்ல. ஓபனர் டில்ஷானும், சங்ககராவும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால் எளிதில் இந்த ஸ்கோரை அடித்து விடமுடியும் என்றாலும் இலங்கை மைதானங்களில் இரவு ஒளிவெள்ளத்தில் சற்றே கடினமான சேஸிங் என்று சொல்லலாம். ஆனால் நடந்ததோ வேறு.. சங்ககராவை மைதானத்துள்ளே வரவிடவில்லை டில்ஷானும் தரங்க வும்.. இருவரும் மாறி மாறி அடிக்க, இலங்கையின் அடித்தளம் நல்ல வலுவாகச் சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் இங்கிலாந்தின் பந்துவீச்சு மட்டமாக இருந்தது.. அவுட் சைட் ஆஃப் ஸ்டம்புக்குத்தான் குறிவைத்தார்கள். எல்லாமே பவுண்டரிகளைக் கடந்து ரன்விகிதம் சீராக உயர்ந்து கொண்டிருந்தது.</p> <p>இங்கிலாந்துக்கு டில்ஷானும் தரங்காவும் டபுள் ஸ்ட்ரைக்கில் சென்றிருந்தாலொழிய இங்கிலாந்தைக் காப்பாற்றவியலாது! அரையிறுதியின் மற்ற ஆசிய அணிகளுக்கு “கிலி” ஏற்படுத்தும் துவக்கம் இது!! இங்கிலாந்தின் வழக்கம், அடிவாங்கி பிறகு அடிப்பது... ஆனால் இலங்கையிடம் அடி மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தது சேஸிங்கிலேயே சிறப்பான துவக்கம் எனில் இலங்கையின் பந்துவீச்சு கட்டுப்பாடு பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது!!! இந்தியா, பாகீஸ்தான், இலங்கை அணிகளிடையே பயங்கர போராட்டமிருக்கும்!! இருவரும் இன்னும் இரண்டு போட்டிகளில் இப்படியொரு துவக்கத்தைத் தந்தால் மற்ற அணிகள் வெறூம் கனவு மட்டும் கண்டுகொண்டிருக்கலாம்!!!</p> <p>ஸ்ட்ராஸைப் பார்க்கும் பொழுதெல்லாம் ரொம்ப பாவமாக இருந்தது, பயபுள்ளைக்கு ஒரு விக்கெட்டாவது கிடைத்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். 230 ரன்னையும் முதலிரண்டு விக்கெட்டுகளே எடுத்தது மிகப்பெரிய வேதனை!! </p> <p>நியூஸிலாந்தாவது சமாளிக்குமா அல்லது ஒரு பெரிய அப்செட் கொடுக்க காத்திருக்குமா??? </p> <p>தெரியவில்லை. பார்ப்போம்!!</p> <p>படங்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் உதவி : <a title="http://www.espncricinfo.com" href="http://www.espncricinfo.com">http://www.espncricinfo.com</a></p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-89378570845321083392011-03-26T11:10:00.000+05:302011-03-26T11:18:10.726+05:30தென்னாப்பிரிக்கா = துரதிர்ஷ்டம்<p><a href="http://lh4.ggpht.com/_x__vwisw_WY/TY18lhcgE7I/AAAAAAAABLo/tDmxiqqvy4c/s1600-h/130531%5B4%5D.jpg"><img style="background-image: none; border-bottom: 0px; border-left: 0px; padding-left: 0px; padding-right: 0px; display: inline; float: left; border-top: 0px; border-right: 0px; padding-top: 0px" title="130531" border="0" alt="130531" align="left" src="http://lh5.ggpht.com/_x__vwisw_WY/TY18tPITqTI/AAAAAAAABLs/R0zP3inKi0M/130531_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="228" height="324" /></a></p> <p>ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக மிக வலிமையான அணி என்று கேட்டால் நிச்சயம் கைகாண்பிப்பது தென்னாப்பிரிக்காவைத்தான். ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் Win/Loss Ratio அதிகமுள்ள அணி தென்னாப்பிரிக்காதான். அந்த ஆஸ்திரேலியாவே போனபிறகு இவர்களுக்கு மட்டும் என்ன வேலை? ஆனால் நான் பெரிதும் எதிர்பார்த்த இரண்டு போட்டிகள் நடக்காமல் போயின. அது இலங்கை – ஆஸ்திரேலியா போட்டியும், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போட்டியும்..</p> <p>உலகக் கோப்பை போட்டி துவங்கும் முன்னர் நியூஸிலாந்து ஒரு சப்ப டீம். பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் மாறி மாறி அடிவாங்கி வெற்றி என்றால் வீசை என்ன விலை என்று கேட்குமளவுக்கு இருந்த அணி அது. ஆனால் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தானை ஜெயித்தாலும் தடுமாறித்தான் காலிறுதிக்கு வந்தது. புக்கிகள் எல்லாரும் தென்னாப்பிரிக்காவே ஜெயிக்கும் என்று பணத்தைக் கட்டி தோற்றுப் போயிருப்பார்கள். ஏனெனில் லீக் சுற்றுகளின் முடிவில் பலம்வாய்ந்த அணியாக தென்னாப்பிரிக்கா வலம் வந்தது!!</p> <p>நியூஸிலாந்தின் திடீர் எழுச்சி இப்போட்டிகளின் இறுதிகட்டத்தில் பெருத்த சுவாரசியத்தைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் இவர்களின் ஆட்டம் கடுமையான போராட்டத்தினிடையேதான் இருந்தது. குப்டிலும் மெகல்லமும் சீக்கிரமே சென்றாலும் ரைடர், டெய்லர் ஆட்டம் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக இருந்தது. ரோஸ் டெய்லரின் ஆக்ரோஷம் இல்லாமல் பொறுமையும் பொறுப்பும் இருந்தது. இந்த ஜோடிதான் வெற்றிக்கான முதற்படியை எடுத்து வைத்தது. இருந்தாலும் நியூஸியின் ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டர்கள் வலுவாகவில்லை. முக்கி முக்கி 221 எடுத்தார்கள். இலக்கு 222!! நெல்சன் எண்!! ஒருவேளை தோற்றுவிடுவார்கள் என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நிஜமாகும் என்று நினைக்கவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் மோர்கலும் ஸ்டெயினும் பவுலிங் வீசினார்களேயொழிய மிரட்டவில்லை. மிகவும் எதிர்பார்த்த தாஹீர் மட்டுமே ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினார். போத்தாவுக்கு விக்கெட்டேயில்லை.</p> <p>எப்போதும் பொறுப்பாக ஆடும் ஆம்லாவின் விக்கெட்தான் நியூஸிலாந்தின் அடுத்த வெற்றிப்படி! ஏனெனில் ஆம்லா நின்றுவிட்டால் அவ்வளவுதான். தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பலம் அதன் ஓபனிங்.. ஆம்லாவைத் தூக்கிவிட்டால் பாதிகிணறைத் தாண்டியவாறு… வெகுசீக்கிரமே வெளியேறிவிட்டாலும் ஸ்மித் காலிஸ் கொஞ்ச நேரம் பயம் காட்டினர். பிறகு காலீஸ், ஓரமின் அருமையான கேட்சில் வெளியேற, டிவிலியர்ஸ் காலிஸ் ஜோடி நியூஸியின் வெற்றிக்குத் தடையாக கொஞ்ச நேரம் வந்தனர். அதுவரைக்கும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென ஒரு 10 நிமிடத்திலேயே ஆட்டம் மாறிவிட்டது. அடுத்தடுத்த டபுள் ஸ்ட்ரைக்கால் வில்லியர்ஸ், டுமினி வெளியேறிய பிறகு ஆட்டம் முழுக்க கிவியின் கையில் சிக்கியது!!</p> <p>தென்னாப்பிரிக்காவில் வலுவான மிடில் ஆர்டர் சாய்ந்தபிறகு லோ எண்ட் ஆர்டர் இல்லாததால் முழுக்க தடுமாறிவிட்டது. முன்பெல்லாம் 9வது வீரர்கள் வரையிலும் ஆடுவார்கள். இப்பொழுது ஏழாவது வீரர் இல்லை என்பதால் பலமாக சறுக்கிவிட்டது. </p> <p>இதுவரை தென்னாப்பிரிக்கா நாக் அவுட் சுற்றுகளை ஜெயித்ததேயில்லை. போலாக், கிப்ஸ், டொனால்ட், க்ளூஸ்னர் போன்றவர்கள் இருந்தபொழுதே அவர்களால் பைனல்வரை செல்லமுடியவில்லை. மிகமுக்கியமான மேட்சுகளில் சொதப்பலாக ஆடுவதே தென்னாப்ப்ரிக்காவின் வழக்கம்!! இன்று வரையிலும் துரதிர்ஷ்ட அணியாகவே அது கருதப்படுவதற்கு இதுவே காரணம்!!</p> <p>நியூஸிலாந்தின் ஓரம், கடைசி நேரத்தில் ஆட்டம் காண்பித்த டுப்லெஸிஸை ஒரு ஜம்பிங் கேட்ச் மூலம் வெளியேற்றிய சவுதி, மிகச்சிறப்பான பவுலர் மெக்கல்லம் ஆகியோரால் நியூஸி, அரையிறுதிக்குச் சென்றுவிட்டது!! இது மிகப்பெரிய ஏமாற்றம். அரையிறுதியில் நியூஸிலாந்தை எளிதில் வீழ்த்திவிட எதிரணியினருக்கு வாய்ப்பு அதிகம்! </p> <p>இன்று நடக்கும் இலங்கை இங்கிலாந்து போட்டியில் இலங்கை ஜெயிக்கவே அதிக வாய்ப்பு இருந்தாலும் இங்கிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது!! பார்ப்போம்!!</p> ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com2