tag:blogger.com,1999:blog-27509587756599126122024-02-19T05:55:38.835-08:00என் பாரதி ( En Bharathi )பாரதியின் புகழ் உளகாரிய செய்வோம்.
பாரதியின் கவிதை மொழிபெயர்ப்பு வரவேற்கப்படுகிறது.Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-84120720367958721582010-10-07T10:41:00.000-07:002010-10-07T11:42:45.543-07:00பாரதியார் - பாரதி யார்?<img alt="பாரதியின் கவிதைகள் : பாரதியார் - பாரதி யார்?" border="0" class="reflect rheight50 ropacity33" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0qdpnt8xkGUWHGxvgkexzGgxHlEGm2bRaNqFQN8wRbrJsOvvRzo8p7Gxd2ZPG7IWPRQ_gMkQRWlJSWTMHRDn3uWrHvgc_9pYcrEhobpyaP-XKpwXe-sC_Aq7chrqh9C68t_5_nyA8-4cY/s1600/bharathiar+-+Bharathi+yaar.jpg" style="cursor: hand; display: block; height: 400px; margin: 0px auto 10px; text-align: center; width: 292px;" /><br />
பாரதியார் - பாரதி யார்?<br />
13 September 2004 <br />
<br />
<pre><blockquote>
இவ் ஆய்வு 13.09.04 அன்று அவுஸ்திரேலியா <br />
மெல்பேர்ன் நகரில் தமிழ்க்குரல் <br />
வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது.</blockquote>
</pre>
<pre> </pre>
செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி! <br />
<pre> </pre>
பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை "யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல "சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார். யூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு "மனிதனுக்கு மரணமில்லை." <br />
<pre> </pre>
"காலா என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என்று பாடிய பாரதி காலத்தை வென்ற போது அவருக்கு 39 வயது கூட நிறையவில்லை.! பாரதியாரின் கடைசி நாளைக் குறித்து நெல்லையப்பர் எழுதும் போது அன்று தீக்கிரையான பாரதியாரின் உடலின் எடை அறுபது இறாத்தல் தான் என்றும், அன்றைய தினம் மயானத்திற்கு சென்றவர்கள் தொகை இருபது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.!<br />
<pre> </pre>
பாரதியார் - பாரதி யார்? அவரது சில சிந்தனைகளையும், கருத்துக்களையும் உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம்.<br />
<pre> </pre>
ஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் பாரதியார்!<br />
"தையல் சொல் கேளேல்" என்று பாட்டி சொல்லி வைத்தாள்.<br />
"தையலை உயர்வு செய்" என்று எதிர் பாட்டு பாடி வைத்தார் பாரதியார்.<br />
<pre> </pre>
"ஆறுவது சினம்" என்றாள் ஒளவை. இவரோ <br />
"ரௌத்திரம் பழகு" என்றார்.<br />
<pre> </pre>
"நுப் போல் வளை" என்றாள் ஒளவை. <br />
இவரோ "கிளை பல தாங்கேல்" என்றார்.<br />
<pre> </pre>
"தொன்மை மறவேல்" என்றாள் ஒளவை. <br />
"தொன்மைக்கு அஞ்சேல்" என்றார் பாரதி. <br />
<pre> </pre>
"போர்த் தொழில் புரியேல்" என்றாள் ஒளவை. <br />
"போர்த்தொழில் பழகு" என்றார் இவர். <br />
<pre> </pre>
"மீதூண் விரும்பேல்" என்றாள் அவள். <br />
"ஊண் மிக விரும்பு" என்றார் இவர்.<br />
<pre> </pre>
"போர்த் தொழில் புரியேல்" என்று ஒளவையை பேச வைத்தன அவள் காலத்தில் தமிழ் மன்னர்களுக்குள் நடைபெற்ற போர்கள். பாரதி காலத்தில் அவன் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான வீரர்களை திரட்டுகின்ற வேலை அவனுக்கிருந்தது. ஆகவே தான் "போர்த் தொழில் பழகு" என்று சொல்லி வைத்தான்.<br />
<pre> </pre>
இருந்தும் "ஈவது விலக்கேல்", "ஈகைத்திறன்" என்று அவளோடு ஒத்துப்போன இடங்களுமுண்டு.<br />
<pre> </pre>
ஆகவே பெரும்பாலும் அவளிடமிருந்து கருத்தால் முரண்பட்ட நமது முண்டாசுப் புலவன் அந்த மூதாட்டியை வாழ்த்தி வரவேற்று அவளது கருத்துக்களின் செறிவான தாக்கத்தை எழுதி உணர்த்துகிறான் என்பதைப் பார்க்கிறோம். <br />
<pre> </pre>
இவன் தான் பாரதி. <br />
<pre> </pre>
கருத்தால் முரண்பாடு இருந்தாலும் அவள் தமிழ்ப்பாட்டி-அவள் சொன்னது அமிழ்தம் என்பதற்காகப் பாராட்டுகிறான். இக்காலத்தில் இப்படி ஆட்களைப் பகுத்து பார்த்துப் பாராட்ட வேண்டிய அம்சங்களிருந்தால் பாராட்ட வேண்டுவது மிகவே அவசியமாகிறது.<br />
<pre> </pre>
மூடத்தனமான பக்தியை நம்பிக்கையைப் பாரதியார் மிக்க கடுமையாகச் சாடியிருக்கின்றார். அவரது கட்டுரையில் இருந்து இதோ ஒரு பகுதி:- <br />
<pre> </pre>
"நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிடம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும், விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.<br />
<pre> </pre>
இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள் நட்சத்திரம் - லக்னம் - முதலியன பார்த்தல். <br />
<pre> </pre>
சவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட மாஸப்பொருத்தம், பஷப்பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. <br />
<pre> </pre>
சவரத்திற்குக் கூட இப்படியென்றால் இனி கல்யாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிற்கும், கால விரயத்திற்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது.<br />
<pre> </pre>
"காலம் பணவிலை உடையது" என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின் அதனால் பணலாபம் கிடையாமல் போகும். இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமதப்படுத்தி வைப்பதனால் அந்தகாரியம் பலமான சேதமடைந்து போகும்.<br />
<pre> </pre>
"இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையால் ஏற்கப்பட்டிருக்கின்றன" என்றும், "ஜனங்களுக்குப் படிப்பு கற்றுக்கொடுப்பதனால் இவை அழிந்து போய்விடும்" என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றென்.<br />
<pre> </pre>
ஆனால் பி.ஏ, எம்.ஏ பாPட்சைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத்தியாராகவும், என்ஜினீயர்களாகவும், பிற உத்தியோகத்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை முதலியவர்கள் எவராவது ஒருவர் தம் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா?<br />
<pre> </pre>
"பெண்பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூடபக்திகளுக்கு கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்றும் சிலர் முறையிடுகிறார்கள். பெண்பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திகள் பலனின்றிப் பிதற்றும் இடத்தே, அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு - ஆனால் உண்மையில் பாரதியின் தத்துவ தரிசனம் என்ன? வாழ்க்கைக் கண்ணோட்டம் என்ன?<br />
<pre> </pre>
பாரதி கடவுள் உண்டென்ற கொள்கையுடையவன்தான். ஆயினும் அவன் "ஒருவனே தேவன்" என்பதையோ, "கடவுள் இப்படியன், இவ்வண்ணத்தன், இந் நிறத்தன்" என்பதையோ நிலைநாட்டுவதை முதற்பெருங் கொள்கையாகக் கொள்ளவில்லை.<br />
<pre> </pre>
பாரதியின் இலக்கியம் முழுவதையும் துருவி ஆராய்ந்தால், தேசியப்பாடல்களையோ, தோத்திரப்பாடல்களையோ வேதாந்த பாடல்களையோ, இதர பாடல்களையோ எதை ஆராய்ந்து பார்த்தாலும் இந்த வாழ்வையும் இதில் மனித வர்க்கம் முழுவதும் உயர்நிலை எய்தி வாழ்வதையும் அதற்கான கால மாறுதலையும் பெருநோக்;காகக் கொண்டு நிற்கின்றான் என்பதைத் தெளிவாக காணமுடியும்.<br />
<pre> </pre>
"செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் <br />
சேர்ந்திடலா மென்றேஎண்ணி யிருப்பர் <br />
பித்தமனிதர் அவர்சொல்லும் சாத்திரம் <br />
பேயுரையாமென்று ஊதடா சங்கம்" (வேதாந்த-சங்கு)<br />
<pre> </pre>
இந்தப்பாட்டில், செத்தபிறகு வாழ்வு உண்டென்றோ, சிவலோகம், வைகுந்தம் உண்டென்றோ நினைக்கும் கருத்தை மண்டையிலடித்து நசுக்கி விடுகின்றான்.<br />
<pre> </pre>
"மண் பயனுற வேண்டும் <br />
வானகம் இங்கு தென்படவேண்டும்" <br />
<pre> </pre>
இவ்வாறு "வேண்டும்" என்ற பாட்டில் சொர்க்கம் வேறு எங்கேயும் இல்லை அது இங்கேயே தோன்ற வேண்டும் என்கிறான்.<br />
<pre> </pre>
"வீடு(மோட்சம்) வேறு எங்கேயும் இல்லை. அது இங்கேயே இருக்கிறது" "கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு" என்று "அறிவே தெய்வம்" என்ற பாட்டில் பாடுகின்றான்.<br />
<pre> </pre>
"ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த <br />
ஜன்மத்தில் விடுதலையுண்டு, நிலையுண்டு"<br />
<pre> </pre>
என்று "ஜீவன் முத்தி" என்ற பாட்டில் இந்த பிறப்பிலேயே விடுதலை உண்டு என்கிறான்.<br />
<pre> </pre>
பாரதி தமிழ்-தமிழ் என்றே மூச்சு விட்டான் இதோ தமிழைப்பற்றியும், தமிழ் இனப்பற்றினைக் குறித்தும் அவன் எழுதியவற்றில் ஒரு சில துளிகள்.<br />
<pre> </pre>
"தமிழ், தமிழ், தமிழ் என்றும், எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய-புதிய செய்தி, புதிய-புதிய யோசனை, புதிய-புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும். தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகின்றது.<br />
<pre> </pre>
ஆனால் அதேவேளை தமிழனைக் கண்டிக்கவும் தயங்கவில்லை பாரதி. தமிழனக்கு அவர் கூறி அறிவுரை இதோ!<br />
<pre> </pre>
"தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங் கொடுத்து விட்டாய். <br />
<pre> </pre>
இவற்றை நீக்கி விடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாயிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளையும் காட்டிலும் உண்மைப்பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்."<br />
<pre> </pre>
அதே வேளை தமிழ் மொழி குறித்துச் சற்று வித்தியாசமான கருத்துக்களையும், ஏன் கடுமையான கருத்துக்களையும் கூட அவர் வெளியிட்டுள்ளார். "தமிழில் எழுத்துக் குறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் "தமிழ்ப்பாஷைக்கு உள்ள குறைகள்" என்ற தலைப்பில் ஓர் உரையாடல் கட்டுரையையும் அவர் எழுதியுள்ளார். தமிழ்க்குரல் அன்பர்களின் தமிழ்ப்பசிக்கு அவை தீனி போடுவதாகவே அமையும் என்பது எமது கருத்து! அவற்றில் இருந்து சில வசனங்கள்:<br />
<pre> </pre>
"பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் - உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும்-உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து சௌகர்யப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்த நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்." <br />
<pre> </pre>
"சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச் <br />
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு <br />
சேர்ப்பீர்"<br />
<pre> </pre>
என்று தான் பாடியதின் உட்கருத்தை இவ்வாறு இன்னுமொரு பாடலிலும் தருகின்றார்.<br />
<pre> </pre>
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் <br />
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் <br />
இறவாத புகழுடைய புதுநூல்கள் <br />
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் <br />
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் <br />
சொல்வதிலோர் மகிமை இல்லை <br />
திறமான புலமையெனில் வெளிநாட்டோர் <br />
அதை வணங்கச் செய்தல் வேண்டும்.<br />
<pre> </pre>
அது மட்டுமல்ல தனது கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறும் எழுதியிருக்கின்றார்.<br />
<pre> </pre>
"தமிழா பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்"<br />
<pre> </pre>
தமிழன் உயரவேண்டும். தமிழ் மொழி சிறப்புற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதையே உரக்கவும் சொன்னார். ஆனால் பாரதியின் வசன நடையிலும், பாடல்களிலும் அநேக சமஸ்கிருத சொற்கள் கலந்து வந்ததை மறுப்பதற்கில்லை. அதேபோல் சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதி, அந்த சாதிப்பேயை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிராமணராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்தான்.<br />
<pre> </pre>
ஆனால் இதனைப் பாரதியின் குறைகள் என்று கருதுவதை விட அந்தக் குறைகளில் இருந்து வெளிப்பட முனைந்த போது ஏற்பட்ட தவறுகள் என்றுதான் கொள்ள வேண்டும்! பாரதி வாழ்ந்த காலம் அப்படி! சீரழிந்து போன சமுதாயச் சேற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புரட்சிகரமான சிந்தனைகளுடன் வெளியே வந்தவன் இந்த மகாகவி! <br />
<pre> </pre>
அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். அவர் தன்னைப்பற்றி பாடிய பாடலை இந்த தினத்தில் அவருக்கு காணிக்கையாக்குகின்றோம்.<br />
<pre> </pre>
இந்த ஆய்வுக்குப் பாரதி பற்றிய பல நூல்கள் பயன்பட்டன. பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-28930160323479939952010-02-23T09:17:00.000-08:002010-02-23T09:18:56.001-08:00பாரதி அறுபத்தாறு<pre><b>கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி
</b>
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி;
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செய்யமணித் தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள். 1
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாகப்
போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமகா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித் தமரத் தன்மை ஈவாள். 2
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி.
பாகார்ந்த தேமொழியாள்,படருஞ் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி
ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை.
சோகா டவிக்குளெனைப் புகவொட்டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள். 3
<b>மரணத்தை வெல்லும் வழி</b>
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார். 4
பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்,பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனென் றில்லை;
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை.6
<b>அசுரர்களின் பெயர்</b>
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;
மிச்சத்தைப் பின் சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்,மேதினியில் மரணமில்லை;
துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே.
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில். 7
<b>சினத்தின் கேடு</b>
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்;சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார். 8
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேதுவந்தால் எமக்கென் னென்றே. 9
<b>தேம்பாமை</b>
''வடகோடிங் குயர்ந்தென்னே,சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு''பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! 10
<b>பொறுமையின் பெருமை</b>
திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை யென் பதிங்கு பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண் டீர்,பகுதி'தணி'யெ னுஞ்சொல்,
பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்! 11
பொறுமையினை,அறக்கடவுள் புதல்வ னென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான்.
இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையாரோடே;
பொறுமை யின்றிப் போர்செய்து பரத நாட்டைப்
போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையுங் கலியினையும் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான் 12
ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய் மரணமெய்தல் கொடுமை யன்றொ?
தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ?
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்;
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்;
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
''நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்''என்றான்.13
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்!
கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதர்கு வழியெனநான் குறித்திட்டேனே. 14
<b>கடவுள் எங்கே இருக்கிறார்?</b>
''சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்'' லென்று ஹைரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ? 15
<b>சுயசரிதை</b>
கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
''கீழான்''பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே. 16
சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்,
வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றொ நிகழ்த்து வீரே? 17
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் ரில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்! 18
<b>குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்)</b>
ஞான்குரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்;
தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்.
வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி!19
எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்!
முப்பொழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்,
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்! 20
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. 21
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை;
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்;
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிச் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்;அவன்வாழ் நாளைக்
மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை. 22
<b>குரு தரிசனம்</b>
அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக் கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்,
முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 23
அப்போது நான்குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியது பேச லுர்றேன்:
''அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே!எனக்குநினை உணர்த்து வாயே. 24
யாவன் நீ? நினைக்குள்ள திறமை என்னே?
யாதுணர்வாய் கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே? சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,அனக்குணர்த்த வேண்டும்''என்றேன். 25
பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த் தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்;
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வாவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.26
<b>உபதேசம்</b>
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, [என்றேன்
''அறிதிகொலோ!''எனக்கேட்டான்''அறிந்தேன்''
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்;யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். 27
தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
''வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே,வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்ள்
தெரிவதுபோல் உனக்குள்ள் சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்''என்றான். 28
கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி,
ஐயனெனக் குணார்த்தியன பலவாம் ஞானம்,
அகற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்.
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே. 29
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
''தம்பிரா னே; இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றொ?
மூட்டைசுமந் திடுவதென்னே?மொழிவாய்''அன்றென்.30
புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
''புறததேநான் சுமக்கின்றேன்;அகத்தி னுள்ளே;
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும். 31
சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 32
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 34
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 35
கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க! 36
<b>கோவிந்த சுவாமி புகழ்</b>
மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்;
வண்மை திகழ் கோவிந்த ஞானி,பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்;
எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்!
தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார்
செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன். 37
அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள்,
அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்;
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி;
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்;
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதியுடையான்,கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்;38
பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
போந்தானிம் முனியொருநாள்;இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்;பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்;
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;
மரணபயம் நீங்கினேன்;வலிமை பெற்றேன். 39
<b>யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்</b>
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.40
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி. 41
<b>குவளைக் கண்ணன் புகழ்</b>
யாழ்ப்பாணத் தையனையென் நிடங்கொ ணர்ந்தான்
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்,
பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்.
தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான்,
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார். 42
மகத்தான் முனிவரெலாம் கண்ணன் தோழர்;
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்;
மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரப்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்.
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச்
சமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
''அன்றேயப் போதேவீ டதுவே வீடு'' 43
பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோ ம்,
பாரினிலே பயந்தெளிந்தோம்;பாச மற்றோம்.
நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்;
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம்,அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்;
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர். 44
<b>பெண் விடுதலை</b>
பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய பெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
மனையாளும் தெய்வமன்றோ?மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை. 45
<b>தாய் மாண்பு</b>
பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
''கண்டார்க்கு நகைப்'பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்பமன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ?உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை ''அன்னையும் பிதாவும்,''
பாரிடை ''முன் னறிதெய்வம்''என்றா: அன்றோ?46
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ ?
தாய்பெண்ணே யல்லளோ?தமக்கை,தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைத் படுத்த லாமோ?
''தாயைப்போ லேபிள்ளை''என்று முன்னோர்
வாக்குளதன் றோ?பெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ? 47
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்;
நாட்டினிலே
நாடோ றும் முயன்றிடுவான் நலிந்து சாவான்;
காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்,அப்பா!
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை;
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே. 48
<b>காதலின் புகழ்</b>
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம். 49
ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்;வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும். 50
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;
மங்கைதனைக் காட்டினிலும் உடண்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்;
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ? 51
நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே. 52
காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ? 53
<b>விடுதலைக் காதல்</b>
காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்;
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்;
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே,
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்,
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார். 54
வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்.
காரணந்தான் யாதெனிலோ;ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்;கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே! 55
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ?வீட்டைச் சுட்டால்,
நலமான் கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்?
காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே! 56
<b>சர்வ மத சமரசம்</b>
(கோவிந்த சுவாமியுடன் உரையாடல்)
''மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,
ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன்,அன்பு வேந்தன்
நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப்போலே
நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்;
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்,
வெயிலுள்ள போதினிலே உலர்த்திக் கொள்வோம்.57
காற்றுள்ள போதேநாம் தூற்றிக் கொள்வோம்;
கனமான குருவையெதிர் கண்டபோதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை அடித்துக் கொள்வோம்;
பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப்
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்''அன்றெனுள்ளே.58
சிந்தித்து ''மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே!
தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கே டேன் கூறாய்''என்றேன்.
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்;
''அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;
பந்தமில்லை;பந்தமில்லை;பந்தம் இல்லை;
பயமில்லை;பயமில்லை;பயமே இல்லை; 59
''அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;
அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்!
அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்;
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்;நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை;ஆத லாலே,
அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா! 60
'பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு.61
''ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்!
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா!
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ?
பாதமலர் காட்டினினை அன்னை காத்தாள்;
பாரினிலித் தருமம்நீ பகரு வாயே. 62
''ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி 'ஓம் நமச் சிவாய' வென்பர்;
'ஹரிஹரி'யென் றிடினும் அஃதே;'ராம ராம'
'சிவசிவ'வென்றிட்டாலும் அஃதேயாகும்.
தெரிவுறவே 'ஓம்சக்தி'யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும். 63
''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். 64
''பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
நாமமுயர் சீனத்துத் 'தாவு''மர்க்கம்,
நல்ல ''கண் பூசி''மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே. 65
''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;
தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!'' 66</pre>Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-41337126232696255242010-01-15T03:13:00.000-08:002010-01-15T03:14:25.235-08:00தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழிசொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே <br />
துஞ்சிடோம் - இனி அஞ்சிடோம் <br />
எந்த நாட்டினும் இந்த அநீதிகள் <br />
ஏற்குமோ? - தெய்வம் பார்க்குமோ? <br />
<br />
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை <br />
வாழ்த்துவோம் - முடி தாழ்த்துவோம் <br />
எந்த மாருயி ரன்னையைப் போற்றுதல் <br />
ஈனமோ? - அவ மானமோ? <br />
<br />
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு <br />
போகவோ? - நாங்கள் சாகவோ? <br />
அழுது கொண்டிருப் போமோ? ஆண்பிள்ளைகள் <br />
அல்லமோ? - உயிர் வெல்லமோ? <br />
<br />
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் <br />
நாய்களோ? - பன்றிச் சேய்களோ? <br />
நீங்கள் மட்டும் மனிதர்களோ? - இத் <br />
நீதமோ? - பிடி வாதமோ? <br />
<br />
பார தத்திடை அன்பு செலுத்துதல் <br />
பாபமோ? - மனஸ் தாபமோ? <br />
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது <br />
குற்றமோ? - இதில் செற்றமோ? <br />
<br />
ஒற்றுமை வழி யொன்றே வழியென்பது <br />
ஓர்ந்திட்டோம் - நன்கு தேர்ந்திட்டோம் <br />
மற்று நீங்கள் செய்யுங்கொடு மைக்கெல்லாம் <br />
மலைவு றோம்; - சித்தம் கலைவுறோம். <br />
<br />
சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம் <br />
சாயுமோ? - ஜீவன் ஓயுமோ? <br />
இதயத் துள்ளே இலங்கு மஹாபக்தி <br />
ஏகுமோ? - நெஞ்சம் வேகுமோ?Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-63995705204192709412010-01-15T03:12:00.000-08:002010-01-15T03:16:08.491-08:00வெள்ளைக் கார விஞ்ச் துரை கூற்றுராகம் - தாண்டகம் தாளம் - ஆதி <br />
<br />
நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை <br />
நாட்டினாய், கனல் மூட்டினாய், <br />
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே <br />
மாட்டுவேன்; - வலி காட்டுவேன். (நாட்டி) <br />
<br />
கூட்டம் கூடி வந்தே மாதரமென்று <br />
கோஷித்தாய், - எமை தூஷித்தாய், <br />
ஓட்டம் நாங்க ளெடுக்க வென்றே கப்பல் <br />
ஓட்டினாய், - பொருள் ஈட்டினாய் (நாட்டி) <br />
<br />
கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள் <br />
கூறினாய், - சட்டம் மீறினாய், <br />
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே <br />
ஏசினாய், - வீரம் பேசினாய் (நாட்டி) <br />
<br />
அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் <br />
ஆக்கினாய், - புன்மை போக்கினாய், <br />
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை <br />
மீட்டினாய், - ஆசை ஊட்டினாய் (நாட்டி) <br />
<br />
தொண்டொன் றேதொழிலாக் கொண்டிருந்தோரைத் <br />
தூண்டினாய், - புகழ் வேண்டினாய், <br />
கண்கண்ட தொழில் கற்க மார்க்கங்கள் <br />
காட்டினாய். - சோர்வை ஓட்டினாய் (நாட்டி) <br />
<br />
எங்கும் இந்த சுயராஜ்ய விருப்பத்தை <br />
ஏவினாய், - விதை தூவினாய், <br />
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல் <br />
செய்யவோ? - நீங்கள் உய்யவோ? (நாட்டி) <br />
<br />
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திச் <br />
சொல்லுவேன், - குத்திக் கொல்லுவேன் <br />
தடிப் பேசுவோ ருண்டோ? சிறைக்குள்ளே <br />
தள்ளுவேன், - பழி கொள்ளுவேன். (நாட்டி)Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-13371454359211040252010-01-15T03:11:00.000-08:002010-01-15T03:16:55.173-08:00நாம் என்ன செய்வோம்("நாம் என்ன செய்வோம்! புலையரே! - இந்தப் <br />
பூமியி லில்லாத புதுமையைக் கண்டோம்" என்றவர்ணமெட்டு) <br />
<br />
ராகம் - புன்னாகவராளி தாளம் - ரூபகம் <br />
<br />
பல்லவி <br />
<br />
நாம் என்ன செய்வோம்! துணைவரே! - இந்தப் <br />
பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம். (நாம்) <br />
<br />
சரணங்கள் <br />
<br />
திலகன் ஒருவனாலே இப்படி யாச்சு <br />
செம்மையும் தீமையும் இல்லாமலே போச்சு <br />
இபலதிசையும் துஷ்டர் கூட்டங்க ளாச்சு <br />
பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு. (நாம்) <br />
<br />
தேசத்தில் எண்ணற்ற பேர்களுங் கெட்டார் <br />
செய்யுந் தொழில்முறை யாவரும் விட்டார், <br />
பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார், <br />
பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (நாம்) <br />
<br />
பட்டம்பெற் றோர்க்குமதிப் பென்பது மில்லை <br />
பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை <br />
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை <br />
சர்க்கா ரிடம்சொல்லிப் பார்த்தும் பயனில்லை (நாம்) <br />
<br />
சீமைத் துணியென்றால் உள்ளம் கொதிக்கிறார் <br />
சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார் <br />
தாமெத் தையோ எவந்தேஎ யென்று துதிக்கிறார் <br />
தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் (நாம்)Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-42069147150767993302010-01-15T03:10:00.000-08:002010-01-15T03:17:38.075-08:00நடிப்பு சுதேசிகள்(பழித்தறிவுறுத்தல்) <br />
<br />
கிளிக்கண்ணிகள் <br />
<br />
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, <br />
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! <br />
வாய்ச் சொல்லில் வீரரடி. <br />
<br />
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, <br />
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! <br />
நாளில் மறப்பா ரடீ <br />
<br />
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் <br />
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! <br />
அகலிகளுக் கின்ப முண்டோ? <br />
<br />
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற <br />
பெண்களின் கூட்டமடீ! - கிளியே! <br />
பேசிப் பயனென் னடீ <br />
<br />
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், <br />
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! <br />
மாங்கனி வீழ்வ துண்டோ! <br />
<br />
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் <br />
செப்பித் திரிவா ரடீ! - கிளியே! <br />
செய்வ தறியா ரடீ! <br />
<br />
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் <br />
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே! <br />
நம்புத லற்றா ரடீ! <br />
<br />
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் <br />
பேதைகள் போலு யிரைக் - கிளியே <br />
பேணி யிருந்தா ரடீ! <br />
<br />
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய <br />
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே <br />
அஞ்சிக் கிடந்தா ரடீ! <br />
<br />
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் <br />
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே <br />
ஊமைச் சனங்க ளடீ! <br />
<br />
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா <br />
மாக்களுக் கோர் கணமும் - கிளியே <br />
வாழத் தகுதி யுண்டோ? <br />
<br />
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் <br />
ஈனர்க் குலகந் தனில் - கிளியே! <br />
இருக்க நிலைமை யுண்டோ? <br />
<br />
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் <br />
வந்தே மாதர மென்பார்! - கிளியே! <br />
மனத்தி லதனைக் கொள்ளார் <br />
<br />
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் <br />
பழமை இருந்த நிலை! - கிளியே! <br />
பாமர ரேதறி வார்! <br />
<br />
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் <br />
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! <br />
சிறுமை யடைவா ரடீ! <br />
<br />
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் <br />
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! <br />
செம்மை மறந்தா ரடீ! <br />
<br />
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் <br />
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! <br />
சோம்பிக் கிடப்பா ரடீ! <br />
<br />
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் <br />
வாயைத் திறந்து சும்மா - கிளியே! <br />
வந்தே மாதர மென்பார்!Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-48193781892656593272010-01-15T03:09:00.000-08:002010-01-15T03:18:25.272-08:00பாரத தேவியின் அடிமை(நந்தன் சரித்திரத்திலுள்ள ஆண்டைக் கடிமைக்காரன் <br />
அல்லவே என்ற பாட்டின் வர்ணமெட்டையும் கருத்தையும் <br />
பின்பற்றி எழுதியது) <br />
<br />
பல்லவி <br />
<br />
அன்னியர் தமக்கடிமை யல்லவே - நான் <br />
அன்னியர் தமக்கடிமை யல்லவே. <br />
<br />
சரணங்கள் <br />
<br />
மன்னிய புகழ் பாரத தேவி <br />
தன்னிரு தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்) <br />
<br />
இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம் <br />
திலக முனிக் கொத்த அடிமைக்காரன். (அன்னியர்) <br />
<br />
வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடுபோம் <br />
ஐயன் பூபேந்தரனுக் கடிமைக் காரன். (அன்னியர்) <br />
<br />
காவலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள் <br />
பாலர் தமக்கொத்த அடிமைக் காரன். (அன்னியர்) <br />
<br />
காந்தன லிட்டாலும் தர்மம் விடாப்ரமம் <br />
பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன். (அன்னியர்)Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-84723015841053512032010-01-15T03:07:00.000-08:002010-01-15T03:19:09.818-08:00நம்ம ஜாதிக் கடுக்குமோ(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் <br />
சொல்லுதல்) <br />
<br />
"ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? <br />
நியாயந் தானோ? நீர் சொல்லும்?" என்ற வர்ணமெட்டு <br />
<br />
பல்லவி <br />
<br />
ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? <br />
செய்வது சரியோ? சொல்லும் <br />
<br />
கண்ணிகள் <br />
<br />
முன்னறி யாப் புது வழக்கம் நீர் <br />
மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது <br />
எந்நகரிலு மிது முழக்கம் - மிக <br />
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே) <br />
<br />
சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள் <br />
தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது <br />
மதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள் <br />
மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே) <br />
<br />
வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி <br />
வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு <br />
பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர் <br />
பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே)Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-43769071256532990142010-01-15T02:57:00.000-08:002010-01-15T03:19:52.082-08:00தொண்டு செய்யும் அடிமை(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு <br />
ஆங்கிலேயஉத்தியோகஸ்தன் கூறுவது) <br />
<br />
நந்தனார் சரித்திரத்திலுள்ள "மாடு தின்னும் புலையா! உனக்கு <br />
மார்கழித் திருநாளா?" என்ற பாட்டின் வர்ணமெட்டு <br />
<br />
தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு <br />
சுதந்திர நினைவோடா? <br />
பண்டு கண்ட துண்டோ? - அதற்கு <br />
பாத்திர மாவாயோ? (தொண்டு) <br />
<br />
ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள் <br />
சமயச் சண்டை போச்சோ? <br />
நீதி சொல்ல வந்தாய்! - கண்முன் <br />
நிற்கொ ணாது போடா! (தொண்டு) <br />
<br />
அச்சம் நீங்கி னாயோ? - அடிமை <br />
ஆண்மை தாங்கி னாயோ? <br />
பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை <br />
பேணு தலொழித் தாயோ? (தொண்டு) <br />
<br />
கப்ப லேறு வாயோ? - அடிமை <br />
கடலைத் தாண்டு வாயோ? <br />
குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை <br />
கொற்றத் தவிசு முண்டோ? (தொண்டு) <br />
<br />
ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை <br />
உடல்பில் வலிமை யுண்டோ? <br />
வெற்று ரைபே சாதே! அடிமை! <br />
வீரியம் அறி வாயோ? (தொண்டு) <br />
<br />
சேர்ந்து வாழு வீரோ? - உங்கள் <br />
சிறுமைக் குணங்கள் போச்சோ? <br />
சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள் <br />
சோம்பரைத் துடைத் தீரோ? (தொண்டு) <br />
<br />
வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி <br />
வெருவலை ஒழித் தாயோ? <br />
உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம் <br />
உனக்கில்லை மறந் திடடா! (தொண்டு) <br />
<br />
நாடு காப்ப தற்கே - உனக்கு <br />
ஞானம் சிறது முண்டோ? <br />
வீடு காக்கப் போடா! - அடிமை <br />
வேலை செய்யப் போடா! (தொண்டு) <br />
<br />
சேனை நடத்து வாயோ? - தொழும்புகள் <br />
செய்திட விரும்பு வாயோ? <br />
ஈன மான தொழிலே - உங்களுக்கு <br />
இசைவ தாகும் போடா! (தொண்டு)Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-71149528808478970392010-01-15T02:56:00.000-08:002010-01-15T03:20:27.930-08:00கோக்கலே சாமியார் பாடல்(இராமலிங்க சுவாமிகள் ஏகளக்கமறப் பொதுநடம் நான் <br />
கண்டுகொண்ட தருணம என்று பாடிய பாட்டைத் <br />
திரித்துப் பாடியது) <br />
<br />
களக்கமுறும் மார்லிநடம் கண்ண்டுகொண்ட தருணம் <br />
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான் <br />
விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ? <br />
வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ? <br />
வளர்த்தபழம் கர்சா னென்ற குரங்குகவர்ந் திடுமோ? <br />
மற்றிங்ஙன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ? <br />
துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனோ அல்லால் <br />
தொண்டவிக்குமோ, ஏதும் சொல்லறிய தாமோ?Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-11624126888914588472010-01-15T02:55:00.000-08:002010-01-15T03:21:16.778-08:00சத்ரபதி சிவாஜி(தன் சைனியத்திற்குக் கூறியது) <br />
<br />
ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்! <br />
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா! <br />
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! <br />
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்! <br />
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்! <br />
<br />
அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள் <br />
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்! <br />
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்! <br />
கால னுருக்க்கொளும் கணைதுரந் திடுவீர். <br />
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச் <br />
<br />
செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்! <br />
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய! <br />
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக! <br />
மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா <br />
ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு! <br />
<br />
வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் <br />
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி? <br />
வீரரும் அவரிசை விரித்திடு புலவரும் <br />
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு! <br />
தர்மமே உருவமாத் தழைத்த பே ரரசரும் <br />
<br />
நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு! <br />
வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை <br />
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு! <br />
பாரதப் பூமி பழம்பெரும் பூமி; <br />
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! <br />
<br />
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; <br />
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்! <br />
வானக முட்டும் இமயமால் வரையும் <br />
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும் <br />
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும் <br />
<br />
தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும் <br />
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் <br />
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு! <br />
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க <br />
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு! <br />
<br />
தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் <br />
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு! <br />
ஊனமொன்றறியா ஞானமெய் பூமி, <br />
வானவர் விழையும் மாட்சியார் தேயம்! <br />
பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ? <br />
<br />
நீரதன் புதல்வர் நினைவகற் றாதீர்! <br />
தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர் <br />
பேய்த்தகை கொண்டோர் பெருமையும் வன்மையும் <br />
ஞானமும் அறியா நவைபுரி பகைவர் <br />
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல் <br />
<br />
இந்நாள் படை கொணர்ந்து இன்னல்செய் கின்றார்! <br />
ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் <br />
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும் <br />
மாதர்கற் பழித்தலும் மறைவர் வேள்விக்கு <br />
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்! <br />
<br />
சாத்திரத் தொகுதங்யைத் தாழ்த்துவைக் கங்ன்றார் <br />
கோத்தங்ர மங்கையர் குலங்கெடுக் கின்றார் <br />
எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர் <br />
கண்ணியம் மறுத்தனர, ஆண்மையுங் கடிந்தனர், <br />
பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர் <br />
<br />
திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர், <br />
பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர், <br />
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர், <br />
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் <br />
ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர். <br />
<br />
மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை <br />
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்? <br />
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல <br />
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம். <br />
தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை <br />
<br />
மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்? <br />
மானமென் றிலாது மாற்றலர் தொழும்பாய் <br />
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? <br />
தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி <br />
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ? <br />
<br />
பிச்சைவாழ் வுகந்து பிறருடைய யாட்சியில் <br />
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன், <br />
புன்புலால் யாழ்க்கையைப் போற்றியே தாய்நாட்டு <br />
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன். <br />
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும் <br />
<br />
ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன். <br />
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர் <br />
யாரிவண் உளரவர் யாண்டேனும் ஒழிக! <br />
படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக் <br />
கடைபடு மாக்களென் கண்முனில் லாதீர்! <br />
<br />
சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப <br />
மாதரர் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க, <br />
நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான் <br />
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக! <br />
தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின் <br />
<br />
பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க! <br />
நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு <br />
ஊட்டுதல் பெரங்தென உண்ணுவோன் செல்க! <br />
ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும் <br />
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன். <br />
<br />
ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்! <br />
வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்! <br />
மானமே பெரிதென மதிப்பவர் இருமின்! <br />
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்! <br />
தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்! <br />
<br />
மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்! <br />
புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்! <br />
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்! <br />
ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்! <br />
சோர நெஞ்சங்லாத் தூயவர் இருமின்! <br />
<br />
தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்! <br />
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்! <br />
உடலினைப் போற்றா உத்தமர் இருமின்! <br />
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்! <br />
வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்! <br />
<br />
நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும் <br />
புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்? <br />
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின் <br />
இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும் <br />
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் <br />
<br />
வீமனும் துரோணனும் வீட்டுமன் றானும் <br />
ராமனும் வேறுள இருந்திறல் வீரரும் <br />
நற்றுணை புரிவர்; வானக, நாடுறும்! <br />
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம்! <br />
பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் <br />
<br />
செற்றினி மிழேச்சரைத் தீர்த்திட வம்மீன்! <br />
ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! <br />
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! <br />
வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும், <br />
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் <br />
<br />
உருளையி னிடையினும் மாற்றலர் தலைகள் <br />
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்! <br />
நம்இதம், பெருவளம் நலிந்திட விரும்பும் <br />
(வன்மியை) வேரறத் தொலைத்தபின் னன்றோ <br />
ஆணெனப் பெறுவோம், அன்றிநாம் இறப்பினும் <br />
<br />
வானுறு தேவர் மணியுல கடைவோம், <br />
வாழ்வமேற் பாரத வான்புகழ்த் தேவியைத் <br />
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்! <br />
போரெனில் இதுபோர், புண்ணியத் திருப்போர்! <br />
பாரினில் இதுபோற் பார்த்திடற் கெளிதோ? <br />
<br />
ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி <br />
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே <br />
நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து <br />
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம் <br />
வேள்வியில்இதுபோல் வேள்வியொன் றில்லை! <br />
<br />
தவத்தினில் இதுபோல் தவம்பிறி தில்லை! <br />
முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று <br />
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட <br />
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் <br />
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று <br />
<br />
இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த் <br />
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர் <br />
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்? <br />
வையகத் தரசும் வானக ஆட்சியும் <br />
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன். <br />
<br />
மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால,f <br />
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது. <br />
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது, <br />
ஓய்வுறுங் கால்கள, உலைந்தது சிரமமும், <br />
வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன் <br />
<br />
சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன், <br />
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன், <br />
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி? <br />
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன் <br />
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து <br />
<br />
சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த் <br />
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான் <br />
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி <br />
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால் <br />
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச் <br />
<br />
செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய், <br />
உண்மையை அறியாய் உறவையே கருதிப் <br />
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய் <br />
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், <br />
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர் <br />
<br />
தம்மொடு பிறந்த சகோதரராயினும் <br />
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம். <br />
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்! <br />
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை <br />
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும் <br />
<br />
பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை? <br />
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! <br />
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று <br />
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக் <br />
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் <br />
<br />
அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய் <br />
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச் <br />
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் <br />
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன். <br />
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் <br />
<br />
இசையுநற் றவத்தால் இன்றுவாழ்ந் திருக்கும் <br />
ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர், <br />
தேரில்இந் நாட்டினர், செறிவுடை உறவினர், <br />
நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர், <br />
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம் <br />
<br />
பிறப்பினில் அன்னியர், பேச்சினில் அன்னியர் <br />
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-47960478105304678542010-01-15T02:33:00.000-08:002010-01-15T03:23:09.764-08:00விநாயகர் நான்மணி மாலைவெண்பா <br />
<br />
(சக்திபெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும் <br />
சித்(திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா) - அத்தனே <br />
(நின்)றனக்குக் காப்புரைப் பார், நின்மீது செய்யும் நூல் <br />
இன்றிதற்கும் காப்புநீ யே. 1 <br />
<br />
கலித்துறை <br />
<br />
நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம் <br />
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன், <br />
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத் <br />
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. 2 <br />
<br />
விருத்தம் <br />
<br />
செய்யுந் தொழிலே காண் <br />
சீர்பெற் றிடநீ அருள்செய்வாய், <br />
வையந் தனையும் வெளியினையும் <br />
வானத் தையுமுன் படைத்தவனே, <br />
ஐயா, நான்முகப் பிரமாவே <br />
யானை முகனே, வாணிதனைக் <br />
கையா லணைத்துக் காப்பவனே, <br />
கமலா சனத்துக் கற்பகமே 3 <br />
<br />
அகவல் <br />
<br />
கற்பக விநாயகக் கடவுளே, போற்றி <br />
சிற்பர மோனத் தேவன் வாழ்க <br />
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க <br />
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க <br />
படைப்புக் கிறையவன்; பண்ணவர் நாயகன், <br />
<br />
இந்திர குரு.எனது இதயத் தொளிர்வான் <br />
சந்திர மவுலித் தலைவன் மைந்தன் <br />
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம், <br />
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர் <br />
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும், <br />
<br />
அக்கினி தோன்றும், ஆண்மை வலியுறும்? <br />
திக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம், <br />
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம், <br />
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும் <br />
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு <br />
<br />
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம், <br />
அச்சந் தீரும். அமுதம் விளையும், <br />
வித்தை வளரும், வேள்வி ஓங்கும் <br />
அமரத் தன்மை எய்தவும் <br />
இங்குநாம் பெறலாம், இ·துணர் வீரே 4 <br />
<br />
வெண்பா <br />
<br />
(உண)ர்வீர் உணர்வீர் உலகத்தீர், இங்குப் <br />
(புண)ர்வீர் அமர(ரு)ம் போக(ம்) - கண(ப)தியைப் <br />
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின் <br />
காதலுடன் கஞ்சமலர் கால்) 5 <br />
<br />
கலித்துறை <br />
<br />
காலைப் பிடித்தேன் கணபதி, நின்பதங் கண்ணிலொற்றி <br />
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்) <br />
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன் <br />
கோலை மனமென்னும் நாட்டின் நிறுத்த குறியெனக்கே. 6 <br />
<br />
விருத்தம் <br />
<br />
எனக்கு வேண்டும் வரங்களை <br />
இசைப்பேன் கேளாய் கணபதி <br />
மனத்திற் சலன மில்லாமல் <br />
மதியில் இருளே தோன்றாமல், <br />
நினைக்கும் பொழுது நின்மவுன <br />
நிலைவந் திடநீ செயல்வேண்டும், <br />
கனக்குஞ் செல்வம் நூறுவயது, <br />
இவையும் தர நீ கடவாயே. 7 <br />
<br />
அகவல் <br />
<br />
கடமை யாவன, தன்னைக் கட்டுதல் <br />
பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல் <br />
விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய், <br />
நாரா யணனாய் நதிச்சடை முடியனாய் <br />
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி, <br />
<br />
அல்லா, யெஹோவா எனத்தொழு தன்புறும் <br />
தேவருந் தானாய், திருமகள், பாரதி. <br />
உமையெனுத் தேவியர் உகந்தவான் பொருளாய், <br />
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல், <br />
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும் <br />
<br />
கடமை யெனப்படும, பயனிதில் நான்காம், <br />
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே. <br />
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய் <br />
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா! <br />
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில் <br />
<br />
எல்லாப் பயன்களும் தாமே எய்தும், <br />
அசையா நெஞ்சம் அருள்வாய், உயிரெலாம் <br />
இன்புற் றிருக்க வேண்டி, நின் இருதாள் <br />
பணிவதே தொழிலெனக் கொண்ட <br />
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே. 8 <br />
<br />
வெண்பா <br />
<br />
களியுற்று நின்று, கடவுளே! இங்குப் <br />
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக் <br />
கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித் <br />
தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து. 9 <br />
<br />
கலித்துறை <br />
<br />
துறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக் <br />
குறைந்தா ரைக்காத் தெளியார்க்குண வீந்து குலமகளும் <br />
அறந்தாங்கு மக்கள்ம் நீடுழி வாழ்கென அண்டமெலாம் <br />
சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே. 10 <br />
<br />
விருத்தம் <br />
<br />
தவமே புரியும் வகையறியேன், <br />
சலியா துறநெஞ் சறியாது <br />
சிவமே, நாடிப் பொழு தனைத்தும் <br />
தியங்கித் தியங்கி நிற்பேனை, <br />
நவமா மணிகள் புனைந்தமுடி <br />
நாதா! கருணா லயனே! தத் <br />
துவமாகி யதோர் பிரணவமே <br />
அஞ்சேல் என்று சொல்லுதியே. 12 <br />
<br />
அகவல் <br />
<br />
சொல்லினுக் கரியனாய் சூழ்ச்சிக் கரியனாய்ப் <br />
பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை, <br />
உள்ளுயி ராகி உலகங் காக்கும் <br />
சக்தியே தானாந் தனிச்சுடர் பொருளை, <br />
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப் <br />
<br />
பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி, <br />
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி, <br />
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று <br />
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியவனாய், <br />
யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய் <br />
<br />
வாழ்ந்திட விரும்பினேன், மனமே! நீயிதை <br />
ஆழ்ந்து கருதி ஆய்ந்தாய்ந்து பலமுறை <br />
சூழ்ந்து, தெளிந்து பின் சூழ்ந்தார்க் கெல்லாம் <br />
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து <br />
தேறித் தேறிநான் சித்திபெற் றிடவே, <br />
<br />
நின்னா லியன்ற துணைபுரி வாயேல் <br />
பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்; <br />
மனமே! எனை நீ வாழ்வித் திடுவாய்! <br />
வீணே யுழலுதல் வேண்டா, <br />
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே 12 <br />
<br />
வெண்பா <br />
<br />
புகழ்வோம் கணபதியின் பொற்கழலை நாளும் <br />
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே - இகழ்வோமே <br />
புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம, ஈங்கிது காண் <br />
வல்லபைகோன் தந்த வரம். 13 <br />
<br />
கலித்துறை <br />
<br />
வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும் <br />
கரவும் புலைமை விருப்பமும் ஐயமும் காய்ந்தெறிந்து <br />
சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத் <br />
தரமேகொல் வானவர் என்றுளத் தேகளி சார்ந்ததுவே 14 <br />
<br />
விருத்தம் <br />
<br />
சார்ந்து நிற்பாய் எனதுளமே <br />
சலமும் கரமும் சஞ்சலமும் <br />
பேர்ந்து பரம சிவாநந்தப் <br />
பேற்றை நாடி, நாள்தோறும் <br />
ஆர்ந்த வேதப் பொருள்காட்டும் <br />
ஐயன், சக்தி தலைப்பிள்ளை, <br />
கூர்ந்த இடங்கள் போக்கிடுநங் <br />
கோமான் பாதக் குளிர்நிழலே. 15 <br />
<br />
அகவல். <br />
<br />
நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த் <br />
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து <br />
மண்ணினும் காற்றினும் வானினும் எனக்குப் <br />
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான் <br />
உள்ளத் தோங்க நோக்குறும் விழியும், <br />
<br />
மௌன வாயும், வரந்தரு கையும், <br />
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான், <br />
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான் <br />
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த <br />
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும் <br />
<br />
தானே யாகிய தனிமுதற் கடவுள், <br />
யானென தற்றார் ஞானமே தானய் <br />
முக்தி நிலைக்கு மூலவித் தாவான் <br />
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர் <br />
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள் <br />
<br />
ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை <br />
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை, <br />
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று <br />
செப்பிய மந்திரத் தேவனை <br />
முப்பொழு தேத்திப் பணிவது முறையே. 16 <br />
<br />
வெண்பா. <br />
<br />
முறையே நடப்பாய் முழுமூட நெஞ்சே! <br />
இறையேனும் வாடாய் இனிமேல் - கறையுண்ட <br />
கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன் <br />
தொண்டருக் குண்டு துணை. 17 <br />
<br />
கலித்துறை <br />
<br />
துணையே! எனதுயி ருள்ளே யிருந்து சுடர்விடுக்கும் <br />
மணியே! எனதுயிர் மன்னவ னே!என்றன் வாழ்வினுக்கோர் <br />
அணியே! எனுள்ளத்தி லார முதே! என தற்புதமே! <br />
இணையே துனக்குரைப்பேன் கடைவானில் எழுஞ்சுடரே! 18 <br />
<br />
விருத்தம் <br />
<br />
சுடரே போற்றி! கணத்தேவர் <br />
துரையே போற்றி! எனக்கென்றும் <br />
இடரே யின்றிக் காத்திடுவாய். <br />
எண்ணாயிரங்கால் முறையிட்டேன், <br />
படர்வான் வெளியிற் பலகோடி <br />
கோடி கோடிப் பலகோடி <br />
இடறா தோடும் அண்டங்கள் <br />
இசைத்தாய், வாழி இறையவனே! 19 <br />
<br />
அகவல் <br />
<br />
இறைவி இறைவன் இரண்டும்ஒன் றாகித் <br />
தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய் <br />
உள்ளளி யாகி உலகெலாந் திகழும் <br />
பரம்பொரு ளேயோ? பரம்பொரு ளேயோ? <br />
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும் <br />
<br />
தேவ தேவா! சிவனே கண்ணா! <br />
வேலா! சாத்தா! விநாயகா! மாடா! <br />
இருளா! சூரியா! இந்துவே! சக்தியே! <br />
வாணீ! காளீ! மாமக ளேயோ! <br />
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது <br />
<br />
யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே <br />
வேதச் சுடரே! மெய்யாங் கடவுளே! <br />
அபயம் அபயம் அபயம்நான் கேட்டேன், <br />
நோவு வேண்டேன் நூற்றாண்டு வேண்டினேன், <br />
அச்சம் வேண்டேன் அமைதி வேண்டினேன், <br />
<br />
உடைமை வேண்டேன் உன்துணை வேண்டினேன், <br />
வேண்டா தனைத்தையும் நீக்கி <br />
வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே. 20 <br />
<br />
வெண்பா <br />
<br />
கடமைதா னேது? கரிமுகனே! வையத் <br />
திடம்நீ யருள்செய்தாய், எங்கள் - உடைமைகளும் <br />
இன்பங் களுமெல்லாபம் ஈந்தாய் நீ யாங்களுனக் (கு) <br />
என்புரிவோம் கைம்மா றியம்பு? 21 <br />
<br />
கலித்துறை <br />
<br />
இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும், எடுத்தவினை <br />
பயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவர் <br />
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன் <br />
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே 22 <br />
<br />
விருத்தம் <br />
<br />
மேன்மைப் படுவாய்! மனமே! கேள் <br />
விண்ணின் இடிமுன் விழுந்தாலும், <br />
பான்மை தவறி நடுங்காதே, <br />
பயத்தால் ஏதும் பயனில்லை, <br />
யான்முன் உரைத்தேன் கோடிமுறை <br />
இன்னுங் கோடி முறைசொல்வேன், <br />
ஆன்மா வான கணபதியின் <br />
அருளுண்டு அச்சம் இல்லையே. 23 <br />
<br />
அகவல் <br />
<br />
அச்ச மில்லை அமுங்குத லில்லை, <br />
நடுங்குதலில்லை நாணுத லில்லை <br />
பாவ மில்லை பதுங்குத லில்லை <br />
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம், <br />
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம் <br />
<br />
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம், <br />
யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம், <br />
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம், <br />
வான முண்டு மாரி யுண்டு <br />
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் <br />
<br />
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் <br />
உடலும் அறிவும் உயிரும் உளவே, <br />
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும், <br />
கேட்கப் பாட்டும் காணநல் லுலகமும் <br />
களித்துரை செய்யக் கணபதி பெயரும் <br />
<br />
என்றுமிங் குளவாம்! சலித்திடாய், ஏழை <br />
நெஞ்சே! வாழி! நேர்மை யுடன் வாழி! <br />
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ! <br />
தஞ்ச முண்டு சொன்னேன், <br />
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே. 24 <br />
<br />
வெண்பா <br />
<br />
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல் <br />
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய <br />
மைந்தன் கண நாதன் நங்குடியை வாழ்விப்பான்! <br />
சிந்தையே! இம்மூன்றும் செய். 25 <br />
<br />
கலித்துறை <br />
<br />
செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண், <br />
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெல்லாம் <br />
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே! <br />
பையத் தொழில்புரி நெஞ்சே! கணாதிபன் பக்திகொண்டே! 26 <br />
<br />
விருத்தம் <br />
<br />
பக்தி யுடையார் காரியத்திற் <br />
பதறார்! மிகுந்த பொறுமையுடன் <br />
வித்து முளைக்குந் தன்மைபோல் <br />
மெல்லச் செய்து பயனடைவார் <br />
சக்தி தொழிலே அனைத்துமெனிற் <br />
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்? <br />
விந்தைக் கிறைவா! கணநாதா! <br />
மேன்மைத் தொழிலிற் பணியெனையே! 27 <br />
<br />
அகவல் <br />
<br />
எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே! <br />
பொறுத்தா ரன்றே பூமி யாள்வார்? <br />
யாவும் நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல் <br />
செவ்விய நெறி, அதிற் சிவநிலை பெறலாம், <br />
பொங்குதல் போக்கிற் பொறையெனக் கீவாய் <br />
<br />
மங்கள குணபதி, மணக்குள கணபதி! <br />
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய், <br />
அகல்விழி உமையாள் ஆசைமகனே! <br />
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும், <br />
உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி <br />
<br />
ஆள்வதும், பேரொளி ஞாயிறே யனைய <br />
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும் <br />
நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன். <br />
<br />
காத்தருள் புரிக கற்பக விநாயகா! <br />
காத்தருள் புரிக கடவுளே! உலகெலாம் <br />
கோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளே! <br />
<br />
அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய் <br />
எங்குல தேவா போற்றி! <br />
சங்கரன் மகனே! தாளிணை போற்றி! 28 <br />
<br />
வெண்பா <br />
<br />
போற்றி! கலி யாணிபுதல்வனே! பாட்டினிலே <br />
ஆற்ற லருளி அடியேனைத் - தேற்றமுடன் <br />
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள் <br />
வீணையொலி என்நாவில் விண்டு. 29 <br />
<br />
கலித்துறை <br />
<br />
விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே! <br />
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்! <br />
பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்தசுவைத் <br />
தெண்டமிழ்ப்பாடல் ஒருகோடி மேவிடச் செய்குவையே. 30 <br />
<br />
விருத்தம் <br />
<br />
செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி <br />
செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள், <br />
கையா ளெனநின் றடியேன்செய் <br />
தொழில்கள் யாவும் கைகலந்து <br />
செய்வாள் புகழ்சேர் வாணியுமென் <br />
னுள்ளே நின்று தீங் கவிதை <br />
பெய்வாள்! சக்தி துணைபுரிவாள் <br />
பிள்ளாய்! நின்னைப் பேசிடிலே. 31 <br />
<br />
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன், <br />
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன், <br />
மண்மீ துள்ள மக்கள், பறவைகள். <br />
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு, மரங்கள், <br />
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே, <br />
<br />
இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந்த் திடவே <br />
செய்தல் வேண்டும், தேவ தேவா! <br />
ஞானா காசத்து நடுவே நின்றுநான் <br />
'பூமண்ட லத்தில் அன்பும் பொறையும் <br />
விளங்குக; துன்பமும், மிடிமையும் நோவும், <br />
<br />
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம் <br />
இன்புற்று வாழ்க', என்பேன்! இதனை நீ <br />
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி <br />
'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே <br />
இந்நாள் இப்பொழுது தெனக்கிவ் வரத்தினை <br />
<br />
அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த <br />
சக்தி குமாரனே! சந்திர மவுலீ <br />
நித்தியப் பொருளே! சரணம் <br />
சரணம் சரணம் சரணமிங் குனக்கே. 32 <br />
<br />
வெண்பா <br />
<br />
உனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன், <br />
மனக்கேதம் யாவினையும் மாற்றி- (எனக்கே நீ) <br />
நீண்டபுகழ் வாணாள் நிறைச் செல்வம் பேரழகு <br />
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. 33 <br />
<br />
கலித்துறை <br />
<br />
விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா! <br />
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன் <br />
அரங்கத் திலேடிரு மாதுடன் பள்ளிகொண் டான் மருகா! <br />
வரங்கள் பொழியும் முகிலே, என்னுளத்து வாழ்பவனே! 34 <br />
<br />
விருத்தம் <br />
<br />
வாழ்க புதுவை மணக்குளத்து <br />
வள்ளல் பாத மணிமலரே! <br />
ஆழ்க உள்ளம் சலனமிலாது! <br />
அகண்ட வெளிக்கண் அன்பினையே <br />
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக! <br />
தொலையா (இன்பம் விளைந்திடுக!) <br />
வீழ்க கலியின் வலியெல்லாம் <br />
கிருத யுகந்தான் மேவுகவே. 35 <br />
<br />
அகவல் <br />
<br />
மேவி மேவித் துயரில் வீழ்வாய். <br />
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய். <br />
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை <br />
இன்புறச் செய்வேன், எதற்குமினி அஞ்சேல், <br />
ஐயன் பிள்ளை (யார்) அருளால் உனக்குநான் <br />
<br />
அபயமிங் களித்தேன்.... நெஞ்(சே) <br />
நினக்குநான் உரைத்தன நிலை நிறுத்தி(டவே) <br />
தீயிடைங் குதிப்பேன் கடலுள் வீழ்வேன், <br />
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன். <br />
ஏதுஞ் செய்துனை இடரின்றிக் காப்பேன் <br />
<br />
மூட நெஞ்சே முப்பது கோடி <br />
முறையுனக் குரைத்தேன, இன்னும் மொழிவேன், <br />
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே, <br />
எது நிகழினும் நமக்கென்? என்றிரு, <br />
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும் <br />
<br />
நமக்கேன் பொறுப்பு? 'நான் என்றோர் தனிப்பொருள் <br />
இல்லை, நானெனும் எண்ணமே வெறும்பொய்' <br />
என்றான் புத்தன் இறைஞ்சுவோம் அவன்பதம் <br />
இனியெப் பொழுதும் உரைத்திடேன், இதை நீ <br />
மறவாதிருப்பாய், மடமை நெஞ்சே! <br />
<br />
கவலைப் படுதலே கருநரகு அம்மா! <br />
கவலையற் றிருத்தலே முக்தி, <br />
சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே. 36 <br />
<br />
வெண்பா. <br />
<br />
செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம்செய்தால், <br />
எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் <br />
அன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையார் <br />
இன்புற்று வாழ்தல் இயல்பு. 37 <br />
<br />
கலித்துறை. <br />
<br />
இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதென்றாம். <br />
செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும், சீர்மிகவே <br />
பயிலு நல்லன்பை இயல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர் <br />
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே. 38 <br />
<br />
விருத்தம் <br />
<br />
மொய்க்குங் கவலைப் பகைபோக்கி <br />
முன்னோன் அருளைத் துணையாக்கி, <br />
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி <br />
உடலை இரும்புக் கிணையாக்கிப் <br />
பொய்க்குங் கலியை நான்கொன்று <br />
பூலோ கத்தார் கண்முன்னே, <br />
மெய்க்குங் கிருத யுகத்தினையே <br />
கொணர்வேன், தெய்வ விதியி·தே. 39 <br />
<br />
அகவல் <br />
<br />
விதியே வாழி! விநாயகா வாழி! <br />
பதியே வாழி! பரமா வாழி! <br />
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி! <br />
புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி! <br />
மதியினை வளர்க்கும் மன்னே, போற்றி! <br />
<br />
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கு <br />
மூல சக்தியின் முதல்வா போற்றி! <br />
பிறைமதி சூடிய பெருமான் வாழி! <br />
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி! <br />
காலம் மூன்றையும் கடந்தான் வாழி! <br />
<br />
சக்தி தேவி சரணம் வாழி! <br />
வெற்றி வாழி! வீரம் வாழி! <br />
பக்தி வாழி! பலபல காலமும் <br />
உண்மை வாழி, ஊக்கம் வாழி! <br />
நல்ல குணங்களை நம்மிடை யமரர் <br />
<br />
பதங்களாம், கண்டீர்! பாரிடை மக்களே! <br />
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த <br />
விரதம் நான் கொண்டனன், வெற்றி <br />
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே! 40Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-42467308653209740872010-01-14T00:38:00.000-08:002010-02-23T09:23:14.058-08:00பாரதி கவிதைகள் - பொருளடக்கம்<img alt="" border="0" height="242" id="Image-Maps_7200912091350476" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlotWOSJf6EfcDGz-mgW2JFs832cqpB9UHqLu2kqR_r5s59UtTtE5-tXrgaH8090VcQLwsrL1IgKD-yRD5KvVHM3Q5qrCBpdjC0rf1FvgsMJ43T0AI9KM5_6JOZcyQ-__fpR6ERDw5giCG/s640/Collages.jpg" style="text-align: center;" usemap="#Image-Maps_7200912091350476" width="320px" /><map id="_Image-Maps_7200912091350476" name="Image-Maps_7200912091350476"><area alt="கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்" coords="6,16,63,4,73,63,69,66,67,81,63,76,16,80," href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_4105.html" shape="poly" title="கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்"></area><area alt="7. குயிலும் மாடும்" coords="70,10,128,4,133,59,75,64," href="http://enbharathi.blogspot.com/2009/04/7.html" shape="poly" title="7. குயிலும் மாடும்"></area><area alt="ஜய வந்தே மாதரம்" coords="128,9,184,2,187,53,142,54,142,58,134,58," href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_31.html" shape="poly" title="ஜய வந்தே மாதரம்"></area><area alt="பாரத நாடு" coords="188,5,233,2,235,61,191,63," href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_5150.html" shape="poly" title="பாரத நாடு"></area><area alt="3. குயிலின் காதற் கதை" coords="243,10,308,11,307,58,245,58," href="http://enbharathi.blogspot.com/2009/04/3.html" shape="poly" title="3. குயிலின் காதற் கதை"></area><area alt="நல்லதோர் வீணை" coords="5,81,65,77,66,126,8,128," href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_29.html" shape="poly" title="நல்லதோர் வீணை"></area><area 03="" 2009="" alt="பாரதி வாழ்க்கை" href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_3417.html" coords="69,68,131,67,130,119,71,118," enbharathi.blogspot.com="" href="href=" http:="" shape="poly" title="பாரதி வாழ்க்கை"></area><area alt="தேடிச் சோறு நிதந்தின்று" coords="142,54,188,54,190,66,196,65,198,134,143,135," href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_13.html" shape="poly" title="தேடிச் சோறு நிதந்தின்று"></area><area alt="வருவாய் கண்ணா !" coords="224,63,295,63,297,116,237,118,236,93,225,95," href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_04.html" shape="poly" title="வருவாய் கண்ணா !"></area><area alt="23. பகைவனுக்கு அருள்வாய்" coords="6,138,56,130,63,172,12,182," href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_1474.html" shape="poly" title="23. பகைவனுக்கு அருள்வாய்"></area><area alt="9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்" coords="67,123,113,122,117,174,65,177,63,127," href="http://enbharathi.blogspot.com/2009/04/9.html" shape="poly" title="9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்"></area><area alt="கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை" coords="132,111,144,111,144,133,177,133,178,171,166,172,166,184,120,188,118,121,133,118," href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_6495.html" shape="poly" title="கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை"></area><area alt="ஞாயிறு வணக்கம்" coords="197,96,235,94,239,167,187,169,186,136,197,132," href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_5582.html" shape="poly" title="ஞாயிறு வணக்கம்"></area><area alt="அக்கினிக் குஞ்சு" coords="248,119,319,120,319,180,314,174,245,171," href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post.html" shape="poly" title="அக்கினிக் குஞ்சு"></area><area alt="கண்ணம்மா - என் காதலி - சுட்டும் விழிச்சுடர்" coords="6,185,63,179,72,226,11,233," href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_06.html" shape="poly" title="கண்ணம்மா - என் காதலி - சுட்டும் விழிச்சுடர்"></area><area alt="தனிமை இரக்கம்" coords="80,187,116,183,117,189,149,189,153,229,83,237," href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_26.html" shape="poly" title="தனிமை இரக்கம்"></area><area alt="எங்கள் நாடு" coords="164,171,237,169,243,232,167,233," href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_1382.html" shape="poly" title="எங்கள் நாடு"></area><area alt="பாரதி கவிதைகள் - பொருளடக்கம்" coords="239,173,314,175,315,236,238,234,244,231," href="#" shape="poly" title="பாரதி கவிதைகள் - பொருளடக்கம்"></area></map><br />
<ol id="list1"><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/தேசிய%20கீதங்கள்">தேசிய கீதங்கள்</a><ol id="list2"><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/பாரத%20நாடு">பாரத நாடு</a></p><ol id="list3"><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_4732.html">வந்தே மாதரம்</a></p></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_31.html">ஜெய வந்தே மாதரம்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_27.html">நாட்டு வணக்கம்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_5150.html">பாரத நாடு</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_4369.html">பாரத தேசம்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_1382.html">எங்கள் நாடு</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/11/blog-post.html">ஜய பாரத !</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/11/blog-post_22.html">பாரத மாதா</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/bharathi-kavithai-engal-thaai-thesiya.html">எங்கள் தாய்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/veri-konda-thaai-thesiya-geethangal.html">வெறி கொண்ட தாய்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/bkarathi-kavithai-bharatha-maatha.html">பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/bharathi-kavithai-bharatha-matha.html">பாரத மாதா நவரத்தின மாலை</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/bharathi-kavithai-bharatha-theviyin.html">பாரத தேவியின் திருத்தசாங்கம்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/thaayin-manikodi-paareer-barathi.html">தாயின் மணிக்கொடி பாரீர் !</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-baratha-janangalin.html">பாரத ஜனங்களின் தற்க்கால நிலைமை</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-pogintra-barathamum.html">போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-baratha-samuthayam.html">பாரத சமுதாயம்</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-jaatheeya-geetham.html">ஜாதிய கீதம் I (மொழிபெயர்ப்பு)</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-jaatheeya-geetham_13.html">ஜாதிய கீதம் II (புதிய மொழிபெயர்ப்பு)</a></p></li></ol></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/தமிழ்%20நாடு">தமிழ் நாடு</a><ol id="list3"><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-senthamizh-naadu.html">செந்தமிழ் நாடு</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-thamizh-thaai.html">தமிழ்த் தாய்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-thamizh-thamizh.html">தமிழ்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-thamizhmozhi.html">தமிழ்மொழி வாழ்த்து</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-thamizh-saathi.html">தமிழ்ச் சாதி</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-vaazhiya-senthamizh.html">வாழிய செந்தமிழ்</a></p></li></ol></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/சுதந்திரம்">சுதந்திரம்</a><ol id="list3"><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-suthanthira-perumai.html">சுதந்திரப் பெருமை</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-suthanthira-payir.html">சுதந்திரப் பயிர்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-suthanthira-thagam.html">சுதந்திர தாகம்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-suthanthiratheviyin.html">சுதந்திர தேவியின் துதி</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-viduthalai.html">விடுதலை</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/01/barathi-kavithaigal-suthanthira-pallu.html">சுதந்திரப் பள்ளு</a></p></li></ol></p></li><li><p>தேசிய இயக்கப் பாடல்கள்<ol id="list3"><li><p>சத்ரபதி சிவாஜி</p></li><li><p>கோக்கலே சாமியார் பாடல்கள்</p></li><li><p>தொண்டு செய்யும் ஆடிமை</p></li><li><p>நம்ம ஜாதிக் கடுக்குமா?</p></li><li><p>நாம் என்ன செய்வோம்!</p></li><li><p>பாரத தேவியின் அடிமை</p></li><li><p>வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று</p></li><li><p>தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி</p></li><li><p>நடிப்புச் சுதீசிகள்</p></li></ol></p></li><li><p>தேசியத் தலைவர்கள்<ol id="list3"><li><p>மகாத்மா காந்தி பஞ்சகம்</p></li><li><p>குரு கோவிந்தர்</p></li><li><p>தாதாபாய் நோவ்ரோஜி</p></li><li><p>பூபேந்திர விஜயம்</p></li><li><p>வாழ்க திலகன் நாமம்</p></li><li><p>திலகர் முனிவர் கோன்</p></li><li><p>லாஜபதி</p></li><li><p>லாஜபதியின் பிரலாபம்</p></li><li><p>வ.உ.சி.-க்கு வாழ்த்து</p></li></ol></p></li><li><p>பிற நாடுகள்<ol id="list3"><li><p>மாஜினியின் சபதப் பிரதிக்னை</p></li><li><p>பெல்ஜியத்திற்கு வாழ்த்து</p></li><li><p>புதிய ருஷியா</p></li><li><p>கரும்புத் தோட்டத்திலே</p></li></ol></li></ol></li></ol><ol id="list1"><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/தெய்வப்%20பாடல்கள்">தெய்வப் பாடல்கள்</a><ol id="list2"><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/தோத்திரப்%20பாடல்கள்">தோத்திரப் பாடல்கள்</a><ol id="list3"><li><p>விநாயகர் நான்மணி மாலை</p></li><li><p>முருகா! முருகா!</p></li><li><p>வேலவன் பாட்டு</p></li><li><p>கிளிவிடு தூது</p></li><li><p>முருகன் பாட்டு</p></li><li><p>எமக்கு வேலை</p></li><li><p>வள்ளிப் பாட்டு-1</p></li><li><p>வள்ளிப் பாட்டு-2</p></li><li><p>இறைவா! இறைவா!</p></li><li><p>போற்றி அகவல்</p></li><li><p>சிவ சக்தி</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_25.html">காணி நிலம் வேண்டும்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_29.html">நல்லதோர் வீணை</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_24.html">மகாசக்திக்கு விண்ணப்பம்</a></p></li><li><p>அன்னையை வேண்டுதல்</p></li><li><p>பூலோக குமாரி</p></li><li><p>மகாசக்தி வெண்பா</p></li><li><p>ஓம் சக்தி</p></li><li><p>பராசக்தி</p></li><li><p>சக்திக் கூத்து</p></li><li><p>சக்தி</p></li><li><p>வையம் முழுதும்</p></li><li><p>சக்தி விளக்கம்</p></li><li><p>சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்</p></li><li><p>சக்தி திருப்புகழ்</p></li><li><p>சிவசக்தி புகழ்</p></li><li><p>பேதை நெஞ்சே!</p></li><li><p>மகாசக்தி</p></li><li><p>நவராத்திரிப் பாட்டு (உஜ்ஜயினீ)</p></li><li><p>காளிப் பாட்டு</p></li><li><p>காலி ஸ்தோத்திரம்</p></li><li><p>யோகா சித்தி</p></li><li><p>மஹாசக்தி பஞ்சகம்</p></li><li><p>மஹாசக்தி வாழ்த்து</p></li><li><p>ஊழிக் கூத்து</p></li><li><p>காளிக்குச் சமர்ப்பணம்</p></li><li><p>காளி தருவாள்</p></li><li><p>மகா காளிக்கு புகழ்</p></li><li><p>வெற்றி</p></li><li><p>முத்துமாரி</p></li><li><p>தேச முத்துமாரி</p></li><li><p>கோமதி மஹிமை</p></li><li><p>சாகாவரம்</p></li><li><p>கோவிந்தன் பாட்டு</p></li><li><p>கண்ணனை வேண்டுதல்</p></li><li><p>வருவாய் கண்ணா!</p></li><li><p>கண்ண பெருமானே</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_03.html">நந்த லாலா</a></p></li><li><p>கண்ணன் பிறப்பு</p></li><li><p>கண்ணன் திருவடி</p></li><li><p>வேய்ங்குழல்</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_05.html">கண்ணமாவின் காதல்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post.html">கண்ணமாவின் நினைப்பு</a></p></li><li><p>மனப் பீடம்</p></li><li><p>கன்னமாவின் எழில்</p></li><li><p>திருக்காதல்</p></li><li><p>திருவேட்கை</p></li><li><p>திருமகள் துதி</p></li><li><p>திருமகளைச் சரண் புகுதல்</p></li><li><p>ராதைப் பாட்டு</p></li><li><p>கலைமகளை வேண்டுதல்</p></li><li><p>வெள்ளைத் தாமரை</p></li><li><p>நவராத்திரிப் பாட்டு (மாதா பராசக்தி)</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_4778.html">மூன்று காதல்</a></p></li><li><p>ஆறு துணை</p></li><li><p>விடுதலை வெண்பா</p></li><li><p>ஜயம் வுண்டு</p></li><li><p>ஆரிய தரிசனம்</p></li><li><p>சூரிய தரிசனம்</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_5582.html">ஞாயிறு வணக்கம்</a></p></li><li><p>ஞானபாநு</p></li><li><p>சோமதேவன் புகழ்</p></li><li><p>வெண்ணிலாவே!</p></li><li><p>தீ வளர்த்திடுவோம்!</p></li><li><p>வேள்வித் தீ</p></li><li><p>கிளிப் பாடு</p></li><li><p>யேசு கிறிஸ்து</p></li><li><p>அல்லா</p></li></ol></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/ஞானப்%20பாடல்கள்">ஞானப் பாடல்கள்</a><ol id="list3"><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/1_23.html">அச்சமில்லை</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/2_24.html">ஜய பேரிகை</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/3_25.html">சிட்டுக் குருவியைப் போலே</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/4_26.html">விடுதலை வேண்டும்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/5_27.html">மனதில் உறுதி வேண்டும்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/6_11.html">ஆத்ம ஜயம்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_7548.html">காலனுக்கு உரைத்தல்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/8_29.html">மாயையைப் பழித்தல்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/9_30.html">சங்கு</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/05/10.html">அறிவே தெய்வம்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/05/11.html">பரசிவ வெள்ளம்</a></p></li><li><p>பொய்யோ? மெய்யோ?</p></li><li><p>நான்</p></li><li><p>சித்தாந்தச் சாமி கோவில்</p></li><li><p>பக்தி</p></li><li><p>அம்மாக்கண்ணு பாட்டு</p></li><li><p>வண்டிக்காரன் பாட்டு</p></li><li><p>கடமை அறிவோம்</p></li><li><p>அன்பு செய்தல்</p></li><li><p>சென்றது மீளாது</p></li><li><p>மனத்திற்குக் கட்டளை</p></li><li><p>மனப் பெண்</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_1474.html">பகைவன்னுக் கருள்வாய்</a></p></li><li><p>தெளிவு</p></li><li><p>கற்பனை யூர்</p></li></ol></p></li><li><p>பல்வகைப் பாடல்கள்<ol id="list3"><li><p>நீதி<ol id="list4"><li><p>புதிய ஆத்திச்சூடி</p></li><li><p>பாப்பாப் பாட்டு</p></li><li><p>முரசு</p></li></ol></p></li><li><p>சமூகம்<ol id="list4"><li><p>புதுமைப் பெண்</p></li><li><p>பெண்மை வாழ்க</p></li><li><p>பெண்கள் விடுதலைக் கும்மி</p></li><li><p>பெண் விடுதலை</p></li><li><p>தொழில்</p></li><li><p>மறவன் பாட்டு</p></li><li><p>நாட்டுக் கல்வி</p></li><li><p>புதிய கோணங்கி</p></li></ol></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/தனிப்%20பாட்டு">தனிப் பாட்டு</a><ol id="list4"><li><p>காலைப் பொழுது</p></li><li><p>அந்திப் பொழுது</p></li><li><p>நிலவும் வான்மீனும் காற்றும்</p></li><li><p>மழை</p></li><li><p>புயற் காற்று</p></li><li><p>பிழைத்த தென்னந்தோப்பு</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post.html">அக்கினிக் குஞ்சு</a></p></li><li><p>சாதாரண வருஷத்துத் தூமகேது</p></li><li><p>அழகுத் தெய்வம்</p></li><li><p>ஒளியும் இருளும்</p></li><li><p>சொல்</p></li><li><p>கவிதைத் தலைவி</p></li><li><p>கவிதைக் காதலி</p></li><li><p>மது</p></li><li><p>சந்திரமதி</p></li></ol></p></li><li><p>சான்றோர்<ol id="list4"><li><p>தாயுமானவர் வாழ்த்து</p></li><li><p>நிவேதிதா</p></li><li><p>அபேதாநந்தா</p></li><li><p>ஓவியர்மணி இரவிவர்மா</p></li><li><p>சுப்பராம தீட்சிதர்</p></li><li><p>மகாமகோபாத்தியாயர்</p></li><li><p>வெங்கடேச ரெட்டப்ப பூபதி</p></li><li><p>ஹிந்து மதாபிமான சங்கத்தார்</p></li><li><p>வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு</p></li></ol></p></li><li><p>சுயசரிதை<ol id="list4"><li><p>கனவு</p></li><li><p>மமுந்னுறை</p></li><li><p>பிள்ளைக் காதல்</p></li><li><p>ஆங்கிலக் பயிற்சி</p></li><li><p>மணம்</p></li><li><p>தந்தை வருமையெய்திடல்</p></li><li><p>பொருட் பெருமை</p></li><li><p>முடிவுரை</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2010/02/bharathi-kavithaigal-bharathi.html">பாரதி அறுபத்தாறு</a></p></li></ol></p></li><li><p>வசன கவிதை<ol id="list4"><li><p>காட்சி</p></li><li><p>சக்தி</p></li><li><p>காற்று</p></li><li><p>கடல்</p></li><li><p>ஜகத் சித்திரம்</p></li><li><p>விடுதலை</p></li></ol></p></li></ol><ol id="list1"><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/முப்பெரும்%20பாடல்கள்">முப்பெரும் பாடல்கள்</a><ol id="list2"><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/கண்ணன்%20பாட்டு">கண்ணன் பாட்டு</a><ol id="list3"><li><p>கண்ணன் - என் தோழன்</p></li><li><p>கண்ணன் - என் தாய்</p></li><li><p>கண்ணன் - என் தந்தை</p></li><li><p>கண்ணன் - என் சேவகன்</p></li><li><p>கண்ணன் - என் அரசன்</p></li><li><p>கண்ணன் - என் சீடன்</p></li><li><p>கண்ணன் - எனது சற்குரு</p></li><li><p>கண்ணன் - என் குழந்தை</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_6495.html">கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை</a></p></li>
<li><p>கண்ணன் - என் காதலன்</p></li><li><p>கண்ணன் - என் காதலன், உறக்கமும் விழிப்பும்</p></li><li><p>கண்ணன் - என் காதலன், காட்டிலே தேடுதல்</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_4105.html">கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்</a></p></li><li><p>கண்ணன் - என் காதலன், பிரிவாற்றாமை</p></li><li><p>கண்ணன் - என் காந்தன்</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/blog-post_06.html">கண்ணம்மா - என் காதலி, காட்சி வியப்பு</a></p></li><li><p>கண்ணம்மா - என் காதலி, பின்னே வந்து நின்று கண் மறைத்தல்</p></li><li><p>கண்ணம்மா - என் காதலி, முகத்திரை களைதல்</p></li><li><p>கண்ணம்மா - என் காதலி, நாணிக் கண் புதைத்தல்</p></li><li><p>கண்ணம்மா - என் காதலி, குறிப்பிடம் தவறியது</p></li><li><p>கண்ணம்மா - என் காதலி, யோகம்</p></li><li><p>கண்ணன் - என் ஆண்டான்</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_28.html">கண்ணன் - எனது குலதெய்வம்</a></p></li></ol></p></li><li><p>பாஞ்சாலி சபதம்<ol id="list3"><div class="midDiv">முதல் பாகம் (துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்) </div><li><p>பிரம்ம ஸ்துதி</p></li><li><p>ஸரஸ்வதி வணக்கம்</p></li><li><p>ஹஸ்தினாபுரம்</p></li><li><p>துரியோதனன் சபை</p></li><li><p>துரியோதனன் பொறாமை</p></li><li><p>துரியோதனன் சகுனியிடம் சொல்வது</p></li><li><p>சகுனியின் சதி</p></li><li><p>சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்</p></li><li><p>திரிதராட்டிரன் பதில் கூறுதல்</p></li><li><p>துரியோதனன் சினங் கொள்ளுதல்</p></li><li><p>துரியோதனன் தீ மொழி</p></li><li><p>திரிதராட்டிரன் பதில்</p></li><li><p>துரியோதனன் பதில்</p></li><li><p>திரிதராட்டிரன் ஸம்மதித்தல்</p></li><li><p>சபா நிர்மாணம்</p></li><li><p>விதுரனைத் தூது விடல்</p></li><li><p>விதுரன் தூது செல்லுதல்</p></li><li><p>விதுரனை வரவேற்றல்</p></li><li><p>விதுரன் அழைத்தல்</p></li><li><p>தருமபுத்திரன் பதில்</p></li><li><p>விதுரன் பதில்</p></li><li><p>தருமபுத்திரன் தீர்மானம்</p></li><li><p>வீமனுடைய வீரப் பேச்சு</p></li><li><p>தருமபுத்திரன் முடிவுரை</p></li><li><p>நால்வரும் சம்மதித்தல்</p></li><li><p>பாண்டவர் பயணமாதல்</p></li><li><p>மாலை வருணனை<div class="midDiv">சூதாட்டச் சருக்கம்</div></p></li><li><p>வாணியை வேண்டுதல்</p></li><li><p>பாண்டவர் வரவேற்பு</p></li><li><p>பாண்டவர் சபைக்கு வருதல்</p></li><li><p>சூதுக்கு அழைத்தல்</p></li><li><p>தருமன் மறுத்தல்</p></li><li><p>சகுனியின் ஏச்சு</p></li><li><p>தருமனின் பதில்</p></li><li><p>சகுனி வல்லுக்கு அழைத்தல்</p></li><li><p>தருமன் இணங்குதல்</p></li><li><p>சூதாடல்</p></li><li><p>நாட்டை வைத்தாடல்<div class="midDiv">இரண்டாம் பாகம் அடிமைச் சருக்கம்</div></p></li><li><p>பராசக்தி வணக்கம்</p></li><li><p>ஸரஸ்வதி வணக்கம்</p></li><li><p>விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்</p></li><li><p>விதுரன் சொல்லுவது</p></li><li><p>சூது மீண்டும் தொடங்குதல்</p></li><li><p>சகுனி சொல்லுவது</p></li><li><p>சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்</p></li><li><p>நகுலனை இழத்தல்</p></li><li><p>பார்த்தனை இழத்தல்</p></li><li><p>வீமனை இழத்தல்</p></li><li><p>தருமன் தன்னைத் தானே பந்தயம் வைத்திழத்தல்</p></li><li><p>துரியோதனன் சொல்லுவது</p></li><li><p>சகுனி சொல்லுவது<div class="midDiv">திரெளபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம்</div></p></li><li><p>திரெளபதியை இழத்தல்</p></li><li><p>திரெளபதி சூதில் வசமானது பற்றிக் கெளரவர் கொண்ட மகிழ்ச்சி</p></li><li><p>துரியோதனன் சொல்லுவது</p></li><li><p>திரெளபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்துவரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்</p></li><li><p>துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது</p></li><li><p>விதுரன் சொல்லுவது</p></li><li><p>துரியோதனன் சொல்லுவது</p></li><li><p>துரியோதனன் சொல்லுதல்</p></li><li><p>திரெளபதி சொல்லுவது<div class="midDiv">சபதச் சருக்கம்</div></p></li><li><p>துச்சாதனன் திரெளபதியைச் சபைக்கு கொணர்தல்</p></li><li><p>திரெளபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்</p></li><li><p>சபையில் திரெளபதி நீதி கேட்டழுதல்</p></li><li><p>வீட்டுமாசார்யன் சொல்வது</p></li><li><p>திரெளபதி சொல்வது</p></li><li><p>வீமன் சொல்வது</p></li><li><p>அர்ஜுனன் சொல்வது</p></li><li><p>விகர்ணன் சொல்வது</p></li><li><p>கர்ணன் பதில்</p></li><li><p>திரெளபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை</p></li><li><p>வீமன் செய்த சபதம்</p></li><li><p>அர்ஜுனன் சபதம்</p></li><li><p>பாஞ்சாலி சபதம்</p></li></ol></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/குயில்%20பாட்டு">குயில் பாட்டு</a><ol id="list3"><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/1.html">குயில்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/2.html">குயிலின் பாட்டு</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/3.html">குயிலின் காதற் கதை</a></p></li><li><p><a href="">காதலோ காதல்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/5.html">குயிலும் குரங்கும்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/6.html">இருளும் ஓளியும்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/7.html">குயிலும் மாடும்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/8.html">நான்காம் நாள்</a></p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/04/9.html">குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்</a></p></li></ol></p></li></ol></p></li></ol><ol id="list1"><li><p><a href="http://enbharathi.blogspot.com/search/label/புதிய%20பாடல்கள்">புதிய பாடல்கள்</a><ol id="list2"><li><p>உயிர் பெற்ற தமிழர் பாடு</p></li><li><p>இளசை ஒருபா ஒருபக்து</p></li><li><p><a href="http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_26.html">தனிமை இரக்கம்</a></p></li><li><p>அனுபந்தங்கள்</p></li></ol></li></ol></li></ol></li></ol>Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-45078101077711267802010-01-13T23:11:00.000-08:002010-01-13T23:11:10.689-08:00சுதந்திரப் பள்ளு(பள்ளர் களியாட்டம்) <br />
<br />
ராகம் - வராளி தாளம் - ஆதி <br />
<br />
பல்லவி <br />
<br />
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே <br />
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு) <br />
<br />
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப் <br />
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை <br />
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை <br />
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு) <br />
<br />
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் <br />
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு <br />
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் <br />
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு) <br />
<br />
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும் <br />
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி <br />
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட <br />
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு) <br />
<br />
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் <br />
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். <br />
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும் <br />
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம். (ஆடு) <br />
<br />
நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது <br />
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப் <br />
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி <br />
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-85598926233401342162010-01-13T23:10:00.000-08:002010-01-13T23:10:35.248-08:00விடுதலைராகம் - பிலகரிவிடுதலை <br />
<br />
விடுதலை! விடுதலை! விடுதலை! <br />
<br />
பறைய ருக்கும் இங்கு தீயர் <br />
புலைய ருக்கும் விடுதலை <br />
பரவ ரோடு குறவருக்கும் <br />
மறவ ருக்கும் விடுதலை! <br />
திறமை கொண்டதீமை யற்ற <br />
தொழில் புரங்ந்து யாவரும் <br />
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி <br />
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை) <br />
<br />
ஏழை யென்றும் அடிமையென்றும் <br />
எவனும் இல்லை ஜாதியில், <br />
இழிவு கொண்ட மனித ரென்பது <br />
இந்தி யாவில் இல்லையே <br />
வாழி கல்வி செல்வம் எய்தி <br />
மனம கிழ்ந்து கூடியே <br />
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச <br />
மானமாக வாழ்வமே! (விடுதலை) <br />
<br />
மாதர் தம்மை இழிவு செய்யும் <br />
மடமை யைக்கொ ளுத்துவோம் <br />
வைய வாழ்வு தன்னில் எந்த <br />
வகையி னும்ந மக்குள்ளே <br />
தாதர் என்ற நிலைமை மாறி <br />
ஆண்க ளோடு பெண்களும் <br />
சரிநி கர்ச மான மாக <br />
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-34508822183760816782010-01-13T23:09:00.000-08:002010-01-13T23:09:16.225-08:00சுதந்திர தேவியின் துதிஇதந்தரு மனையின் நீங்கி <br />
இடர்மிகு சிறப்பட் டாலும் <br />
பதந்திரு இரண்டும் மாறிப் <br />
பழிமிகுந் திழிவுற் றாலும் <br />
விதந்தரு கோடி இன்னல் <br />
விளைந்தெனை அழித்திட் டாலும் <br />
சுதந்திர தேவி! நின்னைத் <br />
தொழுதிடல் மறக்கி லேனே. <br />
<br />
நின்னருள் பெற்றி லாதார் <br />
நிகரிலாச் செல்வ ரேனும், <br />
பன்னருங் கல்வி கேள்வி, <br />
படைத்துயர்ந் திட்டா ரேனும், <br />
பின்னரும் எண்ணி லாத <br />
பெருமையிற் சிறந்தா ரேனும், <br />
அன்னவர் வாழ்க்கை பாழாம், <br />
அணிகள்வேய் பிணத்தோ டொப்பார். <br />
<br />
தேவி! நின்னொளி பெறாத <br />
தேயமோர் தேய மாமோ? <br />
ஆவியங் குண்டோ? செம்மை <br />
அறிவுண்டோ? ஆக்க முண்டோ? <br />
காவிய நூல்கள் ஞானக் <br />
கலைகள் வேதங்க ளுண்டோ? <br />
பாவிய ரன்றோ நிந்தன் <br />
பாலனம் படைத்தி லாதார்? <br />
<br />
ஒழிவறு நோயிற் சாவார், <br />
ஊக்கமொன் றறிய மாட்டார், <br />
கழிவுறு மாக்க ளெல்லாம் <br />
இகழ்ந்திடக் கடையில் நிற்பார் <br />
இழிவறு வாழ்க்கை தேரார், <br />
கனவிலும் இன்பங் காணார், <br />
அழிவுறு பெருமை நல்கும் <br />
அன்னை! நின் அருள் பெறாதார். <br />
<br />
வேறு <br />
<br />
தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து <br />
ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர் <br />
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் <br />
தாவில் வானுல கென்னத் தகுவதே. <br />
<br />
அம்மை உன்றன் அருமை யறிகிலார் <br />
செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார், <br />
இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை <br />
வெம்மை யார்புன் சிறையெனல் வேண்டுமே. <br />
<br />
மேற்றிசைப்பல நாட்டினர் வீரத்தால் <br />
போற்றிநினைப் புதுநிலை யெய்தினர், <br />
கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும்நின் <br />
பேற்றினைப்பெறு வேமெனல் பேணினர். <br />
<br />
அன்னை தன்மைகொள்நின்னை அடியனேன் <br />
என்ன கூறிஇசைத்திட வல்லனே <br />
பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின் <br />
சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன். <br />
<br />
பேர றத்தினைப் பேணுதல் வேலியே! <br />
சோர வாழ்க்கை, துயர் மிடி யாதிய <br />
கார றுக்கக் கதித்திடு சோதியே! <br />
வீர ருக்கமு தே! நினை வேண்டுவேன்.Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-7071223789419021982010-01-13T23:06:00.000-08:002010-01-13T23:06:11.841-08:00சுதந்திர தாகம்ராகம் - கமாஸ் தாளம் - ஆதி <br />
<br />
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? <br />
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? <br />
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? <br />
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? <br />
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே! <br />
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! <br />
வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ? <br />
மெய்யடி யோம்இன்னும் வாடுதல் நன்றோ? <br />
<br />
பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ? <br />
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? <br />
தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ? <br />
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? <br />
அஞ்சலென் றருள் செயுங் கடமை யில்லாயோ? <br />
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ? <br />
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனோ! <br />
வீர சிகாமணி! ஆரியர் கோனே!Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-3990251928587053242010-01-13T23:05:00.000-08:002010-01-13T23:05:13.949-08:00சுதந்திரப் பயிர்தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் <br />
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ? <br />
<br />
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த <br />
வண்ண விளக்கி·து மடியத் திருவுளமோ? <br />
<br />
ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் <br />
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ? <br />
<br />
தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ? <br />
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? <br />
<br />
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் <br />
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ? <br />
<br />
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு <br />
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? <br />
<br />
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து <br />
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? <br />
<br />
எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து <br />
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ? <br />
<br />
இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ? <br />
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ? <br />
<br />
வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ?எந்தை சுயா <br />
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே? <br />
<br />
நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் <br />
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ? <br />
<br />
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்? <br />
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே? <br />
<br />
நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால், <br />
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ? <br />
<br />
இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர் <br />
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ? <br />
<br />
நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால் <br />
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-72375966052075101472010-01-13T23:02:00.000-08:002010-01-13T23:03:19.127-08:00சுதந்திரப் பெருமை(தில்லை வெளியிலே கலந்துவிட்டாலவர் <br />
திரும்பியும் வருவாரோ? என்னும் வர்ணமெட்டு) <br />
<br />
வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் <br />
வேறொன்று கொள்வாரோ? - என்றும் <br />
ஆரமுதுண்ணுதற் காசைகொண்டார் கள்ளில் <br />
அறிவைச் செலுத்துவா ரோ? (வீர) <br />
<br />
புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்வெறும் <br />
பொய்யென்று கண்டாரேல் - அவர் <br />
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு <br />
இச்சையுற் றிருப்பா ரோ? (வீர) <br />
<br />
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் <br />
பெற்றியை அறிந்தாரேல் - மானம் <br />
துறந்தரம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது <br />
சுகமென்று மதிப்பா ரோ? (வீர) <br />
<br />
மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் <br />
வாய்மையை உணர்ந்தாரேல் - அவர் <br />
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற <br />
உடன்படு மாறுளதோ? (வீர) <br />
<br />
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் <br />
மின்மினி கொள்வாரோ? <br />
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் <br />
கை கட்டிப் பிழைப்பாரோ? (வீர) <br />
<br />
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் <br />
மாண்பினை யிழப்பாரோ? <br />
கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் <br />
கைகொட்டிச் சிரியா ரோ? (வீர) <br />
<br />
வந்தே மாதரம் என்று வணங்கியபின் <br />
மாயத்தை வணங்கு வாரோ? <br />
வந்தே மாதரம் ஒன்றே தாரகம் <br />
என்பதை மறப்பாரோ? (வீர)Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-54473226936069716132010-01-13T22:55:00.000-08:002010-01-13T23:00:28.449-08:00தமிழச் சாதி..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய், <br />
நாட்பட நாட்பட நாற்றமு சேறும் <br />
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் <br />
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ? <br />
விதியே விதியே தமிழச் சாதியை <br />
<br />
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? <br />
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் <br />
தன்மையும் தனது தருமமும் மாயாது <br />
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால் <br />
வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ? <br />
<br />
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று <br />
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச் <br />
சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ? <br />
அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ? <br />
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ? <br />
<br />
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ? <br />
விதியே தமிழச் சாதியை எவ்வகை <br />
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய். <br />
ஏனெனில் <br />
சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும் <br />
<br />
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் <br />
ஆழமும் விரிவும் அழகும் கருதியும் <br />
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக் <br />
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் <br />
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச் <br />
<br />
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று <br />
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம் <br />
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான் <br />
உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக் <br />
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன். <br />
<br />
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் <br />
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் <br />
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள <br />
பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய <br />
தமிழச் சாதி தடியுதை யுண்டும் <br />
<br />
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் <br />
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் <br />
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது <br />
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் <br />
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் <br />
<br />
நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும் <br />
இ·தெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன், <br />
தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார், <br />
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும், <br />
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார், <br />
<br />
என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால் <br />
எனினும் <br />
இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு <br />
கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும் <br />
செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய். <br />
<br />
ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து <br />
வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல், <br />
தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து <br />
ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி <br />
சாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம், <br />
<br />
சாத்திர மின்றேற் சாதியில்லை, <br />
பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள் <br />
பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார், <br />
நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில் <br />
அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் - <br />
<br />
மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் - <br />
இவர்தம் <br />
உடலும் உள்ளமும் தன்வச மிலராய் <br />
நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும் <br />
பெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு <br />
<br />
செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும் <br />
உய்வகைக் குரிய வழிசில உளவாம். <br />
மற்றிவர் <br />
சாத்திரம் -- (அதாவது மதியிலே தழுவிய <br />
கொள்கை கருத்து குளிர்ந்திடு நோக்கம்) -- <br />
<br />
ஈங்கிதில் கலக்க மெய்திடு மாயின் <br />
மற்றதன் பின்னர் மருந்தொன்று இல்லை <br />
இந்நாள் எமது தமிழ்நாட் டிடையே <br />
அறிவுத் தலைமை தமதெனக் கொண்டார் <br />
தம்மிலே இருவகை தலைபடக் கண்டேன், <br />
<br />
ஒரு சார் <br />
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின் <br />
செய்கையும் நடையும் தீனியும் உடையும் <br />
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை <br />
யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை <br />
<br />
முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால், <br />
தமிழச் சாதி தரணிமீ திராது <br />
பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும் <br />
நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை <br />
வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ <br />
<br />
ஏ! ஏ! அ·துமக் கிசையா தென்பர், <br />
உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர் <br />
தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை <br />
பல அவை நீங்கும் பான்மையை வல்ல <br />
என்றருள் புரிவர், இதன் பொருள் சீமை <br />
<br />
மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச் <br />
சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர், <br />
என்பதே யாகும்; இ·தொரு சார்பாம் <br />
பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு <br />
நமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின்) <br />
<br />
முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு <br />
அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம் <br />
ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ? <br />
பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத் <br />
தவரோ? புராண மாக்கிய காலமோ? <br />
சைவரோ? வைணவ சமயத் தாரோ? <br />
இந்திரன் தானே தனிமுதற் கடவுள் <br />
என்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக் <br />
காலத் தவரோ? கருத்திலா தவர்தாம் <br />
எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்? <br />
நமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய <br />
ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் <br />
ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே <br />
தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு <br />
எனில் அது தழுவல் இயன்றிடா வண்ணம் <br />
கலிதடை புரிவன் கலியின் வலியை <br />
வெல்லலா காதென விளிம்புகின் றனரால், <br />
நாசங் கூறும் எநாட்டு வயித்தியர் <br />
இவராம். இங்கிவ் விருதலைக் கொள்ளியின் <br />
இடையே நம்மவர் எப்படி உய்வர்? <br />
விதியே! விதியே! தமிழச் சாதியை <br />
என்செயக் கருவி யிருக்கின் றாயடா? <br />
<br />
விதி <br />
<br />
மேலே நீ கூறிய விநாசப் புலவரை <br />
நம்மவர் இகழ்ந்து நன்மையும் அறிவும் <br />
எத்திசைத் தெனினும் யாவரே காட்டினும் <br />
மற்றவை தழுவி வாழ்வீ ராயின், <br />
அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின் <br />
அறிவும் பெருமையும் - ... ...-Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-88600468906569380422010-01-13T22:53:00.000-08:002010-01-13T22:53:54.505-08:00தமிழ்மொழி வாழ்த்துதான தனத்தன தான தனத்தன தான தந்தா னே <br />
<br />
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி <br />
வாழிய வாழிய வே! <br />
<br />
வான மளந்த தனைத்தும் அளந்திடும் <br />
வண்மொழி வாழிய வே! <br />
<br />
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி <br />
இசைகொண்டு வாழிய வே! <br />
<br />
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! <br />
என்றென்றும் வாழிய வே! <br />
<br />
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் <br />
துலங்குக வையக மே! <br />
<br />
தொல்லை வினை தரு தொல்லை யகன்று <br />
சுடர்க தமிழ்நா டே! <br />
<br />
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! <br />
வாழ்க தமிழ்மொழி யே! <br />
<br />
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து <br />
வளர்மொழி வாழிய வே!Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-34975795238046710292010-01-13T22:33:00.000-08:002010-01-13T22:34:12.960-08:00தமிழ்<img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNNmZzZIbWk77SsP7E8HLF3tJPR9lpQybGY0j0pxIvIuP2qCKE5qAZu6x4NcodlFPlElN7l0vjYacYnzRDGTKbzQLjKONldrgcaxqcfiiHbLzMnzw5IW6xudkK4BakId_iwYJ6riT-Lnwy/s400/en+Bharathi+-+Tamil+letters+in+stone.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412964588664214370" /><br />
<br />
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் <br />
இனிதாவது எங்கும் காணோம், <br />
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் <br />
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, <br />
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு <br />
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! <br />
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் <br />
பரவும்வகை செய்தல் வேண்டும். <br />
<br />
யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், <br />
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல், <br />
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை, <br />
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை, <br />
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் <br />
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்! <br />
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் <br />
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! <br />
<br />
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் <br />
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும <br />
இறவாத புகழுடைய புதுநூல்கள் <br />
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் <br />
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் <br />
சொல்வதிலோர் மகிமை இல்லை <br />
திறமான புலமையெனில் வெளி நாட்டோர் <br />
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். <br />
<br />
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் <br />
வாக்கினிலே ஒளி யுண்டாகும் <br />
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் <br />
கவிப்பெருக்கும் மேவு மாயின் <br />
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் <br />
விழிபெற்றுப் பதவி கொள்வார், <br />
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் <br />
இங்கமரர் சிறப்புக் கண்டார். <br />
<br />
Translated in English: <b>Tamil</B><br />
<br />
Of all the languages that we know<br />
There is none as Tamil sweet;<br />
Yet the world's gibe, like ignorant beasts<br />
We lie sunk in defeat.<br />
What use to glory in that name<br />
And live obscurely here<br />
Instead of making that sweet tongue ring<br />
Like a bell far off and near?<br />
<br />
Of all the poets that we know<br />
We see none to compare<br />
With Kamban, Valluvan, Ilango -<br />
No boast this, but truth bare!<br />
Dumb, deaf and blind we live now -<br />
Listen, let us make it our aim<br />
For our own sake from the house-tops<br />
The greatness of Tamil to proclaim.<br />
<br />
We must translate into Tamil<br />
Great works of foreign lands,<br />
While deathless works in Tamil<br />
Are written by living hands;<br />
No use in secret among ourselves<br />
Repeating a stale old story -<br />
The test of all true greatness is<br />
That outsiders hail our glory.<br />
<br />
Then only will our words ring bright<br />
When brightness within one can find;<br />
The arts in flood will surely release<br />
Those sunk in pits and blind.<br />
Raised up they will regain their sight <br />
And status against odds;<br />
Let us then taste this nectar of Tamil<br />
And tasting it become as gods!<br />
<br />
<br />
<!--table border='0' width='440'><br />
<tr><td><blockquote>Bharathi's 'Tamil' is translated into following languages. You may not get exact feel as this is done by Google translation tool. Feel free to give correct translation. Now, Enjoy !</blockquote></td></tr><br />
</table><table border='0' width='440'><tr><td width='80' valign='top'><div id='cyclelinks' style='width:80px;'></div></td><td width='300' valign='top'><pre><p width='300' class='dropcontent'>'Tamil' in Afrikaans
Van al die tale wat ons weet
Daar is niemand soos Tamil soet;
Tog is die wêreld se schimpscheut, soos onkundig diere
Dan lieg ons gesink in die nederlaag.
Wat gebruik om te roem in die naam
En teruggetrokken lewe hier
In plaas van te maak dat die soet tong ring
Soos 'n klok ver weg en naby?
Van al die digters wat ons weet
Ons sien niks om te vergelyk
Met (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Geen roem nie, maar die waarheid ontbloot!
Stom, doof en blind ons leef nou --
Luister, laat ons maak dit ons doel
Vir ons eie ter wille van die huis-tops
Die grootheid van tamil te verkondig.
Ons moet vertaal in Tamil
Groot werke van vreemde lande,
Terwyl onsterfelijk werk in Tamil
Is geskryf deur lewende hande;
Geen gebruik in die geheim onder onsself
Herhaling van 'n goor ou storie --
Die toets van alle ware grootheid is
Dat buitestaanders hael ons heerlikheid.
Dan alleen sal ons woorde ring helder
Wanneer helderheid binne een kan vind;
Die kuns in vloed sal sekerlik vrylating
Diegene gesink in die kuile en blind.
Opgewek het, het hulle hul oë sal herwin
En status teen kans;
Laat ons dan smaak hierdie nektar van Tamil
En proe dit raak as gode!
Meer weet oor Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>Klik hier</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' në Albanian
Nga të gjitha gjuhët që ne e dimë
Nuk ka asnjë si Tamil ëmbël;
Megjithatë shpoti botës, si kafshët injorant
Ne gënjeshtër zhytur në humbje.
Çfarë të përdorë për lavdi në se emri
Dhe jetojnë obscurely këtu
Në vend të marrjes se ring gjuhën e ëmbël
Ashtu si një zile largët dhe e afërt?
Nga të gjithë poetët që ne e dimë
Ne e shohim asnjë të krahasuar
Me (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Nuk krenohem këtë, por të vërtetën lakuriq!
Memec, shurdh dhe i verbër jetojmë tani --
Dëgjojnë, le të na bëjnë të qëllimin tonë
Për hir tona nga shtëpia-majet
Madhështia e tamilisht në haptazi.
Ne duhet të përkthejnë në tamilisht
Great veprat e tokave të huaja,
Ndërsa punon pavdekshëm në Tamil
Janë shkruar nga duart e jetesës;
Nuk ka përdorur në sekret mes vetes
Duke përsëritur një histori e vjetër ndenjur --
Provë e gjithë madhështia e vërtetë është
Kjo breshër të jashtmit lavdinë tonë.
Vetëm atëherë do të fjalëve tona të ndritshme rrjet
Kur brenda një shkëlqim mund të gjeni;
Artet në përmbytje me siguri do të lirimit
Ata zhytur në gropa dhe të verbër.
Ringjalli ata do të rifitojë para syve të tyre
Dhe statusi kundër mosmarrëveshje;
Le pastaj shije këtë nektar të tamil
Dhe provë kjo bëhet si zotat!
Për të ditur më shumë rreth Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>kliko këtu</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' في Arabic
لجميع اللغات التي نعرفها
ليس هناك اعتراض على النحو التاميل الحلو ؛
ومع ذلك فإن العالم هزء ، مثل البهائم جاهل
نحن كذبة غرقت في الهزيمة.
ما المجد في استخدامها لهذا الاسم
ويعيش هنا بغموض
بدلا من جعل هذا الخاتم اللسان الحلو
مثل جرس بعيدا والقريب؟
لجميع الشعراء أن نعرف
نحن نرى أن لا شيء مقارنة
مع (1Kamban) ، (2Valluvan) ، (3Ilango) --
لا يتباهى بذلك ، ولكن الحقيقة العارية!
البكم ، والصم والمكفوفين ونحن نعيش الآن --
الاستماع ، دعونا نجعل ذلك هدفنا
من أجل صالحنا من سطوح المنازل
عظمة لاعلان التاميل.
يجب علينا أن تترجم إلى التاميل
عظيم يعمل من أراض أجنبية ،
في حين يعمل خالدة في التاميل
مكتوبة من قبل الذين يعيشون اليدين ؛
لا تستخدم في سرية فيما بيننا
تكرار قصة قديمة قديمة --
اختبار لجميع العظمة الحقيقية هي
أن نحيي الغرباء أمجادنا.
عندئذ فقط سيكون لكلماتنا عصابة مشرق
عندما سطوع داخل أحد يستطيع أن يجد ؛
الفنون في الفيضانات بالتأكيد سوف الافراج
تلك التي غرقت في حفر والمكفوفين.
اقام سيستعيدون أبصارهم
وعلى خلاف الوضع ؛
دعونا ثم طعم هذا الرحيق من التاميل
وتذوق فإنه يصبح مثل الآلهة!
لمعرفة المزيد عن Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>انقر هنا</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' ў Belarusian
З усіх Мовы, што мы ведаем
Існуе ні як тамільская салодкі;
Тым не менш у свеце насмешка, як невежественные звяры
Мы ляжым затопленыя у паражэнні.
Што выкарыстоўваць для славы, што ў назве
І жывуць тут смутное
Замест таго, каб рабіць гэта салодкае "кальцо"
Як звон, далёка і блізка?
З усіх паэтаў, што мы ведаем
Мы бачым, ніхто не параўнаць
С (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Няма пахваліцца гэтым, але ісціна голы!
Нямых, глухіх і сьляпых мы жывем сёння --
Слухайце, давайце забудзем гэта наша мэта
Дзеля нас саміх з дахаў
Веліч Таміл абвясціць.
Мы павінны ажыццявіць тамільская
Great Works чужых зямель,
Хоць несьмяротных работ на тамільскай мове
Напісана жывым руках;
Не выкарыстоўваць у тайне адзін з адным
Паўтараючы састарэлыя старая гісторыя --
Тэст ўсіх сапраўднае веліч
Што замежнікі горада наша слава.
Толькі тады нашы словы гучаць ярка
Калі яркасць на працягу аднаго знойдзеце;
Мастацтва ў барацьбе з паводкі, безумоўна рэліз
Тыя, які патануў у шахтах і сляпых.
Паднялі яны прозрели
І статус у дачыненні да шанцаў;
Давайце ж смак гэтага нектару Таміл
І яна стала дэгустацыя як багі!
Каб даведацца больш аб Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>Націсніце тут</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' в Bulgarian
От всички езици, които знаем
Няма друг като тамилски сладък;
Но в света подигравка, като невеж зверове
Ние лежат потънали в поражение.
Каква полза да се хвалят с това име
И тук живеят obscurely
Вместо да прави, че сладко пръстен език
Като звънец далеч и близо?
От всички поети, че ние знаем
Виждаме, няма да се сравни
С (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Не се похвали това, но истината голи!
Глупаво, глухи и слепи, в който живеем сега --
Слушай, нека направим това нашата цел
За нашата собствена голяма от къща-върхове
Величието на Тамил да обявят.
Ние трябва да намери израз в Тамил
Велики произведения на чужди земи,
Докато работи в безсмъртен тамилски
Са написани от живот ръце;
Не използвайте в тайна помежду си
Повтаряйки баят стара история --
Изследването на всички вярно е величието
Това външни градушка нашата слава.
Тогава само ще ни думи пръстен ярки
Когато в рамките на яркостта може да се намери;
Изкуствата в наводнения със сигурност ще съобщение
Тези потънали в ями и слепи.
Възкреси те ще възвърнат пред очите им
И статут с коефициенти;
Нека след това вкус този нектар на Тамил
И дегустация се превърне като богове!
За да научите повече за Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>кликнете тук</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' a Catalan
De tots els idiomes que coneixem
No hi ha ningú com Tàmil dolça;
No obstant això, burla del món, com bèsties ignorants
Ens estan enfonsats en la derrota.
De què serveix a la glòria en què el nom de
I viure aquí foscament
En lloc de fer que el cèrcol en la llengua dolça
Com una campana, lluny i prop?
De tots els poetes que coneixem
Veiem que cap de comparar
Amb (1Kamban), (2Valluvan), (3Ilango) --
No compten amb aquest, però la veritat nua!
Muts, sords i cecs que vivim ara --
Escolta, anem a fer que el nostre objectiu
Pel nostre propi bé de les teulades
La grandesa de Tamil a proclamar.
Hem de traduir al tàmil
Grans obres de terres estrangeres,
Si bé les obres immortals de Tamil
Estan escrites pels que viuen les mans;
No utilitzar en secret entre nosaltres
Repetint una història rància d'edat --
La prova de tota veritable grandesa és
Que la calamarsa de fora la nostra glòria.
Només llavors les nostres paraules anell de brillants
Quan la brillantor d'un pot trobar;
Les arts en les inundacions segurament donarà a conèixer
Els enfonsats en pous cecs.
Aixecat, recuperaran la seva vista
I l'estat contra tot pronòstic;
Vegem a continuació, degustar aquest nèctar de Tàmil
I agradant a ser com déus!
Per saber més sobre Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>feu clic aquí</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' 在 Chinese
在所有的语言,我们知道
有没有为泰米尔甜;
然而世界的嘲笑,野兽一样无知
我们的失败在于沉没。
什么荣耀的使用该名称
隐晦地在这里生活
而只提出甜舌环
钟一样遥远和近?
在所有的诗人,我们知道
我们没有看到比较
随着(1Kamban),(2Valluvan),(3Ilango) -
没有吹嘘这一点,但事实裸!
聋哑人和盲人,我们现在生活-
听着,让我们使我们的目标
对于我们从自己的利益家机顶盒
伟大的泰米尔宣布。
我们必须翻译成泰米尔语
伟大的作品外的土地,
虽然工程在泰米尔不死
活的手都只是;
我们之间没有秘密使用
重复一个老掉牙的故事-
一切真正的伟大试验
外人冰雹我们的光荣。
那么只有将我们的话响光明
当在一个亮度可以找到;
在洪水的艺术必将释放
在坑和盲目沉没者。
提出时,他们将恢复他们的视线
对赔率和地位;
那么,让我们品尝这种泰米尔花蜜
并品尝它变成为神!
进一步了解 Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>点击这里</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' u Croatian
Od svih jezika koje znamo
Nitko nije kao Tamil sweet;
Ipak, svijet je rugati se, kao neuk zvijeri
Mi ležati potonuo u poraz.
Što koristiti za slavu u to ime
I žive obscurely ovdje
Umjesto da taj slatki jezik prsten
Kao zvono daleko i blizu?
Od svih pjesnika, za koje znamo da
Vidimo ništa za usporedbu
Sa (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Ne hvali ovu, ali gola istina!
Nijem, gluh i slijep živimo sada --
Slušati, neka nam čine naš cilj
Za vlastitu korist iz kuće vrhovima
Veličinu Tamil naviještati.
Mi se mora prevesti u Tamil
Velika djela stranih zemalja,
Dok je besmrtan radovi u Tamil
Jesu napisao dnevni ruke;
Ne koristiti u tajnosti između sebe
Ponavljajuća mokraća stara priča --
Test svih prava veličina je
To je vani tuče našu slavu.
Tada će se samo naše riječi, svijetao prsten
Kada svjetlost u roku od jednog može naći;
Umjetnost u poplavi će sigurno izdanje
Oni potonuo u jamama i slijepi.
Podiže da će povratiti svoje oči
I status protiv kvota;
Neka nam onda okus ovaj nektar Tamil
I degustacija to postati kao bogovi!
Da biste znati više o Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>kliknite ovdje</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' v Czech Danish
Ze všech jazycích, které známe
Nikdo není jako Tamil sladké;
Přesto na světě posmívat se, stejně jako nevědomá hovada
Ležíme potopena v porážku.
K čemu se chlubili, že jméno
A žije zde nejasně
Namísto toho, aby to sladké jazyk prsten
Jako zvon daleko a okolí?
Ze všech básníků, které známe
Vidíme, nemá k porovnání
S (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Ne chlubit, ale holá pravda!
Němý, hluchý a slepý žijeme nyní --
Poslouchej, udělejme to náš cíl
Pro naše vlastní dobro z domu-top-boxy
Velikost Tamil hlásat.
Musíme přeložit do Tamil
Velké děl cizích zemí,
Zatímco nesmrtelný pracuje v Tamil
Jsou psány životem ruce;
Nemá smysl v tajnosti mezi námi
Opakující se stale starý příběh --
Zkouška všechno pravda, je velikost
Outsideři, že kroupy naší slávu.
Pak bude jen naše slova prsten jasné
Když jas v rámci jednoho najdete;
Umění v záplavových jistě zpráva
Ti klesli v boxech a slepý.
Vzbudil budou opět před jejich očima
A postavení proti kurzy;
Dovolte nám tedy ochutnat tuto nektaru Tamil
A ochutnávka se stane jako bohové!
Chcete-li vědět více o Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>klikněte zde</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' in Dutch
Van alle talen die we kennen
Er is niemand als Tamil zoet;
Toch is de wereld schimpen, onwetend als beesten
We liggen verzonken in een nederlaag.
Wat te gebruiken om roem in die naam
En live duister hier
In plaats van dat zoete tong ring
Net als een klok ver weg en dichtbij?
Van alle dichters die we kennen
We zien geen te vergelijken
Met (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Nee bogen, maar de waarheid bloot!
Stom, doof en blind we leven nu --
Luister, laten we maken het ons doel
Voor onze eigen bestwil van het huis-toppen
De grootheid van Tamil te verkondigen.
We moeten vertalen in Tamil
Grote werken van vreemde landen,
Terwijl onsterfelijke werken in Tamil
Zijn geschreven door levende handen;
Geen gebruik in het geheim onder ons
Herhalen van een oudbakken oud verhaal --
De test van alle ware grootheid is
Dat buitenstaanders hagel onze glorie.
Alleen dan zal onze woorden ring helder
Als helderheid binnen een kan vinden;
De kunst in vloed zal zeker release
Die verzonken in kuilen en blind.
Opgewekt ze hun gezicht zullen herwinnen
En tegen de status van kans;
Laat ons proeven van deze nectar van Tamil
En te proeven worden als goden!
Om meer te weten over Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>klik hier</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' in English
Of all the languages that we know
There is none as Tamil sweet;
Yet the world's gibe, like ignorant beasts
We lie sunk in defeat.
What use to glory in that name
And live obscurely here
Instead of making that sweet tongue ring
Like a bell far off and near?
Of all the poets that we know
We see none to compare
With (1Kamban), (2Valluvan), (3Ilango) -
No boast this, but truth bare!
Dumb, deaf and blind we live now -
Listen, let us make it our aim
For our own sake from the house-tops
The greatness of Tamil to proclaim.
We must translate into Tamil
Great works of foreign lands,
While deathless works in Tamil
Are written by living hands;
No use in secret among ourselves
Repeating a stale old story -
The test of all true greatness is
That outsiders hail our glory.
Then only will our words ring bright
When brightness within one can find;
The arts in flood will surely release
Those sunk in pits and blind.
Raised up they will regain their sight
And status against odds;
Let us then taste this nectar of Tamil
And tasting it become as gods!
To know more about Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>click here</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' sisse Estonian
Kõik keeled, mida me teame
Pole ühtegi nii Tamili magus;
Kuid maailma mõnitus, nagu asjatundmatu metsloomad
Meil lasub pöördumatud kaotuseni.
Mis kasu on au selle nimi
Ja elada hämaralt siin
Selle asemel, et magus keele ring
Nagu kella kaugel ja lähedal?
Kõigi luuletajate, et me teame
Me näeme kedagi võrrelda
Koos (1Kamban) (2Valluvan) (3Ilango) --
Nr kiidelda, kuid tõde tühi!
Tumm, kurt ja pime me elame praegu --
Kuula, Tehkem see meie eesmärk
Meie endi huvides alates maja korgid
Ülevus Tamil välja kuulutamata.
Meil tuleb muundada Tamil
Suur tööd välisriikide maad,
Kuigi deathless töötab Tamil
On kirjutanud elu käed;
Nr kasutamiseks saladus hulgas ise
Korduv seismajäänud vana lugu --
Katse kõik tõsi suurepärasus
See autsaiderite rahe meie auks.
Siis ainult see meie sõnade rõngas ere
Kui heleduse jooksul võib leida;
Kunst üleujutuste kindlasti pressiteade
Need pöördumatud kaevandis ja pime.
Suurendada kuni nad tagasi oma nägemise
Ja staatuse vastu koefitsiendid;
Olgem siis maitse see nektar Tamil
Ja maitse on muutunud nagu jumalad!
Et rohkem teada saada Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>kliki siia</a>.</p>#VALUE!
<p width='300' class='dropcontent'>'Tamil' sisällä Finnish
Kaikista kielistä, että tiedämme
Ei kukaan muu kuin Tamil makea;
Kuitenkin maailman ivata, kuten tietämättömiä eläimiä
Me olla upposi tappioon.
Mitä hyötyä kunniaa tällä nimellä
Ja elää obscurely täällä
Sen sijaan, että että makea kielen sormus
Kuten soittokello kaukana ja lähellä?
Kaikki runoilijat, että tiedämme
Näemme kukaan verrata
Kanssa (1Kamban), (2Valluvan), (3Ilango) --
O ylpeitä tästä, mutta totuus paljas!
Mykkä, kuuro ja sokea elämme nyt --
Kuuntele, tehkäämme se meidän tavoitteemme
Itsemme takia talolta latvoissa
Suuruuden Tamil julistamaan.
Meidän täytyy kääntää Tamil
Suurten teoksia vieraisiin maihin,
Vaikka kuolematon toimii Tamil
On kirjoittanut elävät käsissä;
O käyttää salassa keskuudessamme
Toistamalla tunkkainen vanha juttu --
Testi kaikkien totta suuruus on
Että ulkopuoliset rakeet meidän Glory.
Sitten vain tulee sanoista soi kirkkaasti
Kun kirkkaus kuluessa löytyy;
Taiteen tulva varmasti release
Nämä upposi kuoppia ja sokea.
Herätetäänkö ne takaisin näkönsä
Ja asema vastaan kertoimella;
Ottakaamme maistaa tätä nektaria Tamil
Ja maku on tullut kuin jumalat!
Jos haluat tietää lisää Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>klikkaa tästä</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' dans French
De toutes les langues que nous connaissons
Il n'en est pas que le tamoul doux;
Pourtant se moquer du monde, comme des bêtes ignorants
Nous mentons sombré dans la défaite.
Quel usage faire gloire de ce nom
Et vivre obscurément ici
Au lieu de faire cette bague langue douce
Comme une cloche lointaine et proche?
De tous les poètes que nous savons
Nous n'en vois pas de comparer
Avec (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Ne m'en vante pas, mais la vérité nue!
Muet, sourd et aveugle que nous vivons maintenant --
Ecoutez, laissez-nous faire notre objectif
Pour notre propre bien de la maison-tops
La grandeur du Tamil à proclamer.
Nous devons traduire en tamoul
Les grandes œuvres de territoires étrangers,
Bien que les œuvres immortelles dans le Tamil
Sont écrits par des mains vivantes;
Aucune utilisation en secret entre nous
Répétition d'une histoire somnambuliques --
L'essai de toute grandeur véritable est
Que la grêle outsiders notre gloire.
Alors seulement nos paroles anneau brillant
Lorsque la luminosité au sein, on peut trouver;
Les arts en crue sera sûrement de sortie
Ceux coulés dans des fosses et aveugle.
Ressuscités, ils recouvrent la vue
Et le statut contre vents et marées;
Soyons donc déguster ce nectar du Tamil
Et dégustation qu'elle devienne comme des dieux!
Pour en savoir plus Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>cliquez ici</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' en Galician
De todas as linguas que sabemos
Non hai ninguén como tamil doce;
No entanto, zombam do mundo, como bestas ignorantes
Nós mentiras afundido na derrota.
O uso de gloria no que o nome
E vivir escura aquí
En vez de facer ese anel lingua doce
Como un sino lonxe e preto?
De todos os poetas que sabemos
Nós vemos ningunha para comparar
Con (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Non se vangloriar diso, pero a verdade espida!
Mudos, xordos e cegos no que vivimos agora --
Escoita, imos facer o noso obxectivo
Para o noso propio ben da casa-tops
A grandeza de Tamil proclamar.
Debemos traducir en Tamil
Grandes obras de terras estranxeiras,
En canto as obras inmortais en Tamil
Son escritos por estar en mans;
Non usar en segredo entre nós
Repetindo unha historia maior de idade --
A proba de toda a verdadeira grandeza é
Saraiba que fora nosa gloria.
Só entón as nosas palabras anel de brillantes
Cando o brillo dentro un pode atopar;
As artes en inundacións certamente ha liberar
Aqueles afundido en pozos e cego.
Levantado que ha recuperar a visión
Eo status de encontro ás probabilidades;
Imos, entón, probar este néctar de Tamil
E degustación de se facer como os deuses!
Para saber máis sobre Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>click aquí</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' in German Greek
Von allen Sprachen, die wir wissen,
Da ist keiner, wie Tamil süß;
Doch die Welt ist gibe, wie ignorant Tiere
Wir liegen in der Niederlage versenkt.
Was nützt die Herrlichkeit in diesem Namen
Und hier leben dunkel
Anstatt das süße Zunge Ring
Wie eine Glocke fern und nah?
Von all den Dichtern, die wir kennen
Wir sehen nichts zu vergleichen
Mit (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Nr. rühmen, aber nackte Wahrheit!
Stumm, taub und blind wir heute leben --
Hören Sie, wir machen es uns zum Ziel
Für unser selbst willen von den Dächern
Die Größe von Tamil zu verkünden.
Wir müssen sich in Tamil
Große Werke von fremden Ländern,
Während unsterblichen Werke in Tamil
Sind geschrieben von lebendigen Hände;
Keine Verwendung in geheimen unter uns
Wiederholen eines veralteten alte Geschichte --
Die Prüfung aller wahre Größe ist
Dass Außenstehende Hagel unserer Herrlichkeit.
Nur dann werden unsere Worte klingen hell
Wenn die Helligkeit innerhalb eines finden kann;
Die Kunst in überschwemmen Release sicher
Diese sank in Gruben und blind.
Raised bis sie ihr Augenlicht wiedererlangt
Und der Status gegen Quoten;
Lassen Sie uns dann auf den Geschmack dieses Nektars von Tamil
Und schmeckt es sich als Götter!
Um mehr zu wissen Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>Klicken Sie hier</a>.</p>#VALUE!
<p width='300' class='dropcontent'>'Tamil' में Hindi
सभी भाषाओं में है कि हम जानते हैं
वहाँ तमिल मिठाई के रूप में कोई नहीं है;
अभी तक दुनिया के अज्ञानी जानवरों की तरह हंसी,
हम हार में डूब झूठ बोलते हैं.
क्या है कि नाम में महिमा के लिए इस्तेमाल
और obscurely यहाँ रहते हैं
इसके बजाय कि मीठी जबान अंगूठी बनाने का
एक घंटी की तरह दूर और पास है क्या?
सभी कवियों कि हम जानते हैं
हम देख भी नहीं की तुलना में
साथ (1Kamban), (2Valluvan), (3Ilango) --
कोई यह दावा नहीं है, लेकिन सच नंगे!
गूंगा, बहरा और अंधा अब हम रहते हैं --
सुनो, हमें यह हमारा लक्ष्य बनाना
हमारे घर से खुद के लिए, सबसे ऊपर है
तमिल की महानता का प्रचार है.
हम तमिल में अनुवाद करना होगा
महान विदेशी भूमि का काम करती है,
जबकि तमिल में अमृत काम करता है
हाथ रहते ने लिखा है;
आपस में कोई रहस्य में उपयोग
एक पुराने बासी कहानी दोहराने --
सब सच महानता की परीक्षा है
कि बाहरी ओलों हमारे महिमा.
तो सिर्फ हमारी शब्दों की अंगूठी उज्ज्वल होगा
जब एक के भीतर चमक पा सकते हैं;
बाढ़ में कला निश्चित रूप से जारी करेंगे
गड्ढे और अंधा में डूब वो.
उठाया वे अपनी दृष्टि को प्राप्त करेंगे
और बाधाओं के बावजूद स्थिति;
हमें तो चलो तमिल की इस अमृत स्वाद
और देवताओं के रूप में चखने यह हो!
के बारे में और जानना Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>यहाँ क्लिक करें</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' benne Hungarian
Az összes hivatalos nyelvén, hogy tudjuk, hogy
Ilyen nincs, mint Tamil édes;
Pedig a világ gúnyolódik, mint tudatlan állatok
Mi hazugság süllyedt vereség.
Mi haszna a dicsőség, hogy nevében
És élő homályosan van
Ahelyett, hogy az édes nyelv gyűrű
Mint egy harang messze és közel?
Minden a költők, hogy tudjuk, hogy
Látjuk, sem összehasonlítani
A (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Sem dicsekedhet, de az igazság meztelen!
Néma, süket és vak élünk most --
Figyelj, tegyük a célunk
Mert a saját érdekében a háztól-top
Nagyságát a tamil, hogy hirdessék.
Meg kell jelennie tamil
Nagy művek idegen földeket,
Míg a halhatatlan művek tamil
Írják élő kezét;
Nincs értelme titokban magunk között
Ismétlődő állott régi történet --
A teszt minden igazi nagyság van
Hogy a kívülállók jégeső mi dicsőségére.
Akkor csak az lesz a szavaink fényes gyűrű
Amikor a fényerő belül található;
A művészet az árvízkárok biztosan release
Azok süllyedt gödrök és vak.
Feltámasztotta őket visszanyerni elől
És állapotok ellen esély;
Engedje meg, akkor ezt a nektár ízét a Tamil
És kóstolása válik, mint az istenek!
Többet tudni Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>Kattintson ide</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' í Icelandic
Af öllum þeim tungumálum sem við þekkjum
Það er ekkert sem Tamil sætur;
En í heiminum gibe, eins vita beasts
Við liggja sökkt í ósigur.
Hvað nota til dýrðar í því nafni
Og búa obscurely hér
Í stað þess að gera það sætur tunga hringur
Eins og bjalla langt undan og nálægt?
Af öllum skáld sem við vitum
Við sjáum ekkert að bera saman
Með (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Nei fögnum þessu, en sannleikur Bare!
Mállaus, heyrnarlaus og blindur við lifandi núna --
Heyrðu, skulum gera það markmið okkar
Fyrir eigin sök okkar frá óperuhúsinu-Tops
The hátignar í Tamil til boða.
Við verðum að þýða í Tamil
Great verkum erlendur landslag,
Þó deathless verksmiðja í Tamil
Eru skrifaðar af líf höndum;
Ekki nota í leynilegum hjá okkur
Endurtaka a gamall gömul saga --
Í próf allra sannur hátignar er
Það utanaðkomandi Hail dýrð okkar.
Þá aðeins verður orðum okkar hringur skær
Þegar birta innan má finna;
The Arts í flóðið mun vafalaust gefa út
Þeir sökkt í Pits og blinda.
Rísa upp munu þeir fá aftur sjón þeirra
Og stöðu gegn líkur;
Láttu okkur þá bragðið this Nectar í Tamil
Og finna bragð það orðið eins og guðir!
Til að vita meira um Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>Smelltu hér</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' di Indonesian
Dari semua bahasa yang kita tahu
Tidak ada sebagai tamil manis;
Namun hinaan di dunia, seperti binatang bodoh
Kami berbaring tenggelam dalam kekalahan.
Apa yang di gunakan untuk kemuliaan nama itu
Dan tinggal kabur di sini
Bukannya membuat lidah yang manis cincin
Seperti lonceng jauh dan dekat?
Dari semua penyair yang kita tahu
Kita melihat seorang pun untuk membandingkan
Dengan (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Tidak membanggakan ini, tetapi kebenaran yang telanjang!
Dumb, tuli dan buta kita hidup sekarang --
Dengar, mari kita membuat tujuan kita
Untuk kepentingan kita sendiri dari rumah-puncak
Kebesaran Tamil untuk memproklamasikan.
Kita harus menerjemahkan ke dalam tamil
Karya-karya besar tanah asing,
Sementara kekal bekerja di Tamil
Yang ditulis oleh tangan hidup;
Ada gunanya secara rahasia di antara kita
Mengulang cerita lama basi --
Tes dari semua keagungan sejati
Hujan es yang luar kemuliaan kita.
Maka hanya akan kata-kata kita cincin terang
Bila kecerahan dalam satu dapat menemukan;
Seni banjir pasti akan rilis
Mereka yang tenggelam di lubang-lubang dan buta.
Membangkitkan mereka akan mendapatkan kembali penglihatan mereka
Dan status terhadap rintangan;
Marilah kita rasa madu ini Tamil
Dan rasa itu menjadi seperti dewa!
Untuk mengetahui lebih lanjut tentang Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>klik di sini</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' i Irish
As na teangacha sin a fhios againn
Níl aon cheann de réir mar Tamil milis;
Ach an domhain gibe, cosúil le beasts ignorant
Táimid bréag sunk in defeat.
Cad é a úsáid chun glory sa ainm
Agus beo obscurely anseo
In ionad sin a dhéanamh fáinne teanga milis
Cosúil le clog mhéid de thalamh agus in aice?
As na filí a fhios againn
Féach againn none chun comparáid a dhéanamh idir
Le (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Uimh boast seo, ach fírinne arbh fhéidir!
Balbh, bodhair agus dall beo againn anois --
Éist, a ligean linn é a dhéanamh d'aidhm againn
Ar ár son féin as an teach-bairr
An greatness an Tamailis a fhógairt.
Ní mór dúinn a aistriú i Tamil
Mór-oibreacha de thailte eachtrach,
Cé oibreacha deathless i Tamil
An bhfuil scríofa ag an lámh ina gcónaí;
Uimh úsáid i rúnda i measc féin
Athrá ar scéal d'aois stale --
Tá an tástáil ar gach greatness fíor
Sin hail outsiders ár glory.
Ansin, beidh ach glaoch ar ár gcuid focal geal
Nuair is féidir gile laistigh de a aimsiú;
Beidh na healaíona i tuilte a scaoileadh surely
Glacfar na sunk i pits agus dall.
Ardaíodh suas go mbeidh siad aisti athuair a radharc
Agus an stádas i gcoinne odds;
Lig dúinn ansin blas an nectar de Tamil
Agus aghaidh anois é mar gods!
Chun níos mó eolas faoi Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>cliceáil anseo</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' in Italian
Di tutte le lingue che conosciamo
Non c'è nessuno come Tamil dolce;
Eppure beffa del mondo, come bestie ignoranti
Mentiamo affondata in una sconfitta.
A cosa serve alla gloria in quel nome
E vivere oscuramente qui
Invece di fare l'anello dolce lingua
Come una campana lontano e vicino?
Di tutti i poeti che sappiamo
Si vede nessuno per confrontare
Con (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Non vantano questo, ma la verità nuda!
Muti, sordi e ciechi in cui viviamo oggi --
Senti, facciamo in modo che il nostro obiettivo
Per il nostro bene dai tetti delle case
La grandezza di Tamil a proclamare.
Dobbiamo tradurre in Tamil
Grandi opere di terre straniere,
Mentre immortali opere in Tamil
Sono state scritte da vivere mani;
Non utilizzare in segreto tra di noi
Ripetere una storia vecchia stantia --
La prova di tutto vera grandezza è
Che provengono dall'esterno la nostra gloria.
Solo allora sarà la nostra parola anello luminoso
Quando la luminosità all'interno si può trovare;
Le arti in piena sicuramente di rilascio
Quelle affondate in pozzi e cieco.
Innalzato essi potranno ritrovare la vista
E lo stato contro ogni probabilità;
Vediamo poi assaggiare questo nettare di Tamil
E degustazione di diventare come Dio!
Per saperne di più Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>clicca qui</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' 〜で Japanese Korean
我々が知っているすべての言語の
ようこそタミール語のように甘いなしです。
しかし、無知な野獣のように、世界のジャイブ、
我々は敗北に沈んでうそ。
どのような栄光にその名前を使用
そして、ひっそりとここに住んで
その代わりに甘い舌のリングを作る
鐘遠くに近いような?
我々が知っている、すべての詩人の
我々はどれも比較するために参照してください
(1Kamban)、(2Valluvan)、(3Ilangoと) -
いいえ、このしかし、真実むき出しの自慢!
ダム、聴覚障害者、今住んで視覚障害者-
聞き、私たちは私たちの目標を聞かせ
家から私たち自身のために、トップ
タミール語の偉大さを宣言する。
我々はタミール語に翻訳する必要があります
偉大な外国人の土地を、作品
ながら、タミール語の不滅の作品
手に住んで書かれています;
私たちの間で秘密裏になしを使用する
古い状態の話を繰り返す-
すべての真の偉大さのテストです
これは部外者雹我々の栄光。
その後は私たちの言葉明るいリングされます
いつから1年以内の明るさを見つけることができます。
洪水の中で芸術確実にリリースする予定だ
これらのピットと視覚障害者に沈んだ。
最大彼らの姿を取り戻すと発生
そして、不利な状態;
してみようタミール語のこの花の蜜の味
そしてそれは神のように味になる!
についての詳細を知るために Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>ここをクリック</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' iekšā Latvian
Visas valodas, kuras mēs zinām
Nav neviena kā Tamil salda;
Tomēr pasaules izsmiet, tāpat kā neizglītots zvēri
Mēs gulēt nogrimušais sakāvi.
Ko izmantot godu, jo vārds
Un dzīvot obscurely šeit
Tā vietā, lai konfekšu mēle gredzens
Tāpat kā zvans tālu un tuvu?
No visiem dzejniekiem, ka mēs zinām
Mēs redzam, neviens salīdzināt
Ar (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Ne lielīties, taču patiesība tukša!
Mēms, nedzirdīgiem un neredzīgiem mēs dzīvojam tagad --
Klausīties, ļaujiet mums dod mūsu mērķis
Mūsu pašu labad no mājas, topi
Tamil diženuma sludināt.
Mums ir izpaužas Tamil
Lielu darbu ārvalstu zemes,
Kaut nemirstīgs darbi Tamil
Slēgti ar dzīves rokām;
Slepeni Nr lietošanas izplatība sevi
Atkārtota mīzali vecs stāsts --
Visu patiesa diženuma testu
Ka nepiederošām krusa mūsu krāšņumā.
Tikai tad būs mūsu vārdi gredzens spilgti
Kad spilgtumu vienā var atrast;
Plūdu mākslas tiks noteikti presei
Šie nogrimušais kauliņi un akls.
Palielināt līdz viņi atgūs savu redzi
Un statusu pret izredzes;
Ļaujiet mums tad garša šī nektāra Tamil
Un garšu tas kļūst par dieviem!
Lai uzzinātu vairāk par Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>click here</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' į Lithuanian
Iš visų kalbų, kad mes žinome,
Nėra kaip tamilų saldus;
Tačiau pasaulio pajuoka, kaip neišmanantis žvėrys
Mums tenka pasinerti į pralaimėjimą.
Ką naudoti Ačiū, kad pavadinimas
Ir gyventi Mroczno čia
Vietoj to, kad saldus liežuvis žiedas
Kaip varpas toli ir arti?
Iš visų poetų, kad mes žinome
Matome niekas palyginti
Su (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Nr pasigirti tai, bet tiesa pagimdė!
Dumb, kurčiųjų ir aklųjų mes gyvename dabar --
Klausyk, mes pasistengsime, kad tai mūsų tikslas
Mūsų pačių labui iš namų tops
Tamil didybė paskelbti.
Turime išversti į tamilų
Didžioji darbų užsienio žemėse,
Nors nemirtingas darbai Tamil
Ar parašyta gyvenimo rankas;
Ne paslaptis naudojimo tarp savęs
Pasikartojantis pasenusi sena istorija --
Visiems tiesa didybė bandymas
Kad pašaliečių kruša mūsų šlovės.
Tada tik bus mūsų žodžiai žiedas ryškus
Kai ryškumas per vieną galima rasti;
Potvynių menas tikrai spaudai
Šios pasinerti į duobes ir aklai.
Prikėlė jie atgaus savo akyse
Ir statuso prieš šansai;
Leiskite mums tada skonis tai Tamil nektaras
Ir degustacijas ji tapo kaip dievai!
Norėdami daugiau sužinoti apie Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>Spauskite čia</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' во Macedonian
На сите јазици кои ги знаеме
Нема како Тамилски слатка;
Сепак, во светот подигравка, како неуки животни
Лежиме потонат во пораз.
Што користите за слава во тоа име
И живеат тука нејасно
Наместо за правење на тоа слатко јазик прстен
Како камбаната далеку, и во близина на?
На сите поети кои ги знаеме
Гледаме нема да се споредуваат
Со (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Не се фали ова, но вистината гола!
Неми, глуви и слепи во кое живееме сега --
Слушај, да ни го направи нашата цел
За нашите себе од куќата-блузи
Големината на Тамил да проповедам.
Ние мора да се преведе во Тамилски
Големите дела на странските земји,
Додека deathless работи во Тамилски
Се напишани од страна на живеење раце;
Не користите во тајна меѓу самите
Повторувањето на застоена старата приказна --
Тестот на сета вистинска големина е
Дека аутсајдери град нашата слава.
Тогаш само ќе нашите зборови светол прстен
Осветленост кога во рок од еден може да најдете;
Уметностите во поплавите сигурно ќе порака
Оние потонат во јами и слепи.
Подигна тие ќе го поврати своето пред
Статус и против коефициенти;
Нека ни тогаш вкус оваа нектар на Тамилски
И дегустација да стане како богови!
За да дознаете повеќе за Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>кликнете тука</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' di Malay
Dari semua bahasa yang kita tahu
Tidak ada sebagai tamil manis;
Namun hinaan di dunia, seperti binatang bodoh
Kami berbaring tenggelam dalam kekalahan.
Apa yang di gunakan untuk kemuliaan nama itu
Dan tinggal kabur di sini
Bukannya membuat lidah yang manis cincin
Seperti loceng jauh dan dekat?
Dari semua pemuisi yang kita tahu
Kita melihat seorang pun untuk membandingkan
Dengan (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Tidak membanggakan ini, tetapi kebenaran yang telanjang!
Dumb, pekak dan buta kita hidup sekarang --
Dengar, mari kita membuat tujuan kita
Untuk kepentingan kita sendiri dari rumah-puncak
Kebesaran Tamil untuk mengisytiharkan.
Kita harus menterjemah ke dalam tamil
Karya-karya besar tanah asing,
Sementara kekal bekerja di Tamil
Yang ditulis oleh tangan hidup;
Ada gunanya secara rahsia di antara kita
Mengulang cerita lama basi --
Ujian dari semua keagungan sejati
Hujan es yang luar kemuliaan kita.
Maka hanya akan kata-kata kita cincin terang
Bila kecerahan dalam satu boleh menemukan;
Seni banjir pasti akan rilis
Mereka tenggelam dalam lubang-lubang dan buta.
Membangkitkan mereka akan mendapatkan semula penglihatan mereka
Dan status terhadap rintangan;
Marilah kita rasa madu ini Tamil
Dan rasa itu menjadi seperti dewa!
Untuk mengetahui lebih lanjut tentang Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>klik di sini</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' fi Maltese
Ta 'l-ilsna li nafu
M'hemm l-ebda kif Tamil ħelwin;
Madankollu gibe fid-dinja, bħall-beasts injorant
Aħna tkun mgħaddsa fl-telfa.
Dak l-użu fil-glorja għal dak l-isem
U jgħixu obscurely hawn
Minflok ta 'kif issir dik ring ilsien ħelu
Bħall-qanpiena il-bogħod u l-qrib?
Ta 'l-poeti li nafu
Aħna naraw xejn biex iqabblu
Bil (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Nru niftaħar dan, imma verità bare!
Dumb, torox u għomja ngħixu issa --
Isma, ejjew jagħmilha għan tagħna
Għall-finijiet tagħna mill-house-tops
Il-greatness ta 'Tamil, li xxandru.
Aħna għandhom jissarrfu Tamil
Great xogħlijiet ta 'l-artijiet barranin,
Filwaqt li jaħdem fl-Tamil deathless
Huma miktubin mill-ħajjin l-idejn;
Nru użu b'mod sigriet fost lilna nfusna
Ripetizzjoni storja friska qodma --
It-test ta 'kull greatness vera huwa
Dik silġ barranin glorja tagħna.
Imbagħad biss se kliem tagħna ring bright
Meta luminożità fi żmien wieħed jista 'jsib;
L-arti fil-għargħar żgur ser rilaxx
Dawk għereq fil-ħofor u blind.
Jitla se jerġgħu vista tagħhom
U l-istatus kontra odds;
Let us imbagħad togħma dan nektar tal-Tamil
U b'togħma li jsiru bħala gods!
Biex tkun taf aktar dwar Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>ikklikkja hawn</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' i Norwegian
Av alle språkene vi kjenner
Det er ingen som Tamil søt;
Likevel verdens spott, som uvitende dyr
Vi ligger senket i tap.
Hva bruke for å ære i at navnet
Og bor obskurt her
Istedenfor å gjøre det søte tunge ringen
Som en bjelle langt borte og nær?
Av alle poetene som vi kjenner
Vi ser ingen å sammenligne
With (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Ingen skryt dette, men sannheten bare!
Stum, døv og blind vi lever i nå --
Hør her, la oss gjøre det vårt mål
For vår egen skyld fra huset-topper
Storhet tamilske å forkynne.
Vi må oversette til Tamil
Store verk av fremmede land,
Mens deathless arbeider i Tamil
Er skrevet av levende hender;
Ingen bruk i hemmelighet blant oss
Gjengi en gammel gammel historie --
Testen av alle sanne storhet er
At utenforstående hagl vår ære.
Da bare vil våre ord ring lyse
Når lysstyrken innen man kan finne;
Kunstfeltet i flommen vil sikkert release
De senket i groper og blinde.
Oppreist de vil få tilbake synet
Og status mot odds;
La oss så smake denne nektar Tamil
Og smaker det bli som guder!
Å vite mer om Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>klikk her</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' در Persian
از همه زبان ها است که ما می دانیم
است هیچ یک به عنوان تامیلی شیرین وجود دارد ؛
با این حال دست انداختن جهان ، مانند جانوران نادان
ما غرق در شکست نهفته است.
چه به کسب افتخار در استفاده از آن نام
و مبهم زندگی در اینجا
به جای ایجاد این حلقه زبان شیرین
مثل یک زنگ بسیار روشن و خاموش در نزدیکی؟
از همه شاعران است که ما می دانیم
ما می بینیم هیچ کدام برای مقایسه
با (1Kamban) ، (2Valluvan) ، (3Ilango) --
بدون این رجز خوانی است ، اما حقیقت را اشکار!
لال ، کر و کور زندگی ما در حال حاضر --
گوش کنید ، اجازه دهید ما آن را به هدف ما
به خاطر خود ما را از خانه - tops
عظمت تامیلی اعلام.
ما باید به تامیلی ترجمه
آثار بزرگ از زمین های خارجی ،
در حالی که با این نسخهها کار deathless در تامیلی
آیا نوشته شده توسط زندگی در دست ؛
بدون استفاده در نهان در میان خودمان
تکرار داستان کهنه قدیمی --
تست همه عظمت واقعی است
سلام برشما باد که خودی منزه ما است.
آنگاه ، تنها واژه ها را ما حلقه درخشان
هنگامی که روشنایی در عرض یک می توانید ؛
هنر در سیل مطمئنا انتشار
کسانی که غرق در چاله و کور.
مطرح شده تا آنها دوباره بینایی خود را
شانس و موقعیت برابر ؛
اجازه دهید سپس به ما طعم شهد از این تامیلی
و مزه کردن آن را به عنوان خدایان تبدیل شده!
برای اطلاع بیشتر در مورد Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>اینجا را کلیک کنید</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' em Polish Portuguese
De todas as línguas que nós sabemos
Não há ninguém como Tâmil doce;
No entanto, zombar do mundo, como bestas ignorantes
Nós mentimos afundado na derrota.
O uso de glória em que o nome
E viver obscuramente aqui
Em vez de fazer esse anel língua doce
Como um sino longe e perto?
De todos os poetas que sabemos
Nós vemos nenhuma para comparar
Com (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Não se vangloriar disso, mas a verdade nua!
Mudos, surdos e cegos em que vivemos agora --
Escuta, vamos fazer o nosso objectivo
Para o nosso próprio bem da casa-tops
A grandeza de Tamil proclamar.
Temos de traduzir em tâmil
Grandes obras de terras estrangeiras,
Enquanto as obras imortais em Tamil
São escritos por estar nas mãos;
Não usar em segredo entre nós
Repetindo uma história velha de idade --
O teste de toda a verdadeira grandeza é
Granizo que fora nossa glória.
Só então as nossas palavras anel de brilhantes
Quando o brilho dentro de um pode encontrar;
As artes em inundações certamente irá liberar
Aqueles afundado em poços e cego.
Levantado que irá recuperar a visão
Eo status de encontro às probabilidades;
Vamos, então, provar este néctar de Tamil
E degustação de se tornar como os deuses!
Para saber mais sobre Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>clique aqui</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' în Romanian
Dintre toate limbile pe care ştim
Nu este nici unul ca Tamil dulce;
Cu toate acestea, din lume lua în râs, cum ar fi animale ignorant
Noi minciună scufundat în înfrângere.
Ce folos la spre glorie în acest nume
Obscur şi de a trăi aici
În loc de a face acest inel dulce limba
Ca un clopot departe şi aproape?
Dintre toate poeţii pe care le cunosc
Vom vedea nici una pentru a compara
Cu (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Nu se laudă acest lucru, dar adevărul gol!
Mut, surd şi orb în care trăim acum --
Ascultă, să ne facă scopul nostru
De dragul nostru propriu de la casa-tops
Măreţia din Tamil de a proclama.
Noi trebuie să se traducă în Tamil
Great lucrări de terenuri străine,
În timp ce funcţionează fără moarte în Tamil
Sunt scrise de viaţă mâinile;
Nu folosi în secret între noi
Repetarea o poveste de stătut vechi --
De testare a tuturor măreţie adevărat este
Din afară Asta grindina gloria noastră.
Apoi, se va limita doar cuvintele noastre inel luminos
Atunci când o luminozitate în termen de o poate găsi;
Arte din inundaţii va lansa cu siguranţă
Cei scufundat in gropi şi orb.
Crescut de până ei vor redobândi ochii lor
Şi statutul faţă de cote;
Să ne atunci gustul acest nectarul din Tamil
Şi de degustare a devenit la fel de zei!
Pentru a şti mai multe despre Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>click aici</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' в Russian
Из всех Языки, что мы знаем
Существует ни как тамильский сладкий;
Тем не менее в мире насмешка, как невежественны звери
Мы лежим затоплен в поражении.
Что использовать для славы, что в названии
И живут здесь смутное
Вместо того чтобы делать это сладкое "кольцо"
Как колокол, далеко и близко?
Из всех поэтов, что мы знаем
Мы видим, никто не сравнить
С (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Нет похвастаться этим, но истина голый!
Немых, глухих и слепых мы живем сегодня --
Слушайте, давайте забудем это наша цель
Ради нас самих с крыш
Величие Тамил провозгласить.
Мы должны претворить в тамильский
Great Works чужих земель,
Хотя бессмертных работ на тамильском языке
Написано живым руках;
Не использовать в тайне друг с другом
Повторяя устаревшие старая история --
Тест всех истинное величие
Что иностранцы града наша слава.
Только тогда наши слова звучат ярко
Когда яркость в течение одного найдете;
Искусство в борьбе с наводнениями, безусловно релиз
Те, затонувший в шахтах и слепых.
Подняли они прозрели
И статус в отношении шансов;
Давайте же вкус этого нектара Тамил
И она стала дегустация как боги!
Чтобы узнать больше о Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>Нажмите здесь</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' у Serbian
Од свих језика које знамо
Нико није као Тамилски слатко;
Ипак свету ругати, као неупућен звери
Ми лежи потопљен у пораз.
Шта користите за славу у то име
И живе обсцурелы овде
Уместо да да слатки језик прстен
Као звоно далеко и близу?
Од свих песника за које знамо
Видимо никога да упоредимо
Са (1Камбан), (2Валлуван), (3Иланго) --
Не хвалити, али истина роди!
Глупи, глуви и слепи ми сада живимо --
Слушај, нека нам буде наш циљ
За наше себе из куће-топ
Тамилски величину да прогласи.
Морамо да преведе Тамилски
Велика дела страних земаља,
Док бесмртан ради у тамилски
Написани су живе руке;
Нема сврхе тајно међу собом
Устајао понавља стара прича --
Тест за све истинске величине је
То аутсајдери Хаил наша слава.
Онда само да ће наше речи прстен светли
Када је осветљење у року од једног може наћи;
Уметности у поплави сигурно ће издање
Они потопљен у јаме и слепе.
Подигох ће поново прогледају
Статуса и шанси против;
Нека нам онда укус овог нектара од Тамилски
И дегустације је постала као богови!
Да сазнате више о томе Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>кликните овде</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' v Slovak
Zo všetkých jazykoch, ktoré poznáme
Nikto nie je ako Tamil sladké;
Napriek tomu na svete posmievať sa, rovnako ako nevedomá hovada
Ležíme potopená v porážku.
K čomu sa chlubili, že meno
A žije tu nejasne
Namiesto toho, aby to sladké jazyk prsteň
Ako zvon ďaleko a okolia?
Zo všetkých básnikov, ktoré poznáme
Vidíme, nemá na porovnanie
S (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Nie chváliť, ale holá pravda!
Nemý, hluchý a slepý žijeme teraz --
Počúvaj, urobme to náš cieľ
Pre naše vlastné dobro z domu-top-boxy
Veľkosť Tamil hlásať.
Musíme preložiť do Tamil
Veľké diel cudzích krajín,
Kým nesmrteľný pracuje v Tamil
Sú písané životom ruky;
Nemá zmysel v tajnosti medzi nami
Opakujúce sa stale starý príbeh --
Skúška všetko pravda, je veľkosť
Outsideri, že krúpy našej slávu.
Potom bude len naše slová prsteň jasné
Keď jas v rámci jedného nájdete;
Umenie v záplavových určite správa
Tí klesli v boxoch a slepý.
Vzbudil budú opäť pred ich očami
A postavenie proti kurzy;
Dovoľte nám teda ochutnať túto nektáru Tamil
A ochutnávka sa stane ako bohovia!
Ak chcete vedieť viac o Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>kliknite tu</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' v Slovenian
Od vseh jezikov, ki vemo
Nihče ni kot Tamil sladek;
Toda na svetu Zbadanje, kot nevedne zveri
Mi leži potopljen v poraz.
Kaj uporabiti za slavo, da v imenu
In tu živi obscurely
Namesto da bi to bilo sladkega ring jezik
Kot zvonec daleč in blizu?
Od vseh pesnikov, da vemo
Vidimo nič za primerjavo
S (1Kamban), (2Valluvan), (3Ilango) --
No ponaša s tem, ampak golo resnico!
Dumb, gluhi in slepi živimo zdaj --
Poslušaj, da nam je naš cilj
Za naše samih iz hiše, vrhovi
Veličino Tamil oznanjati.
Moramo prevajati v Tamil
Velika dela tujih dežel,
Medtem ko Besmrtan dela v Tamil
Ali so jih napisali živijo roke;
No uporabo v skrivnost med nami
Ponavljajoči slab stara zgodba --
Test za vse prave veličine, je
To zunanjih toča naša slava.
Potem bodo samo naše besede ring svetla
Kdaj lahko svetlost v roku enega najdejo;
Umetnost na poplavnih bo zagotovo za javnost
Tisti, potopljen v jamah in slepi.
Povišani se bodo spet svoje oči
In status proti odds;
Naj nam torej to okus nektarja Tamil
In okusa postane kot bogovi!
Če želite izvedeti več o Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>kliknite tukaj</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' en Spanish
De todos los idiomas que conocemos
No hay nadie como Tamil dulce;
Sin embargo, burla del mundo, como bestias ignorantes
Nos están hundidos en la derrota.
¿De qué sirve a la gloria en que el nombre de
Y vivir aquí oscuramente
En lugar de hacer que el aro en la lengua dulce
Como una campana, lejos y cerca?
De todos los poetas que conocemos
Vemos que ninguno de comparar
Con (1Kamban), (2Valluvan), (3Ilango) --
No cuentan con este, pero la verdad desnuda!
Mudos, sordos y ciegos que vivimos ahora --
Escucha, vamos a hacer que nuestro objetivo
Por nuestro propio bien de los tejados
La grandeza de Tamil a proclamar.
Debemos traducir al tamil
Grandes obras de tierras extranjeras,
Si bien las obras inmortales de Tamil
Están escritas por los que viven las manos;
No usar en secreto entre nosotros
Repitiendo una historia rancia de edad --
La prueba de toda verdadera grandeza es
Que el granizo de fuera nuestra gloria.
Sólo entonces nuestras palabras anillo de brillantes
Cuando el brillo de uno puede encontrar;
Las artes en las inundaciones seguramente dará a conocer
Los hundidos en pozos ciegos.
Levantado, recuperarán su vista
Y el estado contra todo pronóstico;
Veamos a continuación, degustar este néctar de Tamil
Y gustando a ser como dioses!
Para saber más sobre Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>haga clic aquí</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' katika Swahili
Lugha yote ambayo tunajua
Hakuna kama Kitamil tamu;
Bado gibe duniani, kama wanyama wajinga
Sisi uongo sunk katika kushindwa.
Kutumia nini utukufu katika jina
Na kuishi obscurely hapa
Badala ya kuwafanya kuwa tamu pete ulimi
Kama kengele mbali na karibu?
Waandishi wote tunajua kwamba
Sisi tunaona hakuna kulinganisha
Pamoja (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Hakuna kujivunia hili, lakini kweli tupu!
Mabubu, viziwi na vipofu tunaishi sasa --
Kusikiliza, tufanye ni lengo letu
Kwa ajili yetu wenyewe kutoka katika nyumba-tops
Ukuu wa Kitamil kutangaza.
Sisi lazima kutafsiri ndani Kitamil
Kazi kubwa ya ardhi ya kigeni,
Deathless wakati kazi katika Kitamil
Yaliyoandikwa kwa mikono hai;
Hakuna kutumia kwa siri miongoni wenyewe
Stale umri wa kurudia hadithi --
Kipimo ya ukuu wote wa kweli ni
Kwamba mvua ya mawe nje ya utukufu wetu.
Basi tu maneno yetu pete angavu
Wakati ng'ara ndani ya mtu anaweza kupata;
Sanaa katika mafuriko hakika kutolewa
Wale sunk katika mashimo na vipofu.
Aliyemfufua regain watakuwa mbele yao
Na sasa dhidi ya tabia mbaya;
Hebu basi ladha hii nectar wa Kitamil
Na tasting ni kuwa kama miungu!
Ili kujua zaidi kuhusu Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>click here</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' in Swedish Thai
Av alla de språk som vi vet
Det finns ingen som Tamil sweet;
Ändå världens Gibe, som ovetande djur
Vi ligger försänkt i nederlag.
Vad använda för att ära i namnet
Och levande dunkelt här
Istället för att göra det söta tunga ring
Som en klocka långt borta och nära?
Av alla de poeter som vi vet
Vi ser ingen att jämföra
Med (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Nej skryta detta, men sanningen bare!
Stum, döv och blind vi lever nu --
Lyssna, låt oss göra det vår målsättning
För vår egen skull från huset-toppar
Storhet tamilska att förkunna.
Vi måste omsättas i Tamil
Storverk av främmande land,
Medan odödliga verk i Tamil
Är skrivna av levande händer;
Ingen användning i hemlighet bland oss
Upprepa en gammal gammal historia --
Testet av all sann storhet är
Att utomstående hagel vår ära.
Då endast kommer våra ord ring ljusa
När ljusstyrkan inom en kan hitta;
Konsten i översvämning kommer säkert släppa
De sjunkit i gropar och blinda.
Uppväckt de kommer att återfå sin syn
Och ställning mot odds;
Låt oss då smaka denna nektar Tamil
Och provsmaka det bli som gudar!
Att veta mer om Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>Klicka</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' içinde Turkish
Biz bildiğimiz tüm dillerin
Orada Tamil tatlı olarak hiçbiri değildir;
Henüz cahil hayvan gibi, dünyanın alay,
Biz yenilgiyle battı yalan.
Ne zafer için adını kullanmak
Ve belirsiz live here
Bunun yerine, tatlı dil halka yapmak
Çan uzak ve yakın gibi mi?
Biz bildiğimiz tüm şairlerin
Biz hiçbiri karşılaştırmak için bkz:
(1Kamban), (2Valluvan), (3Ilango) ile --
Hayır bu, ama gerçeği çıplak övünme!
Dilsiz, sağır ve şimdi yaşamak kör --
Dinlemek, bize bunu amacımız yapalım
Evden kendi iyiliği için-tops
Tamil ve büyüklüğünü ilan etmek.
Biz Tamil çevirmek gerekir
Büyük yabancı topraklarının çalışır
Tamil süre içinde ölümsüz eserler
Eller yaşayarak yazılmıştır;
Kendi aramızda sır yok kullanmak
Bir eski bayat hikaye Yinelenen --
Tüm gerçek büyüklük test
Bu yabancılar dolu bizim zafer.
Sonra sadece kelime parlak çalıyor
Ne zaman bir parlaklık içinde bulabilirsiniz;
Sel içinde sanat elbette yayınlayacak
Bu çukurlar ve kör olarak battı.
Kadar onların görme geri kazanacak Yükseltilmiş
Ve oran karşı durumu;
Sonra Diyelim Tamil bu nektar tadı
Ve tanrılar olarak tatma ol!
Hakkında daha fazla bilgi için Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>tıklayın</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' в Ukrainian
З усіх Мови, що ми знаємо
Існує ні як тамільська солодкий;
Тим не менш у світі насмішка, як неосвічені звірі
Ми лежимо затоплений в поразці.
Що використовувати для слави, що в назві
І живуть тут неясне
Замість того щоб робити це солодке "кільце"
Як дзвін, далеко і близько?
Зі всіх поетів, що ми знаємо
Ми бачимо, ніхто не порівняти
С (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Ні похвалитися цим, але істина голий!
Німих, глухих і сліпих ми живемо сьогодні --
Слухайте, давайте забудемо це наша мета
Ради нас самих з дахів
Велич Таміл проголосити.
Ми повинні запровадити в тамільська
Great Works чужих земель,
Хоча безсмертних робіт на тамільською мовою
Написано живим руках;
Не використовувати в таємниці один з одним
Повторюючи застарілі стара історія --
Тест всіх справжню велич
Що іноземці граду наша слава.
Тільки тоді наші слова звучать яскраво
Коли яскравість протягом одного знайдете;
Мистецтво в боротьбі з повенями, безумовно реліз
Ті, затонулий в шахтах і сліпих.
Підняли вони прозріли
І статус щодо шансів;
Давайте ж смак цього нектару Таміл
І вона стала дегустація як боги!
Щоб дізнатися більше про Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>Натисніть тут</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' trong Vietnamese
Của tất cả các ngôn ngữ mà chúng tôi biết
There is none như Tamil ngọt;
Tuy nhiên, trên thế giới Gibe, như con thú ignorant
Chúng tôi nằm chìm trong thất bại.
Điều gì sử dụng để vinh quang trong tên đó
Và sống ở đây obscurely
Thay vì làm cho rằng vòng lưỡi ngọt
Giống như một quả chuông xa và gần?
Của tất cả các nhà thơ mà chúng tôi biết
Chúng tôi thấy không ai để so sánh
Với (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Không khoe khoang này, nhưng sự thật trần trụi!
Câm, điếc và mù chúng ta sống bây giờ --
Lắng nghe, chúng ta hãy làm cho nó Mục tiêu của chúng tôi
Để vì lợi ích riêng của chúng tôi từ nhà-tops
Các vĩ đại của Tamil công bố.
Chúng ta phải dịch thành Tamil
Các công trình lớn của đất nước ngoài,
Trong khi không chết việc trong Tamil
Được viết bằng tay sống;
Không sử dụng trong các bí mật trong chính mình
Lặp đi lặp lại một câu chuyện cu cũ --
Các thử nghiệm của tất cả sự thật là vĩ đại
Đó là mưa đá ngoài vinh quang của chúng tôi.
Sau đó, chúng tôi sẽ chỉ từ vòng sáng
Khi độ sáng trong vòng một có thể tìm thấy;
Nghệ thuật trong lũ lụt chắc chắn sẽ phát hành
Những người chìm trong hố và mù.
Tăng lên họ sẽ lấy lại tầm nhìn của họ
Và tình trạng chống lại tỷ lệ cược;
Hãy cho chúng tôi sau đó hương vị của mật hoa này Tamil
Và nếm nó trở thành như thần!
Để biết thêm chi tiết về Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>bấm vào đây</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' yn Welsh
O'r holl ieithoedd ein bod yn gwybod
Nid oes dim yn Tamil melys;
Eto gibe y byd, fel bwystfilod anwybodus
Rydym yn gorwedd suddo yn trechu.
Pa ddefnydd sydd i ogoniant yn yr enw
Ac yn byw obscurely yma
Yn hytrach na gwneud y cylch tafod melys
Fel cloch bell i ffwrdd ac yn agos?
O'r holl feirdd ein bod yn gwybod
Rydym yn gweld dim i gymharu
Gyda (1Kamban), (2Valluvan), (3Ilango) --
Dim brolio hyn, ond gwirionedd noeth!
Fud, sy'n fyddar ac yn ddall, yr ydym yn byw yn awr --
Gwrandewch, gadewch i ni ei wneud yn ein nod
Ar gyfer ein fwyn ei hun o'r tŷ ar frig -
Mae'r fawredd o Tamil i gyhoeddi.
Mae'n rhaid i ni gyfieithu i'r Tamil
Great gwaith tiroedd tramor,
Er bod gwaith deathless yn Tamil
Cael eu hysgrifennu gan byw dwylo;
Unrhyw ddefnydd yn gyfrinachol ymhlith ein hunain
Ailadrodd stori hen stale --
Y prawf yr holl wir fawredd yn
Hail y tu allan ein gogoniant.
Yna dim ond ein geiriau ffonio llachar
Pryd y gall disgleirdeb o fewn un ddod o hyd;
Bydd y celfyddydau yng llifogydd sicr datganiad
Rhai suddo mewn pyllau a dall.
A godwyd i adennill y byddant yn eu golwg
Ac statws yn erbyn groes;
Gadewch i ni yna flas y neithdar o Tamil
Ac mae'n dod yn blasu fel duwiau!
I wybod mwy am Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>cliciwch yma</a>.</p><p width='300' class='dropcontent'>'Tamil' אין Yiddish
פון אַלע די שפראַכן וואָס מיר וויסן
עס איז גאָרניט ווי טאַמיל זיס;
נאָך די וועלט 'ס גיבע, ווי אַמ ביסץ
מיר ליגן סאַנגק אין באַזיגן.
וואָס נוצן צו גלאָריע אין וואָס נאָמען
און לעבן אָבסקורעלי אַהער
אַנשטאָט מייקינג אַז זיס צונג רינג
ווי אַ גלאָק ווייט אַוועק און לעבן?
פון אַלע די פּאָואַץ אַז מיר וויסן
מיר זען קיין צו פאַרגלייכן
מיט (1קאַמבאַן), (2וואַללווואַן), (3ילאַנגאָ) --
ניט קיין באַרימעריי דעם, אָבער אמת נאַקעט!
נאַריש, טויב און בלינד מיר לעבן איצט --
הערן, לאָזן אונדז מאַכן דאָס אונדזערע צילן
פאר אונדזער אייגענע סאַקע פֿון די הויז, טאַפּס
די גרויסקייט פון טאַמיל צו פּראָקלאַמירן.
מיר מוזן זעץ זיך טאַמיל
גרויס אַרבעט פון פרעמד לאַנדס,
בשעת דעאַטהלעסס אַרבעט אין טאַמיל
זענען געשריבן דורך לעבעדיק האַנדס;
ניט קיין נוצן אין געהיים צווישן זיך
רעפּעאַטינג אַ סטייל אַלטע דערציילונג --
די פּראָבע פון אַלע אמת גרויסקייט איז
אַז אַוציידערז באַגריסן אונדזער גלאָריע.
דערנאָך בלויז וועט אונדזער ווערטער קלינגען ליכטיק
ווען ברייטנאַס אונטער איין קענען געפֿינען;
די קונסט אין מאַבל וועט שורלי מעלדונג
יענע סאַנגק אין פּיץ און בלינד.
ראַיסעד זיך זיי וועט ריגיין זייער ספּעקטאַקל
און סטאַטוס קעגן שאַנסן;
זאָל אונדז דאַן פאַרזוכן דעם נעקטער פון טאַמיל
און טייסטינג עס ווערן ווי גאָדס!
צו וויסן מער וועגן Bharathi <
<a href='http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy'>>קליקט דאָ</a>.</p></pre><div id='cyclelinks2' style='visibility: hidden' style='width:0px;' align='right'></div></td></tr>
</table-->Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-71312912597421023122010-01-13T22:31:00.000-08:002010-01-13T22:31:18.402-08:00தமிழ்த்தாய்தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் <br />
(தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்) <br />
<br />
ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை <br />
ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர் <br />
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை <br />
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். <br />
<br />
முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை <br />
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார், <br />
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர் <br />
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். <br />
<br />
கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல <br />
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத் <br />
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல <br />
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். <br />
<br />
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத் <br />
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன் <br />
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன் <br />
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். <br />
<br />
நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன் <br />
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச் <br />
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச் <br />
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். <br />
<br />
கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன் <br />
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம் <br />
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர் <br />
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்! <br />
<br />
தந்தை அருள்வலி யாலும் - முன்பு <br />
சான்ற புலவர் தவ வலி யாலும் <br />
இந்தக் கணமட்டும் காலன் என்னை <br />
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான். <br />
<br />
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி <br />
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்! <br />
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு <br />
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! <br />
<br />
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச <br />
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும, <br />
மெத்த வளருது மேற்கே - அந்த <br />
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. <br />
<br />
சொல்லவும் கூடுவ தில்லை - அவை <br />
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை <br />
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த <br />
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் <br />
<br />
என்றந்தப் பேதை உரத்தான் - ஆ! <br />
இந்த வசையெனக் கெய்திடலாமோ? <br />
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் <br />
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! <br />
<br />
தந்தை அருள்வலி யாலும் - இன்று <br />
சார்ந்த புலவர் தவவலி யாலும் <br />
இந்தப் பெரும்பழி தீரும் புகழ் <br />
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-88781353746977425412010-01-13T22:29:00.000-08:002010-01-13T22:29:55.527-08:00செந்தமிழ் நாடுசெந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் <br />
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் <br />
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு <br />
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) <br />
<br />
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் <br />
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல <br />
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் <br />
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) <br />
<br />
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் <br />
கண்டதோர் வையை பொருனை நதி - என <br />
மேவிய யாறு பலவோடத் - திரு <br />
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்) <br />
<br />
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று <br />
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் <br />
எத்தனையுண்டு புவிமீதே - அவை <br />
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) <br />
<br />
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று <br />
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட <br />
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் <br />
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்) <br />
<br />
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் <br />
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல <br />
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் <br />
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) <br />
<br />
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து <br />
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை <br />
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி <br />
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) <br />
<br />
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய <br />
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு <br />
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று <br />
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்) <br />
<br />
விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் <br />
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் <br />
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் <br />
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்) <br />
<br />
சீன மிசிரம் யவனரகம் - இன்னும் <br />
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை <br />
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக <br />
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2750958775659912612.post-53648078418400381072010-01-13T22:25:00.000-08:002010-01-13T22:25:27.706-08:00வாழிய செந்தமிழ்!(ஆசிரியப் பா) <br />
<br />
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! <br />
வாழிய பாரத மணித்திரு நாடு! <br />
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! <br />
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக <br />
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! <br />
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் <br />
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! <br />
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! <br />
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!Rhttp://www.blogger.com/profile/02816919545968619248noreply@blogger.com0