<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:openSearch="http://a9.com/-/spec/opensearchrss/1.0/" xmlns:blogger="http://schemas.google.com/blogger/2008" xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:gd="http://schemas.google.com/g/2005" xmlns:thr="http://purl.org/syndication/thread/1.0" version="2.0"><channel><atom:id>tag:blogger.com,1999:blog-452529139293657743</atom:id><lastBuildDate>Fri, 23 Jan 2026 23:08:35 +0000</lastBuildDate><category>Jamaat-e-Islami Hind</category><category>T. Azeez luthfullah</category><category>Islam</category><category>Islamic Movement</category><category>Periyar Dasan</category><category>personalities</category><category>Ameer-e-Jamaat</category><category>SIO</category><category>Allama Iqbal</category><category>Janab Parvaz Rahmani</category><category>Sehroza Dawat</category><category>JIH</category><category>Jamaat-e-Islami Hind Tamil Nadu and Puducherry</category><category>Moulana Syed Abul A&#39;la Moududi</category><category>Moulana Syed Jalaluddin Umari</category><category>samarasam</category><category>A.Shabbeer Ahmed</category><category>Chennai</category><category>India</category><category>Sadatullah Husseini</category><category>Tazkiya</category><category>Islamic Foundation Trust</category><category>Moulana Jalaluddin Ansar Umri</category><category>Tarbiyah</category><category>Welfare Party of India</category><category>loud thinking</category><category>poem</category><category>Interview of Ameer-e-Jamaat</category><category>Islah-e-Qalb</category><category>JIH Tamil Nadu</category><category>Local Bodies Election</category><category>Markazi Majlis-e-Shoora</category><category>Moulana Ashraf Ali Thahnawi</category><category>Moulana M A Jameel Sahib</category><category>Moulana M.A. Jameel Ahmed</category><category>Tabish Mehdi</category><category>UPSC</category><category>Vaniyambadi</category><category>hard work</category><category>inspiring poem</category><category>inspiring story</category><category>Dr Abdullah</category><category>IAS</category><category>Islamic Dawah</category><category>Issues and Ideas</category><category>Maryam Jameelah</category><category>Moulana Shafi Moonis</category><category>Muslim society</category><category>Quran</category><category>Radiance views weekly</category><category>Sadat Husaini</category><category>Tatheer-e-Qalb</category><category>Trichirappalli</category><category>Trichy</category><category>commitment</category><category>dua</category><category>obituary</category><category>success story</category><category>ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்</category><category>A. Syed Nazeer</category><category>Bangalore</category><category>Dayee</category><category>Delhi</category><category>Democracy</category><category>Dr Abdul Huq Ansari</category><category>H Abdur Raqeeb</category><category>H. Abdur Raqeeb</category><category>IAS aspirants</category><category>IFT Books</category><category>Ijtema</category><category>JIH State conference</category><category>Jamaat Office</category><category>Jamaat-e-Islami Hind Tamil Nadu conference</category><category>Jan Muhammad</category><category>K S Sudarshan</category><category>Khurram Murad</category><category>Mariam Farzhana Sadhiq</category><category>Milli Gazette</category><category>Moosa Kaka</category><category>Moulana A Khudbudeen Ahmed Baqawi</category><category>Moulana Abdul Azeez</category><category>Moulana Iqbal Mullah</category><category>Moulana Shafi Moonis passed away</category><category>Muqeet Mujtaba Ali</category><category>Muslim Ummah</category><category>Periyar EVR</category><category>Prophet Muhammad</category><category>S. N. Sikkander</category><category>S.N.Sikkander</category><category>SIOConference</category><category>Secularism</category><category>Shah Faesal</category><category>Shah Faisal</category><category>Shah Faisal interview</category><category>Sirajul hasan</category><category>TNRC</category><category>Tafheemul Quran</category><category>Two circles</category><category>Welfare Party</category><category>conference</category><category>conversion</category><category>hope</category><category>inspiring anecdotes</category><category>peace</category><category>A Sheikh Dawood</category><category>A glimpse from the pages of history</category><category>A world Without Islam</category><category>A.R.Rahman</category><category>A.ShabbJamaat-e-Islami Hind</category><category>AIITA</category><category>Aamir Subhani</category><category>Abdul Jabbar Siddiqui</category><category>Abdul Mateen Muneeri</category><category>Abdul Muheeth Siddiqui</category><category>Abdullah Yousuf Ali</category><category>Adam Smith</category><category>Adl</category><category>Agar kho gaya ek nasheman to kya ghum</category><category>Al-Zumar</category><category>Aliens</category><category>All India Muslim Personal Law Board</category><category>Ameenul Hasan</category><category>American Imperialism</category><category>Andhra Pradesh</category><category>Anna Hazare</category><category>Apna Muqam Paida Kar</category><category>Ashraf</category><category>Associated Press</category><category>Aurangzeb</category><category>Auto drivers in Islamic Dawah</category><category>Azm-e-Muhkam ataa kar khudaaya</category><category>Babri Masjid</category><category>Bade Be-Aabru Hokar</category><category>Bhatkallys.com</category><category>Bilal</category><category>Book introduction</category><category>Book review</category><category>C Abdul Hakeem Sahib</category><category>C Abdul Jaleel</category><category>C. Abdul Jaleel</category><category>C. Tufail Ahmed</category><category>CNN Hero of the year</category><category>Caravan for peace and justice</category><category>Chinna Kuthoosi</category><category>Comibatore</category><category>Dawah website</category><category>Deve Gowda</category><category>Dinamalar</category><category>Dindugal</category><category>Dr Hasan Raza</category><category>Dr Israr Ahmed</category><category>Dr Jamal Badawi</category><category>Dr K V S Habeeb Muhammad</category><category>Dr M. Rafat</category><category>Dr Rafeek Issa Beekun</category><category>Dr Salim Karatas</category><category>Dr Waquar Anwar</category><category>Dr. Hameedullah.</category><category>Dr. Syed Hamid</category><category>Dream</category><category>Dubai</category><category>Egypt crisis</category><category>Egypt victory</category><category>Feeding the hungry</category><category>Foreign Universities Bill</category><category>George W Bush</category><category>Ghalib</category><category>Globalisation</category><category>Graham Fuller</category><category>Gujarat Genocide 2002</category><category>Hafeez Jonepuri</category><category>Hamdard Study Circle</category><category>Hamid Hussain</category><category>Hamid Muhammad Khan</category><category>Hero worship</category><category>Hijrah</category><category>Hosni Mubarak</category><category>Hukumat-e-Ilahyia</category><category>I Kareemullah</category><category>IAS Topper</category><category>ICSA</category><category>IFS</category><category>IPS</category><category>Ibn Khaldun</category><category>Ibrahim(AS)</category><category>Ijtema-e-Arkaan</category><category>Ikhlas</category><category>Ikhwanul Muslimeen</category><category>Imran Latheef Sait</category><category>India US Deal</category><category>Indian Muslims</category><category>Insight</category><category>Inspiring Documentary</category><category>Inspiring Quote</category><category>Inspiring Quotes</category><category>Interview of Dr Abdul Huq Ansari</category><category>Iraq</category><category>Irfan Hussain</category><category>Islamic Banking Committee</category><category>Islamic literature</category><category>Islamiya Ilakkiya Kazhagam</category><category>Jagjit Singh</category><category>Jai Ganesh Coaching Academy</category><category>Jains</category><category>Jamaat-e-Islami Hind Karnataka</category><category>Jamaat-e-Islami Hind Tamil Nadu</category><category>Jamal Mohammad College</category><category>Jamia Millia Islamiya</category><category>Japan Earthquake</category><category>Japan Tsunami photos</category><category>Japan disaster photos</category><category>Javed Ali</category><category>Javed Usmani</category><category>Jigar Moradabadi</category><category>Jihad</category><category>Jolarpettai</category><category>Justice</category><category>K K Suhail</category><category>Kalam-e-Nubuwat</category><category>Kapil Sibal</category><category>Karl Marx</category><category>Karnataka Muslims</category><category>Karuthamma</category><category>Kashmiri</category><category>Kaviko Abdur Rahman</category><category>Khair-e-Ummah</category><category>Khalid Tanveer</category><category>Khudi</category><category>Khutbat-e-Madras</category><category>Krishnagiri</category><category>Kuwait</category><category>L K Advani</category><category>Leadership and management</category><category>Leadership: An Islamic Perspective</category><category>Leopold Muhammad Asad</category><category>Lessons from Egypt</category><category>Lokpal Bill</category><category>Luthfispace</category><category>M Naushad Ansari</category><category>M. I. Abdul Azeez</category><category>MKM Zafar</category><category>Madinah</category><category>Madras</category><category>Madurai</category><category>Makkah</category><category>Makkah masjid speech</category><category>Malik Moatasim Khan</category><category>Manmohan Singh</category><category>Manonmaniam Sundaranar University</category><category>Maqbool Ahmed Siraj</category><category>Maqsood Alam</category><category>Markazi Majlis-e-Numaindgan</category><category>Mass murderer</category><category>Middle East revolution</category><category>Mirza Asadullah Khan Ghalib</category><category>Moulana Abdul Huq Ansari</category><category>Moulana Abdur Razaq Latheefi</category><category>Moulana Abul Ala Moududi</category><category>Moulana Ahmed Raza Khan Barelvi</category><category>Moulana Dr Muzammil H. Siddiqui</category><category>Moulana Ejaz Ahmed Aslam Sahib</category><category>Moulana Farooq Khan</category><category>Moulana Kausar Yazdani</category><category>Moulana Minnatullah Rahmani</category><category>Moulana Muhammad Jaffer</category><category>Moulana Muhammad Yousuf</category><category>Moulana Mujahidul Islam Qasimi</category><category>Moulana Nayeem Siddiqui</category><category>Moulana Shafee Moonis</category><category>Moulana Sirajul Hasan Sahib</category><category>Moulana Syed Abul Hasan Ali Nadwi</category><category>Moulana Wahiduddin Khan</category><category>Muhammad Shafee</category><category>Muhammad Yahya</category><category>Muniruddin Sheriff</category><category>Muntadar al-Zeidi</category><category>Muqaddima: and Introduction to History</category><category>Muqeeth Mujtaba Ali</category><category>Muslim Brotherhood</category><category>Mutton</category><category>Muzammil H. Siddiqi</category><category>N. Ataullah</category><category>Nafs-e-ammara</category><category>Najeeb Fazil Kissokerek</category><category>Najmuddin Erbakan</category><category>Narayanan Krishnan</category><category>Naya Zamana Naya Subh-o-Sham Paida Kar</category><category>Nellai</category><category>Never give up</category><category>Nikalna Khuld Se Aadam Ka</category><category>Nizamabad</category><category>Old Age Home</category><category>Oriya Maqbool Jan</category><category>Outlook</category><category>P Muhammad Yousuf</category><category>P. A. Syed Muhammad</category><category>PC Hamza</category><category>Polygraph</category><category>Praveen Swami</category><category>Price rise</category><category>Prof Siddique Hasan</category><category>Professional Couriers</category><category>Professor Periyar Dasan</category><category>Public relations</category><category>Puducherry</category><category>Purification of heart</category><category>Purity of heart</category><category>Qazi Ubaidullah</category><category>Qist</category><category>Qutbudeen Baqawi</category><category>Raichur</category><category>Rajeev Khandewal</category><category>Ramnath Goenka Foundation</category><category>S M Hidayathullah</category><category>S. M. Malik</category><category>S. R. Atheeq Ahmed</category><category>SIET college</category><category>SQR Ilyas</category><category>Sachai ka Saamna</category><category>Sadullah</category><category>Saeed Suhravardy</category><category>Salam Centre</category><category>Seerah</category><category>Selvaprakash L</category><category>Shabbeer</category><category>Shahadat-e-Huq</category><category>Shahla Nigar</category><category>Sharfuddin B. S.</category><category>Shariah</category><category>Shoaib Sheikh</category><category>Sitaron se aage jahan aur bhi hain</category><category>Society</category><category>Srivilliputhur</category><category>Star plus</category><category>Stephen Hawking</category><category>Sulaiman Nadwi</category><category>Syed Hamid Hussain</category><category>Syed Sulaiman Nadwi</category><category>Syed Sultan</category><category>T M Abdur Rawoof Khalid</category><category>T. Ismail</category><category>T. Muhammad Ismail</category><category>T.E. Naser</category><category>TASMAC shops</category><category>Tablighi Jamaat</category><category>Tahrir Square</category><category>Tamil</category><category>Tamil Nadu</category><category>Tarbiyah video</category><category>Taxation</category><category>Tayyip Erdogon</category><category>Telangana</category><category>Tere Kooche Se Hum Nikle</category><category>The Hindu</category><category>Times of India</category><category>Tirupattur</category><category>Tsunami</category><category>Turkey</category><category>V.M.Khaleelur Rahman</category><category>Veena Rao</category><category>Veer Savarkar</category><category>Vir Sanghvi</category><category>Woodrow Wilson</category><category>Yousuff Basha</category><category>Zafar Islam Khan</category><category>art of giving gifts</category><category>award</category><category>bomb blasts</category><category>change</category><category>coco cola</category><category>communal harmony</category><category>convesion</category><category>corruption</category><category>credulity and Muslims</category><category>economics</category><category>eer Ahmed</category><category>eggs</category><category>insult</category><category>involvement</category><category>iqamat-e-deen</category><category>karkun</category><category>katib</category><category>kottaikuppam</category><category>marde khwaham</category><category>mega event of the century</category><category>modes of worship</category><category>nostalgia</category><category>personal</category><category>photographs</category><category>plachimada</category><category>poem of agony</category><category>poem of anguish</category><category>poem of yearning</category><category>reward</category><category>sahaba</category><category>sathya margam</category><category>shoes</category><category>short story</category><category>sociology</category><category>solidarity</category><category>speech</category><category>terrorism</category><category>train</category><category>vajiram ravi coaching institute</category><category>அஜீஸ் லுத்புல்லாஹ்</category><category>அண்ணல் நபிகளார்(ஸல்)</category><category>இந்தியனே நீ யோசி</category><category>உரத்த சிந்தனை</category><category>ஊழல் இல்லாத தேசம் வேண்டும்</category><category>சாதி ஒழிய.. சமத்துவம் மலர..</category><category>திசை</category><category>புதிய அத்தியாயத்தை நீ வாசி</category><category>பெரியார் தாசன்</category><category>மாற்றம்</category><category>மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி</category><title>T Azeez Luthfullah</title><description>I want to sing like birds sing not worrying who listens or what they think--Rumi</description><link>https://azeez-luthfullah.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (Azeez Luthfullah)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>122</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-3224584630005086184</guid><pubDate>Sun, 01 Jul 2018 16:46:00 +0000</pubDate><atom:updated>2018-07-01T22:16:43.420+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">inspiring story</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind</category><category domain="http://www.blogger.com/atom/ns#">obituary</category><category domain="http://www.blogger.com/atom/ns#">PC Hamza</category><category domain="http://www.blogger.com/atom/ns#">personalities</category><category domain="http://www.blogger.com/atom/ns#">SIO</category><category domain="http://www.blogger.com/atom/ns#">SIOConference</category><title>அர்ப்பணிப்புக்கு மறுபெயர்தான் பி.சி. ஹம்ஸா</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOQbyg0oErB3spGMCykoQ8g0ngm2QonvtnUhEZy-Dvf0ZxQmkDRrFAJtbPsU6FSCUWcVVvXexLGupHVtlsN7trIv2ohP_kqkGrPNrtPcrfx6QTwBjIRglYY7N8SAsqG6z6PGRA840cnuk/s1600/p-c-hamzah.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;447&quot; data-original-width=&quot;462&quot; height=&quot;309&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOQbyg0oErB3spGMCykoQ8g0ngm2QonvtnUhEZy-Dvf0ZxQmkDRrFAJtbPsU6FSCUWcVVvXexLGupHVtlsN7trIv2ohP_kqkGrPNrtPcrfx6QTwBjIRglYY7N8SAsqG6z6PGRA840cnuk/s320/p-c-hamzah.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ, இளைஞர்களை சத்திய மார்க்கத்தின் இராஜபாட்டையில் வழிநடத்தி, அவர்களின் சிந்தையிலும் செயலிலும் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி, இறைவனின் உவப்புக்காகவும் மறுமைவெற்றிக்காகவும் அனைத்தையும் அர்ப்பணிக்கின்ற இலட்சியக் கனலை அவர்களுக்குள் கிளர்ந்தெழச் செய்த முதுபெரும் மாணவர் தலைவர், சத்தியப் போராளி, இலட்சியப் பயணி &lt;b&gt;&lt;span style=&quot;color: blue; font-size: large;&quot;&gt;பி.சி. ஹம்சா&lt;/span&gt;&lt;/b&gt; 21 ஜூன் 2018 வியாழன் அன்று நள்ளிரவில் கேரளத்தில் இறைவனிடம் மீண்டுவிட்டார். (&lt;i&gt;இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்&lt;/i&gt; - திண்ணமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். திண்ணமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்).&lt;br /&gt;
&lt;br /&gt;
அவருடைய மறைவு பற்றிய செய்தி பரவத் தொடங்கியதும் உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் கிராமத்திலிருந்து மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் வரையிலும் குஜராத்தின் கரையோரங்களிலிருந்து அஸ்ஸாமின் மலையோரங்கள் வரையிலும் ஆந்திரத்து தெலுங்கானா முதல் கர்நாடகம், தமிழகம் வரையிலும் தலைநகரமான தில்லியிலிருந்து அவர் பிறந்து வளர்ந்த கேரளம் வரையிலும் கண் கலங்கியவர்களும், புன்னகை மாறா அவரின் முகத்தை மனக் கண்களில் கொண்டு வந்து நெஞ்சம் நெகிழ்ந்தவர்களும் ஏராளம். ஏராளம். அனைவருடைய மனங்களிலும் நிலையான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்ற வசியமும், ஈர்ப்பாற்றலும் பெற்றிருந்தார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘மனிதர்கள் அனைவரிடமும் ஏதேனுமோர் தனிப்பண்பு மிகைத்திருக்கும். அந்தப் பண்பைக் கொண்டு நினைவுகூரத்தக்க அளவுக்கு அவர்களின் வாழ்வில் அந்தப் பண்பு மிளிரும். பி.சி. ஹம்சா சாகிபை நினைவுகூரும்போதெல்லாம் மனத்தில் தோன்றுவது அவருடைய அர்ப்பணிப்பும் கடின உழைப்பும்தாம்’ எனச் சொல்கின்றார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் துணைத் தலைவர் &lt;b&gt;சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி&lt;/b&gt;. உண்மைதான். ‘அர்ப்பணிப்புக்கு மறுபெயர்தான் பி. சி..!’என்கின்ற அளவுக்கு தம்முடைய இரவையும் பகலையும் உழைப்பையும் ஒய்வையும் ஒட்டுமொத்த வாழ்வையும் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக முழுமையாக அர்ப்பணித்துவிட்டிருந்தார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எளிமையானவர். பழகுவதற்கு இனியவர். ‘1990-இல் அவர் முதன்முதலாக பீகாருக்கு வந்தார். முதல்முறையாகச் சந்திக்கின்றோம். ஆனால் ஏதோ காலங்காலமாக தோழமை கொண்டிருக்கின்ற உணர்வோடு உற்சாகமாகப் பழகி, இனிமையாகப் பேசி, சிரித்து இதயத்தில் நிலையாக தங்கிவிட்டார்’ என்கிறார் பீகாரின்&lt;b&gt; &amp;nbsp;ஷப்பீர் ஆலம்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;nbsp;‘We need Quality not Quantity &amp;nbsp;தரம்தான் தேவையே தவிர எண்ணிக்கை அல்ல என்று கான்பூர் கூட்டத்தில் அவர் சொன்னதை நினைவுகூர்கின்றார், அஸ்ஸாம் மாநிலத்து &lt;b&gt;அபுல் ஹஸன்&lt;/b&gt;. ‘தமிழகத்தில் களம் காலியாக இருக்கின்றது - இஸ்லாமிய இயக்கம் முழுமூச்சுடன் களம் இறங்க வேண்டும்’ என 1989-இல் அவர் சொன்னது இன்றும் காதுகளில் ரீங்காரமிடுவதாக நெஞ்சம் நெகிழ்கின்றார் வெல்ஃபேர் பார்ட்டியின் மூத்த தலைவர் &lt;b&gt;எஸ்.என்.சிக்கந்தர்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
‘நான் அவரை முதல்முறை சந்தித்த போது கனிவான அண்ணனைச் சந்திக்கின்ற உணர்வில் திளைத்தேன். பல்லாண்டுகளுக்குப் பிறகு சந்தித்த போது ‘என் பெயர்..’ எனச் சொல்லி முடிப்பதற்குள், ‘உமைர் பாய், எப்படி இருக்கின்றீர்கள்?’ என முந்தையச் சந்திப்பில் விட்ட இடத்திலிருந்து சிரித்த முகத்துடன் தொடங்கிவிட்டார் அவர். வரிசையின் கடைசியில் நிற்பவனையும் நல்ல முறையில் அறிந்திருப்பதுதான் தலைமைக்கு அழகு. ஒரு நல்ல தலைவரை இன்று இயக்கம் இழந்து நிற்கின்றது’ என்கிறார், முன்னாள் எஸ்ஐஓ செயலாளர் &lt;b&gt;உமைர் அனஸ்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
‘உடனுக்குடன் முடிவெடுக்கின்ற அவருடைய ஆற்றல்தான் இன்றும் என் நினைவில் நிற்கின்றது’ என்கிறார் தில்லி எஸ்ஐஓ முன்னாள் தலைவர் &lt;b&gt;அயாஸ் இஸ்லாஹி&lt;/b&gt;. ‘அவரைப் போன்ற கடின உழைப்பாளிகள் எவரும் இருக்க மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் அவர் நிதானம் இழந்ததில்லை. புன்னகையுடன் எல்லாவற்றையும் எளிதாக சாதித்து முடித்துவிடுவார்’ என்கிறார் முன்னாள் எஸ்.ஐ.ஓ பொதுச் செயலாளர் &lt;b&gt;ஐ. கரீமுல்லாஹ்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
‘ரோஜா மலரின் இதழைப் போன்ற மென்மையான இதயம் கொண்டவர் அவர். அதே சமயம் கொள்கை, கோட்பாடு என்று வருகின்ற போது எஃகினைப் போன்று உறுதிமிக்கவர் அவர்.’ என்கிறார் முதுபெரும் சமுதாயத் தலைவரும் மில்லி கெஜட் இதழாசிரியருமான &lt;b&gt;டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான்&lt;/b&gt;. ‘இதய நோய், டயாபிட்டீஸ், மிகை இரத்த அழுத்தம் என பற்பல நோய்களுடன் போராடி வந்த அவரை புற்றுநோயும் தொற்றிக் கொண்டது. அந்த நிலையிலும் அவர் தொடர்ந்து மும்முரமாக இயங்கி வந்தார். மாதக் கணக்கில் குடும்பத்தாரை விட்டு தலைமையகத்தில் தங்கிச் செயலாற்றி வந்தார். மலையாளம், உர்தூ, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அவர் புலமை பெற்றிருந்தார். அவருடைய மறைவு கட்சிக்கும் இயக்கத்துக்கும் மிகப் பெரும் இழப்பாகும்’ என நெஞ்சம் நெகிழ்கின்றார் வெல்ஃபேர் கட்சித் தலைவர் &lt;b&gt;டாக்டர் சையத் காசிம் ரசூல் இல்யாஸ்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இறக்கின்ற நாள் வரையில் அவர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக பாடுபட்டு வந்தார். 1980 களின் இறுதியில் சத்தியப் பாதையில் இலட்சியப் பயணத்தைத் தொடங்கிய அந்தப் போராளி போகாத ஊர் இல்லை. போராடாத களம் இல்லை. இளமைத் துடிப்பும் கொப்பளிக்கும் பேரார்வமும் இலட்சிய வேட்கையும் நிறைந்த இளவலாக இயக்கத்தில் இணைந்த நாள் முதலே பெரும் பெரும் பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன. 1986-இல் முதன் முதலாக மாணவர்களின் அகில இந்திய மாநாடு நடத்தப்பட்ட போது அதற்கான அனைத்தையும் செய்கின்ற பொறுப்பு அவருக்குத்தான் தரப்பட்டது. அதற்காக அரசு வேலையை உதறிவிட்டு வந்தார் அவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiZBmq57orlukFzf4Yj0Uj7YMkUVYB2tGIFP3jzmrFF8LYt8sQFu791A4F8pPJhxkVpJWfJzhAaYNsRahA4dENnwVhjNBZmIlP4ZjeriVbmmqnU7lzdXTS19S5V7jhO0I-vuLHMtEfbis/s1600/pchamza.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;488&quot; data-original-width=&quot;720&quot; height=&quot;216&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiZBmq57orlukFzf4Yj0Uj7YMkUVYB2tGIFP3jzmrFF8LYt8sQFu791A4F8pPJhxkVpJWfJzhAaYNsRahA4dENnwVhjNBZmIlP4ZjeriVbmmqnU7lzdXTS19S5V7jhO0I-vuLHMtEfbis/s320/pchamza.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;u&gt;படம்: இடமிருந்து மூன்றாமவராக கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பவர்தான் பிசி ஹம்சா.&amp;nbsp;&lt;/u&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
(‘அமைதி, முன்னேற்றம், ஈடேற்றத்துக்கு இஸ்லாம்’ என்கிற மையக்கருத்தில் நடந்த அந்த மாநாடு இயக்க வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. புகழ்பெற்ற பாடகராக இருந்து இஸ்லாத்தை ஏற்ற யூசுப் இஸ்லாம் கலந்து கொண்டதும் அந்த மாநாட்டில்தான். இரண்டாம் நாள் இரவில் பெருமழை பெய்ய, கொட்டும் மழையில்&lt;b&gt; மௌலானா அப்துல் அஜீஸ் சாகிப்&lt;/b&gt; உருக்கமாக உரை நிகழ்த்த, மாணவர் பட்டாளம் சற்றும் கலையாமல் ‘அடாது மழை பெய்தாலும் விடாது பணியாற்றுவோம்’ என உலகுக்கு உரத்துச் சொன்னதும் அந்த மாநாட்டில்தான்.) அதனைத் தொடர்ந்து எஸ்.ஐ.ஓ அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட நாடு முழுவதும் எண்ணற்ற மாணவ, இளைஞர்களின் வாழ்வில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தினார் அவர். தொடர்ந்து கேரளத்து அமீரின் தனி அலுவலர், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் என அவர் மீதான பொறுப்புகள் கூடிக்கொண்டே போயின.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கட்டத்தில் &lt;b&gt;மீன் டைம்&lt;/b&gt; என்கிற பத்து நாள் பத்திரிகை (வார இதழாகவும் அல்லாமல், மாதமிரு முறை இதழாகவும் இல்லாமல் மாதம் மும்முறை இதழாக) தொடங்கப்பட்ட போது, அதற்கான நிதி, நிர்வாகம், இதழாசிரியர் என எல்லாப் பொறுப்புகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. மணலில் கயிறு திரிக்கின்ற அந்த சவால் நிறைந்த பணியையும் மனமுவந்து ஏற்றார் அவர். ஆனால் வாய்ப்புக்கேடாக அந்த முயற்சி தோல்வியில் முடிய, அதன் வலியையும் வேதனையையும் தனி மனிதராகச் சுமந்தார் பி.சி. ஹம்சா.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன் பிறகும் அவர் துவண்டுவிடவில்லை. வெல்ஃபேர் கட்சி தொடங்கப்பட்ட போது அந்த சவால் நிறைந்த பணியிலும் அவர் சற்றும் தயங்காமல் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அது மட்டுமல்ல, கேரளத்தில் ஏராளமான அறக்கட்டளைகளிலும் அவருடைய பங்களிப்பு இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு வாழ்வின் இறுதி மூச்சு வரை அமைப்பு, இயக்கம், ஊடகம், கட்சி என வெவ்வேறு தளங்களில் மும்முரமாக இயங்கி வந்த அவர் தம்முடைய 62ஆம் வயதில் இறைவனிடம் மீண்டுவிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக. சுவனத்தின் உயர்ந்த தோட்டங்களில் அவருக்கு இடம் அளிப்பானாக. ஆமீன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
-&lt;b&gt; டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்.&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;div&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2018/07/blog-post.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOQbyg0oErB3spGMCykoQ8g0ngm2QonvtnUhEZy-Dvf0ZxQmkDRrFAJtbPsU6FSCUWcVVvXexLGupHVtlsN7trIv2ohP_kqkGrPNrtPcrfx6QTwBjIRglYY7N8SAsqG6z6PGRA840cnuk/s72-c/p-c-hamzah.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-397547573545174725</guid><pubDate>Mon, 05 Mar 2018 14:22:00 +0000</pubDate><atom:updated>2018-03-05T19:58:57.876+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Ameer-e-Jamaat</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Islamic Dawah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Islamic Movement</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind</category><category domain="http://www.blogger.com/atom/ns#">SIO</category><title>‘இஸ்லாத்தின் படி வாழ்வது உங்களின் பிறப்புரிமை.’</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf3kX5jfBd_sFaP1Shljz-h1Hf96O5as-YCuqKKl1g7vIwfm03PEc61A2wPzfd3tRPeGRNg2ilPaMssrxIoRilV2HlVThLvUZKEty-U80WTLsoAvkJdWvSxUaxwwnF5bz1cdEO_zlFXzo/s1600/ameer.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;640&quot; data-original-width=&quot;960&quot; height=&quot;213&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf3kX5jfBd_sFaP1Shljz-h1Hf96O5as-YCuqKKl1g7vIwfm03PEc61A2wPzfd3tRPeGRNg2ilPaMssrxIoRilV2HlVThLvUZKEty-U80WTLsoAvkJdWvSxUaxwwnF5bz1cdEO_zlFXzo/s320/ameer.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
- அமீரே ஜமாஅத்தின் எழுச்சியுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
எஸ்.ஐ.ஓ.வைச் சேர்ந்த மாணவ, இளைஞர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம் என் மனம் மகிழ்ச்சியால் நிறைந்துவிடும். வயது முதிர்ந்த தந்தைக்கு பெற்ற பிள்ளைகளைப் பார்க்கும் போது ஏற்படுகின்ற சந்தோஷத்தைப் போன்ற உணர்வை நான் பெறுகின்றேன். அந்த இனிமையையும் சுகந்தத்தையும் சுவையையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது. என்னுடைய கிழட்டு நாளங்களில் இளமை இரத்தம் பாய்வதைப் போன்று நான் புதுத் தெம்பைப் பெறுகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்களே! தோழர்களே! அன்பு மகன்களே என்று சொல்லி உங்களை அழைத்தாலும் அது தவறு ஆகாது. இந்த அமர்வில் பலரும் ‘இந்த நாட்டின் எதிர்காலம் என்ன ஆகுமோ?’ எனக் கவலை தெரிவித்தார்கள்.&lt;br /&gt;
நான் சொல்வேன். இந்த நாட்டின் எதிர்காலம் என்னுடைய இந்த இளைஞர்கள்தாம்..! (தக்பீர் முழக்கம்)&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நாட்டின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்த இளவல்கள்தாம் தீர்மானிப்பார்கள். எதிர்காலம் ஒளிமயமானதாகத்தான் இருக்கும் என்றே இவர்கள் தீர்மானித்து விட்டிருக்கின்றார்கள். நிச்சயமாக ஒளிமயமானதாகத்தான் இருக்கும். இன்ஷா அல்லாஹ். அந்த ஒளிமயமான எதிர்காலத்தை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆயிரக் கணக்கில் இங்கு திரண்டிருக்கின்ற இளைஞர்களைப் பார்க்கின்ற போது - நான் போகின்ற இடங்களிலெல்லாம் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடத்தான் செய்கின்றார்கள் - நான் தனியாக இல்லை என்றே நான் உணர்கின்றேன். நான் தனியாளாக இல்லை. எனக்குப் பின்னால் ஜமாஅத்தே இஸ்லாமி இருக்கின்றது. எனக்கு பின்னால் இலட்சக்கணக்கான மாணவ, இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்றே உணர்கின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பிற்கினியவர்களே! &amp;nbsp;நீங்கள் என்னுடையவர்கள். நான் உங்களைச் சேர்ந்தவன் என்றே நான் உணர்கின்றேன். (தக்பீர் முழக்கம்..)&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி நீங்கள் என்றும் என்னுடன்தான் இருப்பீர்கள் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு. நானும் உயிருள்ள வரை உங்களுடனே இருப்பேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்களே! ‘முஸ்லிம்களின் உயிர், உடல், உடைமை, மானம் ஆகியவற்றுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை’ என இங்குச் சொன்னார்கள். ‘இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அளித்திருக்கின்ற உடல், உயிர், மானம் ஆகியவற்றின் பாதுகாப்பை நசுப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன’ என பலரும் சொன்னார்கள். ‘அரசு இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது’ என்றும் சொல்லப்பட்டது. இது உண்மைதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் முஸ்லிம்களின் உடைமைகள், உயிர்கள், மானம் ஆகியவற்றைப் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்களுடையது. வேறு எவரும் அவற்றை உங்களுக்காகப் பாதுகாக்க மாட்டார்கள். கண்ணியத்துடன், மானத்துடன்தான் நீங்கள் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்; அவமானப்பட்டு, கேவலப்பட்டு அல்ல!. இழிவான வாழ்க்கை வேண்டவே வேண்டாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குர்ஆன் கூறுகின்றது: ஈமான் இல்லாதவர்கள் கூறுகின்றார்கள் : ‘நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்ற பிறகு நம்மில் பலசாலிகளாய், செல்வாக்கு மிக்கவர்களாய் இருப்பவர்கள் இந்த இழிவானவர்களை வெளியேற்றிவிடுவார்கள்’&lt;br /&gt;
&lt;br /&gt;
குர்ஆன் தொடர்ந்து கூறுகின்றது: ‘கண்ணியமும் மரியாதையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும். ஆனால் நம்பிக்கையற்ற இந்தமக்களுக்கு இது புரிவதில்லை’ (அத்தியாயம் 63 அல்முனாஃபிகூன் 8)&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணியமும் இழிவும் எங்களின் கைகளில் என எவர்கள் சொல்கின்றார்களோ அவர்களைப் பார்த்து குர்ஆன் அறிவிக்கின்றது. ‘கண்ணியமும் மரியாதையும் அல்லாஹ்வுக்கு உரியது. இறைத்தூதருக்கு உரியது. இறைநம்பிக்கையாளர்களுக்கு உரியது’. அவர்கள் கண்ணியத்துடன் இருக்கின்றார்கள். கண்ணியத்துடன்தான் இருப்பார்கள். எவராலும் இந்த டிக்னிட்டியை - கண்ணியத்தை எதிர்த்து சவால் விட முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு முறை, ஹிஜ்ரத் நடக்கவிருந்த சந்தர்ப்பத்தில் சத்திய மார்க்கத்தின் எதிரிகள் ‘நாங்கள் முஹம்மத் நபிகளாரை மக்காவிலிருந்து வெளியேற்றிவிடுவோம். கொன்றுவிடுவோம்’ என்று தீர்மானித்தார்கள். அப்போது குர்ஆன் அறிவித்தது. அவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
‘ஆனால், அவர்கள் அவ்வாறு செய்தால் உமக்குப் பின் அவர்களும் இங்கு அதிக காலம் தங்கியிருக்க முடியாது’ (அத்தியாயம் 17 பனூ இஸ்ராயீல் 76)&lt;br /&gt;
&lt;br /&gt;
அதாவது ‘நீங்களும் இங்கு அதிக நாள்கள் இருக்க மாட்டீர்கள். முஹம்மத் நபிகளாரும் அவர்களின் தோழர்களும் இன்றியமையாத சக்தியாய் இருக்கின்றார்கள். அவர்களின் பொருட்டு தான் இந்த நகரத்தில் இறைவனின் அருள்வளங்கள் அருளப்பட்டுக் கொண்டிருக்கின்ற. அவர்கள் இருப்பதால்தான் நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர்கள் இந்த நகரத்தை விட்டு வெளியேறிவிட்டார்களேயானால் உங்களாலும் இந்த நகரத்தில் தங்கியிருந்து வாழ முடியாது. இந்த நாட்டின் எதிர்காலமும் உங்களைத்தான் சார்ந்திருக்கின்றது. நீங்கள் வெளியேறி விட்டீர்கள் எனில் இந்த நாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை. நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள். அதனால் இந்த நாட்டுக்கும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது. நீங்கள் இல்லாமல் போனீர்களேயானால் இந்த நாட்டுக்கு எந்த எதிர்காலமும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாடே இருட்டில் மூழ்கியிருக்கின்றது. திரும்பும் திசையெங்கும் காரிருள்தான் சூழ்ந்திருக்கின்றது. இந்த இருளில் வெளிச்சத்தைப் பரப்புகின்ற கோபுரங்களாய் நீங்கள் இருக்கின்றீர்கள். உங்களிடமிருந்துதான் மக்கள் ஒளியைப் பெறுவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்களே! தோழர்களே!&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். அவை உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகலாம். அவை உங்களுக்குப் பிடிக்காமலும் போய் விடலாம். ஆனால் நான் எதனை சரியென்றும் சத்தியமென்றும் உணர்கின்றேனோ அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் மீதான கடமையாகும். உங்களுக்குப் பிடிக்காமல் போனாலும் நான் சொன்னவற்றைக் காதாரக் கேட்டு அவற்றின் படி நடப்பது உங்கள் மீதான பொறுப்பாகும். அவற்றைக் கேட்டு அவற்றின் படி செயல்படுவீர்கள் என்கிற எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு.&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர்களே!&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு தோழர் அமீனுல் ஹசனும் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டில் எந்தவொரு மதத்தையும் ஏற்றுக்கொள்கின்ற, அதன்படி வாழ்கின்ற, அதன் பக்கம் மக்களை அழைக்கின்ற உரிமையும் சுதந்திரமும் இந்த நாட்டு மக்களுக்கு இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் அளித்திருக்கின்றது. அந்த உரிமையையும் சுதந்திரத்தையும் பறிபோகாமல் காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்பை அவர் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;
ஆம். இந்த உரிமையைத் தக்க வைத்தாக வேண்டும். இதற்கு எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவரேனும் இதனைப் பறிக்க முயன்றால் தடுத்து நிறுத்துங்கள். அது உங்களின் கடமை.&lt;br /&gt;
ஏனெனில் இது குர்ஆன் உங்களுக்கு அளித்துள்ள உரிமை. குர்ஆன் வெளிப்படையாக அறிவித்தது. ஒவ்வொரு மனிதருக்கும் தாம் விரும்புகின்ற மார்க்கத்தை ஏற்றுக்கொள்கின்ற சுதந்திரம் உண்டு என்று அறிவித்தது. எல்லோருக்கும் இந்த சுதந்திரம் உண்டு. எல்லோருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை’ என்றே குர்ஆன் பிரகடனம் செய்தது. இந்தச் சுதந்திரத்தைக் கொடுத்தது குர்ஆன்தான். ‘தெளிவாகக் கூறிவிடும். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்’ &amp;nbsp;(அத்தியாயம் 18 அல்கஹ்ஃப் 29) &lt;br /&gt;
&lt;br /&gt;
அரசாங்கமும் ஆட்சியதிகாரமும் மதீனாவில் முஸ்லிம்கள் வசமான போது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது : &amp;nbsp;‘மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை’ (அத்தியாயம் 2 அல்பகறா 256)&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதான் இஸ்லாமிய ஆட்சி. இஸ்லாமிய அரசாங்கம் எப்படி இருக்கும் என்று கேட்கின்றார்கள். சொல்லுங்கள், இஸ்லாமிய அரசாங்கம் இப்படித்தான் இருக்கும். மத விவகாரத்தில் எந்தவொரு மனிதருக்கும் எத்தகைய நிர்ப்பந்தமும் இருக்காது. எவர் மீதும் எந்த விதமான அழுத்தமும் இருக்காது.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘மார்க்கத்தை மேற்கொள்வதில் யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. இனி எவர் தாஃகூத்தை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் திட்டமாக, மிகப் பலமான பிடிமானத்தைப் பற்றிக்கொண்டவராவார். அது என்றுமே அறுந்துவிடாது.’ (அத்தியாயம் 2 அல்பகறா 256)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, எது சத்தியம், எது ஷைத்தானின் வழி என்கிற விவரம் தெள்ளத்தெளிவாகப் பிரித்து அறிவிக்கப்பட்டு விட்டது. இனி எந்த வழியை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்கின்ற சுதந்திரமும் உரிமையும் மனிதர்கள் அனைவருக்கும் உண்டு என குர்ஆன் அறிவித்துவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்களே! இது இஸ்லாம் தருகின்ற சுதந்திரம். இஸ்லாம் தருகின்ற உரிமை. அரசியல் அமைப்புச் சட்டமும் இதற்கு அனுமதி அளிக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அரசியல் அமைப்புச் சட்டம் இரண்டாம்பட்சமே. விரும்புகின்ற மார்க்கத்தை ஏற்கின்ற உரிமை உங்களின் பிறப்புரிமையாகும். இந்த அனுமதியும் சுதந்திரமும் உரிமையும் இறைவனால் வழங்கப்பட்டவையாகும். இறைவனின் தூதரால் அருளப்பட்டவையாகும். இதனை அரசியல் அமைப்புச் சட்டமும் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த உரிமையைத் தக்க வைப்பது அவசியமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்களே! இப்போது நான் உங்களிடன் சில கேள்விகளை எழுப்ப விரும்புகின்றேன். உங்களிடம் கேட்காமல் நான் வேறு எவரிடம்தான் அவற்றைக் கேட்பேன்.&lt;br /&gt;
உங்களுக்கு இந்தச் சுதந்திரம் கிடைத்திருக்கின்றது. இந்த சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;
என்றாலும் உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். இதனை என் பிள்ளைகளிடம் கேட்கவில்லையெனில் யாரிடம் தான் இதனைக் கேட்பேன்? &amp;nbsp;சொல்லுங்கள். உங்களுக்குக் கிடைத்துள்ள இந்தச் சுதந்திரத்தின்படி செயல்படுகின்றீர்களா?&lt;br /&gt;
இந்தச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்த்து நில்லுங்கள். இது உங்களின் பிறப்புரிமை என்று சொல்லுங்கள். அரசியல் அமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை என்று சொல்லுங்கள். எல்லா நிலைகளிலும் இதனைப் பாதுகாப்பதற்காகக் களத்தில் நில்லுங்கள்.&lt;br /&gt;
என்றாலும் உங்களிடம் ஒன்றைக் கேட்பேன். என்னுடைய பிள்ளைகளிடம் அல்லாமல் வேறு எவரிடம்தான் நான் கேட்பேன்? என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான். ‘சொல்லுங்கள், இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றி நடக்கின்றீர்களா?’&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லாஹ்வின் நல்லடியார்கள் எத்தகையவர்கள்? குர்ஆன் அழகாக விவரிக்கின்றது. அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். அவர்களின் உடல் மட்டுமல்ல உள்ளமும் அல்லாஹ்வின் முன்னால் பணிந்துவிடுகின்றது. அவர்கள் ஜகாத்தை வழங்குவார்கள். ஹஜ் செய்வார்கள். நேரிய வழியில் நிற்பார்கள். அவர்கள் நல்லொழுக்கத்தைக் கடைபிடிப்பார்கள். அவர்களின் ஒழுக்கத்தைக் குறித்து எவரும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாத அளவுக்கு அப்பழுக்கற்ற நடத்தையை மேற்கொள்வார்கள் என்றெல்லாம் குர்ஆன் அவர்களைக் குறித்துச் சொல்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் சொல்லப்போனால், ‘அவர்கள் தங்களின் மானத்தையும் கற்பையும் பாதுகாப்பார்கள்’ என்றும் குர்ஆன் மக்கா மாநகரத்தில் பிரகடனம் செய்தது. அதாவது அவர்கள் பெரும் செல்வத்தையும் கருவூலத்தையும் பாதுகாப்பதைப் போன்று தங்களின் மானத்தைப் பாதுகாப்பார்கள். அதனை அவர்கள் மிகப் பெரும் சொத்தாக, முதலீடாகத்தான் நினைத்தார்கள் என அது அறிவித்தது. அந்த இளைஞர்களுக்கு நம்முடைய உயிர் அர்ப்பணமாகட்டும். அந்தச் சந்தர்ப்பத்தில் மக்கா மாநகரத்தில் ஒரே ஒரு இளைஞன் மீதும் எவராலும் ‘இவர் மானத்தைக் காப்பவராக இல்லை’ எனக் குற்றம் சுமத்த இயலாத அளவுக்கு அவர்கள் அப்பழுக்கற்ற நடத்தை கொண்டவர்களாய் மிளிர்ந்தார்கள்.&lt;br /&gt;
இதுதான் நல்லொழுக்கம்! இதுதான் நடத்தை! ‘தங்களின் மானத்தை மிகப்பெரும் சொத்தாக, கருவூலமாகக் கருதி அதனைப் பாதுகாப்பவர்கள்தாம் அல்லாஹ்வின் உண்மையான அடியார்கள்’ என அடியார்களைக் குறித்து நீங்கள் சொல்கின்றீர்களே, அதற்கு நேர்மாறாக இன்னாருடைய நடத்தை இருக்கின்றதே, இன்னார் தம்முடைய அண்டை வீட்டில் இருந்த பெண்ணைச் சீண்டினார் என்றோ, இன்னார் முஸ்லிம் அல்லாத பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்றோ ஒரே ஒருவரால் கூட ஆட்சேபிக்க இயலவில்லை. அந்த அளவுக்கு அந்த அடியார்களின் நடத்தை அப்பழுக்கற்றதாய் இருந்தது. என்னுடைய அன்பர்களே! &amp;nbsp;அது போன்ற அப்பழுக்கற்ற நடத்தையைக் கொண்டவர்களாய் நீங்களும் மாறுங்கள். அத்தகைய நல்லொழுக்கத்தைக் கடைபிடியுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லாஹ்வின் நல்லடியார்கள் எப்படிப்பட்டவர்கள் எனில் வயதான பெற்றோரிடம் அவர்கள் ‘சீ!’ என்றுகூட சொல்ல மாட்டார்கள் என்றே குர்ஆன் கூறுகின்றது. திருமணம் ஆனவுடன் அவர்களின் அணுகுமுறை மாறிவிட்டது என்கிற நிலைமை இருக்கலாகாது என்றே குர்ஆன் எதிர்பார்க்கின்றது. ‘உண்மையிலேயே நாம் இப்படிப்பட்டவர்களாய்த்தாம் இருக்கின்றோமா?’ என்பதுதான் என்னுடைய கேள்வி. கல்யாணத்துக்குப் பிறகு நம்முடைய பெற்றோருடன் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
‘அவர்களுடன் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள். அவர்களை ‘சீ’ என்று கூடக் கூறாதீர். மேலும், அவர்களிடம் கடிந்து பேசாதீர்! மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக! மேலும் பணிவுடனும் கருணையுடனும் அவர்களிடம் நடந்துகொள்வீராக (அத்தியாயம் 16 பனூ இஸ்ராயீல் 23-24) என்றே குர்ஆன் போதிக்கின்றது.&lt;br /&gt;
அதாவது எப்படி பறவை தன்னுடைய சிறகை சுருக்கிக் கொண்டு தரையில் இறங்கி அடங்கியொடுங்கி பணிந்து போகின்றதோ அவ்வாறு அவர்களிடம் பணிவுடன் இருங்கள். பறக்கத் தெரியும் என சிறகுகளை விரித்துக்கொண்டு அவர்களுக்கு முன்னால் மிடுக்கைக் காட்டாதீர்கள். அதற்கு மாறாக அவர்களுக்கு முன்னால் பணிந்துவிடுங்கள் என்றே குர்ஆன் கூறுகின்றது. ‘நம்முடைய பெற்றோருடனான நம்முடைய அணுகுமுறை இப்படித்தான் இருக்கின்றதா?’ என்பதுதான் என்னுடைய கேள்வி. நாம் அனைவரும் இந்தக் ÷ காணத்தில் நம்மை நாமே ஆய்வு செய்ய வேண்டும். முதலில் என்னை நானே நான் ஆய்வு செய்ய வேண்டும். என்னுடைய பெற்றோர் இப்போது இல்லை. அவர்கள் இருந்த போது நான் அவர்களுடன் எப்படி நடந்துகொண்டேன்? இந்தக் கோணத்தில் நாம் அனைவருமே நம்மை நாமே ஆய்வு செய்ய வேண்டும். மக்காவில் இந்த வசனங்கள் அருளப்பட்ட போது ஒரே ஒருவர்கூட ‘என்னுடைய பிள்ளை இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றுக்கு நேர்மாறாக நடந்துகொள்கின்றாரே’ என முறையிடவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே போன்று ஷரீஅத் விவகாரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஷரீஅத்தின் படிச் செயல்பட வேண்டும் என்று குர்ஆன் ஆணையிடுகின்றது. ஷரீஅத்தின் படிச் செயல்படுவதற்கு அரசியல் அமைப்புச் சட்டமும் உங்களை அனுமதிக்கின்றது. ஷரீஅத்தின் படி செயல்படுங்கள். இல்லையேல் வழிகெட்டுப் போவீர்கள் என குர்ஆன் எச்சரிக்கின்றது. இன்றைய அரசாங்கமோ ஷரீஅத்தின் மீது கை வைக்கத் துணிந்திருக்கின்றது. இந்த நிலையில் ஷரீஅத்துக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றீர்கள். ஆனால் ஷரீஅத்தின் படி நடக்கின்றீர்களா &amp;nbsp;என்பதுதான் என்னுடைய கேள்வி. மனைவியுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என ஷரீஅத்தில் சொல்லப்பட்டிருக்கின்றதோ அவ்வாறு நாம் நடந்துகொள்கின்றோமா? குர்ஆனின் போதனைக்கு இயைந்து போவதாய் உங்களின் நடத்தை இருக்கின்றதா? நீங்கள் எதனை உண்கின்றீர்களோ, அதனையே உங்களின் மனைவிக்கும் ஊட்டுங்கள். நீங்கள் எதனை உடுத்துகின்றீர்களோ அதனையே உங்களின் மனைவிக்கும் உடுத்துங்கள் என்றே நபிகளார்(ஸல்) ஆணையிட்டிருக்கின்றார்கள். நாம் அப்படித்தான் நடந்து கொள்கின்றோமா? நம்முடைய வீட்டின் நிலைமை இப்படித்தான் இருக்கின்றதா? ‘உங்களில் எவர் தம் மனைவி மக்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்கின்றாரோ அவர்தான் உங்களில் சிறந்தவர்’ என நபிகளார்(ஸல்) அறிவுறுத்தியிருக்கின்றார்கள். உலகத்தாரின் பார்வையில் நல்லவர்களாய் ஆகிவிடுவது எளிது. ஆனால் மனைவி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது சிரமமானது. நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘நான் என்னுடைய வீட்டாருடன் நல்ல முறையில் நடந்துகொள்கின்றேன். என்னைப் போன்றே நீங்களும் நடந்துகொள்ளுங்கள்’.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே எந்த ஷரீஅத்துக்காக நீங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கின்றீர்களோ அந்த ஷரீஅத்தின் படி முதலில் நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள். ‘எங்களுக்கு இன்னும் திருமணமே நடக்கவில்லையே’ என நீங்கள் சொல்லலாம். திருமணம் நடக்கும். இன்னும் வெவ்வேறு நிலைமைகளையும் நீங்கள் எதிர்கொள்ளத்தான் போகின்றீர்கள். என்ன ஆனாலும் சரி, ஷரீஅத்தின்படி வாழ்ந்து நடமாடும் இஸ்லாமாக நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டாமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
இறுதியாக ஒன்றைச் சொல்வேன். இன்றையக் காலத்தில் இஸ்லாத்திற்கு எதிராக மிகப் பெரும் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. விதவிதமாக அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அவற்றை ஆண்மையுடன் எதிர்கொள்ளுங்கள். என்றாலும் ‘இஸ்லாம் அமைதிமார்க்கமாகும். கருணையும் பரிவும் நிறைந்த மார்க்கமாகும். உலக மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்கின்ற மார்க்கமாகும்’ என்கிற செய்தியை சொல்லாலும் செயலாலும் உலக மக்களுக்கு எடுத்துரைப்பது உங்களின் - என்னுடைய இந்த இளவல்களின் - பொறுப்பாகும். இந்தப் பணியை உங்களைப் போன்ற மாணவர்களால்தான் செய்ய இயலும். ‘நீங்கள் சித்திரிப்பதைப் போன்றதல்ல இஸ்லாம். அதற்கு மாறாக உங்களுக்கும் எங்களுக்கும் ஒட்டுமொத்த உலக மக்களின் நலனுக்கும் அமைதிக்கும் துணை நிற்பதுதான் இஸ்லாம்’ என உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்தின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது). தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான்.’ (அத்தியாயம் 10 யூனுஸ் 25)&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லாஹ் உங்களை சுவனத்தின் பக்கம் அழைக்கின்றான். நரகத்திலிருந்து காப்பாற்றவே விரும்புகின்றான். இந்தச் செய்தியை மக்களுக்கு எடுத்துரையுங்கள். நீங்கள் மாணவர்களாய் - பள்ளிகளில், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் - இருக்கின்றீர்கள். உங்களால்தான் இந்தச் செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியும். இதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக இருக்கின்றன. அல்லாஹ்வின் மார்க்கம் உலகம் முழுவதும் பரவுவதற்காகவே வந்துள்ளது. பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறு நிலைமைகளைக் கடந்து இந்த மார்க்கம் உங்களிடமும் என்னிடமும் வந்துள்ளது. இதனை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது, இதன் பக்கம் மக்களை அழைப்பது இப்போது நம்முடைய கடமையாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இறுதி ஹஜ்ஜின்போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்களைப் பார்த்து அன்பு நபிகளார்(ஸல்), ‘இங்கு இருப்பவர்கள் &amp;nbsp;இங்கு இல்லாதவர்களிடம் இறைவனின் இந்தச் செய்தியை எடுத்துரையுங்கள்’ என்று அறிவுறுத்தினார்கள். இஸ்லாத்தின் மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்ட பிறகு அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ‘அதுதான் நபிகளாரின் இந்த உம்மத்துக்கான இறுதி வசிய்யத்’ என்கின்றார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி). இந்த வசிய்யத்தின் படி நீங்கள் செயல்பட்டாக வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மார்க்கம் ஒட்டுமொத்த மனித குலத்துக்குமானது. உலக மக்களுக்கான வழிகாட்டுதல்தான் இது. உலக மக்கள் அனைவருக்கும் பாதையைக் காண்பிப்பது உங்களின் பணியாகும். இதற்காகத் தான் குர்ஆன் அருளப்பட்டது. நண்பர்களே! &amp;nbsp;இந்தப் பணிக்காக நீங்கள் கச்சை கட்டிக் கொண்டு ஆயத்தமாகிவிடுங்கள். அதன் பிறகு பாருங்கள். உலகின் வரைபடமே மாறிவிடும். நீங்கள் மாறிவிட்டீர்களெனில் திண்ணமாக உலகமும் மாறிவிடும். இதற்காக அசாதாரணமான தியாகத்தை நீங்கள் தர வேண்டியிருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கின்றேன். இரவு பத்து மணியைத் தாண்டிய பிறகும் பொறுமையுடன் என்னுடைய பேச்சைக் கேட்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் சொன்னதன்படி நடப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. இதன் படி நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை உணர்த்துகின்ற செய்தியை நான் எதிர்பார்த்து இருப்பேன்.&lt;br /&gt;
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.&lt;br /&gt;
&lt;br /&gt;
- எஸ்.ஐ.ஓ மாநாட்டில் பிப்ரவரி 24 அன்று இரவு அமீரே ஜமாஅத் &lt;b&gt;மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி&lt;/b&gt; அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2018/03/blog-post.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf3kX5jfBd_sFaP1Shljz-h1Hf96O5as-YCuqKKl1g7vIwfm03PEc61A2wPzfd3tRPeGRNg2ilPaMssrxIoRilV2HlVThLvUZKEty-U80WTLsoAvkJdWvSxUaxwwnF5bz1cdEO_zlFXzo/s72-c/ameer.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-5411519348714638135</guid><pubDate>Sat, 24 Feb 2018 05:47:00 +0000</pubDate><atom:updated>2018-02-24T11:36:30.311+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">conference</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Islamic Movement</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Sadatullah Husseini</category><category domain="http://www.blogger.com/atom/ns#">SIO</category><category domain="http://www.blogger.com/atom/ns#">SIOConference</category><title>கண்ணியத்தை மீட்டெடுப்போம்.  எதிர்காலத்தை வடிவமைப்போம். </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilyy8begX6DCvHnHS9t5YI0-vlfVO9XLIdC4Hr-H_Rd1DEhB-NoK6ZQdTB_C7g1G1oiXwX8hj8-Pieec74Xs-B3MJTR0mYIyF69Y4niPtIdF1IAQGghC2wFhWkojrpD6S5DxyzgnkQH9M/s1600/sadatsb.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;640&quot; data-original-width=&quot;960&quot; height=&quot;213&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilyy8begX6DCvHnHS9t5YI0-vlfVO9XLIdC4Hr-H_Rd1DEhB-NoK6ZQdTB_C7g1G1oiXwX8hj8-Pieec74Xs-B3MJTR0mYIyF69Y4niPtIdF1IAQGghC2wFhWkojrpD6S5DxyzgnkQH9M/s320/sadatsb.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து நாட்டின் மூலை முடுக்குளிலிருந்து இங்கு திரண்டிருக்கும் இஸ்லாமிய இளைஞர்களே!&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாபெரும் திடலில் திரண்டிருக்கின்ற இந்த இளைஞர் கூட்டத்தை நான் எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்தத் துணைக்கண்டத்தில் எழுந்த முழக்கத்தின் அறுவடையாகப் பார்க்கின்றேன். இஸ்லாத்தை உயிரோட்டமுள்ள வாழ்க்கை நெறியாக முன் வைத்த அந்த முழக்கம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தூங்கிக் கிடந்த முஸ்லிம் உம்மத்தை எழுப்பியது. சோம்பிக் கிடந்த முஸ்லிம் சமுதாயத்தை சிலிர்த்தெழச் செய்தது. இதன் தொடர் விளைவாக இன்று இஸ்லாம் இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத சித்தாந்த வல்லரசாக -Idealogical super power&amp;nbsp; - ஆக நிமிர்ந்து நிற்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று உலகம் மிக வேகமாக இஸ்லாம் முன் வைக்கின்ற மாண்புகளையும் நெறிமுறைகளையும் ஏற்றுக்கொண்டு வருகின்றது. அசத்திய சக்திகள் இஸ்லாத்துக்கு எதிரான மிகப் பெரும் அளவில் அவதூறு பரப்புரையை முடுக்கிவிடப்பட்டுள்ளன. உலகத்தின் அசத்திய சக்திகள் அனைத்தும் இதற்கான கடைசி முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றாலும் இஸ்லாம் ஒரு மாற்றாக மேலெழுந்து நிற்கின்றது. நவீன உலகின் சிக்கல்களைத் தீர்க்கின்ற தீர்வாக உயர்ந்து நிற்கின்றது. இஸ்லாம் ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்பார்ப்பின் மையமாக - இன்னும் சொல்லப்போனால் ஒற்றை மையமாக - மேலோங்கிக் கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர்களே!&lt;br /&gt;
இந்த மூன்று நாள் மாநாட்டில் நாட்டின் ஏராளமான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும். நம்முடைய இயக்கத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், தேச அறிவுஜீவிகள், தலைவர் ஆகிய பலரும் உங்களுக்கு முன்னால் நாட்டைச் சூழ்ந்துள்ள பிரச்னைகள் குறித்துச் சொல்வார்கள். இந்த நாட்டில் வறுமை எந்த அளவுக்கு வேகமாக கூடிக் கொண்டிருக்கின்றது என்பதையும் பொருளாதார ஏற்றத்தாழ்வு நாளுக்கு நாள் விரிவடைந்துகொண்டே போகின்ற அவலத்தையும் நாட்டின் செல்வவளம் அனைத்தும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து கொண்டிருக்கின்ற போக்கையும் அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். இனம், சாதி, மொழி, வட்டாரம் ஆகியவற்றின் பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கின்ற கொடுமைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள், தலித்கள், பெண்கள் போன்றோர் மீதான அக்கிரமங்கள் குறித்தெல்லாம் இங்கு பேசப்படும். இன்று காலையில் கூட நாளிதழ்களில் அந்தக் கொடுமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உத்திரப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருத்தியை உயிரோடு கொளுத்திக் கொன்ற கொடூரத்தை வாசித்திருப்பீர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர்களே! இந்த அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்படும். ஆனாலும் தோழர்களே! நம்முடைய பணி பிரச்னைகள் குறித்து ஒப்பாரி வைப்பதல்ல. பிரச்னைகளைப் பற்றிப் பேசிக் கலைவதும் நம்முடைய வேலை கிடையாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாநாட்டின் மையக் கருத்துதான் இந்த மாநாட்டின் உண்மையான செய்தியாகும். Reclaiming Dignity. Redesigning Future கண்ணியத்தை மீட்டெடுப்போம். எதிர்காலத்தை வடிவமைப்போம். ஆம். நாம் இங்கே நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்போம். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைப்போம். அதனை வடிவமைப்பதற்கான பணியில் நம்மை நாமே அர்ப்பணித்துக்கொள்வோம் என்கிற உறுதியுடன்தான் நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர்களே! மாற்றத்தைக் கொண்டு வருவதில் இரண்டு காரணிகள் பெரும் பங்காற்றுவதாக சமூகவியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஒன்று உந்தித் தள்ளுகின்ற அதிருப்தியுணர்வு Push of discomfort. அதாவது நாட்டின் தற்போதைய அவலங்கள், அக்கிரமங்கள், கொடுமைகள், உரிமை மீறல்கள், ஊழல்கள் போன்றவற்றைப் பற்றிய அதிருப்தியும் கவலையும் உந்தித் தள்ளுகின்ற வகையில் மனத்தை நிறைக்க வேண்டும். இது மட்டும் போதாது. மேலே இழுக்கின்ற நம்பிக்கையுணர்வு Pull of Hope.. அதாவது இன்று உலகத்தில் நடந்துகொண்டிருப்பவை அனைத்தும் நிலையானவை அல்ல. ஒரு சிறப்பான, அழகான, நிறைவான உலகத்தைக் கட்டமைக்க முடியும். அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை. &amp;nbsp;இந்த இரண்டும்தாம் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற வல்லமையும் திறனும் கொண்டவை என சமூகவியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே, தோழர்களே, இந்த மாநாட்டிலிருந்து நீங்கள் திரும்புகின்ற போது இந்த இரண்டையும் உங்களுடன் கொண்டு செல்லுங்கள். தற்போதைய நடப்புகள் பற்றிய கவலையையும் அதிருப்தியையும் கொண்டு செல்லுங்கள். அதே சமயம் ஒளிமயமான, அழகான, சிறப்பான எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான சாத்தியம் பற்றிய நம்பிக்கையையும் ஆசையையும் உறுதியையும் செயல்பட்டாக வேண்டும் என உந்தித் தள்ளுகின்ற நம்பிக்கையுணர்வையும் கொண்டு செல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர்களே! எஸ்.ஐ.ஓ ஒரு ரியாக்டிவ் இயக்கம் கிடையாது. எதிர் வினையாற்றுகின்ற இயக்கம் கிடையாது. இது ஒரு பிரோ ஆக்டிவ் இயக்கம் ஆகும். இது தாமாக முன் வந்து, தெளிவான இலக்குகளை முன் வைத்து அவற்றை அடைவதற்காக திட்டமிட்ட, திட்டவட்டமான, தீர்க்கமான முறையில் பணியாற்றுகின்ற இயக்கம்தான் எஸ்.ஐ.ஓ.&lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்வினையாற்றுகின்ற இயக்கம் எப்படி இயங்கும்? ரியாக்டிவ் என்பது என்ன, பிரோ ஆக்டிவ் என்பது என்ன போன்றவற்றையெல்லாம் நீங்கள் எல்லோரும் நல்ல முறையில் அறிந்திருக்கின்றீர்கள். எதிர் வினையாற்றுகின்ற போது நம்முடைய நிலைமை என்னவாக மாறிவிடுகின்றது? நம்முடைய செயல்திட்டமும், நம்முடைய செயல்பாடுகமும் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிப்பதில்லை. அதற்கு மாறாக மற்றவர்கள் தீர்மானிக்கின்றார்கள். அந்நிய சக்திகள் அவற்றைத் தீர்மானிக்கின்றார்கள். இதுதான் எதிர்வினையாற்றுகின்ற இயக்கம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு எடுத்துக்காட்டாக புதியதாக நீச்சலைக் கற்றுக்கொள்ள முனைந்திருக்கும் இளைஞனைச் சொல்லலாம். பயமும் அச்சமும்தாம் அவனை ஆட்டிப்படைக்கின்றன. ஆர்ப்பரித்து வருகின்ற ஒவ்வொரு அலையும் அவனை இங்கும் அங்கும் புரட்டிப் போடுகின்றன. அலைகளின் ஆளுகைக்குள் அவன் வசமாகச் சிக்கிக் கொள்கின்றான். ஒவ்வொரு அலையும் அவனை எதிர்பாரா நிலையில் பற்றிக்கொள்கின்றன. சில சமயம் இந்தப் பக்கமும் சில சமயம் அந்தப் பக்கமும் அவன் அலைக்கழிக்கப்படுகின்றான். திடீரெனத் தாக்குகின்ற அலைகளினால் மலைப்பும் அயர்வுக்கும் திகைப்புக்கும் அவன் ஆளாகிவிடுகின்றான். கைகளையும் கால்களையும் ஆட்டுகின்றான். ஒவ்வொரு அலையையும் தனித்தனியாக எதிர்கொள்கின்றான். அலைகளை வெல்வதுதான் அவனுக்கு மிகப் பெரும் கவலையாகிவிடுகின்றது. இதுதான் எதிர்வினையாற்றுகின்ற உளவியல். எந்தச் சமூகங்கள் இந்த உளவியலைக் கொண்டிருக்கின்றனவோ அவற்றால் ஒருபோதும் வெற்றி பெறவே இயலாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று பிரச்னைகளும் நெருக்கடிகளும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆபத்துகளும் அச்சுறுத்தல்களும் நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. நம்முடைய ஷரீஅத்தும் மிகப் பெரும் ஆபத்தைச் சூழ்ந்திருக்கின்றது என்பதும் ஏராளமான தடைகள் இந்தச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கின்றன என்பதும் உண்மையே. ஆனால் நம்முடைய வேலை இந்த அலைகளை வென்றெடுப்பது மட்டுமே அல்ல. நம்முடைய பணி இந்த அலைகளைச் சமாளிப்பதிலேயே வாழ்நாளைக் கழித்து விடுவதல்ல. அதற்கு மாறாக நாம் தேர்ந்த, வல்லமை நிறைந்த நீச்சல் வீரரைப் போன்றதாகவே இருக்க வேண்டும். அவருடைய கவனமும் ஈடுபாடும் மொத்தமும் தாம் எடுத்துக்கொண்ட இலக்கைச் சென்றடைவதில்தாம் குவிந்திருக்கும். அவரும் அலைகளுடன் போரிடத்தான் செய்கின்றார். என்றாலும் அவர் அலைகளுடன் போரிடுவதோடு இலக்கை நோக்கி நீந்தி முன்னேறிச் செல்வதில் தம்முடைய திறமை முழுவதையும் குவித்துவிடுகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உங்களுக்கு முன்னாலும் தெளிவான இலக்குகள் இருக்கின்றன. உங்களுக்கு முன்னாலும் தீர்க்கமான இலட்சியங்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வரையில் இறைவனின் செய்தியை எடுத்துரைக்க வேண்டிய பெரும் பணி உங்கள் முன்னால் இருக்கின்றது. ஒவ்வொரு மனிதரின் இதயக் கதவுகளையும் நீங்கள் தட்ட வேண்டியிருக்கின்றது. மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ள வேண்டியிருக்கின்றது. இதுதான் உங்களுக்கு முன்னால் இருக்கின்ற இலக்கு. இதுதான் நீங்கள் அடைய வேண்டிய இலட்சியம். இங்கு சமுதாயமும் தேசமும் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்னைகளிலும் நீங்கள் அவசியம் கவனம் செலுத்துங்கள். உரிமைக் குரல் எழுப்புங்கள். என்றாலும் உண்மையான இலக்கை என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் மறந்துவிடாதீர்கள். ரீடிசைனிங் ஃபியூச்சர் - எதிர்காலத்தை வடிவமைக்கின்ற பணியை மறந்துவிடாதீர்கள். நாம் ஏற்றுக்கொண்டுள்ள இலக்கை வென்றடைய வேண்டும் என்பதை நெஞ்சங்களில் பசுமையாக வைத்துக்கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரீக்ளைமிங் டிக்னிட்டி - கண்ணியத்தை மீட்டெடுப்போம் என்பதற்குப் பொருள் நம்முடைய கண்ணியத்தை நாம் மீட்டெடுப்போம் என்பதல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடைய கண்ணியத்தையும் மீட்டெடுக்கவே விரும்புகின்றோம். ஆதிவாசிகளின் கண்ணியத்தை, தலித்களின் கண்ணியத்தை, பெண்களின் கண்ணியத்தை மீட்டெடுக்கவே நாம் விரும்புகின்றோம். இன்றைய இந்தியாவில் பெண்களுக்கு தாயின் கருவறை கூட பாதுகாப்பானதாக இல்லை. கடந்த சில ஆண்டுகளில் தாயின் கருவறையில் ஒன்றரை கோடி பெண் குழந்தைகளை இந்த நாடு கொன்று குவித்துள்ளது. இரண்டு உலகப் போர்களிலும்கூட இந்த அளவுக்கு மனிதர்கள் மாண்டதில்லை. ஆனால் இந்த நாட்டில் பெண்கள் இத்துணை பெரும் எண்ணிக்கையில் சாகடிக்கப்பட்டிருக்கின்றார்கள். பெண்களின் கண்ணியத்தையும் நாம் மீட்டெடுக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதான் ஒளிமயமான எதிர்காலம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த எதிர்காலத்தை எப்படிக் கட்டமைக்கப் போகின்றோம்? இதற்காக எத்தகைய வழிமுறையை மேற்கொள்ளப் போகின்றோம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர்களே! நீங்கள் அனைவரும் கல்லூரிகளிலும் பல்கøøக் கழகங்களிலும் படித்துக்கொண்டிருக்கின்றீர்கள். அந்தக் கல்வி வளாகங்கள்தாம் இந்த நாட்டின் எதிர்காலம். எந்த மாண்புகளை நீங்கள் இந்த நாட்டில் நிலைநாட்ட விரும்புகின்றீர்களோ அந்த மாண்புகளுக்கு நீங்கள் கல்விவளாகங்களில் உயிரூட்டுங்கள். அந்தக் கல்வி வளாகங்களில் நீங்கள் செய்கின்ற பணியின் மூலமாக ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைக்க முடியும். ஊழல் இல்லாத இந்தியாவைக் கட்டமைக்க விரும்புகின்றிர்களா? கல்வி வளாகத்திலிருந்து அதற்கான பணியைத் தொடங்கிவிடுங்கள். இங்கு திரண்டிருக்கின்ற அனைவரும் முறைகேடுகளில் ஈடுபடவும் மாட்டோம், நடக்க விடவும் மாட்டோம் என்கிற உறுதியுடன் இங்கிருந்து திரும்புங்கள். தேர்வு அறைகளில் முறைகேட்டைத் தடுத்து நிறுத்துங்கள். நாளைய இந்தியா ஊழல் அற்ற இந்தியாவாக மலரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்களின் கண்ணியத்தை மீட்டெடுக்க விரும்புகின்றீர்களா?&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்வி வளாகங்களில் ஈவ் டீசிங் போன்ற அவலங்களைத் தடுத்து நிறுத்துங்கள். பெண்களை மதிக்கின்ற, பெண்களைப் பாதுகாக்கின்ற இந்தியாவாக நாளைய இந்தியா மலரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாதிக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்துங்கள். கல்வி வளாகங்களிலிருந்து சாதி அரக்கனை வெளியேற்றுங்கள். மனிதர்களை மதிக்கின்ற இந்தியாவாக நாளைய இந்தியா மலரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நாட்டுக்குச் சிறப்பான தலைமை எப்படி உருவாகும்? அன்பர்களே! நீங்கள் படிக்கின்ற கல்லூரியில் உங்களுடன் வகுப்பறையில் அமர்ந்திருப்பவர்களில் ஒருவர்தான் இந்த நாட்டின் பிரதமர் ஆக இருக்கின்றார். அவர்களில் ஒருவர்தான் தொலைக்காட்சிச் சேனலின் அதிபராக வர இருக்கின்றார். அவர்களில் ஒருவர்தான் நாளிதழ்களின் ஆசிரியராக, ஐஏஎஸ் அதிகாரியாக வர இருக்கின்றார். அவருடைய ஒழுக்கத்தை, வாழ்வைப் பற்றிய பார்வையை, சமூகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்றிவிடுங்கள். உண்மை, நேர்மை, பதில் அளிக்கும் பொறுப்பு உணர்வு போன்றவற்றை அவருக்கு ஊட்டிவிடுங்கள். நாட்டின் எதிர்காலம் ஒளிமயமானதாய் ஆகிவிடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக கண்ணியத்தை மீட்டெடுப்பதும் எதிர்காலத்தை வடிவமைப்பதும் உங்களின் கைகளில்தான் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைய பிரச்னைகள் அனைத்துக்கும் இஸ்லாம் தான் ஒரே தீர்வாக, நிலையான தீர்வாக இருக்கின்றது. இந்த நேரத்தில் ஒன்றை நான் அழுத்தமாகப் பதிவு செய்யவே விரும்புகின்றேன். இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் மாணவர்கள் தம்முடைய 10, 12 ஆண்டுக்கால பள்ளி, கல்லூரி வளாக வாழ்வில் குறைந்தபட்சம் ஆறு முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச் சொல்வார்களேயானால், இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளை களைவார்களேயானால், இஸ்லாத்தைப் பற்றிய மென்மையான போக்கை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுவார்களேயானால் 15 ஆண்டுகளுக்குள்ளாக இந்த நாட்டின் காட்சி எப்படி மாறிவிடும் தெரியுமா?&lt;br /&gt;
&lt;br /&gt;
அரசுத் துறை, நீதித் துறை, ஊடகம் போன்றவற்றில் சேர்கின்ற அனைவருமே இஸ்லாத்தைப் பற்றி நல்ல முறையில் விளங்கிக் கொள்பவர்களாய் இருப்பார்கள். இன்று சமுதாயம் எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிகள் அனைத்தும் தாமாக அகன்றுவிடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுதான் ஒளிமயமான எதிர்காலம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பிற்கினியவர்களே! இதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெறுமனே ரியாக்ட் செய்பவர்களாய், எதிர் வினையாற்றுபவர்களாய், ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் செய்பவர்களாய், பிரச்னைகள் குறித்து ஒப்பாரி வைப்பவர்களாய், குமுறிக் கொண்டிருப்பவர்களாய் நாம் தேங்கி, முடங்கி இருந்துவிடக் கூடாது. அதற்கு மாறாக இந்த ஒளிமயமான எதிர்காலத்துக்காக திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். ஓயாமல் ஒழியாமல் உழைக்க வேண்டும். இறைவன் நிச்சயமாக நமக்குத் துணை நிற்பான்.&lt;br /&gt;
இறுதியாக ஒன்று. ரீடிஃபைனிங் ஃபியூச்சர் - எதிர்காலத்தை வடிவமைப்போம் என்றால் இந்த உலக வாழ்வைப் பற்றிய எதிர்காலம் மட்டுமே பொருள் ஆகாது. நம் அனைவருடைய முழுமையான எதிர்காலம் நமக்குக் கிடைக்கவிருக்கும் மறுமை வெற்றிதான். இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதுதான் உண்மையான ஒளிமயமான எதிர்காலமாக இருக்கும்.&lt;br /&gt;
இந்த மாநாடு வெற்றியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
- (23 பிப்ரவரி 2018) தில்லியில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் மாநாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் துணைத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி ஆற்றிய உரையிலிருந்து...&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2018/02/blog-post.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilyy8begX6DCvHnHS9t5YI0-vlfVO9XLIdC4Hr-H_Rd1DEhB-NoK6ZQdTB_C7g1G1oiXwX8hj8-Pieec74Xs-B3MJTR0mYIyF69Y4niPtIdF1IAQGghC2wFhWkojrpD6S5DxyzgnkQH9M/s72-c/sadatsb.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-7657698801568594869</guid><pubDate>Sun, 06 Aug 2017 12:50:00 +0000</pubDate><atom:updated>2017-08-06T18:20:46.958+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">A Sheikh Dawood</category><category domain="http://www.blogger.com/atom/ns#">commitment</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind Tamil Nadu</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Sadatullah Husseini</category><category domain="http://www.blogger.com/atom/ns#">samarasam</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Trichirappalli</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்</category><title>இலட்சிய வீரர்களை வார்த்தெடுக்கின்ற தொழிற்சாலை நின்றுவிட்டதே..!</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTXN_Wt5JVGN2IpjGX6N9_VQnPUvjgkDzEeZz4LqZYBmBmsy1YRctqP1J66GLiCDgMz2NP5VntF9Z3fdWqAymJPLhE3gA-wQ0wV7PsaGngEx8V7NhNe0B_8X6a32JwrYIMn8XtvBB8-88/s1600/dawood.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; data-original-height=&quot;539&quot; data-original-width=&quot;376&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTXN_Wt5JVGN2IpjGX6N9_VQnPUvjgkDzEeZz4LqZYBmBmsy1YRctqP1J66GLiCDgMz2NP5VntF9Z3fdWqAymJPLhE3gA-wQ0wV7PsaGngEx8V7NhNe0B_8X6a32JwrYIMn8XtvBB8-88/s320/dawood.jpg&quot; width=&quot;223&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;&quot;&gt;அருமைச் சகோதரர் ஷேக் தாவூத் பாய் இறைவனிடம் மீண்டுவிட்டார் என்கிற செய்தி இன்று காலை (21 ஜூலை 2017) இடியாய் என்னைத் தாக்கியது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span style=&quot;background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;&quot;&gt;நான் இதனை இஸ்லாமிய இயக்கத்தின் மௌன உழைப்பாளிகளில் ஒருவரின் மரணமாக, அவ்வளவாகப் பேசப்பட&lt;/span&gt;&lt;span class=&quot;text_exposed_show&quot; style=&quot;background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;&quot;&gt;ாத அப்பழுக்கில்லாத, உளத்தூய்மை நிறைந்த செயல் வீரரின் மரணமாகப் பார்க்கவில்லை. அதற்கு மாறாக இஸ்லாமிய இயக்கத்துக்காக விலைமதிப்பு மிக்க இரத்தினங்களையும் வைரங்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்த தொழிற்சாலை ஒன்று இழுத்து மூடப்பட்டதாகவே பார்க்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் திருச்சி மாநகரில் வாழ்ந்து வந்தவர்தாம் ஷேக் தாவூத். அவர் மெத்தப் படித்த படிப்பாளி அல்லர். அலட்டிக் கொள்ளாத, ஆரவாரம் இல்லாத இயக்க ஊழியராகத்தான் அவர் இருந்தார். எஸ்.ஐ.ஓவிலிருந்து ஒய்வு பெற்ற போது அந்தச் சந்தர்ப்பத்தில் திருச்சியில் ஜமாஅத்தும் முழுமையாக நிறுவப்பட்டிருக்கவில்லை.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot; style=&quot;background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot; style=&quot;background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; line-height: 18px;&quot;&gt;இந்த நிலையில் திருச்சியில் மிகவும் பின்தங்கிய வறுமையும் ஏழ்மையும் நிறைந்த பகுதியில் அவர் தம்முடைய பணியைத் தொடங்கினார். குடிசைகளில் வசித்து வந்த, கைவண்டிகளில் வணிகம் செய்து வந்த ஏழை எளிய மக்களின் பிள்ளைகளை இலக்காக்கி பாலர் சங்கத்தை உருவாக்கி பணியாற்றத் தொடங்கினார், அவர். அந்தப் பிள்ளைகளிடம் அவர் எந்த அளவுக்கு அளப்பரிய பாசத்தையும் அன்பையும் கொட்டினார் எனில் அவர்கள் அவரின் அன்புக்கு அடிமை ஆகிவிட்டார்கள். ஷேக் சாகிபும் அந்தப் பிள்ளைகளின் கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்தார். கல்விச் செலவுகளை ஏற்றுக்கொண்டார். மேலும் மார்க்கக் கல்வியையும் விழிப்பு உணர்வையும்கக ஊட்டிவிட்டு அந்த இளவல்களின் இதயங்களில் இஸ்லாமிய உணர்வுகளை மீட்டெடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எஸ்.ஐ.ஓவின் அகில இந்தியத் தலைவராகப் பொறுப்பேற்ற போது திருச்சிக்கு முதல் முறையாகச் சென்றேன். அந்தச் சந்தர்ப்பத்தில் திருச்சியில் ஷேக் சாகிப் நடத்தி வந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்டேன். ஏட்டறிவோ, பட்டறிவோ இல்லாத ஏழை பெற்றோரின் பிள்ளைகள் - அவருடைய சீடர்கள் - அப்போது முதுகலைப் பட்டப் படிப்பும், பொறியியலும் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் திருச்சி எஸ்.ஐ.ஓவை வெற்றிச் சிகரங்களில் ஏற்றி அமர்த்தி விட்டிருந்தார்கள். அவர்கள் அப்போது அங்கு செய்து வந்த பணிகளைப் பார்த்து விட்டு தில்லி திரும்பிய நான் ரஃபீக் மன்ஜில் இதழில் ‘இந்தியத் திருநாட்டின் முன்மாதிரி கிளையாக திருச்சி கிளை’ என்கிற தலைப்பில் அனைத்தையும் விரிவாக எழுதினேன். (இதன் மொழிபெயர்ப்பு சமரசத்திலும் வெளியானது).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;இன்றைய நிலைமை என்னவெனில் ஷேக் தாவூத் பாயின் அந்தத் தொழிற்சாலையிலிருந்து ஒரு டஜனுக்கும் அதிகமான பிஹெச்டி பட்டம் பெற்ற முனைவர்கள் வெளியாகிவிட்டிருக்கின்றார்&lt;/span&gt;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;span class=&quot;word_break&quot; style=&quot;display: inline-block; font-family: inherit;&quot;&gt;&lt;/span&gt;கள். முதுகலைப் பட்டதாரிகள், பொறியியல் வல்லுநர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்வதும் சிரமமே. இவர்கள் அனைவருமே முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். இவர்களில் சிலர் அமெரிக்கா, அய்ரோப்பா போன்றவற்றின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பும் படித்து முடித்திருக்கின்றார்கள். எல்லோருமே தத்தமது இடங்களில் இஸ்லாமிய இயக்கத்தின் முதன்மை இலட்சியப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியவாறு சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style=&quot;font-family: inherit;&quot;&gt;ஒரு சாமானியராகத் தோற்றம் தருகின்ற இந்த ஒற்றை மனிதரின் தொலைநோக்கும் உயிரைக் கொடுத்துப் பணியாற்றும் வித்தையும் இன்று எத்தகைய அற்புதத்தை நிகழ்த்தி இருக்கின்றது எனில், இன்று இஸ்லாமிய இயக்க வானில் ஒளி வீசுகின்ற தாரகைகளைக் கொண்ட ஒரு நட்சத்திர மண்டலத்தையே தவழ விட்டு சாதனை படைத்திருக்கின்றார், அவர். இன்னும் எத்தனையெத்தனை ஏழை, எளிய குடும்பங்களின் சித்திரத்தை அவர் மாற்றியமைத்துவிட்டிருக்கின&lt;/span&gt;&lt;wbr&gt;&lt;/wbr&gt;&lt;span class=&quot;word_break&quot; style=&quot;display: inline-block; font-family: inherit;&quot;&gt;&lt;/span&gt;்றார் என்பதை எளிதாகச் சொல்லி விட முடியாது. சமூகச் சூழல்கள் எப்படி மாறுகின்றன, ஏழ்மையிலிருந்தும் அறியாமையிலிருந்தும் மீண்டெழுந்து வளர்ச்சிப் பாதையில் குடும்பங்கள் எப்படி பயணிக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டுமா, திருச்சிராப்பள்ளியின் அந்தப் பின்தங்கிய முஹல்லாவுக்குச் சென்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவொரு மக்தபின் (பயிற்சிப் பாசறையின்) ஆசானும் உண்மையில் மனித ஆன்மாக்களைப் பண்படுத்தி வார்த்தெடுக்கின்ற தொழிற்சாலையாகத்தான் இருப்பார். இவ்வாறு மனித ஆன்மாக்களைப் பண்படுத்தி வார்த்தெடுக்கின்ற அழகான தொழிற்சாலையை நான் என்னுடைய வாழ்நாளில் ஷேக் பாயின் எளிமையும் இனிமையும் நிறைந்த அமர்வுகளில் கண்கூடாகப் பார்த்தேன். அவருடைய அவையும் அமர்வுகளும் எந்நேரமும் மாணவர்களாலும் இலட்சியக் கனலுடன் இயங்குகின்ற இளைஞர்களாலும்தாம் நிறைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் வல்ல இறைவன் ஷேக் பாயின் சேவைகளை ஏற்றுக்கொள்வானாக! டாக்டர் அஜீஸ், டாக்டர் இப்ராஹீம் மற்றும் அவர்களைப் போன்ற பிற சகோதரர்கள் ஆற்றுகின்ற சேவைகளை ஷேக் பாயின் கணக்கில் ஸதகாயே ஜாரியாவாக - நிலையாக நன்மைகளைத் தந்துகொண்டே இருப்பவையாய் ஆக்குவானாக!&lt;br /&gt;&lt;br /&gt;ஆமீன்.&lt;br /&gt;&lt;br /&gt;- சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி&lt;br /&gt;துணைத் தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.&lt;/span&gt;&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2017/08/blog-post.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTXN_Wt5JVGN2IpjGX6N9_VQnPUvjgkDzEeZz4LqZYBmBmsy1YRctqP1J66GLiCDgMz2NP5VntF9Z3fdWqAymJPLhE3gA-wQ0wV7PsaGngEx8V7NhNe0B_8X6a32JwrYIMn8XtvBB8-88/s72-c/dawood.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-496112207546084180</guid><pubDate>Sat, 23 Jan 2016 06:23:00 +0000</pubDate><atom:updated>2016-01-23T12:33:41.061+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">India</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Islamic Movement</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Moulana Syed Abul A&#39;la Moududi</category><title>சாதிய அமைப்பு குறித்து மௌலானா மௌதூதி(ரஹ்)</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLydPi7-MvTdtc2c6vP1EcnJO0ud-iNq6MorXG4NTpxcDAlnmMnJMyzVDtPYOR6gw790Knuqy9HxXknVL7Q4bxDDq6lBLVUIJ2UoKmnF8Q8J-R5vCbsUaXRIDQ5V77y9xYqSck25Pfr88/s1600/Sayyid-Abul-Ala-Al-Mawdodi.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLydPi7-MvTdtc2c6vP1EcnJO0ud-iNq6MorXG4NTpxcDAlnmMnJMyzVDtPYOR6gw790Knuqy9HxXknVL7Q4bxDDq6lBLVUIJ2UoKmnF8Q8J-R5vCbsUaXRIDQ5V77y9xYqSck25Pfr88/s320/Sayyid-Abul-Ala-Al-Mawdodi.jpg&quot; width=&quot;226&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியாவின் இன்றைய சமூகக் கட்டமைப்பு எண்ணற்ற அடுக்குகளைக் கொண்டதாய்க் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சமூக அடுக்குகளும் எத்தகையதாய் அடுக்கப்பட்டிருக்கின்றனவெனில் இவற்றில் சில சமூகக் குழுக்கள் மேலோங்கி நிற்கின்றனர். வேறு சில சமூகக் குழுக்களோ அவர்களுக்கு அடங்கியவர்களாய் இருக்கின்றனர். இந்த சமூகப் பிரிவுகளுக்கு இடையில் பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு நிறுவனமயமாக்கப்பட்டிருக்கின்றது. பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு பற்றிய இந்தக் கருத்தோட்டம் மிக மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கும் மேலாக ‘மறுபிறப்பு’ பற்றிய தத்துவம் இந்த நம்பிக்கையை இன்னும் அதிகமாக வலுவூட்டியிருக்கின்றது. சமூகக் கட்டமைப்பில் கீழ் அடுக்குகளில் முடக்கப்பட்டவர்களிடம் ‘தாம் அடங்கியிருப்பதற்கே படைக்கப்பட்டவர்கள்; முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளின் தவிர்க்க முடியாத விளைவுதான் இது; எனவே இதனை எந்த நிலையிலும் சகித்துக்கொண்டே ஆக வேண்டும்; இந்த நிலையை மாற்றிவிட முயல்வது வீண்’ என்கிற அடிமை சிந்தனை ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆதிக்க சமுதாயத்தரிடமோ, ‘தாம் பிறந்ததே இந்த அடிமைகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகத்தாம். உயர்வும், சிறப்பும் தமக்கு மட்டுமே உரித்தானவை. முந்தைய பிறவியில் தாம் செய்த நற்கருமங்களின் காரணத்தினால்தான் தங்களுக்கு இந்தச் சிறப்பும் உயர்வும் கிடைத்திருக்கின்றன; இவற்றை மாற்றவோ, திருத்தவோ முற்படுவது இறைச்சட்டங்களுக்கு எதிரானது ஆகும்’ என்கிற நம்பிக்கை அழுத்தமாகப் பதியப்பட்டிருக்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறாக, இந்த சமூகக் கட்டமைப்பில் உயர் அடுக்கில் இருக்கின்ற ஒவ்வொரு சமூகத்தாரும் கீழ் அடுக்கில் இருக்கின்ற சமூகத்தாரின் தலைமீது கால் வைத்தவாறு நின்றுக்கொண்டும் அதனைத் தேய்த்து நசுக்கிக் கொண்டும் இருக்கின்றார்கள். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பற்றிய இந்தச் சிந்தனையும் பாகுபாடுகளும் சமூகத்தின் அனைத்து பரிமாணங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. கால் வைக்கின்ற இடங்களில் எல்லாம் அநீதியும் அக்கிரமும் கணக்குவழக்கின்றிக் காணப்படுகின்றன. நாகரிகத்தின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளிலும்கூட ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. உணவு உண்ணும் போதும் சரி, நீர் அருந்தும்போதும் சரி, நடையுடை பாவனைகளிலும் சரி, திருமணம், மரணம் போன்ற சுகதுக்கத்துக்கான சந்தர்ப்பங்களிலும் சரி அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் இந்தப் பாகுபாடுகள் நிறைந்திருக்கின்றன. அதற்கும் மேலாக இந்தப் பாகுபாட்டின் அடிப்படையில் பிறரை இழிவுபடுத்துகின்ற, கேவலமாகக் கருதுகின்ற போக்கும் நிலை பெற்று விட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இழிவான போக்கு எந்த அளவுக்கு முற்றிப் போய் விட்டிருக்கின்றது எனில் தாம் உடுத்துவதைப் போன்ற ஆடைகளையும், தாம் அணிவதைப் போன்ற அணிகலன்களையும் தாழ்ந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் உடுத்துவதையோ, அணிவதையோ உயர் அடுக்கில் இருக்கின்ற சமுதாயத்தாரால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. சில நாள்களுக்கு முன்பு இராஜஸ்தானில் இதனைக் கண்கூடாகப் பார்த்தோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கு சம்மார் என்கிற கீழ்சாதியைச் சேர்ந்த மக்கள் போர் காரணமாக பணம் படைத்தவர்களாய் ஆகிவிட்டனர். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று பொருளீட்டி வந்துவிட்டிருந்தனர். இந்தச் செழிப்பான மக்கள் தங்களின் பெண்களுக்கு ஆடைகளையும் அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்த்தனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இது ஜாட்களையும்(Jats) குஜ்ஜார்களையும்(Gujjars)  உசுப்பிவிட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எங்களுடைய பெண்கள் அணிவதைப் போன்ற ஆடைகளையும் அணிகலன்களையும் இந்த சம்மார்கள் எப்படி தங்களின் பெண்களுக்கு அணிவிக்கலாம் என்று கொதித்தெழுந்து பெரும் ஆர்ப்பாட்டங்களைச் செய்துவிட்டார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தனைக்கும் இந்தக் குஜ்ஜார்களையும் ஜாட்களையும் இராஜ்புத்கள் என்கிற உயர் சாதியினர் இந்தக் காரணத்தைச் சொல்லியே கேவலப்படுத்தி வந்தார்கள் என்பது தனிக் கதை. &lt;br /&gt;
&lt;br /&gt;
இராஜ்புத்களின் நடத்தை தருகின்ற கசப்பை அனுபவித்து வந்த நிலையிலும் இந்தக் குஜ்ஜார்களும் ஜாட்களும் சம்மார்களுடன் அதே போன்று நடந்துக்கொண்டார்கள். சமூகப் படிநிலைகளில் எங்களுக்கு இணையாக இந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி வந்து அமர்ந்து விடலாம் என இவர்கள் ஆத்திரப்பட்டார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறாக, எந்த இழிநிலையிலிருந்து மேலே எழுந்துவிட அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பினார்களோ அதே இழிநிலையில் மீண்டும் அவர்களைத் தள்ளிவிடவே இவர்கள் ஒன்றுசேர்ந்து ஓங்கிக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
பொருளாதாரக் கட்டமைப்பும் பெரும் அளவில் மேற்படி சமூகக் கட்டமைப்பின் வரிசைமுறையில்தான் நிறுவப்பட்டிருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் அந்தச் சமூகக் கட்டமைப்பின் கொடூரமான அம்சங்களைக் கூர்மைப்படுத்துவதும் விதத்தில்தாம் நவீன முதலாளித்துவத்தின் தனித்தன்மைகள் கூட்டுச் சேர்ந்துவிட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொன்மையான சித்தாந்தங்கள், மெய்யியல் பேசும் தத்துவங்கள் ஆகியவற்றின் துணையுடன் எந்தச் சமூகக் குழுக்கள் சமூகப் படிநிலைகளின் மேல் அடுக்குகளில் நிலையாகக் குடியமர்ந்து விட்டிருந்தனவோ அவர்கள் நாட்டின் நாகரிக வாழ்வில் உயர்ந்த சிறப்பிடங்களையும் மேன்மையையும் தமதாக்கியவாறு தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதோடு நின்றுவிடவில்லை. அதற்கும் மேலாக, அதனுடன் நாட்டின் செல்வ வளங்கள், வசதி வாய்ப்புகள் ஆகியவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றைத் தமதாக்கிக் கொண்டார்கள்; சமூகப் படிநிலைகளின் கீழ் அடுக்குகளில் இருப்பவர்களையோ மேல் அடுக்குகளில் இருக்கின்ற மக்களுக்குத் தொண்டூழியம் செய்தும் கூலி வேலை செய்தும் பிழைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற கேவலமான நிலைமையில் தள்ளிவிட்டார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏதிலிகள், பாட்டாளிகள் போன்றோர் மீது இழைக்கப்படுகின்ற அநியாயங்கள், அக்கிரமங்கள், உரிமைப் பறிப்புகள் போன்றவற்றைக் கணக்கிடுவதும் சிரமமானதே. அது மட்டுமல்ல மேல் அடுக்குகளில் வாழ்கின்ற மக்கள் தம்முடைய வட்டத்திற்குள்ளும் பல்வேறு விதமான அக்கிரங்களிலும் உரிமைப்பறிப்புகளிலும் கொடுமைகளிலும் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக செல்வச்செழிப்புமிக்கவர்களின் எண்ணிக்கை சுருங்கிக்கொண்டே போக, செல்வவளம் இல்லாமல் மோசமான நிலையில் வாழ்வை ஓட்டுகின்ற எளியவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போயிற்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் சொல்லப்போனால் இவர்களிடம் நடைமுறையில் இருந்த வட்டிப் பணத்தை உண்ணுகின்ற பழக்கமும், குடும்பச் சொத்துகளைக் கூட்டாக நிர்வகிக்கின்ற கூட்டுக் குடும்ப வழிமுறையும் (Joint Family System) மூத்த மகனயே ஒட்டுமொத்த சொத்துக்கும் ஒரே வாரிசாக அறிவிக்கின்ற தலைப்பிள்ளைக்கான வாரிசு சட்டமும்(Law of Primogeniture) இன்னும் இவை போன்ற எண்ணற்ற பழக்கவழக்கங்களும் செல்வத்தையும் செல்வத்தை உண்டுபண்ணுகின்ற வழிவகைகளையும் ஒரு சிலரிடம் குவித்துவிடுபவையாயும், பெரும்பாலான மக்களுக்கு எத்தகைய வழிவகையையும் அளிக்காமல் தடுத்து மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைமைக்கு அவர்களைத் தள்ளிவிடுபவையாயும் இருக்கின்றன. இந்த நடைமுறைகளின் பயனாக எந்த மக்களிடம் செல்வவளம் குவிந்திருந்ததோ அவர்கள் இப்போது நவீன முதலாளித்துவ வழிமுறைகளை மேற்கொண்டு நாட்டின் தொழில், வணிகம், பொருளாதாரம் ஆகிய அனைத்தின் மீதும் தம்முடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டார்கள்; அந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்போது கட்டமைக்கப்படுகின்ற அரசியல் அமைப்பின் அடிப்படையான ஆவணத்தில் மக்களாட்சி, சமூக நீதி(Social Justice), சமத்துவம், எல்லாத் தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகள்&amp;nbsp; (Equal Opportunities) போன்ற வானளாவியக் கருத்தோட்டங்கள் இம்மியளவுகூட அழுக்கு படியாத, மாசற்ற, மனத்தை மயக்குகின்ற சொற்களில் ஏட்டளவில் எழுதப்பட்டு வருகின்றன. இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இந்தக் கருத்தோட்டங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தப்படும்போதுதான் இவற்றுக்கு மதிப்பே தவிர, இந்த வெற்று வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது வெளிப்படை. &lt;br /&gt;
&lt;br /&gt;
நடைமுறை வாழ்வில் நாம் அன்றாடம் பார்ப்பது என்ன? &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அரசியல் அமைப்பை உருவாக்குதல், வடிவமைத்தல், கட்டமைத்தல், நடைமுறைப்படுத்தல் ஆகிய அனைத்துப் பணிகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது யார்? &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றைய சமூக, பொருளாதாரக் கட்டமைப்பில் உயர்வான படிக்கட்டுகளில் வீற்றிருக்கின்ற - இல்லை பிறந்திருக்கின்ற சமூகக் குழுவினர்தாம் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இறைவன் இந்த சமூகக் குழுவினருக்கு அனைத்தையும் கொடுத்திருக்கின்றான். ஆனால் பெரிய மனத்தையும், விரிந்த பார்வையையும், அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற தீரத்தையும் ஏனோ இவர்களுக்குத் தரவே இல்லை. இவர்களின் குறுகிய மனப்பான்மை இன்று வரையிலும் இந்தியாவுக்கு மிகப் பெரும் இழப்புகளையே தந்து வந்துள்ளது. இவர்களின் இந்த வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கின்ற போது இவர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்காகப் பயன்படுத்துவார்கள் என எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, கசப்பு உணர்வும் கொடுமைக்காளான வலிகளும் நிறைந்ததாய்த்தான் இன்றைய இந்த நிலைமைகள் இருக்கின்றன. இந்த வலியையும் துன்பத்தையும் நாட்டின் சாமான்ய மனிதர்கள் மிகக் கடுமையாக உணர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது வரை இனவாத போதை இந்தக் கசப்புணர்வை பெரும் அளவில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. நாட்டின் நிர்வாகம் நம்முடைய கைகளில் வந்துவிடுமேயானால் இந்த அநீதிகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கையில்தான் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலையில் நாட்டின் ஆட்சியதிகாரம் உண்மையிலேயே நாட்டு மக்கள் வசம் மாற்றப்படுகின்ற போது அந்த அதிகாரங்களைக் கொண்டு நாட்டில் சமூக நீதி உண்மையிலேயே நிலைநிறுத்துகின்ற பணியை மேற்கொள்வது எப்படி என்கிற அடிப்படைக் கேள்வி பேருருவம் எடுப்பதை நீண்டக்காலத்திற்குத் தள்ளிப் போட முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற கடிவாளங்கள் இன்று எந்த மக்களிடம் கைமாறிக்கொண்டிருக்கின்றனவோ அவர்கள் இந்துக் கலாச்சாரத்தின் முந்தையப் பாரம்பர்யங்களை மேற்கத்திய, அய்ரோப்பிய, அமெரிக்க வாழ்க்கை முறையுடன் கோத்துவிடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. என்னுடைய கணிப்பு சரியாக இருக்குமேயானால் இவர்கள் ஒரு வகையான போலி மக்களாட்சியையும், ஒரு மேம்போக்கான சமத்துவத்தையும், நீதியை நிலைநாட்டுவது போன்ற மாயத் தோற்றத்தையும் நிலைநிறுத்துவதில் திண்ணமாக வெற்றி பெற்றுவிடுவார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் அந்தப் போலியான தோற்றங்களுக்குப் பின்னால் வழக்கம்போல அதே அநீதிகளும், அதே வஞ்சகங்களும், அதே பாகுபாடுகளும், அதே பிரிவுகளும் இன்று இருக்கின்ற அதே சூட்டுடனும் தகிப்புடனும் நிலைத்து நிற்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏனெனில் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கின்ற போக்கும், சமூகப் பாகுபாடுகளும் இந்துக் கலாச்சாரத்தின் இரத்த நாளங்களில் ஊறிப் போய்க் கிடக்கின்றவை ஆகும். அவை இரத்தத்தில் கலந்திருக்கின்ற நிலையில் உண்மையான மக்களாட்சியை நிலைநிறுத்துவது இயலாத காரியம் ஆகும். அதனுடன் மேற்கத்திய சித்தாந்தங்களைக் கோத்துவிடுவதால் மிதமிஞ்சி என்ன கிடைத்துவிடப் போகின்றது? மேல்தட்டு மக்களின் ஆதிக்கத்துக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் தேர்தல்கள் மூலமாகவும் அவற்றில் பெறப்படுகின்ற வாக்குகள் மூலமாகவும் சட்டரீதியான அங்கீகாரமும் அதிகாரப்பூர்வமான அனுமதியும்தாம் கிடைத்துவிடும் என்பதைத் தவிர வேறு எந்தப் பயனும் கிடைத்துவிடப் போவதில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதனால்தான் இவர்களின் இந்தச் செயல்பாடுகளின் விளைவாக இந்தியாவின் சாமான்ய மக்கள் சொற்பக் காலத்திலேயே நிராசைக்கும் விரக்திக்கும் ஆளாகிவிடுவார்கள் என்பது உறுதி. இந்த ஆளும் வர்க்கத்தினரால் நீதியை நிலைநாட்ட முடியாமல் போகும்போது விவசாயிகள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், மேல்தட்டு மக்களிலேயே வறிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என ஒட்டுமொத்த இந்திய சாமான்ய மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் நீதமிக்க மாற்று அமைப்புக்காக ஏங்கத் தொடங்கிவிடுவார்கள்; அதற்கான தேடலில் இறங்கிவிடுவார்கள். அந்த நிலை வருவதற்கு நீண்ட நேரமும் பிடிக்காது. &lt;br /&gt;
&lt;br /&gt;
- 26, ஏப்ரல், 1947 சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் தென்னிந்திய மாநாட்டில் அமீரே ஜமாஅத் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையிலிருந்து...&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2016/01/blog-post_23.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLydPi7-MvTdtc2c6vP1EcnJO0ud-iNq6MorXG4NTpxcDAlnmMnJMyzVDtPYOR6gw790Knuqy9HxXknVL7Q4bxDDq6lBLVUIJ2UoKmnF8Q8J-R5vCbsUaXRIDQ5V77y9xYqSck25Pfr88/s72-c/Sayyid-Abul-Ala-Al-Mawdodi.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-8839770335551630609</guid><pubDate>Thu, 21 Jan 2016 08:39:00 +0000</pubDate><atom:updated>2016-01-21T14:09:02.248+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">India</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Issues and Ideas</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே!</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUdRLtcvl6fQdwDbudUzKct8Od326n7shfmHN0ClrbCKcjGJAG2ToqbS28yDw2Ajq3d6eXYa05JLv6zJXP0RAGo5f246UOGOmE9kK4O_cx2pThMyz7py2uvLOcgEVXONFvI8HQgzdBeCw/s1600/Rohit3.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;199&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUdRLtcvl6fQdwDbudUzKct8Od326n7shfmHN0ClrbCKcjGJAG2ToqbS28yDw2Ajq3d6eXYa05JLv6zJXP0RAGo5f246UOGOmE9kK4O_cx2pThMyz7py2uvLOcgEVXONFvI8HQgzdBeCw/s320/Rohit3.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்புள்ள ரோஹித்..!&lt;br /&gt;
&lt;br /&gt;

 அந்த இருள் சூழ்ந்த இரவில் நீ உன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டு உன்னுடைய
 வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ‘உயிரைக் குடிக்கின்ற விபத்தைப்’ (a 
fatal accident) போன்ற உன்னுடைய வாழ்வை முடித்துக்கொண்ட போது மனுவும் 
அவனுடைய அடிபொடிகளும் அரை டிரவுஸர்களும் கெக்கலித்துக் கைகொட்டி 
மகிழ்ந்திருப்பார்கள். &lt;br /&gt;
 ஆனாலும், என் சகோதரனே கவலைப்படாதே!&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;a class=&quot;profileLink&quot; data-hovercard=&quot;/ajax/hovercard/user.php?id=1249480016&quot; href=&quot;https://www.facebook.com/azeez.luthfullah&quot;&gt;Azeez Luthfullah&lt;/a&gt; அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் என்கிற இந்திய முஸ்லிமாகிய நான் உறுதியளிக்கின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;

 பிறப்பின் அடிப்படையில் மக்களைக் கூறு போட்டு கேவலப்படுத்துகின்ற கொடுமை
 இனி இந்த மண்ணில் அரங்கேறாது..!&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவுக்குச் சற்றும் பொருந்தாத, 
காட்டுமிராண்டித்தனமான அந்த நம்பிக்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் இனி இந்த 
மண்ணில் இடம் இருக்காது!&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே! &lt;/b&gt;நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று குமுறிக் கேட்கும்.&lt;b&gt; ஏன்?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt; சாதியின் அடிப்படையில் இந்திய இளைஞன் ஏன் ஒதுக்கப்பட வேண்டும்? ஏன்? ஏன்?&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே! &lt;/b&gt;நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று உரத்துக் கேட்கும். &lt;b&gt;எது?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
 இரத்தமும் சதையுமாக ஒரே மாதிரியாகப் பிறக்கின்ற மனிதர்களை உயர்சாதி 
என்றும் கீழ்சாதி என்றும் வெவ்வேறு அடுக்குகளில் அமர்த்தி பக்கச்சார்புடன் 
நடப்பதற்கு அங்கீகாரம் அளிக்கின்ற மதம் எது? மனிதர்களைப் பிரிக்கின்ற 
அந்தக் கலாச்சாரம் எது? மனிதர்களை இழிவாகப் பார்க்கின்ற அந்த சித்தாந்தம் 
எது?&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே!&lt;/b&gt; நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று ஆர்ப்பரித்துக் கேட்கும். &lt;b&gt;எங்கே?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
 இந்தியர்களாகப் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையும் சமமான 
வாய்ப்பும் தரப்படும் என்கிற அரசியல் அமைப்புச் சட்டத்தின் உத்தரவாதம் 
எங்கே? எங்கே?&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே!&lt;/b&gt; நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று கதறிக் கேட்கும். &lt;b&gt;எப்படி?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
 நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டிய ஜனநாயகத் தூண்களே 
சாதி, மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பக்கச்சார்புடன் நடந்துக் 
கொள்ளத் தொடங்கியது &lt;b&gt;எப்படி? எப்படி?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே!&lt;/b&gt; நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று நிமிர்ந்துக் கேட்கும். &lt;b&gt;யார்?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
 பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைக் கூறு போட்டு உயர்ந்த சாதி என்றும் 
தாழ்ந்த சாதி என்றும் வகைப்படுத்துகின்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி 
வைப்பது யார்? கீழ்வெண்மணியிலிருந்து ஹைதராபாத் வரை தொடர்கின்ற இந்த 
அவலங்களைத் தடுத்து நிறுத்துவது&lt;b&gt; யார்? யார்?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே!&lt;/b&gt; நான் மட்டுமல்ல, இந்த தேசமே எழுந்து நின்று ஆசையுடன் கேட்கும். &lt;b&gt;எப்போது?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
 அன்பு, இணக்கம், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், சமூக நீதி, 
பாரபட்சமற்ற நீதி ஆகியவற்றின் அடிப்படையில் தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற 
கனவை நனவாக்குவது&lt;b&gt; எப்போது? எப்போது?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;கவலைப்படாதே, ரோஹித், என் சகோதரனே!&lt;/b&gt; இந்தத் தேசம் மனுவுக்கும் அவனுடைய அடிபொடிகளுக்கும்  சொந்தமானது அல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
 நம்முடைய தேசச் சிற்பிகள் அப்படி சொன்னதே இல்லை. நம்முடைய தேசத் தந்தை அதனை எந்த நாளிலும் ஏற்றுக்கொண்டதே இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;

 இந்தத் தேசம் நம்முடையது. - உன்னுடையது. என்னுடையது. இந்த நாட்டில் பிறந்த
 ஒவ்வொரு இந்துவுக்கும் முஸ்லிமுக்கும் கிறித்துவருக்கும் தலித்துக்கும் 
சீக்கியருக்கும் ஜெயினுக்கும், மார்வாடிக்கும் நாத்திகருக்கும் இந்த 
மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
 இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிளவுபடுத்துகின்ற ஈனர்களுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;

 தலித்கள் என்றும் பிராமணர்கள் என்றும் இந்த சாதி என்றும் அந்த சாதி 
என்றும் கூறு போட்டு பார்க்கின்ற அற்பர்களுக்கு இந்த நாட்டில் இடம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;இது எங்களுடைய தேசம்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
 இதனை தீயவர்களிடம் பறிகொடுக்க மாட்டோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;b&gt;டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்&lt;/b&gt;&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2016/01/blog-post_21.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUdRLtcvl6fQdwDbudUzKct8Od326n7shfmHN0ClrbCKcjGJAG2ToqbS28yDw2Ajq3d6eXYa05JLv6zJXP0RAGo5f246UOGOmE9kK4O_cx2pThMyz7py2uvLOcgEVXONFvI8HQgzdBeCw/s72-c/Rohit3.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-803074561970722559</guid><pubDate>Thu, 14 Jan 2016 09:02:00 +0000</pubDate><atom:updated>2016-01-14T14:34:27.993+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Islamic Movement</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Sadat Husaini</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Sadatullah Husseini</category><category domain="http://www.blogger.com/atom/ns#">ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்</category><title> மாறி வரும் உலக நிலைமைகளும் இஸ்லாமிய இயக்கமும்</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfAnI-097gOQAvAv-7txeF4DQycfgUDY29OL7YtYAgXD1B6hw9k_qz1gWgFicU35nzh6wZMBImEr61lCv-4eL9nKzmJigchNoJHIqLjikDJ3Oma2mtQZi4q-tHrLSfabD6ym-y4dbsDtg/s1600/Sadath-sb.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;211&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfAnI-097gOQAvAv-7txeF4DQycfgUDY29OL7YtYAgXD1B6hw9k_qz1gWgFicU35nzh6wZMBImEr61lCv-4eL9nKzmJigchNoJHIqLjikDJ3Oma2mtQZi4q-tHrLSfabD6ym-y4dbsDtg/s320/Sadath-sb.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
உலகெங்கும் முஸ்லிம்கள் அனைவரும் இப்போது தங்களுடைய வரலாற்றின் மிக மிகக் கடினமான காலகட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள்
 என்பதில் ஐயம் இல்லை. ஒரு சில நாடுகளைத் தவிர ஒட்டுமொத்த முஸ்லிம் 
உலகமும் அடிமைப்பட்டிருந்த அவலத்தையும் இந்த முஸ்லிம் உம்மத் இதற்கு முன்பு
 சந்தித்திருக்கின்றது. அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.&lt;br /&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;br /&gt;
என்றாலும்
 இன்று விடுதலை பெற்ற நாடுகளாகச் சொல்லிக் கொள்கின்ற நாடுகளில் 
வாழ்கின்றவர்களும் சரி, மற்ற நாடுகளில் வாழ்பவர்களானாலும் சரி, உலக 
முஸ்லிம்கள் எந்த அளவுக்கு அவமானத்துக்கும் கேவலத்துக்கும் ஆளாகி 
இருக்கின்றார்கள் எனில், உலகெங்கும் வாழ்கின்ற 150 கோடி முஸ்லிம்கள் தினம்
 தினம்&amp;nbsp; எந்த அளவுக்கு அவமானகரமான, கேவலமான, மனத்தை முள்ளாகத் தைக்கின்ற, 
கையாலாகாத தனத்தையும் இயலாமையையும் வெளிப்படுத்துகின்ற, நெஞ்சத்தை 
சுக்குநூறாக வெடிக்கச் செய்கின்ற செய்திகளுடன் கண் விழிக்கின்றார்கள் எனில்
 அதற்கு இணையான அவலத்துக்கும் கையறு நிலைக்கும் வரலாற்றில் இதற்கு முன்பு 
முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் சந்தித்தது கிடையாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒட்டுமொத்த 
முஸ்லிம் உலகமும் வல்லரசு நாடுகளின் சூழ்ச்சிகளுக்கும் சதிகளுக்கும் 
இரையாகி அவற்றின் விளையாட்டுக்களமாய் மாறி நிற்கின்றது. இஸ்லாமிய நாடுகளில்
 மனித இரத்தம் தண்ணீராய்ப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கின்றது. இஸ்லாமிய 
இயக்கங்களைப் பொருத்த வரை அவை தம்முடைய வரலாற்றில் மிக மிகக் கடுமையான 
எதிர்ப்பையும் முட்டுக்கட்டைகளையும் சந்தித்து நிற்கின்றன.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
ஒரு பக்கம் 
அவர்களுக்கு எதிராக வல்லரசு நாடுகள் அனைத்தும் அணி திரண்டிருக்கின்றன.&amp;nbsp; 
மறுபக்கம் பெயர்தாங்கி முஸ்லிம் நாடுகளும் அவர்களை நசுக்கி அழித்து 
விடுவதற்கு தம்முடைய முழு வலிமையையும் பிரயோகித்து வருகின்றன. அதற்கும் 
மேலாக, ஊடகம், இணையதளம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என எண்ணற்ற அமைப்புகள் 
ஏராளமான வடிவங்களில் அவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதிலும், 
பொதுமக்களிடமிருந்து அவர்களைத் தனிமைப்படுத்துகின்ற முயற்சியிலும் 
மும்முரமாக இயங்கி வருகின்றன. இஸ்லாமிய சிஸ்டத்தை மட்டுமா இவர்கள் குறி 
வைத்திருக்கின்றார்கள்? அதற்கும் மேலாக இஸ்லாத்தின் அடிப்படை மாண்புகள், 
கோட்பாடுகள், கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும் அவதூறு பிரச்சாரம் 
முடுக்கிவிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய நிலைமைகள் குறித்து இன்று இரண்டு
 கோணங்களில் ஆய்வு செய்யப் போகின்றோம். ஒன்று, இது போன்ற நிலைமைகள் 
உருவானதற்கான காரணங்கள் என்ன? இரண்டு, இவற்றிலிருந்து மீண்டு எழுவதற்கான, 
இவற்றை வெற்றிகொள்வதற்கான பாதை எது?&lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்களே! இன்றைய 
வல்லரசுகளின் பார்வையில் இஸ்லாமிய நாடுகள் அசாதாரணமான முக்கியத்துவத்தைப் 
பெற்று இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த அளவுக்கு 
முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு நான்கு பெரும் காரணங்களைச் சொல்லலாம். 
1. மத்திய கிழக்கின் எண்ணெய் வளம். 2. இஸ்ரேலின் இருப்பும், அதன் 
பாதுகாப்பும். 3. புவியியல் ரீதியாக மையத்தில் இருப்பதால் இந்தப் 
பகுதிகளுக்கு இருக்கின்ற முக்கியத்துவம் 4. உலக முஸ்லிம்களின் மையமாக 
இந்தப் பிரதேசம் இருப்பது. &lt;br /&gt;
இந்த நான்குமே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நலன்கள் ஆழமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
அய்ரோப்பா
 மிக வேகமாக முதுமை அடைந்து வருகின்றது. இன்று அய்ரோப்பிய நாடுகளில் 
ஐவரில் ஒருவர் 65 வயதைக் கடந்தவராக இருக்கின்றார். அய்ரோப்பாவின் 
பொருளாதாரத்துக்கோ இளஇரத்தம் தேவைப்படுகிறது. இந்த இளைய சக்தி அதற்கு 
இஸ்லாமிய நாடுகளிடமிருந்துதான் கிடைக்கும். ஆனால், இந்த இஸ்லாமிய இளைய 
தலைமுறையினருடன் இஸ்லாமும் வந்து விடுமே என்கிற அச்சுறுத்தல் வேறு. இதனால் 
அய்ரோப்பா பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. பொருõளாதாரச் செயல்பாடுகளைத் 
தக்க வைப்பதற்காக அவர்களுக்கு உழைக்கும் கரங்கள் தேவை. இதனால் அவர்களால் 
குடியேற்றத்தைத் தடுக்க முடியாது. ஆனால் இஸ்லாம் வந்து விடுமே என்கிற 
அச்சமோ அந்தக் குடியேற்றங்களை ஊக்குவிப்பதை விட்டு அவர்களைத் 
தடுக்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக ஒரு பக்கம் 
இளைஞர்களின் வருகையையும் குடியேற்றத்தையும் தொடர அனுமதித்தாலும் அந்த 
இளைஞர்களால் அய்ரோப்பிய மண்ணில் இஸ்லாமிய வாசம் வீசுவதைத் 
தடுத்துவிடுகின்ற வகையில் கொள்கைகளையும் சட்டங்களையும் வகுக்கின்ற 
குறுக்கு வழியை அய்ரோப்பியர்கள் கண்டுபிடித்தனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு 
இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பொருõளாதாரம் 
மிக வேகமாக முழுக்க முழுக்க சீனாவின் கடன்களைச் சார்ந்ததாய் ஆகிவருகின்றது.
 இந்தப் பொருளாதார அடிமைநிலையை முறிக்கின்ற ஒரே வழி சீனாவின் 
பொருளாதாரத்தையும் அமெரிக்காவைச் சார்ந்ததாய் ஆக்குவதுதான். இந்த 
நோக்கத்தை அடைய வேண்டுமெனில் ஒரு பக்கம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்கள்
 மற்றும் எண்ணெய்ப் பொருள்கள் செல்கின்ற பாதைகள் அனைத்தும் முழுக்க 
முழுக்க அமெரிக்கக் கட்டுப்பாட்டில் வந்து விட வேண்டும். மறுபக்கம் சீனப் 
பண்டங்கள், தயாரிப்புப் பொருள்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகமாக 
இருக்கின்ற நெடுஞ்சாலைகள், நீர்ப் பாதைகள் - இவற்றில் பெரும்பாலானவை 
மத்தியக் கிழக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளில்தாம் இருக்கின்றன - 
அனைத்தும்கூட அமெரிக்காவின் ஏகபோகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட 
வேண்டும். போதாக் குறைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பிற்கும் மத்திய கிழக்கின் 
மீது அமெரிக்காவின் ஆதிக்கம் நிலைபெறுவது அவசியம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை போன்ற
 ஏராளமான காரணங்களைக் கருத்தில் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளிலும் 
இஸ்லாமிய நாடுகளிலும் டாலரைக் கொண்டு விலைக்கு வாங்க முடியாத மனிதர்கள் 
ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்றும் அதிகாரக் கேந்திரங்களைக் 
கைப்பற்றிவிடக் கூடாது என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.&amp;nbsp; அதே சமயம் மாறி 
வரும் உலகச் சூழல்களால் இந்த வட்டாரத்தைத் தம்முடையக் கட்டுப்பாட்டுக்குள் 
வைத்திருப்பதும் குறிப்பாக மத்தியக் கிழக்கின் பெரும் பெரும் நாடுகளைத் 
தம்முடைய ஆளுகைக்குள் வைத்திருப்பதும் அவர்களுக்குப் பெரும் பாடாகி 
வருகின்றது. இந்த நிலையில் இதற்கு முன், முதல் உலகப் போருக்குப் பிறகு 
ஏகாதிபத்திய சக்திகள் தமது நலன்களைத் தக்க வைத்துக்கொள்கின்ற 
நோக்கத்துடன் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு வட்டாரத்திற்குள்ளும் குறுக்கும்
 öடுக்குமாகக் கோடுகள் கிழித்து வரைபடத்தையே மாற்றி அமைத்ததைப் போன்று 
இப்போது மீண்டும் நாடுகளையும் நாடுகளின் வரைபடங்களையும் மாற்றியமைக்க 
வேண்டிய தேவை வந்துவிட்டதாக அவர்கள் கணக்குப் போடுகின்றார்கள். அவர்களின் 
இந்தத் திட்டம் நிறைவேற வேண்டுமெனில் இந்த வட்டாரம் முழுவதிலும் மிகப் 
பெரும் அளவில் இரத்தக் களரியும் சமூகக் கொந்தளிப்பும் உள்நாட்டுப் போரும்
 வெடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கணக்குப் போட்டுள்ளார்கள். இது போன்ற 
மனித அவலம் அரங்கேறுவதை அவர்கள் constructive chaos ஆக்கப்பூர்வமான 
குழப்பம் என்றும் பெயர் சூட்டியிருக்கின்றார்கள். இவ்வாறாக constructive 
chaos&amp;nbsp; என்கிற இந்தக் கொள்கையின் அடிப்படையில் மத்தியக் கிழக்கு நாடுகளில்
 மிக மிகக் கடுமையான அளவில் இரத்தக்களரியும் குழப்பமும் கலவரமும் வெடிக்க 
வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அரசியல், 
பொருளாதாரக் கணக்குகள், காரணங்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் ஒரு 
பக்கம் இருந்தாலும், மத்தியக் கிழக்கில் இந்த ஏகாதிபத்தியச் சக்திகளின் 
தலையீட்டுக்கான உண்மையான காரணம் இஸ்லாம்தான். இந்த இப்லீசிய - ஷைத்தானிய 
சக்திகள் அனைத்தும் தமக்கு எதிரான மிகப் பெரும் சக்தியாக இஸ்லாத்தைக் 
கண்டுதான் வெலவெலத்துப் போய் இருக்கின்றார்கள்.‘&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்கள் இஸ்லாத்தை
 மிகப் பெரும் ஆபத்தாக நினைத்து நடுங்குவதற்கான காரணம், இன்றையக் 
கொந்தளிப்பான நிலைமைகளிலும்கூட உலகம் முழுவதிலும் குறிப்பாக மேற்கத்திய 
நாடுகளிலும் மிக வேகமாக, அழுத்தமாக மக்களை ஈர்த்து வருகின்ற இஸ்லாத்தின் 
ஈர்ப்பாற்றல்தான். நவீன மேற்கத்திய உலகம் தூக்கிவைத்துக்கொண்டாடிக் 
கொண்டிருக்கும் முதலாளித்துவ சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் 
நெறிக்கு மாற்றாக ஓங்கி நிற்கின்ற திறனும் வல்லமையும் இஸ்லாத்திற்கு 
மட்டுமே இருப்பதாலும் அவர்கள் அதனை ஒரு ஆபத்தாகப் பார்க்கின்றார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இன்றையக்
 காலத்தில் மேற்கத்திய முதலாளித்துவப் பண்பாட்டுக்கு எந்த எதிர்காலமும் 
இல்லை என்பது சற்றொப்ப நிர்ணயமாகிவிட்டது. சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட 
இந்த சாம்ராஜ்யம் தன்னுடைய அடிப்படையான தத்துவங்களுடனும், தன்னுடைய 
அமைப்பின் நிறுவனக்கூறுகளுடனும் இப்போது தனது வீழ்ச்சியின் இறுதி 
அத்தியாயத்திற்குள் நுழைந்து விட்டது. நவீன மேற்கத்திய உலகிலோ இன்று 
உலகாயதக் கொள்கைகள் மீதான வெறுப்பும் சலிப்பும் உச்சத்தை எட்டிவிட்டுள்ளன.
 மதம், ஆன்மிகம், ஆன்மிக மாண்புகள் ஆகியவற்றின் பக்கம் மக்கள் 
மீண்டுக்கொண்டிருக்கின்றார்கள்&lt;wbr&gt;&lt;/wbr&gt;. அய்ரோப்பிய நாடுகள் எங்கும் அலையாக 
வீசிக்கொண்டிருக்கின்ற இந்த மீளலை மேற்கத்திய எழுத்தாளர்கள் Desecularisation என்றே அழைக்கின்றார்கள். கடிவாளம் இல்லாத 
உலக மோகமும், வரம்புகளையும் எல்லைகளையும் தாண்டி சக்திக்கும் மேலாகச் 
செலவிடுகின்ற இயல்பும், வட்டியும், வட்டியின் மீது வாங்கப்பட்ட கடன்களும் 
ஏற்படுத்தியிருக்கின்ற பேரழிவுகளால் அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 
இருக்கின்ற ஒவ்வொரு சாமானியனும் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாய் மிக மிகக் 
கடுமையாகப் பாதிக்கப்பட்டு கைகளைப் பிசைந்துக்கொண்டு நிற்கின்றான். 
இப்போது அவன் பொருளாதாரத்திற்கான மாற்று வழிமுறைகளைத் தேடத் 
தொடங்கியிருக்கின்றான். நவீன முதலாளித்துவ சிஸ்டத்தின் அநேகக் கூறுகளை 
மிகப் பெரும் ஊறு விளைவிப்பவையாயும் கேடு விளைவிப்பவையாயும் மேற்கத்திய 
உலகின் பெரும் பெரும் பொருõளாதார வல்லுநர்களே நினைக்கத் 
தொடங்கியிருக்கின்றார்கள். ஒரு புதிய உலகளாவிய பொருõளாதார சிஸ்டத்தின் 
தேவையை - பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனின் வார்த்தைகளில் சொல்ல 
வேண்டுமெனில் A New Bretton woods -இன் அவசியத்தை அவர்கள் உணரத் தொடங்கி 
இருக்கின்றார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
குடும்ப மாண்புகள் காலில் போட்டு 
மிதிக்கப்படுகின்ற, குடும்பங்கள் சிதறிப் போகின்ற நோய் இன்று மேற்கத்திய 
உலகிலிருந்து கிளம்பி கிழக்கத்திய சமூகங்களிலும்கூட வேகமாகத் 
தொற்றிவிட்டுள்ளது. இப்போது குடும்ப மாண்புகளைக் கட்டிக் காக்கின்ற கடைசி
 கோட்டையாக இஸ்லாம் நிற்கின்றது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் குடும்ப 
அமைப்பு வலுப்பெறாத வரையில் நிலையான சமூகச் சூழலை ஏற்படுத்துவதற்கான 
சாத்தியமே இல்லை; நிம்மதி நிறைந்த தனிப்பட்ட வாழ்வுக்கும் வாய்ப்பே இல்லை. 
இந்த நிலையில் குடும்ப மாண்புகளைக் கட்டிக்காக்க வேண்டியதன் அவசியத்தை 
மேற்கத்திய உலகம் உணரத் தொடங்கியிருக்கின்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா 
போன்ற நாடுகளில் பொதுத் தேர்தல்களின் முக்கியமான விவாதப்பொருளாக குடும்ப
 மாண்புகளும் குடும்ப அமைப்பின் வலுவாக்கமும் ஆகி வருகின்றன. இன்னும் 
சொல்லப்போனால்க ஆஸ்திரேலியாவில் முதல் முன்னுரிமை குடும்பத்துக்கே என்பதை
 முதன்மை நோக்கமாகக் கொண்ட அரசியல்கட்சி (Family first Party) 
தொடங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலையில் ஆன்மிக சுகத்தைத் தேடியடைகின்ற 
வேட்கையினாலும், சிறப்பான பொருளாதாரக் கொள்கைகளை வரையறுக்க வேண்டிய 
கட்டாயத்தினால் உந்தப்பட்டு அவற்றைத் தேடியடைகின்ற தவிப்பினாலும், வலுவான 
குடும்பக் கட்டமைப்பு, மிக உயர்வான குடும்ப மாண்புகள் ஆகியவற்றைத் தேடியும்
 மக்கள் மிகப் பெரும் அளவில் மன எழுச்சியுடன் பொதுவாக கிழக்கத்திய 
மதங்களின் பக்கமும் குறிப்பாக இஸ்லாத்தின் பக்கமும் பாய்ந்தோடி 
வந்துக்கொண்டிருக்கின்றார்கள். இது போன்ற நிலைமைகளில் மற்றெல்லா 
கிழக்கத்திய மதங்களைக் காட்டிலும், தத்துவ நெறிகளை விடவும் கோட்பாட்டிலும்
 சரி, ஒழுக்க போதனைளிலும் சரி, ஆன்மிகக் கட்டமைப்பிலும்சரி 
உறுதியானதாகவும் வலுவானதாகவும் இருப்பதாலும், நிலையான, மாறாத அடிப்படைகளைக்
 கொண்டதாகவும் இருப்பதால் இஸ்லாம் மிக எளிதாகவும் அதிகமாகவும் மக்களைக் 
கவர்ந்துக்கொள்ளும் என்றே மேற்கத்திய கொள்கை விற்பன்னர்கள் 
கருதுகின்றார்கள்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலைமை ஒரு பக்கம் இருக்க, மறுபக்கமோ 
மேற்கத்திய உலகம் தன்னுடைய சித்தாந்த அடிப்படைகள் குறித்து மிக மிகக் 
கடுமையான அதிருப்திக்கு ஆளாகி நிற்கின்றது. இந்த அதிருப்தியும் 
மனக்குறைகளும் அவர்களை எந்த அளவுக்கு ஆட்டிப் 
படைத்துக்கொண்டிருக்கின்றனவெனி&lt;wbr&gt;&lt;/wbr&gt;ல் அமெரிக்காவையும் அமெரிக்க வாழ்க்கை 
நெறியையும் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்த தாமஸ் ஃபிரைட்மான் போன்ற 
பன்னூல் ஆசிரியரே மனம் நொந்து விரக்தி கீதம் பாடத் 
தொடங்கியிருக்கின்றார். நிராசை நிறைந்த இந்தப் பாடல் வரிகள் இன்று 
அமெரிக்காவின் தேசிய கீதமாய் ஆகிவிட்டிருக்கின்றது. &lt;br /&gt;
அந்தப் பாடலின் வரிகளைக் கேளுங்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
I was going where I shouldn&#39;t go...... Seeing who I shouldn&#39;t see&lt;br /&gt;
எந்த இடத்திற்கு நான் போயிருக்கக் கூடாதோ அந்த இடத்துக்கே நான் போய்க் கொண்டிருந்தேனே...&lt;br /&gt;
எதனையெல்லாம் நான் பார்க்கவே கூடாதோ அவற்றையே நான் பார்த்துக்கொண்டிருந்தேனே... &lt;br /&gt;
&lt;br /&gt;
Doing what I shouldn&#39;t do...... And being who I shouldn&#39;t be&lt;br /&gt;
எவற்றையெல்லாம் நான் செய்திருக்கவே கூடாதோ அவற்றையே நான் செய்துக்கொண்டிருந்தேனே...&lt;br /&gt;
எப்படியெல்லாம் நான் ஆகியே இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் நான் ஆகிவிட்டிருந்தேனே....&lt;br /&gt;
&lt;br /&gt;
I used to think that I was strong..... But lately I just lost the fight.&lt;br /&gt;
நான்தான் பலசாலி என்றே நான் என்னை நானே நினைத்து வந்தேனே.....&lt;br /&gt;
ஆனால் இப்போது நடந்த சண்டையில் தோற்றுப்போய் நிற்கின்றேனே.....&lt;br /&gt;
&lt;br /&gt;
மறுபக்கம் இஸ்லாமிய உலகம் எந்தக் கீதத்தை பாடிக் கொண்டிருக்கின்றது, கவனித்தீர்களா?&lt;br /&gt;
&lt;br /&gt;
லா அஸ்கரிய்யா&amp;nbsp; வலா தெக்தாதோரியா..... &lt;br /&gt;
இராணுவ ஆட்சியும் வேண்டாம்.... சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம்....&lt;br /&gt;
&lt;br /&gt;
வலா இல்மானிய்யா.... வலா ஸயூக்ராதிய்யா....&lt;br /&gt;
செக்குலரிசமும் வேண்டாம்... தியாக்ரஸியும் வேண்டாம்...&lt;br /&gt;
&lt;br /&gt;
கராமத்து வஇஸ்ஸது வஇன்சானிய்யா...&lt;br /&gt;
ஹிஸாரத்து மிஸ்ருல் இஸ்லாமிய்யா...&lt;br /&gt;
கண்ணியமும் மதிப்பும் மனித மாண்பும் வேண்டும்...&lt;br /&gt;
எகிப்து மண்ணில் இஸ்லாமே வேண்டும்....&lt;br /&gt;
&lt;br /&gt;
எகிப்து
 மண்ணில் மட்டுமா இந்த முழக்கங்கள் எதிரொலிக்கின்றன? மொராக்கோவின் 
சந்தைகளிலும் துனிஸீயாவின் காஃபிக் கடைகளிலும் அல்லவா இவை தொடர்ந்து 
எதிரொலிக்கின்றன? இன்னும் சொல்லப்போனால் எகிப்தின் இருள் சூழ்ந்த 
சிறைக்கொட்டடிகளிலும் சிரியாவின் சித்திரவதைக் கூடங்களிலும் அல்லவா இந்த 
புரட்சி கீதம் புதுத் தெம்பையும் புதிய எழுச்சியையும் ஊட்டி வருகின்றது..!&lt;br /&gt;
&lt;br /&gt;
இவையிரண்டுக்கும்
 இடையிலான வேறுபாடு மிக மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஒரு பக்கம் தாமஸ் 
ஃபிராட்மேனின் பாடல் இலையுதிர் காலத்திய சோகக் கீதமாக இருக்கின்றது எனில் 
மறு பக்கம் இஸ்லாமிய உலகத்தில் எதிரொலிக்கின்ற முழக்கங்களோ இஸ்லாமிய 
வசந்தத்தின் வருகையைக் கொண்டாடுகின்ற எழுச்சி கீதங்களாய் அதிர்கின்றன. ஒரு
 பக்கம் மூப்பும் பிணியும் தொற்றிக் கொண்டதால் நிராசையிலும் 
வருத்தத்திலும் உழல்கின்ற முதியவனின் ஒப்பாரி கேட்கின்றது எனில், மறு 
பக்கம் நெட்டி முறித்தவாறு தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு எழுந்து நிற்கின்ற
 இளைஞனின் ஆர்ப்பரிப்பும், எழுச்சியும் நிறைந்த உரிமை கீதங்கள் விண்ணை 
முட்டுகின்றன. இதுதான் மேற்கத்திய பண்பாட்டுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில்
 இன்று காணப்படுகின்ற வித்தியாசம் ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருபக்கம் மேற்கத்திய 
உலகம் தன்னுடைய சித்தாந்தங்கள் மீதும், தன்னுடைய பாரம்பர்யத்தின் மீதும், 
தன்மீதும், தன்னுடைய சிஸ்டத்தின் மீதும் தான் இது வரை தூக்கிக்கொண்டாடி 
வந்த மாண்புகள் மீதும் நிராசையடைந்து சலிப்புற்று நிற்கின்றது எனில், 
மறுபக்கமோ இஸ்லாமிய உலகில் இருக்கின்ற ஒவ்வொரு மனிதரும் இஸ்லாத்தின் மீது
 அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டவராய் நெஞ்சை 
நிமிர்த்திக்கொண்டு நிற்கின்றார். இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமிய 
சிஸ்டத்தின் மீதும் இஸ்லாமிய மாண்புகளின் மீதும் முஸ்லிம்களின் 
நம்பிக்கையும் பற்றும் பன்மடங்கு அதிகரித்துவிட்டுள்ளன. உலகெங்கும் இதே 
நிலைமைதான். இதற்குச் சான்றாக ஏராளமான சர்வே முடிவுகளையும் 
புள்ளிவிவரங்களையும் சொல்ல முடியும். அதற்கான நேரம் இங்கு இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இஸ்லாத்துடனான
 நெருக்கமான பற்றின் விளைவாக முஸ்லிம்கள் மிகப் பெரும் அளவில் 
முன்னேற்றத்தையும் கண்டு வருகின்றார்கள். இன்றைய நாளில் அறிவியல் 
ஆய்வுகளின் செயல்வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோமேயானால் உலகம் 
முழுவதிலும் ஈரான் தான் முதலிடத்தில் நிற்கின்றது. துருக்கியிலோ ஏகேபியின்
 ஆட்சியின் கீழ் மிக உயர்ந்த படித்தரங்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் 
பதிப்பிக்கப்படுவது ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. ஆய்விலும் ஆராய்ச்சியிலும்
 ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கையைப் பொருத்த வரை இன்று ஒட்டுமொத்த 
அய்ரோப்பாவில் துருக்கிதான் முதல் இடத்தை வகிக்கின்றது. இனி 
வருங்காலங்களில் சர்வதேசப் பொருளாதாரத்தை வரையறுப்பதில் மிக முக்கியமான 
பங்கு வகிக்கக்கூடிய நாடுகளாய் அடையாளம் காணப்பட்டுள்ள பதினோரு நாடுகளில் 
ஏழு முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்களே!&amp;nbsp; இந்த மாதிரியான 
நிலைமைகள்தாம் இஸ்லாமோ ஃபோபியா என்கிற கருத்தாக்கத்துக்கு வழி 
அமைத்திருக்கின்றன. இத்தகைய நிலைமைகள்தாம் மத்தியக் கிழக்கில் இரத்தக் 
களரிக்கான உண்மையான காரணங்கள் ஆகும். இஸ்லாமிய இயக்கங்களுடனான பகைமை 
உணர்வுகள் மூட்டிவிடப்படுவதற்கும் இவைதாம் காரணம் ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இஸ்லாமோ 
ஃபோபியா என்கிற எதிர்மறை உணர்வால் உந்தப்பட்டு எழுத அமர்பவர்களானாலும் 
சரி, இஸ்லாமே ஃபோபியாவைத் தம்முடைய முதன்மை அடையாளமாய் ஆக்கிக் 
கொண்டவர்களானாலும் சரி இந்த இரு தரப்பினரும் எழுதிய ஆக்கங்களையும் 
புத்தகங்களையும் வாசித்துப் பார்த்தீர்களேயானால் ஒன்று தெளிவாகப் புரியும்.
 இவர்கள் இஸ்லாத்தைக் குறித்து அச்சத்துக்கும் பயத்துக்கும் ஆளாகி 
இருக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் ஒரு சில தீவிரவாதிகளால் 
நடத்தப்படுகின்ற குண்டுவெடிப்புகளோ, இரத்தக் களரி நிகழ்ந்து விடுமோ 
என்கிற அச்சமோ அல்ல. அதற்கு மாறாக மனித மனங்களைக் கொள்ளை கொள்வதில் 
இஸ்லாத்துக்கு இருக்கின்ற மிகப் பெரும் ஆற்றலையும் ஈர்ப்பாற்றலையும் 
பார்த்துதான் இவர்கள் மனம் பதைக்கின்றார்கள். இஸ்லாத்தைத் தடுத்து 
நிறுத்தாவிட்டால் அது ஒட்டுமொத்த மேற்கத்திய சமூகத்திலும் மிக வேகமாகப் 
பரவிவிடுமே என்றே இவர்கள் பரபரக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக டேவிட் 
செல்போர்ன் எழுதிய The losing battle with Islam என்கிற நூலையே 
எடுத்துக்கொள்ளுங்கள். இந்தக் கனத்த நூலில் இனி வருங்காலங்களில் இஸ்லாத்தை
 மேற்கத்திய உலகத்தால் வெற்றி கொள்ள முடியாது என்பதற்கான பத்து 
காரணங்களைப் பட்டியலிட்டு விரிவாக அலசியிருக்கின்றார், டேவிட் செல்போர்ன்.
 இதே போன்று மைக்கேல் ஹீல்லேபெக் Michael Houellebecq&amp;nbsp; என்கிற பிரெஞ்சு 
எழுத்தாளர் எழுதிய Submission&amp;nbsp; என்கிற நாவலையே எடுத்துக்கொள்ளுங்கள். 
பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்திலும், இத்தாலியிலும் ஜெர்மன் 
மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலில் 2022-இல் நடக்கின்ற பிரெஞ்சு
 தேர்தலில் இஸ்லாமியக் கட்சியினர் பெருவெற்றி பெறுவதாகச் 
சித்திரித்திருக்கின்றார் மைக்கேல்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNxKzQTApHaus1FuBb3DhyphenhyphenmkvcGIHaBmIn0GsisDxjUosF1SF7Ebxzas_Crmhu6hwrTo_s3UALTKmPWfEMoQXxtgnBf6iqFXAckQXnQQ_RQAcuNDbxiMmWJxuT8Zjq221GHLfJxP787ag/s1600/Submission.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNxKzQTApHaus1FuBb3DhyphenhyphenmkvcGIHaBmIn0GsisDxjUosF1SF7Ebxzas_Crmhu6hwrTo_s3UALTKmPWfEMoQXxtgnBf6iqFXAckQXnQQ_RQAcuNDbxiMmWJxuT8Zjq221GHLfJxP787ag/s320/Submission.jpg&quot; width=&quot;207&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் புத்தகங்களும் 
நூல்களும் மேற்கத்திய கொள்கை விற்பன்னர்கள் மீது அழுத்தமான பாதிப்புகளை 
ஏற்படுத்தியிருக்கின்றன. சில நாள்களுக்கு முன்புகூட டேவிட் செல்போர்ன் 
எழுதிய கட்டுரை ஒன்றில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியுடனான 
தம்முடைய சந்திப்பைக் குறித்தும் அப்போது அவருடன் தாம் நிகழ்த்திய விரிவான
 உரையாடல் குறித்தும் பதிவு செய்திருக்கின்றார். உரையாடலின் முடிவில் ‘இதே 
நிலைமை நீடித்ததெனில் நம்முடைய காலத்து வரலாறு இஸ்லாமிய கிலாஃபத் 
ஆட்சியாளர்களின் கண்காணிப்பின் கீழ் தொகுக்கப்படுகின்ற காலம் 
வெகுதொலைவில் இல்லை’ என்கிற தம்முடைய அச்சத்தை ஜான் கெர்ரி 
ஏற்றுக்கொண்டதாகவும் டேவிட் செல்போர்ன் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த 
அச்சத்தின் அடிப்படையில்தான் வல்லரசுகள் தங்களின் வெளியுறவுக் கொள்கைகளை 
வகுத்துக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தைப் பற்றிய இந்த அச்சுறுத்தலை 
எதிர்கொள்வதற்காக இந்த நவீன மேற்கத்திய அரசுகள் வகுத்துள்ள கொள்கையின் 
முக்கியமான ஆறு கூறுகளாய் பின்வருபவற்றைச் சொல்லலாம்:&lt;br /&gt;
&lt;br /&gt;
1. 
இஸ்லாத்துக்கு எதிரான கடுமையான பரப்புரை இயக்கத்தை - எஞ்சிய உலகத்தார் 
அனைவரும் இஸ்லாத்தை வெறுக்கத் தொடங்கிவிடுகின்ற அளவுக்கு - மிகப் பெரும் 
அளவில் முழுவீச்சில் நடத்துதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2. முஸ்லிம்களில் சிலரைக் கொண்டே 
இந்த வெறுப்புப் பரப்புரைக்குத் துணை போகின்ற வகையிலான செயல்களை 
அரங்கேற்றுதல். இஸ்லாமிய பகுதிகளை நரகங்களாய் - மக்கள் இஸ்லாத்தின் 
பெயரையும் முஸ்லிம்களின் பெயரையும் கேட்டாலே பீதியடைகின்ற அளவுக்குப் 
பயங்கரமான பகுதிகளாய் - ஆக்கிவிடுதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3. இஸ்லாமிய இயக்கங்களுடனான 
மக்களின் தொடர்பைப் பலவீனப்படுத்துதல். இஸ்லாமிய இயக்கங்கள் பக்கம் 
போகக்கூடிய மக்களைத் திசை திருப்பி நாசகரமான பாதையின் பக்கம் அவர்களைத் 
தள்ளிவிடுதல். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4. முஸ்லிம்களையும் 
இஸ்லாத்தை மேலோங்கச் செய்கின்ற விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்களையும் 
விதவிதமான கூடாரங்களில் கூறு போட்டு பிளவுபடுத்திவிடுதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
5. இஸ்லாத்துடனான, குறிப்பாக அன்பு நபிகளாருடனான முஸ்லிம்களின் தொடர்பையும் உறவையும் பலவீனப்படுத்துதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
6.
 முஸ்லிம் நாடுகளில் மேற்படி நோக்கங்களுக்குத் துணை நிற்கக்கூடிய பொம்மை 
அரசாங்கங்களையும், பொம்மை இராணுவத்தினரையும், பொம்மை டீப் ஸ்டேட் Deep 
State என்கிற அரசு அதிகார வர்க்கத்தையும் அமர்த்துதல், ஊக்குவித்தல், 
ஆதரித்தல். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவையனைத்தைக் குறித்தும் விவாதிப்பதற்கும் பேசுவதற்கும்
 இங்கு நேரம் இல்லை. என்றாலும் இவற்றில் ஒரிரு அம்சங்கள் குறித்து இங்கு 
விவாதிப்போம். இன்ஷா அல்லாஹ்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்களே! அரபு வசந்தம் வீசிய அந்த 
நாள்களில் ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கும் இஸ்லாமிய இயக்கங்களின் பக்கம் 
திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில் இனி பெரும்பாலான அரபு 
நாடுகளில் இஸ்லாமிய எழுச்சியை விரும்புகின்றவர்கள்தாம் மேலோங்குவார்கள் 
என்கிற எதிர்பார்ப்பு பரவலாக அனைவராலும் உணரப்பட்டு வந்தது. சரியாக அந்த 
வேளையில் தாயிஷ் - ஐஎஸ்ஐஎஸ் என்கிற மிகப்பெரும் கலகம் அங்கு களத்தில் 
அரங்கேற்றப்பட்டது. தர்ஜுமானுல் குர்ஆனில் வெளியான கட்டுரை ஒன்றில் 
ஈராக்கிய இக்வானியத் தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டி, ‘ஈராக்கில் தாயிஷ் - 
ஐஎஸ்ஐயெஸ் தீவிரவாதிகளால் மிகப்பெரும் அளவில் குறி 
வைத்துக்கொல்லப்பட்டவர்கள் ஈராக்கிய இக்வானிகள்தாம். இதே போன்று 
சிரியாவிலும் ஐசிஸ் தீவிரவாதிகளால் அதிகமாகக் கொன்று குவிக்கப்பட்டவர்கள் 
அங்கு இருந்த பஷருல் அஸதின் கொலைக்கார இராணுவத்தினரோ அராஜகத்தில் 
ஈடுபட்டவர்களோ அல்ல. அதற்கு மாறாக சிரியாவின் இக்வானி இஸ்லாமிய 
இயக்கத்தார்தாம் மிக அதிகமாகக் கொல்லப்பட்டார்கள்’ என்கிற விவரம் பதிவு 
செய்யப்பட்டுள்ளது. இதே போன்ற நிலைமைதான் பாலஸ்தீனிலும் 
அரங்கேறிக்கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். அங்கும் இந்த தாயிஷ் - ஐசிஸ் 
தீவிரவாதிகள் ஹமாஸ் இயக்கத்தினர் மீதுதான் தாக்குதல்களைத் தொடர்ந்து 
நடத்திக் கொண்டிருக்கின்றார்களே தவிர, இஸ்ரேலின் கொடூர இராணுவத்தினர் 
மீது அவர்கள் ஒரு முறைகூட கை வைத்ததில்லை. தாயிஷ்-ஐசிஸ் தீவிரவாதிகளால் 
இஸ்ரேலுக்கு இழப்பு ஏற்பட்டதாக எந்தவொரு பதிவும் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
இது 
போன்று முஸ்லிம் பெயர் தாங்கிகளைக் கொண்டு வன்முறையிலும் கண்மூடித்தனமான 
அராஜகங்களிலும் ஈடுபடுகின்ற ஆயுதக் கும்பல்களை உருவாக்கி அவர்களை இஸ்லாமிய 
இயக்கத்தாருக்கு எதிராகக் களத்தில் இறக்குகின்ற, அவர்களுக்குத் தங்களுடைய 
உளவுத்துறை ஏஜென்சிகளின் மூலமாக முழுமையான ஒத்துழைப்பைக் கொடுக்கின்ற இந்த
 உத்தி எதிரிகளால் ஆளப்படுகின்ற மிக முக்கியமான, பயனுள்ள உத்தி ஆகும். இந்த
 வியூகத்தின் மூலம் அவர்கள் ஒரே சமயத்தில் பற்பல ஆதாயங்களை 
ஈட்டிக்கொள்கின்றார்கள். இது போன்ற ஆயுதக் குழுக்களின் இருப்பு 
ஏகாதிபத்தியத்துக்கு வலு சேர்க்கின்றது. இதனால்தான் காலனி ஆதிக்கம் 
மேலோங்கியிருந்த காலகட்டத்திலும் இதே உத்தி மேற்கொள்ளப்பட்டது. எகிப்தை 
ஆக்கிரமித்துவிட்ட பிறகு நெப்போலியன் செய்த முதல் வேலையே இந்த வியூகத்தின்
 அடிப்படையில் அங்கு யஃகூப் அல்மிஸ்ரி என்கிற பெயரில் ஆயுத இயக்கத்தைத் 
தோற்றுவித்து களம் இறக்கியதுதான். பிரான்சும் அல்ஜீரியாவை ஆக்கிரமித்ததும்
 அல்ஹர்கி இயக்கத்தைத் தோற்றுவித்து களம் இறக்கியது எனில், வியத்நாம் மீது
 படையெடுத்துச் சென்ற அமெரிக்காவும் அங்கு Strategic Hamlets என்கிற 
பெயரில் இந்த வியூகத்தின்படி ஆயுதக்குழுக்களைக் களம் இறக்கியது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த
 முஸ்லிம் பெயர்தாங்கிகளைக் கொண்ட தீவிரவாதக் குழுக்களால் கிடைக்கின்ற 
இரண்டாவது ஆதாயம் என்னவெனில் இவர்களின் செயல்பாடுகளால் இஸ்லாத்திற்கு 
எதிராக வெறுப்பு உணர்வைக் கிளர்ந்தெழச் செய்கின்ற பரப்புரை இயக்கத்திற்கு 
வலு சேர்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களால் கிடைக்கின்ற மூன்றாவது ஆதாயம் 
என்னவெனில் இஸ்லாத்தையும் இஸ்லாமிய எழுச்சியையும் விரும்புகின்ற மக்களை 
இவர்கள் பிளவுபடுத்தி விடுகின்றார்கள். அவர்களில் ஒரு குறிப்பிட்ட 
எண்ணிக்கையினர் இஸ்லாமிய இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொள்வதற்குப் 
பதிலாக இது போன்ற தீவிரவாதக் குழுக்களின் வலைகளில் போய் விழுந்து 
தற்கொலை செய்யத் தொடங்கி விடுகின்றார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களால் கிடைக்கின்ற
 நான்காவது ஆதாயம் என்னவெனில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிராக மக்கள் 
கருத்தை வார்த்தெடுப்பதிலும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தார்மிகரீதியான, 
உடல்ரீதியான இழப்புகளை ஏற்படுத்துவதிலும் இந்தத் தீவிரவாதக் குழுக்களை 
மிகப் பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாவதுதான்.
 &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களால் கிடைக்கின்ற ஐந்தாவது ஆதாயம் என்னவெனில் இவர்களைக் 
கொண்டு இஸ்லாமிய நாடுகளில் மிகப் பெரும் அளவில் இரத்தக்களரியை 
ஏற்படுத்துவதன் காரணமாக அவை உண்மையிலேயே நரகங்களாய் ஆகி விடுகின்றன. அதன் 
பிறகு அவற்றைப் பற்றிய எண்ணமே எஞ்சிய உலகத்தாருக்குப் பீதியைக் 
கிளப்புவதாய், குலைநடுங்கச் செய்வதாய் ஆகிவிடுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இத்ந ஆதாயங்கள் அனைத்தும் இன்று தாயிஷ்- ஐசிஸ் தீவிரவாதக் குழுவினரால் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே
 போன்று, நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று முஸ்லிம்களுக்கும் 
இஸ்லாத்துக்கும் இடையிலான தொடர்பையும் உறவையும் பற்றையும் குலைப்பதற்கான 
முயற்சிகளில் இறங்குவதும் இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் மேற்கொள்கின்ற 
வியூகத்தில் அடங்கும். இன்னும் சொல்லப்போனால் இது இவர்களின் வியூகத்தின் 
முக்கியமான அம்சம் ஆகும். முஸ்லிம்களிடம் வேரூன்றி இருக்கின்ற இஸ்லாமியப் 
பற்றையும் தொடர்பையும் பலவீனப்படுத்துவது அத்துணை எளிதான காரியம் அல்ல. 
இதனால் இஸ்லாத்துடனான உறவும் தொடர்பும் பெயரளவில் நீடிக்க அனுமதித்து 
சீர்திருத்தங்கள், மாற்றங்கள் என்கிற பெயரில் இஸ்லாத்தின் உயிரோட்டத்தைப் 
பறித்தெடுக்கின்ற உத்தியை இவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். சில 
ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ராண்ட் கார்பரேஷன் என்கிற நிறுவனத்தால் 
வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பரப்பரப்பாகப் பேசப்பட்ட ஆய்வறிக்கை 
ஒன்றில், ‘முஸ்லிம்களை செக்குலர் முஸ்லிம்கள், நவீன முஸ்லிம்கள், பாரம்பர்ய
 முஸ்லிம்கள், அடிப்படைவாத முஸ்லிம்கள் என நான்கு குழுக்களாய்ப் பிரிக்க 
வேண்டும் என்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் முதலில் செக்குலர் 
முஸ்லிம்களுக்கும் அடுத்து நவீன முஸ்லிம்களுக்கும் அவர்களுக்கு அடுத்து 
பாரம்பர்ய முஸ்லிம்களுக்கும் ஆதரவளித்து அடிப்படைவாத முஸ்லிம்களை ஒடுக்க 
வேண்டும்’ என்றெல்லாம் பரிந்துரைகள் தரப்பட்டிருந்தது உங்களுக்கு 
நினைவிருக்கும். இப்போது அவர்களின் இந்த வியூகம் மிகத் தெளிவாக வெளிப்படத்
 தொடங்கியிருக்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அயான் ஹர்சி அலீ என்கிற பெண் எழுத்தாளர் 
எழுதிய லேட்டஸ்ட் நூலான Heretic : Why Islam Needs a Reformation Now 
என்கிற நூலில் இஸ்லாத்தில் எத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட 
வேண்டும் என்கிற தலைப்பின் கீழ் முஸ்லிம்களிடம் ஐந்து கோரிக்கைகள் 
வைத்திருக்கின்றார். முதலாவதாக, முஸ்லிம்கள் இம்மைக்குப் பதிலாக மறுமைக்கு 
முக்கியத்துவம் தருகின்ற போக்கைக் கைவிட்டுவிட வேண்டுமாம். இரண்டாவதாக, 
முஸ்லிம்கள் ஷரீஅத் சட்டங்களை எடுத்து பரணில் வைத்துவிட வேண்டுமாம், 
செக்குலர் சட்டங்களைப் பின்பற்றத் தொடங்கி விட வேண்டுமாம். மூன்றாவதாக 
எதனை உண்ண வேண்டும், எதனைப் பருகக் கூடாது என்றெல்லாம் முஸ்லிம் 
அல்லாதவர்களுக்கு விளக்கிச் சொல்வதை முஸ்லிம்கள் நிறுத்திவிட வேண்டுமாம். 
நான்காவதாக, ஜிஹாத் பற்றியக் கருத்தோட்டத்தையே முற்றாக கைவிட்டுவிட 
வேண்டுமாம். ஐந்தாவதாக அன்பு நபிகளாரின் அமுத வாக்குகளுக்குப் புதிய 
கோணத்தில் விளக்கங்கள் சொல்ல முடியும் என்றும் நபிமொழிகளின் மீது 
விமர்சிப்பதும் கூடும் என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு 
ஐந்தாவதாகச் சொல்லப்பட்ட களத்தில் - இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் 
இடையில் இடைவெளியை உண்டுபண்ணுவதில் இன்று மிகப் பெரும் அளவில் பணிகள் 
நடந்து வருகின்றன. நபிமொழிகளுக்கும் நபிவழிகளுக்கும் மனம் போன போக்கில் 
கற்பிதங்களையும் விளக்கங்களையும் கற்பித்து புதுப் புது தத்துவங்களையும் 
புதுப் புது கொள்கைகளையும் உருவாக்குகின்ற பணி ஜோராக நடந்து வருகின்றது. 
இஸ்லாத்தைப் பற்றிய இந்த நவீன, மேற்கத்திய உலகத்துக்கு விருப்பமான 
விளக்கங்களின் பக்கம் இளைஞர்களைத் திரும்பச் செய்வதற்காக எல்லாவிதமான 
முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகையச் சூழலில் நாம்
 எத்தகைய வியூகத்தையும் உத்திகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் 
இங்கு எழுகின்ற கேள்வி. இத்தகைய நிலைமைகளில் நாம் உண்மையில் பெரும் அளவில் 
செய்ய வேண்டியது இரண்டு பணிகள்தாம். முதலாவதாக முஸ்லிம் அல்லாத சகோதர, 
சகோதரிகளுக்கு இஸ்லாத்தின் உண்மையான, உயிரோட்டம் மிக்க, சரியான 
கருத்தோட்டத்தை எடுத்துரைக்க வேண்டும். இந்த அறப் பணியில் நம்முடைய வலிமை,
 சக்தி, ஆற்றல், திறமை, நேரம், பொருள் ஆகிய அனைத்தையும் முழுமையாகச் 
செலவிட வேண்டும். இரண்டாவதாக, முஸ்லிம்களின் மார்க்கத்தின் பாதுகாப்பு 
உறுதி செய்யப்படுகின்ற விதத்திலும், அறிந்தோ அறியாமலோ இஸ்லாமிய விரோத 
சக்திகளின் கருவிகளாய் அவர்கள் ஆகிவிடுவதிலிருந்து அவர்களைத் தடுக்கின்ற 
விதத்திலும் முஸ்லிம்களுக்கு சரியான பயிற்சியும் சித்தாந்த திசைகாட்டலும் 
தரப்பட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
நேரம் குறைவாக இருப்பதால் இரண்டாவதாகச் சொன்ன விஷயத்தைக் குறித்தே சில எண்ணங்களைப் பகிர்ந்துக்கொள் ள விரும்புகின்றேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
நான்
 ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் தீவிரவாத 
சிந்தனைகளைப் பரப்புவதும் செழித்தோங்கச் செய்வதும்தாம் இன்றையக் காலத்திய 
இஸ்லாமிய விரோத சக்திகள் இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் 
எதிராக ஆள்கின்ற மிக முக்கியமான ஆயுதம் ஆகும். இனி வரும் ஆண்டுகளிலும்கூட 
இதுதான் அவர்களின் மிகப் பெரும் ஆயுதமாக நீடிக்கும் என்றே நான் 
கணிக்கின்றேன். இந்த நிலையில் அவர்களின் இந்த ஆயுதத்தை முனை மழுங்கச் 
செய்கின்ற வகையில் நாம் நமக்கான செயல்திட்டத்தை அமைத்துக்கொள்வது அவசியம் 
ஆகும். வன்முøறையைத் தவிர்த்துவிட்டு, அமைதியான, ஆக்கப்பூர்வமான முறைகளில் 
செய்தியை எடுத்துரைப்பதுதான் இஸ்லாமிய இயக்கங்களின் வழிமுறையாக தொன்று 
தொட்டு இருந்து வந்துள்ளது. அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&amp;nbsp;ஆனால் முஸ்லிம்கள் மீது இழைக்கப்படுகின்ற கொடுமைகள், அக்கிரமங்கள் 
குறித்து நாள்தோறும் இடைவிடாமல் எடுத்துரைத்துக்கொண்டே இருப்பதன் 
காரணமாகவும் மேற்கத்திய சக்திகளின் சூழ்ச்சிகளை மிகைப்படுத்திச் சொல்வதன் 
விளைவாகவும், நம்முடைய பலவீனங்கள், குறைபாடுகள் போன்றவற்றை 
ஏற்றுக்கொள்ளாமல் எந்தவொரு பின்னடைவுக்கும் மற்றவர்களையும் மற்றவர்கள் 
செய்கின்ற சூழ்ச்சிகளையும் பொறுப்பாக்குகின்ற போக்கினாலும், அசத்தியத்தை 
அளவுக்கு அதிகமாக வலிமை வாய்ந்ததாகவும், நம்மை நாமே அளவுக்கு அதிகமாக 
பலவீனமானவர்களாயும், இயலாதவர்களாயும் நினைத்தும் பேசியும் வருவதன் 
காரணமாகவும், எந்நேரமும் முஸ்லிம்களின் அவலங்கள், துயரங்கள் குறித்து 
இடைவிடாமல் எடுத்துரைத்து வருவதன் விளைவாகவும் - இவையெல்லாமே சேர்ந்து 
இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் யதார்த்த நிலைமைக்கு முற்றிலும் நேர் 
மாறான கொடுமைக்காளான உணர்வு sense of victimisation அதிகரிக்கச் 
செய்துள்ளது. அவர்களுக்கு எல்லா வாயில்களும் அடைக்கப்பட்டு விட்டதாய்த் 
தென்படத் தொடங்கிவிடுகின்றன. எந்தத் திசையிலும் அவர்களுக்கு நம்பிக்கை 
ரேகைகள் புலப்படுவதே இல்லை. இத்தகைய சூழலில் வன்மமும் துவேஷமும் 
கொப்பளிக்கின்ற எண்ணங்களுக்கும் வன்முறை மீதான மோகத்திற்கும் அவர்கள் 
எளிதாக இரையாகி விடுகின்றார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகையச் சூழலில் இந்த உலகத்தில்
 இஸ்லாத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கின்றது; இப்போது இந்த சமுதாயம் 
எதிர்கொண்டிருக்கின்ற கடுமையான சூழல்களும் நிலைமைகளும் உண்மையில் பிரசவ 
வேதனையைப்&amp;nbsp; labor pains போன்றதுதான். இலகுவுக்கும் வசதியான நிலைமைக்கும் 
முன்பாக வருகின்ற சிரமங்களைப் போன்றவைதாம் இவை என்கிற அழுத்தமான 
நம்பிக்கையை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் 
மத்தியிலும் இந்த அழுத்தமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சிரமத்துக்குப்
 பிறகு அதிக வசதிவாய்ப்புகளையும் இறைவன் வழங்கக்கூடும் என்பது இறைவாக்கு 
(திருக்குர்ஆன் 65 : 7) அல்லவா? இன்றையக் கொந்தளிப்பான நிலைமைக்கு 
உண்மையான காரணமே இஸ்லாத்தின் ஈர்ப்பாற்றலையும் அது நாளுக்கு நாள் வளர்ந்து 
வருகின்ற வேகத்தையும் பார்த்து அசத்தியம் குலைநடுங்கிப் போயிருப்பதுதான். &lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மைப்
 பொருத்த வரை இந்த நிலைமைகள் எதிர்பாராத ஒன்று அல்ல. அன்பு நபிகளார்(ஸல்) 
இது போன்ற நிலைமைகள் குறித்து முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். ‘ஒரு 
மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையைக் கடந்து செல்லும் போது, ‘அந்தோ! நான்
 இவருடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருந்திருக்கக்கூடாதா?’ என ஏக்கத்துடன் 
சொல்கின்ற காலம் வராத வரை மறுமை நாள் நிகழாது’ என்பது அன்பு நபிகளாரின் 
அமுத வாக்கு (புகாரி 7115) அல்லவா? ‘மறுமை நாள் வருவதற்கு முன்பு ஹர்ஜ் 
பெருகிவிடும்’ என்றும் அன்பு நபிகளார்(ஸல்) முன்னறிவிப்பு 
செய்திருக்கின்றார்கள். ‘ஹர்ஜ்’ என்றால் என்னவென வினவப்பட்ட போது ‘ஹர்ஜ் 
என்பது கொலையாகும்’ என அன்பு நபிகளார்(ஸல்) விடையளித்தார்கள். (புகாரி 
7064)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக, இந்தக் கடுமையான நிலைமைகள் அனைத்துமே இறைவனின் 
திட்டத்தின் ஒரு பகுதியாகும். மோசமான நிலைமைகளிலிருந்து நல்ல 
நிலைமைகளையும் இறைவன் வெளிக் கொணர்கின்றான். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
‘ஒரு பொருள் 
உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக் கூடும். 
மேலும் ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் 
விரும்பக்கூடும். (இவற்றை) அல்லாஹ் நன்கு அறிகின்றான். ஆனால் நீங்கள் 
அறிவதில்லை.’ (அத்தியாயம் 2 அல்பகறா :216)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
‘உண்மை யாதெனில், என்
 இறைவன் மிக நுட்பமான தன் நாட்டங்களை நிறைவேற்றுகின்றான். திண்ணமாக, அவன் 
நன்கறிந்தோனும் நுண்ணறிவாளனுமாவான்.’ (அத்தியாயம் 12 யூசுப் : 100)&lt;br /&gt;
&lt;br /&gt;
யூசுப்
 நபிக்காக இருள் சூழ்ந்த, தன்னந்தனியான, பாழடைந்த கிணற்றையே எகிப்தின் 
அரியணைக்குச் செல்கின்ற படிக்கட்டுகளாய் ஆக்கிக் கொடுத்தான் இறைவன். இன்று
 முஸ்லிம்கள் சந்தித்து நிற்கின்ற இந்தக் கொடுமைகளும் அழிவுகளும் அவர்களை 
எத்தகைய சிகரங்களில் கொண்டு போய்ச் சேர்க்கப் போகின்றனவோ, எந்தெந்த 
வெற்றிக்கான படிக்கட்டுகளாய் இவை அமையப் போகின்றனவோ, யார் கண்டார்கள்? 
நாம் எத்தகைய நிலைமையிலும் இறைவன் மீதே நல்லெண்ணமும் நம்பிக்கையும் 
வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தன் மீது நல்லெண்ணம் கொண்டிருக்கின்ற 
அடியானுடன் இறைவனும் நல்ல முறையில் நடந்துக்கொள்கின்றான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இஸ்லாத்துக்கு
 எதிரான சக்திகள் சூழ்ச்சிகளையும் சதிகளையும் செய்துக்கொண்டுதான் 
இருக்கின்றார்கள். அதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை. ஆனால் 
அவர்களின் சூழ்ச்சிகளின்படித் தான் எல்லாமே நடக்கின்றன என்பதை எந்த 
வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சூழ்ச்சிகள் வெற்றி பெறுவதற்கும் ஒரு 
எல்லை இருக்கின்றது. அவர்கள் போடுகின்ற சதித்திட்டங்கள் சில சமயம் 
வெற்றியும் பெறுகின்றன. சில சமயம் தோற்றும் போய் இருக்கின்றன. இந்த 
சூழ்ச்சிக்காரர்கள் - ஸியோனிஸ வெறி பிடித்தவர்களாய் இருந்தாலும் சரி, 
வல்லரசுகளின் பகடைக்காய்களாய், ஏவலாள்களாய் இயங்குகின்றவர்களாய் 
இருந்தாலும் சரி - அவர்கள் அனைவருமே உண்மையில் இறைவனின் பலவீனமான 
அடியார்களாய்த்தான் இருக்கின்றார்கள். இறைவனின் வரையறையற்ற 
பேராற்றலுக்கும், அவனுடைய திட்டங்களுக்கும் முன்னால் நாம் எந்த அளவுக்குப் 
பலவீனமானவர்களாய் இருக்கின்றோமோ அந்த அளவுக்கு அவர்களும் 
பலவீனமானவர்களாய்த்தான் இருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள்
 நம்மைக் காட்டிலும் அதிகமாக இயலாதவர்களாய் இருக்கின்றார்கள். ஏனெனில் &lt;br /&gt;
&lt;br /&gt;
திண்ணமாக, அறிந்துக்கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகும். (அத்தியாயம் 4 அன்னிஸா 76)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நிராகரிப்பாளர்களின் சதித்திட்டங்களைத் திண்ணமாக அல்லாஹ் பலவீனப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றான். (அத்தியாயம் 8 அல்அன்ஃபால் 18)&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும்
 அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் அனைவரையும்விடச் சிறந்தவனாய் இருக்கின்றான்.
 (அத்தியாயம் 8 அல்அன்ஃபால் 30) ஆகியவை இறைவாக்குகள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்று 
உலகெங்கும் இஸ்லாமிய அழைப்புக்குச் சாதகமாக உருவாகியிருக்கின்ற 
வாய்ப்புகளையும் உலகம் முழுவதும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொள்கின்ற 
ஈர்ப்பாற்றல் நிறைந்ததாய் இஸ்லாம் எழுச்சி பெற்றிருப்பதைக் குறித்தும் நாம்
 நம்முடைய இளைஞர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும். வன்முறைப் 
பாதையிலிருந்தும் தீவிரவாதப் போக்கிலிருந்தும் அவர்களைத் தடுத்து நிறுத்த 
வேண்டும். அது மட்டுமல்லாமல் மாடரேட் இஸ்லாம் என்கிற பெயரில் 
நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கி&lt;wbr&gt;&lt;/wbr&gt;ன்ற சமநிலையற்ற போக்குகளிலிருந்தும் 
அவர்களைக் காப்பாற்ற வேண்டும். குறிப்பாக இன்றையக் காலத்தில் தூதுத்துவக் 
கோட்பாடுதான் இஸ்லாமிய விரோத சக்திகளின் முதன்மை இலக்காக இருக்கின்றது. 
அதனைக் குறி வைத்தே அவர்கள் மும்முரமாக இயங்கி வருகின்றார்கள். இந்நிலையில்
 நபிமொழிகள், நபிவழி ஆகியவை எந்தவிதமான ஐயத்திற்கோ கேள்விக்கோ இடம் 
தராதவையாய் ஆதாரப்பூர்வமானவையாய் இருக்கின்றன என்பதை நிறுவுகின்ற வேலையை 
மிகப் பெரும் அளவில் நாம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.
 மேலும் நவீன நிலைமைகள் மீதும், அவை தொடர்பாகவும் இஜ்திஹாத் செய்ய வேண்டிய
 தேவையும் இருக்கின்றது. இவ்வாறு இஜ்திஹாத் செய்கின்ற போது அதன் 
தேட்டங்களை சமநிலை தவறாமலும் சரியான இஸ்லாமிய சிந்தனையின் ஒளியிலும் 
தெளிவுபடுத்த வேண்டிய அவசியமும் இருக்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நண்பர்களே!&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
இன்றைய 
இஸ்லாமிய உலகத்தை இளைஞர்களின் நாடுகள் என்று சொல்லலாம். முஸ்லிம் 
நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 60 சதவீதத்தினர் முப்பது 
வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கின்றார்கள். உலகத்தில் இருக்கின்ற 
ஒட்டுமொத்த இளைஞர்களில் 27 சதவீதம் பேர் முஸ்லிம்களே.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த 
நிலையில் இந்த இளைஞர்களைக் கட்டுக்குள் வைப்பதும், அவர்களுக்கு சரியான, 
சமநிலை மிக்க, ஆக்கப் பூர்வமான பாதையில் வழிநடத்திச் செல்வதும், அவர்களின் 
சக்திகளும் வலிமைகளும் இஸ்லாம் விரோத சக்திகளின் கைகளில் சிக்கி 
விரயமாவதைத் தடுப்பதும், அவற்றை சரியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் 
கொள்வதும்தாம் இன்று உலகெங்கும் இருக்கின்ற இஸ்லாமிய இயக்கங்கள் முன் உள்ள
 மிகப் பெரும் சவால் ஆகும். இந்த சவாலை முறியடிப்பதில் நாம் வெற்றி 
பெற்றுவிட்டோமெனில் இன்ஷா அல்லாஹ் நமக்கான பாதை எளிதாகி விடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இஸ்லாமிய
 இயக்கங்களின் ஒட்டுமொத்த வியூகங்களைப் பொருத்த வரை மாறி வருகின்ற 
சூழல்களில் அவை ஏராளமான மாற்றங்களை வேண்டி நிற்கின்றன. புதிய நிலைமைகளில் 
புதிய பாதைகளை வகுத்துச் செயலாற்ற இவை வேண்டுகின்றன. துருக்கியின் இஸ்லாமிய
 இயக்கம் புதிய பாதையைக் காட்டி இருக்கின்றது. இப்போது அந்த மாடலின்படி 
இயங்கியதால் துனிஸியாவின் இஸ்லாமிய இயக்கமும் அநேக நெருக்கடிகளிலிருந்துத் 
தன்னைக் காப்பாற்றிக்கொண்டுள்ளது. இந்த துருக்கி மாடலின் சில 
சிறப்புக்கூறுகளைச் சொல்லியவாறு என்னுடைய உரையை முடித்துக் கொள்கின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;1)
 &lt;/b&gt;முதலாவதாக, முழுமையான புரட்சி வேண்டும் என்கிற முழக்கத்திற்குப் பதிலாக 
படிப்படியாக மாற்றத்தைக் கொண்டு வருகின்ற வழிமுறையை மேற்கொள்வது. இறுதிக்
 குறிக்கோளின் மீது பார்வையைத் தக்க வைத்தவாறு இன்றைய நிலைமைகளில் 
சாத்தியமாகின்ற மாற்றங்கள் மீது கவனத்தைக் குவித்தல். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;2)&amp;nbsp; 
&lt;/b&gt;இஸ்லாத்தையும் இஸ்லாமிய மாண்புகளையும் அரவணைத்தவாறு எந்த அளவுக்கு 
முன்னேற்றம் சாத்தியமோ அந்த அளவுக்கு முன்னேறிச் செல்லுதல். முழுமையான 
மாற்றத்திற்கான காத்திருத்தலின் காரணமாக இன்றையக் காலத்தில் சாத்தியமாகின்ற
 பகுதி மாற்றங்களைப் புறக்கணிப்பதைத் தவிர்த்தல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;3) &lt;/b&gt;மோதலுக்குப் 
பதிலாக இணக்கத்துடன் முன்னேறிச் செல்லுதல். ஒப்பந்தங்களின் அடிப்படையிலான 
கூட்டணி அரசியலின் மூலமாக இஸ்லாமிய விரோத சக்திகளுடனும் ஏதேனும் நன்மைகள் 
கிடைப்பதற்கான சாத்தியம் இருக்கின்றது எனில் அத்தகைய வாய்ப்புகளை நழுவ 
விடாமல் அவற்றை மேற்கொள்ளுதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;4) &lt;/b&gt;முஸ்லிம்கள் அனைவரையும் 
நம்மவர்களாய் நினைத்தல். சித்தாந்த, அமைப்பு ரீதியான வேறுபாடுகளைப் 
புறக்கணித்தவாறு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் வழிகாட்டி தலைமை 
தாங்குதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;5) &lt;/b&gt;இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பணியாற்றுவதற்கான 
வாய்ப்பு இல்லாமல் போகின்ற போது இஸ்லாம் விரும்புகின்ற மாண்புகளையும் 
நோக்கங்களையும் ஷரீஅத்தின் நோக்கங்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு 
காரியமாற்றுதல். இவ்வாறாக இஸ்லாத்தின் பெயரைச் சொல்லியும் அரசியல் 
நடத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்துதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;6) &lt;/b&gt;மக்கள் சேவை, மக்கள்
 பிரச்னைகளைத் தீர்த்தல் போன்றவற்றின் மூலமாக சமூக வலிமையை வென்றெடுத்தல்.
 அந்த சமூக வலிமையையே படிப்படியாக அரசியல் வலிமையாக மாற்றிக்கொள்ளுதல்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;b&gt;- சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி&lt;/b&gt; &lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2016/01/blog-post.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfAnI-097gOQAvAv-7txeF4DQycfgUDY29OL7YtYAgXD1B6hw9k_qz1gWgFicU35nzh6wZMBImEr61lCv-4eL9nKzmJigchNoJHIqLjikDJ3Oma2mtQZi4q-tHrLSfabD6ym-y4dbsDtg/s72-c/Sadath-sb.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-6418508720859531407</guid><pubDate>Sat, 31 Aug 2013 02:51:00 +0000</pubDate><atom:updated>2013-08-31T08:21:24.846+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Dr Abdullah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Nafs-e-ammara</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Periyar Dasan</category><category domain="http://www.blogger.com/atom/ns#">samarasam</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Sirajul hasan</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>Dr Abdullah (Periyar Dasan) and his unfulfilled wishes..!</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuQ5c96y8QOByJeLQlN20yAgoExSDNIMfjQvFhQednYlQ_Q3U-pmpA-FodLavtQST1iTmqnFB4KE2BHxDFQRWhQ8IXl2LDnS9pNedwoTr7TDQrUAaZcezl6mzZL1PkVR7IRlQS8RpSCYA/s1600/Dr.+Abdullah.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuQ5c96y8QOByJeLQlN20yAgoExSDNIMfjQvFhQednYlQ_Q3U-pmpA-FodLavtQST1iTmqnFB4KE2BHxDFQRWhQ8IXl2LDnS9pNedwoTr7TDQrUAaZcezl6mzZL1PkVR7IRlQS8RpSCYA/s1600/Dr.+Abdullah.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;background-color: white; color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;&quot;&gt;Dr Abdullah and his unfulfilled wishes..!&lt;/span&gt;&lt;br style=&quot;background-color: white; color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;&quot; /&gt;&lt;span style=&quot;background-color: white; color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;&quot;&gt;******************************&lt;wbr&gt;&lt;/wbr&gt;*&lt;/span&gt;&lt;br style=&quot;background-color: white; color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;&quot; /&gt;&lt;span style=&quot;background-color: white; color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;&quot;&gt;Pall of gloom and sadness has descended on the hearts of multitudes of Muslims of Tamil Nadu with the sad news of the death of Dr Abdullah former Periyar Dasan on Mon&lt;/span&gt;&lt;span style=&quot;background-color: white; color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;&quot;&gt;day. (Inna lillahi wa inna ilaihi rajeewoon). He was 63 and survived by two wives and two sons Mr Valavan and Mr Suradha. He had been ailing for the past forty eight days in and out of hospital.&lt;br /&gt;&lt;br /&gt;Dr Abdullah had been known as Periyar Dasan and was a legendery Dravidian leader, orator, author, psychologist, professor of philosophy and above all a diehard Islamist.&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div style=&quot;background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;&quot;&gt;
&lt;span style=&quot;color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 18px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;&quot;&gt;
&lt;span style=&quot;color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 18px;&quot;&gt;Periyardasan was born as Seshachalam in a hindu Mudaliyar family in a nondescript remote village of erstwhile North Arcot District. He was an ardent fan of Periyar EVR since his college days. Once Periyar visited his college. Young Seshachalam wrote a poem welcoming Periyar. His Tamil Professor appreciated it. &quot;Poem is good. But your name Seshachalam is not appropriate. It sounds brahminical&quot;, the professor said. Young Seshachalam then and there rechristened himself as Periyar Dasan. (Slave of Periyar). Since then there is no end for his passion for dravidian movement. Gradually he got evolved into a most powerful orator of the Dravidian thoughts and athiesm.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;&quot;&gt;
&lt;span style=&quot;color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 18px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;&quot;&gt;
&lt;span style=&quot;color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 18px;&quot;&gt;This went on for many decades. He embraced Buddhism and got involved very deeply in it. He translated a holy book on buddhism in Tamil.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;&quot;&gt;
&lt;span style=&quot;color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 18px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;&quot;&gt;
&lt;span style=&quot;color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 18px;&quot;&gt;He embraced Islam in Riyadh on March 12, 2010 in a dramatic manner. He had made the trip with the sole intention of embracing Islam. He wanted to embrace Islam in the land of its birth. With in a week he made Umrah and his arrival in the fold of Islam was welcomed by the Tamil Speaking world with great enthusiasm. Since then he was continuously on the run with attending meetings, programmes, workshops conveying the message of Islam.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;&quot;&gt;
&lt;span style=&quot;color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 18px;&quot;&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;&quot;&gt;
&lt;span style=&quot;color: #37404e; font-family: &#39;lucida grande&#39;, tahoma, verdana, arial, sans-serif; line-height: 18px;&quot;&gt;He had many wishes, desires which remained unfulfilled. He had wanted to translate the mater-piece of Seerah literature &quot;Muhammad, the prophet of Islam&quot; by Mohammad Haykal in Tamil. He had shared this dream with his friends many times. He wanted to write a book on his journey towards Islam. He wanted to write on psychology with Islamic perspective. He was of the view that the western thoughts and works on human mind had got entrapped in Nafs-e-Ammara alone. Very few ventured into Nafs-e-Lawaama.. And none of them had tasted the bliss of Nafs-e-Mutmainna. He wanted to write on it. He was of the opinion that the paramount problem facing the modern man is more psychological than material. We have to liberate the mankind from the clutches of Nafs-e-Ammara more than anything else, he would assert. He wanted to write a series of articles on this subject in Samarasam Tamil Fortnightly. I had suggested a title Alai paayum manasu..! (Wavering Mind.. Behaktaa dil..) He got excited with the title and liked it very much. Alas, that wish too was not materialised..!&lt;br /&gt;&lt;br /&gt;He wanted to write on the life history of the Prophet of Islam. Some few months back too he expressed his desire to cut short his tours, speeches, programmes etc and dedicate himself to purely research and academic work on Islam. That too remained a unfulfilled desire on his part.&lt;br /&gt;&lt;br /&gt;His only accomplishment was a documentary film on Periyar&#39;s affection towards Islam. He had captioned the film with a provocating title &quot;Did Periyar embraced Islam?&quot;. At one of the functions he had expressed another weird desire. He wanted to make a documentary film on life and times of Umar bin Khattab (ra), recalls Sirajul Hasan, Chief Editor of Samarasam Tamil Fortnightly.&lt;br /&gt;&lt;br /&gt;He wanted to do so many things. He lead an active life. People used to book him six months in advance for programmes, conferences, meetings, functions. Hardly a Sunday was without any programme for him..! Once I asked him the reason for his hectic activity..! Why do you strain yourself? Why don&#39;t you sit, relax, ponder and devote your time for writing? He brushed my query with his mysterious smile and said &quot;I had been the torch-bearer of atheism in Tamil Nadu. Thousands of youngsters had become athiest because of my speeches. I want to reach out to them and save them from the fire of hell. I don&#39;t want to be the reason for their calamity..&quot; His tone became serious and he uttered those words with eyes swelled with tears.&lt;br /&gt;&lt;br /&gt;Another worry which was eating him out day in and day out was that his concern of his family members. He was deeply worried and was very much sad about his failure to enlighten his wife and kids with the right path..&lt;br /&gt;&lt;br /&gt;May Allah reward him with jannat Ameen.&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2013/08/dr-abdullah-periyar-dasan-and-his.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuQ5c96y8QOByJeLQlN20yAgoExSDNIMfjQvFhQednYlQ_Q3U-pmpA-FodLavtQST1iTmqnFB4KE2BHxDFQRWhQ8IXl2LDnS9pNedwoTr7TDQrUAaZcezl6mzZL1PkVR7IRlQS8RpSCYA/s72-c/Dr.+Abdullah.jpg" height="72" width="72"/><thr:total>4</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-5203553507810782052</guid><pubDate>Tue, 11 Jun 2013 12:52:00 +0000</pubDate><atom:updated>2013-06-11T19:54:26.050+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Islam</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Muslim Ummah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T M Abdur Rawoof Khalid</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>தலாக், குளா, ஃபஸ்க்கே நிகாஹ்வின் இஸ்லாமிய வழிமுறைகள் </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;b&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcqxlfivuguNcvK8SIU9MOKn3lEH9PV25cd2XVW5Us8HhcXKKDkh0E5q3ckJW8QSSj5Zp6A1t-JYaoGkDwMeSQ22OSkisraI5L5VLCXIOz-eb7buMuVeJexbdcfoFPwQuQbHzLIq1hi-Y/s1600/surat-talaq.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;192&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcqxlfivuguNcvK8SIU9MOKn3lEH9PV25cd2XVW5Us8HhcXKKDkh0E5q3ckJW8QSSj5Zp6A1t-JYaoGkDwMeSQ22OSkisraI5L5VLCXIOz-eb7buMuVeJexbdcfoFPwQuQbHzLIq1hi-Y/s320/surat-talaq.png&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;“இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ‘ருகூவும்’ ஸுஜூதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி அடையக்கூடும்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் - வாழ்க்கை நெறியில் உங்க ளுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்க ளுக்கு ‘முஸ்லிம்கள்’ என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு அதே பெயர்தான்!) - தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக! எனவே, தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத் கொடுங்கள், மேலும், அல்லாஹ்வை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அவன் தான் உங்களுடைய பாதுகாவலன், அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்! (திருக்குர்ஆன் 22 : 77,78)&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அ) இயல்பான பாலியல் தேவையை நிறைவேற்றுதல்; மனத் திருப்தியயும் அமைதியையும் பெறுதல்..&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;
&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (பார்க்க ; 7: 189)&lt;br /&gt;
ஆ) கண்ணியத்தையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (பார்க்க : 4 : 24)&lt;br /&gt;
&lt;br /&gt;
இ) பரஸ்பர அன்பு நேசம் ஆகியவற்றின் அடிப்படையில் இனிமையான இல்லற வாழ்வுக்கான அடித் தளம் அமைத்தல்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (பார்க்க : 30 : 21)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஈ) மனித இனத்தின் பாதுகாப்பு மற்றும் சந்ததி களைப் பெருக்கிக் கொள்ளுதல்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (பார்க்க 42 : 11)&lt;br /&gt;
&lt;br /&gt;
மணமகனையோ அல்லது மணமகளையோ தேர்ந்தெடுக்கும் போது செல்வ வளம், அழகு, இனம், கோத் திரம், படிப்பு போன்றவற்றை அளவுகோலாக வைத்துக்கொள்வதற்குப் பதிலாக நடத்தை மார்க்கப் பற்று, போன்றவற்றுக்கே முதன்மை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அ) மணமகன், மணமகள் என இருவருடைய ஒப்புதலும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆ) மஹர்: பெண்ணை மணமுடித்துக் கொள்வதற்காக மணமகன் மஹர் என்கிற மணக்கொடையைக் கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இ) பெண்ணின் வக்காலத்து செய்யக் கூடியவரும் இரண்டு சாட்சிகளும் இருக்க வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஈ) திருமணம் பற்றிய அறிவிப்பு செய்யப்பட வேண்டும். ஊரார் அறிய திருமணம் நடக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;2.1 &lt;/b&gt;திருமணம்: கணவனுக்கும் மனைவிக்கும் இடையே செய்யப்படுகின்ற ஒப்பந்தம் (contract) தான் திருமணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அ) இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்கள் இருவரும் தமக்குள் பாலுறவை வைத்துக் கொள்வது அவர்களுக்கு ஆகுமானதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆ) அவர்கள் மூலமாகப் பிறக்கின்ற குழந்தையின் பாரம்பர்யம் நிறுவப்படுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இ) அவர்கள் இருவர் மீதும் கடமைகளும் உரிமைகளும் நிர்ணயிக்கப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;2.2&lt;/b&gt; இத்துணை நாட்களுக்குத்தான் அல்லது இத்துணை ஆண்டுகளுக்குத்தான் என திருமணத்தைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அடைத்து விடுவதை (timebound marriage) இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;2.3 &lt;/b&gt;திருமணம் புரிந்து கொள்ளும் போது வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம் என்கிற எண்ணம் மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் இருக்க வேண் டும். ஆனால் இடைக்காலத்தில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதெனில், இருவரும் சேர்ந்து வாழவே முடியாத அளவுக்கு அந்தக் கருத்து வேறுபாடும் மனக் கசப்பும் முற்றிப் போய் விட்டதெனில் இந்த நிகாஹ் என்கிற திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளலாம். இந்த மணமுறிவை &lt;i&gt;தலாக், குளா, ஃபஸ்கே நிகாஹ்&lt;/i&gt; என்று வகைப்படுத்தலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;3.1&lt;/b&gt; திருமண ஒப்பந்தத்தை முறிக்கவோ துடைத் தழிக்கவோ கணவனுக்கு இருக்கின்ற அதிகாரத்திற்குப் பெயர் தான் தலாக். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவன் திருமணத்தை முறிக்கவோ துடைத்தொழிக்கவோ செய்வதற்காகப் பயன்படுத்துகின்ற சொல்லும் தலாக் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;3.2&lt;/b&gt;&amp;nbsp; திருமண ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக மனைவிக்குத் தரப்பட்டுள்ள உரிமை தான் குளா. திருமண ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கணவனை இணங்கச் செய்வதற்காக, திருமணத்தின்போது கணவன் கொடுத்த மஹர் பணத்தையும் கணவன் கொடுத்த பொருளை அல்லது அவற்றின் ஒரு பகுதியையும் அவள் கணவனுக்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;3.3&lt;/b&gt; ஃபஸ்கே நிகாஹ் தஃப்ரீக்கே பைன சவ்ஜைன் : ஒரு தம்பதியின் திருமண உறவை ரத்து செய்வதற்கு சமூகத்தின் முதன்மை காஜி (நீதிபதி)க்கு இருக்கின்ற அதிகாரம் தான் &lt;i&gt;ஃபஸ்கே நிகாஹ்&lt;/i&gt;. தம்பதியினரை பிரிப்பதற்கு அவருக்கு இருக்கின்ற அதிகாரம்தான்&amp;nbsp; தஃப் ரீக்கே பைன சவ்ஜைன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;4.1&lt;/b&gt; அறிவுக்குப் பொருத்தமான நியாயமான காரணங்களின் அடிப்படையில் தலாக், குளா ஆகியவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆனால் இந்த விஷயத்தில் சட்டுபுட்டென்று காரியமாற்றாமல் நிதானத்துடனும் காலம் தாழ்த்தியும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். ஆற அமர எல்லாக் கோணங்களிலும் அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பிணக்குக்கு வித்திட்ட காரணங்களைக் களைவதற்காக, திருத்திக் கொள்வதற்காக கால அவகாசம் தரப்பட வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகின்றது. இவ்வாறு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகும் சிக்கல் நீடித்தால் மட்டுமே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கணவனோ அல்லது மனைவியோ மனநிலை பாதிக்கப்பட்டு விட்டால் அல்லது கணவன் ஆண்மையற்றவராக இருந்தால் சிகிச்சை செய்வதற்கு பொருத்தமான கால அவகாசத்தைத் தருவது அவசியம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;4.2&lt;/b&gt; பிரிந்து போவதற்கான நியாயமான, ஆகுமான காரணம் இருந்தாலும் பிரிவை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, மாற்றுத் தீர்வைத் தேடியடைவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது. எடுத்துக்காட்டாக, கணவனின் பாலியல் தேவையை நோய் அல்லது உடல் பலவீனம் காரணமாக மனைவியால் நிறைவேற்ற முடியாமல் போகும் போது அவளை கைவிடுவதற்குப் பதிலாக இன்னொரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;4.3&lt;/b&gt; ஒருவர் மற்றவரின் தவறுகளையும் பிழைகளையும் மன்னிக்காமல் அவற்றையே எண்ணி எண்ணி குமைந்து கொண்டிருப்பதன் காரணமாகத் தான் கருத்து வேறுபாடும் மோதலும் வளர்வதற்கு அடிப்படையான, முதன்மையான காரணமாகும். ஒருவர் மற்றவரின் தவறுகளை மன்னித்துவிடுமாறு இறைநம்பிக்கையாளர்களுக்குக் குர்ஆன் அறிவுறுத்துகின்றது. (பார்க்க 3 : 134)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;4.4&lt;/b&gt; வேறுபாடுகளையும் மனத்தாங்கல்களையும் ஊட்டி வளர்ப்பது கோபம்தான். இறைநம்பிக்கையாளர் களின் முக்கியமான பண்பு கோபத்தை விழுங்கிக் கொள்ளுதல் என குர்ஆன் கூறுகின்றது. (பார்க்க : 3:134)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;4.5 &lt;/b&gt;கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவரு டைய சில குணங்கள் மற்றவருக்கு பிடிக்காமல் போகும் போது அந்த அதிருப்தி வெறுப்பாக வளர்ந்து பிளவு வரை கொண்டு சென்றுவிடுகின்றது. இது தொடர்பாக குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்குக் கூறுகின்ற அறிவுரை என்ன தெரியுமா? ‘அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைகொள்ளுங்கள். ஏனெ னில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகள் வைத்திருக்கக் கூடும்.’ (பார்க்க 4 : 19) ஒருவர் மற்றவரின் எதிர்மறையான அம்சங்களில் மட்டும் தம்முடைய பார்வைகளைக் குவித்து வைக்காமல் நேர்மறையான அம்சங்களை மதித்து வாழ வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;4.6 &lt;/b&gt;கணவனாகட்டும், மனைவியாகட்டும் தம்முடைய உரிமைகள் மீது காட்டுகின்ற அக்கறையை தம் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் கடமை கள் மீது செலுத்தத் தவறினாலும் அது மனக் கசப்புக்கும் கருத்து வேறுபாட்டுக்கும் பிளவுக்கும் வித்திடும். இந்த விஷயத்தில் குர்ஆன் மிகப் பெரும் எச்சரிக்கையை விடுத்து பிளவுக்கான இந்தப் பாதையையும் அடைத்து விடுகின்றது. “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும்.” (பார்க்க 61 : 2,3)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b&gt;4.7 &lt;/b&gt;பிரிவுக்கு வித்திடுகின்ற முக்கியமான, அடிப் படையான காரணம் என்ன தெரியுமா? கணவனுக்கு அல்லது மனைவிக்கு அல்லது இருவருக்கும் தமது அந் தஸ்து என்னவென்பது நினைவில் நிற்காமல் போவது தான். என்னுடைய மனைவி என்னிடம் நல்ல முறை யில் நடந்து கொள்ள வேண்டும் என்று கணவன் எதிர்பார்க்கின்றான். ஆனால் அதே சமயம் மனைவிக்கும் அந்த எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை மறந்து விடுகின்றான். இதனைத் தான் குர்ஆன் இருபாலாருக்கும் உரிமைகள் இருக்கின்றன என்று அழகாக சுட்டிக்காட்டுகின்றது. (பார்க்க 2: 228). அதே சமயம் இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்ப விவகாரங்களில் இறுதி முடிவை எடுக்கின்ற அதிகாரம் கணவனுக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது. இதனைத் தான் குர்ஆன் ‘ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்’ என்று அழகாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளது. (பார்க்க 4 : 34)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;5.1 அறிவுரை : &lt;/b&gt;மனைவி வரம்பு மீறி நடந்து கொள் கின்றாள் அல்லது மாறு செய்கின்றாள் எனில் அவளுக்கு அறிவுரை கூறுங்கள்; நல்லறிவு புகட்டுங்கள்; பக்குவமாக எடுத்துரைத்து திருத்துங்கள்; இவ்வாறாக அவளைத் திருத்த முயலுங்கள் என்றே இஸ்லாம் அறிவு றுத்துகின்றது. (பார்க்க : 4 : 34)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;5.2 எச்சரித்தல் : &lt;/b&gt;அறிவுரை சொல்லியும் திருந்தவில்லையா? அறிவுறுத்தி எச்சரிக்கும் விதமாக தற்காலிகமாக அவளைப் படுக்கையிலிருந்து தள்ளி வையுங்கள் என்றும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;5.3 தண்டித்தல் : &lt;/b&gt;நல்லறிவு புகட்டியும் அறிவுறுத்தியும் எச்சரித்தும் கூட மனைவி திருந்தவில்லையெனில் தேவைக்கேற்ப அவளை அடிக்கலாம் என கணவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. (பார்க்க 4 : 34). அண்ணல் நபிகளார்(ஸல்) அவர்கள் மனைவிமார்களை அடிப்பதற்கு அனுமதி வழங்கிய போதெல்லாம் விருப்பமில்லாமல் தான் அனுமதியளித்துள்ளார்கள். மனைவியை அடிப்பது விரும்பத்தக்கதல்ல என்று எடுத்துரைத்துள்ளார்கள். காயமடைகின்ற அளவுக்கு அடிப் பதைக் கண்டித்துத் தடுத்துள்ளார்கள். முகத்தில் அடிக்கக் கூடாது. கன்னத்தில் அறையக் கூடாது. கெட்ட வார்த் தைகளால் திட்டி அவளின் மனதைக் கீறிக் காயப்படுத்தக் கூடாது என்றும் அண்ணல் நபிகளார்(ஸல்) அறிவு றுத்தியுள்ளார்கள். தவறுக்கேற்ப தண்டனை இருக்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;5.4 &lt;/b&gt;மத்தியஸ்தம் செய்தல் : மேலே சொல்லப்பட்ட மூன்று வழிமுறைகளைக் கையாண்டும் மனைவி திருந்தத் தவறினால் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிப் போனால் மண வாழ்வே முறிந்து போகுமோ என்கிற அளவுக்கு நிலைமை முற்றிப் போனால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடு வரையும் மனைவியின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும் நியமித்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளும்படி இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.&amp;nbsp; (பார்க்க 4 : 35) கணவன் மனைவிக்கிடையே இணக்கத்தையும் புரிதலையும் ஏற்படுத்துவதற்காக முயல்வது தான் அந்த இரண்டு நடுவர்களின் முதன்மைப் பொறுப்பாகும்.&lt;br /&gt;
&lt;b&gt;&lt;br /&gt;6.1&lt;/b&gt; பிளவுக்கும் மனக்கசப்புக்கும் வித்திடுகின்ற காரணிகளைக் களைய முடியவில்லை; திருத்துகின்ற முயற்சிகள் அனைத்தும் தோற்று விட்டன; நடுவர்களை வைத்து மத்தியஸ்தம் செய்கின்ற முயற்சியும் கைகூடவில்லை என நிலைமை எல்லை மீறிப் போகும்போது பிரிவுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. அந்தப் பிரிவுக்கான நடவடிக்கையின் போது கூட மீண்டும் இணைவதற்கான கதவு சற்றே திறந்து வைக்கப்படுகின்றது என்பது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பு. இப்போது தலாக் கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னவென்று பார்ப்போம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;6.2&lt;/b&gt; தலாக் கொடுக்கின்ற சமயத்தில் மனைவி தூய்மையான நிலையில் இருக்க வேண்டும். அதுவும் இரண்டு சாட்சிகளை முன்னிறுத்தி சொல்ல வேண்டும். ஏதாவது காரணத்தால் மனைவி அந்த இடத்தில் இல்லாமல் போனால் காகிதத்தில் எழுதிக் கூட கொடுக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;6.3 &lt;/b&gt;மனைவி தூய்மையான நிலையில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.&amp;nbsp; தூய்மையான நிலை என்பதற்கு என்ன பொருள்? அதாவது அவள் மாதவிடாய் (பெண்களுக்கு மாதம் ஒரு முறை ஏற்படும் இரத்த வெளியேற்றம்) ஏற்படாத நிலையில் இருக்க வேண்டும். மாதவிடாய்க்கு ஆளாகி இருக்கின்ற நிலையில் தலாக் சொல்வது ஹராம் ஆகும். கணவனுடன் உடலு றவு செய்த தூய நிலையில் தலாக் சொல்வதும் ஹராம் ஆகும். (பார்க்க : அத்தியாயம் அத்தலாக், மஆரிஃபுல் குர்ஆன்).&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;6.4 &lt;/b&gt;ஒற்றை தலாக் சொல்லி பெண்ணை விட்டு விட்ட பிறகு இத்தா காலம் கழிந்து விட்டதெனில் அவள்&amp;nbsp; திருமணத்திலிருந்து விடுதலை பெற்று விடுவாள். மூன்று தடவை மாதவிடாய் ஏற்பட ஆகின்ற கால அளவைத் தான் இத்தா காலம் என்று சொல்கின்றார்கள். கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் நிகழ்கின்ற வரை அல்லது கரு கலைகின்ற வரை ஆகின்ற கால அளவு தான் இத்தா காலம் ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;6.5 &lt;/b&gt;இந்த இத்தா காலம் முழுவதிலும் பெண் தன்னுடைய கணவனின் வீட்டிலேயே இருப்பாள். கணவன் அவளை வீட்டை விட்டு வெளியேற்றக் கூடாது. அவ ளும் தானாக வீட்டை விட்டு வெளியேறிச் செல்லக் கூடாது. (பார்க்க 65 : 1) அவ்வாறு வெளியேற்றினாலோ அல்லது தானாக கோபித்துக் கொண்டு வெளியேறினாலோ இருவரும் பெரும் பாவம் இழைத்தவர்களாவர். இந்தக் கட்டளையில் இழையோடுகின்ற உளவியல் நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். தலாக் சொல்லப் பட்ட பிறகும் இத்தா காலம் முடிகின்ற வரை ஒரே வீட்டில் தங்கி இருப்பதால் இருவரும் மீண்டும் பேசுவதற் கும் இரண்டு மனங்களும் மீண்டும் இணைவதற்கும் உள்ளங்கள் கனிவதற்கும் ஒரு சின்ன வாய்ப்பு மலர்வதற்கு சாத்தியம் இருக்கின்றது. தலாக் சொல்லப்பட்ட பெண் நடத்தை கெட்ட பெண்ணாக இருந்தால் மட்டுமே வீட்டை விட்டும் வெளியேற்றுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;6.6 &lt;/b&gt;இத்தா காலத்தில் பெண்ணின் உணவு, பராமரிப்பு ஆகியவற்றுக்கான பொறுப்பு கணவனுக்கு உரிய தாகும். இந்தப் பொறுப்பை அவன் தொடர்ந்து நிறை வேற்ற வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;6.7 &lt;/b&gt;ஒற்றை தலாக் சொல்லி இருந்தால் இத்தா காலத்தில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. நிகாஹ் ஸானி என்கிற இரண்டாவது நிகாஹ் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் அவளை அலைக்கழிக்க வேண்டும்; தொல்லை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் மீண்டும் இணையக் கூடாது. இத்தா காலம் முடிந்ததும் நல்லபடியாக அவளை அனுப்பி விட வேண்டும் (பார்க்க 2 : 231)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;6.8 &lt;/b&gt;மீண்டும் இணைய விருப்பம் இல்லையானால் இத்தா காலம் முடிந்ததும் அவளை நல்ல முறையில் அனுப்பி விட வேண்டும். இத்தா காலம் முடிந்த பிறகு அந்த இரண்டு மனங்களும் மீண்டும் இணைய விரும்பினால் நிகாஹ் செய்து கொள்ளலாம். (ஒற்றை தலாக் மட் டும் சொல்லி இருந்தால் தான் இந்த வாய்ப்பு)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;6.9 &lt;/b&gt;இத்தா காலம் முடிவடைந்த பிறகு பெண்ணை நல்ல முறையில் அனுப்ப வேண்டும் என்பதன் விளக்கம் பின்வருமாறு : &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;அ) &lt;/b&gt;முதலாவதாக, நிகாஹ்வின் போது அவளுக்குக் கொடுத்திருக்க வேண்டிய மஹர் கொடுக்கத் தவறி இருந்தால் அதனைக் கொடுத்து விட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஆ) &lt;/b&gt;நிகாஹ்வின் போது பெண் தன் தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சாமான்கள், பொருட்கள் மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் அனைத்தும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;இ) &lt;/b&gt;நிகாஹ்வின் போது கணவனும் மற்ற உறவினரும் அவளும் கொடுத்த நகைகள் மற்றும் அன்பளிப்புகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஈ) &lt;/b&gt;கணவன் உகந்த முறையில் ஏதாவது பொருளைக் கொடுத்தே அனுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். (பார்க்க 2 : 241)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;7.1 தலாக்கே ரஜஈ :&lt;/b&gt; பெண் தூய்மையான நிலையில் இருக்கும் போது ஒற்றை தலாக் கொடுத்துவிட்டு இத்தா காலத்தைக் கழிக்கட்டும் என்றும் விட்டு விடுதல். இத்தா காலம் முடிவடைவதற்கு முன்பு மீண்டும் இணைந்து விடுவதற்கு உரிமை உண்டு. இத்தா காலம் முடிவடைந்த பிறகும் பரஸ்பர இணக்கத்துடன் மீண்டும் நிகாஹ் செய்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;7.2 தலாக்கே பாயின் :&lt;/b&gt; ஒரே மூச்சில் இரண்டு தலாக் அல்லது விட்டு விட்டு இரண்டு தடவை தலாக் சொல்லுதல். இரண்டாவது தலாக் சொன்ன பிறகு மீண்டும் இணைவதற்கான உரிமை இல்லை. ஆனால் இத்தா காலத்தின் போதோ அல்லது இத்தா காலம் முடிவடைந்த பிறகோ பரஸ்பர இணக்கத்துடன் மீண்டும் நிகாஹ் செய்துகொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;7.3&lt;/b&gt; &lt;b&gt;தலாக்கே முகல்லிஜ : &lt;/b&gt;மனைவி தூய்மையான நிலை யில் இருக்கும் போது ஒரே மூச்சில் அல்லது விட்டு விட்டு மூன்று முறை தலாக் சொல்லுதல். மூன்றாவது தலாக் சொன்ன அந்தக் கணத்திலேயே பெண் ஹராமாகி விடுகின்றாள். அதற்குப் பிறகு இணைவதற்கும் வாய்ப் பில்லை. இத்தா காலம் முடிந்த பிறகு மீண்டும் நிகாஹ் செய்து கொள்வதற்கும் வாய்ப்பில்லை. இத்தா காலம் முடிவடைந்த பிறகு அந்தப் பெண்ணுக்கும் வேறொரு வருக்கும் திருமணம் நடந்து அவருடன் இல்லற வாழ்வு நடத்திய பிறகு அந்த நபர் அவளைத் தலாக் கொடுத்து விட்டாலோ அல்லது அந்த நபர் இறந்துவிட்டாலோ தான் முதல் கணவனுடன் அவள் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள முடியும். இதனைத்தான் ஹலாலா என்கின்றோம். யதேச்சையாக இவ்வாறு அமைந்துவிட் டால் பாதகமில்லை. ஆனால் இவ்வாறு திட்டமிட்டு ஹலாலா திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்ட தல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;8.1 தலாக்கே அஹ்ஸன் : &lt;/b&gt;மனைவி தூய்மையான நிலையில் இருக்கின்ற போது ஒற்றை&amp;nbsp; தலாக் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒற்றை தலாக் கொடுத்து இத்தா காலம் முடிவடைந்து விடுகின்றது எனில் இந்த வகையான தலாக்குக்கு தலாக்கே அஹ்ஸன் என்று சொல் வார்கள். தலாக்கின் வகைகளிலே இஸ்லாத்தில் மிக அதிகமாக விரும்பப்படுகின்ற தலாக் இது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;8.2 &lt;i&gt;தலாக்கே ஹஸன்&lt;/i&gt;&lt;/b&gt; மனைவி தூய்மையான நிலையில் இருக்கின்ற போது ஒரு தலாக் கொடுக்க வேண்டும். அவருக்கு இரண்டாவது தடவை மாத விடாய் ஏற்பட்டு தூய்மையடைந்த நிலையில் இருக்கின்ற போது இரண்டாவது தலாக் கொடுக்க வேண்டும். அடுத்து மூன்றாவது தடவை மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையான நிலையை அடைந்த பிறகே மூன்றாவது தலாக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று தவணைகளில் இடைவெளி விட்டு விட்டு மூன்று தலாக் சொல்வதைத் தான் தலாக்கே ஹஸன் என்று சொல்கின்றார்கள். இஸ்லாத்தில் இந்த வகையான தலாக்குக்கு அனுமதி இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;8.3&lt;/b&gt; &lt;b&gt;தலாக்கே பித்அத்:&lt;/b&gt; ஒரே மூச்சில் ஒன்றுக்கு மேற் பட்ட தலாக் கொடுப்பதையும் அல்லது ஒரு தூய்மை யான நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட தலாக் கொடுப்பதையும் அல்லது மனைவி மாதவிடாய் இருக்கின்ற சமயத்தில் தலாக் கொடுப்பதையும் அல்லது மனைவி தூய்மையான நிலையில் இருந்தாலும் அவளுடன் கணவன் உடலுறவு கொண்டிருப்பாரேயானால் அந்தத் தூய நிலையில் தலாக் கொடுப்பதையும்&amp;nbsp; தலாக்கே பித்அத் என்பார்கள். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp; இவ்வாறு&amp;nbsp; தலாக் கொடுப்பவர் பாவியாவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;9.1&lt;/b&gt; பெண் மாதவிடாய்க்காளாகி இருக்கின்ற போது ஒருவர் தெரியாத்தனமாக தலாக் கொடுத்து விட்டால் உடனே சேர்ந்து விடுவது வாஜிபாகும். இது மீண்டும் சேர்வதற்கான தகுதி கொண்டதாக இருக்க வேண்டியது அவசியமாகும் (மஆரிஃபுல் குர்ஆன்). &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;9.2 &lt;/b&gt;தலாக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதற்குத் தவிர்க்க முடியாத காரணம் இருக்கின்ற பட்சத்தில் அவ ளுடன் சேர்ந்துவிட வேண்டும். அவள் தூய்மையான நிலையை எய்திய பிறகு மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அந்த மாதவிடாயும் முடிந்து அவள் தூய்மையான நிலையை அடைகின்ற வரை திருமண ஒப்பந்தத்தில் அவளைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.&amp;nbsp;&amp;nbsp; அதன் பிறகு தலாக் கொடுப்பதை அவசியம் என உணர்ந்தால் அவள் தூய்மையான நிலையில் இருக்கும் நேரத்தில் அவளுடன் உடலுறவு கொள்ளாத நிலையில் தலாக் கொடுக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;9.3&amp;nbsp;&lt;/b&gt; ஒருவர் தாம் செய்தது தான் சரி என்று முரண்டு பிடித்தால் தாம் செய்தது தவறு, பாவம் என்று அறிந்த பிறகும் அதிலேயே நிலைத்து நின்றால், மனைவியுடன் மறுபடியும் சேர்வதற்கு இணங்கவில்லையெனில் அந்தத் தலாக் உறுதியாகி விடுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;9.4.&lt;/b&gt; மனைவி தூய்மையான நிலையில் உடலுறவு கொண்டிருக்க, அதன் பிறகு கரு தரித்ததற்கான அடையாளங்கள் தெளிவாக புலப்படத் தொடங்கி விட்டால் அதன் பிறகு தலாக் கொடுக்கப்படலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;10.1 &lt;/b&gt;ஒன்றுக்கு மேற்பட்ட தலாக்குகளைக் கொடுப் பது இஸ்லாத்தில் கடுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு நடந்து கொள்பவன் மோசமான பாவி ஆவான்.&amp;nbsp;&amp;nbsp; ஒருவர் அறிந்தோ அறியாமலோ அல்லது முட்டாள்தனமாகவோ இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தலாக்குகளைச் சொல்லி விடுகின்றார் எனில் அவருடைய நிலைமை என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;10.2 &lt;/b&gt;தலாக் என்கிற சொல்லைச் சொல்லும் போது ஒற்றை தலாக்கைச் சொல்வது தான் தன்னுடைய எண்ணமாக இருந்தது என்றும், அந்த எண்ணத்தில் தான் அவர் தலாக் என்கிற சொல்லை அழுத்தமாகவும் தெளிவாகவும் விளங்கச் செய்வதற்காக பலமுறை அதனை உச்சரித்ததாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட தலாக்குகளைக் கொடுப்பது தன்னுடைய நோக்கமாக இருக்கவில்லை என்றும் தலாக் சொன்னவர் சத்தியம்&amp;nbsp; செய்து வாக்குமூலம் கொடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். அது ஒற்றைத் தலாக்காகத்தான் கருதப்படும். (கூடுதல் விவரங்களுக்குப் பார்க்க புதுதில்லியின் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள மஜ முஆ குவா னைன் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு)&amp;nbsp; என்கிற நூலின் 144 ஆம் பக்கம்). அந்தத் தலாக் தலாக்கே ரஜஈ என்றே கருத்தில் கொள்ளப்படும். பெண்ணின் இத்தா காலத்தில் மீண்டும் அவளுடன் இணைவதற்கும் இத்தா காலம் முடிவடைந்த பிறகு அவ ளோடு இரண்டாவது தடவையாக திருமணம் புரிந்து கொள்வதற்கும் அனுமதி நீடிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;10.3&lt;/b&gt; ஆனால் ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற் பட்ட தலாக் சொல்லப்பட்ட போது,&amp;nbsp; ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட தலாக் சொல்வதுதான் தலாக் கொடுத்தவரின் எண்ணமாக இருந்ததெனில் அவருடைய எண்ணத்திற்கேற்ப இரண்டு அல்லது&amp;nbsp; மூன்று தலாக்குகள் உறுதியாகிவிடும். &lt;br /&gt;
அந்தத் தலாக் சொன்ன பிறகு இத்தா காலத்திலும் இணைவதற்கு வாய்ப்பிருக்காது. இத்தா காலம் முடிந்த பிறகு இரண்டாவது தடவையாக அதே பெண்ணுடன் நிகாஹ் செய்து கொள்வதற்கும் வாய்ப்பில்லை. யதேச்சையாக ஹலாலா திருமணம் செய்து கொள்வதற்கான சூழல் அமைந்து விட்டாலேயொழிய அந்தப் பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிட்டு ஹலாலா முறையில் திருமணம் செய்து கொள்வது குற்றமும் பாவமும் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;11 .1 &lt;/b&gt;தலாக் கொடுக்கும் போது பெண் தூய்மையான நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த விஷயத்தில் கணவன் கவனக்குறைவுடன் செயல்பட்டாரேயானால் அவர் உடனடியாக தன்னுடைய பிழையை உணர்ந்து கொண்டு உடனடியாக தலாக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;11 .2 &lt;/b&gt;முழுமையாகப் பிரிந்து செல்வதற்கு மூன்று முறை தலாக் சொல்வது அவசியம் என்கிற கருத்தும் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. இது சரியல்ல. ஒற்றை தலாக்குடனும் முழுமையான பிரிவை ஈட்டி விட முடியும். இந்த வகையான தலாக்குக்கு தலாக்கே அஹ்ஸன் என்று பெயர். இது தான் தலாக் கொடுப்பதற்கான சரியான இஸ்லாமிய வழிமுறை ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;11 .3 &lt;/b&gt;தலாக் கொடுத்ததுமே பெரும்பாலான மக்கள் என்ன செய்கின்றார்கள்? உடனடியாக பெண்ணை அவளுடைய பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றார்கள். கணவன் அனுப்பாவிட்டாலும் பெண்ணே சுயமாக வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றாள். இவ்வாறு மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும் பெண் தானாக வீட்டை விட்டு வெளியேறுவதையும் பாவச் செயல்களாக குர்ஆனில் அத்தலாக் அத்தியாத்தில் சொல்லப்பட்டுள்ளது. தலாக் சொல்லப்பட்ட பிறகும் இத்தா காலம் முடிகின்ற வரை கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் தங்கி இருப்பதால் இருவரும் மீண்டும் பேசுவதற்கும் இரண்டு மனங்களும் மீண்டும் இணைவதற்கும் உள்ளங்கள் கனிவதற்கும் ஒரு சின்ன வாய்ப்பு மலர்வதற்கு சாத்தியம் இருக்கின்றது. இதுதான்&amp;nbsp; இந்தக் கட்டளையில் இழையோடுகின்ற உளவியல் நுட்பமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;11 .4 &lt;/b&gt;தலாக் தலாக் தலாக் என ஒரே வீச்சில் மூன்று முறை தலாக் சொல்வதைத் தான் தலாக்கே முக்லிஜ் என்று மக்கள் நினைக்தின்றார்கள். இதுவும் சரியல்ல. ஒற்றை தலாக் சொல்வதுதான் நோக்கமாக இருந்த தெனில் இவ்வாறு கொடுக்கப்பட்ட தலாக் தலாக்கே ரஜஈயாகத் தான் கருதப்படும். முத்தலாக் கொடுப்பது தான் நோக்கமாக இருந்ததெனில் அது தலாக்கே முக்லிஜாகக் கருதப்படும்.&amp;nbsp; (பார்க்க : புதுதில்லியின் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட் டுள்ள மஜமுஆ குவானைன் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு) என்கிற நூலின் 144 ஆம் பக்கம்)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;11 .5&lt;/b&gt; திருமணம் நிலைத்திருந்த காலத்தில் மனை விக்கு பலவிதமான பொருட்களையும் அன்பளிப்பு களையும் கணவன் கொடுத்திருக்கலாம். தலாக் கொடுத்துவிட்ட பிறகு இந்தப் பொருட்களிலும் அன்பளிப்புப் பொருட்களிலும் கடுகுமணியளவு பொருளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;11 .6 &lt;/b&gt;தலாக் கொடுத்துவிட்ட பிறகு தலாக் கொடுக் கப்பட்ட பெண்ணுக்கு தாராளமாகயும் ஏராளமாகவும் இன்னும் அதிக அளவில் கூடுதலாக பொருட்களையும் அன்பளிப்புகளையும் கொடுக்க வேண்டும் என்று கண வனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக இவ்வாறு மக்கள் நடந்து கொள்வதில்லை. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;12.1&lt;/b&gt; பிளவுக்கும் பிரிவுக்கும் வித்திடுகின்ற, குளாவுக்கும் தலாக்குக்கும் இட்டுச் செல்கின்ற காரணங்களைக் களைவதற்கான முயற்சிகள் தோற்றுப் போன நிலையில், சீர்திருத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட சூழலில், மத்தியஸ்தர் மூலமாக பேச்சுவார்த்தைகளை நடத்தியும் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் போகும் போது கடைசிக் கட்ட நடவடிக்கையாக கணவனுக்கு தலாக் கொடுக்கின்ற அதிகாரம் இருப்பதைப் போல பெண்ணுக்கும் குளா வாங்கிக்கொள்கின்ற உரிமையைப் பயன்படுத்திக் கொள்கின்ற அதிகாரம் உண்டு.&amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;12.2 &lt;/b&gt;அவள் என்ன செய்வாள்? கணவன் தனக்குக் கொடுத்த மஹரையும் பிற பொருள்கள் முழுவதையும் அல்லது அவற்றில் ஒரு பகுதியையும் கணவனிடம் திரும்பக் கொடுத்துவிட்டு திருமண ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதற்கு அவனை இணங்கச் செய்வாள். பிறகு இருவரும் திருமண ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது என்று முடிவெடுப்பர். அதன் பிறகு கணவன் அவளுடைய கருத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அவளுக்குத் தலாக் கொடுப்பான் அல்லது அதற்கு ஒத்தப் பொருள் உள்ள சொற்களைச் சொன்னாலும் குளா ஆகி விடும். இதுதான் குளா வாங்குவதற்கான வழிமுறை ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;12.2&lt;/b&gt; இந்த வகையில் குளா பெறுகின்ற வழிமுறை தலாக்கே பாயின் வகையைச் சார்ந்ததாகும். இந்த வழி முறையில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை. இருந்தாலும் பரஸ்பர ஒப்புதலுடன் மீண்டும் ஒரு முறை நிகாஹ் செய்து கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;12.4&lt;/b&gt; தலாக் கொடுக்கும் போது இத்தா காலத்தில் பேணப்பட வேண்டிய அதே சட்டதிட்டங்கள் குளா வாங்கிய பிறகும் இத்தா காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;13.1 &lt;/b&gt;பொதுவாக தலாக், குளா போன்ற பிரச் னைகள் குடும்பத்துக்குள்ளேயே குடும்பப் பெரியவர்களை மத்தியஸ்தராக வைத்துக் கொண்டு தீர்க்கப்பட வேண்டும் என்றுதான் இஸ்லாம் விரும்புகின்றது. அத்தகைய வழிமுறை தான் கையாளப்பட வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்துகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;13.2 &lt;/b&gt;ஆனால் சமுதாயத்தில் சில சமயம் இவ்வாறு நடப்பதில்லை. எடுத்துக்காட்டாக குளா விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். பிரிந்து விடுவோம் என்று மனைவி விரும்புவாள். ஆனால் கணவனோ பிரிவு வேண்டாம் என்று முரண்டு பிடிப்பான். இத்தகைய சூழலில் காஜி என்கிற சமுதாய நீதியரசர் அந்த இருவருக்கிடையிலான திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி கட்டளை பிறப்பிக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;13.3&lt;/b&gt; இதே போன்று மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு கணவன் தலைமறைவாகி விட்டாலோ இவ்வாறு கணவனைப் பற்றிய எந்தத் தகவலுமின்றி நீண்ட நெடுங்காலம் உருண்டோடிவிட்டாலோ கூட காஜி தீர்ப்பு வழங்கலாம். இதே போன்ற பல்வேறு பிரச் னைகளை எதிர் கொள்ள நேரிடும் போது காஜியை பெண் அணுகலாம். தன்னுடைய நிகாஹ்வை ரத்து செய்து தீர்ப்பு வழங்கும் படி விண்ணப்பிக்கலாம். இவற் றைப் பற்றிய கூடுதல் விவரங்களை புதுதில்லியின் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளி யிட்டுள்ள மஜமுஆ குவானைன் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு) என்கிற நூலில் பார்க்கலாம். (இந்த நூலை வெளியிட்ட அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் முகவரி : 76/A okhla main market Jamia Nagar, New Delhi 110 025 phone 26322991)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;14.1&lt;/b&gt; தலாக் செய்வதற்கான ஏற்பாடு முழுக்க முழுக்க அநீதியானது ஆகும். பெண்ணுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிதான் தலாக். எனவே பெண்ணை தலாக் செய்கின்ற உரிமை ஆணுக்குக் கொடுக்கப்படக் கூடாது. இந்த ஆட்சேபத்துக்கு என்ன பொருள்? ஒரு தடவை திரு மணம் நடந்துவிட்டதெனில் அந்தக் கணவனும் மனை வியும் வாழ்நாள் முழுவதும் சாகின்ற வரை கணவன் மனைவியாகவே இருக்க வேண்டும் என்பது தானே..! அவர்களுக்கிடையே என்னதான் பெரும் பிணக்கும் மோதலும் மூண்டுவிட்டாலும் எவ்வளவுதான் வெறுப் பும் குரோதமும் மனங்களில் மண்டி விட்டாலும் அந்த இருவரும் இறுதிமூச்சு வரை கணவன் மனைவியாகவே சேர்ந்து வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது மனித இயல்புக்கும் நியாயத் துக்கும் முரணானது அல்லவா..! முற்காலத்தில் இணைவைப்பாளர் சமூகங்களிலும் கிறிஸ்துவர்களிடையிலும் இத்தகைய நடைமுறைகள் இருந்தன..! இப்போது அவர்கள் கூட விவாகரத்தின் தேவையை உணர்ந்து அதற்கு சட்டரீதியான அந்தஸ்து கொடுத்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;14.2&lt;/b&gt; இவர்கள் இன்னொன்றையும் சொல்கின்றார் கள். தலாக் கொடுப்பதற்கான அதிகாரத்தை ஆணுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக நீதிமன்றத்திற்குக் கொடுக்கப் பட வேண்டும் என்பது தான் இவர்களின் வாதம். குடும்பத்தில் குடும்பப் பெரியவர்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னையை வேலையற்ற வேலையாக நீதி மன்றத்துக்கு எடுத்துச் செல்வதையும் அங்கு சென்று எல்லா விவரங்களையும் புட்டுபுட்டு வைப்பதையும் கண்ணியம் மிக்க நபர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். அது மட்டுமல்ல, பொதுவாக நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு பல்லாண்டுகள் ஆகிவிடுகின்றன. அந்தத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தையும் அந்த இருவரும் நரகவேதனையில் கழிக்க வேண்டுமா, என்ன? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;14.3&lt;/b&gt; மூன்று முறை தலாக் கொடுப்பதற்கான அதிகாரம் ஆணுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதேன் என்பது இவர்கள் எழுப்புகின்ற இன்னொரு ஆட்சேபணை. மூன்று முறை தலாக் கொடுக்கலாம் என்று இஸ்லாம் அளித்துள்ள அனுமதியை இஸ்லாம் பெண்களுக்குச் செய்துள்ள மிகப் பெரும் அருட்கொடை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இஸ்லாம் அல்லாத சமூகத்தில் எப்படிப்பட்ட பழக்கம் வேரூன்றி இருந்தது, தெரியுமா? அந்தச் சமூகத்து ஆண்கள் தம்முடைய மனைவியரை தலாக் செய்வார்கள். பிறகு மீண்டும் அவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வார்கள். சிறிது காலம் கழித்து மீண்டும் தலாக் கொடுப்பார்கள். பிறகு மீண்டும் அவர்களைச் சேர்த்துக் கொள்வார்கள். இவ்வாறு ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை அல்ல கணக்கு வழக்கின்றி தலாக் கொடுப்பார்கள்; சேர்த்துக் கொள்வார்கள். பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கத்துடன் தான் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்று தடவை தலாக் கொடுக்கலாம் என்கிற இஸ்லாத்தின் சட்டத்தைப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;14.4 &lt;/b&gt;தலாக் கொடுப்பதை இஸ்லாம் மிகவும் எளிதாக்கி விட்டுள்ளது என்பது இவர்கள் சொல்கின்ற அடுத்தக் குற்றச்சாட்டு ஆகும். இதுவும் ஒரு தவறான கருத்து தான். தலாக் கொடுப்பது எளிதானதாகத் தோற் றமளிக்கின்றதே தவிர, உண்மையில் தலாக் கொடுப் பதற்கான நடைமுறை பல்வேறு நிலைகளைக் கொண் டதாக ஆக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு மனங்கள் சேர்ந்து வாழும் போது கருத்து வேறுபாடுகள் மூள்வது இயல்பானதே. முதலில் அந்தக் கருத்து வேறுபாடுகளைக் குறைப்பதற்கான முயற்சிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. முதலில் அறிவுரை கூற வேண்டும். பிரச்னை தீரவில்லையா, எச்சரிக்கின்ற விதத்தில் படுக்கையிலிருந்து விலக்கி வையுங்கள். அதற்கு பின்பும் சிக்கல் நீடிக்கின்றதா, அடியுங்கள். அடிக்கும் விஷயத்திலும் தெளிவான வரைமுறைகளை இஸ்லாம் வரையறுத்துள்ளது. முகததில் அறையக் கூடாது. காயம் ஏற்படுகின்ற அளவுக்கு அடிக்கக் கூடாது என்றெல்லாம் நெறிமுறைகள் உள்ளன. அதன் பிறகும் பிரச்னை தீரவில்லையெனில் குடும்பப் பெரியவர்கள் இருவரை மத்தியஸ்தர்களாக ஆக்கிக் கொண்டு பிரச்னையைத் தீர்க்கப் பாருங்கள். அதற்குப் பிறகும் பிரச்னை தீரவில்லையெனில் தலாக் கொடுங்கள். அதிலும் அவசரப்படக் கூடாது. தூய்மையான நிலைக்காகக் காத்திருங்கள். முதலிலேயே மூன்று தலாக் கொடுத்து விடாதீர்கள். ஒற்றை தலாக் கொடுங்கள். அதிலும் இத்தா காலத்திலேயே மனங்கள் இளகி மீண்டும் இணைவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இத்தாவில் சேரவில்லையா, இத்தா முடிந்த பிறகு நிக்காஹ் செய்து கொள்ளுங்கள் என அதற்குப் பிறகும் சேர்வதற்கான கதவு திறந்தே வைக்கப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
போதாக்குறைக்கு தலாக் கொடுப்பது விரும்பத்தக்க செயல் அல்ல என்று திரும்பத் திரும்பத் தெளிவுபடுத்தப்படுகின்றது. ஹலாலான (ஆகுமான) விஷயங்களில் இறைவன் மிக அதிகமாக வெறுக்கின்ற செயல் தலாக் தான் என்று நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது. தலாக் கொடுக்கும்போது இறைவனின் அர்ஷ் என்கிற ஆட்சிக் கட்டில் நடுங்கு வதாகவும் நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது. ஆக இந்த நிலைகள் எல்லாவற்றைக் கடந்த பிறகும் அந்த இருவரும் பிரிந்து விடவே விரும்புகின்றார்கள் எனில் அவர்களால் சேர்ந்து வாழ முடியாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. அத்தகைய சூழலில் அவர்கள் பிரிந்து செல்வதுதான் இரண்டு பேருக்கும் நன்மை அளிக்கும். ஆக, இறுதிக்கட்ட நடவடிக்கையாகத்தான் தலாக் கையாளப்படுகின்றது. எடுத்த எடுப்பிலேயே ஒரே மூச்சில் மூன்று தலாக் சொல்வதை இஸ்லாம் என்றுமே அங்கீகரித்ததில்லை. அதனைக் கண்டிக் கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;14.5 &lt;/b&gt;தலாக் கொடுக்கின்ற அதிகாரம் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று பெண்களுக்கும் ஏன் வழங்கப்படவில்லை? அதற்கு மாறாக கணவனுக்குப் பணம் கொடுத்து இணங்கச் செய்யுங்கள் என்று பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்டிருப்பதேன்? என்பது இவர்களின் அடுத்த ஆட்சேபணையாகும். இதற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலாவதாக, நிகாஹ் செய்துகொள்ளும்போது பணம் கொடுத்து அதாவது மஹர் கொடுத்து நிகாஹ் செய்யுங்கள் என்று ஆண்களுக்குக் கட்டளையிடப்பட் டுள்ளது. அதனால் பிரிவின் போது பெண்களுக்கு இவ்வாறு பணம் கொடுத்து, மஹரைத் திருப்பிக் கொடுத்து குளா பெற்றுக் கொள்ளுங்கள் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாவதாக, ஆண்களுக்கு இணங்கச் செய்யுங்கள் என்பது எந்த அளவுக்கு பொருளைத் திருப்பித் தர வேண்டும் அல்லது எத்துணை ரொக்கப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்பது பற்றிய இணக்கத்தைத் தான் குறிக்கும். கணவன் முரண்டு பிடித்தா லும் அந்தத் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்கின்ற ஃபஸ்க்கே நிகாஹ் அதிகாரம் காஜிக்கு உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்றாவதாக, பொதுவாக மனித சமூகத்தில் ஆண் தான் பெண்ணுக்கு பொன்னும் பொருளும் கொடுக்கின்றான். பொருளை வாங்கிக் கொள்வேன்; ஆனால் திருமண பந்தத்தில் இருக்க மாட்டேன் என்று சொல்வது எந்த ஊர் நியாயம்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;15.1 &lt;/b&gt;பொதுவாக பெண்களுக்கு இஸ்லாம் வழங்கி இருக்கின்ற உரிமைகளையும் குறிப்பாக குளா வாங்கிக் கொள்ளலாம் என்கிற உரிமையைம் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இதனால் தலாக் என்பது பெண்களுக்கு அநீதி இழைக்கின்ற ஒன்று என்பது போல அவர்களுக்குத் தோன்றுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;15.2 &lt;/b&gt;தலாக் பற்றிய சட்டதிட்டங்கள், அது தொடர்பாக படிப்படியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அது தொடர்பான இஸ்லாமிய அறவுரைகள் போன்ற யாதொன்றையும் அறியாதவர்களாக சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;15.3&lt;/b&gt; இஸ்லாமிய அறவுரைகளுக்கு முரணாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதும் அவர்களைப் பெரிதும் குழப்பி விடுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;15.4&lt;/b&gt; இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் மேற்கத்திய பண்பாடு முன் வைக்கின்ற கருத்தோட்டங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது. ஒரு ஆண் திருமணம் செய்து கொள்கின்றார். தலாக் செய்கின்றார். பிறகு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கின்றார். அதே போன்று ஒரு பெண் திருமணம் செய்து கொள்கின்றார். குளா வாங்கிக் கொள்கின்றார். பிறகு இன்னொரு ஆணை மணந்து கொள்கின்றார். இவ்வாறு இந்த இருவரும் அடிக்கடி செய்கின்றார்கள். இது இஸ்லாத்தின் பார்வையில் மிக மிக வெறுக்கத்தக்க செயல்தான். என்றாலும் இஸ்லாமிய சட்டத்தில் இதற்கு அனுமதி உண்டு. ஏனெனில் இஸ்லாத்தில் ஒரே ஒரு தடவை கூட விபச்சாரத்துக்கும் தகாத உறவுக்கும் இடம் இல்லை. இஸ்லாமிய சட்டத்தில் தகாத உறவில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும்; அந்தத் தகாத உறவில் ஈடுபட்ட ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலுடன் அதில் ஈடுபட்டிருந்தாலும் கூட அது கடுமையான குற்றமாகத் தான் கருதப்படும். ஆனால் இன்று உலகெங்கும் கோலோச்சி வரும் மேற்கத்திய பண்பாட்டில் ஆணும் பெண்ணும் திருமண பந்தத்திற்கு வெளியிலும் பரஸ்பர ஒப்புதலுடன் தகாத உறவை வைத்துக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு ஆண் பல பெண்களோடு திருமண பந்தத்திற்கப்பால் உடலுறவு வைத்துக் கொள்வதையும் ஒரு பெண் பல ஆண்களோடு உடலுறவு வைத்துக் கொள்வதையும் மேற்கத்திய பண்பாடு அங்கீகரிக்கின்றது. இந்தக் கேடுகெட்ட நடத்தைக்கு இஸ்லாத்தில் அறவே இடம் இல்லை. இந்தக் கருத்தோட்டத்தையும் சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு விளக்கிவிடுவது அவகியமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;16.1 &lt;/b&gt;குடும்ப வாழ்வு குறித்து இஸ்லாம் முன் வைக்கும் கட்டளைகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டாம். இதனை ஏதோ சில சட்ட நுணுக்கங்களாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனை எவரோ ஒருவர் வகுத்துத் தந்த சட்டமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தச் சட்டத்தைக் கொடுத்தவன் யார் தெரியுமா? அவன் தான் உங்களை ஆண், பெண் என இணைகளாகப் படைத்தவன் (பார்க்க : 4:1). ஆக உண்மையில் இவை உங்களைப் படைத்தவனிடமிருந்த அனுப்பப்பட்ட சட்டங்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;16.2 &lt;/b&gt;இவற்றை வழங்கியவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அவன் பேராற்றலுடையோனும் நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான். (பார்க்க 2:228)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;16.3 &lt;/b&gt;இவையெல்லாமே இறைவனால் வழங்கப்பட்ட சட்டதிட்டங்கள். விருப்பம் இருந்தால் இவற்றின்படிச் செயல்படலாம், விருப்பம் இல்லாவிட்டால் இவற்றை விட்டுவிடலாம் என்று இருந்து விட முடியாது. இவையெல்லாமே இறைவன் விதித்த வரம்புகளாக இருப்பதால் இவற்றை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. விளையாட்டுத்தனம் இல்லாத பொறுப்பு உணர்வுடனும், நாளை மறுமை நாளில் இவற்றைக் குறித்து இறைவனிடம் பதிலளிக்க வேண்டி இருக்கும் என்கிற விழிப்பு உணர்வுடனும்தான் இவற்றை அணுக வேண்டும். வாழ்க்கையில் நாம் எதிர் கொள்ளும் சிக்கல்களை அழகிய முறையில் தீர்த்துக்கொள்வதற்கு பாதை அமைத்துத் தருகின்ற ஏற்பாடாகத்தான் இவற்றைக் கருத வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் இந்த நெறிமுறைகள் மிகப் பெரும் அருட்கொடைகளாக இருக்கின்றன. அவற்றை மதித்து அவற்&lt;br /&gt;
றின் படிச் செயல்படுவது மிகவும் அவசியமாகும். (பார்க்க : 2 : 231)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;16.4&lt;/b&gt; இந்தச் சட்டத்திட்டங்களை உங்களுக்கு வழங்கிய பிறகு இறைவன் உங்களை அப்படியே விட்டு விட வில்லை. உங்களின் நடத்தை எப்படி இருக்கின்றது என்று அவன் உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (பார்க்க 4 : 1)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;16.5&lt;/b&gt; எனவே இந்த சட்டத்திட்டங்களையும் நெறிமுறைகளையும் மதிக்க வேண்டும். இந்தப் பேரண்டத் தைப் படைத்தவன் அருளிய சட்டங்கள் இவை என்கிற மதிப்பச்சத்துடன் இவற்றை அணுக வேண்டும். இறுதித் தீர்ப்புநாளில் இவற்றைக் குறித்து விசாரிக்கப்படும் என்கிற அச்சமும் இருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;17.1&lt;/b&gt; திருக்குர்ஆனில் அன்னிஸா, அல்பகறா, தலாக் போன்ற அத்தியாயங்களில் நிகாஹ், குளா, தலாக் போன்றவற்றைக் குறித்து அதிகமாகச் சொல்லப்பட்டுள்ளது. இவற்றையும் இன்னும் நிகாஹ், தலாக், குளா குறித்து பேசுகின்ற பிற வசனங்களையும் பல்வேறு குர்ஆன் விரிவுரைகள், நபிமொழி விளக்க நூல்கள் ஆகியவற்றோடும் உலமாக்களின் வழிகாட்டுதலோடும் வாசிக்க வேண்டும். அந்த வசனங்கள் வெளிப்படுத்துகின்ற ஞானத்தையும் பொருளையும் தாத்பர்யத்தையும் உள்வாங்கிக் கொள்ள முயல வேண்டும். முஸ்லிம்கள் எல்லாரும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;&amp;nbsp;17.2&lt;/b&gt; அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள மஜ்முஆ குவானைன் இஸ்லாமி (இஸ்லாமிய சட்டங்களின் தொகுப்பு) &lt;a href=&quot;http://www.scribd.com/doc/73252460/11/Chapter-2-General-Principles-of-Talaq&quot; target=&quot;_blank&quot;&gt;Compendium of Islamic Laws &lt;/a&gt;என்கிற நூலில் நிகாஹ், தலாக், இத்தா,ளிஹார், லிஆன், ஈலா, குளா, ஃபஸ்க்கே நிகாஹ்,&amp;nbsp; ஹிபா, வஸிய்யத், வாரிசுரிமை, வக்ஃப் போன்ற எல்லாவற்றுக்கும் தெளிவான விளக்கங்களும் விரிவான சட்டவிளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன. இவற்றை வாசிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்த நூல் ஒவ்வொரு முஸ்லிமுடைய வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் ஆகும். (இந்த நூலை வெளியிட்ட அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் முகவரி : 76/A okhla main market Jamia Nagar, New Delhi 110 025 phone26322991)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;17.3&lt;/b&gt; இந்தப் பிரச்னைகள் குறித்தும் இவற்றைப் பற்றிய மார்க்க நிலைப்பாடுகள் பற்றியும் முஸ்லிம் சமுதாயத்துக்குக் கற்பிப்பதும் எடுத்துரைப்பதும் மிகவும் அவசியமாகும். குறிப்பாக ‘ஒற்றை தலாக்குடன் பிரிந்து போதல்’, ‘தலாக் கொடுக்கும் போது பெண் தூய்மை யான நிலையில் இருக்க வேண்டிய அவசியம்’, ‘ஒரே மூச்சில் மூன்று தலாக் சொல்வது பாவம் ஆகும்’, ‘ஒரே அமர்வில் மூன்று தலாக் கொடுக்கின்ற விஷயத்தில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்’ போன்றவற்றைக் குறித்து முஸ்லிம் சமுதாயத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;17.4&amp;nbsp;&lt;/b&gt; மஸ்லக் அடிப்படையில் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த வேறுபாடுகளை இஸ்லாமிய ஷரிஅத் அனுமதிக்கின்றது. எனவே இந்த மஸ்லக் பிரச் னையில் தீவிரமான, கடுமையான நிலைப்பாட்டை எடுத்து இவற்றைப் பெரிதுபடுத்தாமல் தத்தமது மஸ்லக்கைச் சேர்ந்த உலமாக்களின் வழிகாட்டுதலில் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள முயல்வது சிறப்பானதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;17.5&lt;/b&gt; இந்த சட்டத்திட்டங்களை சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இந்தப் பிரச்னைகளுக்கு இஸ்லாம் வழங்குகின்ற தீர்வு எந்த அளவுக்கு மனித இயல்புக்கு இணக்கமானதாக இருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைப்பதும் அவசியம் ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
- T.M. &lt;b&gt;அப்துர் ரவூஃப் காலித்&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;span class=&quot;userContent&quot;&gt;&lt;span class=&quot;text_exposed_show&quot;&gt;தமிழில் : டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2013/06/blog-post.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcqxlfivuguNcvK8SIU9MOKn3lEH9PV25cd2XVW5Us8HhcXKKDkh0E5q3ckJW8QSSj5Zp6A1t-JYaoGkDwMeSQ22OSkisraI5L5VLCXIOz-eb7buMuVeJexbdcfoFPwQuQbHzLIq1hi-Y/s72-c/surat-talaq.png" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-5901266497117661361</guid><pubDate>Sat, 10 Nov 2012 16:39:00 +0000</pubDate><atom:updated>2012-11-10T22:09:14.899+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">C. Abdul Jaleel</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Maryam Jameelah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Moulana Syed Jalaluddin Umari</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Oriya Maqbool Jan</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>மேற்கில் உதித்த சூரியன்...</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyF-tpmiLVBekraZd3fnWzW9CUliaAGImU0bUd_mJG-5RgfZ19J8sIgDa-neKvV50z9Qo4w5NH-Ya91ZPz95w_sqgOU_zGZ46IksKUjCwrqzb6wa4rB0HX4SzxjI61Fmi6DlwBSaDE7a8/s1600/MaryamJameelah.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyF-tpmiLVBekraZd3fnWzW9CUliaAGImU0bUd_mJG-5RgfZ19J8sIgDa-neKvV50z9Qo4w5NH-Ya91ZPz95w_sqgOU_zGZ46IksKUjCwrqzb6wa4rB0HX4SzxjI61Fmi6DlwBSaDE7a8/s320/MaryamJameelah.jpg&quot; width=&quot;244&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;strong&gt;மர்யம் ஜமீலா (1934-2012) &lt;/strong&gt;எண்ணற்ற இளைஞர்கள், 
இளம் பெண்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை விதைத்த எழுத்துக்களுக்கு 
சொந்தக்காரர். அவருடைய எழுத்துகளைப் போலவே அவருடைய வாழ்வும் வசீகரமானது. 
மலைக்க வைக்கும். சிந்திக்க வைக்கும். இறையருளை நினைவு கூர வைக்கும்.&lt;br /&gt;

&lt;br /&gt;

மேற்கில் உதித்த சூரியனாய் உலகெங்கும் எண்ணற்ற இதயங்களை தனது 
எழுத்துக்களால் ஈர்த்த மர்யம் ஜமீலா அக்டோபர் 31, 2012 அன்று லாகூரில் 
அவருடைய இல்லத்தில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். &lt;em&gt;இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.&lt;/em&gt;&lt;br /&gt;

இறக்கின்ற வரை அவருடைய பேனா ஓயவேயில்லை. இங்கிலாந்திலிருந்து வெளியாகும்
 தி வர்ல்ட் முஸ்லிம் புக் ரிவியூ காலண்டிதழில் அவர் தொடர்ந்து பல்வேறு 
நூல்களுக்கு விமர்சனம் எழுதி வந்தார்.&lt;br /&gt;

&lt;br /&gt;

&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
&lt;span&gt;&lt;u&gt;&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;span class=&quot;fbUnderline&quot;&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஒரு ஆசை&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;

&lt;br /&gt;

&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;strong&gt;என்னை ஷஃபீக்கா ஆபாவின் பக்கத்தில்... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;

&lt;br /&gt;

‘ஒரு பெண் உலகை விட்டுப் போகும்போது கணவன் கண்ணீர் விட்டு அழுகின்றார்
 எனில் அந்தப் பெண் எத்துணை நற்பேறு பெற்றவளாக இருப்பார் என்பதை நினைத்துப்
 பார்க்க வேண்டும். அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்:&amp;nbsp; ‘ஒரு பெண் வணக்க 
வழிபாடுகளில் பேணுதலாக இருந்து, பெரும் பாவங்களை விட்டு முற்றிலும் விலகி 
இருந்து, அவள் இறக்கின்ற வரை கணவனின் மகிழ்வையும் திருப்தியை யும் 
பெற்றிருந்தாள் எனில் அவள் சுவனவாசி என்பதற்கு நான் உறுதி அளிக்கின்றேன்’&lt;br /&gt;

&lt;br /&gt;

இந்த நபிமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்தாம் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலா அவர்களின் கணவர் யூசுப் கானின் நண்பர் &lt;strong&gt;ஒரியா மக்பூல் ஜான்&lt;/strong&gt; சொல்வதைக் கேளுங்கள்:&lt;br /&gt;

&lt;br /&gt;

‘ஆண்கள் எளிதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். அதுவும் யூசுப் 
கான் போன்ற மிடுக்கான, கம்பீரமான ஆண் மகனைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? 
எல்லா வேளைகளிலும் அவர் பட்டான்களுக்கே உரிய மிடுக்குடனும் கண்டிப்பான 
தோரணையுடனும்தான் பார்த்திருக்கின்றேன். அவரை உணர்ச்சிவசப்பட்டு எந்த 
நாளும் பார்த்ததில்லை. ஆனால் அவர் அந்த மகத்தான பெண்மணியின் மரணத்தின்போது
 குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.&lt;br /&gt;

&lt;br /&gt;

நியூ யார்க் நகரத்தின் ஒரு செக்குலர் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் 
பெண்மணி யூசுப் கானின் இரண்டாவது மனைவி ஆவார். எத்தகைய உணர்வும் உந்துதலும்
 அவரை நியூ யார்க்கிலிருந்து லாகூர் கொண்டு வந்து சேர்த்தது என்பதை யாரால்
 தான் உணர முடியும்? ஆனால் லாகூரில் அந்த இரண்டு மாடி வீட்டில் அவர் யூசுப்
 கானின் இரண்டாவது மனைவியாகச் சேர்ந்து வாழத் தொடங்கியதிலிருந்து அந்த 
வீட்டில் நிலவிய இணக்கமும், அன்பும், பாசமும் இருக்கின்றதே... அதனை 
இறைவனின் அருள் என்றே சொல்ல வேண்டும். இரண்டு பெண்களுக்குள்ளும் 
அப்படியொரு இணக்கமும் அன்பும் இழையோடியது. இருவரின் குழந்தைகளும் சகோதர 
வாஞ்சையுடன் ஒன்றாய்க் கலந்து விட்டார்கள். ஒரே ஒரு நாள் கூட அந்நிய உணர்வு
 அங்கு எட்டிக்கூடப் பார்க்கவில்லை.&lt;br /&gt;

&lt;br /&gt;

குழந்தைகள் முதல் மனைவியை அம்மி (அம்மா) என்றும் இந்தப் பெண்மணியை 
ஆபா(அக்கா) என்றும் அழைத்து வந்தார்கள். குழந்தைகள் முதல் மனைவியின் 
கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் வளர, இந்தப் பெண்மணி உலகம் முழுவதற்கும் 
மேற்கத்திய சிந்தனைகளின் வெற்றுத்தனத்தையும் இஸ்லாத்தின் சத்தியச் 
செய்தியையும் உணர்த்துவதற்காக எழுத்துப் பணி ஆற்றி வந்தார். அதிலேயே ஓயாமல்
 ஒழியாமல் ஈடுபட்டு வந்தார்.&lt;br /&gt;

&lt;br /&gt;

- இவ்வாறு புகழ்பெற்ற எழுத்தாளர் ஒரியா மக்பூல் ஜான் எழுதியிருக்கின்றார்.&lt;br /&gt;

&lt;br /&gt;

அவர் குறிப்பிட்டுள்ள இன்னொரு செய்தி நெஞ்சம் நெகிழச் செய்வதாகும். 
மக்பூல் ஜான் எழுதுகின்றார்: “மர்யம் ஜமீலா அவர்கள் மறைந்த நாள் அன்று நான்
 அவருடைய வீட்டில் ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்காகக் காத்திருந்தேன். மறைந்த
 மர்யம் ஜமீலா அவர்களின் கணவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அந்தப் 
பட்டான் சாகிப் கண்களில் கண்ணீர் மல்க துக்கம் தோய்ந்த குரலில் என்னிடம் 
சொன்ன வாக்கியம் என்னை உருகச் செய்துவிட்டது. தன்னையும் ஷஃபீக்கா 
ஆப்பாவுக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று இறப்பதற்கு 
முன்பு மர்யம் ஜமீலா வசிய்யத் செய்திருந்தாராம். ஆஹா...! என்னே அன்பு.. 
என்னே பாசம்...! இது போன்ற அன்பும் பாசமும் இஸ்லாத்திற்காக எல்லாவற்றையும்
 துறந்துவிட்ட தூய்மையான உள்ளத்தில்தான் உதிக்கும்.”&lt;br /&gt;

&lt;br /&gt;

&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;u&gt;&lt;span class=&quot;fbUnderline&quot;&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஒரு சான்று&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;

&lt;br /&gt;

&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;strong&gt;திருப்பத்தைத் தந்த சென்னைவாசி &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;

&lt;br /&gt;

மர்யம் ஜமீலா இஸ்லாத்தை ஏற்றதில் சென்னைவாசி ஒருவருக்கும் சிறு பங்கு இருந்தது.&lt;br /&gt;

&lt;br /&gt;

அந்த சென்னைவாசியின் பெயர் &lt;strong&gt;சி அப்துல் ஜலீல்.&lt;/strong&gt;&lt;br /&gt;

&lt;br /&gt;

சென்னை நகர ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர்-ஏ-முகாமியாக இருந்துள்ளார். 
வணிகராக, பழ வியாபாரியாக, பத்திரிகையாளராக இருந்துள்ளார். உர்துவிலிருந்து 
ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்ப்பும் செய்து வந்துள்ளார்.&lt;br /&gt;

&lt;br /&gt;

அவர் இவ்வாறு மௌலானா மௌதூதி அவர்களின் ஜிந்தகி பாத் மௌத் என்கிற 
கட்டுரையை (தமிழில் ’மரணத்திக்குப் பின்’ என்கிற பெயரில் தனி நூலாக 
வெளியாகியுள்ளது IFT வெளியீடு. ) ஆங்கிலத்தில் Life after death என்கிற 
பெயரில் மொழிப்பெயர்க்க அதனை தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரிலிருந்து 
அந்தக் காலத்தில் வெளி வந்த முஸ்லிம் டைஜஸ்ட் என்கிற மாத இதழ் வெளியிட, 
நியு யார்க் நகரில் வாழ்ந்து வந்த மார்கரட் என்கிற யூதப் பெண்மணிக்கு 
அந்தக் கட்டுரை வெகுவாக கவர, அவர் மௌலானா மௌதூதியுடன் தொடர்புக் 
கொள்வதற்காக கேப்டவுன் முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகையை தொடர்புக் கொள்ள, 
அவர்கள் சி அப்துல் ஜலீலைத் தொடர்புக் கொள்ள, மெட்ராசிலிருந்து ஜலீல் 
சாகிப் முகவரியை அனுப்ப, மார்கரெட் அம்மையார் மௌலானாவைத் தொடர்புக் 
கொள்ள... அதன் பிறகு நடந்தது வரலாறு ஆயிற்று.&lt;br /&gt;

&lt;br /&gt;

சி. அப்துல் ஜலீல் அவர்களின் அந்த Life after death&amp;nbsp; என்கிற ஆங்கிலக் 
கட்டுரை வெளியான அந்த முஸ்லிம் டைஜஸ்ட் நான் மாநில அலுவலகத்தில் கண்ணாரப் 
பார்த்திருக்கின்றேன். அப்போது அந்தக் கட்டுரைக்குப் பின்னால் இது போன்ற 
சரித்திரம் இருக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.&lt;br /&gt;

&lt;br /&gt;

இன்று அல்கோபாரிலிருந்து &lt;strong&gt;அப்துல் அஸீம் &lt;/strong&gt;என்கிற 
பெரியவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இந்த சரித்திர நிகழ்வின் இன்னொரு 
செய்தியைத் தாங்கியிருந்தது. மேற்படி முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகை, லைஃப் 
ஆஃப்டர் டெத் கட்டுரை போன்றவற்றையெல்லாம் நினைவுகூர்ந்த அப்துல் அஜீம் 
இன்னொன்றையும் சொன்னார்:&lt;br /&gt;

&lt;br /&gt;

“1969-இல் நான் சி. அப்துல் ஜலீல் அவர்களைப் பார்த்தேன். அவர் என்னிடம் 
மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டீஸ் என்கிற 
நூலைக் காட்டினார்.&lt;br /&gt;

&lt;br /&gt;

அதில் ‘ I am glad to present to you my book , as your translation &quot; 
LIFE AFTER DEATH&quot; inspired me to discover Islam&quot;&amp;nbsp; (உங்களுக்கு என்னுடைய 
நூலை அன்பளிப்பாக வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் லைஃப் 
ஆஃப்டர் டெத் என்கிற உம்முடைய மொழிபெயர்ப்புக் கட்டுரைதான் என்னை 
இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது) என மர்யம்ஜமீலா அவர்களே 
கைப்பட எழுதியிருந்தார்.”&lt;br /&gt;

&lt;br /&gt;

மர்யம் ஜமீலாவின் வரலாற்றின் இந்த அம்சம் உண்மையிலேயே மலைக்க வைப்பதாகும்.&lt;br /&gt;

&lt;br /&gt;

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.&lt;br /&gt;

&lt;br /&gt;

பாகிஸ்தானிலிருந்து ஒருவர் ஒரு கட்டுரையை எழுதுகின்றார். அதனை 
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றார். அது தென் 
ஆப்ரிக்காவிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியாகின்றது.&lt;br /&gt;

அந்தக் கட்டுரையை நியூயார்க்கில் வாழ்ந்து வந்த ஒரு பெண்மணி வாசிக்கின்றார். பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்.&lt;br /&gt;

சத்தியத்தைத் தேடியடைகின்ற ஆர்வம் ஒருவருக்கு இருக்குமேயானால் அவருக்கு 
வழிகாட்டுதல் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பதற்காக இறைவன் என்ன 
வேண்டுமானாலும் செய்வான்; எவரை வேண்டுமானாலும் பணியில் ஈடுபடுத்திக் 
கொள்வான் என்பதற்கு மர்யம் ஜமீலாவின் வரலாறு சான்று.&lt;br /&gt;

&lt;br /&gt;

&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;u&gt;&lt;span class=&quot;fbUnderline&quot;&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஒரு கருத்து&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;

&lt;br /&gt;

&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;strong&gt;காலமெல்லாம் பேசப்படும் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;

&lt;br /&gt;

மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இன்னொரு பரிமாணமும் இன்றைய 
அழைப்பாளர்களுக்கும் சத்தியப் போராளிகளுக்கும் பெரிதும் ஊக்கமும் 
உந்துதலும் தருவதாகும். இதனை அமீரே ஜமாஅத் &lt;strong&gt;மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி &lt;/strong&gt;அவர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அமீரே ஜமாஅத் குறிப்பிட்டிருப்பதாவது:&lt;br /&gt;

&lt;br /&gt;

“நியூ யார்க்கில் வாழ்ந்து வந்த தீவிரமான, கட்டுக்கோப்பான மதப்பற்று 
மிக்க யூதக் குடும்பத்தில் பிறந்த மர்யம் ஜமீலா குர்ஆனை வாசித்ததன் மூலமாக 
இஸ்லாத்தின் உண்மைநிலையையும் இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதையும் 
உணர்ந்ததும் சற்றும் தயங்காமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.&lt;br /&gt;

&lt;br /&gt;

எதற்கும் பயப்படவில்லை.&lt;br /&gt;

&lt;br /&gt;

எத்தகைய பேராசைக்கு ஆளாகவில்லை.&lt;br /&gt;

&lt;br /&gt;

உறவினர்களின் அன்புக்குப் பணிந்து விடவில்லை.&lt;br /&gt;

&lt;br /&gt;

எத்தகைய முட்டுக்கட்டைக்கும் குனிந்துபோக-வில்லை.&lt;br /&gt;

&lt;br /&gt;

சத்தியத்தை ஏற்று அதில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் அவருக்கு எந்த
 அளவுக்கு மன உறுதியும் ஊக்கமும் இருந்ததெனில் தன்னுடைய உற்றார் உறவினøயும்
 பிறந்த நாட்டையும் எல்லாவற்றையும் துறந்து அந்நியமான நாடு ஒன்றுக்கு புலம்
 பெயர்ந்தார். ஹிஜ்ரத் செய்துவிட்டார். அதன் பிறகு திரும்பிப் போகவே 
இல்லை.&lt;br /&gt;

&lt;br /&gt;

மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இந்தப் பரிமாணம் ஒளிமயமானதாகும். 
காலமெல்லாம் பேசப்-படக்கூடியதாகும். சத்தியத்தைத் தேடியடைய விரும்பு-கின்ற 
அனைவருக்கும்ஊக்கம் அளிப்பதாகும்’&lt;br /&gt;

&lt;br /&gt;

&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;u&gt;&lt;span class=&quot;fbUnderline&quot;&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஒரு ஏக்கம்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;

&lt;br /&gt;

&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;strong&gt;தமிழில் மொழிபெயர்ப்பது எப்போது? &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;

&lt;br /&gt;

மேற்கில் உதித்த சூரியனாக அறிவுலகில் ஜொலித்த மர்யம் ஜமீலா 
முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். மாக்கியவல்லியின் 
உலகாயதச் சிந்தனைகளை நார் நாராய்க் கிழித்திருக்கின்றார். அய்ரோப்பியர்கள்
 பெரிதும் தூக்கிவைத்துக்கொண்-டாடுகின்ற கிரேக்க தத்துவஞானி பிளாட்டோவை 
ஒரு பிடி பிடித்திருக்கின்றார். வால்டேரின் செக்குலரிசத்தை-யும் சிக்மண்டு 
ஃபிராடின் பாலியல் சார்ந்த உளவியலையும் ப்பூவென ஊதித் 
தள்ளியிருக்கின்றார். பிரிட்டிஷ் அறிஞர் தாமஸ் ராபர்ட் மால்தஸின் 
மக்கள்தொகை அபாய அறிவிப்பையும் கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ சிந்தனையையும் 
எந்த அளவுக்கு அறிவுப்பூர்வமாக, ஆழமாக விமர்சித்திருக்கின்றார் எனில் 
படிப்பவரின் புருவங்கள் வில்லாய் வளைந்துவிடும்.&lt;br /&gt;

&lt;br /&gt;
மேற்கத்திய சிந்தனைகள் மீதான அவருடைய விமர்சனங்கள் கூர்மையானவை. 
கனமானவை. காலத்தை வென்று நிற்பவை. அதே சமயம் ஆழமான தத்துவங்-களையும் 
எளிமையாக, தீர்க்கமாக எழுதுகின்ற வல்லமை அவருக்கு இருந்தது. மர்யம் ஜமீலா 
அத்துடன் நிற்கவில்லை. இந்த மேற்கத்திய பாடாவதி சிந்தனைகளுக்கு மாற்றாக 
ஒளிமயமான இஸ்லாமிய அறவுரைகளை அழகாக, தீர்க்கமாக 
எடுத்துரைத்திருக்கின்றார்.&lt;br /&gt;

&lt;br /&gt;

குறிப்பாக வெஸ்டர்ன் சிவிலிசேஷன் அண்டு தி டிஹியூமனைசேஷன் ஆஃப் 
மேன்கைண்டு என்கிற நூலையும் வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ன்ட் பை 
இட்செல்ஃப் என்கிற நூலையும் இஸ்லாம் அண்டு தி வெஸ்ட் என்கிற நூலையும் 
சொல்லலாம்.&lt;br /&gt;

&lt;br /&gt;
எளிமையான ஆங்கிலத்தில் ஓட்டமும் துள்ளலும் நிறைந்த நட்பு மணம் கமழ்கின்ற
 சரளமான நடையில் ஆழமான கருத்துகளை மிகவும் சாதாரணமாக எழுதி 
முடித்திருக்கின்றார் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலாவின் நூல்கள் தமிழில் 
வெளியாகாமல் இருப்பது ஒரு குறையே. இனி வருங்காலத்திலாவது அவற்றைத் தமிழில் 
வெளியிடுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;/blockquote&gt;
&lt;span&gt;
&lt;/span&gt;
&lt;br /&gt;

மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியல்:&lt;br /&gt;

&lt;br /&gt;
1. ISLAM VERSUS THE WEST (இஸ்லாம் வர்சஸ் தி வெஸ்ட்)&lt;br /&gt;

2. ISLAM AND MODERNISM&amp;nbsp; (இஸ்லாம் அண்டு மாடர்னிஸம்)&lt;br /&gt;

3. ISLAM IN THEORY AND PRACTICE (இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டிஸ்)&lt;br /&gt;

4. ISLAM VERSUS AHL AL KITAB PAST AND PRESENT (இஸ்லாம் வெர்சஸ் அஹ்லே கிதாப் பாஸ்ட் அண்டு பிரசன்ட்)&lt;br /&gt;

5. AHMAD KHALIL (அஹ்மத் கலீல் - வரலாற்று நாவல்)&lt;br /&gt;

6. ISLAM AND ORIENTALISM&amp;nbsp; (இஸ்லாம் அண்டு ஒரியன்டிலிஸம்)&lt;br /&gt;

7. WESTERN CIVILIZATION CONDEMNED BY ITSELF&amp;nbsp; (வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ட் மை இட்செல்ஃப்)&lt;br /&gt;

8.&amp;nbsp; CORRESPONDENCE BETWEEN MAULANA MAUDOODI AND MARYUM JAMEELAH&amp;nbsp; (கரஸ்பான்டன்ஸ் பெட்வீன் மர்யம் ஜமீலா அண்டு மௌலானா மௌதூதி)&lt;br /&gt;

9. ISLAM AND WESTERN SOCIETY (இஸ்லாம் அண்டு வெஸ்டர்ன் சொசைட்டி)&lt;br /&gt;

10. A MANIFESTO OF THE ISLAMIC MOVEMENT (ஏ மானிஃபெஸ்டே ஆஃப் தி இஸ்லாமிக் மூவ்மெண்ட்)&lt;br /&gt;

11. IS WESTERN CIVILIZATION UNIVERSAL (இஸ் வெஸ்டர்ன் சிவிலிசேஷன் யூனிவர்சல்)&lt;br /&gt;

12 WHO IS MAUDOODI ? (ஹு இஸ் மௌதூதி?)&lt;br /&gt;

13 WHY I EMBRACED ISLAM&amp;nbsp; (வை ஐ எம்ப்ரேஸ்ட் இஸ்லாம்)&lt;br /&gt;

14 ISLAM AND THE MUSLIM WOMAN TODAY (இஸ்லாம் அண்டு தி முஸ்லிம் வுமன் டுடே)&lt;br /&gt;

15 ISLAM AND SOCIAL HABITS&amp;nbsp; (இஸ்லாம் அண்டு சோஷியல் ஹாபிட்ஸ்)&lt;br /&gt;

16 ISLAMIC CULTURE IN THEORY AND PRACTICE (இஸ்லாமிக் கல்ச்சர் இன் தியரி அண்டு பிராக்டீஸ்)&lt;br /&gt;

17 THREE GREAT ISLAMIC MOVEMENTS IN THE ARAB WORLD OF THE RECENT PAST
 (த்ரீ கிரேட் இஸ்லாமிக் மூவ்மென்ட்ஸ் இன் தி அரப் வர்ல்ட் ஆஃப் தி 
ரிசென்ட் பாஸ்ட்)&lt;br /&gt;

18 SHAIKH HASAN AL BANNA AND IKHWAN AL MUSLIMUN (ஷேக் ஹஸன் அல்பன்னா அண்டு இக்வான் அல் முஸ்லிமீன்)&lt;br /&gt;

19 A GREAT ISLAMIC MOVEMENT IN TURKEY (ஏ கிரேட் இஸ்லாமிக்மூவ்மெண்ட் இன் துர்க்கி)&lt;br /&gt;

20 TWO MUJAHIDIN OF THE RECENT PAST AND THEIR STRUGGLE FOR FREEDOM 
AGAINST FOREIGN RULE&amp;nbsp; (டூ முஜாஹிதீன்ஸ் ஆஃப் தி ரீசன்ட் பாஸ்ட் அண்டு 
தேயர் ஸ்டிரக்கல் ஃபார் ஃப்ரீடம் அகைன்ஸ்ட் ஃபாரின் ரூல்)&lt;br /&gt;

21 THE GENERATION GAP ITS CAUSES AND CONSEQUENCES&amp;nbsp; (தி ஜெனேரேஷன் கேப் இட்ஸ் காசஸ் அண்டு கான்ஸ்க்யூசன்சஸ்)&lt;br /&gt;

22 WESTERNIZATION VERSUS MUSLIMS&amp;nbsp; (வெஸ் டர்னைசேஷன் வர்சஸ் முஸ்லிம்ஸ்)&lt;br /&gt;

23 WESTERNIZATION AND HUMAN WELFARE (வெஸ்டர்னைசேஷன் அண்டு ஹியூமன் வெல்ஃபேர்)&lt;br /&gt;

24 MODERN TECHNOLOGY AND THE DEHUMANIZATION OF MAN (மாடர்ன் டெக்னாலஜி அண்டு தி டீஹியூமனைசேஷன் ஆஃப் மேன்)&lt;br /&gt;

25 ISLAM AND MODERN MAN (இஸ்லாம் அண்டு மாடர்ன் மேன்)‘&lt;br /&gt;

&lt;span&gt;&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;blockquote&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;strong&gt;டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;/blockquote&gt;
&lt;/span&gt;&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/11/blog-post_5908.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyF-tpmiLVBekraZd3fnWzW9CUliaAGImU0bUd_mJG-5RgfZ19J8sIgDa-neKvV50z9Qo4w5NH-Ya91ZPz95w_sqgOU_zGZ46IksKUjCwrqzb6wa4rB0HX4SzxjI61Fmi6DlwBSaDE7a8/s72-c/MaryamJameelah.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-2907216636874949944</guid><pubDate>Sat, 10 Nov 2012 12:19:00 +0000</pubDate><atom:updated>2012-11-10T17:49:02.441+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Dr K V S Habeeb Muhammad</category><category domain="http://www.blogger.com/atom/ns#">IFT Books</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Islam</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">சாதி ஒழிய.. சமத்துவம் மலர..</category><title>சாதி ஒழிய.. சமத்துவம் மலர..!</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSiKlfY9EN05aSnPaCYKzozGgu2laqXjs5DJX9U_maz9gJ6RLOHDiG_OB4y-FrHvCD2HnayodJkRS09459sgq45xN352rCCce4F3290bJahG6t6gPxyezJ4lGZLQ4BV7JlhDpWmlB2hz0/s1600/Saathi-Ozhiya.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSiKlfY9EN05aSnPaCYKzozGgu2laqXjs5DJX9U_maz9gJ6RLOHDiG_OB4y-FrHvCD2HnayodJkRS09459sgq45xN352rCCce4F3290bJahG6t6gPxyezJ4lGZLQ4BV7JlhDpWmlB2hz0/s320/Saathi-Ozhiya.jpg&quot; width=&quot;208&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
தமிழகத்தில் சில நாள்களாக சாதிக் கலவரங்களும் சாதி உணர்வால் 
உந்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களும் வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து 
நிகழ்ந்து வருகின்றன.&lt;br /&gt;

&lt;br /&gt;
தென் தமிழகத்தில் வெடித்த தீ இன்று வட தமிழகத்திலும் பரவியிருக்கின்றது.
 தர்மபுரியில் 200 ஏழைகள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியக் 
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு கிராமமே காலியாகி இருக்கின்றது.&lt;br /&gt;

&lt;br /&gt;

இதில் வேதனையான முரண்பாடு என்னவெனில் இன்று ஒருவர் மற்றவரை வெட்டிச் 
சாய்க்கத் துடிக்கின்ற இரு தரப்பினருமே சாதிக் கட்டமைப்பில் அடித்தட்டு&amp;nbsp; 
நிலையில் நிற்பவர்களே. மனுதர்மத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சாதிக் 
கட்டமைப்பில் கடைகோடியில் நிற்கின்ற மக்களே ஒருவர் மற்றவரைத் தாக்கிக் 
கொண்டிருப்பதும் திட்டிக் கொண்டிருப்பதும் வேதனையான முரண் ஆகும். சமூக 
விடுதலைக்கான போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மோசமான பின்னடைவாகத்தான் 
இதனைப் பார்க்க வேண்டும்.&lt;br /&gt;

&lt;br /&gt;

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளால், இதயத்தைக்
 கிழிக்கின்ற சுடுசொற்களால் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் பிற சாதியினரைத் 
திட்டுகின்ற போக்கும் அதிகரித்துவிட்டுள்ளது.&lt;br /&gt;

இவர்கள் அவர்களைத் திட்டுகின்றார்கள். அவர்கள் இவர்களைத் 
திட்டுகின்றார்கள். அதே சமயத்தில் சாதிய சிந்தனை முற்றாக ஒழிக்கப் பட 
வேண்டும் என்று விரும்புகின்றவர்களும் ஏராளமானோர் இருக்கின்றார்கள். 
இவர்கள் சாதிக் கட்டமைப்பின் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபடவே 
விரும்புகின்றார்கள்.&lt;br /&gt;

&lt;br /&gt;

சாதிக்கு எதிராக அரசாங்கமும் பலவாறு முயன்று வருகின்றது. பெரியார் முதல்
 பாரதியார் வரை, காந்தி முதல் அம்பேத்கர் வரை சாதி வேறுபாடுகள் ஒழிக்கப் பட
 வேண்டும் என்றே விரும்பி வந்துள்ளார்கள். தமிழகத்தில் சாதி ஒழிப்புக்காக 
மக்கள் இயக்கங்கள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;

&lt;br /&gt;

&lt;ul&gt;
&lt;li&gt;என்றாலும் சாதி ஏன் ஒழியவில்லை?&lt;/li&gt;
&lt;li&gt;மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் கூறு போடுகின்ற கொடுமை ஏன் அகலவில்லை?&lt;/li&gt;
&lt;li&gt;மற்ற சாதிக்காரனைத் தாழ்வாகப் பார்க்கின்ற அவலம் ஏன் களையப்படவில்லை?&lt;/li&gt;
&lt;li&gt;இந்தச் சூழல் நம்மிடம் எதிர்பார்ப்பதென்ன?&lt;/li&gt;
&lt;li&gt;முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;blockquote&gt;
பிளவுபட்டுக் கிடக்கின்ற மக்களை ஒன்றிணைக்க எத்தகைய வழிமுறை கையாளப்பட வேண்டும்?இணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவது&amp;nbsp;&amp;nbsp; எப்படி?&lt;br /&gt;

&lt;/blockquote&gt;
&lt;br /&gt;

இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் விடை தருவதாய் &lt;strong&gt;சாதி ஒழிய.. சமத்துவம் மலர..! &lt;/strong&gt;என்கிற நூல் ஜொலிக்கின்றது.&lt;br /&gt;

இந்த நூலை நாம் அதிகமதிகமாய் பரவலாக்க வேண்டும். நம்முடைய 
நண்பர்களுக்கு,&amp;nbsp; தோழர்களுக்கும் தர வேண்டும். அறிவு ஜீவிகள், 
எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்
 போன்றோருக்கும் இந்த நூல் தரப்பட வேண்டும்.&lt;br /&gt;

&lt;br /&gt;

சாதி ஒழிய.. சமத்துவம் மலர.. என்கிற தலைப்பில் எல்லாத் தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;

&lt;br /&gt;

சாதிப் பேயை ஒழிப்போம். சமத்துவம் சமைப்போம். இணக்கம் காப்போம்.&lt;br /&gt;

எல்லாப் புகழும் இறைவனுக்கே..!&lt;br /&gt;
This book can be purchased online&lt;a href=&quot;http://www.ift-chennai.org/products-page/social-issues/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0-2&quot; target=&quot;_blank&quot;&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;b&gt; Here &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/11/blog-post_10.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSiKlfY9EN05aSnPaCYKzozGgu2laqXjs5DJX9U_maz9gJ6RLOHDiG_OB4y-FrHvCD2HnayodJkRS09459sgq45xN352rCCce4F3290bJahG6t6gPxyezJ4lGZLQ4BV7JlhDpWmlB2hz0/s72-c/Saathi-Ozhiya.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-1016529634172786164</guid><pubDate>Fri, 02 Nov 2012 11:34:00 +0000</pubDate><atom:updated>2012-11-02T17:36:48.826+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Islamic literature</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Najeeb Fazil Kissokerek</category><category domain="http://www.blogger.com/atom/ns#">short story</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Turkey</category><title>மிகப் பெரும் ஆயுதம் : நஜீப் ஃபாஜில்</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpl8rBvpzw0qvoG9FqK8fOCj6s3m_ormrMfmVFe_PhyUwQdtTF71qNez060cLf-p53aTS-cY-SzT96i1ufoCRat8bt3Ohwl4Ulrp1e9ugg2QJScm7zFsJF06c0Nzdvfj2WWmqsIPju3_Q/s1600/Necip-fazil.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpl8rBvpzw0qvoG9FqK8fOCj6s3m_ormrMfmVFe_PhyUwQdtTF71qNez060cLf-p53aTS-cY-SzT96i1ufoCRat8bt3Ohwl4Ulrp1e9ugg2QJScm7zFsJF06c0Nzdvfj2WWmqsIPju3_Q/s1600/Necip-fazil.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
“அம்மா உங்க வயசு என்னம்மா..?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“எழுபது ஆண்டுகள்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அப்படியென்றால் விடுதலைப் போர் சமயத்தில் உங்களுக்கு இருபது அல்லது இருபத்தியோரு வயசு இருந்திருக்கும் இல்லே..”&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஆமாம்’‘&lt;br /&gt;
&lt;br /&gt;
“அன்றிலிருந்து நீங்கள் இந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லையா, அம்மா?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஒரு நாளும் போனதில்லை”&lt;br /&gt;
&lt;br /&gt;
“இத்துணை ஆண்டுகளில் உலகத்தில் மிகப் பெரும் மாற்றங்கள் நடந்துவிட்டுள்ளன அம்மா..”&lt;br /&gt;
&lt;br /&gt;
“கேள்விப்பட்டிருக்கின்றேன்.”&lt;br /&gt;
&lt;br /&gt;
“நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லையா?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“இல்லை”&lt;br /&gt;
&lt;br /&gt;
“என்னுடைய கேள்விகளால் உங்கள் மனம் புண்படுகின்றதா, அம்மா?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அஸ்தக்ஃபிருல்லாஹ். (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக). இதில் போய் மனம் புண்படுவதற்கு என்ன இருக்கின்றது?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“எனக்கு வேறு வழி தெரியவில்லை, அம்மா. உங்களைப் பற்றிய விவரங்களை 
உங்களிடமிருந்து தானே எனக்குக் கிடைத்தாக வேண்டும். ஆனால் நீங்களோ 
ஒருநாளும் தாமாக பழைய நிகழ்வுகளைக் குறித்து சொன்னதே இல்லை. அதனால்தான் 
நானாக உங்களைக் குடைந்து குடைந்து கேட்டுக்கொண்டிருக்-கின்றேன். முந்தைய 
நிகழ்வுகள் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்குச் சொல்லிவிட வேண்டும் என்கிற 
ஆர்வம் உங்களுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
“ம்ஹூம். அப்படியெல்லாம் நான் ஒருநாளும் விரும்பியதில்லை.”&lt;br /&gt;
&lt;br /&gt;
“உங்களுக்கு என்னதான் பிடிக்கும்?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“எனக்கு ஒரே ஒரு ஆசைதான். எப்போதும் ஓதிக்&amp;nbsp; கொண்டே இருக்க வேண்டும்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“எதனை ஓத வேண்டும் என்று ஆசை?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“திருமறையைத்தான்!”&lt;br /&gt;
&lt;br /&gt;
“உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா, அம்மா?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“குர்ஆன் ஓத மட்டுமே தெரியும்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“உங்களுக்கு ஓதக் கற்றுக் கொடுத்தது யார்?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“என்னுடைய தகப்பனார்தான்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“குர்ஆன் ஓதுகின்றவரால் துருக்கி மொழியையும் எளிதாக வாசிக்க முடியும் 
அல்லவா?. பழைய லிபியில் எழுதப்பட்ட வாசகங்களை எளிதாக வாசிக்க முடியுமே..”&lt;br /&gt;
&lt;br /&gt;
“எனக்கு பழைய துருக்கி எழுத்துகளையும் வாசிக்க இயலாது. திருக்குர்ஆனில் 
இருக்கின்ற இறைவாக்கு-களை ஓதுவதுதான் எனக்கு ஈஸியாக இருக்கின்றது. அதனைத் 
தவிர மற்ற எழுத்துகளைப் பார்க்கும்போது அவை புழு பூச்சிகளாய்த்தான் 
தோன்றும்.”&lt;br /&gt;
&lt;br /&gt;
“உங்களுடைய கணவரைப் போல உங்களுடைய தகப்பனாரும் ‘செபிக்’ - ஆக இருந்தாரா?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அவர் ஊர் பள்ளிவாசலில் இமாமாகச் சேவையாற்றி வந்தார். அந்தக் காலத்தில்
 ‘செபிக்’ என்று தனி-யாகக் குலம் கோத்திரம் எதுவும் கிடையாது. என்றாலும் 
அந்தக் காலத்து இளைஞர்கள் மெத்தப் படித்தவர்களாய் மார்க்கத்தைக் 
கற்றவர்களாய் ‘செபிக்’ தனம் இல்லாதவர்களாய், ‘செபிக்’குகளுக்கு சற்றும் 
குறையாத-வர்களாய் இருந்தார்கள்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“இன்றைய இளைஞர்கள்...”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அவர்களின் நிலைமை எல்லாருக்குமே தெரியும்”&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
“உங்களுடைய தகப்பனார் எங்கு இறந்தார்கள்? எப்படி இறந்தார்கள்?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அவர் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து திரும்பி வரவே இல்லை”&lt;br /&gt;
&lt;br /&gt;
“உங்களுடைய தகப்பனார் உங்களுக்கு ஏதேனும் விட்டுச் சென்றாரா?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அங்கே மூலையில் பச்சை பட்டுத் துணியில் சுற்றப்பட்டு இருக்கின்ற 
பொருள் தெரிகின்றதா? அதுதான் திருக்குர்ஆன். அது மட்டும்தான் என்னுடைய 
தகப்பனார் எனக்காக விட்டுச் சென்ற சொத்து. கூடவே அவர் எனக்கு அறிவுரை 
ஒன்றையும் சொன்னார்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அந்த அறிவுரை என்ன?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“இந்த வேதத்துடனான தொடர்பை எந்தக்காலத்திலும் துண்டித்துவிடக்கூடாது”&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஆனால் அப்போது நீங்கள் ஒரு பதின்பருவத்துப் பெண்ணாக அல்லவா, இருந்தீர்கள்?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஆமாம்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அதன் பிறகு உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்-டது. அப்படித்தானே”&lt;br /&gt;
&lt;br /&gt;
“என்னுடைய பத்தொன்பதாவது வயதில் என்னை என்னுடைய மாமா பையனுடன் மணம் 
முடித்தார்கள். கிரேக்கர்கள் சமர்னா நகரத்தை ஆக்கிரமித்துவிட்டிருந்த 
காலத்தில் இது நடந்தது. சில மாதங்களுக்குள்ளாகவே அவர்கள் இந்த ஊருக்கும் 
வந்துவிட்டார்கள். இந்த ஊரையும் ஆக்கிரமித்துவிட்டார்கள். அவர்களின் ஒரு 
படைக்குழுவே - பட்டாலியனே இங்கு வந்துவிட்டது.”&lt;br /&gt;
&lt;br /&gt;
“மேலும் சொல்லுங்கள். அதன் பிறகு என்ன நடந்தது?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“என்னத்தைச் சொல்வது. கேட்டால் சொல்வேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்படியும் என்னைக் குறித்து எல்லாவற்றையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அதை விடுங்க. நான் உங்களிடமிருந்தே அவற்றை-யெல்லாம் அறிந்துகொள்ள 
வேண்டும் என்பதுதான் என் ஆசை. பொதுவாக மக்கள் காரசாரமாக மசாலா சேர்த்தே 
சொல்வார்கள் அல்லவா? இதனால் உண்மையில் என்னதான் நடந்தது என்பது தெரியாமலே
 போய் விடுகின்றது”&lt;br /&gt;
&lt;br /&gt;
“நீங்கள் சரியாத்தான் சொல்றிங்க. மக்கள் என்னைப் பற்றி கதைகதையாய் என்னவெல்லாம் சொல்லிவிட்டார்களோ அந்த இறைவனுக்கே வெளிச்சம்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“நீங்கள் தன்னந்தனியாக ஒரு படைக்குழுவையே - பட்டாலியனையே அடித்து விரட்டி விட்டதாய் மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“இல்லை.&amp;nbsp; இல்லை மகனே! நான் என்ன அந்த அளவுக்குப் பலசாலியா? எனக்கு ஏது 
வலிமையும் சக்தியும். இது திருக்குர்ஆனின் சக்தி நிகழ்த்திய சாதனை. 
குர்ஆனால்தான் எதிரிகள் ஓட்டம் பிடித்தார்கள்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“திருக்குர்ஆனின் சக்தி..?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“வேறென்ன? நீயே சொல் நான் இந்தக் குர்ஆனை என்னுடைய மார்போது 
சேர்த்துக் கட்டிக் கொண்டிருக்-காவிட்டால் என்னால் அவர்களை ஓட ஓட 
விரட்டியிருக்க முடியுமா, என்ன?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஆனாலும் அம்மா, ஒரு ரைஃபிள் அல்லது ஒரு துப்பாக்கி செய்கின்ற காரியத்தை குர்ஆனால் செய்ய முடியாதே”&lt;br /&gt;
&lt;br /&gt;
“குர்ஆனின் ஒரு எழுத்துக்கு எதிராக ஓராயிரம் ரைஃபிள்களும் துப்பாக்கிகளும் நிற்க முடியாது”&lt;br /&gt;
&lt;br /&gt;
“கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன். அன்றைக்கு என்னதான் நடந்தது? எப்படி நடந்தது? என்ன செய்தீர்கள்?”&lt;br /&gt;
&lt;a name=&#39;more&#39;&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
“எங்கள் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள்தாம் ஆகியிருந்தன. கிரேக்க 
சிப்பாய்கள் எங்க ஊர் பள்ளிவாசலின் முற்றத்தில் என்னுடைய கணவரைச் சுட்டு 
ஷஹீதாக்கி விட்டார்கள்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள்?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“எங்களுடைய இளம் பெண்களின் மானத்தோடு விளையாடிய கிரேக்க சிப்பாய் 
ஒருவனை என்னுடைய கணவர் கத்தியால் குத்தி சாகடித்துவிட்டதாகத்தான் அவர்கள் 
சொன்னார்கள். ”&lt;br /&gt;
&lt;br /&gt;
“பிறகு?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அதனைக் கேள்விப்பட்டதும் நான் துடித்து எழுந்தேன். நேராக கிரேக்க 
சிப்பாய்களின் தளபதியிடமே போய் விட்டேன். போவதற்கு முன்னால் குர்ஆனை 
என்னுடைய மார்போடு சேர்த்துவைத்துக் கொண்டு அதன் மீது என்னுடைய புர்காவை 
முழுமையாகப் போர்த்திக் கொண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிரேக்கத் தளபதி அந்த வேளையில் பார்டர் போலிஸின் பழைய சதுக்கத்தில் 
அமர்ந்திருந்தான். பக்கத்திலேயே பெரிய மைதானம் இருந்தது. நான் போன போது 
கிரேக்க தளபதி பூட்ஸ் அணிந்திருந்தான். பூட்ஸ் அணிந்த கால்களை எதிரே இருந்த
 மேஜையில் மீது வைத்து ஆணவத்துடன் அமர்ந்திருந்தான். அவனுக்-குப் 
பக்கத்திலேயே சமர்னாவைச் சேர்ந்த உள்ளுர் கிரேக்க மொழி பேசுகின்ற ஒருவன 
அமர்ந்திருந்தான். அவன் மொழிப்பெயர்க்கின்ற வேலையைச் செய்து 
கொண்டிருந்தான்.”&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஆனால் அம்மா, உங்களுக்கு நேரே தளபதியிடம் போகின்ற தைரியம் எப்படி வந்தது?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“தைரியமா? குர்ஆனின் கட்டளைப்பா அது! தளபதி என்னைப் பார்த்து ‘என்ன விஷயம்?” என்று கேட்டான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் என்னுடைய கணவனின் கொலை குறித்து முறையிட வந்துள்ளேன்’ என்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவன் கேட்டான்: ‘யாருக்கு எதிராக முறையீடு?’.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் சொன்னேன்: ‘உனக்கு எதிராக’. அவன் கொல்லென்று சிரித்துவிட்டான். 
பூட்ஸ் கால்களை மேஜை-யிலிருந்து இறக்கி நாற்காலியில் நேராக அமர்ந்து 
இன்னும் அதிகமாய்ச் சத்தம் போட்டு சிரித்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு அருகில் வந்தவாறு “எனக்கு எதிராக நீ சொல்லப் போகின்ற 
தீர்ப்புதான் என்னவோ?” என்று எக்காளமாகக் கேட்டான். நான் திருக்குர்ஆனை&amp;nbsp; 
என்னுடைய மார்போடு உறுதியாக அணைத்துக்கொண்டேன்.”&lt;br /&gt;
&lt;br /&gt;
“பிறகு என்ன நடந்தது? நீங்கள் என்ன சொன்னீர்கள்?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“நான் சொன்னேன். உன்னுடைய படைக்குழுவைத் திரட்டிக் கொண்டு உடனே இந்த ஊரை விட்டு வெளியேறு. போய்த் தொலை”&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் அப்படிச் சொன்னதும் தளபதிக்கு வியப்பு. வாயடைத்துப் போனான். 
எதனையும் சொல்வதற்கு அவனுக்கு நா எழவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, 
‘எதனை உன்னுடைய மார்போடு அணைத்து வைத்திருக்கின்றாய்?” என்று கத்தினான். 
நான் சொன்னேன்: “இதுதான் உலகிலேயே மிகப் பெரும் ஆயுதம். எந்த அளவுக்கு 
வலிமையான ஆயுதம் எனில் நீ ஒரே கணத்தில் எரிந்து சாம்பலாகிப் போவாய்?”&lt;br /&gt;
&lt;br /&gt;
‘ஆஹா ரொம்ப அற்புதமாக்கும்” என்று அவன் ஏதோ சொன்னான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனிடையே திடீரென்று அங்கு மொழிப்பெயர்ப்பாளராய் அமர்ந்திருந்த 
கிரேக்கன் ‘பாம்.. பாம் குண்டு.. குண்டு’ எனக் கூப்பாடு போடத் 
தொடங்கினான்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அம்மா என்னால் நம்பவே முடியவில்லை”&lt;br /&gt;
&lt;br /&gt;
“மகனே. உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றின் மீது மனிதனுக்கு லேசில் நம்பிக்கை ஏற்படுவதில்லை.”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அதற்குப் பிறகு என்ன நடந்தது?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“கிரேக்கனின் கூப்பாடு தளபதியைப் பீதியடையச் செய்துவிட்டது. அவன் சரேலென்று என்னிடமிருந்து வெகுதொலைவு விலகிச் சென்று நின்றான்.&lt;br /&gt;
இரண்டு பேரும் என்னை விட்டு தொலைவில் விலகி நின்றார்கள். இரண்டு பேர்களின் முகத்திலும் மரண பயம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இருவரின் கண்களும் என் மீதும் என் மார்பு மீதும் குத்திட்டு நின்றன. 
அவ்விருவரும் என் மீதான பயம் கலந்த பார்வையை விலக்காமலே பின்புறமாக நடந்து 
சென்று அறையை விட்டு வெளியே போக முற்பட்டார்கள். வெளியேறினார்கள். 
பக்கத்தில் இருந்த மைதானத்-தில் ஒட்டு மொத்த படைக்குழுவே திரண்டிருந்தது. 
தளபதி அவர்களை நோக்கி தலைதெறிக்க ஓடினான். மொழிபெயர்ப்பாளனும் பின்னாலேயே
 போனான்.”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அவர்கள் உங்களிடமிருந்து ‘அந்தக் குண்டை’ப் பறித்துக் கொள்வதற்கோ கைப்பற்றிக் கொள்வதற்கோ முயலவில்லையா?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அது அவ்வளவு லேசான சமாச்சாரம் கிடையாது. குண்டைக் கைப்பற்றப் போய் அது
 கைதவறி கீழே விழுந்து வெடித்துவிடுமோ என்றும் அவர்கள் அச்சப்பட்டார்கள்.
 சக்தி வாய்ந்த குண்டு வெடித்து ஒட்டுமொத்த படைக்குழுவே சாம்பலாகிப் 
போவார்களோ என்றும் அவர்கள் பயந்தார்கள்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அதன் பிறகு?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“அதன் பிறகு தளபதி கிரேக்க மொழியில் வேகமாகக் கத்தினான். சிப்பாய்கள் எல்லோரும் அவனை நோக்கி விரைந்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது திடீரென்று பள்ளிவாசலிலிருந்து முஅத்தின் சாகிப் உரத்த குரலில்
 பாங்கு சொல்லத் தொடங்கினார். அவருடைய முழக்கம் அன்று எதிரிகளைப் 
பீதியிலாழ்த்திவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னுடைய கணவரின் ஜனாஸாவை தொலைவில் எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வேளையில் திடீரென்று துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம் ஓயாமல் 
ஒலிக்கத் தொடங்கியது. இது துருக்கிய விடுதலைக் கொரில்லாப் படையினரின் 
திடீர் தாக்குதல். அவர்களுக்கு நடந்த சம்பவம் பற்றிய தகவல் போய்ச் 
சேர்ந்து விட்டிருந்தது. ஊரை மீட்பதற்காகத் திரண்டு வந்துவிட்டார்கள். 
மலையடிவாரத்தில் களம் அமைத்து திடீர் தாக்குதல் தொடுத்துவிட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிரேக்க சிப்பாய்கள் குழம்பிப் போனார்கள். பயம். பீதி. அச்சம் எல்லாம் அவர்களை ஒருசேரக் கவ்விப்பிடித்துவிட்டன. இங்குமங்கும் சிதறி ஓடினார்கள். ”&lt;br /&gt;
&lt;br /&gt;
தளபதி கிரேக்க மொழியில் என்னவோ உரத்துச் சொன்னான். உடனே கிரேக்க 
சிப்பாய்கள் தப்பி ஓடினார்கள். பார்த்துக்கொண்டிருக்கும்போதே 
ஊரிலிருந்து கிரேக்க சிப்பாய்கள் அனைவருமே ஓடிப் போய்விட்டார்கள். 
எதிரிகள் எவருமே எஞ்சி இருக்கவில்லை. அதன் பிறகு எந்தவொரு கிரேக்க 
சிப்பாயும் நம்ம ஊர் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை”&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஆக, நம்முடைய நாட்டின் விடுதலைப்போரில் மற்ற ஆயுதங்களுடன் அருள்மறை குர்ஆனும் தீர்க்கமான பங்கு ஆற்றியிருக்கின்றது எனலாமா?”&lt;br /&gt;
&lt;br /&gt;
“மகனே! குர்ஆனின் வலிமையால்தான் நாங்கள் போரையே வென்றோம்”&lt;br /&gt;
&lt;blockquote&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;h2 class=&quot;uiHeaderTitle&quot;&gt;
&lt;span style=&quot;font-size: small;&quot;&gt;- துருக்கி சிறுகதை&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;- &lt;/span&gt;நஜீப் ஃபாஜில் கிஸ்ஸாகுர்க்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;b&gt;தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் &lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/blockquote&gt;
&lt;span class=&quot;fbUnderline&quot;&gt;&lt;b&gt;நஜீப் ஃபாஜில் கிஸ்ஸாகுர்க் (1905-1985)&lt;/b&gt;&lt;/span&gt;
 துருக்கியின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். இஸ்தான்புல் நகரில் 
பிறந்த நஜீப் அதே நகரத்தில் அமெரிக்கன் கல்லூரியிலும் ஃபிரான்சிசி 
கல்லூரியிலும் படித்தவர். தத்துவம் பயின்றவர். இவருடைய புலமையைப் பார்த்து 
இவருக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து மேற்படிப்புக்காக இவரை பிரான்சுக்கு 
கல்வி அமைச்சகமே அனுப்பி வைத்தது. ஆனால் பாரிசில் இருக்கப் பிடிக்காமல் 
படிப்பை முடிக்காமலே சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டார் நஜீப். 
இஸ்லாத்தின் மீது தனிப்பற்று கொண்டவர். இஸ்லாமியப் பற்றுக்காக பல முறை 
சிறை சென்றவர். துருக்கியில் இஸ்லாமிய இலக்கியத்தின் முன்னோடிகளில் 
ஒருவர். 1985 ஜனவரியில் மறைந்தார்.&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/11/blog-post.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpl8rBvpzw0qvoG9FqK8fOCj6s3m_ormrMfmVFe_PhyUwQdtTF71qNez060cLf-p53aTS-cY-SzT96i1ufoCRat8bt3Ohwl4Ulrp1e9ugg2QJScm7zFsJF06c0Nzdvfj2WWmqsIPju3_Q/s72-c/Necip-fazil.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-2859963031549813559</guid><pubDate>Wed, 24 Oct 2012 07:28:00 +0000</pubDate><atom:updated>2012-10-24T12:58:27.611+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Dr Abdul Huq Ansari</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Insight</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Janab Parvaz Rahmani</category><category domain="http://www.blogger.com/atom/ns#">K S Sudarshan</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Sehroza Dawat</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>Dr Abdul Huq Ansari, K. S. Sudarshan and an inspiring insight</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;table align=&quot;center&quot; cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto; text-align: center;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGSHUpQZWm_BJ8fASwiF5kyTFKvKs9SDApZAZD2qbRJwdb95bfsoTP6c61NzByIvIHtoUpkDswq_cl63_SHrMh1zZrEjogNwgE7rlZingRSMiyGPK7ztDmZ_VN_KimH7LMZCNMnWGT3RA/s1600/Abdul+Huq+Ansari1.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGSHUpQZWm_BJ8fASwiF5kyTFKvKs9SDApZAZD2qbRJwdb95bfsoTP6c61NzByIvIHtoUpkDswq_cl63_SHrMh1zZrEjogNwgE7rlZingRSMiyGPK7ztDmZ_VN_KimH7LMZCNMnWGT3RA/s1600/Abdul+Huq+Ansari1.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;Dr Abdul Huq Ansari&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;span&gt;The following is the translation of the article written by Parvaz 
Rahmani in Dawat dated 8-10 October2012 issue. It conveys &lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;an i&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;nspiring ins&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;ight&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;b&gt; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி(ரஹ்)&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;டாக்டர்
 அப்துல் ஹக் அன்சாரி 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே 
தெரியும் என்பதைப் போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் 
திகழ்ந்தார். மார்ககப் பற்றும் சமூகத் தொண்டார்வமும் நிறைந்தவராய் 
மிளிர்ந்தார். இதனால் மாணவப் பருவத்திலேயே இஸ்லாமிய இயக்கத்துடன் தன்னை 
இணைத்துக் கொண்டார். வசதி வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின 
உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் கல்லூரிப் 
படிப்பை முடித்தார். மேலும் படித்தார். முன்னேறிக் கொண்டே போனார். 
தர்ஸ்காஹ் இஸ்லாமியில் ஆலிம் பட்டம் பெற்றார். தொடர்ந்து அரபி மொழியில் 
இளங்கலைப் பட்டமும் ஃபிலாஸஃபியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து
 அதே துறையில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றார். அதற்கடுத்து அமெரிக்காவின் 
புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.டி.எஸ் பட்டமும் பெற்றார். 
எந்த மார்க்கப் பற்றுடனும் சமூகத்தொண்டார்வத்துடனும் அவர் மாணவப் 
பருவத்தில் தன்னை இஸ்லாமிய இயக்கத்தில் இணைத்துக் கொண்டாரோ அந்த பற்றும் 
ஆர்வமும் அதிகமாகிக் கொண்டே போனது. அவர் சார்ந்த இயக்கமும் வளர்ந்து 
கொண்டே போனது. இறுதியில் அவர் அந்த இயக்கத்தின் அகில இந்திய தலைமைப் 
பொறுப்பை ஏற்றார். நான்காண்டுகள் அந்தப் பொறுப்பை வகித்த பிறகு அவர் 
2007-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பிறகும் இயக்கத்திற்கான
 நூல்களை எழுதி வெளியிடுகின்ற பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் 
கொண்டார். இதே நிலையில் அவர் தன்னுடைய 81-ஆவது வயதில் 2012&amp;nbsp; அக்டோபர் 13 
ஆம் தேதியன்று தான் வாழ்நாள் முழுவதும் ஏற்று வந்த நம்பிக்கையிலும் 
கோட்பாட்டிலும் முழுமையான திருப்தி உள்ள நிலையில் இந்த உலகை விட்டுப் 
பிரிந்தார். அவருடைய தோழர்களும் உறவினர்களும் அளவற்ற அன்புடனும் 
வாஞ்சையுடனும் அவரை நல்லடக்கம் செய்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;மற்றும் கே.எஸ். சுதர்ஸன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கே.எஸ். 
சுதர்ஸனும் 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப்
 போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். வசதி 
வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம்,
 ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் படிப்பில் முன்னேறிக் கொண்டே போனார். 
நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற உணர்வு அவருக்குள் மிகைத்திருந்தது. 
இதனால் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேசபக்தி முழக்கங்களால் 
கவரப்பட்டு அதன் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். படிப்பும் 
தொடர்ந்தது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பி.ஈ பட்டமும் தங்கப் 
பதக்கமும் பெற்றார். நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர் எந்த 
அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாரோ அந்த அமைப்பின் கொள்கைகளையும்
 செயல்திட்டங்களையும் நடை முறைப்படுத்துவதில் முனைப்புடன் மும்முரமாகச் 
செயலாற்றி வந்தார்.ஒரு கட்டத்தில் அதன் உச்சக்கட்ட பொறுப்பை சர்சங்சாலக் -
 அகில இந்தியத் தலைவர் பொறுப்பையும் ஏற்றார். ஒன்பது ஆண்டுகள் அந்தப் 
பொறுப்பில் இருந்த பிறகு 2009-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். 
ஆனால் பதவி விலகியதிலிருந்து எந்த இயக்கப் பணியிலும் ஈடுபடாமல் வாசிப்பதில்
 மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 15 செப்டம்பர், 2012 அன்று அவர் தன்னுடைய
 81-ஆவது வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் தன்னுடைய இறப்புக்கு
 இருபத்தேழு நாள்களுக்கு முன்பு அவர் தொடர்பாக வெளியான செய்தி ஒன்று 
பல்வேறு ஊகங்களுக்கும் எண்ணங்களுக்கும் வித்திட்டது. 20 ஆகஸ்ட் 2012 அன்று 
பெருநாள் பண்டிகையின் போது போபாலில் பெருநாள் தொழுகையில் கலந்து 
கொள்வதற்காகவோ (அல்லது முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துகளைத் 
தெரிவிப்பதற்கோ) அவர் தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குப் போக விரும்பினார்.&lt;br /&gt;
&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;&lt;br /&gt;இருவருக்குமிடையில் இருக்கின்ற ஒற்றுமை சுவையானது...! இருவரும் சந்தித்த முடிவோ முற்றிலும் மாறுபட்டது..!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;இவ்விரு
 தலைவர்களின் வாழ்வில் சில விஷயங்களில் காணப்படுகின்ற ஒற்றுமை சுவையானவை. 
இவ்விருவருமே முற்றிலும் மாறுபட்ட நேர் எதிரான இயக்கங்களில் தம்மை வாழ்நாள்
 முழுவதும் இணைத்துக் கொண்டிருந்தனர். இருவருமே தாம் சார்ந்திருந்த 
இயக்கத்தின் அகில இந்தியத் தலைமைப் பொறுப்பை ஏற்கின்ற அளவுக்கு 
வளர்ந்தனர். ஆனால் இருவரின் இறுதி முடிவில் அடிப்படையான வேற்றுமையைப் 
பார்க்க முடிகின்றது. டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி அவர்களுக்கு தம்முடைய 
நம்பிக்கையிலும் கோட்பாட்டிலும் முழுமையான மனநிறைவு இருந்தது. அவை 
தொடர்பான எண்ணத் தெளிவுடனும் முழுமையான திருப்தியுடனுமே அவர் இந்த உலகை 
விட்டுப் பிரிந்தார். அவருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்திருக்க வேண்டும். 
இயக்கத்திற்கான நூல்களை எழுதித் தர வேண்டும் என்கிற தன்னுடைய நாட்டங்களை 
முழுமையாக நிறைவேற்ற முடியாத குறை மட்டுமே அவரை வாட்டியிருக்க வேண்டும். 
அதற்கு நேர் மாறாக, சுதர்ஸன் அவர்கள் தம்முடைய கடைசி காலத்தில் ஒருவிதமான 
வேதனைக்கும் கவலைக்கும் ஆளாகி இருந்தார்.&amp;nbsp; குறைந்தபட்சம் இஸ்லாத்தைக் 
குறித்தும் முஸ்லிம்களைக் குறித்தும் தான் கொண்டிருந்த நிலைப்பாடு 
குறித்து அவர் பெரிதும் அதிருப்தியுற்றவராய், அதனை மீள்பார்வை 
செய்கின்றவராய் இருந்துவந்திருக்கின்றார்.&amp;nbsp; அவருடைய தோழர்கள் சொல்வதைப் 
போல் அவருடைய மனநிலை சரியில்லாமல் போய்விட்டது என்பதை சரி என எடுத்துக் 
கொண்டாலும் அவருடைய உள்மனத்துக்குள் ஏதோவொன்று நடந்திருக்க வேண்டும். 
அதுதான் அவரை தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லத் 
தூண்டியிருக்க வேண்டும். 16 செப்டம்பர், 2012 தேதிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் 
நாளிதழில் வெளியான செய்தியில் அவர் திருக்குர்ஆனை ஆழ்ந்து வாசித்து வந்தார்
 என்கிற தகவல் இடம் பெற்றுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எது எப்படியோ இந்த இரண்டு ஆளுமைகளின் வாழ்வில் எது நடக்க வேண்டுமோ அது 
நடந்து முடிந்துவிட்டது. இனி ஆகப் போவதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் 
இறைவனின் கையில்..!&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;b&gt;பர்வேஸ் ரஹ்மானி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் &lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;b&gt;&lt;i&gt;தஅவத் 8-10 அக்டோபர் 2012 இதழ்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/10/dr-abdul-huq-ansari-k-s-sudarshan-and.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGSHUpQZWm_BJ8fASwiF5kyTFKvKs9SDApZAZD2qbRJwdb95bfsoTP6c61NzByIvIHtoUpkDswq_cl63_SHrMh1zZrEjogNwgE7rlZingRSMiyGPK7ztDmZ_VN_KimH7LMZCNMnWGT3RA/s72-c/Abdul+Huq+Ansari1.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-6691135789071079063</guid><pubDate>Tue, 23 Oct 2012 17:34:00 +0000</pubDate><atom:updated>2012-10-23T23:04:54.655+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Islamic Dawah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Janab Parvaz Rahmani</category><category domain="http://www.blogger.com/atom/ns#">K S Sudarshan</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Sehroza Dawat</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>Parvaz Rahmani, K S Sudarsan and Islamic Dawah</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;table cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto; text-align: center;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDnyyOYQZ8SxiXGPgLUr0aQ7Y-VyFKIYHfW2MARamORpmNZsHCxrRFgVj-JiAac9N6snXCkkRqHHvho59HvTmDFcyOvRFUTn-bCSu-sa7CcJLTgv3u37IbYIqDCjZh_8EP1VceZLjwZxw/s1600/Parwaz-Rahmani.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDnyyOYQZ8SxiXGPgLUr0aQ7Y-VyFKIYHfW2MARamORpmNZsHCxrRFgVj-JiAac9N6snXCkkRqHHvho59HvTmDFcyOvRFUTn-bCSu-sa7CcJLTgv3u37IbYIqDCjZh_8EP1VceZLjwZxw/s1600/Parwaz-Rahmani.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;Parvaz Rahmani&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsWpI_UGIrEPxX9kdjzF7F_ztMmcibv6IDKLY53ye_g-_FMbHk_QqpA6Ujj1PKsxfF07ObH_xo-_BnIcuHcIOXbrSOVz9ZZhNg5wjrl-BX-7uM8TNyPhrj6OIKQFAxvKUBOD4CXWaoHyQ/s1600/K.S.Sudarshan.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;256&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsWpI_UGIrEPxX9kdjzF7F_ztMmcibv6IDKLY53ye_g-_FMbHk_QqpA6Ujj1PKsxfF07ObH_xo-_BnIcuHcIOXbrSOVz9ZZhNg5wjrl-BX-7uM8TNyPhrj6OIKQFAxvKUBOD4CXWaoHyQ/s320/K.S.Sudarshan.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;&lt;span&gt;The following is the translation of the article written by Parvaz 
Rahmani in Dawat dated 20-22 September2012 issue. It is written in the 
true spirit of Islamic Dawah.&lt;br /&gt;&lt;/span&gt;அந்தச் சாவை நினைத்து வருத்தம் ஏற்பட்டதேன்...?&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;கே.
 எஸ். சுதர்ஸனின் (மறைவு 15 செப்டம்பர், 2012) மரணம் குறித்து சங் 
பரிவாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு வருத்தம் ஏற்பட்டதோ, 
தெரியவில்லை. ஆனால் கடந்த 20 ஆகஸ்ட் அன்று ஈகைப் பெருநாளின்போது ஆர். எஸ்.
 எஸ் இயக்கத்தின்இந்த மூத்த தலைவர் போபால் நகரத்தின் புகழ் பெற்ற தாஜுல் 
மஸாஜித் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற விரும்பியதாகவும் 
அல்லது தன்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க 
விரும்பியதாகவும் அதற்காக வேண்டி தாஜுல் மஸாஜீத் பள்ளிவாசலுக்குப் போக 
விரும்பியதாகவும், ஆனால் அவருடைய ஸ்டாஃப் - உதவியாளர் களும், காவல் துறை 
அதிகாரிகளும் ‘போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது’ என்று சொல்லியும், 
‘பெருநாள் தொழுகை முடிந்துவிட்டது’ என்று எடுத்துரைத்தும் தொழுகையை 
நிறைவேற்றுகின்ற அவருடைய ஆசையை அணை போட்டு தடுத்துவிட்டதாகவும் அதன் பிறகு
 முன்னாள் முதல்வர் பாபுலால் கோடா அவரைத் தன்னுடைய முஸ்லிம் நண்பர் 
ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த வீட்டில் சுதர்ஸன் 
தன்னுடைய முஸ்லிம் ‘சகோதரர்களுக்கு’ பெருநாள் வாழ்த்துகளைத் 
தெரிவித்ததாகவும், சேமியா பாயசத்தை ரசித்து ருசித்து அருந்தி 
மகிழ்ந்ததாகவும், தன்னுடைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் 
கொண்டதாகவும் போபாலிலிருந்து வந்த செய்தியைப் படித்த, கேட்ட 
முஸ்லிம்களுக்கு அவருடைய மரணம் தவிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி 
இருக்கும். சுதர்ஸன் அவர்களின் இந்த ‘மாற்றம்’ குறித்து எந்தவோர் ஆங்கில 
நாளிதழிலிலும் விமர்சனமோ, கருத்துரையோ வரவில்லை; என்னுடைய பார்வைக்கு 
வரவில்லை. ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வு பற்றி ஆங்கில இதழ்களில் 
வெளியான செய்தியில் அவருக்கு ‘ஞாபக மறதி’ நோய் தொற்றிவிட்டிருந்ததாகவும் 
சொல்லப்பட்டிருந்தது. ஆனால் உர்தூ பத்திரிகைகளில் அவருடைய இந்த திடீர் 
ஆர்வம் குறித்து பரபரப்பாக விவாதிக்கப் பட்டது. சுதர்ஸன் அவர்களுக்கு ஞாபக 
மறதி நோய் தொற்றிவிட்டதால் அவர் இவ்வாறு பெருநாள் தொழுகைக்காக விருப்பம்
 தெரிவித்திருக்க மாட்டார்; தொழுகை, பெருநாள், முஸ்லிம்கள் பற்றிய அவருடைய
 பார்வையிலும் கருத்திலும் நிச்சயமாக ஏதோவொரு அதிரடி மாற்றம் 
ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிற சிந்தனைதான் இந்த பரபரப்பான விவாதத்திற்குப்
 பின்புலமாக அமைந்தது.&lt;br /&gt;

&lt;br /&gt;
&lt;blockquote&gt;
&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;ஒரு நண்பர் அனுப்பிய குறுந்தகவல்...!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;
இந்த
 நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து நண்பர் ஒருவர் அனுப்பிய குறுந்தகவல் 
குறிப்பிடத்தக்கது. 17 செப்டம்பர் அன்று 09313522885 என்கிற தொலைபேசி 
மூலமாக அவர் அனுப்பிய குறுந்தகவலின் விவரம் வருமாறு: ‘சுதர்ஸன் ஜி 20 
ஆகஸ்ட் அன்று போபாலின் தாஜுல் மஸாஜித் மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றி 
இஸ்லாம் தர்ஷன்மூலமாக தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவே விரும்பினார். 
ஆனால் அவருடைய தோழர்கள் அவருடைய இந்தத் தனிப்பட்ட சுதந்தரத்தையும் 
அவருக்குத் தரவில்லை. அவரை பள்ளிவாசலுக்குச் செல்லவிடாமல் 
தடுத்துவிட்டார்கள். கடைசியில் சுதர்ஸன் அவர்கள் அதிருப்தியுற்ற நிலையிலேயே
 இந்த உலகை விட்டுப் போய்விட்டார். சுதர்ஸன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் 
இயக்கத்தின் சர்சலாங்- அகில இந்தியத் தலைவராக இருந்த காலத்தில் நம்முடைய 
தோழர் ஒருவர் இஸ்லாத்தின் அருள் மார்க்கச் செய்தியை விரிவாக விவரித்து 
கடிதம் எழுதினார். சுதர்ஸன் ஜி அவருக்குப் பதில் கடிதமும் எழுதினார். 
வண்டியை அனுப்பி தன்னிடம் வரவழைத்து நீண்ட நேரம் பேசவும் செய்தார். இறந்து 
போனவர் வெளிப்படையாக எதனைவும் அறிவிக்கவில்லை. ஆனால் தன்னுடைய செயலின் 
மூலமாக ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தினருக்கு கனமான செய்தியை பதிவு 
செய்திருக்கின்றார். எவராவது அவருடைய அந்தச் செய்தியைப் புரிந்துகொண்டால் 
எத்துணை நன்றாக இருக்கும்...! முஸ்லிம்களும் அழைப்புப் பணி தொடர்பான 
உணர்வைப் பெற்றால் எத்துணை நன்றாக&amp;nbsp; இருக்கும்..!” மகாராஷ்டிர நண்பரின் 
உணர்வுகளும் ஆதங்கமும் பொருத்தமானவையே. சிறப்பானவையே. ஒருவருக்கு ஞாபக 
மறதி நோய் தொற்றிவிட்டாலோ, முதுமையின் மூப்பால் பீடிக்கப்பட்டாலோ 
சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசத்தான் செய்வாரே தவிர, முன்னுக்குப் பின் 
முரணாக ஏதாவது உளறுவாரே தவிர, இப்படி தீர்க்கமாக தொழ வேண்டும் என்றோ 
வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றோ சொல்ல மாட்டார். இது போன்ற 
எண்ணங்களை உணர்வும் எண்ணமும் உறுதியாக இருக்கின்ற மனிதர்தான் 
வெளிப்படுத்துவார். எனவே மகாராஷ்டிர நண்பரின் கவலையில் அர்த்தம் 
இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;நிச்சயமாக இப்படி நடந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது...!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்
 இயக்கத்தின் முன்னாள் சர்சந்சாலக் - அகில இந்தியத் தலைவராகன குப்பள்ளி 
சீதாராமையா சுதர்ஸன் அவர்கள் தீவிரமான கடுமையான இந்துத்துவக் கொள்கை மீது 
பற்று கொண்டவராக இருந்தார். 2000 முதல் 2009 வரை சர்சந்சாலக்காக - அகில 
இந்தியத் தலைவராக அவர் இருந்த காலத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 
அவருடைய நிலைப்பாட்டைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்தவண்ணம்தான் 
இருந்தன. முஸ்லிம்கள் தொடர்பான சங் பரிவாரத்தின் நிலைப்பாட்டை அவர் 
ஆணித்தரமாகவும் அழுத்தம்திருத்தமாகவும் எடுத்துரைத்து வந்துள்ளார். 
நாட்டுப் பிரச்னைகள் தொடர்பாகவும் அவர் காரசாரமாகக் கருத்துத் 
தெரிவித்திருக்கின்றார். சில நேரங்களில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் 
அக்கட்சியின் கருத்துகளை மறுத்துரைத்தும் அவர் பேசியிருக்கின்றார். எது வரை
 எனில் ‘இந்த நாட்டில் இது வரை ஆண்ட பிரதமர்களில் இந்திரா காந்திதான் 
வெற்றிகரமான பிரதமர்’ என்றும் மனம் விட்டுப்பேசி இருக்கின்றார். 
இவையெல்லாம் உணர்த்துவது என்ன? தன்னுடைய மனத்திற்குச் சரி எனப் பட்டதை 
வெளிப்படுத்துவதில் அவர் என்றைக்குமே தயங்கியதில்லை. 
நறுக்குத்தெறித்தாற்போல் ஆணித்தரமாகவே எதனையும் சொல்லி வந்துள்ளார். 
ஆனால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு 
அவர் அதிகமாகப் பேசியதில்லை. மௌனம் சாதித்தே வந்துள்ளார். இந்தக் 
காலத்தில் அவர் வாழ்க்கை குறித்தும் வாழ்க்கை உணர்த்துகின்ற உண்மை 
குறித்தும் அதிகமாக ஆராய்ந்திருக்க வேண்டும். சத்தியத்தை அடைய வேண்டும் 
என்கிற உந்துதலில் நாள்களைக் கடத்தியிருக்க வேண்டும். இஸ்லாத்தின் 
கோட்பாடுகளையும் போதனைகளையும் மீள்பார்வை செய்திருக்க வேண்டும். இவ்வாறு 
நடந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. மகாராஷ்டிர நண்பர் அனுப்பிய 
குறுந்தகவல் இதனை மெய்ப்பிப்பதாக இருக்கின்றது. எனவே சங் பரிவாரத்துடன் 
நீண்ட காலம் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக இஸ்லாம், முஸ்லிம்கள் 
தொடர்பாக அவருக்குள் வேரூன்றி இருந்த நிலைப்பாட்டையும் எண்ணத்தையும் அவர் 
தம் கடைசி காலத்தில் மீள்பார்வை செய்து வந்திருக்க வேண்டும். அதற்கும் 
வாய்ப்பிருக்கின்றது. &lt;br /&gt;

&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;b&gt;பர்வேஸ் ரஹ்மானி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் &lt;/b&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;தஅவத் 20-22 செப்டம்பர் 2012 இதழ்&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/10/parvaz-rahmani-k-s-sudarsan-and-islamic.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDnyyOYQZ8SxiXGPgLUr0aQ7Y-VyFKIYHfW2MARamORpmNZsHCxrRFgVj-JiAac9N6snXCkkRqHHvho59HvTmDFcyOvRFUTn-bCSu-sa7CcJLTgv3u37IbYIqDCjZh_8EP1VceZLjwZxw/s72-c/Parwaz-Rahmani.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-5529303000765280639</guid><pubDate>Thu, 13 Sep 2012 10:56:00 +0000</pubDate><atom:updated>2012-09-13T16:26:53.509+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind Tamil Nadu and Puducherry</category><category domain="http://www.blogger.com/atom/ns#">M. I. Abdul Azeez</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Purification of heart</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Syed Sultan</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Tatheer-e-Qalb</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Tazkiya</category><title> இதயத் தூய்மை : எம். ஐ. அப்துல் அஜீஸ் </title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQCyaKzulRFkGvbo-mpYTIhdPDBMrnYNJifhFgiGlk1Es1Le_c7cBGDaDqcfGqBjs2QTnD8qkuMRdCjp0iU4u_pdj3RhYjYpFpkow42JPXDfIYkwjV16H8ZFpyVtMoyLgrspx5oW8qMEQ/s1600/m+i+abdul+azeez.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;240&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQCyaKzulRFkGvbo-mpYTIhdPDBMrnYNJifhFgiGlk1Es1Le_c7cBGDaDqcfGqBjs2QTnD8qkuMRdCjp0iU4u_pdj3RhYjYpFpkow42JPXDfIYkwjV16H8ZFpyVtMoyLgrspx5oW8qMEQ/s320/m+i+abdul+azeez.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;பயிற்சிக்கும் தர்பியத்துக்கும் இஸ்லாம் &lt;/b&gt;மிகுந்த முக்கியத்துவம் தருகின்றது. தகுதி படைத்த மனிதர்களை வார்த்தெடுப்பதுதான் தர்பியத்தின் முதன்மை நோக்கமாகும். &lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;b&gt;நடப்பு மீக்காத்துக்காக &lt;/b&gt;(ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2015 வரையிலான காலக்கட்டம்) வகுக்கப்பட்டுள்ள நான்காண்டு செயல்திட்டத்தில் இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்ற பணிக்கு (தத்ஹீரே கல்ப்) முதன்மை முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b&gt;நம்மை நாமே சுய மதிப்பீடு செய்யும்போது&lt;/b&gt; நாம் இதில் பின்தங்கி இருக்கின்றோம் என்கிற உணர்வு மேலிட வேண்டும். அதுதான் தர்பியத்துக்கான முதல் படி ஆகும். தனி மனிதர்களின் தர்பியத்துடன் ஒட்டுமொத்த ஜமாஅத்தின் தர்பியத்தின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும். &lt;br /&gt;தர்பியத் என்றால் என்ன? இதயத்தைச் செம்மைப்படுத்துவதற்குப் பெயர்தான் பயிற்சி, தஸ்கியா, தர்பியா!&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b&gt;இதயத்தின் பல்வேறு நிலைமைகளைக்&lt;/b&gt; குறித்து குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. நல்ல இதயம் எப்படி இருக்கும் என்பதையும் குர்ஆன் விவரித்-துள்ளது. கெட்ட இதயம் எத்தகையதாக இருக்கும் என்பதையும் குர்ஆன் சுட்டிக்காட்டியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;
தீய செயல்களின் காரணமாக &lt;b&gt;இதயங்கள் கறை படிந்து போகும்&lt;/b&gt; எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது:&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin-7MrrpbfQOowesFhpTiFRS8Bw85Y8_CMLA3C7hYisa0SO6qRM2pUkHqCtUA4aBEd5iY6-MT8GrchnywMmtGGIYgB6_rOYvHqBHOZ_iXIa9greiqR1C8cE5S6fVRx-3uYmE1ciNq7o4I/s1600/83_14.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;36&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin-7MrrpbfQOowesFhpTiFRS8Bw85Y8_CMLA3C7hYisa0SO6qRM2pUkHqCtUA4aBEd5iY6-MT8GrchnywMmtGGIYgB6_rOYvHqBHOZ_iXIa9greiqR1C8cE5S6fVRx-3uYmE1ciNq7o4I/s400/83_14.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“மாறாக உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் இதயங்களில் படிந்துவிட்டிருக்கின்றது” (திருக்குர்ஆன் 83;14) &lt;/blockquote&gt;
எவர்கள் வரம்புமீறுகின்றார்களோ அவர்களின் &lt;b&gt;இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு&lt;/b&gt; விடும்.&amp;nbsp; அவர்கள் வழிகாட்டுதல் பெற மாட்டார்கள். &lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjauUeC7CNBfUYiP_tqvS0tQPt8Q97mzNF9PKOnLzIjazmam6xRulW8rtTcDfdSjtcGzDXSla9sD0L0qv_LN2mlZTWPrOW4w6NhGBfKCpAKQ1YvHmprZJXdrgfqHxrd_6gGFgHDwhBVg6A/s1600/10_74.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;76&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjauUeC7CNBfUYiP_tqvS0tQPt8Q97mzNF9PKOnLzIjazmam6xRulW8rtTcDfdSjtcGzDXSla9sD0L0qv_LN2mlZTWPrOW4w6NhGBfKCpAKQ1YvHmprZJXdrgfqHxrd_6gGFgHDwhBVg6A/s400/10_74.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம்” (திருக்குர்ஆன் 10;74) &lt;/blockquote&gt;
&lt;b&gt;இறுகிப்போன இதயங்கள் &lt;/b&gt;குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJfj7drRC3zY8b2Zb9Aq42YJylTY6qimICLjWIuY_CMhfR9HhlkdTpvG_GJgy0yHzzNs4n0l88oZ22IbPtzxvDns2x4T_Mwmi25IiM20JSrIEPav9MDsktXzO5sEE-5HSoSF6iceBM6tg/s1600/2_74.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;150&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJfj7drRC3zY8b2Zb9Aq42YJylTY6qimICLjWIuY_CMhfR9HhlkdTpvG_GJgy0yHzzNs4n0l88oZ22IbPtzxvDns2x4T_Mwmi25IiM20JSrIEPav9MDsktXzO5sEE-5HSoSF6iceBM6tg/s400/2_74.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“படிப்பினை தருகின்ற சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுக்கள் பொங்கி எழுகின்றன. இன்னும் சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்-டிருக்கின்ற இழிசெயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை” (திருக்குர்ஆன் 2;74) &lt;/blockquote&gt;
இதே போன்று&lt;b&gt; குருடாகிப்போன இதயங்கள் &lt;/b&gt;என்றும் குர்ஆன் இவர்களைக் கண்டிக்கின்றது.&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9L024-DD-lHjviQofpI7Jhyphenhyphen0kg0KqrrcRTb5oC9DN0ekemgiQ6rxCcu_AXzNxDxfCV7LUIFsSAsw3_WFWhZgZrpjF3bdfjYryX-PQwvzbVV8fj5_NHDevpo2WkmdDHQj9bttsugin078/s1600/22_46.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;112&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9L024-DD-lHjviQofpI7Jhyphenhyphen0kg0KqrrcRTb5oC9DN0ekemgiQ6rxCcu_AXzNxDxfCV7LUIFsSAsw3_WFWhZgZrpjF3bdfjYryX-PQwvzbVV8fj5_NHDevpo2WkmdDHQj9bttsugin078/s400/22_46.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்-திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும் கேட்கக் கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே. உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை. ஆனால், நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தான் குருடாகின்றன” (திருக்குர்ஆன் 22;46) &lt;/blockquote&gt;
&lt;b&gt;நயவஞ்சக நடத்தைக்கு வித்திடுவதும் இதயம்தான்&lt;/b&gt;. நோயுற்ற இதயம் என குர்ஆன் எச்சரிக்கின்றது.&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjthXYHN9fBg5NGS5184K73zfAozT9IhwZ09p_HQipowqFXUPmeDQu6WWl3LFiFm8B5y9SJ8LXYdWQzhGEcEDi2gti-wYO03dnnKTK1OKRo5rW9wthpFtQ8bmPeXarPY-JTKvhLMAJsVFE/s1600/2_10.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;66&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjthXYHN9fBg5NGS5184K73zfAozT9IhwZ09p_HQipowqFXUPmeDQu6WWl3LFiFm8B5y9SJ8LXYdWQzhGEcEDi2gti-wYO03dnnKTK1OKRo5rW9wthpFtQ8bmPeXarPY-JTKvhLMAJsVFE/s400/2_10.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 2;10) &lt;/blockquote&gt;
&lt;b&gt;சிந்தித்துணராத இதயங்களைக் &lt;/b&gt;கொண்டவர்களை அலட்சியம் தொற்றிக் கொள்ளும் எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது.&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAwz0rHArTOz1JajK2KnFmkfnBCByl8GGTGo-zPBuS3oMmoAHpqeXVR4_4UGa042K21RpmpLsNCt5F_bMIadj5XOP6jE8JdqrNGGV768XJ22aU0d_zXZwYrrkxzhXec9r1yI2OmtYJFns/s1600/7_179.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;116&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAwz0rHArTOz1JajK2KnFmkfnBCByl8GGTGo-zPBuS3oMmoAHpqeXVR4_4UGa042K21RpmpLsNCt5F_bMIadj5XOP6jE8JdqrNGGV768XJ22aU0d_zXZwYrrkxzhXec9r1yI2OmtYJFns/s400/7_179.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்-வதில்லை. அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்-பதில்லை. அவர்களுக்கு காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்-பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள். அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.” (திருக்குர்ஆன் 7;179) &lt;/blockquote&gt;
வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்துகொள்வதால்தான்&lt;b&gt; இதயத்தை நோய் தொற்றிக் கொள்கின்றது&lt;/b&gt; என்றும் குர்ஆன் எச்சரிக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh64hg7buMKEUT5DdEqPPqqv_w8DTxI469xfkHHhoRESnC9MWcw-VhxNljKDYelVyubFywKOj7Me27l-ZgdvK4Mr3Et5TRKbIpOWNhBZhSleB5GAOVWDrmT7014c9UgQJoePXMC_DvhQA0/s1600/9_77.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;67&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh64hg7buMKEUT5DdEqPPqqv_w8DTxI469xfkHHhoRESnC9MWcw-VhxNljKDYelVyubFywKOj7Me27l-ZgdvK4Mr3Et5TRKbIpOWNhBZhSleB5GAOVWDrmT7014c9UgQJoePXMC_DvhQA0/s400/9_77.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“எனவே, அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறு செய்த காரணத்தாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் வஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான். அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அது அவர்களிடம் இருக்கும்” (திருக்குர்ஆன் 9;77) &lt;/blockquote&gt;
&lt;b&gt;இறைவனை நினைவு கூர்கின்ற இதயங்களை&lt;/b&gt; மென்மையான, மிருதுவான இதயங்கள் எனக் குர்ஆன் வர்ணிக்கின்றது.&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYY9iyNz4v4KxIBrxvBb-5dLfHcOJChWIXQYV5YA5QWOjp8NOi8mJEXxFfzfm9n5iXpIJgPpTPT_tJDjBDjUHiY90vHgYqSN23Gah_5qTgj9tz6eJMMcIZQnf00opz6IknlFby7ogNxYY/s1600/39_23.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;145&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYY9iyNz4v4KxIBrxvBb-5dLfHcOJChWIXQYV5YA5QWOjp8NOi8mJEXxFfzfm9n5iXpIJgPpTPT_tJDjBDjUHiY90vHgYqSN23Gah_5qTgj9tz6eJMMcIZQnf00opz6IknlFby7ogNxYY/s400/39_23.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கின்றது. பின்னர் அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன” (திருக்குர்ஆன் 39;23) &lt;/blockquote&gt;
அல்லாஹ்வை நினைவுகூர்வதில்தான் மன நிம்மதி இருக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOE953fgIm_6Xb5eRcd3ujwkfP0baSmaaQtuxFNQCIx4RQFSZV2ieEpDLuEu4HFbi8YIbbWt6mRCdXuohgVuIozVxYoVOyqPGK6Tp6lSH4wU28Mz90UrSJKoQ1h66UiOZ1HQjW31BrCaY/s1600/13_28.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;67&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOE953fgIm_6Xb5eRcd3ujwkfP0baSmaaQtuxFNQCIx4RQFSZV2ieEpDLuEu4HFbi8YIbbWt6mRCdXuohgVuIozVxYoVOyqPGK6Tp6lSH4wU28Mz90UrSJKoQ1h66UiOZ1HQjW31BrCaY/s400/13_28.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. பிறகு, எவர்கள் (சத்திய அழைப்பை) ஏற்றுக்கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மகிழ்வும் நல்ல முடிவும் இருக்கின்றன” (திருக்குர்ஆன் 13; 28, 29) &lt;/blockquote&gt;
இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு &lt;b&gt;பரிவும் கருணையும் நிறைந்த இதயம்&lt;/b&gt; கிடைக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது .&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN1puJKJnE7NclG9OZjzA6fQzd70Ee1nDd7xPdmaDlV2PqQChgQdyPgK_KhyfUQ96-VylTalJzIXv_Gxfk0Fn1z-DkJ8VRLQfqrHgy6_vdtLWLTmi0J3bcUxSotRFL7fT1-u0k-BG3Pmo/s1600/57_27.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;195&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhN1puJKJnE7NclG9OZjzA6fQzd70Ee1nDd7xPdmaDlV2PqQChgQdyPgK_KhyfUQ96-VylTalJzIXv_Gxfk0Fn1z-DkJ8VRLQfqrHgy6_vdtLWLTmi0J3bcUxSotRFL7fT1-u0k-BG3Pmo/s400/57_27.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“மேலும், எவர்கள் அவரைப் பின்பற்றினார்களோ அவர்களின் உள்ளங்களில் நாம் பரிவையும் கருணையையும் ஏற்படுத்தினோம்” (திருக்குர்ஆன் 57;27)&lt;/blockquote&gt;
&amp;nbsp;&lt;b&gt;தூய்மையான உள்ளங்கள்&lt;/b&gt; குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrBJEHN9IYThAvPQgCqcuPJPxNo_fBzxf9G0eyUcjU31ZQ8YMActzEP-RXeYgGK0r_4Tr87-QeijICKY3nkYsF9TNPSF_SQtlVp9CMjEmb07RNcgkaHu_RPTD4h85Ag8i97M7dJZZV1xM/s1600/26_88.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;33&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrBJEHN9IYThAvPQgCqcuPJPxNo_fBzxf9G0eyUcjU31ZQ8YMActzEP-RXeYgGK0r_4Tr87-QeijICKY3nkYsF9TNPSF_SQtlVp9CMjEmb07RNcgkaHu_RPTD4h85Ag8i97M7dJZZV1xM/s400/26_88.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4ry-t7M_fZXLuTfZo8rjk-moDm3EuwPj4Sv6OPm-mZ2GJ7BCZP4_Hh4eyqlqTw3VwxBuwVGZUAdEoL5MhTM00afA6isLGwY-odq5Fra6Kaf1fTjI9eLSCQTkH_X6Ty-697mvoRhuRfGM/s1600/26_89.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;33&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4ry-t7M_fZXLuTfZo8rjk-moDm3EuwPj4Sv6OPm-mZ2GJ7BCZP4_Hh4eyqlqTw3VwxBuwVGZUAdEoL5MhTM00afA6isLGwY-odq5Fra6Kaf1fTjI9eLSCQTkH_X6Ty-697mvoRhuRfGM/s400/26_89.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திட மாட்டா. ஆனால் எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர” (திருக்குர்ஆன் 26; 88, 89) &lt;/blockquote&gt;
அல்லாஹ்வின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் &lt;b&gt;உருகிவிடுகின்ற இதயங்கள் &lt;/b&gt;குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRrwC0pi3HE1ldBhEzWbVkINhvnKiNWAZ9HiXoCrHjgpkoPmAQj77UzYXKC-puy1gbNQutSB1X8c2TrJTz_UXP1YFax0A1F3IKC6AokQA6emuRcjltcCu-3cuhVRbVgz5tTAV64k1sa1A/s1600/57_16.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;93&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRrwC0pi3HE1ldBhEzWbVkINhvnKiNWAZ9HiXoCrHjgpkoPmAQj77UzYXKC-puy1gbNQutSB1X8c2TrJTz_UXP1YFax0A1F3IKC6AokQA6emuRcjltcCu-3cuhVRbVgz5tTAV64k1sa1A/s320/57_16.png&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?” (திருக்குர்ஆன் 57;16)&lt;/blockquote&gt;
&lt;br /&gt;
இறைநினைவால்&lt;b&gt; நடுநடுங்கிப்போகின்ற இதயங்கள்&lt;/b&gt; குறித்தும் குர்ஆன் பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA6G9DV2e0ot1cqRjIgoEQYn-UTAMSB_OELkAp95hBbgx5PxKeLvhI2-DQz0c_hTe8QinTtnfv5ghcdZO33n_D5nEregFVIbZB3554YP8LujbT-DZjLlJdiA0_cD5udO4Nt7kW-aYCLkU/s1600/22_34.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;92&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA6G9DV2e0ot1cqRjIgoEQYn-UTAMSB_OELkAp95hBbgx5PxKeLvhI2-DQz0c_hTe8QinTtnfv5ghcdZO33n_D5nEregFVIbZB3554YP8LujbT-DZjLlJdiA0_cD5udO4Nt7kW-aYCLkU/s320/22_34.png&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“மேலும், (நபியே) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக. அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால் அவர்களின் இதயங்கள் நடுநடுங்கி விடுகின்றன.” (திருக்குர்ஆன் 22; 34, 35)&lt;/blockquote&gt;
&amp;nbsp;அல்லாஹ்வின் பக்கம் &lt;b&gt;அதிகமாக மீளுகின்ற இதயங்கள்&lt;/b&gt; குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirONyBjW1vJUCBjqIqfxCUsamLmJ24BBp1a19hf_EBUIOmo8JDHSnOJ-kf4aWqzGLymSQSzC50Bij2NWlJM45jYI69xI1BuWWfdqDmjwbAkyvqS3E-Nnp4hgzfHKK1n5VxIuWcxmMZoAg/s1600/50_33.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;31&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirONyBjW1vJUCBjqIqfxCUsamLmJ24BBp1a19hf_EBUIOmo8JDHSnOJ-kf4aWqzGLymSQSzC50Bij2NWlJM45jYI69xI1BuWWfdqDmjwbAkyvqS3E-Nnp4hgzfHKK1n5VxIuWcxmMZoAg/s400/50_33.png&quot; width=&quot;400&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
“அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார்.” (திருக்குர்ஆன் 50;33)&lt;/blockquote&gt;
&lt;b&gt;இதயங்களைத் தூய்மைப்படுத்துகின்ற பணி&lt;/b&gt; இறைத்தூதர்கள் செய்த பணி ஆகும். இதயத் தூய்மை இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. இரண்டும் முக்கியமானவை. இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை ; (1) நோய்கள், பலவீனங்கள், குறைகள் ஆகியவற்றை நீக்குதல். (2) நன்மைகள், நலங்கள், நிறைகள் ஆகியவற்றை செழித்தோங்கச் செய்தல். &lt;br /&gt;&lt;br /&gt;
எந்தவிதமான கசடோ, குப்பையோ, களங்கமோ இல்லாத இதயம்தான் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;
எத்தகைய ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இம்மிளவுகூட வளைந்து கொடுக்காத, தயங்காத, தடுமாறாத வீரஞ்செறிந்த இதயம்தான் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;
எந்தவிதமான சந்தேகத்துக்கும் சஞ்சலத்திற்கும் உள்ளாகாத, தடுமாறாத உள்ளம்தான் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;
பொய், பகட்டு, வஞ்சகம் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை பெற்ற தூய்மையான இதயம்தான் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தூய்மைக்கு அடிப்படைகளாக இரண்டைச் சொல்லலாம். இந்த இரண்டையும் வளர்த்துக் கொள்வதில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b&gt;முதலாவதாக,&lt;/b&gt; அல்லாஹ்வின் மீது அன்பு. அல்லாஹ்வின் மீது அதீத அன்பு செலுத்துகின்றவர்களாய், படைத்தவனின் மீது பேரன்பு கொண்டவர்களாய், கருணை மிக்க இறைவனின் மீது பற்று வைத்திருப்பவர்களாய் நாம் இருக்க வேண்டும். “அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள்” என்கிற உன்னத நிலையை அடைய வேண்டும். அந்த அளவுக்கு ஆழமானதாகவும் வலுவானதாகவும் இறைத்தொடர்பு இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b&gt;இரண்டாவதாக, &lt;/b&gt;நாம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மறுமைக்கே முன்னுரிமை தருதல் வேண்டும். உலக இலாபங்களைவிட மறுமை இன்பங்களுக்கே முன் னுரிமை தருகின்ற மனப்பக்குவம் நமக்கு இருத்தல் வேண்டும். அற்பமான, குறுகிய கால உலக இன்பங்களை விட நீடித்த, நிலையான, முடிவே இல்லாத மறுமை நலன்களுக்கு முன்னுரிமை தருகின்றவர்களாய் நாம் மாற வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;
உலகத்தை விட மறுமைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தருகின்ற இந்தப் பண்பை நாம் வளர்த்துக்கொள்ளாவிட்டால் நாம் தாஃகூத்துக்கு அடிமையாகிப் போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
மறுமையைவிட இந்த உலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆபத்தில் முடியும். இத்தகைய மனிதர்கள் மீது இறைவனின் கோபம் உண்டாகும். அவர்களைப் பயங்கர வேதனை சூழ்ந்துகொள்ளும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfctVrzAlpHaU7hvEIPVcdILSW7C9yEYRd8QZKizQb4y_vVOR7nxZ-9llNIl6liyRnuj44imQZsQprCyzmt9g7EQfte-IjS1jD2QTYMd0Tqq7_23vsN4DwVQsuuXjcCMcdKiaMJ5PuznI/s1600/16_106.png&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;87&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfctVrzAlpHaU7hvEIPVcdILSW7C9yEYRd8QZKizQb4y_vVOR7nxZ-9llNIl6liyRnuj44imQZsQprCyzmt9g7EQfte-IjS1jD2QTYMd0Tqq7_23vsN4DwVQsuuXjcCMcdKiaMJ5PuznI/s320/16_106.png&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
எவர் மனநிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இத்தகையவர்களக்கு மாபெரும் வேதனையும் இருக்கின்றது. இதற்குக் காரணம் இவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை அதிகம் நேசித்தார்கள் என்பதுதான்.&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt; (திருக்குர்ஆன் 16 ; 106)&lt;/span&gt;&lt;/blockquote&gt;
&lt;br /&gt;
&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;இதயத்தைப் பாதிக்கின்ற நான்கு பலவீனங்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;
நான்கு பலவீனங்கள் இதயத்தைப் பாதிக்கும். அவற்றைக் குறித்து விழிப்புடன் இருந்து அவற்றிலிருந்து விலகி இருத்தல் அவசியமாகும். இதயத்தூய்மை குறித்து கவலைப்படுகிற அனைவரும் இந்தப் பலவீனங்களைத் துறப்பது குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b&gt;1) டென்ஷன்.&lt;/b&gt; இதுதான் முதல் பலவீனம். டென்ஷன் அடைதல் இதயத்தைப் பாதிக்கும். எப்போதும் எந்நேரமும் எதைக்குறித்தாவது டென்ஷன் அடைவது. பிரச்னைகளை நினைத்து நினைத்து பதற்றமடைவது. பணிகளை எண்ணிப் பார்த்தும் செய்ய வேண்டிய பணிகளை நினைத்துப் பார்த்தும் டென்ஷன் அடைதல். இவையெல்லாமே இதயத்தைத் தூய்மைப்படுத்துவதிலிருந்து நம்முடைய கவனத்தைச் சிதறச் செய்துவிடும். &lt;br /&gt;
&lt;br /&gt;&lt;b&gt;2) பிஸியாக இருப்பது. &lt;/b&gt;எப்போதும் பிஸியாக இருப்பதும் ஆபத்தானதே. எப்போதும் தொழில், வணிகம், பணி, பணம் என்று ஆலாய்ப் பறப்பது. எந்நேரமும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது. அந்த ஒற்றை இலக்குடன் இருபத்தினான்கு மணி நேரமும் பிஸியாக இருப்பது. ஒருவர் காலையில் 6.30 மணிக்கு கடையைத் திறப்பார். இரவு 11.30 மணி வரை கடையே கதி எனக் கிடக்கின்றார் எனில், எப்போதும் பிஸியாக இருக்கின்றார் எனில் அதனால் என்ன நன்மை? காலையில் 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 வரை உழைத்தால்தான் வெற்றியா? வேறு எதற்கும் நேரம் இல்லாத வகையில் பிஸியாக இருப்பது இதயத்தூய்மையிலிருந்து கவனத்தைத் திருப்பி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b&gt;3) சுய பச்சாதாபம் கொண்டு வருந்துதல். &lt;/b&gt;இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். ஒருவர் எந்நேரமும் தன்னைச் சூழ்ந்துள்ள தொல்லைகள் குறித்தும், தான் சந்தித்து நிற்கின்ற பிரச்னைகள் குறித்தும், தன்னுடைய கஷ்டங்கள் குறித்தும் நினைத்து நினைத்து வருந்துகின்றார் எனில் அவருடைய இதயம் தொல்லைகளாலும் பிரச்னைகளாலும் கஷ்டங்களாலும் நிறைந்துவிடும். பிறகு இதயத்தூய்மைக்கு ஏது வாய்ப்பும் நேரமும்?&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b&gt;4) ஆசை. ஆசை. ஆசை. அதிகமாக ஆசைப்படுதல்.&lt;/b&gt; இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். நிறைவேறாத ஆசைகளாலும், கனியாத ஏக்கங்களாலும், மோசம் போன எதிர்பார்ப்புகளாலும் சின்ன சின்ன ஆசைகளாலும் பெரிய பெரிய ஆசைகளாலும் விருப்பங்களாலும் ஒருவருடைய இதயம் நிறைந்திருக்கின்றது எனில், இதயத்தூய்மைக்கு வழி ஏது?&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: blue;&quot;&gt;&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;இதயத்தூய்மைக்கான ஐந்து வழிமுறைகள்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;u&gt;&lt;b&gt;1) முதலாவதாக அல்லாஹ் ஏவியதைச் செய்ய வேண்டும்&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt;. அல்லாஹ் தடுத்தவற்றிலி ருந்து முற்றாக விலகி இருத்தல் வேண்டும்.&lt;br /&gt;குறிப்பாக ஹராமானவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருத்தல் வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;
அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘ஒருவர் பாவம் செய்கின்ற போது சின்னதாக கரும்புள்ளி ஒன்று பதிந்துவிடுகின்றது. அவர் அதிலிருந்து மீளாமல் மீண்டும் மீண்டும் பாவம் செய்து அதிலேயே திளைத்திருப்பாரெனில் அந்தக் கரும்புள்ளி அடர்த்தியாக அவருடைய இதயம் முழுவதையும் சூழ்ந்துகொள்கின்றது’.&lt;br /&gt;&lt;br /&gt;
எனவே அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். &lt;br /&gt;குறிப்பாக ஹராமான சம்பாதியத்திலிருந்து விலகி இருத்தல் வேண்டும். ஹராமான வருமானத்தாலும் ஹராமான உணவுப் பொருள்களை விழுங்குவதாலும் இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஹராமான வருமானமும் உணவும் மனிதனின் நிம்மதியைப் பறிக்கக் கூடியவையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கின்றது. ஜமாஅத்தின் அமைப்புச்சட்டத்தில் ஜமாஅத் உறுப்பினரின் பொறுப்புகளாக எட்டு பொறுப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மூன்று பொறுப்புகள் ஹராமான வருமானத்திலிருந்து விலகி இருப்பது தொடர்பானைவையாகும்.&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
(3)&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஷரீஅத்தில் ‘மாஸீயத்தே ஃபாஹிஷாஹ்’* எனும் பிரிவுக்குள் வரும் வரு-மான வழிகளில் ஒருவர் ஈடுபட்டிருந்தால் அதனை விட்டுவிட வேண்டும்; அதனால் எவ்வளவு இழப்பு ஏற்படினும் சரியே! மேலும் சம்பாத்தியத்-தில் இப்படிப்பட்ட வருமா-னத்தின் ஒரு பகுதி கலந்து விட்டது என்றால், அந்தப் பகுதியை விட்டும் சம்பாத்தியத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
(4) &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஹராமான (விலக்கப்பட்ட, சட்டத்துக்குப் புறம்பான) முறையில் ஈட்டப்-பட்ட பணம் அல்லது சொத்து அவருடைய கைவசமிருப்பின். அதனைக் கைகழுவி விட வேண்டும். ஆனால், அந்தச் சொத்தோ பணமோ பிரித்தறிய முடியாத அளவுக்கு மொத்த சம்பாத்தியத்தில் இரண்டறக் கலந்து விட்டிருந்-தால், இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
(5)&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மற்றவருக்குச் சொந்தமான அல்லது மற்ற-வருக்குச் சேர வேண்டிய சொத்திலிருந்தோ பணத்-திலிருந்தோ ஒரு பகுதியையோ அல்லது பல பகுதி-களையோ பறித்து அவற்றை அவர் தம்முடைய சொத்திலோ பணத்திலோ சேர்த்துக் கொண்டிருந்-தால்&amp;nbsp; உடனடியாக அவர் அவற்றைத் தனியாகப் பிரித்-தெடுத்து அவற்றை அவற்றுக்கு உரியவரி-டம் திருப்பிக் கொடுத்து விட வேண்-டும்.&amp;nbsp; உரிமை-யாளர் யார் எனத் தெரியும்போதும் அவரிட-மிருந்து பறிக்கப்பட்ட சொத்து அல்லது பணம் இன்னதுதான் எனத் தெளிவாக அடையாளம்&amp;nbsp; காண முடிகிற போதும்தான் இவ்வாறு உரியதை உரியவரிடம் திருப்பிக் கொடுப்பது சாத்தியமா-கும். இல்லையெனில் இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.&lt;span style=&quot;font-size: x-small;&quot;&gt;&amp;nbsp; (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புச் சட்டம் பாகம் 2; பிரிவு 8 (3,4,5)&lt;/span&gt;&lt;/blockquote&gt;
&lt;br /&gt;
அண்ணல் நபிகளார்(ஸல்) ஹராமான சம்பாத்தியத்தின் பாதிப்பை நபிமொழி ஒன்றில் விவரித்துள்ளார். ‘ஒருவர் நீண்ட தொலைவு பயணம் செய்து வருகின்றார். இறைவனைத் தொழுகின்றார். இறைவனை நினைவுகூர்கின்றார். மனம் உருக அழுது அரற்றி இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். ஆனால் அவர் அணிந்திருக்கின்ற ஆடை ஹராமான சம்பாத்தியத்தி-லிருந்து பெறப்பட்டது. அவர் உண்ட உணவு ஹராமான சம்பாத்தியத்திலிருந்து பெறப்பட்-டது எனில் அவருடைய முறையீடு எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?.’&lt;br /&gt;&lt;br /&gt;
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் தஸ்கியத்துன் னஃப்ஸ் இதயத் தூய்மை என்பது இதயத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது வாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவியதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;u&gt;&lt;b&gt;2) அடுத்ததாக, குர்ஆனுடன் தொடர்பு &lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt;ஆழமானதாகவும் வலுவானதாகவும் அமைய வேண்டும். நாள்தோறும் குர்ஆன் ஓத வேண்டும். பொருள் புரிந்து வாசிக்க வேண்டும். குர்ஆன் தருகின்ற செய்தியை உள்வாங்கிக் கொள்வதற்காக முயல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;
குர்ஆனுக்கு அபாரமானதோர் சக்தி உண்டு. அதுதான் இதயத்தையே மாற்றிவிடுகின்ற, புரட்டிப்போட்டுவிடுகின்ற சக்தி. இதயத்தையே செம்மைப்படுத்திவிடுகின்ற ஆற்றல் குர்ஆனுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;
எனவே எப்பாடுபட்டாவது நாள்தோறும் குர்ஆன் ஓதுவதற்கும் அதனைப் புரிந்து கொள்வதற்கும் அதன் மொழிபெயர்ப்பையும் விளக்கவுரையையும் வாசிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். நேரத்தைப் பிழிந்தெடுத்து குர்ஆனை ஓதுவதில் செலவிட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;u&gt;&lt;b&gt;3) அடுத்ததாக இஹ்திஸாப்.&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt; இதயத்தூய்மைக்கு இஹ்திஸாபே நல்மருந்து. சுய மதிப்பீடும் சுய ஆய்வும் முக்கியமானவை. உளத்தூய்மையுடன் அன்றாடம் இரவு படுக்கப் போகு முன் இஹ்திஸாப் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;
உமர்(ரலி) கலீஃபாவாக ஆட்சி செலுத்துகின்ற காலம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;
கலீஃபா உமருக்கு ஒரு பழக்கம். தன்னுடைய இரவுப் பொழுதுகளை மூன்று பகுதிகளாய்ப் பிரித்து ஒன்றை மக்கள் குறை தீர்ப்பதற்கும் அடுத்ததை இறை வழிபாட்டுக்கும் மூன்றாவதை ஓய்வுக்கும் ஒதுக்கி வந்தார் உமர்(ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;
இரவில் மக்கள் குறைகளை நேரடியாக அறிந்துகொள்வதற்கும் குறைகளைத் தீர்ப்பதற்கு உகந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நகர்வலம் போவதையும் வழக்கமாய் வைத்திருந்தார் கலீஃபா உமர்(ரலி).&lt;br /&gt;&lt;br /&gt;
இவ்வாறு ஒரு நாள் இரவு வேளையில் நகர்வலம் கிளம்பிய போது அஸ்லம்(ரலி) என்கிற நபித்தோழரையும் தம்முடன் அழைத்துச் சென்றார் உமர்(ரலி). இருவரும் மதீனத்து வீதிகளில் சுற்றித் திரிந்து விட்டு மஸ்ஜிதுன் னபவியை அடைந்தனர். ஒய்வு எடுத்துவிட்டு இரவின் கடைசிப் பகுதியை இறைவழிபாட்டில் கழிக்கத் திட்டமிட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;
களைத்துப் போயிருந்த அஸ்லம் படுத்த மாத்திரத்தில் ஆழ்ந்து தூங்கிவிட்டார். &lt;br /&gt;ஆழ்ந்த நித்திரையில் இருந்த அஸ்லம் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;
‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’&lt;br /&gt;‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’&lt;br /&gt;‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’&lt;br /&gt;என யாரோ கடுமையான குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;
விருட்டென்று எழுந்தார் அஸ்லம். அமீருல் முஃமினினை இந்த இரவு வேளையில் திட்டுபவர் யாரோ என அறிந்து கொள்ளவும் ஒரே வீச்சில் அவரைப் பிடித்துவிட வேண்டும் என்கிற ஆசையிலும் அஸ்லம் பாய்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;
ஆனால்-&lt;br /&gt;&lt;br /&gt;
அவர் கண்ட காட்சி அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;
‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’&lt;br /&gt;‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’&lt;br /&gt;‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’&lt;br /&gt;எனக் கடுமையான குரலில் விமர்சித்துக் கொண்டிருந்தது உமர்(ரலி) அவர்களே தாம். &lt;br /&gt;&lt;br /&gt;
அந்த அகால வேளையில் மதீனத்து மாநகரமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஆட்சியாளர் உமர்(ரலி) தன்னைத்தானே சுயமதிப்பீடும் ஆய்வும் செய்து கொண்டிருந்த காட்சியைத்தான் அஸ்லம்(ரலி) கண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;
இதே போன்று ரோம சாம்ராஜ்யம் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு பெரும் அளவில் பொற்குவியல்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;
அந்தப் பொற்குவியலைப் பார்த்து உமர்(ரலி) கர்ஜிப்பார்; “ஒருபோதும் உன்னால் என்னை ஏமாற்றிவிட முடியாது. என்னுடைய வாழ்வின் இலட்சியத்தை மாற்றிவிடுகின்ற ஆற்றல் உனக்குக் கிடையாது. என்னுடைய வாழ்வு போய்க் கொண்டிருக்கின்ற திசையை மாற்றிவிடுகின்ற சக்தி உனக்கு இல்லை. இந்தப் பொற் குவியலால் எனக்குள் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தி விட முடியாது.’&lt;br /&gt;இந்த மாதிரியான இஹ்திஸாப் - சுய மதிப்பீடுதான் நமக்குத் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;u&gt;&lt;b&gt;4) வழிபாடுகளில் கவனம் வேண்டும்.&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt; மூன்றாவதாக, வழிபாடுகளில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நாம் நிறைய பணிகளில் ஈடுபடுகின்றோம். தனிப்பட்ட அளவிலும் கூட்டு முறையிலும் நாம் நிறைய நற்செயல்களைச் செய்கிறோம். என்றால் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இறுதியில் மறுமை நாளில் நாம் இறைவனுக்கு முன்னால் தனித்தனியாகத் தான் நின்று கணக்கு காட்ட வேண்டியவர்களாய் இருக்கின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;
வழிபாடுகளில் கவனமும் அக்கறையும் செலுத்தும்போது வாழ்க்கை செம்மைப் படுத்தப் படும். வழிபாடுகள் சடங்குகள் ஆகிவிடக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;
நம்முடைய தொழுகைகள் எப்படி இருக்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;
‘தொழும்போது இறைவன் நம்மைப் பார்க்கின்றான் என்கிற எண்ணத் தெளிவுடன் தொழ வேண்டும் என்று அண்ணல் நபிகளார்(ஸல்) அறிவுறுத்தி இருக்கின்றார். அல்லாஹ்-வுடன் நாம் செய்கின்ற உரையாடல்தான் தொழுகை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;
தொழுகைக்காக நிற்கின்ற போதும் அல்லாஹு அக்பர் எனச் சொல்லி கைகளைக் கட்டிக் கொள்கின்ற போதும் எல்லாவிதமான கவலைகளிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும் மனத்தை விலக்கிவிட்டு மனம் ஒருமுகப்பட்ட நிலையில் தொழ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;
தொழுகை எப்படி அமைந்தன என்பதைக் குறித்து இரவில் இஹ்திஸாப் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;
தொழுகையை மேம்படுத்துவதற்காக வேண்டி தொழுகைகளுக்கு ஏ, பி, ஸி என&amp;nbsp; படித்தரங்களைக் கொடுக்கின்ற வழக்கத்தை நாங்கள் எங்களுடைய பகுதியில் அறிமுகப் படுத்தினோம். &lt;br /&gt;&lt;br /&gt;
ஒருமுறை இந்தப் படித்தரங்கள் பற்றி ஊழியர் கூட்டத்தில் விவாதித்தோம். அப்போது ஒரு ஊழியர் சொன்னார். ‘தொடக்கத்தில் இந்தத் திட்டம் நல்ல பலனைத் தந்தது. மனம் ஒன்றித் தொழுதேன். தரம் மேம்பட்டது. ஆனால் காலப்போக்கில் தொழுவதற்காக நிற்கின்ற போதே இந்தத் தொழுகை ஏ கிரேடு தொழுகை, பி கிரேடு தொழுகை என மனத்திற்குள் பற்பல சிந்தனைகள் வந்துவிடுகின்றன’ என்று புலம்பினார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;
எனவே தொழுகையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொழுகையில் நம்முடைய கவனம் சிதறிவிடக் கூடாது என்பதிலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;
நம்முடை இயக்கச் செயல்பாடுகளில் நமக்கு ஆர்வம் நிலைப்பதற்கும், ஊக்கத்துடனும் உற்சாகமாகவும் நாம் பணியாற்றுவதற்கும் தஸ்கியத்துன் னஃப்ஸ் பெரிதும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;u&gt;&lt;b&gt;5) இதயத்தூய்மைக்காக துஆ.&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/span&gt; இதயத்தூய்மைக்காக இறைவனிடம் அடிக்கடி பிரார்த்தனை செய்ய வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;ஒரு முறை அன்னை ஆயிஷா(ரலி) இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அழுகின்ற சத்தம் கேட்டு எழுந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;யாரென்று பார்த்தால் அண்ணல் நபிகளாரே அழுது கொண்டிருந்தார். அப்போது ‘என் இதயத்தைத் தூய்மைப்படுத்துவாயாக’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லி பிரார்த்தித்துக கொண்டிருந்தார் அண்ணல் நபிகளார்(ஸல்)&lt;br /&gt;இஸ்லாமிஸ்டுகளின் மிகப்பெரும் ஆயுதம் இறைத்தொடர்பும் பிரார்த்தனையும்தாம். இந்த இரண்டின் மூலம் நாம் இந்த வாழ்விலும் வெற்றி பெற முடியும் மறுமையிலும் நற்பேறுகளை ஈட்டிக் கொள்ள முடியும். அல்லாஹ் நல்லருள் செய்வானாக.&lt;br /&gt;ஆமின். &lt;br /&gt;
&lt;i&gt;&lt;br /&gt;8 செப்டம்பர் 2012 அன்று சென்னையில் நடந்த மாநில உறுப்பினர் முகாமில் &lt;/i&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;b&gt;எம். ஐ. அப்துல் அஜீஸ் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;i&gt;ஆற்றிய உரை..!&lt;/i&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;br /&gt;
தமிழில் :&amp;nbsp;&lt;b&gt; சையத் சுல்தான்&lt;/b&gt;&lt;br /&gt;தொகுப்பு :&amp;nbsp; &lt;b&gt;அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/09/blog-post.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQCyaKzulRFkGvbo-mpYTIhdPDBMrnYNJifhFgiGlk1Es1Le_c7cBGDaDqcfGqBjs2QTnD8qkuMRdCjp0iU4u_pdj3RhYjYpFpkow42JPXDfIYkwjV16H8ZFpyVtMoyLgrspx5oW8qMEQ/s72-c/m+i+abdul+azeez.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-9035607298991409225</guid><pubDate>Wed, 29 Aug 2012 02:05:00 +0000</pubDate><atom:updated>2012-08-29T07:35:15.824+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Auto drivers in Islamic Dawah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Islam</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Islamic Dawah</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Karnataka Muslims</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Quran</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Salam Centre</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Shoaib Sheikh</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>ஆட்டோவில்     இஸ்லாமிய அழைப்பு!</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhreoRF0msl_Qln1Ugq9MdOt4hagY1bvrCMb0AwtwYF2fHazT4vtTzKV8GEqK2V-KicBTl1z-c1WYQx4USbpnGA00nPEF4dfo1xVZJntE9nkfSSYwV4-TrbUEeHoXwBmbuoaxxYmTBcGTU/s1600/auto+islam.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;213&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhreoRF0msl_Qln1Ugq9MdOt4hagY1bvrCMb0AwtwYF2fHazT4vtTzKV8GEqK2V-KicBTl1z-c1WYQx4USbpnGA00nPEF4dfo1xVZJntE9nkfSSYwV4-TrbUEeHoXwBmbuoaxxYmTBcGTU/s320/auto+islam.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;margin-left: 160px; text-align: left;&quot;&gt;
&lt;u&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/u&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;margin-left: 160px; text-align: left;&quot;&gt;
&lt;u&gt;&lt;b&gt;நில்... கவனி... படி...!&lt;/b&gt;&lt;/u&gt;&lt;span style=&quot;font-size: x-large;&quot;&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;margin-left: 160px; text-align: left;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: x-large;&quot;&gt;&lt;b&gt;ஆட்டோவில்&amp;nbsp;&amp;nbsp; &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;&amp;nbsp;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;margin-left: 160px; text-align: left;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;இஸ்லாமிய அழைப்பு!’&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;பெங்களுர் ஸலாம் சென்டரின் மற்றுமோர் மகுடம் என்று அதனைச் சொல்லலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;விளம்பரப் பதாகைகளில் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச் சொன்னவர்கள்,&lt;br /&gt;நீதி மன்றங்களில் குர்ஆன் ஓசையை முழங்க விட்டவர்கள்,&lt;br /&gt;நீதியரசர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இறைவேதத்தைத் தந்து மனம் நிறைந்தவர்கள்,&lt;br /&gt;
மூத்த காவல்துறை அலுவலர்களுக்கு குர்ஆன் பிரதிகளைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள்,&lt;br /&gt;இஸ்லாத்தை
 அறிமுகப்படுத்தும் ஏடுகளை தரமான தாளில், கலை எழில் மிளிர, அறிவமுதம் 
சொட்டச் சொட்ட அழகிய ஆக்கங்களை இலவசமாக விநியோகித்து மகிழ்ந்தவர்கள்,&lt;br /&gt;
இப்போது மற்றுமோர் வெற்றிகரமான பணியைத் தொடங்கியிருக்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij3Lcj9a2GkjZSVbcW6lXn4Ez2tmsHmZRT5M4mgUUCACwu_uozcTWHMAy-7THAIA-3bxpFFZnJHZMneMq3b1_AcA_4hrdkDeKTwNBQzctEiXWe8d5DTWnZ9n9cVBxaUmbNEjjwuegpoTs/s1600/auto+islam1.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;158&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij3Lcj9a2GkjZSVbcW6lXn4Ez2tmsHmZRT5M4mgUUCACwu_uozcTWHMAy-7THAIA-3bxpFFZnJHZMneMq3b1_AcA_4hrdkDeKTwNBQzctEiXWe8d5DTWnZ9n9cVBxaUmbNEjjwuegpoTs/s320/auto+islam1.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;&lt;br /&gt;எந்நேரமும்
 எப்போதும் இறைவனின் செய்தியைச் சமர்ப்பிக்க வேண்டுமே என்கிற ஓயாத 
எண்ணத்திலும் கவலையிலும் முகிழ்ந்த அருமையான திட்டம் என்று அதனைச் 
சொல்லலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆம்.&lt;br /&gt;
&lt;br /&gt;இன்று மாநகர மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற ஆட்டோக்களில் 
இஸ்லாமிய நூல்களை வைத்து ஆட்டோக்களை நடமாடும் இஸ்லாமியப் படிப்பகங்களாய் 
மாற்றி இருக்கின்ற திட்டம்தான் அது.&lt;br /&gt;
&lt;br /&gt;ஆட்டோவில் ஒட்டுநரின் முதுகுக்குப்
 பின்னால் மீட்டர் பொருத்தப்படுகின்ற இடத்தில் விஞ்ஞான முறையில் 
வடிவமைக்கப்பட்ட பேழைகளில் இஸ்லாமிய நூல்கள் வைக்கப் பட்டிருக்க, &lt;br /&gt;
கண்கவர் முகப்புகளுடன் கொள்ளை அழகுடன் புத்தகங்கள் ‘படி.. படி..’ என மௌனமாய் அழைக்க,&lt;br /&gt;‘உலகப்
 பொதுமறை குர்ஆன்’, ‘அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடை அண்ணல் 
நபி-களார்(ஸல்)’, ‘இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துகளும் சரியான 
விளக்கங்களும்’ , ‘மறுமைச் சிந்தனை’, ‘ஹிஜாப்‘, ‘இஸ்லாமும் பயங்கரவாதமும்’ 
என நூல்களின் தலைப்புகள் பார்ப்போரின் கவனத்தைச் சுண்டியிழுக்க,&lt;br /&gt;
இந்தத் திட்டம் அறிமுகமான சில நாள்களிலேயே பெங்களுர் மக்களின் பெரும் 
வரவேற்பைப் பெற்றுள்ளது. மேன்மேலும் படிக்க விரும்புகின்ற பயணிகளுக்கு இலவச
 நூல்களும் தரப்படுகின்றன.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;
முதற்கட்டமாக ஐம்பது ஆட்டோக்களில் இந்தத் 
திட்டத்தை நடைமுறைப்படுத்-தியுள்ளனர். இதற்கென முதன்மை நிர்வாக அதிகாரி 
நியமிக்கப்பட்டு ஐவர் அடங்கிய குழு ஒன்று சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;table align=&quot;center&quot; cellpadding=&quot;0&quot; cellspacing=&quot;0&quot; class=&quot;tr-caption-container&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto; text-align: center;&quot;&gt;&lt;tbody&gt;
&lt;tr&gt;&lt;td style=&quot;text-align: center;&quot;&gt;&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL99RvBuG6aZ_cVerBkiyTULfMBUn6j1LyyIVBMDg71WpI__GtT2YnAUDTZ8Ka_vZweRcb0JgQGG4Zecjd6ifeDU1kK4BCMTQF1dRTHYGTcmi76zTs_Qd1S2r5DIGmz87_p3MGSxGfRaI/s1600/auto+islam3.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: auto; margin-right: auto;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;213&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL99RvBuG6aZ_cVerBkiyTULfMBUn6j1LyyIVBMDg71WpI__GtT2YnAUDTZ8Ka_vZweRcb0JgQGG4Zecjd6ifeDU1kK4BCMTQF1dRTHYGTcmi76zTs_Qd1S2r5DIGmz87_p3MGSxGfRaI/s320/auto+islam3.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class=&quot;tr-caption&quot; style=&quot;text-align: center;&quot;&gt;ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சிறப்புப் பயிற்சி&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/tbody&gt;&lt;/table&gt;
&lt;br /&gt;
ஐம்பது ஆட்டோ ஒட்டுனர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் விதத்தில் 
சிந்தனைப் பட்டறையும் நடத்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஒட்டுநர்கள் மனமுவந்து 
இந்தத் திட்டத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். 
அறிமுகப்படுத்தப்பட்ட சில நாள்களுக்குள்ளாகவே இவர்கள் சந்தித்த 
அனுபவங்களும் எதிர்கொண்ட மக்களின் அணுகுமுறைகளும் இவர்களின் ஆர்வத்தை 
அதிகப்படுத்தியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b style=&quot;color: blue;&quot;&gt;நிஸார் அஹ்மத்&lt;/b&gt; என்கிற ஆட்டோ ஒட்டுநர்தான் இந்தத் திட்டத்தில் சேர்ந்த 
முதல் ஆட்டோ ஒட்டுநர். இஸ்லாத்தின் செய்தியை மக்கள் வரை கொண்டு 
சேர்க்கின்ற மன நிறைவு என்னை ஆட்டோவிலிருந்து கீழே இறங்கவிடுவதில்லை. 
முன்பெல்லாம் மாலை ஆறு மணிக்கெல்லாம் வண்டியை வீட்டுக்குத் 
திருப்பிவிடுவேன். இப்போது இரவு பத்து, பத்தரை மணி வரை ஒட்டுகின்றேன் 
என்கிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b style=&quot;color: blue;&quot;&gt;காதர் பாஷா &lt;/b&gt;சொல்கின்றார்; ‘என்னுடை ஆட்டோவிலும் இஸ்லாமிய நூல்களை 
வைத்துள்ளேன். பயணிகளும் ஆர்வத்துடன் படிக்கின்றார்கள். பயணிகளை விட எனக்கு
 இது புது அனுபவம். அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றை இதற்கு முன்பு 
முழுமையாக நான் வாசித்ததே இல்லை. இப்போது வாசித்து விட்டேன். குர்ஆன் 
மொழிபெயர்ப்பையும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இது என்னுடைய 
வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.’&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b style=&quot;color: blue;&quot;&gt;ஹாஃபிஸ் முஹம்மத் ஸாதிக்&lt;/b&gt; கூறுகின்றார்: ‘ஒரு முறை ஒரு இந்து புரோகிதர் 
என்னுடைய வண்டியில் ஏறினார். ஆர்வத்துடன் புத்தகங்களைப் புரட்டிப் 
புரட்டிப் பார்த்தார். அவர் போக வேண்டிய இடம் வந்த பிறகும் அவர் சிறிது 
நேரம் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருந்தார். இஸ்லாத்தின் செய்தியை 
சிறப்பாகப் பரப்புகின்றீர்கள் என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.’&lt;br /&gt;&lt;br /&gt;
&lt;b style=&quot;color: blue;&quot;&gt;பாஷா&lt;/b&gt; சொன்ன அனுபவம் நெஞ்சை நெகிழ வைப்பதாகும். அவர் சொல்கின்றார்: ‘ஒரு 
முறை ஒருவர் மிகவும் பரபரப்புடன் கைப்பேசியும் கையுமாக என்னுடைய வண்டியில் 
ஏறினார். ஏதோ ஒரு பிரச்னை போலும்! காரசாரமாக உரத்த குரலில் பேசி வந்தவர்,
 ‘பிறகு பேசுகின்றேன்‘ எனச் சொல்லி கைப்பேசியை அணைத்துவிட்டார். பேழையில் 
வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார். கன்னட 
மொழியில் குர்ஆன் கிடைக்குமா? எனக் கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;
நானும் அவருடைய முகவரியை வாங்கிக் கொண்டேன். அடுத்த நாளே ஸலாம் சென்டரில் 
குர்ஆன் பிரதியை வாங்கிக்கொண்டு அவருடைய வீட்டுக்குச் சென்று கொடுத்தேன்.
 குர்ஆனை வாங்கிக் கொண்ட அவர் ஆயிரம் ரூபாய்த்தாளைக் கொடுக்க 
முற்பட்டார். நான் வேண்டாம் என மறுத்தேன். மறுமையில் இதற்காக இறைவன் 
எனக்குத் தரவிருக்கின்ற நற்கூலியே போதும் என்று சொன்னேன். என்னுடைய 
பதிலைக் கேட்டு அவர் சற்றுநேரம் திகைத்துப் போய் நின்றுவிட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;span style=&quot;font-size: medium;&quot;&gt;&lt;b&gt;செய்தி : &amp;nbsp;ஷுஐப் ஷேக்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
தொகுப்பு : T. &lt;b&gt;அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்&lt;/b&gt;&lt;/div&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
&lt;b&gt;Source : &lt;a href=&quot;http://karnatakamuslims.com/portal/auto-drivers-now-turn-divine-couriers/&quot; target=&quot;_blank&quot;&gt;Here&lt;/a&gt; &lt;/b&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;
</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/08/blog-post.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhreoRF0msl_Qln1Ugq9MdOt4hagY1bvrCMb0AwtwYF2fHazT4vtTzKV8GEqK2V-KicBTl1z-c1WYQx4USbpnGA00nPEF4dfo1xVZJntE9nkfSSYwV4-TrbUEeHoXwBmbuoaxxYmTBcGTU/s72-c/auto+islam.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-7560453066909638911</guid><pubDate>Sat, 03 Mar 2012 12:19:00 +0000</pubDate><atom:updated>2012-03-03T20:01:30.917+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Inspiring Documentary</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Moulana Abdul Azeez</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Moulana Abdur Razaq Latheefi</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Moulana Sirajul Hasan Sahib</category><category domain="http://www.blogger.com/atom/ns#">personalities</category><title>Documentary on Moulana Abdur Razaq Latheefi</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
It is the unique documentary of its kind. Jamaat-e-Islami Hind has been striving in India for the establishment of Divine law in all aspects of life. It has attracted millions of noble souls and changed and shaped their lives. It continues to attract and mould countless human beings throughout the nook and corner of this country.&lt;br /&gt;
&lt;br /&gt;
It has produced many stalwarts and stars. Moulana Abdur Razaq Latheefi is one of them. When we, a handful of youth and students made the goal of establishing Deen as our mission he was not in the scene. But, we grew up hearing moving, soul stirring anectodes about him. As we had Moulana M A Jameel Ahmed and Moulana H Abdur Raqeeb who never get tired of narrating anectodes from the life of Moulana Abdur Razaq Latheefi Sahib. Hence Latheefi Sahib is not alien to us.&lt;br /&gt;
&lt;br /&gt;
But, still, we could not get the full picture. We had never seen his photograph. We never knew how he looked like.&lt;br /&gt;
&lt;br /&gt;
Here is a documentary on the life and times of Moulana Abdur Razaq Latheefi Sahib. It is informative, inspiring and good. Scores of leaders and veterans of the Islamic movement introduce you various aspects of this towering personality. S. M. Malik Sahib&#39;s version would continue to echo in your mind : &quot;Moulana used to undertake tours after tours. He used to remember the names and addresses of three hundred members. He never needed a file or assistant.&quot; It is simply amazing. Nowadays in this age we have become addicted to our cell phones, computers. Sometimes we tend to forget our own numbers.&lt;br /&gt;
&lt;br /&gt;
Moulana Abdul Azeez Sahib and Moulana Sirajul Hasan Sahib extol the leadership quality of the late Moulana. Shakeel Anwar Sahib sheds light on his milli qidmat. Scores of his sons including Br Abdur Raqeeb Latheefi, my friend, remember him passionately.&lt;br /&gt;
&lt;br /&gt;
It is worth watching. &lt;span style=&quot;color: #0b5394;&quot;&gt;&lt;b&gt;Cross posted &lt;/b&gt;in &lt;/span&gt;&lt;a href=&quot;http://luthfispace.blogspot.in/2012/03/life-and-times-of-moulana-abdur-razaq.html&quot; target=&quot;_blank&quot;&gt;&lt;b style=&quot;color: red;&quot;&gt;Luthfispace&lt;/b&gt;&lt;/a&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;iframe allowfullscreen=&quot;&quot; frameborder=&quot;0&quot; height=&quot;315&quot; src=&quot;http://www.youtube.com/embed/jQo9WgDRgTY&quot; width=&quot;420&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/03/documentary-on-moulana-abdur-razaq.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://img.youtube.com/vi/jQo9WgDRgTY/default.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-5889112205579824725</guid><pubDate>Tue, 28 Feb 2012 02:18:00 +0000</pubDate><atom:updated>2012-02-28T08:03:23.546+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Allama Iqbal</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Apna Muqam Paida Kar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">inspiring poem</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Khudi</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Naya Zamana Naya Subh-o-Sham Paida Kar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">poem</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>Apna Muqam Paida Kar</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5bkbIwdNJJ-BNynI3h2vlXC9FsCMdMu7V6b-bDHy_6Savg2tJHHWVSKq1ilVHm2Ph6I3cXgJ4tBgd9rYGC5oDFK2K7GoYqau7C-RktDkKLHMGgM7orVL4CjqZLvZlrxW1-wJMBPExtXU/s1600/something+new.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;213&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5bkbIwdNJJ-BNynI3h2vlXC9FsCMdMu7V6b-bDHy_6Savg2tJHHWVSKq1ilVHm2Ph6I3cXgJ4tBgd9rYGC5oDFK2K7GoYqau7C-RktDkKLHMGgM7orVL4CjqZLvZlrxW1-wJMBPExtXU/s320/something+new.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
No two days in the life of a Muslim should be the same. A Muslim should 
always strive to do something new. Something different. Something more 
than the previous day. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
&lt;b&gt;&lt;i&gt;Isi roz-o-shab main ulajh kar na rah ja&lt;br /&gt;     Ke tere zamaan o makaan &lt;span class=&quot;text_exposed_show&quot;&gt;aur bhi hain&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=&quot;text_exposed_show&quot;&gt; &lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot;&gt;     Lose not yourself in the cycle of days and nights&lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot;&gt;     Within your reach are feats even more &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot;&gt; &lt;/span&gt;&lt;br /&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot;&gt; &lt;b&gt;&lt;i&gt;Dyare Ishq Mein Apna Muqam Paida Kar&lt;/i&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;span class=&quot;text_exposed_show&quot;&gt; Naya Zamana Naya Subho Sham Paida Kar&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot;&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;
&lt;span class=&quot;text_exposed_show&quot;&gt; &lt;br /&gt;
 Iqbal&#39;s philosophy of khudi shows that man is neither soul nor body. 
Man is above both because he pessesses them. Iqbal&#39;s naujawan is a Man of
 Khudi. The absolute Khudi is infinetly creative. &quot;Know thy self and 
success shall be thine&quot; said by some Philosopher. Iqbal expresses if man
 becomes empror of himself then he can lead the world to his own 
direction. He says:&lt;br /&gt; &lt;br /&gt; &quot;The man of strong character who is master of himself&lt;br /&gt; will find fortune complaisant.&lt;br /&gt; ....&lt;br /&gt; He will dig up the foundations of the universe&lt;br /&gt; and cast its atoms into a new mould.&lt;br /&gt; He will subvert the course of Time&lt;br /&gt; And wreck the azure firmament.&lt;br /&gt; By his own strength he will produce&lt;br /&gt; A new world which will do his pleasure&lt;/span&gt;&lt;/blockquote&gt;
&lt;/div&gt;</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/02/apna-muqam-paida-kar.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5bkbIwdNJJ-BNynI3h2vlXC9FsCMdMu7V6b-bDHy_6Savg2tJHHWVSKq1ilVHm2Ph6I3cXgJ4tBgd9rYGC5oDFK2K7GoYqau7C-RktDkKLHMGgM7orVL4CjqZLvZlrxW1-wJMBPExtXU/s72-c/something+new.jpg" height="72" width="72"/><thr:total>1</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-2720709046389469302</guid><pubDate>Mon, 20 Feb 2012 14:42:00 +0000</pubDate><atom:updated>2012-02-20T20:14:23.000+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Azm-e-Muhkam ataa kar khudaaya</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Shahadat-e-Huq</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>Give me my world back</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXMah7EyDB9pzER56QQLpipHBh2hb9pWhJKXXvpryGoCXLi1SH9dhCNdZdV2A7SA7vvy5VUc0Zz8Omml2MfLEYytAkT9rS8IYhzPsJqZFvkGr8DPb3XNsBQqz28RdO-NMeUWYsOSmopCk/s1600/snow.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXMah7EyDB9pzER56QQLpipHBh2hb9pWhJKXXvpryGoCXLi1SH9dhCNdZdV2A7SA7vvy5VUc0Zz8Omml2MfLEYytAkT9rS8IYhzPsJqZFvkGr8DPb3XNsBQqz28RdO-NMeUWYsOSmopCk/s320/snow.jpg&quot; width=&quot;240&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
&lt;br /&gt;
Nowadays old memories haunt me more than dreams of future. Old is always Gold. I miss Moulana M. A. Jameel Ahmed Sahib most. I miss my college buddies. I miss my SIO days.&lt;br /&gt;
&lt;br /&gt;
Those pleasing evenings when we used to assemble in libraries and drawing rooms, those passionate discussions, those dreamy talks of Hukumat-e-Ilahi, those enchanting words of Iqamat-e-deen, shahadat-e-huq and ummatan wasatan. I miss them.&lt;br /&gt;
&lt;br /&gt;
Those endless cups of tea and tireless discussions on the state of Muslim Ummah.. I miss them.&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
Nowadays I find myself immersed in my work. My world has shrinked to world of books and words.&lt;/blockquote&gt;
&lt;blockquote&gt;
I need that passion back. I need that dream back. I yearn for that innocence. I crave for that fascination. Give me my world back. &lt;/blockquote&gt;
&lt;b&gt;&lt;span style=&quot;font-size: large;&quot;&gt;&lt;i&gt;Azm-e-Muhkam ataa kar khudaaya&lt;br /&gt;Howslon ku nayee zindgi de&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/02/give-me-my-world-back.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXMah7EyDB9pzER56QQLpipHBh2hb9pWhJKXXvpryGoCXLi1SH9dhCNdZdV2A7SA7vvy5VUc0Zz8Omml2MfLEYytAkT9rS8IYhzPsJqZFvkGr8DPb3XNsBQqz28RdO-NMeUWYsOSmopCk/s72-c/snow.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-1792100428845239034</guid><pubDate>Thu, 19 Jan 2012 10:47:00 +0000</pubDate><atom:updated>2012-01-19T16:17:42.146+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Bade Be-Aabru Hokar</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Ghalib</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Mirza Asadullah Khan Ghalib</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Nikalna Khuld Se Aadam Ka</category><category domain="http://www.blogger.com/atom/ns#">poem</category><category domain="http://www.blogger.com/atom/ns#">poem of agony</category><category domain="http://www.blogger.com/atom/ns#">poem of anguish</category><category domain="http://www.blogger.com/atom/ns#">poem of yearning</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Tere Kooche Se Hum Nikle</category><title>Bade Be-aabru Hokar Tere Kooche Se Hum Nikle</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA03mafgUle9YSCXvn6gRe_VD5HnyDPeAencTTnTLRq-qhq6gIqcaRAdomhLwZvrsyGJggHW-3LH8J-R0CgOW5IrCXYECi2YqgoTN9m08-CfQuCtXWEVRXNzMXJ6qbmjpfjnakZh4qlWQ/s1600/huge+rock.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA03mafgUle9YSCXvn6gRe_VD5HnyDPeAencTTnTLRq-qhq6gIqcaRAdomhLwZvrsyGJggHW-3LH8J-R0CgOW5IrCXYECi2YqgoTN9m08-CfQuCtXWEVRXNzMXJ6qbmjpfjnakZh4qlWQ/s320/huge+rock.jpg&quot; width=&quot;240&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
&lt;i&gt;&lt;b&gt;Hazaaron Khwahishein Aisee ki Har Khwahish Pe Dam Nikle&lt;br /&gt;Bohot Nikle mere armaan lekin Phir Bhee Kam Nikle&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
Thousands of desires, each worth dying for...&lt;br /&gt;
many of them I have realized...yet I yearn for more...&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
&lt;i&gt;&lt;b&gt;Nikalna Khuld Se Aadam Ka Sunte Aaye The Lekin,&lt;br /&gt;Bade Be-Aabru Hokar Tere Kooche Se Hum Nikle.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
We have heard about the dismissal of Adam from Heaven,&lt;br /&gt;
With a more humiliation, I am leaving the street on which you live...&lt;/blockquote&gt;
Ghalib Mirza Asadullah Khan.&amp;nbsp;&lt;b&gt;&lt;span style=&quot;color: red;&quot;&gt;&lt;a href=&quot;http://allpoetry.com/Ghalib_Mirza_Asadullah_Khan&quot;&gt;Here&amp;nbsp;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;/div&gt;</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/01/bade-be-aabru-hokar-tere-kooche-se-hum.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA03mafgUle9YSCXvn6gRe_VD5HnyDPeAencTTnTLRq-qhq6gIqcaRAdomhLwZvrsyGJggHW-3LH8J-R0CgOW5IrCXYECi2YqgoTN9m08-CfQuCtXWEVRXNzMXJ6qbmjpfjnakZh4qlWQ/s72-c/huge+rock.jpg" height="72" width="72"/><thr:total>9</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-4350445893207993130</guid><pubDate>Mon, 16 Jan 2012 02:38:00 +0000</pubDate><atom:updated>2012-01-16T08:08:26.034+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Agar kho gaya ek nasheman to kya ghum</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Allama Iqbal</category><category domain="http://www.blogger.com/atom/ns#">inspiring poem</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Sitaron se aage jahan aur bhi hain</category><title>Agar kho gaya ek nasheman to kya ghum..!</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br class=&quot;tr_bq&quot; /&gt;&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTT3627MZFeai1QX2YwmLM05ocN20I2jjhVcP0PWwzQT-X9VetzvqoqNB0VQXMpA6v-DUImeUPElIM3Ims6B-87ki-WFIbU-BHndzdBzEBnqWPit4479IfrmlVhAZ-sJc7-n32HtY4giE/s1600/sitaron+se+aage.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTT3627MZFeai1QX2YwmLM05ocN20I2jjhVcP0PWwzQT-X9VetzvqoqNB0VQXMpA6v-DUImeUPElIM3Ims6B-87ki-WFIbU-BHndzdBzEBnqWPit4479IfrmlVhAZ-sJc7-n32HtY4giE/s320/sitaron+se+aage.jpg&quot; width=&quot;131&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;blockquote&gt;
&lt;br /&gt;Allama Iqbal addresses the youth:&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;Sitaron se aage jahan aur bhi hain&lt;br /&gt;Abhi ishq ke imtehan aur bhi hain&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
Beyond the stars there are worlds more&lt;br /&gt;
Our quest yet has more tests to pass &lt;/blockquote&gt;
&lt;blockquote&gt;
&lt;i&gt;&lt;b&gt;Tahi zindagi se nahin ye fizayen&lt;br /&gt;Yahan siakdon karwaan aur bhi hain&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
This existence alone does not matter&lt;br /&gt;There are boundless journeys more &lt;/blockquote&gt;
&lt;blockquote&gt;
&lt;i&gt;&lt;b&gt;Khana’at na kar aalam-e-rang-o-bu par&lt;br /&gt;Chaman aur bhi aashiyaan aur bhi hain&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
Do not rest on what you have&lt;br /&gt;There are other gardens, other nests (resting places) too&lt;i&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;
&lt;blockquote&gt;
&lt;i&gt;&lt;b&gt;Agar kho gaya ek nasheman to kya ghum&lt;br /&gt;Maqmat-e-aah-o-fughaan aur bhi hain&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
Why worry if you have lost one abode&lt;br /&gt;There are a million addresses to claim &lt;/blockquote&gt;
&lt;blockquote&gt;
&lt;i&gt;&lt;b&gt;Tu shaheen hai parvwaaz hai kaam tera&lt;br /&gt;Tere saamne aasmaan aur bhi hain&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
You are the falcon, your passion is flight&lt;br /&gt;And you have skies more to transcend &lt;/blockquote&gt;
&lt;blockquote&gt;
&lt;i&gt;&lt;b&gt;Isi roz-o-shab main ulajh kar na rah ja&lt;br /&gt;Ke tere zamaan o makaan aur bhi hain&lt;/b&gt;&lt;/i&gt;&lt;/blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
Lose not yourself in the cycle of days and nights&lt;br /&gt;Within your reach are feats even more &lt;/blockquote&gt;
&lt;blockquote&gt;
&lt;b&gt;&lt;i&gt;Gaye din ke tanha tha main anjuman mein&lt;br /&gt;Yahaan ab mere raazdaan aur bhi hain&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Gone is the day when I was lonesome in the crowd&lt;br /&gt;Today those who resonate my thoughts are more&lt;/blockquote&gt;
&amp;nbsp;Allama Iqbal had written these lines in 1908. But I feel that he has written these inspiring, soothing lines just for me. &lt;a href=&quot;http://www.allamaiqbal.com/&quot;&gt;&lt;b style=&quot;color: red;&quot;&gt;Here&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/01/agar-kho-gaya-ek-nasheman-to-kya-ghum.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTT3627MZFeai1QX2YwmLM05ocN20I2jjhVcP0PWwzQT-X9VetzvqoqNB0VQXMpA6v-DUImeUPElIM3Ims6B-87ki-WFIbU-BHndzdBzEBnqWPit4479IfrmlVhAZ-sJc7-n32HtY4giE/s72-c/sitaron+se+aage.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-2286257300864322203</guid><pubDate>Mon, 09 Jan 2012 15:50:00 +0000</pubDate><atom:updated>2012-01-09T21:23:22.480+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">A.Shabbeer Ahmed</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind Tamil Nadu and Puducherry</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jan Muhammad</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>A memorable camp of Jamaat-e-Islami Hind in Chennai</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;http://www.jamaateislamihind.org/index.php?do=category&amp;amp;id=69&amp;amp;pageid=882&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;223&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfGzvyC4X-QyrR2VT29wAGb2ZJ0OF7m_PjYcnLSsXGsJ9tjyesGW9VcNJj2LbSAgKibq8TrKvVLMN81tCsRJZdT8BkwVauKNXkvBn1aItGN5bTk7gdI56ByzhVNYSlMFMuSXTGF1PjFEo/s320/camp.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
Hats off to Br A Shabbir Ahmed, Ameer-e-Halqa and Br Jan Muhammad Nazim-e-Ijtema for the succesful execution of the training camp for the state and central leaders and also making foolproof arrangements for the sessions of Markazi Majlis-e-Shura. &lt;br /&gt;
&lt;br /&gt;
There may have been a few minor lapses, deficiencies and inadequacies. We are all humanbeings and to err is human. But the fact is that Allah blessed us all and both the events were successful, upto the mark and incident free.&lt;br /&gt;
&lt;br /&gt;
The Markazi and Riyasati Qayideen returned to their homes with fond memories, smiling faces and rejuvenated spirits. I could not count the number of persons - every one of them tall leaders of the Tahreek - who congratulated and complimented for the arrangements made. &lt;br /&gt;
&lt;br /&gt;
Alhumdulillah! All praise, glory, acclamation, honor, adoration, adulation and thanks to Allah. &lt;/blockquote&gt;
&lt;/blockquote&gt;
Report of the camp &lt;a href=&quot;http://www.jamaateislamihind.org/index.php?do=category&amp;amp;id=69&amp;amp;pageid=882&quot;&gt;&lt;b style=&quot;color: red;&quot;&gt;Here &lt;/b&gt;&lt;/a&gt;and &lt;a href=&quot;http://www.jihtn.org/?p=3930&quot;&gt;&lt;b&gt;Here &lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2012/01/memorable-camp-of-jamaat-e-islami-hind.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfGzvyC4X-QyrR2VT29wAGb2ZJ0OF7m_PjYcnLSsXGsJ9tjyesGW9VcNJj2LbSAgKibq8TrKvVLMN81tCsRJZdT8BkwVauKNXkvBn1aItGN5bTk7gdI56ByzhVNYSlMFMuSXTGF1PjFEo/s72-c/camp.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-7307946462877286270</guid><pubDate>Wed, 28 Dec 2011 17:08:00 +0000</pubDate><atom:updated>2011-12-28T22:38:45.224+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">A.Shabbeer Ahmed</category><category domain="http://www.blogger.com/atom/ns#">A.ShabbJamaat-e-Islami Hind</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Dream</category><category domain="http://www.blogger.com/atom/ns#">eer Ahmed</category><category domain="http://www.blogger.com/atom/ns#">H Abdur Raqeeb</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Markazi Majlis-e-Shoora</category><category domain="http://www.blogger.com/atom/ns#">T. Azeez luthfullah</category><title>Markazi Majlis-e-Shura in my Naani Ghar..!</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhk2vG9rS0S0lzEIN9rKN-rFELAMQbocHdVd8M3fW6mNTcjSKpm21HGTVIxA0YZhkkdFq9G1KFQA8Z9mw69pcwm_rpzR713WExeyJqHtmTDFAaXzpZSdAPBiTIvosVGw5yMi-amGV9jX4/s1600/Markazi+Majlis-e-Shura.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;240&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhk2vG9rS0S0lzEIN9rKN-rFELAMQbocHdVd8M3fW6mNTcjSKpm21HGTVIxA0YZhkkdFq9G1KFQA8Z9mw69pcwm_rpzR713WExeyJqHtmTDFAaXzpZSdAPBiTIvosVGw5yMi-amGV9jX4/s320/Markazi+Majlis-e-Shura.jpg&quot; width=&quot;320&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
It was a fascinating spectacle. &lt;br /&gt;&lt;br /&gt;The Markazi Majlis-e-Shura of Jamaat-e-Islami Hind was about to begin in my grand mother&#39;s house. The atmosphere was that of bonhomie. You could find sherwani clad Moulanas everywhere. Where on earth you could find such a comraderie and mutual affection. &lt;br /&gt;&lt;br /&gt;I was very much elated. I found myself running here and there. I was very much amused and excited. In my grandpa&#39;s room elderly Moulanas were staying. H Abdur Raqeeb Sahib&#39;s voice could be heard. I could not comprehend what is being said. Raqeeb Sahib was sitting in a chair and some Moulana was reclining in a bed. They were talking amicably.&lt;br /&gt;&lt;br /&gt;Suddenly I found myself in the hall. It is the same hall where I used to play as a child. Grand pa used to listen BBC in his radio sitting in a easy chair in that very hall. They had converted it into a meeting hall. &lt;br /&gt;&lt;br /&gt;Instantly I found myself moving towards the backyard. There people are taking their breakfast silently. Ameer-e-Halqa A Shabbir Ahmed was eating french toast. Somebody was placing a slice of a colourful fruit in someone&#39;s plate.&lt;br /&gt;&lt;br /&gt;Then again I found myself in the passage between the hall and the backyard. At that instant Ameer-e-Jamaat in a bright blueish black Sherwani entered. He was moving confidantly like a bridegroom with a vibrant smile lit in his face. His steps are measured. He was flanked by two Moulanas. I could not recall their faces. &lt;br /&gt;&lt;br /&gt;The hall is nearly full. Ameer-e-Jamaat and others were sitting in a row. &lt;br /&gt;&lt;br /&gt;Suddenly I hear a feeble voice of my wife calling Rafia, my fourth daughter (who is doing her UKG). I look for Rafia. She was coming towards me. I move towards her to fetch her.&lt;br /&gt;&lt;br /&gt;Just then the voice of my wife had gone shriller. &lt;br /&gt;&lt;br /&gt;RAFIAAA..! SCHOOL JANE KA IRADHA HAI YA NAHIN..! &lt;br /&gt;&lt;br /&gt;I woke up instantly. &lt;br /&gt;&lt;br /&gt;Oh! It was a dream! &lt;br /&gt;What a dream it was! &lt;/div&gt;</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2011/12/markazi-majlis-e-shura-in-my-naani-ghar.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhk2vG9rS0S0lzEIN9rKN-rFELAMQbocHdVd8M3fW6mNTcjSKpm21HGTVIxA0YZhkkdFq9G1KFQA8Z9mw69pcwm_rpzR713WExeyJqHtmTDFAaXzpZSdAPBiTIvosVGw5yMi-amGV9jX4/s72-c/Markazi+Majlis-e-Shura.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-5017188991133491385</guid><pubDate>Tue, 13 Dec 2011 06:48:00 +0000</pubDate><atom:updated>2011-12-13T12:18:46.679+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Ameenul Hasan</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Hukumat-e-Ilahyia</category><category domain="http://www.blogger.com/atom/ns#">India</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Indian Muslims</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Issues and Ideas</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Welfare Party</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Welfare Party of India</category><title>Hukumat-e-Ilahyia se Welfare Party of India Tak</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcp5EarhN3-9fFmchkhBzF0p2jggYEKoVb_jWyt9Gi0FzYSBgISf9r2HrZ6QZmzKGPEqe2r65KZRU_a3uFmkpr96jhVLtPXa8S1p7Aw9MyMXRS_hQVA0BShzl0HX-nxyjapuywA_slpRQ/s1600/Ameenul+Hasan.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcp5EarhN3-9fFmchkhBzF0p2jggYEKoVb_jWyt9Gi0FzYSBgISf9r2HrZ6QZmzKGPEqe2r65KZRU_a3uFmkpr96jhVLtPXa8S1p7Aw9MyMXRS_hQVA0BShzl0HX-nxyjapuywA_slpRQ/s1600/Ameenul+Hasan.jpg&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
What is the reason behind the decision to launch Welfare Party of India? Has Jamaat-e-Islami Hind compromised its treasured principles? Has the Jamaat discarded its nasb-ul-ain? What about the age old cherished dream of forming the Hukumat-e-Ilahiya (Kingdom of God)? Could this be described as a turnaround by the Jamaat? &lt;a href=&quot;https://www.facebook.com/ameenulhasan&quot;&gt;Ameenul Hasan&lt;/a&gt; answers all the questions convincingly and patiently. You could see a different Ameen here. The vibrancy is missing. He speaks smoothly and with conviction. After watching this enlightening lecture all the doubts regarding the Welfare Party move fade away. A must watch for those who have not yet digested the major move by the oldest Islamic Movement in India. &lt;/blockquote&gt;
&lt;/blockquote&gt;
&lt;blockquote&gt;
&lt;blockquote class=&quot;tr_bq&quot;&gt;
Crossposted in &lt;a href=&quot;http://luthfispace.blogspot.com/2011/12/hukumat-e-ilahyia-se-welfare-party-of.html&quot;&gt;&lt;b&gt;Luthfispace&lt;/b&gt;&lt;/a&gt;.&lt;/blockquote&gt;
&lt;/blockquote&gt;
&lt;/div&gt;
&lt;iframe allowfullscreen=&quot;&quot; frameborder=&quot;0&quot; height=&quot;315&quot; src=&quot;http://www.youtube.com/embed/CU_dk1myoNQ&quot; width=&quot;560&quot;&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;
&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;br /&gt;&lt;/div&gt;
&lt;/div&gt;</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2011/12/hukumat-e-ilahyia-se-welfare-party-of.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcp5EarhN3-9fFmchkhBzF0p2jggYEKoVb_jWyt9Gi0FzYSBgISf9r2HrZ6QZmzKGPEqe2r65KZRU_a3uFmkpr96jhVLtPXa8S1p7Aw9MyMXRS_hQVA0BShzl0HX-nxyjapuywA_slpRQ/s72-c/Ameenul+Hasan.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item><item><guid isPermaLink="false">tag:blogger.com,1999:blog-452529139293657743.post-3005811290208553880</guid><pubDate>Sun, 13 Nov 2011 10:25:00 +0000</pubDate><atom:updated>2011-11-13T16:23:57.988+05:30</atom:updated><category domain="http://www.blogger.com/atom/ns#">Dr Abdul Huq Ansari</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Interview of Dr Abdul Huq Ansari</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Islamic Movement</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Jamaat-e-Islami Hind</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Moulana Abdul Huq Ansari</category><category domain="http://www.blogger.com/atom/ns#">Sehroza Dawat</category><title>டாக்டர் அப்துல் ஹக் அன்சாரியின் ஆதங்கம்</title><description>&lt;div dir=&quot;ltr&quot; style=&quot;text-align: left;&quot; trbidi=&quot;on&quot;&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRpjN3Wk5zQXBpekXaLyMbKGeZGnbPOm44zdFMROnzs8gL4HPNndelvTeTmVTK5svPA5Tgjtfw85neoU64mHv7uC6kHOMe3DGf7tKctDyIuW4Whd0rHNOBT84XXFpf2S8B3xFVOqCmhlc/s1600/Moulana+Abdul+Huq+Ansari.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;margin-left: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRpjN3Wk5zQXBpekXaLyMbKGeZGnbPOm44zdFMROnzs8gL4HPNndelvTeTmVTK5svPA5Tgjtfw85neoU64mHv7uC6kHOMe3DGf7tKctDyIuW4Whd0rHNOBT84XXFpf2S8B3xFVOqCmhlc/s320/Moulana+Abdul+Huq+Ansari.jpg&quot; width=&quot;217&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடங்கி அறுப-தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 
அறிவு, சிந்தனை, செயல் என பல்வேறு களங்களில் அது நீண்ட தூரத்தைக் கடந்து 
வந்துள்ளது. இந்த நீண்ட பயணம் தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?&lt;/b&gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;b&gt;டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி: &lt;/b&gt;சித்தாந்தக் களத்தில் ஜமாஅத் ஊழியர்கள் அடைய வேண்டிய படித்தரத்தை இன்று வரை எட்டவேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;
ஜமாஅத் ஊழியர்களில் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். சகோதர 
சமுதாயங்களைச் சேர்ந்த சகோதரர்கள் மத்தியில் அழைப்புப் பணியில் தங்களை 
முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஊழியர்களும் சரி, முஸ்லிம் சமுதாயத்தின்
 சீர்திருத்தத்திலும் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டிருக்கின்ற 
ஊழியர்களும் சரி,&amp;nbsp; சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முனைப்புடன் 
செயலாற்றுகின்ற ஊழியர்களும் சரி, நாட்டு நடப்பு, தேசப் பிரச்னைகள் 
தொடர்பான விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கின்ற ஊழியர்களும் சரி - 
எல்லாருமே அறிவுக்களத்தில் பின்தங்கியவர்களாகத்தான் இருக்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;
நாட்டுநடப்பிலும் அன்றாட பிரச்னைகளிலும் நல்ல விஷய ஞானத்தைக் 
கொண்டிருக்கின்றவருக்கு இந்திய மதங்கள் பற்றிய ஞானம் இல்லை. ஏதாவதொரு 
துறையில் நல்ல தேர்ச்சி பெற்றவருக்கோ மார்க்கப் புலமை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;
சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பணியாற்றுகின்றவர்களுக்குத்
 தொடர்ந்து பல்வேறு விதங்களில் பயிற்சி தரப்படுவதால் சித்தாந்த பயிற்சி 
முகாம், சிந்தனைப் பட்டறை என பல்வேறு நிலைகளை அவர்கள் கடந்து 
வந்திருப்பதால் அவர்களுக்கு இந்திய மதங்களில் சிலவற்றைக் குறித்து 
சுருக்கமான அறிமுகம் கிடைத்துவிடுகின்றது. ஆனால் அவர்களில் எவருக்குமே எந்தவொரு மதத்தைக் குறித்தும் விரிவான, ஆழமான ஞானம் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்ன மதத்தைக் குறித்து இன்னாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதனைக் 
குறித்து வேறு எவரிடமும் விசாரிக்க வேண்டிய தேவை இருக்காது எனச் சொல்கின்ற
 அளவுக்கு நம்மில் எத்தனை வல்லுநர்கள் உருவாகி இருக்கின்றார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;
உண்மையென்னவெனில் சிந்தனைப் பட்டறைகளிலும் பயிற்சி முகாம்களிலும் 
பங்கேற்றதால் இவர்களுக்கு இந்திய மதங்களைக் குறித்து ஒரளவுக்கு அறிமுகம் 
கிடைத்துவிடுகிறது. ஆனால் அந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், இந்த 
மதங்களின் நூல்களை வாசிப்பதற்கும், வரலாற்றை அறிந்துக் கொள்வதற்கும் 
இவர்கள் மெனக்கெடுவதில்லை. அந்தச் சுருக்கமான அறிமுகத்தை வைத்துக் கொண்டே 
காலத்தை ஓட்டிவிடுகின்றார்கள். அவற்றைக் குறித்து அறிவதற்கும் நூல்களை 
வாசிப்பதற்கும் நேரமும் ஒதுக்குவதில்லை; அவகாசமும் கிடைப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;
நாம் வாழ்கின்ற நாடு எந்த அளவுக்குப் பரந்து விரிந்த நாடு. எந்தத் துறையை 
எடுத்துக் கொண்டாலும் அதில் வல்லுநர்களும்&amp;nbsp; தேர்ச்சி பெற்ற 
திறமையாளர்களும் கொட்டிக் கிடக்கின்ற நாடு இது. &lt;br /&gt;
எல்லாத் துறைகளிலும் பெரும் பெரும் படிப்பாளிகளும் சூரப்புலிகளும் நிறைந்துள்ள நாடு இது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;
இந்தப் பின்னணியில் நம்முடைய இயக்கத்திலும் வல்லுநர்களும் 
ஆற்றல்வாய்ந்தவர்களும் நிறைந்திருக்க வேண்டாமா என்கிற கவலை எனக்குள் 
அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு. சிலசமயம் பேருருவம் எடுத்து என்னுடைய 
தூக்கத்தைப் பறிப்பதுமுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;
நம்மில் சிலராவது வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்த வல்லுநர்களாக மலர வேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;
நம்மில் சிலராவது புத்த மதத்திற்கு அத்தாரிட்டி இவர் எனச் சொல்கின்ற அளவுக்கு புத்த மதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;
நம்மில் சிலராவது சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;
பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம், உபநிஷத்துகள் 
போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?
 &lt;br /&gt;&lt;br /&gt;
இவ்வாறு இந்த மதங்களில் ஆழ்ந்த புலமை பெற்று குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின்
 ஒளியில் அவற்றை விமர்சனமும் ஆய்வும் செய்கின்ற அளவுக்கு ஆற்றல் 
வாய்ந்தவர்கள் நம்மில் உருவாக வேண்டாமா? &lt;br /&gt;&lt;br /&gt;
இஸ்லாமிய இயக்கத்தின் தற்போதைய நூல்களையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த 
நூல்களில் மேற்கத்திய சிந்தனைகள், சித்தாந்தங்கள் மீதான விமர்சனத்தைப் 
பார்க்க முடியும். நாத்திகம், கம்யூனிஸம், முதலாளித்துவம் போன்றவை பற்றிய 
விவாதங்களைப் பார்க்க முடியும். ஜனநாயகம், மதச்சார்பின்மை குறித்தும் இந்த 
நூல்கள் பேசுகின்றன. &lt;br /&gt;
ஆனால் இந்தியாவில் இருக்கின்ற மதங்கள், இந்தியப் பாரம்பர்யங்கள், 
பழக்கவழக்கங்கள், மாண்புகள் பற்றி இந்த நூல்களில் விவாதிக்கப்பட்டுள்ளதா? &lt;br /&gt;&lt;br /&gt;
&lt;div class=&quot;separator&quot; style=&quot;clear: both; text-align: center;&quot;&gt;
&lt;a href=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3VNuDs5cSMJSYHDWUrKLa34YyfIA1jcGzIfooRyuE9E8bqBU0wots-qyhNVlUNS3tfr6lgtIpVBzVrhWaV-WI7XHgfz21_Q4zO5eAy-tg2oFOaZwcaPXldm-oQ9335cb8np8NwoHlrUY/s1600/Abdul+Huq+Ansari.jpg&quot; imageanchor=&quot;1&quot; style=&quot;clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;&quot;&gt;&lt;img border=&quot;0&quot; height=&quot;320&quot; src=&quot;https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3VNuDs5cSMJSYHDWUrKLa34YyfIA1jcGzIfooRyuE9E8bqBU0wots-qyhNVlUNS3tfr6lgtIpVBzVrhWaV-WI7XHgfz21_Q4zO5eAy-tg2oFOaZwcaPXldm-oQ9335cb8np8NwoHlrUY/s320/Abdul+Huq+Ansari.jpg&quot; width=&quot;243&quot; /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;
எங்காவது ஏதாவதொரு பொருளில் இவற்றைப் பற்றிய மேலோட்டமான விவாதத்தை 
மட்டுமே பார்க்க முடியும். மௌலானா அவர்களின் ‘இஸ்லாமிய பண்பாட்டின் 
அடிப்படைக் கொள்கைகளும் உட்கூறுகளும்’ என்கிற நூலில் இந்து மதத்தின் சில 
நம்பிக்கைகள் குறித்து மேலோட்டமாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. 
‘அல்ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூலில் போர் தொடர்பாக இந்து மதத்தில் 
சொல்லப்பட்டுள்ள நடைமுறைகள், நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;
இந்தியாவில் பணியாற்றுவதுதான் நம்முடைய நோக்கமெனில் இந்து மதம் குறித்து 
நல்ல முறையிலும் ஆழமாகவும் வாசித்து விளங்கியிருப்பது இன்றியமையாத-தாகும். 
இந்து மதம் மட்டுமல்லாமல் சீக்கிய மதம், புத்த மதம், ஜைன மதம் 
போன்றவற்றையும் நல்ல முறையில் ஆய்வு செய்திருப்பது அவசியமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;
‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ விரிவுரையில் கிறிஸ்துவ மதம் குறித்து 
எழுதப்பட்டிருக்கின்ற குறிப்புகள் அனைத்துமே மத்தியக் காலத்திலும், நவீனக் 
காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள், என்ஸைக்ளோபிடியா பிரிட்டானிகா தகவல் 
களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 
எழுதப்பட்டவையே. &lt;br /&gt;&lt;br /&gt;
சென்ற நூற்றாண்டில் கிறிஸ்துவ அறிஞர்களும் யூத அறிஞர்களும் பைபிள் மீது 
செய்துள்ள விமர்சனங்களிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் கிறிஸ்துவ, யூத 
வரலாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்தும் பயனீட்டப்படவில்லை 
என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அறிஞர் என்னதான் மிகப்பெரும் மார்க்க 
மறுமலர்ச்சியாளராக, சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக முத்திரை பதித்து 
தனித்து நின்றாலும் எல்லாக் கலைகளிலும் தனித்-தேர்ச்சியையும் நுணுக்கமான 
விவரங்களையும் கவனித்து ஆய்கின்ற செயல்திறனையும் அவரிடம் எதிர்பார்க்க 
முடியாது அல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;
இப்போது நமக்கு இருக்கின்ற மிகப் பெரும் தேவை என்னவெனில்&amp;nbsp; அறிவாற்றலும் 
ஆராய்ச்சித்திறனும் கொண்ட, இஸ்லாத்தின் கோட்பாடுகளிலும் ஆழமான புலமை 
கொண்ட சில இளவல்கள் இந்திய மதங்கள், அவற்-றின் வரலாறு, பாரம்பர்யங்கள், 
தற்போதைய சமூக விழைவுகள், சமூகச் செயல்பாடுகள் போன்றவற்றை ஆழ-மாக ஆராய 
வேண்டும்; இஸ்லாத்தை இந்தியப் பின்னணியில் அறிமுகப்படுத்த வேண்டும். 
இந்தப் பணி கனமான பணி. என்றாலும் மிகவும் அவசியமான பணி என்றே நான் 
கருதுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;
சில ஆண்டுகளுக்கு முன் அலிகரில் சென்டர் ஃபார் ரிலிஜியஸ் ஸ்டடீஸ் என்கிற 
பெயரில் கல்வி நிறுவனத்தை நான் தொடங்கியதற்குப் பின்புலமாக இருந்தது 
இந்தச் சிந்தனைதான். &lt;br /&gt;&lt;br /&gt;
தில்லி திரும்பிய பிறகு பல்வேறு பணிகளில் என்னை நான் ஈடுபடுத்திக் 
கொண்டேன். அவற்றில் ஒன்றுதான் இந்த சென்டரும். 2005 ஆகஸ்டு மாதத்தில் 
இதனைத் தொடங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;
இதிலிருந்து சில இளைஞர்கள் சொக்கத்தங்கங்களாக வெளியாகி இருக்கின்றார்கள். அவர்களிடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;
உங்களுடைய கேள்விக்கு ஒரு கோணத்தில் இதுவரை பதிலளித்துவிட்டேன். இப்போது 
உங்களுடைய கேள்வி-யின் இன்னொரு பரிமாணத்திற்கு வருகின்றேன். அதாவது 
என்னுடைய பங்கு என்ன? நான் என்ன செய்திருக்கின்றேன்? &lt;br /&gt;&lt;br /&gt;
ஒரு மூன்று துறைகளில் எனக்குத் தனி ஈடுபாடு உண்டு. அதில் 
தொடக்கத்திலிருந்தே கவனம் செலுத்தி வருகின்றேன். முதலாவதாக 
மதங்களுக்கிடையே ஒப்பாய்வு, இரண்டாவதாக, சூஃபிஸம், மூன்றாவதாக ஒழுக்கக் 
கல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;
ஒழுக்கக் கல்வி தொடர்பாக நான் சில நூல்களை எழுதியிருக்கின்றேன். ஒழுக்க 
மாண்புகள் தொடர்பான கல்வியில் தனி முத்திரை பதித்த ஒழுக்கவியலாளரும் புகழ்
 பெற்ற அறிஞருமான முஸ்கவியா குறித்து நான் மேற்கொண்ட ஆய்வை (முனைவர் 
பட்டத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு அது) அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் 
நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது. &lt;br /&gt;
ஒழுக்கவியல் குறித்து புகழ்பெற்ற தத்துவ அறிஞர் அபுன் னஸர் ஃபாராபி 
அவர்களின் சிந்தனைகள் என்கிற தலைப்பில் ஒரு நூல் எழுதி இருக்கின்றேன். 
இப்னு சீனா, முக்ஸில்லா போன்றோரின் ஒழுக்கவியல் போதனைகள் குறித்தும் 
ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;
சூஃபிஸம் குறித்து Sufism and Shariah என்கிற தலைப்பில் 
நான் எழுதிய புத்தகம் முஜத்தித் அல்ஃபெ ஸானி ஷேக் அஹ்மத் சர்ஹிந்தி 
அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள் தொடர்பான ஓர் ஆய்வு நூல் ஆகும். 
என்றாலும் அதில் இஸ்லாமிய சூஃபிஸத்தின் உட்கூறுகளை வரையறுப்பதற்கு 
முயன்றிருக்கின்றேன். உர்தூ மொழியிலும் இதன் மொழிபெயர்ப்பு வெளியாகி 
அறிவுக்களங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;
&lt;div style=&quot;text-align: right;&quot;&gt;
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிறுவப்பட்டு 67 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் 
இந்தியாவில் இஸ்லாமிய இயக்கத்தின் நிலைமை குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் அகில இந்தியத் தலைவர்&amp;nbsp; &lt;b&gt;டாக்டர் அப்துல் ஹக் 
அன்சாரி&amp;nbsp; &lt;/b&gt;அளித்த பேட்டியிலிருந்து&lt;/div&gt;
&lt;br /&gt;
&lt;/div&gt;</description><link>https://azeez-luthfullah.blogspot.com/2011/11/blog-post_13.html</link><author>noreply@blogger.com (Azeez Luthfullah)</author><media:thumbnail xmlns:media="http://search.yahoo.com/mrss/" url="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRpjN3Wk5zQXBpekXaLyMbKGeZGnbPOm44zdFMROnzs8gL4HPNndelvTeTmVTK5svPA5Tgjtfw85neoU64mHv7uC6kHOMe3DGf7tKctDyIuW4Whd0rHNOBT84XXFpf2S8B3xFVOqCmhlc/s72-c/Moulana+Abdul+Huq+Ansari.jpg" height="72" width="72"/><thr:total>0</thr:total></item></channel></rss>